Monday, March 13, 2017

சமூக நல்லிணக்க விருது விழா, திருநெல்வேலி

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு கிளை சார்பாக 11.03.17 அன்று திருநெல்வேலியில் சமூக நல்லிணக்க விருது வழங்கப்படும் மூவரில் நானும் ஒருவன் என்று ஏற்கனவே அறிவித்திருந்தேன்.
திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் அவர்கள் கையால் அவ்விருது வழங்கப்படும் என்று எனக்குத் தெரியாது. மாலை ஆறரை மணியளவில் மேடையில் அமர்ந்த நான் கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நகர முடியாமல் இருந்தேன்! ஒன்பதைரை மணி வாக்கில் ஸ்டாலின் வந்தார்.
என் அருகில் அமர்ந்திருந்த திரு நெல்லை கண்ணன் என்னிடம் பேசிக்க்கொண்டே இருந்தார். இல்லை என்னிடம் ஏதாவது சொல்லிக்கொண்டே இருந்தார் அவர் சொன்னதில் நிறைய அரசியல் சமாச்சாரங்கள் இருந்ததால் எனக்கு ஒன்றும் புரியாவிட்டாலும் நான் அவரது வயதுக்கு மரியாதை கொடுக்கும் பொருட்டு கேட்பது மாதிரியே நடித்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தேன்!

Friday, March 3, 2017

கலாச்சாரங்களுக்கிடையில் ஓர் முஸ்லிம் பெண் (உம்மத்)


;இறைவனை மட்டுமே ஏற்றுக் கொண்டு வாழும் ஒரு பெண் முஸ்லிம் பெண் எனப்படுகிறாள். அவள் தன் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அதை விட்டுக் கொடுக்கக்கலாகாது.

தற்போது நாம் காணும் உலகம் ஆடம்பரங்கள் நிறைந்ததாகவும், கலாச்சாரங்களைச் சீரழிக்கும் விதத்திலும் அமைந்துள்ளது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பெண்ணினம் உயிருடன் புதைக்கப்பட்டும், சிதையில் ஏற்றப்பட்டும் வதைக்கப்பட்டது. 1987 ல் இந்தியாவில் மான்சிங் என்பவர் இறந்துவிட்டதால் பச்சிளம் பெண்ணான ரூப்கன்வர் என்பவர் தன்னுடைய கணவனுடைய சிதையில் உயிருடன் ஏற்றப்பட்டால். அவள் துடிதுடித்து கருகிச் செத்ததை இந்தியமக்கள் நேரிலும், மீடியாக்கள் வாயிலாக செய்தியாகவும் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.