Tuesday, March 12, 2013

துபாய் சாதனை: ஒரு கோடி சுற்றுலா பயணிகள்

கடந்த 2012 ஆண்டு துபாய் மாநகருக்கு ஒரு கோடி சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளதால் துபாய் சாதனை படைத்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு அது இன்னும் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு கோடி சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளதால் கடந்த ஆண்டு தங்கும் விடுதிகளின் மட்டும் 18.82 பில்லியனுக்கு வருமானம் பெற்றுள்ளதாகசுற்றுலாத் துறையின் பொது இயக்குநர் ஹிலால் அல்மர்ரி தெரிவித்துள்ளார்.

நகர நிர்வாகத்தில் காணப்படும் ஒருமித்த திறமைகள், உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகள், கிழக்கத்திய நாடுகளுக்கும்,மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் அமைந்திருக்கும் தன்மை மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய வகையில் அத்துறையினரின் இடைவிடா முயற்சிகளும், அதனால் பயணிகளுக்கு கிடைக்கும் பலன்களும் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Source : http://www.inneram.com/
-----------------------------------------------------

No comments:

Post a Comment