இஸ்லாமிய சட்டப்படி ஒரு பெண்ணுக்கு தன் சொந்த பணத்தை (சொத்தை) தான் வைத்துக் கொள்ள உரிமை உண்டு . அவள் பொருளை அவளது கணவன் அவள் அனுமதி இல்லாமல் விற்கவோ எடுத்துக் கொள்ளவோ உரிமை கிடையாது மற்றும் அவள் எந்த உறவு முறைகளுக்கும் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.அது அந்த பெண்ணின் விருப்பத்தைப் பொருத்தது
என் மனைவியிடம் நகைகள் அவள் போட்டுக் கொள்ளாமல் வீட்டு அலமாரியில்
முடங்கிக் கிடந்த காரணத்தினால் அதை விற்று ஒரு கட்டிடம் வாங்கி வாடகைக்கு
விட்டால் வருமானம் வருமே என்ற எண்ணத்தில் ஆடிட்டர் யோசனை கேட்டேன். அவர்
உடனே 'அந்த நகை உங்கள் சொத்தல்ல அது அந்த பெண்ணைச் சேர்ந்தது' என்றார்.
நான் 'வாங்கப் போகும் கட்டிடம் மனைவியின் பெயரிலேயே இருந்து அதனால்
கிடைக்கும் வருமானமும் மனைவிக்கே கிடைக்க வழி செய்வேன்' என உறுதி
கொடுத்தேன்.பின்பு ஆடிட்டர் ' நல்லது' என்றார்.
