Thursday, April 19, 2018

துபாய் ஈமான் கலாச்சார மையம் நடத்தும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

நாள்: 20-04-2018, வெள்ளிக் கிழமை
நேரம்: மாலை  6 மணி
இடம்: சலாமியா டவர், தேரா கிளாக் டவர் அருகில், துபாய்.

சிறப்புரை:
லட்சக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் கொடுத்த இளம் கல்வியாளர்

பேரா. முகம்மது ரபிக் MCA., MBA.,
(ஆலிம் முகம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி, சென்னை)

தலைப்பு : இந்தியாவில் உள்ளஉயர் கல்வி படிப்புகள், கல்வி உதவித் தொகைகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல்

Monday, April 16, 2018

பிரபஞ்சத்திடம் எதையும் பெறக்கூடிய சக்தி உங்கள் ஆழ்மனதிற்கு உண்டு.

இந்த பிரபஞ்சம் மிகப் பெரியது அது விரிவடையச் கூடியது. அதுபோல உங்கள் ஆழ்மனம் மிகப்பெரியது விரிவடையச் கூடியது அதுமட்டுமல்ல பிரபஞ்சத்திடம் எதையும் பெறக்கூடிய சக்தி உங்கள் ஆழ்மனதிற்கு உண்டு.

இந்த பிரபஞ்சத்திடத்தில்  உங்கள் ஆழ்மனம் எதுகேட்டாலும் உங்களுக்கு கொடுக்கும் அது நல்லது கெட்டது என்று அது பார்க்காது. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையை வைத்து புரிந்து கொள்ளுங்கள் உங்கள் ஆழ்மனதில் எப்படி வாழ்ந்து வருகிறீர்கள் அந்த வாழ்க்கை மூலம் எதைக் கேட்டு பெற்று இருக்கிறீர்கள் என்று.

فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ‏ 
ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதனையும் கண்டுகொள்வார்.

وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ‏ 
(அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதனையும் அவன் (அங்குக்) கண்டுகொள்வான்.
(அல்குர்ஆன் : 99:7,8)

Sunday, April 1, 2018

முபாஹலா

முபாஹலா என்றால் என்ன? முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் “முபாஹலா” செய்யலாமா? முபாஹலா,வை நியாயப்படுத்துகிறவர்கள் அல்குர்ஆன் 3:61 இறைவாக்கை ஆதாரமாகத் தருகின்றனர். அந்த இறைவாக்கு வருமாறு:

(நபியே!) இது பற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும், எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால், வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று கூடி) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று சாபமிட்டுக் கொள்வோம், என நீர் கூறும். (3:61)

இந்த வசனம் இறங்கிய வரலாற்றைப் பற்றி வரலாற்று நூல்களில் எழுதப்பட்டுள்ள விபரம் வருமாறு: