Saturday, March 3, 2012

பெண்களுக்கு திரையிடுவது அவசியமா?

தயவு செய்து இந்த ஆய்வை முழுமையாகப் படிக்கவும்.

பெண்களுக்கு திரையிடுவது அவசியமா?

கேள்வி : ஜும்ஆ நடைபெறும் போது பெண்களும் கலந்து கொள்கின்றனர். இதனால் பள்ளியில் திரை போட வேண்டும் என்று சிலரும் திரை போடக்கூடாது என்று சிலரும் கூறுகின்றனர். இதற்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத் தீர்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பதில் : முஃமின்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் திரும்பிவிடவேண்டும். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டால் நம்முடைய மனோஇச்சைகளைப் புறம் தள்ளி விட்டு அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப் படுவதே இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடமையாகும்.
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا  (الأحزاب 33 : 36(
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார் 

Thursday, March 1, 2012

இஸ்லாம் பற்றிய உயர்ந்த உண்மையை பகிர்ந்து கொள்ள ஒரு நாட்டம் மேற்கொள்ளவேண்டும்.

இஸ்லாம் பற்றி மிகவும் தவறாக செய்திகளை பரப்பப்படுகின்றன,அதே நேரத்தில் நமது சமுதாயத்திற்கு தீங்கு ஏற்படும் விதத்தில் செயல் படுகின்றனர். அதிலும் மிகவும் குறிப்பாக மேற்கத்திய நாடுகள் மற்றும் அதனைச் சார்ந்த ஊடகங்கள் இதில் தொடர்ந்து ஈடுபடுகின்றன.ஆனால் அவைகளின் பொய் பிரசாரங்களை மக்கள் நம்புவதாக இல்லை. இஸ்லாம் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள முயற்சிக்கும் மக்கள் இதனால் அதிகமாகியே வருகின்றனர். இதையும் மீறி இஸ்லாம் வளர்ந்து வருகிறது. நாம் உலகின் அனைத்து பகுதிகளில் இருந்து மக்கள் மனதில் இந்த தவறான பொய் பிரசாரங்களை உடைத்தெரிந்து இஸ்லாம் பற்றிய உயர்ந்த உண்மையை பகிர்ந்து கொள்ள ஒரு நாட்டம் மேற்கொள்ளவேண்டும்

Wednesday, February 29, 2012

குத்பாவை சுருக்குவோம், சுன்னாவை நிலைநாட்டுவோம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை
- அஷ்ஷெய்க் அபூ ஹுனைப்
குத்பா என்றால் என்ன?
குத்பா” என்ற அறபு வாசகமானது, உபதேசம் செய்யும் ஒருவரின் உபதேசத்திற்கு வழங்கப்படும் பெயராகும். இதனடிப்படையில் உபதேசம் செய்யும் ஒருவர் அறபு மொழியில் “கதீப்” என்று அழைக்கப்படுவார்.
உண்மையில் வரவேற்கத்தக்க ஓர் உபதேசமானது, சுருக்கமான வசனங்களையும், மனதைக் கவரும் சொற்களையும், கேட்போருக்கு இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடிய விளக்கத்தையும் கொண்டிருக்கும்.
மேலும், மார்க்க ரீதியில் இவ்வாசகமானது, “இன்மை, மறுமை இரண்டினதும் நலவைக் கருதிற்கொண்டு மார்க்க சட்டதிட்டங்கள், மற்றும் அதன் நோக்கங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுக்குச் செய்யப்படும் உபதேசம், எத்திவைத்தல் ஆகிய செயற்பாடுகளைக் குறிக்கும்.” (லிஸானுல் அறப், அல்கானூனுல் முகீத், முஃஜமு முஸ்தலஹாதுல் புகஹா)
இவ்விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டே நபியவர்களினது குத்பாக்களும் அமைந்திருந்தன. எடுத்துக்காட்டாகப் பின்வரக்கூடிய நபிமொழியை அவதானித்துப் பாருங்கள்.
“நபியவர்கள் தனது குத்பாவின் போது, நின்ற நிலையில் உரை நிகழ்த்தக்கூடியவர்களாகவும், இரு குத்பாக்களுக்கும் மத்தியில் உட்காரக் கூடியவர்களாகவும், அல்குர்ஆன் வசனங்களை ஓதக் கூடியவர்களாகவும், மக்களுக்கு ஞாபகமூட்டக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்.” (முஸ்லிம்)
தொழுகையை நீட்டுவதும், குத்பாவைச் சுருக்குவதும் மார்க்க விளக்கத்திற்கு அடையாளமாகும்

Monday, February 27, 2012

பூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே!!!

பூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே!!!

"நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது" (அல் குஆன் 39:21)

"மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம், நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்" (அல் குஆன் 23:18)
நாம் பள்ளிப்பாட புத்தகங்களில் நீரின் சுழற்சி (principle of Water cycle) என்பதைப் பற்றி படித்திருக்கின்றோம். ஆறுகள் மற்றும் கடல்களிலிருந்து நீர் ஆவியாகி, பின்னர் அந்த ஆவிகள் மேகங்களாக மாறி அந்த மேகங்கள் குளிர்ந்து மழையாக பெய்கின்றது என்றும், அந்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று நீர் ஊற்றுக்களாக ஓடுகின்றது என்றும், பூமியின் மேற்பரப்பிலுள்ள நீர் ஆறுகள் வழியாக கடலை அடைகிறது என்றும், பின்னர் மீண்டும் ஆவியாகி, மேகங்களாகி மழை பெய்கின்றது என்றும் படித்திருக்கின்றோம். இந்த வகையான நீரின் சுழற்சிக்கு ஆங்கிலத்தில் water cycle என்று பெயர்.

Sunday, February 26, 2012

திருவள்ளுவர் படம் வரைந்து ஓவியர் வேணுகோபால் சர்மா


"நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தபோது, திருவள்ளுவர் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், "அந்த படத்தை நீங்களே கொண்டுவாருங்கள்' என்றார்.வேணுகோபால் சர்மா என்ற ஓவியர், திருவள்ளுவர் படத்தை வரைந்தார். அதை அண்ணாதுரை, காமராஜர் உட்பட அனைவரும் பார்த்து, அந்த படத்தையே வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம். ஆனால், அதிலும் சிலருக்கு குறை இருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார்". -  கருணாநிதி 
source

  -----------------------------------------------------------------------------------------------------

Saturday, February 25, 2012

தன்னிலை விளக்கம் > “கவியன்பன்” அபுல்கலாம்


முழுப் பெயர்:                             அபுல்கலாம் ABUL KALAM
சுருக்கப்பட்டப்பெயர்:                கலாம் (அப்துல் கலாம் என்று தவறான உச்சரிப்பை அனேகர் செய்வதால்..)
பட்டப் பெயர்:                             “கவியன்பன்” (திருவாரூர் கலைக்கல்லூரியில் கலைஞரால் வாய்வழிப் பாராட்டாக வழங்கப்பட்டது)
                                                     புதிதாக நான் பிறந்த ம்ண்ணின் வாசகர்கள் சூட்டியது “ “கவிக்குறள்”
(பட்டங்களைத் தேடி அடியேன் சென்றது கிடையாது; ஆனால் பட்டங்களால் என்னை மதிக்க நாடும் அன்பை மறுப்பதும் கிடையாது)
தகப்பனார் பெயர்:                       ஷைக் அப்துல் காதிர் (ஸ்ரீலங்காவில் வணிகராய் வளம்பெற்று 1957ல் அந்நாட்டை விட்டு வந்து சொந்த ஊரில்
                                                      வணிகம் செய்து நொடித்த பின்னர் இன்று புதல்வர்களின் வளர்ச்சியினைக் கண்டு உயிருடன் உள்ளார்கள்
தாயார் பெயர்                               உம்முல் ஹபீபா (இறந்து விட்டார்கள்) அவர்களின் நினைவால் என் மனம் வாடும்; அதனால் ஒரு கவி பாடும்

சொந்த ஊர்:  தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் , அதிராம்பட்டினம்(ஓர் அழகியக் கடலோரக் கிராமம்)

படிப்பு                                         பி.காம். (வணிகவியல்) 1979 சென்னைப் பல்கலைக்கழகம்/ திருவாரூர் கலைஞர் கலைக் கல்லூரி

வாழ்வின் மாறாத நிகழ்வுகள் > தந்தைக்கு ஒரு தாலாட்டு


அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு நவின்றுள்ளார்கள். ''(ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுடைய அனைத்துச் செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும். (அவை)
நிலையான தான தர்மம் (ஸதகத்துல் ஜாரியா)
பயனளிக்கக் கூடிய அறிவு
தனக்காகப் பிரார்த்திக்கக் கூடிய சிறந்த பிள்ளை'' (ஆதாரம் : முஸ்லிம்)

தாய்  தந்தைக்கு இறைவனிடம் துவா செய்வோம் . : ஒரு மனிதன் இறந்தபின் அவனைஅவரை  தொடரும் மூன்று விஷயங்களில் அவருக்காக  துஆ கேட்கும் ஸாலிஹான பிள்ளைகள். தனக்காக பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள பிள்ளைகள்  அவர் செய்யும் துஆவின் பலாபலன்கள் அவரைச் சென்றடையும், அதாவது துஆவின் மூலம் நன்மைகள் கிடைக்கும், தீமைகள் அழிக்கப்படும்
வாழ்வின் மாறாத  நிகழ்வுகள்
 =====================================================================

தந்தைக்கு ஒரு தாலாட்டு - 2  

தந்தைக்கு ஒரு தாலாட்டு - 2
சிங்கை மருத்துவரிடம் இந்தியாவிற்கு என்தந்தையை அழைத்துச் செல்கிறேன் என்று அனுமதி கேட்டதும் அவர்களும் அனுமதி அளித்தனர்.

ஐம்பதாண்டு காலம் வாழ்ந்த சிங்கப்பூர் அந்த நாட்டின் குடிமகன் என் தந்தையை அந்த நாட்டைவிட்டு அழைத்துச் செல்லும்போது என்தந்தையின் மனம் பட்ட கஷ்டங்களை என்னால் காணமுடிந்தது.

உறவினர்கள் அனைவரும் விமான நிலையத்தில் திரண்டு நின்று தள்ளு வண்டியில் அமர்ந்திருந்த என்தந்தைக்கு வழியனுப்பு விழாவைப் போல வாழ்த்துச் சொல்லி அனுப்பிய அந்த கணம் இனி நான் சிங்கப்பூர் வரவே மாட்டேனோ(?) என்ற கேள்விப் பார்வையோடு அனைவரையும் பார்த்து கண்ணீரோடு விடைபெற்ற அந்த தருணங்கள் வரையில் இவர் மறுஉலக வாழ்க்கைக்கு செல்ல விடைபெறுகிறார் என்ற இரகசியம் எங்கள் யாருக்குமே தெரியாது.

சென்னை விமான நிலையத்தில் எங்கள் குடும்பம் தந்தையின் வருகைக்காக காத்திருக்க தள்ளு வண்டியில் தள்ளிக் கொண்டு வந்ததைப் பார்த்த என்தாயார் மற்றும் சகோதர சகோதரிகள் கதறி அழுதனர்.

LinkWithin

Related Posts with Thumbnails