Friday, August 24, 2012

கனவும் நினைவும் ஒன்றுபட முடியுமா! ஒரு கருத்தோட்டம் (வீடியோ இணைப்புடன்)

கனவும் நினைவும் ஒன்றுபட முடியுமா! ஒரு கருத்தோட்டம் (வீடியோ இணைப்புடன்): எனது கற்பனை,  என்னைப் பொறுத்தவரை,  ஒரு காலகட்டத்தில் நெறிப்படுத்தும் நிகழ்வுகளாக அமைய வாய்ப்பும் உண்டு!

 நுண்ணுணர்வின் மாபெரும் சக்தி

நீங்கள் எந்த உடல் தொடர்பு அல்லது கருவிகளின் பயன்பாடு இல்லாமல் மற்றொரு நபருக்கு தகவலை அனுப்பும் திறன் உங்களிடத்து ஒன்றி இருக்கும் சக்தி .இரண்டு உள்ளங்களில் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக ஏக்கமா! ஒடுக்கமா! ஒதுக்கமா! ஏமாற்றமா ! எதுவும் நடக்கும்.'உன்னை நினைத்தேன் நீ வந்தாய் ஆமாம் நானும் உன்னையே நினைத்தேன்'. இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கும் நிகழ்வு இது ஒரு மின்சார தொடர்பு . மின்னலாக வந்து மறையும். மன ஓட்டத்தில் புலன்கள் தொடர்பின்றி தன் உள்ளத்தில் உள்ள எண்ணங்களை செயல்படுத்துதல் நிலை வர இது தோன்றலாம்
 கனா ஒன்று கண்டேன் 
நான் ஒரு கனவு கண்டேன் . தமிழ்நாட்டிலிருந்து ஈழத்திற்கு ஒரு பாலம் அமைந்துள்ளதாக அது பூம்புகாரிலிருந்து ஆரம்பித்து யாழ்பானதிற்கு செல்வதற்கு . (இராமேஸ்வரம் வடசொல் .அதனால் அங்கிருந்து ஆரம்பிக்கவில்லை மற்றும் இராமர் பாலம் இருப்பதால் அங்கு வேண்டாம்)அந்த பாலத்தில் ஒரு தலைவர் திருவாறுர் தேரிலும் மற்றொரு தலைவர் நடைப் பயணம் செல்வதாகவும்!
இது நடக்கட்டும்! 

No comments:

Post a Comment