ஆட்சி அதிகாரத்தை கொடுப்பதும்.ஆட்சி அதிகாரத்தை அதை எடுப்பதும் இறைவன் வசமே. முற்றிலும் உண்மை.
நாளை இறைவன் உங்களிடமும் நிச்சையமாக கேள்விகளை கேட்பான் என்பதை மறவாதீர்கள்- இதுவும் முற்றிலும் உண்மை.
"அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை".- நபி மொழி
"பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்".- நபி மொழி
இவைகளும் அனைவரும் பேண வேண்டிய நல்வழி என்பதும் உண்மை
சில ஆலோசனைகள்
நல்லவராக இருந்தால் மட்டும் போதாது அவர் வல்லவராகவும் இருக்க வேண்டும்.
இதயம் கெட்டால் உடலும் கெட்டுவிடும் . அதனால் ஊர் ஒற்றுமை கெட்டால் அனைத்தும் கெட்டுவிடும்.அதனால் ஒற்றுமைக்கு முக்கியம் தரப்பட வேண்டும். அல்லாஹ்வே பெரியவன் என்ற நல்ல நோக்கம் வேண்டும். நமக்குள் பெரியவர், உயர்ந்தவர், நம் கட்சிக்காரர் என்ற குறுகிய வட்டத்தில் பார்க்கக் கூடாது.
அனைத்துக்கும் மேல் அவர் இறை பக்தியுடன் இருந்து அல்லாஹ்வினை தொழக்கூடியவராக இருக்க வேண்டும். பள்ளிவாசலுக்கு முடித்த வரை அவசியம் வர வேண்டும். அனைத்துப் பள்ளிவாசல்களும் இறைவனை தொழக்கூடிய இடம்தான் அதனால் "இது பெரிய பள்ளிவாசல் அது சின்ன பள்ளிவாசல் அது அந்த தெரு பள்ளிவாசல்" என்ற வேற்றுமை காட்டக் கூடாது. பள்ளிவாசல் அழகுக்கா அல்லது தொழுவதற்கா!
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.
2:45 அல்-குர்ஆன்
அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி தொழ வருபவர்களை ஏதாவது காரணம் சொல்லி அவருக்கு தடை விதிக்கக் கூடாது அவர் மற்றவருக்கு இடையூறாக இருக்கும் வரை!
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? 2:114 அல்-குர்ஆன்
நமது கவனம் நமது தொழுகையில் இருக்க வேண்டும். நம் பார்வை அடுத்தவர் தொழுவதின் பார்வைக்கு போகும் பொழுது நாம் நமது தொழுகையின் ஈடுபாட்டில் இல்லாமல் போய் விடுகின்றோம் என்பது உறுதியாகிவிடுகின்றது
இங்கு கிளிக் செய்து படியுங்கள்
பள்ளிவாசல் எதற்கு? அழகுக்கா அல்லது
இருதயம் ஆரோக்கியமாக இயங்க சில குறிப்புகள்
.படத்தினை கிளிக் செய்து பெரிது படுத்தி பாருங்கள்
http://seasonsnidur.blogspot.in/2010/10/blog-post_2864.html


Assalaamu alaikkum varahmathullaahi vabarakaathuhu,
ReplyDeleteWELL SAID.
M.A.Mohamed Ali