Sunday, July 10, 2011

S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்களின் அறிவியல் ரீதியிலான சொற்பொழிவு

மர்ஹூம் S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்கள் 1980களில் துபை-ஹாங்காங் சென்ற போது எடுத்த படங்கள்  "சலவாத் பாவா" பற்றி S.R.S. ஹஜ்ரத்

கஞ்சன் என்பவன் யார்தெரியுமா? யார் என்பெயர் கூறப்படும்போது என்மீது சலவாத் சொல்லவில்லையோ அவன்தான் கஞ்சன் என்று நவின்ரார்கள் :- அறிவிப்பவர் : செய்யிதின அலி (ரலியல்லாஹு அன்ஹு) ஆதாரம் :- திர்மிதி, அஹ்மத்

اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

பொருள்: இறைவா! இப்றாஹீம்(அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப்போல், முஹம்மது அவர்களின் மீதும், முஹம்மது அவர்களின் குடும்பத்தார்மீதும் நீ அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.

"சலவாத் பாவா" பற்றிஅறியாதவர்கள் தமிழ் நாட்டில் யாருமில்லை . அவர்களுக்கு அனைவரும் மரியாதை கொடுத்து வந்தார்கள்.
"சலவாத் பாவா"வினைக் கண்டால் சிறார்கள் மிகவும் மகிழ்வார்கள் . அவர்களுடன் ஒரு மிட்டாய் டின் இருந்துக் கொண்டே இருக்கும் .அந்த மிட்டாய்க்கு "சலவாத் பாவா" மிட்டாய் என்ற பெயர் வந்து விட்டது .அந்த மிட்டாய்களை சலவாத் சொல்லச் சொல்லி அனைவர்க்கும் கொடுத்து மகிழ்வார்கள். எக்காலமும் அவர்கள் நாயகம் பெயரில் சலவாத் சொல்லிக் கொண்டே இருப்பதுடன் மற்றவரையும் சலவாத் ஓதச் சொல்லி உற்சாகப்படுத்தி வந்தமையால்தான் "சலவாத் பாவா" என்ற பெயர் அவர்களுக்கு வந்தது.

ஹஜ்ரத் S.R.ஷம்சுல்ஹுதா அவர்கள்  நீடூர் - நெய்வாசலில் பல ஆண்டுகள் நீடூர் - நெய்வாசல் ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியில் நாஜிராகவும்(முதல்வராக) நீடூர் நெய்வாசல் ஜாமியா மஸ்ஜிதில் தலைமை இமாமாகவும் இருந்து சிறந்த சேவை செய்தார்கள். ஹஜ்ரத் அவர்களின் சொந்த ஊர் வடக்கு மாங்குடி
S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்களின்,அறிவியல் ரீதியிலான சொற்பொழிவு,அல்லாவின் உயரிய படைப்பின் பார்வை,உயரினங்களின் உண்ணதம்,
வீடியோ பார்க்க இங்கு க்ளிக் செய்யுங்கள்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails