Showing posts with label அன்னை. Show all posts
Showing posts with label அன்னை. Show all posts

Sunday, May 12, 2013

ஒரு நாள் போதுமா

ஒரு நாள் போதுமா


***********

அன்னைக்கென்று ஒரு நாளும் வேண்டாம் என்பதே என் எண்ணம்.

ஒரு குவளைக்குள் அடங்குமா கடல் ?

ஒரு கூடைக்குள் முடங்குமா வானம் ?

கடலையும் வானத்தையும் விட

வற்றாத பாசத்தின் ஜம்ஜம் சுனையல்லவா தாய்...

@ தாயின் கருணையை விட இறைவனின் கருணை எத்தனையோ மடங்கு அதிகம் என இறைவன் சொன்னதாக நபிகள் சொன்னார்கள் . உடனே சில தாய்மார்கள் கேட்டார்கள்... "நாயகமே.. நாங்கள் குழந்தையை பத்து மாதம் வயிற்றில் சுமக்கிறோம்.. அதற்கு சிரமம் வரக்கூடாதென்பதற்காக சிரமத்தை எல்லாம் நாங்கள் தாங்கிக் கொள்கிறோம். எங்கள் உதிரத்தை பாலாக்கிக் கொடுக்கிறோம்.. அவர்களுக்காக நாங்கள் எத்தனையோ தியாகங்கள் செய்கிறோம்.. அப்படிப்பட்ட தாயின் கருணையை விடவா இறைக்கருணை உயர்ந்தது ?"

Monday, December 3, 2012

ஏங்கி நின்றேன்...!

பள்ளிப்பருவத்து முன்பருவத்தில்...
பகல் உணவில் கூட பால் தந்த ...
அந்த அன்னையின் பாசம்...
இன்று தூரமாகி போனதை எண்ணி...
ஏங்கி நின்றேன்...!

பள்ளிப்பருவம் எட்டியதும்...
பார்ப்போர் வியக்க பணிவிடை செய்து...
பாடசாலை அனுப்பி வைத்ததை நினைத்து...
ஏங்கி நின்றேன்...!

படித்தது போதும் என்று...
பாதிலேயே கல்வி விட்டு....
பன்னாட்டு விமான நிலையம் கண்டு...
புலம்பெயரும் கனவுகள் சுமந்து...
பாசத்தை தூரமாக்கி....
ஏங்கி நின்றேன்...!

வாப்பா பார்த்து, உம்மா பார்த்து...
வரதட்சணை கண் மறைத்து...
வாயாடிப் பெண்ணை மணந்து...
அன்புக்காக...
ஏங்கி நின்றேன்...!

LinkWithin

Related Posts with Thumbnails