ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும்,
கடைசி அவதாரமான கல்கி,
இறைதூதர்
அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.
இதை நான் சொல்லவில்லை,
சமீபத்தில் ஹிந்தி
மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின்,
இந்தியாவே ஒரு கலங்கு
கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால்,
அவர் இந்நேரம்
சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு,
அந்த புத்தகத்தையும்
தடை செய்திருப்பார்கள்.
ஆனால்,
கல்கி அவதாரத்தைப்
பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு,
“பிரபஞ்ச
இறைத்தூதின் வழிகாட்டி”
என்னும் இந்த
புத்தகம்,
வங்காளத்தில் இருந்து
வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக
இருக்கிறது. இதை எழுதியது,
தலைசிறந்த ஆய்வாளரான
பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும்,
ஒரு பிராமண சமஸ்கிருத
பண்டிட்டாவார்.
பண்டிட் வைத் ப்ரகாஷ,
பன்னெடுங்கால கடின
ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை,
இதே போல ஆய்வு
செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும்,
முழுக்க
இப்புத்தகத்தை படித்துணர்ந்து,
பலமான ஆதாரங்களினால்,
இப்புத்தகத்தின்
தகவல்,
முழுக்க முழுக்க உண்மை தான்
என்று சான்றளித்துள்ளனர்.
