Showing posts with label பெருந்தன்மை. Show all posts
Showing posts with label பெருந்தன்மை. Show all posts

Tuesday, August 20, 2013

அப்துல்லாஹ் உடலை விட்டுக் கொடுத்தது இஸ்லாமிய கூட்டமைப்பின் தவறா?

டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் உடலை விட்டுக் கொடுத்தது தவறான முன்னுதாரணம் என சிலர் வாதிடுகின்றனர். ஆனால் இது சூழ்நிலை கருதி எடுக்கப்பட்ட சரியான முடிவு ஆகும் !

இதை அவர் மருத்துவமனயில் மரணித்த சமயத்தில் அங்கிருந்த சகோதரர்களிடம் நான் தடா ரஹீம் உள்ளிட்ட சகோதர்கள் பேசிய போது இதுதான் சிறந்த முடிவாக இருக்கும் என்பதை மற்ற தலைவர்களிடமும் சொல்லி ஒருமித்த கருத்துக்கு வர வலியுறுத்துவோம் ஆனாலும் கூட்டமைப்பின் இறுதி முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று கூறினோம்.

அல்லாஹ்வின் கிருபையால் மருத்துவமனையில் எடுத்த முடிவே மசுராவின் முடிவாகவும் அமைந்து அழகிய முறையில் அப்துல்லாஹ் அவர்களின் ஜனாஸா தொழுகை நடைபெற்றது! இது முஸ்லிம்களின் மேல் மதிப்பையும் , இஸ்லாத்தின் பால் மற்ற மக்களுக்கு ஈர்ப்பையும் ஏற்படுத்தியது.

இதுவல்லாமல் நாம் விட்டுக் கொடுக்காமல் போராடி அவர் உடலை எடுத்து அடக்க முற்பட்டிருப்போமானால் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும் !

LinkWithin

Related Posts with Thumbnails