Sunday, July 31, 2011

அறிவியல் அதிசயம் - MJM Iqbal

விண்வெளி சுற்றுலா...
வளைகுடா நாடுகள் பெட்ரோல் எண்ணை வளத்தை நம்பியே உள்ளன. பெட்ரோல் விற்பனை மூலம் ஏராளமான பணம் சம்பாதித்த அரபு நாடுகள் அந்த பணத்தை முதலீடாகக் கொண்டு பல்வேறு துறைகளில் தங்கள் நாடுகளை வளப்படுத்தி வருகின்றனர்.

வளைகுடா நாடுகளில், குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேடு எனப்படும் துபாய் நாட்டின் சமீப கால வளர்ச்சி பிரமிக்கத் தக்க வகையில் உள்ளது. வர்த்தகம், கட்டுமானத்தொழில், பொழுது போக்கு அம்சங்கள்... என்று பல்வேறு துறைகளில் பணத்தை முதலீடு செய்து வேகமாக முன்னேறி வருகிறது ஐக்கிய அரபு எமிரேடு.

துபை, ஷார்ஜா, ரசல் கைமா உள்பட 7 அமீரகங்கள் இணைந்து ஐக்கிய அரபு எமிரேடு ஆக உருவானது. இதில் ஒவ்வொரு அமீரகமும் ஒவ்வொரு துறையில் தங்களை முன்னிலைப் படுத்திக் கொண்டு அதில் முதலீடுகளைச்செய்து முன்னேறி வருகிறது. குறிப்பாக துபையில் வர்த்தகம், கட்டுமானத் தொழில் உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் உலக அதிசயங்களை உருவாக்குதல் சுற்றுலா போன்ற துறைகள் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இதே போல ரசல்கைமா அமீரகம் விண்வெளி மற்றும் விண்வெளி சுற்றுலா துறையில் ஆர்வம் காட்டி வருகிறது.

ஸ்பேஸ் போர்ட் எனப்படும் விண்வெளி தளங்களை அமைப்பது, அதன் மூலம் சுற்றுலா பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச்செல்லுதல் போன்றவற்றில் ரசல்கைமா நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதையொட்டி ரசல்கைமாவில் விண்வெளி தளம் அமைக்கும் பணிகள் தொடங்கி இருக்கிறது.

இது தவிர இந்த தளத்தில் இருந்து முதன் முதலான ஐக்கிய அரபு எமிரேட்டைச் சேர்ந்த ஒருவரை விண்வெளிக்கு அனுப்பவும் முடிவு செய்து உள்ளனர். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் உள்ள தனியார் விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் மூலம் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வல்லரசு நாடுகளுக்கு போட்டியாக வளர்ந்து வரும் அரபு நாட்டின் சாதனை முயற்சிகளை இந்த வாரம் காண்போம்.

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா மற்றும் ரஷியா முன்னணியில் உள்ளது. இதில் ஹநாசா' எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் பல்வேறு வகையான விண்வெளி ஆய்வுகள் நடத்தி வருகிறது.

அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் ஒன்றை விண்வெளியில் நிறுவி உள்ளனர். இந்த ஆய்வு நிலையத்துக்கு அமெரிக்கா மற்றும் ரஷிய வீரர்கள் அடிக்கடி சென்று அங்கு தங்கி இருந்து ஆய்வுப் பணிகளை நடத்தி வருகின்றனர்.

நாசா ஆய்வு நிலையம் போல பல்வேறு நாடுகளும் தங்கள் நாடுகள் சார்பில் விண்வெளி ஆய்வு நிலையங்களை நிறுவி ஆராய்ச்சிப்பணிகளை நடத்தி வருகிறது. இந்தியா சார்பில் ஹஇஸ்ரோ' (இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேசன்) என்ற அமைப்பு விண்வெளி ஆய்வுப்பணிகளை கவனித்து வருகிறது.

அரசு நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது பல தனியார் அமைப்புகளும் விண்வெளி ஆய்வில் ஆர்வம் காட்டி வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்கது அமெரிக்காவில் உள்ள ஸ்பேஸ் அட்வென்சர்ஸ் என்ற நிறுவனம். இந்த நிறுவனம் ரஷிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் படி ரஷியாவின் சோயுஸ் கலம் மூலம் விண்வெளிக்கு தலா ஒரு வீரரை ஒவ்வொரு முறையும் ஸ்பேஸ் அட்வென்சர்ஸ் என்ற நிறுவனம் அனுப்ப முடியும்.

ரஷியா மற்றும் அதன் பக்கத்து நாடுகள் இணைந்து சோவியத் ïனியன் என்ற பெயரில் ஒருங்கிணைந்து இருந்தது. அப்போது அமெரிக்காவுக்கு இணையாக, இன்னும் சொல்வதென்றால் அமெரிக்காவை விட ஒரு பங்கு மேலாக விண்வெளி துறையில் ரஷியா முன்னணி வகித்தது. இந்த நிலையில் சோவியத் ïனியன் நாடுகள் தனித்தனியாக சிதறின. ரஷியா மட்டும் வல்லரசு நாடாக தொடர்ந்து நீடிக்கிறது. இருப்பினும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக சர்வதேச விண்வெளி நிலைய திட்டத்துக்கு போதுமான நிதியை ரஷியா நாட்டால் ஒதுக்க முடியவில்லை.

இதையடுத்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு தனது சோயூஸ் விண்கலம் மூலம் பயணி ஒருவரை அழைத்துச் செல்வதன் மூலம் நிதி திரட்ட ரஷியா முடிவு செய்தது. இதற்காக ஸ்பேஸ் அட்வென்சர்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தமும் செய்து கொண்டது. இதன் படி சோயூஸ் கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை ஏற்றிச்செல்லும் போது அதனுடன் சுற்றுலா பயணி ஒருவரும் சென்றார். இந்த திட்டத்தின் படி இது வரை 3 பேர் விண்வெளிக்குச்சென்று திரும்பி உள்ளனர். முதன் முதலாக 2001-ம் ஆண்டு டென்னிஸ் டிட்டோ சோயூஸ் கலம் மூலம் சர்வதேச விண்வெளிக்குச்சென்றார். டென்னிஸ் டிட்டோ அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிதி நிறுவன அதிபர் ஆவார்.

அடுத்து தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தொழில் அதிபர் மார்க் ஷட்டில் ஒர்த் சோயூஸ் விண் கலம் மூலம் விண்வெளிக்குச் சென்றார். அடுத்து 3-வது நபராக விஞ்ஞானியும் தொழில் அதிபருமான கிரிகோரி ஒல்சன் விண்வெளிக்குச் சென்றார். இவர்கள் அனைவரும் தலா 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கட்டணமாக செலுத்தி விண்வெளிப்பயணம் சென்றனர். இந்திய மதிப்பில் சுமார் 100 கோடி ரூபாய்கள் வரை கட்டணமாக செலுத்தி விண்வெளி வீரருக்கான பயிற்சிகள் பெற்று 10 நாட்கள் விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து திரும்பினார்கள்.

இவ்வாறு விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப ஒப்பந்தம் செய்துள்ள ஸ்பேஸ் அட்வன்சர்ஸ் நிறுவனம் தனது அடுத்த இலக்காக அரபு நாடுகளை குறிவைத்துள்ளது. வளைகுடா நாடுகளில் அதி வேகமாக வளர்ந்து வரும் ஐக்கிய அரபு எமிரேட்டை இலக்காக வைத்து அங்கு கால்பதித்துள்ளது ஸ்பேஸ் அட்வன்சர்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ரசல்கைமா பகுதியில் விண்வெளி தளம் அமைத்துள்ளது. ஸ்பேஸ் போர்ட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த விண்வெளி தளம் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா பயணிகளை அனுப்ப ஸ்பேஸ் அட்வன்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து இந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி எரிக் ஆண்டர்சன் கூறும் போது...

'அடுத்த 20 அல்லது 25 ஆண்டு களுக்குள் விண்வெளி சுற்றுலா மிக முக்கியமானதாகி விடும். பணக்காரர்கள் உல்லாசப்பயணமாக வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்வது போல பூமியில் இருந்து விண்வெளி மற்றும் நிலவு போன்ற பக்கத்து கிரகங்களுக்கு சுற்றுலா செல்லும் நிலை உருவாகும்.

இதற்கு ஏற்ப விண்வெளியில் ஒட்டல்கள் மற்றும் நிலவில் குடிஇருப்புகள் அமைக்கும் திட்டங்களும் தயாராகி வருகிறது. சுமார் 25 லட்சம் முதல் 1 கோடி ரூபாய்கள் வரை செலவு செய்ய தயாராக இருப்பவர்கள் இந்த விண்வெளி சுற்றுலா செல்ல முடியும். உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் பலர் இந்த விண்வெளி சுற்றுலாவில் ஆர்வமாக உள்ளனர். இந்த சுற்றுலாவை பிரபலப்படுத்தும் வகையில் அரபு நாட்டில் விண்வெளித் தளம் அமைக்க இருக்கிறோம். ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ரசல்கைமாவில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு மொத்தம் 1200 கோடி ரூபாய்கள் வரை முதலீடு செய்யப்படும். ரசல்கைமாவில் அமைய இருக்கும் விண்வெளி தளத்துக்கு அதன் ஆட்சியாளர்களும் உதவ முன் வந்துள்ளனர். ரசல் கைமாவின் பட்டத்து இளவரசரும் அதன் துணை ஆட்சியாளருமான ஷேக் சவுத் பின் சாகர் அல் காசிமி இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்து இருக்கிறார். இந்த அனுமதியின் மூலம் ஸ்பேஸ் அட்வன்சர்ஸ் நிறுவனம் ரசல்கைமா வானவெளியை பயன்படுத்தி சுற்றுலா பயணிகளை அனுப்ப முடியும். இது தவிர ரசல்கைமா அரசு இந்த திட்டத்தில் சுமார் 135 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யவும் முன் வந்துள்ளது. இது தவிர பல்வேறு தனியார் நிறுவனங்களும் இந்த திட்டத்தில் தங்களது பணத்தை முதலீடு செய்ய விருப்பம்
தெரிவித்துள்ளன.

ரசல்கைமாவில் அமைய இருக்கும் விண்வெளி தளத்தில் இருந்து புறப்படும் விமானத்தின் மூலம் ஒரே நேரத்தில் 5 பேர் வரை விண்வெளிக்கு சுற்றுலா செல்ல முடியும். ஒரு நபருக்கு கட்டணம் சுமார் 45 லட்சம் முதல் 66 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

இங்கிருந்து பயணம் செய்ய இருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு 4 நாட்கள் மட்டுமே பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பயிற்சிகள் முடிந்த பிறகு அவர்கள் விமானம் மூலம் விண்வெளிக்கு அழைத்துச் செல்லப் படுவார்கள். அங்கு அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே தங்கி இருப்பார்கள்.

இந்த விண்வெளி சுற்றுலாவில் முதன் முதலாக ஐக்கிய அரபு நாட்டைச்சேர்ந்த அட்னான் அல் மைமானி என்பவர் செல்கிறார். இது பற்றி மைமானி கூறும் போது,'விண்வெளிப்பயணம் எனது நீண்ட நாள் லட்சியமாக இருந்தது. அது நிறைவேற இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது', என்றார். இந்த பயணத்துக்காக இவர் 50 லட்ச ரூபாய் கட்டணமாக செலுத்தி இருக்கிறார்.

இனி வரும் காலத்தில் தேனிலவுக்கு விண்வெளி பயணம்செல்லும் காலம் வரத்தான் போகிறது.

Jazakkallahu Hairan நன்றி
நன்றி Source : http://chittarkottai.com/mjmiqbal/adisayam21.htm

Saturday, July 30, 2011

அமலால் நிறையும் ரமலான் (அமல் = நற்செயல்)


கவிதை தந்தவர் : கவிஞர்

பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்

படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம்

கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம்

கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம்

பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவ்ரும் மாதம்

பயபக்தி யாதென்றுச் சோதிக்கும் மாதம்

வசிக்கின்ற ஷைத்தானை விலங்கிலிடும் மாதம்

வறியவர்க்கு ஈந்திடவே “ஃபித்ராவின்” மாதம்


குடலுக்கு மோய்வாக்கி குரானோதும் ரமலான்

குற்றங்கள் தடுத்துவிடும் கேடயமாம் ரமலான்

*திடலுக்கு வருவதற்குச் சேமிக்கும் ரமலான்*

திண்ணமாகச் சுவனத்தைப் பெற்றிடத்தான் ரமலான்

உடலுக்கும் பயிற்சியாக்கும் நெறிமுறைகள் ரமலான்

உயிர்க்குள்ளே உணவானச் சுடராகும் ரமலான்

கடலுக்குள் மீன்போல கல்புக்குள் ரமலான்

கர்த்தனவ னறியுமிர கசியம்தான் ரமலான்


குறிப்பு: இப்பாடலில் தடிமன் எழுத்துக்களில் உள்ளவைகள் அறபுச் சொற்கள்; இவ்வாறாக அறபுத்தமிழினைப் பாடலில் இணைப்பது இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் ஏற்றுக் கொள்ளப்படிருப்பதை உமறுப்புலவர் அவர்களின் சீறாப்புராணம் மற்றும் உள்ள இலக்கிய நூற்களில் காணலாம். கீழே அச்சொற்கட்கான பதவுரை வழங்கியுள்ளேன்:


ஷைத்தான் = இறைவனால் சபிக்கப்பட்டு நம் இரத்த நாளங்களில் ஓடிக்கொண்டிருக்கும் நம்மை வழிகெடுக்கும் ஒரு தீயசக்தி.



ஃபித்ரா = நோன்பில் ஏற்பட்டத் தவறுகட்குப் பரிகாரமாகவும் ஏழைகளின் உணவுத் தேவைக்கு நோன்புப் பெருநாளைக்கு முன்னதாகக் கொடுக்கப்பட வேண்டிய தர்மம்


குர்-ஆன் = இறைவன் வழங்கிய இறுதி வேதம்


கல்பு = ஹ்ருதயம்; உள்ளம்


ரமலான் = இஸ்லாமிய ஐந்து கடமைகளில் ஒன்றான (வைகறை முதல் அஸ்தமனம் வரை) நோன்பிருக்கும் மாதம்



*திடலுக்கு வருவதற்குச் சேமிக்கும் ரமலான்* = மஹ்ஷர் என்னும் திடல் judgment day ground மறுமை நாளின் தீர்ப்பு வழங்கப்பெறும் இடம்

யாப்பிலக்கணம்:

காய், காய், காய், மா (அரையடிக்கு) என்னும் வாய்பாட்டில் அமையும்



எண்சீர் கழிநெடிலடி விருத்தம்



”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
Source : http://kalaamkathir.blogspot.com/2011/07/blog-post_29.html
---------------------------------------------------------------------------------------------------------------

ரீங்காரத்தில் வந்த ஒரு காரம்

டியர் மிஸ்டர் கடவுள்ஸ்,
உங்களது மத பொஸ்தகங்கள் மற்றும் உங்களது தூதர்களின் வாழ்க்கை வரலாறு வகையறாக்களை பூமியில் இருந்து அள்ளிக்கொண்டு போகவும். உங்களால் பட்டது போதும்

நோர்வே ‍ - கிறிஸ்த்துவ தீவிரவாதத்திற்கு பலி
இந்தியா - இந்து இஸ்லாம் தீவிரவாதத்திற்கு பலி
இலங்கை - பௌத்த தீவிரவாதத்திற்கு பலி

இது வரை உங்களால் செத்தவன் எல்லாம் மனிதர்களே.
உங்களுக்கா​ன சண்டையில், இதுவரை எந்தக் கடவுளும் சாகாதது எனக்கு ஆச்சர்யமாய் இல்லை. ஏன் என்றால் தலைவர்கள் என்று தீக்குளித்து உள்ளார்கள்?

(எழுதியது நானல்ல. இது ரீங்காரத்தில் கண்டெடுத்த முத்து)
Source: http://anbudanbuhari.blogspot.com/

Thursday, July 28, 2011

பாகிஸ்தானில் பெண் வெளிநாட்டு மந்திரி ஹினா ரப்பானி

பாகிஸ்தானில்  வெளியுறவுத்துறை அமைச்சராக ஹீனா ரப்பானி கர்,
சென்ற பிப்ரவரியில் அமைச்சரவை மாற்றத்தின் போது, வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஷா மெஹ்மூத் குரேசி, அமெரிக்க புலனாய்வு கான்ட்ராக்டர் ரேமன்ட் டேவிஸ் கைது தொடர்பாக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.





Picture source

ரமலான்.. புனித ரமலான்...


ஹாஜி E.M. நாகூர் ஹனிபாவின் இஸ்லாமிய இன்னிசை 

                        
ரமலான் மாண்பு
தமிழ் முஸ்லிம் இன்னிசை by இறை அன்பன் குத்தூஸ்.

ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர் ஆன் இறக்கியருளப்பட்டது.ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறார்களோ,அவர் அம்மாதம் நோன்பு நோற்கவேண்டும். (அல்குர்ஆன்2:185)

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது!(அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்!(அல்குர்ஆன்2:183)
‘ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன’.- நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1898, முஸ்லிம் 1956)

‘ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன’…. – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1957)

‘நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன.’- நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1956)
‘அருள் செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது.’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: அஹ்மது, நஸயீ, பைஹக்கீ)

‘நல்லதைத் தேடுபவனே! முன்னேறிவா! தீமையைத் தேடுபவனே! (தீமையைக்) குறைத்துக் கொள்! என்று அழைப்பாளர் ஒருவர் அழைக்கிறார்.’-நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி – 618, இப்னுமாஜா 1642)
மற்றொரு அறிவிப்பில் ‘ஒரு வானவர் அழைக்கிறார்’ என்று வந்துள்ளது.

‘ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி – 722)

‘நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமளானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’. (நபிமொழி) (அபூஹுரைரா (ரலி), திர்மிதி-619)

Wednesday, July 27, 2011

நேசமிகு நண்பர் நீடூர் நாசர் !

"தர்மம் செய்வது எல்லா முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்" - இறுதி இறைத்தூதர் பெருமானார் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள்.

தன்னிடம் எது இருக்கின்றதோ அதனை தேவையுடையவர்களுக்குக் கொடுப்பதும், தன்னிடம் எதுவுமே இல்லை எனில் மற்றவர்களை நன்மைகளை செய்வதற்கு ஏவுவதும் அதற்கும் இயலாதெனில் யாருக்கும் எவ்வித தீங்கும் இழைக்காமல் இருப்பதும் தர்மமே என்று இஸ்லாம் தர்மத்திற்கு விரிவான விளக்கம் அளிக்கின்றது. இதன் மூலம் நன்மைப் பெற்றுத் தரும் எளிய வழிமுறையை இஸ்லாம் மனித சமூகத்திற்கு கற்றுத் தருகிறது.

"கன்னி(வயது)கழிந்த பெண்ணை அவளுடைய (வெளிப்படையான) ஒப்புதல் பெறாமல் மணமுடித்துக் கொடுக்கக் கூடாது ..." என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி), பதிவு : புகாரி 4741)
உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர் (ஆண், பெண்)களுக்குதிருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், தன் நல்லருளைக் கொண்டு அல்லாஹ் அவர்களை சீமான்களாக்கி வைப்பான், மேலும் அல்லாஹ் (வாரி வழங்குவதில்) விசாலமானவன். (அல்குர்ஆன் 24:32)

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. (அல் குர்ஆன் 2:188)

Tuesday, July 26, 2011

"தீனிசைத் தென்றல்", "காவியக் குரலோன்" தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களின் இன்னிசை மாலை.




தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் இன்னிசை.

அபுதாபியில் "தீனிசைத் தென்றல்", "காவியக் குரலோன்" தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களின் இன்னிசை மாலை. தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களின் ஒலி, ஒளி குருந்தகடு வெளியீடும் இன்னிசை மாலையும் நிகழ்வில் ஒரு பகுதி.

அபுதாபியில் சங்கமம் தொலைக்காட்சி வழங்கிய காட்சியினை அன்பளிப்பு தந்து உதவிய அண்ணன் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

Jazakkallahu Hairan நன்றி

Sunday, July 24, 2011

பெண்ணாக பிறப்பது பெருமை !

சரியான பராமரிப்புன்   குழந்தைகளை வளர்ப்பது  பெற்றோர்களது  முதன்மை கடமையாக  உள்ளது. ஆனால்   பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இடையே ஒரு பாரபட்சமற்ற முறையில் ஆண் மற்றும் பெண் என வேறுபடுத்தக்  கூடாது. எனினும், உண்மையில்  சமூகங்களில் பெண்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பது வேதனையானயாக உள்ளது.ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாகக் கருதப்படவேண்டும்   பெற்றோர்கள் ஒரு சார்புள்ளவர்களாக  இருக்க உரிமை இருந்தால், விரும்பினால் அது பெண்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். பெண் பெருமை பேசுவோம் நம் பெருமை குலையும் என்றால் பெண்ணையே அழிப்போம்.
 
 
ஒரு பெண் ஒரு குடும்பத்தை அவமானத்திற்கு ஒரு விஷயம் அல்ல என்று சொல்கிறார்கள்  பெண்கள் நமக்கு  பெருமையை தரக்கூடியவர்கலாகவும் மிகவும் சேவை செய்பவர்களாகவும் உள்ளார்கள் . நியாயமான, சரியான வழியில் தங்கள்  மகள்கள் மீது பரிவு காட்டும் ஒரு மனிதர்  நியாயத்தீர்ப்பு நாளில் உயர்ந்த இடத்தில இருப்பார்.

 

 

Friday, July 22, 2011

தொழுகையினால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே !

ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள்  சுத்தம்.

ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.

அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

தொழுகை  சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம்இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை  தன்னகத்தில் கொண்டது.

ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு  துணை புரியும்  அமைப்பை கண்டீர்களா ?

உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும்  மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடுஇனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய்  பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

முஸ்லிம்கள் இறைவனை தொழுவது எவ்விதம்...!


ஒவ்வொரு மார்க்கமும்  இறைவனை வணங்கும் முறையில்  மாறுபட்டிருந்தாலும் அவர்கள் நாட்டம் படைத்தவனை தொழுவது என்பதுதான் அவர்கள் ஆழ் மனதிலுள்ள குறிக்கோள். முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டுமல்ல சில முஸ்லிம்களே இதனை அறியாமல் (முஸ்லிம்கள் இறைவனை தொழுவது எவ்விதம்,ஒதப் படுவதின் அர்த்தம் என்ன என்பதனை அறியாமல்)  இருக்கலாம் .

   எத்தனையோ வரலாறுகளைப் படிக்கின்றோம். ஆனால் உடன் வாழும் மற்றவர்களைப் பற்றி அறிந்து கொள்ள முயல்வதில்லை. நான் லயோலா கல்லூரியில் படிக்கும் போது ஒரு நண்பர் என்னிடம் கேட்டார் "உங்கள் வீட்டில் என்ன மொழி பேசுகிறீர்கள். நீங்கள் வீட்டில் காய் கறி உண்பதுண்டா அல்லது அசைவ உணவு மட்டும்தானா" என்று.இவரின் வினா  எனக்கு மிகவும் வியப்பினைத்  தந்தது!   இது  உதாரணத்திற்கு ஒன்று ..! தமிழ் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் வீட்டில் வேறு மொழி பேசுகிறார்கள் என்பது சிலர் நினைப்பதுண்டு.
    முஸ்லிம்கள்  எல்லா நாட்டிலும் உள்ளனர் .அந்தந்த நாட்டில் உள்ளவர்களுக்கு அந்த நாட்டு மொழிதான் அவர்கள் தாய் மொழி . தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு தமிழ்தான் அவர்கள்  தாய் மொழி . ஒரு சிலர் மற்ற மொழி அறிந்திருந்தால் அது அவர்கள் கற்றதனால் அல்லது மற்றவர்களிடம் பேசி பழகியதால் அறிந்திருக்கலாம். முஸ்லிம்கள் ஓதும் குர்ஆன் அரபி மொழியில் உள்ளதால் அதனை படித்து ஓத கற்றுக் கொண்டாலும் அவர்களுக்கு அதன் பொருள் அறிந்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு அரபி பேசவும் தெரியாது. இதனைப் படித்து  அறிந்தவர்கள் வெகு சிலரே!அதன் பொருள் அறிய தற்போது கணினி அதற்கு மிகவும் உதவுகின்றது.  

உடன் வாழும் மக்களின் வாழும் முறைகளை நாம் அறிந்து வாழ்வது சிறப்பாகும்.



Tuesday, July 19, 2011

இளையான்குடி பொற்கிழி கவிஞர் மு. சண்முகம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்


இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொற்கிழி கவிஞர் மு. சண்முகம்.

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் குறித்து கவிதைகள், கட்டுரைகள் எழுதியும், பேசியும் வருபவர். இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் தவறாமல் பங்கேற்று படைப்புகளை வழங்கி வருபவர்.

’வஹியாய் வந்த வசந்தம்’  என்ற நூலுக்கு சீதக்காதி அறக்கட்டளையின் ஷேக் சதக்கத்துல்லாஹ் அப்பா பரிசினைப் பெற்றவர். இந்நூல் 1990 ல் கீழக்கரையில் நடைபெற்ற ஐந்தாவது உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் வெளியிடப்பட்டு தற்பொழுது முதுவை காஹிலா பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

இளையான்குடியில் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்வின் போது நேற்று 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்

தனது பெயரை ஹிதாயத்துல்லா என மாற்றிக் கொண்டார்.

இத்தகவலை சிங்கப்பூர் ஆடிட்டர் பெரோஸ்கான் 18.07.2011 திங்கட்கிழமை காலை அலைபேசியில் இளையான்குடியில் இருந்து தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஹிதாயத்துல்லாவும் சலாம் கூறினார்.

அவரது தொடர்பு எண் : 99763 72229

Thanks to : Ahmed Kabeer  vavanan@eim.ae 

Source : http://ilayangudiyinvelicham.blogspot.com/2011/07/blog-post_20.html

Sunday, July 17, 2011

அரபு பெண்களின் மறைக்கப்பட்ட அழகு!

அரபு உலகில்  வெளியே பல பெண்கள் ஹிஜாப் ( ‘பர்தா’ / 'அபாயா')அணிவதால் அவர்கள் அழகு தெரிவதில்லை.   முக அலங்காரம்  மட்டுமே  பார்க்கலாம். ஆனால் ரஷியன் திரைப்பட தயாரிப்பாளர், ஓல்கா Sapozhnikova  abaya முக்கியமான கதைகள் ஏராளமாய் செய்திகளை வெளிப்படுத்த உதவுகிறது.

Saturday, July 16, 2011

இது முறையா? ஒரு ஐயம்!

   ஒரு அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது . அதற்கு எதிரே அந்த அரபிக் கல்லூரியின் நிர்வாகத்திலுள்ள  பள்ளிவாசலில் , விழாவின் காரணத்தினை முன்னிட்டு லுகர்(பகல் ) நேர ஜமாஅத் தொழுகையினை முப்பது நிமிடங்கள் அப்பொழுது மட்டும் தள்ளிப் போட்டு வாசல் கதவினையும்  பூட்டி விட்டனர் .பாங்கு சொல்லப் பட்ட பின்பு அந்த பள்ளிக்கு தொழ வந்தவர்கள் பள்ளிக்கு உட் சென்று தொழ முடியாமல் மிகவும் வருத்தமடைந்தனர் . பின்பு பன்முறை கேட்டுக் கொண்டதற்கு இணங்க கதவினை திறந்து விட்டனர் .விழாவின் காரணம் காட்டி தொழுகை நேரத்தினை  தள்ளிப் போடுவதும் அதற்காக பள்ளிவாசல் கதவினை  பூட்டுவதும்  சரியா! தவறா!
நீங்கள் தயவு செய்து மார்க்க சட்டம் தெரிந்தவர்களை கேட்டு எழுதுங்கள். மார்க்கத்தில் தவறான விளக்கத்தினை தவிர்க்க முயலுங்கள்.
இந்தக்  கட்டுரை யார் மனதினையும் பாதிக்கும் நோக்குடன் எழுதியது அல்ல . மார்க்க விளக்கம் மக்கள் அறிய வேண்டும் என்ற நல் நோக்குடன் எழுதப்பட்டது. 
   
அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

Surat Al-Baqarah (The Cow) - سورة البقرة

அல்குர்ஆன் 2:114

Sahih International
And who are more unjust than those who prevent the name of Allah from being mentioned in His mosques and strive toward their destruction. It is not for them to enter them except in fear. For them in this world is disgrace, and they will have in the Hereafter a great punishment.
Tamil NEW
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.

Source: http://quran.com/2/114
-------------------------------------------------------------------------
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். அல்குர்ஆன் 23:1,2


The Messenger of Allah (peace and blessings be upon him) said, "If good is done to someone and then they say "Jazak Allahu khayran" to the one who did the good, they have indeed praised them well." [Tirmidhi]
Jazak Allahu khayr جزاك اللهُ خيراً


”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!”

Friday, July 15, 2011

தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ !

தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ
உன்னுடைய தகுதியை இன்னும் கொஞ்சம்  உயர்த்திக்கோ
கல்வியை கண்ணாக்கி    காட்டிய இஸ்லாத்தில்
கண்மணி நீ அல்லவா! காரணம் நான் சொல்லவா!

இம்மைக்கும் மருமைக்குமாய் இறைவன் நம்மை படைத்தான் 
இரண்டிலும்  மேன்மை பெற இருகல்வி நமக்கு அளித்தான்   
இரண்டையும் இருகண்களாய்  எடுத்துக்கோ
இதுதான் நமக்கு சரி புரிஞ்சிக்கோ 

"மொவ்டிகமாய்" ( அறியாமையாய் )இருக்க மார்க்கம் சொல்லவில்லை
மார்க்கம் சொல்லாததை மதித்திட  தேவை இல்லை
மனசிலே படிக்கினும்னு நினச்சிக்கோ 
அதிலே மாபெரும் சிறப்பு இருக்கு புரிஞ்சிக்கோ    

ஒன்னுமில்லா  மாபிள்ளைக்கே  ஒரு லட்சம் கைக் கூலி
உன்னுடைய உன் "உம்மா" (அம்மா) "வாப்பா" (அத்தா- அப்பா) சொத்து பத்து  எல்லாம் காலி
இந்த நிலை மாறனும்னா உன்னுடைய நிலை உயர வேண்டும்
உலகம் உன்னைபத்தி ஒசத்தியா  பேச வேணும்
அதற்கு ஒரு வழி கல்விதான்  அவசியம் நீ செல்ல வேணும் பள்ளிதான்

உன்னுடைய முன்னோர்கள் ஒரு நாள் உலகாண்டார்
உயர்வின் உச்சியிலே உலக புகழ்  சேர்த்தார்
ஏண்டி தாழ்ந்து விட்டாய் தங்கமே
எழுந்திரு  எழுச்சி பெரு செல்வமே
தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ
உன்னுடைய தகுதிய இன்னும் கொஞ்சம்  உயர்த்திக்கோ!

பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் ,

அல்ஹம்துலில்லாஹ்!

The Messenger of Allah (peace and blessings be upon him) said, "If good is done to someone and then they say "Jazak Allahu khayran" to the one who did the good, they have indeed praised them well." [Tirmidhi]
"இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக."
நம் அனைவரது இம்மை, மருமை வாழ்வுகளை ஈடேற்றப் பெற்றுத் தர வள்ள அல்லாஹ் அருள்பாளிப்பானாக. ஆமீன் !
உங்களது இம்மை, மருமை வாழ்வுகளை ஈடேற்றப் பெற்றுத் தரும். வள்ள அல்லாஹ் அருள்பாளிப்பானாக.

Tuesday, July 12, 2011

இஸ்லாம் வட்டியை ஏன் தடுக்கிறது?

வட்டி சமுதாயத்தின் சாபக்கேடு.
'அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியை தடை செய்துவிட்டான்'
இறை நம்பிக்கையாளர்களே..! பல மடங்காக பெருகும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். வெற்றிப் பெறுங்கள். (அல் குர் ஆன் 3:130)

(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்ல. (அல் குர்ஆன் 30:39).


நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை

இறுதித்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வெளியுறவுக்  கொள்கை பற்றி சில ஆங்கில நூல்களை சமீபத்தில் படித்து முடித்தேன். குறிப்பாக பேராசிரியர் முஹம்மது சித்தீக் குறைஷி  எழுதிய நூலைச் சொல்லலாம். அந்நூல்களில் உள்ள பல விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதனால் அவற்றிலிருந்து நான் எடுத்த சில பல விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்காக இங்கே தருகிறேன் – நாகூர் ரூமி

பெருமானாரின் வெளியுறவுக் கொள்கை

முன்னுரையாக சில விஷயங்கள்

இந்த உலகம் ஆன்மிகத்திலும், ஒழுக்கத்திலும் மிகவும் மோசமான நிலையில் இருந்தபோது இஸ்லாத்தின் வருகை நிகழ்ந்தது. இஸ்லாத்தின் புனித ஒளி அந்த இருளை நீக்கியது. பள்ளிவாசலிலிருந்து சந்தை, பள்ளிகளில் இருந்து அரண்மனைகள், வீடுகளில் இருந்து யுத்த களம் என பரவ ஆரம்பித்தது அந்த ஒளி. அறிவு, இரக்கம், பரஸ்பர புரிந்து கொள்ளல், நீதி, நியாயம் போன்றவையெல்லாம் முதன் முறையாக அரேபியர்கள் மத்தியில் உருவாக்கப் பட்டன. இஸ்லாம் எனும் அமைதி மார்க்கத்தின் பெயரால் அரேபியா மட்டுமல்ல, அகில உலகமும் ஒன்றுபட ஆரம்பித்தது.

பெருமானாரின் வரலாற்றை வரலாற்று ஆசிரியர்கள் அருமையான நூல்களாகக் கொடுத்திருக்கிறார்கள். என்றாலும், அவர்கள் பார்க்காது விட்ட கோணங்கள் சில உண்டு. அவற்றில் வெளியுறவுக் கொள்கையும் ஒன்று. அது நம் கவனத்துக்குரியது. அதைப்பற்றிய ஆராய்ச்சியும் தேவை.

இன்றைய உலகில், சர்வதேச போட்டி மனப்பான்மை மேலோங்கி உள்ளது. கலாச்சார மன இறுக்கங்கள் சமுதாயத்தைக் கூறு போடுகின்றன. ஆனால் மாற்றம் மட்டுமே நிரந்தரமான ஒன்றாக உள்ளது. மனிதன் நிறைய சேர்த்து வைத்திருக்கிறான், ஆனால் சமூக அநீதி அவன் ஆன்மாவைக் கிழித்து விட்டது. அவன் படைத்தவற்றாலேயே அவனது இருப்புக்கு அபாயம் வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் முன்னணி வீரனாக அவன் இருக்க விரும்பினால், முஹம்மது (ஸல்) அவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வதே சிறப்பாக இருக்கும். இந்த கருத்தின் பின்னால் உள்ள நேர்மையை ஆழமாகப் படித்து உணர்பவர்கள் நிச்சயம் புரிந்து கொள்ளலாம். கொள்கைகளைவிட மற்ற விஷயங்கள் நமக்கு முக்கியமானதாகப் போய்விட்டதால், நல்லது கெட்டதுக்கு மத்தியில் வித்தியாசமில்லாமல் போய்விட்டது.

Sunday, July 10, 2011

S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்களின் அறிவியல் ரீதியிலான சொற்பொழிவு

மர்ஹூம் S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்கள் 1980களில் துபை-ஹாங்காங் சென்ற போது எடுத்த படங்கள்  "சலவாத் பாவா" பற்றி S.R.S. ஹஜ்ரத்

Saturday, July 9, 2011

இஸ்லாமியக் கல்விக்கு ஒரு புதிய பாடத்திட்டம்!

எழுதியவர் : நீடூர் மன்சூர் அலி M.A., B.Ed.,கணக்கு, அறிவியல், வரலாறு, புவியியல், மொழி – இவற்றில் எந்தப் பாடமாக இருக்கட்டும். நமது இளந்தலைமுறைக்கு – இவைகளை எப்படிச் சொல்லிக் கொடுக்கிறோம்? பள்ளிக்கூடங்களில் சேர்க்கிறோம். ஒவ்வொரு பாடத்துக்கும், ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு பாடத் திட்டம். அதற்குப் பாட நூல்கள், வாரம் ஒன்றுக்கு குறிப்பிட்ட சில வகுப்புகள், ஒரு ஆசிரியர், நோட்புத்தகம், தேர்வுகள், மதிப்பெண்கள் – இந்த அடிப்படையில் ஓராண்டு இறுதியில் தேற வைத்தல் அல்லது தக்க வைத்தல்! பின்னர் அடுத்த வகுப்பிற்குச் சென்றதும் சற்றே அதிகரிக்கப்பட்ட பாடத் திட்டத்துடன் அதே பயிற்றுவிப்பு முறை. இவ்வாறு பத்து ஆண்டுகள் – பன்னிரண்டு ஆண்டுகள் படித்து பள்ளிப் படிப்பை முடிக்கிறான் நமது மாணவன். கல்லூரிக்கு மேற்படிப்புக்குச் சென்றாலும் இதே முறைதான். வரவேற்போம்.
நாம் கேட்பது என்னவென்றால் – இஸ்லாம் என்ற பாடத்தை நமது இளந்தலைமுறைக்கு இவ்வாறு நாம் கற்றுக்கொடுத்தோமா? கற்றுக் கொடுக்க நினைத்தோமா? இஸ்லாம் கற்றுக் கொள்ளப்பட வேண்டிய பாடமா அல்லவா என்று சிந்தித்தோமா? நாம் அவர்கள் அனைவரையும் ஆலிம்களாக ஆக்கி விடுங்கள் என்று சொல்லவில்லை. ஒரு பத்தாவது படித்த மாணவனுக்கு மற்ற பாடங்களில் எவ்வளவு தெரிந்திருக்கிறதோ அதே அளவு இஸ்லாத்தைப் பற்றியும் அவன் தெரிந்தருக்க வேண்டாமா?
நாம் என்ன செய்கிறோம்? பள்ளிவாசலோடு இணைந்தீருக்கும் மக்தப் பள்ளிகளுக்கு நமது குழந்தைகளை அனுப்புகிறோம். எல்லோருமே அனுப்புகிறார்களா என்பதும் கேள்விக்குறி! அலிஃப் – பே – தே – என்று நமது குழந்தைகள் ஓதுவார்கள். குர்ஆன் ஓதக் கற்றுக்கொடுக்கப்படும். பொருள் தெரியாது. பத்துப் பனிரெண்டு வயது ஆனவுடன் – நிறுத்தி விடுவோம். ஏதோ பட்டம் வாங்கி விட்டது போல. பெற்றோர்க்கு குழந்தைகள் அங்கு என்ன கற்றுக்கொண்டன என்பது குறித்தெல்லாம் கவலை கிடையாது.
ஆனால் 5 கலிமாக்கள், குர்ஆன் ஓதுதல், தொழுகை, குளிப்பு, உளு – பற்றிய சட்டங்கள், நபி (சல்) வரலாறு, கொஞ்சம் அறிவுரைகள் – என்று அங்கேயும் ஒரு பாடத் திட்டம் உண்டு. மக்தப் பள்ளிகளில் அவ்வளவு தான் இயலும் என்றாலும் அந்த அளவுக்குக்கூட – எத்தனை சிறார்கள் படித்துக்கொண்டார்கள் என்பதும் கேள்விக்குறி!
இந்நிலையில் நமது மாணவர்கள் மாணவிகள் பள்ளிப் படிப்பை முடித்து வெளிவருகின்ற வேளையில் எத்தகைய இஸ்லாமிய அறிவு அவர்களிடத்தில் இருக்கிறது? இஸ்லாம் குறித்த எந்த ஒரு கேள்;விக்கும் பதில் சொல்லத் தெரியாத இளைஞர்களே அதிகம். இஸ்லாம் என்பதன் பொருள் தெரியாது. நபியவர்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள் கூடத் தெரியாது. விளைவு?
ஈமானிலேயே அவர்களுக்குச் சந்தேகங்கள். யாரிடம் கேட்டாலும் தெளிவான பதில்கள் கிடைப்பது அரிது.
யார் முஸ்லிம்? எது இஸ்லாம்? அதன் அடிப்படைகள் என்ன? நாம் சார்ந்திருக்கும் மார்க்கம் எத்தகையது? அதன் வரலாறு என்ன? நமது கடமைகள் என்ன? முஸ்லிம்கள் வரலாற்றில் சாதித்தது என்ன? – எதுவுமே தெரியாது இன்றைய இளைஞனுக்கு!
என்ன செய்யலாம்? நாம் முதலில் குறிப்பிட்டது போல ஒரு முறையான பாடத்திட்டத்தின் கீழ் இஸ்லாத்தை (Strucural study of Islam) நமது இளைய தலைமுறைக்குக் கொண்டு போய் சேர்த்திட நாம் – என்ன செய்யலாம்? சொல்லுங்கள்!
Source : http://meemacademy.com/?cat=48

Friday, July 8, 2011

ஹஜ் யாத்திரை - அஸ்வத் கல்லைத் தொடும்போது எற்படும்...EMOTIONAL DEVOTEE AFTER TOUCHING BLACK STONE HAJARUL

"ஹஜருல்அஸ்வத்" இதன் பொருள் 'கருப்புக்கல்' என்பதாகும்.

அஸ்வத் கல்லைத்  தொடும்போது எற்படும் உணர்ச்சியான உள் மனது காணுங்கள்.

ஒரு தாயின்(தன் மகள் ஆயிஷாவுக்கு   கஹ்பதுல்லாஹ்வில் ) உதவி உண்மையில் நம் மனதையும்  நெகிழ வைத்து கண்களில் நீர் வடியச் செய்கின்றது.

" கை வலிக்குதா! " மகளின் நேசமான கேள்விக்கு பாசமான தாயின் பிரியமான நேசத் தடவுதலின்  மாமருந்து.இது பாசத்தின் பிணைப்பு. இந்த நிகழ்வு   நம் மனதினை குலுங்கச் செய்கின்றது .பாச பரிமாற்றம் ! இதுதான் ஆழ் மனதின்  இனிய தொடர்பு. தாய்மையும் சிறப்பு அறியாதார் யார்! தாய் தன பிள்ளை உடல் நலம் குன்றினால் துடித்துப்போவாள். அதுவும் உடல் ஊனமுற்ற பிள்ளைக்கு அவள் செய்யும் பணிவிடை அளவற்றது.   “தாயின் மடியில் சுவனம் உள்ளது” என்ற  நபி மொழிக்கு மாற்று மொழியேது !

  EMOTIONAL DEVOTEE AFTER TOUCHING HAJARUL ASWATH with her daughter physically challenged ayisha inside KABATULLAH





உமர் ரளியல்லாஹு அன்ஹு ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, 'நீ தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு சுல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' என்றார். (அறிவிப்பாளர்: ஆபிஸ் இப்னு ரபீஆ)
 உமர் ரளியல்லாஹு அன்ஹு ஹஜருல் அஸ்வதை நோக்கி, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ சுல்தான்; உன்னால் எந்த நன்மையோ தீமையோ செய்ய முடியாது என்பதை நானறிவேன்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்க்கவில்லை என்றால் நிச்சயமாக நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' எனக் கூறிவிட்டு அதை முத்தமிட்டார்.


  உறவினர்களைப் பற்றிய அல் குரானின் குறிப்பில், நாம் கட்டாயமாக அன்பு செலுத்த வேண்டிய உறவினர்களைப் பற்றி மிகவும் தெளிவாகவும், விளக்கமாகவும் குறிப்பிடப் பட்டு உள்ளது.


".....................(நபியே!) நீர் கூறும்; "உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை", அன்றியும், எவர் ஒரு நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு நாம் அதில் பின்னும் (பல) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் , நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கிறான்"
(அல் குரான்; 42 : 23 )

அல்லாஹ் எங்களுக்கு செய்த பேரருளுக்கு நாம், அல்லாஹ்வுக்கு எவ்வாறு நன்றி செலுத்துவது என்பதைப் பற்றி விளக்குகின்ற புனித அல் குரான் வசனம் இது.


Thursday, July 7, 2011

காலை எழுந்தவுடன்.....

காலை எழுந்தவுடன்.....

காலையில் எழுந்தவுடன் காபி குடிக்க வேண்டும்,குழந்தைகளை  கொஞ்ச வேண்டும்....கடைதெருக்கு சென்று காய் கறி வாங்கி அங்கு சிறிது நேரம் நாட்டு நடப்பு அறிய மனம் விட்டு பேச வேண்டும்,செய்தித்தாள் படிக்க வேண்டும்    இது இயல்பு . இதைவிட முக்கியமானது ... 

இறைவனிடம் வேண்டி இந்த துவாவை ஒதவேண்டும்.
நம்மை மரணமடையச் செய்து பிறகு உயிர் கொடுத்து எழுப்பிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும் நாம் அனைவரும் அவன் பக்கமே திரும்பச் செல்லக்கூடியவர்களாக இருக்கிறோம். (அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷுர்)


 திரு்வாசகத்தில், திருப்பள்ளியெழுச்சி என்ற பதிகத்தில், “மலரும் எழில் நகை கொண்டு நின் திருவடி தொழுதோம்” என மாணிக்க வாசகர் வேண்டுகிறார். விவிலியம் “இந்த நாளை, இறைவன் எமக்குத் தந்தார்.  இதில் நாம் மகிழ்வோம்” எனக் கூறுகிறது.


   காலையில் எப்படியாவது வைகறை [பஜர் ] தொழுகைக்கு எழுந்தாக வேண்டும்.தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுது வந்தால் உடலின் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைத்திருக்கலாம்.
    தூய்மையான அதி காலை காற்று உடல் நலத்துக்கு மிகவும் நல்லது விடியல் காலையில் பஜர் தொழுகைக்கு போகும் போது சுத்தமான ஓசோன் காற்றை சுவாசிப்போமே அப்போது வரும் ஒரு உற்சாகம் அது மிகவும் உயர்வானது.

Wednesday, July 6, 2011

ஹிஜ்ரீ பிறந்த வரலாறு



ஹிஜ்ரீ ஆண்டு தெரியுமா? முஸ்லிம்களின் திருமண அழைப்பிதழ்களில் பார்த்திருக்கலாம். நோன்பு காலங்களில் ஸஹர் நேரம், நோன்பு துறக்கும் நேரம் அடங்கிய அட்டவணைகள் பள்ளிவாசல்களில் வினியோகிப்பார்களே அதில் இருக்கும். மாபெரும் இஸ்லாமியப் பேரணி, முஸ்லிம் மணமக்களைப் பல்லாண்டு வாழ்த்தி, ஹஜ்ஜிலிருந்து திரும்பியவர்களுக்கு என்று வாழ்த்து அச்சிட்டு ஊர்ப்பக்கம் போஸ்டர்கள் ஒட்டியிருப்பார்கள் அதிலும் “ஹி“ புள்ளி ஆண்டு எண் என்று இருக்கும். பெரிய எழுத்திலான ஆங்கில ஆண்டு விபரங்களுடன் அதைவிடச் சிறிய அளவில் ஹிஜ்ரீ விபரங்களும் குறிப்பிட்டிருப்பார்கள்.
நம்மில் மிகப் பெரும்பாலானவர்கள் அதைப் படித்துவிட்டு, ஹிஜ்ரீ விபரங்களை மட்டும் காஃபி ஃபில்டரில் கவனமாய் வடிகட்டிவிட்டு நிகழவிருக்கும் விசேஷத்தின் ஆங்கில ஆண்டு, மாதம், நாள் ஆகியனவற்றை மனதில், டைரியில், காலண்டரில், சுவற்றில், செல்ஃபோனில் இப்படி எங்காவது குறித்து வைத்துக் கொள்வோம்.
நோன்பு, அதைத் தொடரும் பெருநாள், ஹஜ் இதெல்லாம் ஹிஜ்ரீ ஆண்டுடன் சம்பந்தப்பட்டவை என்பது மட்டும் ஏறக்குறைய நம் அனைவருக்கும் தெரியுமே தவிர மற்றபடி அதற்குப் பெரிய முக்கியத்துவம் எதுவும் நம் வாழ்க்கையில் கிடையாது.
ஆங்கில ஏகாதிபத்தியம் பரவி, உலக நாடுகள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளை ”நல்லதுக்கும் கெட்டதுக்கும்” ஆதர்ச நாயகனாய் ஏற்றுக் கொண்டபின் அவர்களது காலண்டரும் உலகிலுள்ள பெரும்பாலான சமூகத்திற்கு அடிப்படையான நாள்காட்டியாகி விட்டது. முஸ்லிம் சமூகங்களும் “ஊரோடு ஒத்துவாழ்” என்று அப்படியே ஏற்றுக் கொண்டன. “ஹேப்பி நியூ இயர்” என்றால் அது சனவரி 1!
என்றாலும், சம்பிரதாயமோ, அவசியமோ, முஸ்லிம்களே அக்கறை செலுத்தாவிட்டாலும் அவர்களுடைய வாழ்வில் ஹிஜ்ரீ ஓர் அங்கம். அதனால்தான் விட்டகுறை தொட்ட குறையாக போஸ்டர்கள், காலண்டர்கள், அழைப்பிதழ்கள் என்று ஹி.!
ஹிஜ்ரீ துவங்கி 1432 ஆண்டுகள் ஆகிவிட்டன. அது ஏன், எப்படி என்பதை அறிந்து கொள்ள ஹிஜ்ரா பரிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஹிஜ்ரா?
அனைவருக்கும் புலம்பெயர்தல் தெரிந்திருக்கும். அதுதான் அரபு மொழியில் ஹிஜ்ரா. பிறமொழிகளில் migration, புலம்பெயர்தல் என்று யதார்த்தமாய்க் கையாளப்படுவதைப் போலன்றி ஹிஜ்ரா என்றதுமே அந்த வார்த்தைக்கு இஸ்லாமிய வழக்கில் பெரும் முக்கியத்துவம், புனிதம் வந்து ஒட்டிக் கொள்கிறது. காரணம் இருக்கிறது.
கையை இறுகப் பற்றிக்கொண்டால் 1432 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று மக்காவை எட்டிப்பார்த்துவிட்டு வந்துவிடலாம்.
அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மதுக்கு அப்பொழுது 40 வயதிருக்கும். அனாச்சாரத்தில் மூழ்கிக் கிடந்தது அரேபியா. அவற்றையெல்லாம் பார்த்து வெறுத்து ஓதுங்கி, மனைவியும் மக்களுமாய்த் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார் அவர். திடீரன்று ஒருநாள் வானத்திலிருந்து வந்திறங்கினார் வானவர் தலைவர் ஒருவர் - ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்). "எல்லாரையும் எல்லாவற்றையும் படைத்தவன் யார்?" என்ற ஒற்றைக் கேள்விக்கான விடை தேடிக் குகையில் அமர்ந்திருந்த முஹம்மதுவைத் தட்டியெழுப்பி, கட்டிப்பிடித்து இறுக்கித் தழுவி, ”இன்றிலிருந்து தாங்கள் இறைத்தூதர்” என்ற செய்தியையும் குர்ஆன் வசனங்கள் ஐந்தையும் அறிவித்துவிட்டுச் சென்றுவிட்டார்.
முஹம்மது, நபித்துவம் வழங்கப்பெற்ற தூதரானார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஆரம்பித்தது மனித குலத்தில் ஒரு திருப்பம்.
சிலை வணக்கம், அது சார்ந்த சாஸ்திரம், சம்பிரதாயம் இது எதுவும் கிடையாது, ஒரே ஒருவன்தான் இருக்கிறான். அவன்தான் அனைத்தையும் படைத்தான், பரிபாலிக்கிறான், முடித்து வைப்பான், தீர்ப்பு வழங்குவான், மறுமை துவங்கும் என்றெல்லாம் பேச ஆரம்பித்ததும்,  பலர் சிரித்தார்கள், மிகச் சிலர் “அப்படியா? ஏக இறைவன் ஒருவன்தானா? நீங்கள்தான் அவனது நபியா? எனக்கு நியாயமாய்ப் படுகிறது, ஏற்றுக்கொண்டேன்,” என்றார்கள்.
சிரித்தவர்களுக்கு தூக்கிவாரிப் போட்டது. நாளாக நாளாகக் கோபம் பெருக்கெடுத்தது. “இதென்ன இந்த மனிதர் புதிதாய்க் குழப்பம் விளைவிக்கிறார்? இவரை ஏற்றுக் கொண்டவர்களைக் கொடுமைப் படுத்தினால் வழிக்கு வருவார்கள்,” என்று துவங்கியது கொடுமை. அது எழுத்தில் எழுதி மாளாத கொடுமை!
“ஒரே இறைவன், முஹம்மதே இறுதி நபி,” என்று சொன்ன காரணத்திற்காக ஒருவரை, அதுவும் ஒரு பெண்ணை, அவருடைய பிறப்புறுப்பிலேயே ஈட்டி செருகிக் கொல்லுமளவுப் பெருங்கொடுமை தலைவிரித்தாடியது மக்காவில்.
இஸ்லாத்தை ஏற்ற சின்னஞ்சிறுக் கூட்டம், மக்கா நகரில் வாழ்ந்து கொண்டிருந்த பென்னம்பெரிய கூட்டத்தினரிடம் மிதி, உதை பட்டது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்கள். பொறுமையின் எல்லைக்கு விரட்டப்பட்ட அவர்களில் சிலர், நபியவர்கள் அனுமதியின் பேரில் சொத்து, சுகம், நிலம் ஆகியனவற்றை மக்காவில் விட்டுவிட்டு, எடுத்துச் செல்ல முயன்ற சுமையோடு அபீஸீனியா நாட்டிற்கு புலம்பெயர்ந்தார்கள். இஸ்லாமிய வரலாற்றில் அன்றுதான் ஆரம்பித்தது ஹிஜ்ரா. முதல் ஹிஜ்ரா.
நாமறிந்த புலம் பெயர்தலெல்லாம் இன்றும் சர்வ சாதரணமாய் நடப்பதுதான். தொழிலுக்காக, வேலைக்காக, சொகுசுக்காக, திருமணத்திற்காக இப்படியான ஏதோ ஒரு காரணத்திற்காக நாள்தோறும் ஊர்தோறும் புலம்பெயர்தல் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதிலெல்லாம் ஏதும் விசேஷமில்லை.
ஆனால் இஸ்லாத்தில் ஹிஜ்ரா என்பது மட்டும் சிறப்பு! தனிச் சிறப்பு!

Tuesday, July 5, 2011

தாய்லாந்தின் முதல் பெண் பிரதமர்!

தாய்லாந்து நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் முன்னர் அங்கிருந்து விரட்டப்பட்ட முன்னாள் பிரதமர் தக்ஷின் சினவத்ராவின் இளைய தங்கை யிங்லுக் சினவத்ரா, அபார வெற்றி பெற்று பிரதமர் பதவியைப் பிடித்துள்ளார். இவர் தாய்லாந்தின் முதல் பெண் பிரதமர் என்ற சாதனையையும் இத்துடன் நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 தாய்லாந்தில் பிரதமராக இருந்து வந்த தக்ஷன் சினவத்ராவுக்கு எதிராக ராணுவத்தின் உதவியுடன் மக்கள் புரட்சி வெடித்தது. இதையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் கடந்த 6 ஆண்டுகளில் 6 பிரதமர்கள் மாறி மாறி வந்த போதும் தாய்லாந்தில் கலவரங்கள் ஓயவில்லை. இந்நிலையில் அங்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் சினவத்ராவின் இளைய தங்கையான யிங்லுக் பியூ தாய் என்ற கட்சியின் தலைமையில் போட்டியிட்டார். "தாய் மக்களுக்காக" என்ற அர்த்தம் வரும் இக்கட்சியின் தலைவர் நாட்டைவிட்டு விரட்டப்பட்ட தக்ஷின் சினவத்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தேர்தலில் 44 வயதான யிங்லுக் தலைமையிலான கட்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இதையடுத்து யிங்லுக் பிரதமராக பொறுப்பேற்கிறார். தாய்லாந்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையும் இத்துடன் அவருக்குக் கிடைத்துள்ளது.

யிங்லுக் இதுவரை எந்த அரசுப் பொறுப்பையும் வகித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் எப்படி தாய்லாந்து நாட்டை நிர்வகிக்கப் போகிறார் என்று சந்தேகம் நிலவுகிறது. இருப்பினும் தாய்லாந்து மக்கள் குறிப்பாக பெண்கள் யிங்லுக்கின் திறமையைப் போற்றுகின்றனர். அவர் மிகச் சிறந்த நிர்வாகி, சிறப்பான ஆட்சியை அவர் கொடுப்பார் என்று புகழாரம் சூட்டுகின்றனர்.

கலவரங்களுக்கிடையில் தத்தளிக்கும் தாய்லாந்தில் யிங்லுக் அமைதியைக் கொண்டுவருவாரா என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடமும் நிலவுகிறது.
Source : http://www.inneram.com
--------------------------------------------------------------

Monday, July 4, 2011

குரூர மனச் சிந்தனையாளர்கள்

ஒரு மனிதனை எப்படியெல்லாம் நாம் துன்புறுத்தலாம்? சொற்களால், வார்த்தைகளால், செய்கைகளால், எமது நடத்தைகள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாவற்றாலும் ஒரு மனிதனை இலகுவாகத் துன்புறுத்தி விடலாம். ஆனால் அத் துன்புறுத்தல்களை எல்லோராலும் இலகுவில் தாங்கிக் கொள்ளமுடியாது. துன்புறுத்தலுக்குள்ளாகும் மனிதனின் உணர்வுகளும், உடலும் ஒரே நேரத்தில் சீண்டப்படுகின்றன. அவற்றின் விளைவுகள் பாரதூரமானவை. நீச்சலை அறியாதவன் ஒருவனை நடுக் கடலில் தள்ளிவிடுவதைப் போல குரூரமானவை அவை. ஆனால் அதைச் செய்பவனும் இன்னுமொரு சக மனிதனே. துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுபவனைப் போன்றே குருதியும், நரம்புகளும், அவயவங்களும் கொண்டவனே துன்புறுத்துபவனும். அவனுக்கு மட்டும் அம் மனநிலை எப்படி வாய்க்கிறது? அதிகாரமும், ஆணவமும், பழி வாங்கலுமே இவ்வாறான துன்புறுத்தலுக்கு ஒரு மனிதனைத் தூண்டுகின்றன. இவ்வாறான துன்புறுத்தல்களை 'சித்திரவதை' எனப் பொதுப் பெயர் கொண்டு அழைக்கலாம்.

UAE - விசிட் விசாவில் வருபவர்களுக்கு இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடு

இந்தியாவிலிருந்து UAE நாட்டிற்கு பார்வையாளர் (VISITOR) விசாவில் வருபவர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விசா அனுப்பும் நபர் துபாயிலுள்ள இந்திய தூதரகத்தில் படிவம் SD-V(5) - SPONSOR'S DECLARATION FORM ஐ பூர்த்தி செய்து, விசா ஏற்பாடு செய்தவருடைய (Sponsor) கடவுச்சீட்டு (PASSPORT) மற்றும் சம்பள விபரம் (PAY SLIP) நகலையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.

Saturday, July 2, 2011

அவன்-இவன் பட இயக்குனர் பாலா மீது சுன்னத் ஜமாஅத் புகார்....

அவன்-இவன் படம் மீது அவதூறு: டைரக்டர் பாலா மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்அவன்-இவன் பட இயக்குனர் பாலா மீது போலீஸ் கமிஷனரிடம் தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் புகார் கொடுத்துள்ளது.  
தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் அக்ரம்கான் சென்னை போலீஸ் கமிஷனருக்கு கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
சமீபத்தில் வெளிவந்து உலகமெங்கும் திரையிடப்பட்டுள்ள அவன்-இவன் திரைப்படத்தில் முஸ்லிம்கள் குர்பாணி கொடுக்கும் புனிதச் செயலை மாபெரும் குற்றச்செயலாக சித்தரித்து காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன. இது அரசியல் சாசனத்திற்கு எதிரான குற்ற செயலாகும். முஸ்லிம் சமுதாய மக்களை புண்படுத்துவதாக உள்ளது.  
எனவே அவன்-இவன் படத்தின் இயக்குனர் பாலா மற்றும் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரம் ஆகியோர் மீது மதநம்பிக்கையை புண்படுத்துதல், மத நம்பிக்கை, செயல்பாட்டை குற்றச்செயல்போல் சித்தரித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறி உள்ளார்.

நன்றி- மாலைமலர்

----------------------------------------------------------------------------------------------------------------------
 
    தனக்கென்று ஒரு கருத்தும் உரிமையும் இருப்பதில் தவறில்லை அது எந்த வகையிலும் அடுத்தவர் மனதையும் உரிமையும் பாதிக்காமல் இருக்க வேண்டும் .  படம் என்ற பெயரில் பணம் சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் மற்றவர் மனதினை புண்படுத்தி தான் பெரிய சீர்திருத்தவாதி என செயல்பட முயலும் சில சின்ன  புத்திக் காரர்களால் விளையும் பின்விளைவுகள் மனித சமூகதிற்கு  விளையும் தீமை அதிகமாகி அதனால் "தீவிரவாதம்" என்பதற்கு விதை போடப்படுகின்றது . இதனை தடுத்து நிறுத்த அரசு முயல வேண்டும் .

Friday, July 1, 2011

முஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா?

கேள்வி: இஸ்லாத்தில் சிலை வழிபாடு இல்லையெனும் போது காபாவை, மற்றும் காபாவின் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் ஹஜ்ஜின் போது வணங்குவது ஏன்? சிலை வணக்கம் இல்லையெனும் போது இது சிலை வணக்கம் போல் உள்ளதே விளக்கவும்?
பதில்: இஸ்லாத்தின் அடிப்படையான தத்துவமாகிய ஏக இறை வழிபாடு  என்பதன் அடிப்படை கொள்கையும் நம்பிக்கையும், இறைவன் ஒருவனே; அவன் தேவைகள் அற்றவன்; அவன் பெறப்படவில்லை; யாரையும் பெறவுமில்லை, அன்றி அவனுக்கு நிகராக ஏதுமில்லை என்பதாகும்
முஸ்லிம்கள் என்பதற்கு ஏக இறைவனுக்கு முழுமையாகக் கட்டுபட்டவர்கள் என்று பொருள். அல்லாஹ்வை மட்டுமே அவர்கள் வணங்க வேண்டும்; அல்லாஹ்வைத் தவிர யாரையும், எதையும் வணங்கக் கூடாது என்பது மிகவும் முக்கியமான ஒரு கட்டளையாகும். இதற்கு மாற்றமாக ஒருவர் செயல்பட்டால் அவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவதோடு இறைவனுக்கு இணைவைத்தல் எனும் மன்னிக்கப்படாத ஒரு பாவத்தை செய்தவராகிவிடுவார். அதற்காக அவர் மரணிக்கும் முன்னர் மன்னிப்பு கேட்டு மீளாமல் அதேநிலையில் மரணிக்க நேருமானால் மறுமையில் அவர் மாபெரும் நஷ்டம் அடைவார் என்று இஸ்லாம் கூறுகிறது.
அருள்மறை குர்ஆன் இரண்டாவது அத்தியாயத்தின் 144 வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:
"(நபியே!.) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாகத் திருப்பி விடுகிறோம். ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்." (அல்குர்ஆன் 2:144)

LinkWithin

Related Posts with Thumbnails