Wednesday, September 28, 2011

தாய் நாடு

இந்திய திருநாட்டில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள்இநதுக்கள். யாவரும் சகோதரத்தோடு பழகி வருகிறோம். சகோதரரின் .நாட்டின் தேசப்பற்றை தன் இனிய குரலில் .அதனைப் பறைசாற்றும் உணர்வுப் பூர்வமான பாடலை இந்த கானொளி மூலம் கவனமாக கேட்போமா ! 11 வயது மட்டும் நிரம்பப்பெற்ற S.முனவ்வர் என்ற பிஞ்சு உள்ளம் கொண்ட சகோதரரின் .நாட்டின் தேசப்பற்றை தன் இனிய குரலில் .அதனைப் பறைசாற்றும் உணர்வுப் பூர்வமான பாடல்

Monday, September 26, 2011

வெளிநாட்டில் இழந்தது ?

வெளிநாட்டிற்கு செல்வதால் எதனை இழந்தோம் ? நம்முடைய பெற்றோர்கள் இழந்தது என்ன ? 
"ஒவ்வொரு வெளிநாடுவாழ் தமிழனும் அவசியம் பார்க்க வேண்டியது. சொல்வதில் என்ன வெட்கம்? நான் அழுதேன் இதைப் பார்த்து."
மனைவியை பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்யலாமா தனியாக வெளிநாடு செல்லுதல் (கப்பலுக்கு போன மச்சான்) திரைகடல் கடந்து திரவியம் தேடச் சென்ற கணவனின் பிரிவைத் தாங்க முடியாத மனைவியின் சோக கீதம்.

இஸ்லாம் மயமாகும் ஐரோப்பா கண்டம்! – Part 1 + இஸ்லாம் - ஐரோப்பா அனைத்தும்

 கட்டுரை ஆசிரியர் : அபூ ரிஸ்வான்

இறைவனின் திருப்பெயரால் …
‘நாடு என்பது நாடா வளத்தைப் பெற்றிருக்க வேண்டும்’ என்பது ஆன்றோர் மொழி! இம்முதுமொழி நம் இந்தியத்திருநாட்டில் உலாவந்தாலும் மற்றுமுள்ள எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். ஒரு நாடு பெற்றிருக்க வேண்டிய வளங்களை பட்டியல் இட்டாலும் அது நீளும். அதில் முக்கியமானவைகளை மட்டும் கூறினால் – மனிதவளம், இயற்கைவளம், தொழில்வளம், அறிவுவளம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றில் மனிதவளம் என்பது தலையான ஒன்று.
இன்று நம் அண்டை நாடான சீனா மற்றும் நாம் வாழும் இந்தியா இவையிரண்டும் மனித வளத்தில் உலகிலேயே முதல், இரண்டாம் இடத்தில் உள்ளன. இதுவே இவ்விரு நாடுகளும் வேகமாக வளர்ச்சியடைவதற்கு காரணமாக உள்ளது.
ஆனால் உலகிலேயே நாகரீகத்தின் உச்சியில்(?) இருந்து கொண்டிருக்கிறோம் என்று பெருமைபட்டுக் கொள்ளும் மேற்கத்திய உலகில் இம்மனிதவளம் மிகவும் குன்றிய நிலையிலேயே காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக இன்றைய 31 நாடுகள் அடங்கிய ஐரோப்பா கண்டத்தை எடுத்துக் கொண்டால் அதன் சராசரி மொத்த கருவுறுந்தன்மை விகிதம் (Total Fertility Rate) ஒரு பெண்ணுக்கு 1.38 குழந்தைகள் தான்!
இனி மொத்த கருவுறுந்தன்மை விகிதம் (Total Fertility Rate) என்றால் என்னவென்பதை சற்று விரிவாகப் பார்ப்போம். ஒரு ஊரில் குழந்தை பெறும் வயதுடைய பெண்கள் (15 வயதிலிருந்து 44 வயது வரை) 100 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இவர்கள் 100 பேரும் பெற்றெடுத்த மொத்தக் குழந்தைகள் 200 என்றால் இவ்வூரின் மொத்தக் கருவுறுந்தன்மை விகிதம் இரண்டு (2) குழந்தைகள் ஆகும். அதாவது சராசரியாக ஒரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் ஆகும். சில பெண்களுக்கு குழந்தையே இல்லாமல் இருக்கலாம்! மேலும் சிலர் நான்கு அல்லது ஐந்து குழந்தைகளைக் கூட பெற்றிருக்கலாம். இந்தக் கணக்குப்படி 100 பெண்களும் பெற்றெடுத்த மொத்தக் குழந்தைகள் இந்த ஆண்டில் எவ்வளவு உள்ளது என்பது தான்!

Sunday, September 25, 2011

தமிழில் "கடவுள்" என்றும் ஆங்கிலத்தில் "God" என்றும் அரபியில்.....

தமிழில் "கடவுள்" என்றும் ஆங்கிலத்தில் "God" என்றும் உர்துவில் "குதா" என்றும் கூறும்போது கொள்ளப்படும் பொருளுக்கு சமமானதல்ல அல்லாஹ் என்ற பதம். கடவுள், குதா, காட் என்ற பதங்கள் வணங்கப்படுபவை என்ற பொருளில் அவ்வாறு கூறப்படுகின்றன. அதற்குச் சமமான பொருளை உடையதே அரபியில் உள்ள இலாஹ் என்ற பதம். வணங்கப்படுகின்ற எதனையும் இலாஹ் என்று கூறலாம். இலாஹ் என்ற பொதுப் பெயருடன் அல் என்ற குறிப்புப் பெயரும் சேர்ந்ததே அல்லாஹ் என்பதாகும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கூற்று. ஆக அல்லாஹ் என்ற பதத்தின் பொருள் அல்-இலாஹ் என்பதாகும். அதாவது வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன் என்பது பொருள். அல்லாஹ் என்ற பதத்தின் உருவாக்கத்தைப் பற்றி வேறு அபிப்பபிராயங்களும் உண்டு. எதுவாக இருந்தாலும் உண்மையான இறைவனின் அறியப்பட்ட பெயரே அல்லாஹ் என்பதாகும். உண்மையான இறைவன் என்ற நிலையிலேயே திருக்குர்ஆனும் அல்லாஹ் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்துகின்றது.


﴿ اللَّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ ﴾

அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன் இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான். (39:62)

﴿ ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ خَالِقُ كُلِّ شَيْءٍ لا إِلَهَ إِلا هُوَ فَأَنَّى تُؤْفَكُونَ ﴾

அவன் தான் உங்கள் அல்லாஹ் - உங்கள் இறைவன் - எல்லாப் பொருட்களையும் படைப்பவன் - அவனைத் தவிர வேறு நாயனில்லை எனவே நீங்கள் (சத்தியத்தை விட்டும்) எங்கு திருப்பப்படுகிறீர்கள்? (40:62)

﴿ إِنَّ اللَّهَ هُوَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ ﴾

நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி) (43:64)

﴿ بَدِيعُ السَّمَاوَاتِ وَالأرْضِ أَنَّى يَكُونُ لَهُ وَلَدٌ وَلَمْ تَكُنْ لَهُ صَاحِبَةٌ وَخَلَقَ كُلَّ شَيْءٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لا إِلَهَ إِلا هُوَ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ ﴾

﴿ وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّى يُؤْفَكُونَ ﴾

மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் "அல்லாஹ்" என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள் அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்? (43:87)

﴿ وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالأرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّى يُؤْفَكُونَ ﴾

மேலும், (நபியே!) "நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்?" என்று கேட்டால், "அல்லாஹ்" என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள் அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்? (29: 61)

﴿ وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الأرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لا يَعْقِلُونَ ﴾

இன்னும், அவர்களிடம் "வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?" என்று நீர் கேட்பீராகில் "அல்லாஹ்" என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள் (அதற்கு நீர்) "அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது" என்று கூறுவீராக எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள். (29:63)

﴿ قُلْ مَنْ رَبُّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلا تَتَّقُونَ ﴾

"ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?" என்றும் கேட்பீராக. "அல்லாஹ்வுக்கே" என்று அவர்கள் சொல்வார்கள் "(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?" என்று கூறுவீராக! (23:86,87)

﴿ قُلْ مَنْ بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلا يُجَارُ عَلَيْهِ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ سَيَقُولُونَ لِلَّهِ قُلْ فَأَنَّى تُسْحَرُونَ ﴾

"எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? - யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக - ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)" என்று கேட்பீராக. அதற்கவர்கள் "(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)" என்று கூறுவார்கள். ("உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?" என்று கேட்பீராக. (23: 88,89)

தினம் இரவினில் நாம் தூங்கிடும் நேரம் .


தூக்கம்
யார் தூக்கத்தினாலோ அல்லது மறதியினாலோ (தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை தொழவில்லையோ) அவர் ஞாபகம் வந்ததும் (அல்லது விழித்ததும்) அதை தொழுது கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உறங்கச் செல்லும் போது ஓதும் துஆ.
1734. ‘நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர் ‘யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டு விட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்’ என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்” என்று என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது ‘நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸுலையும் நம்பினேன் என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை, நீ அனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்’ என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்”.
http://www.islamkalvi.com/portal/?p=2534

The Prophet also said: ‘When you are about to sleep recite aayat-ul-kursiyy till the end of the verse for there will remain over you a protection from Allaah and no devil will draw near to you until morning.’

பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் ,

Friday, September 23, 2011

தேசிய அடையாள அட்டைக்கு முஸ்லிம் ஆண்கள் தொப்பியும், பெண்கள் பர்தாவும் அணிந்த நிலையில் புகைப்படம் எடுக்க அனுமதி!


தேசிய அடையாள அட்டைக்கு முஸ்லிம் ஆண்கள் தொப்பியும் பெண்கள் பர்தாவும் அணிந்த நிலையில் புகைப்படம் பிடிப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் ஜகத் பீ விஜேவீர முஸ்லிம் பெண்கள் ‘பர்தா அணிந்த நிலையில் அடையாள அட்டைக்காக படம்பிடிக்க முடியும் எனவும் அறிவித்துள்ளார். முஸ்லிம்கள் தலையை மூடிய நிலையில்  அடையாள அட்டை பெற புகைப்படம் பிடிப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் இதற்கு முன் அனுமதி மறுத்திருந்தது.

தலைமுடி தெரியும் நிலை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. இது தொடர்பில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள்  முஸ்லிம் தலைவர்கள் அரசியல் வாதிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். முஸ்லிம்களின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் தொப்பியை அணிந்த நிலையில் அடையாள அட்டை பெற அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் உலமா சபை பிரதிநிதிகள் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்கள அதிகாரிகள் முஸ்லிம் அமைப்புகள் போன்றோர் கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை சந்தித்து முஸ்லிம்களுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு நடத்தினர். இதன் போதே முஸ்லிம்கள் தொப்பி அணிந்த நிலையில் அடையாள அட்டைக்கான படம் பிடிக்க அனுமதி பெற்றுத்தருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்தார்.

இனிமேல் முஸ்லிம் உலமாக்கள் மத்ரஸா மாணவர்கள் மட்டுமன்றி ஏனைய முஸ்லிம்களும் தலையை மூடிய நிலையில் நெற்றியோ காதோ மறையாதவாறு புகைப்படம் பிடிக்க அனுமதி வழங்குவதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் முஸ்லிம் சமய விவகார திணைக்கள பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
Source : http://www.thihariyanews.com/
-------------------------------------------------------------------------------------------------------------
BEAUTY TIPS FOR MY SISTERS IN ISLAM

Monday, September 19, 2011

ஆத்மார்த்தமாய்....


ஆத்மார்த்தமாய்....


மண்டபம் நிரம்பி வழிய
மணக்கோலத்தில் செல்லமகள்
மார்போடு அணைத்ததும்
படபடவென துடித்த நெஞ்சம்
பாசத்தால் பரிதவித்து
புதுவித மன
பாரத்தால் துடித்தது


மழலையான வயதினிலே-என்
மடிசுமந்த முத்துமகள்
மழலையாகி மங்கையாகி
மாலைசூடி மணக்கோலம் பூண்டு
மருகிக்கொண்டே
மறுவீடு செல்லும் நேரம்


சுமந்த மடி சுருங்கி கதற
சுணங்கி சுணக்கி இதயம் நொருங்க
சுரந்து சுரந்து விழிகள் கலங்க
குருதி மொத்தம் நரம்பில் உறைய
குரலும் நடுங்கி உதறி உடைய
சொல்லயியலாச் தாயின்துயரம்
சொல்லில் வடிக்கத் தெரியாத்
சேயின் நிலையும்


மகளாகத் தூளியாடி
சினேகிதியாய் துயர்கள் நீக்கி
உறவாடிய உயிர்கள் இரண்டு
உருகியபடியே
விட்டுப் பிரிந்த பொழுது
புழுங்கித் தவித்தது
கரு சுமந்த மடியும்
பால் சுரந்த மாரும்
பாசத்தை சுமந்த மனதும்


தோழியாக இருந்தமகள்
தோள்சாய்ந்து கிடந்தமகள்
கண்ணுக்குள்ளே காத்தமகள்
கணவனோடு கைகோர்த்தாள்
இணைந்த கைகள்போல
இதயங்கள் இணைந்து இனிக்க
காலந்தோறும் கண்கலங்காது
கஷ்டமேதும் நெருங்காது
காக்கவேண்டும் வல்ல நாயன்


அன்பும் அறணும் அவள்பேணி
அனைவரும் புகழ மகள்வாழ
அன்னை நெஞ்சம் உருகியபடி
அகிலம் காக்கும்  இறைவனை
ஆத்மார்த்தமாய் வேண்டுகிறேன்..........


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
Source : http://niroodai.blogspot.com
--------------------------------------------------------------------------------------------------------------


Friday, September 16, 2011

தோழர்கள் முதலாம் பாகம் நூல் வெளியீடு - நிகழ்ச்சித் தொகுப்பு

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!

த்தியமார்க்கம்.காம் தளத்தில் சகோ. நூருத்தீன் எழுத, தொடராக வெளிவந்து கொண்டிருக்கும் "தோழர்கள்" தொடரிலிருந்து 20 தோழர்கள் அடங்கிய தொகுப்பு, சத்தியமார்க்கம் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக, "தோழர்கள் - முதலாம் பாகம்" அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 11 செப்டம்பர் 2011 ஞாயிறு காலை 11 மணியளவில் சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் நிகழ்ந்தேறியது, அல்ஹம்து லில்லாஹ்!



நாடெங்கும் திருமணங்கள், புதுமனை குடிபுகல்கள், இன்ன பிற குடும்ப வைபவங்கள் - 11 செப்டம்பர் 2011 ஞாயிற்றுக்கிழமை சுப முகூர்த்தமாம். நூலாசிரியரின் 3 வார இந்திய வருகையைக் கருத்தில் கொண்டு, 'நல்ல நாள்' பற்றிய சிந்தனை இல்லாமல், அந்த நாளை நூல் வெளியீட்டுக்காகத் தேர்ந்தெடுத்திருந்தோம். நூல் வெளியீட்டுக்குப் மிகப் பொருத்தமான தேவநேயப் பாவாணர் அரங்கம் பல ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்கனவே பலருக்கும் பதிவாகிவிட்டிருந்தது. மிகுந்த பிரயாசைக்குப் பின்னர் 11.9.2011 காலையில் நமது நிகழ்ச்சியை நடத்திக் கொள்ள பாவாணர் அரங்கத்தினர் இசைவு தெரிவித்தனர், அல்ஹம்து லில்லாஹ்!

சத்தியமார்க்கம் குழுமத்தினரின் ஆலோசனையைத் தொடர்ந்து, தளத்தின் உதவிக் கரங்கள் பகுதியில் இடம்பெற்ற செவிப்புலன் இல்லாத சிறுமி ஆயிஷா சுல்தானாவுக்கு சத்தியமார்க்கம் சார்பாக ரூபாய் 45,000க்கான காசோலையை, சிறுமியின் சிற்றப்பாவிடம் வழங்கி எங்களது கன்னிப் பதிப்பான "தோழர்கள்" நூல் வெளியீட்டை ஒரு நல்லறத்துடன் தொடங்கினோம். இதை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மூவரைத் தவிர யாருக்கும் தெரியாமல், விளம்பரமின்றிச் செய்தோம். இந்த அறிவிப்பும் சிறுமி ஆயிஷா சுல்தானாவுக்குப் பிறர் உதவுவதற்கு ஓர் உந்துதலாக இருக்கும் என்பதால் இங்கு அதை வெளிப்படுத்துகிறோம்.

நூலாசிரியர் நூருத்தீனின் இளைய மகள் செல்வி. ஷைமா, இறைமறை வசனங்களைத் தம் இனிய குரலில், மிகத் தெளிவுடன் ஆற்றொழுக்காக ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க முன்வந்த கவிஞர் பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்), அமர்வுத் தலைவரில் தொடங்கி ஒவ்வொருவராக அறிமுகம் செய்து மேடைக்கு அழைத்தார்.
மேடையை அலங்கரித்தவர்கள்:
1. "தோழர்கள்" நூலுக்கு மதிப்புரை வழங்கிய பன்னூலாசிரியர், கவிஞர் அதிரை அஹ்மது (அமர்வுத் தலைவர்)
2. பேராசிரியர், டாக்டர் அப்துல்லாஹ்
3. பேராசிரியர், அ. மார்க்ஸ்
4. ஜமீல் (இணைய இதழாசிரியர், சத்தியமார்க்கம்.காம்)
5. மறைந்த தொழிலதிபர் கீழக்கரை அஹ்மது யாசீன் அவர்களின் மகனார் நாஸர் (ஹஸ் ஸர்வீஸ், மலேஷியா).
6. நூருத்தீன் ("தோழர்கள்" நூலாசிரியர்)

சத்தியமார்க்கம்.காம் குழுமத்தினரில் ஒருவரும் கணி வல்லுநரும் பல அறிவியல் கட்டுரைகளின் ஆசிரியருமான சகோ. முஹம்மது ரஃபீக் (அபூ ஷைமா), நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வந்த அனைவரையும் வரவேற்றார்.

பன்னூலாசிரியரும், பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் அரபுக் கல்லூரியின் முன்னாள் தமிழாசிரியருமான கவிஞர் அதிரை அஹ்மது அவர்கள் நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரையாற்றும்போது,  கண்ணியமான "தோழர்கள்" பற்றி மிகச் சுருக்கமாக விளக்கி, நூலாசிரியரின் எழுத்துப் பாரம்பரியத்தின் மீது வெளிச்சம் வீசினார்.

அடுத்ததாக, 'நூல் அறிமுகம்' செய்ய வந்த, சத்தியமார்க்கம்.காம் இணைய இதழாசிரியர் ஜமீல், "தோழர்கள்" நூல் கல்விக்கூடங்களில் வரலாற்றுப் பாடமாக வைக்கப்பட வேண்டிய ஒன்று என அறிமுகப்படுத்திவிட்டு, இன்றுவரை புனிதர்களாகப் பேசப்படும் நபித் தோழர்கள் "லா இலாஹ இல்லல்லாஹ்"வை ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் எப்படி வளர்க்கப்பட்டிருந்தனர்? எப்படிப்பட்ட மோசமான வாழ்க்கையை வாழ்ந்தனர்?; "லா இலாஹ இல்லல்லாஹ்" அவர்களது வாழ்க்கை முறையை எவ்வாறு தலைகீழாகப் புரட்டிப் போட்டது? எனச் சான்றுகளை முன்வைத்துப் பேசினார். எங்கோ உள்ள எத்தியோப்பியாவில் பிறந்த கறுப்பரும் அடிமையுமான பிலால் (ரலி) அவர்களை, "எங்கள் தலைவரே!" என்று குலப்பெருமை தலைக்கேறிக் கிடந்த குரைஷியருள் ஒருவரான உமர் பின் அல்கத்தாப் (ரலி) வாஞ்சையுடன் அழைக்க வைத்தது எது? என்ற கேள்வியுடன் தொடங்கி, லா இலாஹ இல்லல்லாஹ்வின் முதல் அழித்தொழிப்பு இலக்கு, தீண்டாமைதான் என்றார். தங்களது இல்லங்களில் இருக்கும் மதுக் குடங்களின் எண்ணிக்கையைத் தங்களின் பெருமைக்குச் சான்றாகப் பேசித் திரிந்த அரபியருள், மொடாக் குடியராகத் திகழ்ந்த ஹம்ஸா (ரலி) அவர்களை ஒழுக்கத்தின் உறைவிடமாக, அல்லாஹ்வின் சிங்கம் என்ற சிறப்புப் பெற்றவராக மாற்றியமைத்தது லா இலாஹ இல்லல்லாஹ் என்றார்.

அதன்பின், நூல் வெளியீடு தொடங்கியது.
"தோழர்கள் - முதல் பாகம்" நூலின் முதல் பிரதியை, அமர்வுத் தலைவர் அதிரை அஹ்மது அவர்கள் வெளியிட, தொழிலதிபர் A.Y. நாஸர் (மலேஷியா) பெற்றுக் கொண்டார். சகோ. A.Y. நாஸர் அவர்களின் சென்னை நிறுவனத்தில் நூலாசிரியர் நூருத்தீன் அவர்கள் பல்லாண்டுகளுக்கு முன்னர் பணியாற்றியவராம்.
இரண்டாவது பிரதியை, நூலாசிரியர் நூருத்தீன் வெளியிட, பழனியப்பா ப்ரதர்ஸ் (பிரிண்டர்ஸ்) உரிமையாளர் செல்லப்பன் பெற்றுக் கொண்டார். இவரும் சகோ. நூருத்தீனின் முன்னாள் முதலாளியாம்.
மூன்றாவது பிரதியை, சத்தியமார்க்கம்.காம் இணைய இதழாசிரியர் ஜமீல் வெளியிட, நூலாசிரியருக்குத் "தோழர்கள்" தொகுப்பில் ஊக்கமும் ஒத்துழைப்பும் நல்கிவரும் அவரின் துணைவியார் சகோதரி ஸைபா பெற்றுக் கொண்டார்.
அடுத்து, சிறப்புரையாற்ற வந்த பேரா.அ.மார்க்ஸின் உரை, ஆழமானதாக, கருத்துச்செறிவுடனும் விவரணங்களுடனும் அமைந்திருந்தது. இயக்கமாகப் பரிணமித்த இஸ்லாம், தன் குறிக்கோள்களில் அடைந்த வெற்றி பற்றிய ஓர் ஆய்வுரையாகவும் எளிமையானவர்களையே முன்னிலைப்படுத்திய இஸ்லாம் குறித்த மதிப்புரையாகவும்  உலக இன்பத்தினைப் பொருட்படுத்தாமல், மறு உலக வெற்றி என்னும்  குறிக்கோளினை முன்னிறுத்தி மிக எளிமையாக நபித்தோழர்கள் வாழ்ந்திருந்தும், பின்வந்த சமுதாயத்தவர் பொருளாசையில் புதையுண்டு போனது பற்றிய நேர்ப்பார்வையாகவும் பேரா. அ. மார்க்ஸ் அவர்களின் ஆழிய உரை அமைந்திருந்தது.
நூலைப் பற்றியும், நூலாசிரியரின் பாட்டனாரும் தந்தையாரும் அரபுத்தமிழ் கோலோச்சிய அந்தக் காலத்தில் மார்க்கத்தினைப் பரப்புவதற்குத் தனித் தமிழினைக் கையாண்ட பாங்குமுதல் அவர்தம் அரசியல் நிலைப்பாடுகள், அவர்கள் இயங்கிய பல்வேறு தளங்கள் பற்றிய புள்ளி விபரங்கள் ஆகியவற்றை வெகு இயல்பாக எடுத்துரைத்தார் பேரா. மார்க்ஸ். பிறகு, பெரியார் முன்மொழிந்த இஸ்லாம்; அவருடன் இணக்கம் / பிணக்கம் கொண்ட இஸ்லாமியர்கள் என்று தனக்கேயுரிய பாணியில் அடுக்கடுக்காய் அடுக்கிகொண்டே இருக்க, அவர்மேல் பொறாமையும் பிற்பாடு பேரா. அப்துல்லாஹ் குறிப்பிட்டதைப்போல வெட்கமாகவும் இருந்தது.
அதன்பின்னர் சிறப்புரை ஆற்றிய முனைவர். பேரா. அப்துல்லாஹ், நிகழ்வின் சூழல் தமக்குப் பாடசாலை வகுப்பறையைப் போன்று தென்படுவதாகக் கூறினார். “இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து” என்று கூறிடுவதற்கு முன்பும் பின்பும், பல சந்தர்ப்பங்களில் இஸ்லாம் பற்றித் தந்தை பெரியாரின் சிலாகிப்பைப் பட்டியலிட்ட பேராசிரியர், குலத் தாழ்ச்சி உயர்ச்சி பாராத, மானுடப் படைப்பில், அடுக்குநிலை வேறுபாடு காட்டாத ஏகக்கடவுளை, சரியாக எடுத்துச் சொல்லியிருந்தால் ஏற்பதற்குப் பெரியாரும் இசைவுடன் இருந்தார் என்பதைச் சுட்டினார் பேராசிரியர். “நாம் தான் வாய்ப்பைத் தவறவிட்டோம்”. தமக்கு முன்னர் சிறப்புரையாற்றிய பேரா. அ.மார்க்ஸ் அள்ளித் தெளித்த புள்ளி விபரங்களைப் பற்றி வியப்புத் தெரிவித்த பேரா. அப்துல்லாஹ், "இவர் ஏன் இன்னும் இஸ்லாமியர் ஆகாமலிருக்கிறார்?" எனும் வினாவையும் முன்வைத்தார்.
சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த பேராசிரியர் அப்துல்லாஹ்வின் பேச்சு, நூலாசிரியர் நூருத்தீனின் பாட்டனார் பெரியவர் தாவூத்ஷா, தகப்பனார் என்.பி.அப்துல்ஜப்பார் ஆகியோரைப் பற்றிய நினைவலைகளையும் கொண்டிருந்தது.
சாதாரண கவுன்ஸிலர் பதவிக்கே மானம் மரியாதையைத் துறந்துவிடத் துணிகின்ற இந்தக் காலத்தில், ஆளுநர் பதவி வீடுதேடி வந்த போதும் அதைக் கண்டு ஓடி ஒதுங்கிய நபித்தோழர்களின் பற்றற்ற நிலை பற்றி எடுத்துரைத்தார் பேரா. அப்துல்லாஹ். அண்ணலின் தோழர் அபூதர்தா (ரலி) அவர்கள் வாழ்ந்த, நம் கற்பனைக்கு எட்டாத எளிய வாழ்க்கையை நிகழ்காலத்தோடு ஒப்பிட்டு, வழக்கம்போல் பல உளவியல் நுட்பங்களைத் தன்னகத்தே கொண்டிருந்த பேரா.அப்துல்லாஹ்வின் பேச்சில் ஏகத்துவக் கலிமாவைத் “தோழர்கள்” உணர்ந்ததைப் போன்றே முழு முஸ்லிம் சமுதாயமும் உணரவேண்டுமென்ற வேட்கை இருந்தது.
நூலாசிரியர் நூருத்தீனின் எழுத்து நடையைப் புகழ்ந்துவிட்டு, அந்தக் காலத்தில் வாழ்ந்த தோழர்களைப் பற்றி எழுதுவதைப் போலவே இஸ்லாத்தினை புரிந்து, அதன் மகத்துவம் உணர்ந்து அதன் மேல் விழும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறி அதற்காகப் பரிந்து பேசிக் கொண்டு நம் சமகாலத்தில் வெளியே ஒரு தோழர்கள் கூட்டமே உள்ளது அவர்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

"இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து" என்பது மட்டுமே பெரியார் இஸ்லாத்தினைப் பற்றிப் பேசிய ஒரே விஷயம் என்பது போல அனைவரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 1923லேயே கேரளத்தில் தங்கள்மேல் திணிக்கப்பட்ட இழிவு நீங்க ஒரே வழி பெரியாரின் அறிவுரையின்படி இஸ்லாத்திற்கு மதம் மாறுவதே என்று தீர்மானம் நிறைவேற்றி அன்றே 50 பேர் அளவுக்கு இஸ்லாத்திற்கு மாறியதைப் பற்றியும் இன்னும் பலப் பல நிகழ்வுகளில் இஸ்லாத்தைப் பற்றி பெரியார் பேசியதையும் குறிப்பிட்டார்.
அமர்வுத் தலைவர் அதிரை. அஹ்மது அவர்களின் கணீர்க்குரலில் சத்தியமார்க்கம் தளக் கவிஞர் சபீர் எழுதிய “தோழர்கள்” கவிதை வாசிக்கப்பட்டு வரவேற்புப் பெற்றது:
தோழர்கள்...
சத்தியமார்க்கம் தளம் பதிக்கும்
முத்திரைத் தடம்!
தொடராக வந்த
சுடர்!

போர்க் களங்களைப்
பூக் குளங்களாகக் கண்டு
வாட்களோடு வாழ்ந்த
ஆட்களின் சரிதை!

கொல்லத் துடித்த எதிரிகளை
ஓரிறைக் கொள்கையில்
அடக்கிய நபியை...
ஆயிரம் துண்டுகளாக அறுத்துப்போட்டாலும்
அரணாகக் காத்த
தோழர்கள் சரிதை!

நபித் தோழர்களைப் பற்றி
நம் தோழரின் நூல்!

சாமானிய மனிதர்களின்
ஈமானியத் தியாகங்கள்
இதன்
நாயகர்கள் நடிகர்களல்லர்
எனினும் நட்சத்திரங்கள்!

வரலாற்றுக் குறிப்புகள் வடிவில்
வாழ்க்கை நெறிகள்!

இந்நூல்...
படிப்பதற்கு மட்டுமல்ல
படிப்பினைக்கும்தான்!
அடுத்து,
1. பேரா. டாக்டர் அப்துல்லாஹ்
2. பேரா. அ. மார்க்ஸ்
3. பன்னூலாசிரியர் அதிரை அஹ்மது
4. "தோழர்கள்" நூலாசிரியர் நூருத்தீன்
5. "தோழர்கள்" நூலைக் குறுகிய காலத்தில் மிகச் சிறப்புடன் அச்சிட்டுத் தந்த, க்ராஃபிக் பார்க் ஸாதிக் பாட்சா

ஆகிய ஐவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் நால்வருக்கும் நினைவுப் பரிசுகளை, சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகி சகோ. முஹம்மது சர்தார் வழங்கினார். க்ராஃபிக் பார்க் சகோ. ஸாதிக் பாட்சாவுக்கு சத்தியமார்க்கம்.காம் இணைய இதழாசிரியர் ஜமீல் வழங்கினார்.

ஏற்புரை வழங்க வந்த நூலாசிரியர் நூருத்தீன், இஸ்லாம் நிலைபெற, எழுத்தையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டிருந்த அர்ப்பணிப்பாளர்களான தம் பாட்டனாரோடும் தந்தையாரோடும், ஓய்ந்த பொழுதில் 'ஏதோ எழுதுகின்ற' தம்மை ஒப்பிடக்கூடாது எனும் வேண்டுகோளுடன் தொடங்கினார். நபித் தோழர்களின் தியாகங்களை எடுத்துச் சொல்லும்போது இடையிடையே உணர்ச்சிப் பெருக்கெடுத்துக் கண்கலங்கி, நம்மையும் கலங்கவைத்தார். குறிப்பாக, இஸ்லாத்தைத் தம் வாழ்க்கை நெறியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டதற்காக நபித் தோழர் கப்பாப் பின் அல்-அரத் (ரலி) ஏற்றுக் கொண்ட கொடுமைகளைச் சொல்ல வரும்போது, பேசமுடியாமல் தொண்டை அடைக்க சற்று நேரம் நின்றுவிட்டார். இறுதியாக, தம் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். சத்தியமார்க்கம் குழுவினரைப் பாராட்டிப் பேசவும் தவறவில்லை. "தோழர்கள்" நூல் வாசிப்பதற்கு மட்டுமல்ல; வாசித்தவற்றை நம் வாழ்க்கையில் செயல்படுத்துவதற்காக என நாம் உறுதி கொள்ளவேண்டும் என்று கூறி முடித்தார்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, வலைஞர் ஜமாலுத்தீன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி, 'அமர்வுப் பிரார்த்தனை'யுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது, அல்ஹம்து லில்லாஹ்.

தோழர்கள் - முதல் பாகம் கிடைக்குமிடங்கள்:
Shajidha Book Center
248 Thambu Chetty Street
Mannady, Chennai - 600 001
Tel : +91 44-25224821, Mobile : +91 9840977758

Aysha Publications
78 Big Street
Triplicane, Chennai - 600 005
Tel : 91 44-43568745
Salamath Pathippagam
95, Linghi Chetty Street
Mannady, Chennai 600 001
Tel : +91-44-25211981; 42167320
Basharath Publishers
83, Angappa Naicken Street
Mannady, Chennai 600 001
Tel : +91-44-25225028; Mobile : +91-944424035

குமரியில் : அன்ஸார், மொபைல் : +91 9786220915
அதிரையில் : அப்துர் ரஹீம், மொபைல் : +91 9944824437
அமெரிக்காவில் : நூருத்தீன், மொபைல் +1 2062726936
தம்மாமில் : நஸ்ருத்தீன், மொபைல் : +966 50-3841699
துபையில் : இம்ரான் கரீம், மொபைல் : +971 55-9739408
குவைத்தில் : அப்துல் கரீம், மொபைல் : +965 97919697
கத்தரில் : முஹம்மத் சர்தார், மொபைல் : +974 55515648

கூடுதல் விபரங்களுக்கு admin@satyamargam.com எனும் மின் அஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்
(நிகழ்ச்சியின் காணொளி விரைவில் பதிவிடப்படும், இன்ஷா அல்லாஹ்).
தோழர்கள் முதலாம் பாகம் நூல் வெளியீடு - நிகழ்ச்சித் தொகுப்பு
Source : http://www.satyamargam.com/

இம்மானுவேல் சேகரன் யார்?

 Quantcast
Immanuel Sekharan
தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரான தியாகி இம்மானுவேல் சேகரன், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு அருகில் உள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தைஆசிரியரவேதநாயகம், தாயார் ஞானசுந்தரி. இவர்களது மூத்த மகனாக 9-10-1927ம் ஆண்டு பிறந்தார் இம்மானுவேல் சேகரன்.அடக்கு முறைக்குட்பட்ட சமூகத்தில் உதித்த காரணத்தினால் சிறுவயதிலேயே இன விடுதலை வேள்வியால் வளர்ந்த இவர் தனது 17வது வயதில் இந்திய தேசத்தை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள் மீது, கோபமும், கொந்தளிப்பும் கொண்டார்.. அதன் எதிரொலியாக 1942ம் ஆண்டு தனது தந்தை வேதநாயகத்தோடு விடுதலை வேள்வி வெறியோடும், வெள்ளையனே வெளியேறு போராட்ட களத்தில் குதித்தார்
  .இம்மானுவேல் சேகரன் எதிர்காலத்தில் தேசம் திரும்பி பார்க்கும் தலைவராக திருப்பு முனையை ஏற்படுத்தப்போகும் களம் அது என்று அறியவில்லை. இருந்தும் இந்திய தேசத்திற்காக களத்தில் குதித்தவர் 3 மாதம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சோதனைகளை சந்தித்தார். நாட்கள் உருண்டோடின. அடக்குமுறை சமூகத்தின் அவலத்தை அகற்றிட வேண்டும் என்ற லட்சிய வெறியோடு வலம் வந்தார். தனது 19வது வயதில் 20-5-1944ம் ஆண்டு அருப்புக்கோட்டையில் தலித்துக்களுக்கு மட்டும் உருவாக்கப்பட்ட இரட்டை டம்பளர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தமுறையை சமூகத்திலிருந்து அகற்றிட மாநாடு நடத்தி தனது சமூக மக்களிடம் மட்டுமின்றி பிற சமூக மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 
  
    1954ம் ஆண்டு தீண்டாமை ஒழிக்க வலியுறுத்தி மாநாடு ஒன்றினையும் நடத்திய அவர் தனது சமுதாய மக்கள் மத்தியில் அன்றைய காலகட்டத்தில் மாபெரும் சக்தியாக வலம் வரத்தொடங்கினார். இம்மானுவேல் சேகரனின் வளர்ச்சியும், அம்மக்களிடம் ஏற்பட்ட எழுச்சியும் பிற சமூகத்தை லேசாக உசுப்பிப் பார்க்க தொடங்கியது. 
   
    சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியவர் தியாகி இமானுவேல் சேகரன். தனது கல்லூரி வாழ்க்கையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். இந்திய சுதந்திரத்தை நம்பி தன் வாலிபப் பருவ கனவுகளுடன் இந்திய ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தேசத்திற்கான தன் சேவையை வழங்கச் சென்றார் 1950-ல் ராணுவத்திலிருந்து விடுப்பில் வந்த இவருக்கு தனது கற்பனையும் நிகழ்கால வாழ்க்கைமுறையும் வேறு வேறாக இருப்பது தெரிகிறது. இவரின் சமூக மக்களின் மீதான இன்னொரு சாதியினரின் ஒடுக்குமுறைகளைக் கண்டு தனது ராணுவ வேலையைத் துறந்தார். சொந்த அனுபவம் கேட்பதைக் காட்டிலும் பெரிதல்லவா! அதனால் “ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்” என்ற அமைப்பைத் தொடங்கினார். 
    

பைக் விபத்து - அசாருதீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்!



கடந்த ஞாயிறன்று ஏற்பட்ட இரு சக்கர  வாகன விபத்தில் சிக்கி ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் மகன் அயாசுத்தீன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

பைக்கை அதிக வேகத்தில் ஓட்டிச் சென்றதால் அயாசுதீனும் அசாருதீனின் சகோதரி மகன் அஜ்மல் உர் ரஹ்மானும் விபத்தில் சிக்கினர். விபத்து ஏற்பட்டு மருத்துவமனைக்கு  கொண்டு சென்ற சில மணி நேரங்களிலேயே அசாருதீனின் சகோதரி மகன் அஜ்மல் உர் ரஹ்மான் உயிரிழந்தார். ஐந்து நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்த அயாசுதீனும் இன்று காலை உயிரிழந்தார்.

தலை, வயிறு மற்றும் மார்பு பகிதியில் பலத்த அடி பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப் பட்டு வந்த ayaasutheenukku ரத்தக் கசிவு நிற்காததால் நேற்று முன் தினம் இடது சிறுநீரகம் அகற்றப்  பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது குறிப்பிடத் தக்கது.
Source : http://www.inneram.com/
-------------------------------------------------------------------

Monday, September 12, 2011

கொரியண்டர் சிக்கன்

தேவையான பொருட்கள் :
சிக்கன் : அரை கிலோ
பச்சைமிளகாய் : 8
தயிர் : 1 கப்
சீரகம் : ஒரு டீஸ்பூன்
தனியா : 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி & பூண்டு பேஸ்ட் : 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி பேஸ்ட் : 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் : தேவையான அளவு
மல்லி இலை : 2 கப்
கறிவேப்பிலை : தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* முதலில் மல்லி இலை, பச்சைமிளகாய், கறிவேப்பிலை மூன்றையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் சீரகத்தைப் போட்டு பொரிந்த பிறகு தனியாவை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்து போடவும்.
* பிறகு அரைத்த மல்லி இலை பேஸ்ட், இஞ்சி & பூண்டு பேஸ்ட், முந்திரி பேஸ்ட், தயிர் எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.
* இறுதியாக சிக்கனைப் போட்டு, உப்பு சேர்த்து பத்து நிமிடம் மூடிவைத்து சிம்மில் வேக விடவும்.
* சிக்கன் வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். சுவையான கொரியண்டர் சிக்கன் தயார்.
- இன்றைய ரெசிப்பி ஆலோசனை வழங்கியவர் : இனியவள்
Source : http://www.inneram.com/ ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Friday, September 9, 2011

நீடூர் சையது பற்றி திருச்சி சையது நூலில் ...

நீடூர் சையது பற்றி திருச்சி சையது நூலில் ...

Thursday, September 8, 2011

மக்கள் மனங்களைக் கவர – 4

மக்கள் மனங்களைக் கவர – 4:
- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்

இரகசியம் பேணுதல்:-

நட்பும், அன்பும் நீடிக்க நெருங்கிப் பழகுகின்றவர்களின் இரகசியங்களைப் பேணுவது அவசியமாகும். இரகசியங்களை அம்பலப்படுத்துபவன் மாணத்தை வாங்குபவன் என்று அறிந்துவிட்டால் யாரும் நெருங்கிப் பழக முன் வரமாட்டார்கள். தோழமையுடன், நட்புணர்வுடன் கதைக்க முற்படமாட்டார்கள். இத்தகையவர்கள் அனாவசியமாக அடுத்தவர்களின் பகைமையையும் வெறுப்பையும் சம்பாதிக்க நேரிடும்.

அப்துர் ரஹ்மான் அஸ்ஸலமீ எனும் அறிஞர் சகோதரர்களின் இரகசியங்களைப் பேணுவது என்பது நட்புறவின் ஒழுங்குகளில் உள்ளதாகும் என்று குறிப்பிடுகின்றார்.

இவ்வாறே மற்றும் சில அறிஞர்கள் நல்லவர்களின் உள்ளங்கள் இரகசியங்களின் புதைகுழிகள் என்று கூறுவர்.

இரகசியங்கள் சிலரிடம் சொல்லப்பட்டால் அவர்களது உள்ளங்கள் எனும் கப்ருகளுக்குள் அவை அடக்கப்பட்டுவிடும் மீண்டும் அவை வெளியே வராது என்று குறிப்பிடுகின்றனர்.

உமர்(ரழி) அவர்களது மகள் ஹப்ஸா(ث) அவர்களை உனைஸ் இப்னு குதாபா(ரழி) மணந்நிருந்தார். இவர் ஒரு பத்ர் ஸஹாபியாவார்.

இவர் மரணித்த பின்னர் உமர்(ரழி) அவர்கள், உஸ்மான்(ரழி) அவர்களைச் சந்தித்து “நீங்கள் விரும்பினால் ஹப்ஸாவை உங்களுக்கு மணமுடித்துத் தருகிறேன்!” என்று கூறினார்கள்.

உஸ்மான்(ரழி) அவர்கள் இது குறித்து யோசித்து முடிவு சொல்வதாகக் கூறி விட்டு சில நாட்களின் பின்னர் “தற்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை!” என்று கூறினார்கள்.

புனித மக்கா - நேரலை.

The Holy Makkah Live Telecast.

البث المباشر من الحرمين الشريفين
http://live.gph.gov.sa/index.htm


 மக்கா நேரலை - வலைத்தளங்களுக்காக
அன்பானவர்களே, புனித மக்காவை இணையத்தளம் மூலம் 24 மணிநேரம் நேரலை மூலம் நாம் கண்டு மகிழலாம்.                        


மக்கா நேரலை 
மக்கா நேரலை உங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே உள்ள html script யை உங்கள் வலைத்தளங்களில் சேர்த்து மற்றவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
 
மக்கா நேரலை உங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே உள்ள html script யை உங்கள் வலைத்தளங்களில் சேர்த்து மற்றவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.




உங்கள் வலைத்தளங்களுக்கு தகுந்தது போல் விடியோ அளவை சரிசெய்துக்கொள்ளுங்கள்.

 பாவங்களை அள்ளித்தரும் பொழுதுப்போக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு இந்த புனித மக்கா, மதீனா நேரலையை கண்டு அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்று நல்லடியார்களாக நம்மை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யலாமே.
 

Tuesday, September 6, 2011

திருச்சி சையது எழுதிய சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து, “அன்பைத் தேடி என்ற சிறுகதைத் தொகுப்பை ‘சுடர்வம்சம் தொண்டு நிறுவனம் துபாயில் வெளியிட்டது.

திருச்சி சையது
திருச்சி சையது என்ற புனைப்பெயரைக் கொண்ட எஸ்.சயது முஸ்தபா இளவயதில் திருச்சியில் நண்பர்களுடன் சேர்ந்து இளையநிலா, இலக்கியா, மல்லி¨, முத்துச்சிப்பி,போன்ற சிற்றிதழ்களை நடத்தியவர். பிரபல எழுத்தாளர்களைச் சந்தித்துப் பேட்டிகள் எடுத்துள்ளார். குமுதம், குங்குமம், விகடன், பாக்யா, தேவி, போன்ற முன்னணி இதழ்களில் இவரது சிறுகதைகள் 75-க்குமேல் பிரசுரமாகியுள்ளன இலக்கிய நண்பர்களின் சிறுகதைகளைத் தொகுத்து ‘சிறுகதை நிழலில் ....’ மற்றும் ‘சிறுகதை வானில் ....’ என்ற நூல்களை வெளியிட்டுள்ளார். எழுத்தாளர்கள்,விஞர்கள், தலைவர்கள், தொழிலதிபர்கள், மற்றும் பிரபலங்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான
சம்பவங்களைத் தொகுத்து இவர் தயாரித்த நூலை, “புகழ்பெற்றவர்களைப் பற்றி ஒரு ரசிகனின் பதிவுகள்” என்ற தலைப்பில் மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ளது. தாகூரின் ‘கபீர்தாஸர் கவிதைகள்’ ஆங்கில மொழிபெயர்ப்புக்கு ‘சாஹித்ய அகாதெமி’ விருது பெற்ற பேராசிரியர் எழில்முதல்வன் அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் ‘தமிழ் அலை
ஊடக உலகம்’ மூலம் இவரது முயற்சியில் தயாராகி வருகிறது. இலக்கிய நண்பர்களின் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து “நட்புக்கா....” என்ற நூலும்
விரைவில் வெளிவர உள்ளது. நினைவெல்லாம் நபிகள் நாயகமே!” (இறைத்தூதரின்வாழ்வில் நிகழ்வுகளும் நெகிழ்வுகளும்) என்ற நூலைத் தற்போது எழுதி வருகிறார். எம். ·பில். படிப்பிற்கா, புகழ்பெற்ற நாவலாசிரியரும் ‘தினத்தந்தி’ தலைமைச் செய்தி ஆசிரியருமான ஐ.சண்முகநாதன் அவர்களைப பற்றி “தமிழ்ச் சமுதாயத்திற்குப் பத்திரிகையாளர் சண்முகநாதனின் பங்களிப்பு -ரு ஆய்வு” என்ற தலைப்பில் அழகப்பா பல்கலைக் கழகத்தில் இவர் சமர்ப்பித்த ஆய்வுநூல் பேராசிரியர்களால் பாராட்டப்பட்டு முதல் மதிப்பெண் பெற்றது.
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் காசாளராக இவர்பணியாற்றியபோது அப்போதைய முதல்வர் திரு. அப்துல் சமது அவர்களின் பாராட்டைப் பெற்றவர்.
இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்டமும்,¡ரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் எம். ·பில். பட்டமும் பெற்றவர். தற்போது பெரியார் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். பிரபல இதழ்களில் இவர் எழுதிய சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து, “அன்பைத் தேடி ....”என்ற சிறுகதைத் தொகுப்பை ‘சுடர்வம்சம்’ தொண்டு நிறுவனம் துபாயில் வெளியிட்டது. இந்த நூலின் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகப் பயன்படுத்தப்பட்டது என்பது மகிழ்வான செய்தி! முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்,வியரசு வைரமுத்து, பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன்,
எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர்,
வல்லிக்கண்ணன், எழில்முதல்வன், ஹிமானா சையத், ஜே.எம். சாலி, ஜின்னாஹ் ஷரீபுத்தீன், ‘நர்கிஸ்’ ஆசிரியை அனீஸ் பாத்திமா, போன்ற பிரபலங்களின் பாராட்டைப் பெற்றவர் “அன்பைத் தேடி
திருச்சி சையது எழுதிய சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து, “அன்பைத் தேடி என்ற சிறுகதைத் தொகுப்பை ‘சுடர்வம்சம் தொண்டு நிறுவனம் துபாயில் வெளியிட்டது,

Monday, September 5, 2011

இறைவனிடம் கை ஏந்துங்கள்


இறைவனிடம் கை ஏந்துங்கள்

அவன் இல்லை என்று சொல்லுவது இல்லை

பொறுமையுடன் கேட்டு பாருங்கள்

அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை''
''இல்லை என்ற சொல்லும் மனம் இல்லாதவன்

ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன்

இன்னல் பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்

எண்ணங்களை இதயங்களை பார்க்கின்றவன்

இறைவனிடம் கை ஏந்துங்கள்.........''

''தேடும் நேயர் நெஞ்சினில் குடியிருப்பவன்

தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்

வாடும் இதயம் வளர்வதற்கு வழிவகுப்பவன்

வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்

அலை முழங்கும் கடல் அமைத்து அழுகு பார்ப்பவன்

அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்

தலை வணங்கி கேட்பவருக்கு தந்து மகிழ்பவன்

தரணி யெங்கும் நிறைந்து இருக்கும் மகா வல்லவன்''

'ஆசையுடன் கேட்பவருக்கு அள்ளித்தருபவன்

அள்ளல் துன்பம் துயரங்களை கிள்ளி எறிபவன்

பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்

பாவங்களை பார்வையினால் மாய்கின்றவன்

அள்ளல்படும் மாந்தர்களே அயராதீர்கள்

அல்லாவின் பேற் அருளை நம்பி நில்லுங்கள்

அவனிடத்தில் குறை அனைத்து சொல்லிக் காட்டுங்கள்

அன்புனோர்க்கு தருக என்று அழுது கேளுங்கள்...

இறைவனிடம் கையெந்துங்கள்

அவன் இல்லை என்று சொல்லுவதில்லை.......''

'இறைவனிடம் கை ஏந்துங்கள்

அவன் இல்லை என்று சொல்லுவது இல்லை

பொறுமையுடன் கேட்டு பாருங்கள்

அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை''

இறைவனிடம் கை ஏந்துங்கள்.... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத நாகூர் E M ஹனீஃபா அவர்கள் பாடிய பாடல்

அப்துல்லா ( எ ௦ ) பெரியார் தாசன் மதிமுகவில் இணைந்தார்!

திரைப் பட நடிகரும், முன்னாள் பேராசிரியருமான முனைவர் அப்துல்லாஹ் என்ற பெரியார் தாசன் தமது ஆதரவாளர்களுடன் நேற்று வைகோ முன்னிலையில் அவருக்கு சால்வை அணிவித்து மதிமுகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா , திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்
Source : http://www.inneram.com/

Sunday, September 4, 2011

கணவன்-மனைவி" உனக்குள் ஒரு சுரங்கம் -நீடூர். S.A.மன்சூர் அலியுடன் நேர்காணல்

கணவன்-மனைவி" உனக்குள் ஒரு சுரங்கம் -
நீடூர். S.A.மன்சூர் அலியுடன் நேர்காணல்.
நீடூர். S.A.மன்சூர் அலியுடன் நேர்காணல் - by: ஹாஜி.S.அக்பர் அலி

நீடூர் மன்சூர் அலி M.A., B.Ed., அவர்கள் சென்னை வண்டலூர் கிரஸன்ட் மேல் நிலைப்பள்ளியில் இஸ்லாமிய பாடவியல் (Islamic Studies) ஆசிரியராகவும், மாணவர் நல ஆலோசகராகவும், மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் பணியாற்றியவர்.

மன்சூர் அலி அவர்கள் தி கார்டன் அகாடமி (The Garden Academy)Please visit :http://www.thegardenacademy.in/) எனும் மனித வள மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் கல்வி நிறுவனங்களின் அழைப்புகளை ஏற்று, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மனித வள மேம்பாட்டுப் (Human Resource Development) பயிற்சி அளித்து வருகிறார்.

S.E.A. முஹம்மது அலி ஜின்னா
Jazakkallahu Hairan
நன்றி : http://niduronline.com/

Saturday, September 3, 2011

லா இலாஹ இல்லல்லாஹ் = LA ILAH...THERE IS NO GOD BUT ALLAH

When the darkness of ignorance is at its worst, the light of Allah pierces through the soul and gives it enlightenment. ... It is Allah who brings forth light from darkness, Life and activity from death, Spiritual enlightenment from ignorance & superstition. Banish fear, and trust His providence. No danger, then, from the outer world. No secret plottings from the perverted wills, No disturbance of your happiness or good, Can affect the fortress of your inmost soul.

THERE IS NO GOD BUT ALLAH
Allah, the Eternal, Absolute;
He begetteth not, nor is He begotten;
And there is none like unto Him.

Allah's Messenger (peace be upon him) said to Mu'adh: The key to Paradise is the testimony to the fact that there is no god but Allah.
"லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" வணங்குவதற்குத் தகுதியுடையவன் அல்லாஹ்வைத் தவிர வேரு யாரும் எதுவும் இல்லை

Say, "He is Allah , [who is] One,

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.

Allah , the Eternal Refuge.

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
He neither begets nor is born,

அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
Nor is there to Him any equivalent."

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
When the darkness of ignorance
is at its worst, the light of Allah
pierces through the soul and gives
it enlightenment.

... It is Allah who brings
forth light from darkness,
Life and activity from death,
Spiritual enlightenment from
ignorance & superstition.
Banish fear, and trust His providence.
No danger, then, from the outer world.
No secret plottings from the perverted wills,
No disturbance of your happiness or good,
Can affect the fortress of your inmost soul.

Thursday, September 1, 2011

துபாயில் பிரணவ் சவுதாரி நோன்பு வைத்து மன நிறைவடைகின்றார்

துபாயில் ஒரு முஸ்லீம் அல்லாத , புலம்பெயர்ந்த இந்திய பதினாறு வயது, பிரணவ்  சவுதாரி என்பவர் , ரமலான் புனித மாதத்தில்   தனது இஸ்லாமிய நண்பர்களுடன் நோன்பு வைத்து  மன நிறைவடைகின்றார் . தனது முஸ்லீம் நண்பர்கள் மிகவும் பாராட்டியும்   மரியாதையை காட்டியும் தன் மனதிற்கு மகிழ்வினை தந்தார்கள் என பெருமிதம்
கொள்கின்றார்.  

LinkWithin

Related Posts with Thumbnails