அல்குரானையும் ,கிதாபினையும்....
அல்குரானையும் ,கிதாபினையும் ஒத வேண்டும் மூடி அழகு பார்ப்பதில் என்ன பயன்.

நேர்த்தியான அச்சிட்டு ஒரு புத்தகம் இருக்கிறது
என் பெயர் தெரிய , இங்கே சில குறிப்புகள் உள்ளன...
அழகிய அட்டையில் மற்றும் காட்சிக்கு இனிமையாய் நன்றாக பிணைக்கப்பட்டுள்ளது
ஆனால் முஸ்லிம்கள் இதயத்தில் நான் அரிதாக காணப்படுவன் நான்!
ஒரு அலமாரியில் உயர்ந்த நிலையில்
நான் வரிசைப் படுத்தப்பட்டு அழகாக வைக்கப்பட்டு இருக்கிறேன்
மரியாதையுடன் அதிகமாக முத்தம் நிறைய கிடைக்கப் பெறுகின்றேன்
ஆனால் எனது முக்கியத்தினை அவர்கள் எப்போதும் இழந்து விடுவதனை பார்கின்றேன்!
ஒரு மென்மையான குரலில் அவர்கள் என்னை ஓதாமல்
என்னை உள்ளே வைத்து புறக்கணிக்கப்படுவது வேதனையானது.
அதனால் வரும் இழப்பு என்னைப் பாராமல் ஓதாமல் ஒதுங்கி இருப்பவர்களுக்குதான்
என்பதனை அவர்கள் அறியாமல் இருப்பது வேதனை!
உண்மையாக சொல்கிறேன், இந்த நேரத்தில் எனக்கு இது பழகிவிட்டது
எனது அருமை
யினை பயன்படுத்துவது மிக மிக அரிதாக உள்ளது!
நான் உலகத்தில் மாற்றம் கொண்டு வர முடியும்.
நான் ஒரு அதிசயம், என் வார்த்தை புரிந்துக் கொள்வதில் உயர்வு உள்ளது.
நான் உங்கள் காப்பாளர் , நான் உங்கள் வழிகாட்டியாக இருக்கிறேன்,
என்னைப் பயன் படுத்திக் கொண்டோர் உயர்வடைவார்.
எனக்கு பெயர் வைத்தவன் எல்லாம் வல்ல அல்லாஹ்
எனது புனித பெயர் குர்ஆன்.
----------------------
அல்லாஹ்வின் அருளை அலமாரியில் வைத்து அழகு பார்க்கும் நிலை வேண்டாம் .
அல்குரானையும் ,கிதாபினையும் ஒத வேண்டும் மூடி அழகு பார்ப்பதில் என்ன பயன்.
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.
தயவு செய்து கீழ் உள்ள லிங்குகளை கிளிக் செய்து ஓதுங்கள்
No comments:
Post a Comment