புதுடெல்லி:அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு கோரி ஹஸாரே குழுவினர் டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் இமாம் ஸய்யத் அஹ்மத் புகாரியை சந்தித்துப் பேசினர்.
ஹஸாரேவின் போராட்டத்தில் முஸ்லிம்களை உட்படுத்தாததற்கு நேற்று முன் தினம் இமாம் வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
ஹஸாரே குழுவைச் சார்ந்த கிரண்பேடி, அரவிந்த் கேஜ்ரவால் ஆகியோர் இமாமின் வீட்டில் சந்திப்பை நிகழ்த்தினர். முஸ்லிம்களை போராட்டத்தில் கலந்துக்கொள்ள செய்யாததற்கு இமாம் தனது கடுமையான அதிருப்தியை ஹஸாரே குழுவினரிடம் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்காகவும் களமிறங்க வேண்டும் என ஹஸாரே குழுவினருக்கு இமாம் கோரிக்கை விடுத்தார்.
Source: http://muthupet.org
nalla visayam thaanee... ithil entha arasiyalum illaiyee..
ReplyDelete