Sunday, April 30, 2017

அவங்க சொல்றதும் சரிதான்.இவங்க சொல்றதும் சரிதான்..எது தான் உண்மை..

Saif Saif

பாமரன் நம்மை ரெம்ப தான் கன்புயூஸ் பண்றாங்க இவங்க...
தாயின் காலடியில் சொர்க்கம்..நபிகள் சொன்னது..
இதற்கு தாயின் காலடியில் ஒரு சொர்க்கம் இருப்பதாக அர்த்தமாகுமா.!?.அதற்காக நாம் தாயின் கால்களை முத்தம் கொடுப்பது தவறாகுமா..!?
அப்படிச் செய்யலாமா..?
இது ஷிர்க் அல்லவா.?
ஆனால் இப்படி நம் மக்கள் யாரும் செய்ததாக தெரியவில்லையே இப்படி எல்லாம் சிந்திக்க வேண்டுமா..?
இதற்கு அர்த்தம் தாயை மதிக்க வேண்டும்,பேண வேண்டும் அவர்களுக்கு உரிய பணிவிடைகளை செவ்வனே நிறைவேற்ற வேண்டும் இவ்வாறு செய்பவர்கள் மரணத்திற்கு பிறகு சொர்க்கம் செல்வார்கள் என்ற அர்த்தத்தில் தானே நாம் அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டும்...
அடுத்து,

Tuesday, April 25, 2017

இஸ்லாமிய தீவிர வாதம் என்றால் என்ன?

Vavar F Habibullah 
இஸ்லாமிய தீவிர வாதம் என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே தீவிர வாதிகளாய் மாற காரணம் என்ன? என்னோடு நேசத்தோடு, பாசத்தோடு, அன்போடு, அபரிதமான வாஞ்சையோடு பழகிக் கொண்டிருக்கும் ஆயிரக் கணக்கான ஹிந்து, கிருத்துவ நண்பர்களின கேள்வித்தான் இது.
வைதீக ஹிந்து குடும்பங்களின் பூஜை அறைகளில் கூட என்னை அநுமதித்த ஹிந்து குடும்பங்கள் உண்டு, அதை பெருமையாக கருதியதும் உண்டு.எம்.ஜி.ஆர். அவர்களின் நண்பரும், அவர் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராகவும் இருந்த என் அருமை நண்பர் மறைந்த திருச்சி. சவுநதரராஜன் அவரகளுடன் பலமுறை காஞ்சி சங்கராச்சாரி சுவாமிகளையும் சந்தித்து இருக்கிறேன். முழுமையாக இஸ்லாத்தைப் பற்றி தெரிந்தவர் சுவாமிகள். ஒரு முஸ்லிம் என்பதாலேயே என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும்.ஒரு முறை என் அன்பு நண்பர் மறைந்த DR.ஜெயசீலன் மத்தியாஸ் அவர்களுடன், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி நிறுவனர், திரு.இராமசாமி உடையார் அவர்களை அவரது அலுவலக அறையில் சந்தித்த போது, ஒரு பெரிய பிரேம் போட்ட படம் என் கண்ணில் பட்டது. சமீபத்தில் மறைந்த திரு. பி.எஸ்.எ.றஹ்மானின் படம் தான் அது. "என் முதலாளி அவர், என்று கண்களில் நீர் மல்க உடையார் சொன்ன வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சை விட்டு அகலவில்லை.

நாம் யார்?


💚Assalamualaikum அஸ்ஸலாமு அலைக்கும்
1. நாம் யார்?
💚நாம் முஸ்லிம்கள்.
2. நம் மார்க்கம் எது?
💚 நம் மார்க்கம் இஸ்லாம்.
3. இஸ்லாம் என்றால் என்ன?
💚அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவது.
4. இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் எத்தனை? அவை யாவை?
💚இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் ஐந்து.
அவை கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்.
5. கலிமாவை கூறு
💚 லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்
6. கலிமாவின் அர்த்தத்தை கூறு.
💚வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்.
7. ஒரு நாளைக்கு கடமையான தொழுகை எத்தனை? அவை யாவை?
💚ஒரு நாளைக்கு கடமையான தொழுகை ஐந்து. அவை
சுப்ஹு, லுஹர், அஸர், மக்ரிப், இஷா
8. நோன்பு நோற்பது எப்போது கடமை?
💚ரமலான் மாதத்தின் 30 நாளும் நோன்பு நோற்பது கடமையாகும்.
9. ஜகாத் என்றால் என்ன?
💚பணக்காரர்கள், ஏழைகளுக்கு தம் செல்வத்திலிருந்து 40ல் ஒரு பகுதியை கொடுப்பது ஜகாத் ஆகும்.
10. ஹஜ் என்றால் என்ன?
💚துல்ஹஜ்ஜி மாதத்தில் மக்காவில் புனித 'காபா'வை வலம் வந்து, முக்கிய இடங்களில் தங்கி, வணக்கம் புரிவது ஹஜ் ஆகும்.
11. ஹஜ் செய்வது யார் மீது கடமை?
💚உடல் வசதியும், பண வசதியும் உடையவர்கள் மீது ஆயுளில் ஒரு முறை
ஹஜ் செய்வது கடமையாகும்.
12. ஈமான் என்றால் என்ன?
💚ஈமான் என்பது உறுதியான நம்பிக்கை ஆகும்.

Monday, April 24, 2017

சொல்லாதீர்கள்..சொல்லுங்கள்.

நாங்கள் மட்டும் தான் செய்கிறோம் என்று சொல்லாதீர்கள்...
நாங்களும் செய்கிறோம்
எனச் சொல்லுங்கள்..
எங்களால் தான் முடியும் எனச் சொல்லாதீர்கள்.எங்களாலும் முடியும் எனச் சொல்லுங்கள்..
நான் நினைத்ததால்
தான் நடந்தது எனச் சொல்லாதீர்கள்..நானும் நினைத்தேன் எனச் சொல்லுங்கள்..

Wednesday, April 19, 2017

மலப்புரம் தொகுதி இடைத்தேர்தலில் மோசமான தோல்வியால் கேரள பாஜக அதிர்ச்சி: கடுமையாக உழைத்தும் வாக்கு விகிதம் உயரவில்லை

மலப்புரம் தொகுதி இடைத்தேர்தலில் மோசமான தோல்வியால் கேரள பாஜக அதிர்ச்சி: கடுமையாக உழைத்தும் வாக்கு விகிதம் உயரவில்லை: இத் தொகுதியில் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அகமது வெற்றி பெற்றார்.

மாட்டு இறைச்சி



கேரளாவில் அதிகமானோர் மாட்டு இறைச்சி பிரியர்கள். மாட்டுக் கறிக்கு பாஜகவின் கிடுக்கிப்பிடியே மலப்புரத்தில் பாஜகவின் பின்னடைவுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. இதை உணர்ந்ததாலேயே பிரச்சாரத்தின் போது, பாஜக வேட்பாளர் பிரகாஷ், தான் வெற்றி பெற்றால் இங்கு நல்ல மாட்டு இறைச்சி விநியோகம் செய்யப்படும் என்றே பேசினார். ஆனால், கேரள மாநில பாஜக தலைவர் சிம்மனம் ராஜசேகரன், `அவர் எந்த சூழ்நிலையில் அப்படி பேசினார் என விளக்கம் கேட்பேன்” என்றார்.



அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ‘’மாட்டுக்கறி குறித்து வாயால் சொன்னால் போதாது. அதனை சிம்மனம் ராஜசேகரனே தொடங்கி வைக்க வேண்டும்” என பிரச்சாரத்தில் கிண்டலடித்தார்.



இடைத்தேர்தலில் தோல்வி ஒருபுறம், வாக்குகள் எண்ணிக்கை உயராதது மறுபுறம் என அதிர்ந்து போயிருக்கிறது கேரள பாஜக.

நட்புகள் மீது

நட்புகள் மீது
வெறுப்புமில்லை..
உறவுகள் மீது
பகையுமில்லை..
இருக்கும் என்று
அலட்டவுமில்லை..
இல்லை என்று
விரட்டவுமில்லை..

Monday, April 10, 2017

மனிதம்

 மனிதம்
                           ஆலிம் புலவர்
                      எஸ். ஹூஸைன் முஹம்மது
                     ஹக்கிய்யுல் காதிரிய்யுல் மன்பயீ, , திண்டுக்கல்

மனிதம் அன்பின் மறுபெயரா
  மனதில் கசியும் வாசனையா
குணத்தால் எழுப்பிடும் கோபுரமா
  குளிர்ந்த பண்பின் கூறுகளா

உனது எனது என்பதெலாம்
  ஓய்ந்தபின் தோன்றும் உயிர்சுகமா
அனைத்து உயிரும் தன்னுயிராய்
  ஆராதிக்கும் தவநிலையா?