சம்ஷாத் அப்துல் ஹமீத்
நுகர்வோர் கலாச்சாரம் அதன் உச்சத்தில் இருக்கிறது. ஒரு பக்கத்தில் கடுமையான ஏழ்மை –அடிப்படை தேவைகள் கூட கிடைப்பதில்லை. மறுபக்கத்தில் எல்லாமே அபரிமிதமாக இருக்கிறது. மக்கள் ஒரே வகை உணவு உண்பது அலுத்துப்போய் பல்வேறு விதமான உணவகங்களுக்குச் சென்று உண்ணுகிறார்கள். இன்னும் பலர் சலிக்கும் வரை பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள். அத்தனை பொருட்களை வைத்து மக்கள் என்ன தான் செய்வார்கள்?
ஆடை வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள் –பொதுவாக நாம் கேட்கக் கூடியது, “நான் மீண்டும் மீண்டும் உடுத்தியதையேவா உடுத்திக்கொள்ள முடியும்? ஒரு விருந்தில் அணிந்த ஆடையை என் தோழிகள் எல்லோரும் பார்த்து விட்டார்கள். அதையே அடுத்த விருந்துக்கும் அணிய முடியாது.”

