Showing posts with label உணவு. Show all posts
Showing posts with label உணவு. Show all posts

Sunday, December 22, 2013

இஸ்லாமும் நுகர்வோர் கலாச்சாரமும்


சம்ஷாத் அப்துல் ஹமீத்

நுகர்வோர் கலாச்சாரம் அதன் உச்சத்தில் இருக்கிறது. ஒரு பக்கத்தில் கடுமையான ஏழ்மை –அடிப்படை தேவைகள் கூட கிடைப்பதில்லை. மறுபக்கத்தில் எல்லாமே அபரிமிதமாக இருக்கிறது. மக்கள் ஒரே வகை உணவு உண்பது அலுத்துப்போய் பல்வேறு விதமான உணவகங்களுக்குச் சென்று உண்ணுகிறார்கள். இன்னும் பலர் சலிக்கும் வரை பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள். அத்தனை பொருட்களை வைத்து மக்கள் என்ன தான் செய்வார்கள்?

ஆடை வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள் –பொதுவாக நாம் கேட்கக் கூடியது, “நான் மீண்டும் மீண்டும் உடுத்தியதையேவா உடுத்திக்கொள்ள முடியும்? ஒரு விருந்தில் அணிந்த ஆடையை என் தோழிகள் எல்லோரும் பார்த்து விட்டார்கள். அதையே அடுத்த விருந்துக்கும் அணிய முடியாது.”

Monday, January 23, 2012

நமது அன்றாட உணவும் காய்கறிகளின் தன்மையும்

நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் ஆகியவைகள் உள்ளன. கார்போஹைட்ரேட் இயங்கும் சக்தியை தருகிறது. புரோட்டீன் உடலை வளர்க்கிறது. கொழுப்பு உடல் மாற்றத்தை தருகிறது. ஒரு மனிதன் தன் எடையை தக்க வைத்துக்கொள்ள குறைந்தது 30-35 கலோரி உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். எடை கூட இன்னும் நிறைய உணவு உட்கொள்ளவேண்டும். ஒரு மனிதன் தினமும் அவனுடைய உடல் எடையில் கிலோவிற்கு 30 மி.லி. தண்ணீர் பருகவேண்டும். அதே அளவு சிறுநீர் வெளியேர வேண்டும். இனிப்பு, உப்பு, துவர்ப்பு உள்ள பொருட்கள் மனிதனின் எடையை கூட்டும். கசப்பு, காரம், புளிப்பு ஆகிய பொருட்கள் மனிதனின் எடையை குறைக்கும்.
வாதம் உள்ளவர்கள் இனிப்பு, உப்பு, புளிப்பு ஆகிய பொருட்களை உண்ணலாம். பித்தம் உள்ளவர்கள் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய உணவுகளை உண்ணலாம். கபம் உள்ளவர்கள் கசப்பு, துவர்ப்பு, காரம் ஆகிய உணவுகளை உண்ணலாம். கசப்பு, புளிப்பு, காரம்; உடைய பொருள்கள் வாயுவை உண்டாக்கும். பயிறு வகைகளை 2 ஆக உடைத்தாலோ அல்லது பிரித்தாலோ இரைப்பையில் வாயு உண்டாகும். ஆகவே பயிறு வகைகளை தண்ணீரில் சில மணி நேரம் ஊர வைத்து சமைத்தல் வாயு உண்டாகாது.

LinkWithin

Related Posts with Thumbnails