Monday, February 24, 2014

பொறாமைத் தீயில் பொசுங்கும் நல்லறங்கள்

வழக்குத் தமிழில், “பொறாமை” என்றும் இலக்கியமாய் “அழுக்காறு” என்றும் கூறப்படும் கெட்ட எண்ணத்திற்கு அரபுமொழியில் “ஹஸது” (Jealousy and Envy) என்று சொல்வார்கள்.

சகமனிதருக்குக் கிடைத்திருக்கும் வசதி வாய்ப்புகள், திறமை ஆகியவற்றின்மீது ஆசை கொண்டு சகமனிதருடைய வீழ்ச்சியை விரும்புதல்; அவ்வீழ்ச்சியில் மகிழ்ந்திருத்தல், அதற்கான செயல்களில் ஈடுபடல் போன்ற இழிவான மனப்பான்மைக்குத்தான் பொறாமை என்று சொல்லப்படும்.

இதில் நேரடிப் பொறாமை, மறைமுகப் பொறாமை என்று இரு வகைகள் உண்டு. நேரடிப் பொறாமையாளர்கள் வெளிப்படையாக ஒருவனை வீழ்த்தும் எண்ணத்தை/பேச்சை/செயலை மேற்கொள்கிறார்கள் என்றால் மறைமுகப் பொறாமையாளர்களோ உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி, நயவஞ்சகராகவும் (முனாஃபிக்) செயற்படுகிறார்கள்.

தமிழக முஸ்லிம்கள்

தமிழக முஸ்லிம்கள் - சிறப்புத் தொடர்
                                                                        Picture Source


தமிழக முஸ்லிம்களுடைய சமூக, அரசியல் மற்றும் வாழ்வியல் அம்சங்களை பல்வேறு கோணங்களிலும் அலசும் பிபிசி தமிழோசையின் சிறப்பு பெட்டகத் தொடர். இத்தொடரைத் தயாரித்து வழங்குபவர்
த.நா.கோபாலன்.
பிபிசி யிலிருந்து பாகம் 1லிருந்து 10 வரை  மீடியாவில் கேட்க
நன்றி
Source

Friday, February 21, 2014

தவ்ஹீத் வட்டாரத்தில் தனித்தனி பள்ளிவாசல்களை ஏற்படுத்தி பிரிந்து போவது பலஹீனம் இல்லையா?

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

கேள்வி பதில் நிகழ்ச்சி
வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ்)
நாள்: 16.04.2013
இடம்: இஸ்லாமிய அழைப்பகம், பலத், ஜித்தா
நிகழ்ச்சி ஏற்பாடு: பலத் இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா


http://www.islamkalvi.com/portal/?p=63354

Wednesday, February 19, 2014

மனிதாபிமானத்தின் இறுதி நம்பிக்கை இஸ்லாம் - ஹங்கேரி அரசியல்வாதி!

துருக்கி நாட்டில் பிரயாணம் செய்த ஹங்கேரியிலுள்ள ஜோப்பிகா பகுதியின் ஜனாதிபதி கேபர் வோனா, "மனிதாபிமானத்தின் இறுதி நம்பிக்கை இஸ்லாம் மட்டுமே" என இஸ்லாமிய மதத்தைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஹங்கேரியின் பிரபரல அரசியல்வாதிகளுள் ஒருவர் கேபர் ஓனா. இவர் ஜோப்பிகா பகுதியின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அரசுமுறை பயணமாக துருக்கி செல்ல நேர்ந்தது. இஸ்லாமிய மதத்தின்மீது வெறுப்புகொண்டிருந்த ஓனா, துருக்கி செல்வதற்கு விரும்பவில்லை. எனினும் அரசியல் நிர்பந்தம் காரணமாக வேண்டா வெறுப்பாக துருக்கி சென்றார்.

குர்ஆன் அறிவியலை மெய்ப்பிக்கும் நூல்..!!

ஒரு முஸ்லிம்,

நோன்பிருப்பதன் அருமையை அறிவியல்ரீதியாக
அறிந்ததால் நோன்பிருப்பதில்லை,

தொழுகையால் கிடைக்கும் உடல் ஆரோக்கிய பலன்களுக்காக தொழுவதுமில்லை,

இன்னும் ஹஜ்ஜை,
அறுக்கப்பட்ட பிராணிகளை மட்டுமே உண்பதை,
ஒழு செய்வதை,
அமர்ந்து நீர் அருந்துவதை,
தாடி வைத்துக் கொள்வதை,
மதுவின் பக்கம் நெருங்காமலிருப்பதை,

Sunday, February 16, 2014

U.A.E யில் 2014 முஸ்லீம் உச்சி மாநாடு ஒரு மைல்கல் (ஆவணப்படம் ஆங்கிலத்தில் )


ஐக்கிய அரபு எமிரேட்டில் ​​ஜனவரி 2014 ல் நடைபெற்ற இரண்டு நாள் மாநாடு.

U.A.E யில்(யூ.ஏ.ஈ) ஒவ்வொரு ஆண்டும் 1500 க்கும் இஸ்லாமிய  நம்பிக்கை தழுவிய புதிய முஸ்லிம்கள்,
ஒரு மிக வேகமாக வளர்ந்து வரும் சமூகம், சுற்றிய கருப்பொருளாய் தரும்  (உத்தியோகபூர்வ புள்ளி).

புதிய முஸ்லிம்கள் தனிப்பட்ட சவால்களை எதிர்கொள்ள & மற்ற முஸ்லிம்கள் வெவ்வேறு தேவைகளை அறிய வேண்டும்.
இந்த உச்சி மாநாடு ஒரு விழிப்புணர்வு. இது முஸ்லிம்கள் ஒரே நம்பிக்கையோடு  இருந்து  அந்த திசையில் வழி நடத்தும் ஒரு முயற்சியாகும்.
இஸ்லாமிய அமைப்புகளுக்கு இது ஒரு மார்க்க  சேவை (தாவத் )
புதிய முஸ்லிம்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பயனுள்ள உத்திகள் மற்றும்  அமைப்புகள் உருவாக்க பயிற்சி. அதற்க்கு தேவையான அனைத்து  உதவிகள் மற்றும் கருவிகள் வழங்குகிறது.

புதிய முஸ்லீம் உச்சிமாநாட்டிற்கு முஸ்லிம்களின் ஊக்கம், U.A.E யில் உள்ள ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கிறது "இணைந்து கொள்க. அதில் ஈடுபடும் ஊக்கமும்  கிடைக்கும்".

Friday, February 14, 2014

இறைவன் மீது வைத்த காதலே நிலையான காதல்

பெற்றோர்களின் திருமணம் ஒப்பந்தந்தால் வந்தது
பெற்றோர்களின் காதல் கல்யாணத்திற்குப் பின் வந்தது
பெற்றோர்களின் காதலின் இணைப்பால் வாரிசு வந்தனர்

தந்தையின் காதல் தாயின் மேல் தந்தை இருக்கும் வரை
தாயின் காதல் தந்தை மீது தாய் இருக்கும் வரை

பெற்றோர்களின் காதல் வாரிசுகள் மீது
பெற்றோர்கள் இருக்கும் வரை

Monday, February 10, 2014

யுவனுக்கு ஒரு மடல்.

யுவனுக்கு ஒரு மடல்.
***********************************

உனை தீவிரவாதி என்று பழிக்க
தீவிரமாய் இருப்பார்கள்.

தொலைபேசியில் மிரட்டி தொல்லை
கொடுப்பார்கள்.

உனை தூக்கி வைத்து ஆடிய
திரைத்துறையால் நீ தூக்கி
எறியப்படலாம்.

வா ராஜா வா


நம்மில் சிலர் இஸ்லாத்தில் சேரும் நண்பர்களை " இஸ்லாத்திற்கு இவர்கள் வருவதால் இஸ்லாத்திற்கு எந்த ஆதாயமும் இல்லை " என்று பெரிய மேதாவித்தனத்தொடு சொல்வது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. நாம் நினைத்து ஒரு ஆளைக்கூட முஸ்லிமாக்க முடியாது... அல்லாஹ் நினைத்தாலே தவிர. இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் அபு ஜஹலுக்கோ உமருக்கோ ஹிதாயத்தை வழங்கும்படி அண்ணல நபிகள் அல்லாஹ்விடம்தான் முறையிட்டார்கள். அல்லாஹ் உமருக்கு ஹிதாயத்தைக் கொடுத்தான்.

Sunday, February 9, 2014

நான் ஒரு முஸ்லிம், அதற்காக பெருமைப்படுகிறேன், அல்ஹம்துலில்லாஹ்: யுவன்சங்கர் ராஜா


' நான் ஒரு முஸ்லிம், அதற்காக பெருமைப்படுகிறேன், அல்ஹம்துலில்லாஹ்': யுவன்சங்கர் ராஜா
மேலும் படிக்க  Read more at Source : http://tamil.oneindia.in/movies/news/i-follow-islam-says-yuvanshankar-raja-193176.html#slidemore-slideshow-1

Friday, February 7, 2014

[தமிழ் உலகம்] மின்சாரம் பற்றி அகத்தியர் கண்டுபிடிப்பு


குட்டை உருவம் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் !!!!!!

குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.

தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

இஸ்லாமியச் சட்டம் - நீடூர், A.M.ஸயீத்


இஸ்லாமியச் சட்டம்
 

நீடூர், A.M.ஸயீத்

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்: 'இவை அல்லாஹ்வின் வரைவுகள். இவற்றை நீங்கள் மீறவேண்டாம். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோர்தான் அநீதி இழைப்போராவர்.' (2:229) உலகில் பல்வேறு நாடுகளில், பல்வேறு தத்துவங்கள் பின்பற்றப்படுகின்றன. அந்தந்த நாட்டு சூழ்நிலைகளுக்கேற்ப மனித சமுதாயத்தைக் கட்டுப்படுத்துவதற்காக முடியாட்சியாக இருந்தாலும், குடியாட்சியாக இருந்தாலும், சர்வதிகார ஆட்சியானாலும், சமயங்களில் நம்பிக்கையற்ற கம்யூனிஸ ஆட்சியானாலும் அங்கே சட்டங்கள் அவசியமாகின்றன.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகளிலும், முஸ்லிம் நாடுகள் என்று பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிற நாடுகளிலும் குற்றவியல் சட்டங்கள் நிலவரைச் சட்டங்கள், சொத்துரிமை சட்டங்கள், சான்றியல் சட்டங்கள் போன்ற விதிமுறைகள் சாதி சமயவேறுபாடின்றி அனைவரையும் கட்டுப்படுத்தும் வகையில் செயல்படுத்தப் படுகின்றன.
இந்தியவில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்சிகள், போன்ற பல்வேறு இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். வேறு நாடுகளில் இது போன்ற பரவலாகக் காணமுடியாது. மதச்சார்பற்றக் கொள்கையை பாரதம் பின்பற்றி வருகிறது. மதங்களின் தனிப்பட்ட சட்ட திட்டங்களில் தலையிடாமல் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே விடுதலை வாங்கித் தந்தவர்களின் கனவாக இருந்தது.
'தனியார் சட்டம்' (PERSONAL LAW)என்பது, அந்தந்த மதங்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டமாகும். ஹிந்து மகவேற்புச் சட்டம் (THE HINDU ADAPTATION ACT) ஹிந்து திருமணச் சட்டம், ஹிந்து இறங்குரிமைச் சட்டம் (THE HINDU SUCCESSION ACT) ஆகியன ஹிந்து சமயத்தாரை மட்டுமே கட்டுப்படுத்தும். இதே போல முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம் முதலியன முஸ்லிம்களை மட்டுமே கட்டுப்படுத்தும். சமயச் சட்டங்களைச் சரிவரத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், அந்தந்த சமயங்களின் தோற்றம், வளர்ச்சி, வரலாறு, தத்துவம், முதலியவற்றை ஓரளாவது அறிந்து கொள்வது அவசியமாகும். அப்படித் தெரிந்து கொள்ளாமலும், தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொள்ளாமலும் காழ்ப்புணர்ச்சியன் அழுத்தத்தில் அவதிப்படுவதன் காரணமாகத்தான், பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று சிலர் கூக்குரலிடுகிறார்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails