Tuesday, April 28, 2015

ஏகன் இறையோனே ....!

ஏகனவன் தனித்தவன் தன்னிகர் இல்லாதோன்
அனைத்திற்கும் அதிபதி தனக்கென இல்லாதோன்
என்றும் நிலைத்தவன் இணைதுணை இல்லாதோன்
அளவற்ற அருளாளன் தேவையே இல்லாதோன்

எங்கும் நிறைந்தவன் இல்லையென்பதே இல்லாதோன்
சூட்சமங்கள் அறிந்தவன் சுற்றங்கள் இல்லாதோன்
எல்லாம் படைத்தவன் பாரபட்சம் இல்லாதோன்
பாவங்களை மன்னிப்பவன் ஏமாற்றங்கள் இல்லாதோன்

உணவளித்து காப்பவன் ஊணுறக்கம் இல்லாதோன்
அடிபணிதலை விரும்புபவன் அச்சம் இல்லாதோன்
உயிர்களுக்கு உடமையாளன் ஜனனமரணம் இல்லாதோன்
அகிலமெல்லாம் ஆளுபவன் ஆண்டான் இல்லாதோன்
ராஜா வாவுபிள்ளை
 பணித்தானே ஏகன் இறையோனே ....!

No comments:

Post a Comment