இதனால்தான் 'படிக்காத மேதை'கள் உருவாக முடிகிறது.எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கூட நாட்டுப்புறப் பாடல்களைப் பாடவும் பழந்தமிழ் இலக்கியங்களை அறியவும் செவிச்செல்வமே துணை புரிந்தது.
இந்து மதத்தின் வேதங்களைச் "ச்ருதி" என்பர். செவியால் கேட்டுக் கேட்டு மற்றவர்களுக்குப் பரவியதால்தான் வேதங்களைச் "ச்ருதி" என்கின்றனர். . முஸ்லிம்களின் வேதமும் செவிவழியாகவே வந்து எழுத்தில் வடிக்கப்பட்டதாகவும் நபியிடம் சீடர்கள் வினாக்கள் தொடுத்தே விளக்கங்கள் பெற்றதாகவும் அவ்வேதம் அருளப்பட்ட வரலாறு கூறுகிறது.
எனவே கேள்வியால் கற்ற அறிவை ஆசான் உறுதிப் படுத்தித் தேர்வு செய்ய வினாத் தொடுப்பது கட்டாயத் தேவையாக இருந்தது. இக்காலத்தில் படிப்பதன் மூலமும் எழுதுவதன் மூலமும் அறிவு பெருகுவதால் தேர்வுகளில் எழுத்தில் வினாக்கள் தொடுக்கப்படுகின்றன. எனவே அதைக் கண்டுபிடித்தவர் யார் என்பது தேவையற்றது; ஆனால் வினாத்தொடுப்பது தேவையானது.
முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து ஏற்படும் என்ற உளவுத் தகவலை அடுத்து போயஸ்தோட்டத்தின் நுழைவாயிலில் ரயில்வேகேட் போல ஒரு செக்போஸ்ட் வைக்கப்பட்டுப் போவோர் வருவோர் காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதில் ரஜினியைக் காண வருவோர் பாதிக்கப்பட்டதால் ரஜினி எரிச்சலடைந்து தம் அதிருப்தியை வெளியிட்டார்.
அமைச்சர்கள் உட்பட கட்சியினர் அனைவரையும் தம் காலில் விழ வைத்து ஆண்டு கொண்டிருந்த ஜெயலலிதாவின் தரப்புக்கு இது பிடிக்கவில்லை. யாரையும் மதித்தோ பொருட்படுத்தியோ பழக்கப்பட்டிராத ஜெயலலிதா தரப்பு எதிர்வினையாற்றவே கடுப்படைந்த ரஜினி "ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" என்று கூறினார்.
இருதரப்புச் செய்திகளையும் ஊடகங்கள் பெரிதாக ஊதி விட்டிருந்தன. அச்சமயத்தில் ஜெயலலிதாவுடன் நரசிம்மராவ் கண்ட தேர்தல் கூட்டணி பிடிக்காமல் மூப்பனார் தலைமையில் சிதம்பரம் உட்பட்டோர் பிரிந்து 1996 ஆம் ஆண்டு தேர்தலில் த.மா.கா. கட்சியைத் துவக்கினர். ரஜினியின் ஆதரவு அறிக்கையும் வந்தது. அத்தேர்தலில் ஜெயலலிதா, நரசிம்மராவ் தரப்பு தோல்வி கண்டது.
இது ரஜினியால் ஏற்பட்டது என ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டது. ரஜினிக்கு எனச் செல்வாக்கு இருந்திருந்தால் அடுத்த தேர்தலில் ஏன் அது செல்லுபடியாகவில்லை முத்து, படையப்பா போன்ற படங்களில் சில அரசியல் சாய்வு வசனங்கள் ரஜினியால் பேசப்பட்டதிலும் ரசிகர்கள் புதுப்புது அர்த்தம் கண்டனர். குசேலன் படத்தில் இதற்கு விளக்கமும் கொடுத்து விட்டார் ரஜினி. 2004 ஆம் ஆண்டில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் முகத்துக்கு நேரே அவரைப் புகழோ புகழ் எனப் புகழ்ந்து வாய்ஸ் கொடுத்து மன்னிப்புப் பெற்றுக் கொண்டார் ரஜினி.
நீரா ராடியா உரையாடலில் இதுவரை வெளியான டேப்புகளின் அடிப்படையில் பார்த்தால் அழகிரி, ஸ்டாலின் இருவருக்கும் தெரியாமல் இவ்வளவும் நடந்திருக்க வாய்ப்புண்டு என நம்புவதற்கு இடமிருக்கிறது.
சரியா தவறா என நீங்கள்தாம் சொல்ல் வேண்டும்.
இந்தியாவின் எல்லாச் சந்திலும் சந்தி சிரித்துப் பலமாதங்களுக்குப் பிறகு 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடையவர்களின் இடங்களில் ஸீபீஐ "திடீர் சோதனை" நடத்துவது பற்றி ... - வசீகரன், பட்டுக்கோட்டை
உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின் தான் சி பி ஐ விசாரிப்பதற்குக் களம் இறங்கியது. அதனால் சி பி ஐ யைக் குற்றம் சொல்ல முடியாது.
(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)
Source : http://www.inneram.com/2011010212819/vanagamudi-answers-02-01-2011
No comments:
Post a Comment