Monday, February 1, 2010

எண்ணங்களின் பயணத்தில்......


எண்ணங்களின் பயணத்தில்..........


போவதும் வருவதும்
பொதுவாய் மரபு
ஆவதும் அழிவதும்
அன்றாட இயல்பு.

எண்ணங்களின் பயணத்தில்
இயங்குகின்ற மனது.
வண்ண வண்ண கனவுகளே
வாழ்க்கைக்கு விருந்து.

ஆசையில் வருவதெல்லாம்
அடுத்தவர் 'இடம்' தான்
ஓசையறும் சிந்தனையில்
உலகமும் மடம் தான்.

பிறப்பதும், பின்னொரு நாள்
இறப்பதும்; இடையிலே
சிறப்புகள் தேடித்தேடி
செல்வதுவும் பயணந்தான்.

எல்லாப் பக்கத்திலும்
இருக்கலாம் பாதைகள்
வல்லோன் வகுத்தாற்போல்
வாய்ப்பதுவே வழிப்பாதை.

வாய்த்ததொரு வாகனத்தில்
வழியெங்கும் கோரிக்கை
வாட்டமின்றி சென்றாலே
வாழ்க்கை கேளிக்கை.

கயிறுகளாய் பாசபந்தம்;
கட்டப்பட்ட கைகால்கள்.
வயிறுக்காய் நகர்ந்தாலும்
வாழ்நாள்கள் உயிர்பூக்கும்.

'நிலை'யில்லாக் காலம் தான்
நதியாகப் பாய்ந்து வரும்
விலையில்லா நேரத்தை
விதியென்று தள்ளாதீர்.

தாகத்தை அதிகரிக்கும்
தண்ணீரும் இதுவே தான்
ஏகதேச அறிவுரையோ
'எல்லாம் கடந்து போகும்'.

காற்றெங்கும் இறக்கைகள்
கைகளாய் பரிணமிக்கும்
ஆற்றலுள்ள மனிதருக்கு
அனைத்துமே பக்கந்தான்.

(தொடர்ந்து வலைப்பதிவில் இயங்க அன்புடன் கோரும் நண்பர் ரிஷானுக்கு(ம்) சிறப்பு நன்றி)


மக்கா மஸ்ஜிதைப்பற்றி...




சென்னை மாநகரத்தின் மய்யப்பகுதியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் இறை இல்லமான
மக்கா மஸ்ஜித் கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகள் ஆகின்றன.

மக்கா மஸ்ஜித் சென்னை அண்ணா சாலையில் உள்ளது.
இதற்க்கு தலைமை இமாமாக மௌலானா ஷம்சுதீன் காசிமி அவர்கள் உள்ளார்கள்.
மேலும் விபரங்கள் அறிய admin-ஐ admin@makkamasjid.comThis e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற Email முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

Makkamasjid.com-ஐ சிபாரிசு செய்யுங்கள்


ஜூம்மா உரை நேரடி ஒளிபரப்பு!இன்ஷா அல்லாஹ், ஒவ்வொரு வெள்ளிகிழமையும் பிற்பகல் 12.30 மணியிலிருந்து. காணத்தவறாதீர்கள்!!
 


 

மக்கா மஸ்ஜித் ஷரீஅத் கவுன்சில்

மக்கா 
மஸ்ஜித் ஷரீஅத் கவுன்சில்

அஸ்ஸலாமு அலைக்கும்,
           அல்லாஹ்வினுடைய தீனுல் இஸ்லாம் உலக வாழ்கையில் மனிதன் சந்திக்கக்கூடிய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை சொல்லியிருக்கின்றது. அது தனி மனிதருகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனையாக இருந்தாலும், சமுதாய கூட்டு வாழ்கையில் உண்டாகும் பிரச்சனையாக இருந்தாலும் எந்த ஒன்றிற்கும் தீர்வு சொல்லாமல் இல்லை.  ஆனால் இன்று முஸ்லிம்கள் அல்லாஹ் சொல்லக்கூடிய தீர்வை பற்றி அறிந்துகொள்ளாமல் தங்களுடைய சின்ன சின்ன பிரச்சனைகளுக்கும் வழக்கு, நீதிமன்றம் என்று அலைவதினால் தங்களுடைய பணம், நேரம், அமல்கள், மானம், நிம்மதி போன்ற அனைத்தையும் விரயமாக்கிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இருந்து முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாத்து அல்லாஹ் சொல்லக்கூடிய தீர்வை தங்களுடைய வாழ்கை நெறியாக ஏற்று செயல் பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் மக்கா மஸ்ஜித் ஷரீஅத் கவுன்சில்.

நோக்கமும், சிறப்பம்சமும்
  •  கோர்ட், கேஸ் என்று அலைந்து நேரமும், பொருளும் வீண் விரயமாவது தடுக்கப்பட வேண்டும்.
  • ரகசியம் காக்கப்படுவதின் மூலம் தனிமனித கண்ணியமும், குடும்ப கௌரவமும் பாதுகாக்கப்படுகிறது.
  • வழக்கறிஞரின் துணையோ, குறுக்கீடோ இன்றி ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் முறை.
  • கட்டப்பஞ்சாயத்து போலன்றி இரு தரப்பு கருத்துகளையும் நிதானமாக உள்வாங்கி 100 சதவிகித நியாயம் கிடைப்பதற்கான ஏற்பாடு.
  • முழுக்க முழுக்க குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஷரீஅத் ரீதியான தீர்வுகள்.
  • எத்தகைய ஊதியமின்றி முழுமையான இக்லாஸோடும், சமுதாய அக்கறையுடனும் பணியாற்றும் நீதிபதிகள் (ஆலோசகர்கள்).
  • வழக்குகள் இழுத்தடிக்கப்படாமல் துரிதமான தீர்வு (சராசரியாக ஒரு வழக்கு 3 அல்லது 4 அமர்வுகளில் தீர்க்கப்படுகிறது).
  • போதை, சந்தேகம், மன அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு அதன் மூலம் குடும்பப்பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன.

துவக்கம்
           2003 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வாழ் இஸ்லாமிய முக்கியஸ்தர்கள், உலமாக்கள், முஸ்லிம் வழக்கறிஞர்கள் எல்லோரும் சுமார் 200 பேர் சென்னை மக்கா மஸ்ஜிதில் ஒன்று சேர்ந்து சமுதாய அக்கறையுடன் ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டத்திற்கு மக்கா மஸ்ஜிதின் நிர்வாக கமிட்டி தலைவர் மெஜஸ்டிக் K.V.M. அப்துல் கரீம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அக்கூட்டத்தில் மக்கா மஸ்ஜித் ஷரீஅத் கவுன்சில் என்ற பெயரில் ஷரீஅத் கோர்ட் நிர்மாணிக்கப்பட்டு முஸ்லிம் மக்களிடையே ஏற்படும் பிரச்சனைகளில் குறிப்பாக திருமண, தலாக் விவகாரங்கள், சொத்து விவகாரங்கள் போன்ற சிவில் விஷயங்களில் முஸ்லிம் சமுதாயத்தை கோர்ட், கேஸ் என்று அலைய விடாமல் நமக்குள்ளேயே கவுன்சிலிங் (ஆலோசனைகளும், அறிவுரைகளும்) செய்து தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அக்கூட்டதிலேயே மெஜஸ்டிக் அப்துல் கரீம் அவர்களை நிறுவனராகவும், தமிழ் நாடு வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் அல்ஹாஜ் A.J. அப்துர்ரசாக் அவர்களை தலைவராகவும், மௌலானா S. சம்சுதீன் காசிமி அவர்களை பொதுச்செயலாளராகவும், அல்ஹாஜ் P.S.M. அப்துல் காதர் அவர்களை பொருளாளராகவும் நிர்வாகிகளாக தீர்மானிக்கப்பட்டது. பிறகு 20 உலமாக்கள், 20 முஸ்லிம் வழக்கறிஞர்கள், 20 சமுதாயப்பிரமுகர்கள் ஆகியோரைக்கொண்டு ஒரு கவுன்சில் துவங்கப்பட்டது.
    ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று(டிசம்பர் 2009)வரை முறைப்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை சுமார் 600 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. அல்ஹம்துலில்லாஹ்!

வழக்கு பதிவு செய்யும் முறை
           தினமும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை மக்கா மஸ்ஜித் ஷரீஅத் கவுன்சில் அலுவலகம் செயல்படும். மக்கள் தொடர்பு அலுவலரான மக்கா மஸ்ஜிதின் துணை இமாம் ஹாபிழ் முஹைதீன் அப்துல் காதர் அவர்களிடம் மனு அளிக்க வேண்டும். அதற்கான பதிவு கட்டணமாக மனுதாரர் ரூ 200/- செலுத்தவேண்டும் (வேறு எந்த கட்டணமும் கிடையாது). 
           வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விளக்கம் கேட்கப்படும். அவரது எழுத்துப்பூர்வமான விளக்கம் கிடைத்தவுடன் வாய்தா தேதி முடிவு செய்யப்பட்டு இருதரப்பிற்கும் நோட்டீஸ் அனுப்பப்படும். ஒன்றிற்கு மேற்ப்பட்ட வாய்தா தேவைப்படும் பட்சத்தில் ஒவ்வொரு வாய்தாவிர்க்கும் இரு தரப்பிற்கும் நோட்டீஸ் அனுப்பப்படும். ஒரு தரப்பு புகாரை மறு தரப்பு படிப்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும், ரகசியம் மற்றும் கண்ணியம் காக்கும் நோக்கத்தில் ஒரு தரப்பு புகார் மனுவின் நகல் மறு தரப்பிற்கு வழங்கப்பட மாட்டாது. 

விசாரணை நடைமுறை
            ஒவ்வொரு வாரமும் பிரதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு கவுன்சில் துவங்கும். ஒவ்வொரு கவுன்சில் கூட்டத்திலும் பொதுச்செயலாளர் தலைமையில் ஒரு ஆலிம், ஒரு முஸ்லிம் வழக்கறிஞர், ஒரு சமுதாயப்பிரமுகர் மற்றும் மனநல நிபுணர் ஆகியோர் கொண்ட ஒரு பெஞ்ச் கவுன்சிலிங் நடத்தும். மன நல நிபுணரான சகோதரி குர்ஷித் பேகம் அவர்கள் பெண்களுக்கு அவர்களது தாம்பத்யம் போன்ற அந்தரங்க விஷயங்களை தனி அறையில் மனோதத்துவ ரீதியில் விசாரணை செய்து ஆலோசனை வழங்கி சுமூக தீர்வு ஏற்பட முயற்சி செய்வார்கள். குடும்ப வழக்குகளில் சேர்ந்து வாழ்வதாக இருந்தாலும், பிரிவதாக இருந்தாலும் இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சுமூகமான தீர்வு கண்டு இரு தரப்பிலும் ஒப்புதல் பெற்று எடுக்கப்படும் முடிவுகள் ஷரீஅத் தீர்வு என்ற பெயரில் ஆர்டர் ஆக வழங்கப்படும்.
           தீர்ப்பை ஏற்காமல் ஒரு தரப்பு நீதிமன்றத்திற்கு சென்றால் மறு தரப்பிற்கு ஷரீஅத் கவுன்சில் சார்பாக இலவச வழக்கறிஞர் ஏற்பாடு செய்யப்படும். 

சான்றிதழ்
           புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் சகோதர சகோதரிகளுக்கு பெயர் மாற்றம், அரசு gazette பதிவு போன்ற சட்ட ரீதியான செயல்பாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. 

தொடர்புக்கு
பொதுசெயலாளர்,
மக்கா மஸ்ஜித் ஷரீஅத் கவுன்சில்,
822 அண்ணா சாலை,
சென்னை – 600 002.
Ph. +91 (44) 4214 1333
Email : sc@makkamasjid.comThis e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
அலுவலக நேரம் – தினமும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை. (ஞாயிறு விடுமுறை) 
நன்றி   :http://makkamasjid.com

மௌலானா ஷம்சுத்தீன் காஸிமீ

ஏப்ரல், 12, 1969இல் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், உடன்குடியில் ஜனாப், முஹம்மத் ஸாலிஹ், ஜமீலா பீவி தம்பதியரின் பத்தாவது புதல்வராகப் பிறந்தார் மௌலானா, ஷம்சுத்தீன் காஸிமீ.
இவரது குடும்பம், 1973ஆம் ஆண்டு சொந்த ஊரிலிருந்து சென்னை நோக்கி இடம்பெயர்ந்தனர். சென்னை பட்டிணம்பாக்கம் சீனிவாசபுரத்தில் தனது குர்ஆன் மக்தப் கல்வியை அஷ்ஷெய்க் முஹம்மத் சயீத் அவர்களிடம் பயின்றார்.
அதன் பிறகு பத்தாம் வகுப்புவரை சாந்தோம் மேநிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் 1982-1990 வரை மௌலவி பட்டப் படிப்பை சென்னை பூந்தமல்லியில் உள்ள மதரஸா காஷிஃபுல் ஹுதாவில் மேற்கொண்டார்.
அதன் பிறகு ஷரீஆ உயர்கல்வியை உத்திரப் பிரதேச மாநிலம் தேவ்பந்தில் உள்ள தாருல் உலூம் கலாசாலையில் 3 ஆண்டுகள் பயின்றார்.. அதன் பிறகுதான் இவரது பெயருடன் காஸிமீஎன்ற பட்டப்பெயரும் சேர்த்து அழைக்கப்படலாயிற்று.
காஸிமீஎன்பது தாருல் உலூம் கலாசாலையின் நிறுவனர் மௌலானா, காசீம் நானூத்தவீ அவர்களின் நினைவாக அழைக்கப்படுவதாகும்.
1993ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வி மூலம் வரலாற்றில் (எம்.ஏ.) முதுகலைப் பட்டம் பெற்றார்.
அதன் பிறகு மயிலை மாங்கொல்லை மஸ்ஜிதுல் ஹுதாவில் ஒன்றரை ஆண்டுகள் இமாமாகவும், ராயப்பேட்டை ஜாம் பஜார் காட்பாவா பள்ளிவாசலில் ஐந்தாண்டுகள் ஜுமுஆ சொற்பொழிவாளராகவும் (கத்தீபாக) பணியாற்றினார்.
அத்துடன் மயிலை அருண்டேல் மஸ்ஜித், புரசைவாக்கம் தானா தெரு மஸ்ஜித், எழும்பூர் மலபார் முஸ்லிம் அசோஷியேஷன் மஸ்ஜித் ஆகியவற்றில் வாராந்திர குர்ஆன் விரிவுரை வகுப்புகள் நடத்திவந்தார்.
2000ஆம் ஆண்டு முதல் இதுவரை சென்னை, அண்ணா சாலையில் உள்ள மக்கா மஸ்ஜிதில் தலைமை இமாமாகப் பணியாற்றி வருகிறார்.
''மக்கா ஹஜ் சர்வீஸ்'' என்ற பெயரில் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதன் மூலம் ஆண்டுதோறும் ஹஜ், உம்ராவிற்காக அழைத்துச் செல்கிறார்.
மஸ்ஜித்களில் பணியாற்றிக்கொண்டிருக்கவே, தப்லீஃக் ஜமாஅத், மனித நீதிப் பாசறை போன்ற முஸ்லிம் அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்தி பணியாற்றியுள்ளார்.
மக்கா மஸ்ஜிதில் மக்களுக்கு தொழுவிப்பது என்ற இமாமத் பணியோடு நின்றுவிடாது, ''அழகிய கடன் அறக்கட்டளை'', ''ஷரீஅத் கவுன்சில்'' ஆகிய தொண்டு நிறுவனங்களை நிறுவி, அதன் மூலம் ஏராளமான சமூகப் பணிகளில் ஊக்கமிக்க குழுவினருடன் இணைந்து சேவைகள் பல ஆற்றி வருகிறார். (அல்ஹம்து லில்லாஹ்!)
ரமளான் காலங்களில் தினமும் தராவீஹ் தொழுகைக்குப் பிறகு பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றுவதுடன், தமிழன் தொலைக்காட்சியில் தினசரி அரைமணி நேரம் நேரலை மூலம் மார்க்க ஐயங்களை தெளிவுபடுத்தியும் வருகிறார்.
நன்றி   :  http://makkamasjid.com/

இறைவனது அருளில் கண்கள்

மொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க

உங்களுடைய wi-fi மொபைல் ஃபோனில் இந்நேரம்.காம் / ஜிமெயில் போன்ற தளங்களில் இருந்து தமிழில் வாசிக்க சிரமம் உள்ளதா? இதோ உதவிக்குறிப்புகள்:

முதலில் http://www.opera.com/mini/ எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி டவுன்லோட் செய்யவும்.


உங்களின் வை-ஃபை மொபைல் ஃபோன் மூலம் மேற்கண்ட முகவரிக்குச் சென்றிருந்தால் நேரடியாக மொபைலில் டவுன்லோடு செய்து இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அல்லது FireFox, IE போன்ற உங்கள் கம்ப்யூட்டரின் ப்ரவுஸர் மூலம் டவுன்லோடு செய்திருந்தால் அதை USB cable மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ இன்ஸ்டால் செய்யவும்.

இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்த பிறகு...

1. opera mini browser open செய்யவும்

2. அட்ரஸ் பாரில் opera:config என்பதை டைப் செய்து ஒகே கொடுக்கவும். (www என்று டிஃபால்ட்டாகத் தெரியும் எழுத்துக்களை நீக்கிவிட வேண்டும்)

3. வரும் "பவர் யூஸர் செட்டிங்ஸ்" பக்கத்தில் use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் எழுத்துருக்கள் தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்.

மீண்டும் ஒபெரா மினியை restart செய்யவும். இந்நேரம்.காம் செய்தித் தளத்தினை அனுபவித்து மகிழவும்.

பின்குறிப்பு: நாம் கூறிய Use bitmap fonts  என்ற ஆப்ஷனை எனேபிள் செய்யும் வரை யுனிகோடு தமிழ் தள எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத் தான் தெரியும். ஒரு முறை எனேபிள் செய்துவிட்டால் யுனிகோடு தளங்களோடு ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்ற எந்த ஒரு மின் அஞ்சல் சேவையையும் தமிழில் தங்கு தடையின்றி வாசிக்க இயலும்.

Opera ஸெட்டிங் இல் மொபைல் வியூ என்ற ஆப்ஷன் உள்ளது. இதனை டிக் அடித்து சேமித்தால் டெக்ஸ்ட் ஆனது வாசிக்க மிக எளிதாக (printer friendly) மொபைலின் நீள அகலத்திற்கு ஏற்றார் போல் மாறிக் கொள்ளும்













Source : http://www.inneram.com/

கண்கள்




கண்களை கொண்டும் திரி தோஷங்களை கண்டு பிடிக்கலாம். பொதுவாக வாயு தோஷமுடைய கண்கள் சிறியதாகவும், நிலையற்ற நிலையில் கருவிழி சுற்றிக் கொண்டு இருக்கும்.

பித்த தோஷம் உடைய கண்கள் மிக கூர்மையான, ஊடுருவும் பார்வை உடையது, கண்கள் மெருன்நிறம் அல்லது சிவந்தும் இருக்கும்.

பெரிய, அகலமான, வெள்ளையான கண்கள் (முட்டை கண்ணு) வாத தோஷத்தையும் குறிப்பிடும். 




நன்றிhttp://haish126med.blogspot.com/

LinkWithin

Related Posts with Thumbnails