Wednesday, August 31, 2016

அறிவோம் இஸ்லாம் : விருந்தோம்பல்

பாத்திமா மைந்தன்

இஸ்லாம் கூறும் விருந்தோம்பல் கருத்துகள், எல்லோராலும் விரும்பக் கூடியவை என்பது மட்டுமல்ல; விழுமிய கருத்துகளாகும்.
'அல்லாஹ் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தினரை நன்றாக உபசரித்துக் கொள்ளட்டும்' என்பது நபிமொழியாகும்.
விருந்தினரை உபசரித்தல் என்பது பல பரந்த அர்த்தங்களைக் கொண்டது. விருந்தினர்களுக்கு உணவளிப்பது மட்டுமல்ல; அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதும் உபசரிப்பில் அடங்கும்.
உங்கள் வீட்டுக்கு விருந்தினர் வந்தால் முதலில் அவருக்கு 'ஸலாம்' கூறி வரவேற்று அவருக்காக இறைவனிடம் பிரார்த்தித்து, நலம் விசாரித்துக் கொள்ளுங்கள்.

Monday, August 29, 2016

நால்வகை ஹதீதுகள்

நால்வகை ஹதீதுகள்
ஒரு ஹதீதை ஏற்கலாமா ஏற்கக்கூடாதா என்ற பரிசீலனையில் ஹதீதுகள் இஸ்லாமிய அறிஞர்களால் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டன.

1. ஆதாரப்பூர்வமானவை - ஸஹீஹ்
2. இட்டுக்கட்டப்பட்டது - மவ்ளூவு
3. விடப்படுவதற்கு ஏற்றது - மத்ரூக்
4. பலவீனமானது - ளயீப்

முதல் வகை ஹதீதுகளை மட்டுமே முஸ்லிம்கள் ஏற்று நடக்க வேண்டும். மற்ற மூன்று வகை ஹதீதுகளையும் விட்டுவிடவேண்டும்.

Thursday, August 25, 2016

ஸ்காட்லாண்ட் காவல்துறையின் அங்கீகரிக்கப்பட்ட சீருடையில் ஒன்றாக “ஹிஜாப்” அறிவிப்பு!

By Abdul Gafoor

லண்டன்.

25.08.2016.

ஸ்காட்லாண்ட் நாட்டின் காவல்துறையால் அங்கீகரிக்கப்பட்ட சீருடையில் ஒன்றாக ஹிஜாப் உள்ளதாக அந்நாட்டின் காவல்துறை அறிவித்துள்ளது.

காவல்துறையில் பணி புரியும் பெண்கள் ஹிஜாப் அணிந்து வேலைக்கு செல்வது வழக்கமாக இருந்து வந்த நிலையில், தற்போது ஹிஜாபை ஒரு சீருடையாக அறிவித்துள்ளது ஸ்காட்லாண்ட் காவல்துறை.

இது குறித்து ஸ்காட்லாண்ட் காவல்துறையின் தலைமை அதிகாரி பில் கோர்ம்லி கூறுகையில், “எங்கள் காவல்துறையால் ஹிஜாப் ஒரு சீருடையாக அறிவிப்பதை நினைத்து மிகவும் பெருமை படுகிறேன். முஸ்லீம் மற்றும் அனைத்து மதத்தினரின் பங்கு ஸ்காட்லாண்ட் காவல்துறைக்கு மிகவும் அவசியம். மக்களுக்காக சேவை செய்யவதில் அனைத்து தரப்பு மக்களும் பங்கு கொள்ள வேண்டும். எங்களுடைய காவல்துறைக்கு முஸ்லீம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Wednesday, August 24, 2016

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு 26 ஆண்டுகள் நிறைவுற்றது ... ஒன்பதாம் பாகம் .../ அப்துல் கபூர்


இல்லம் நுழைந்தேன் ...
நினைவு நார்களில் ஞாபகப் பூக்களை தொடுக்கிறேன் ....

இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...
குமரி மாவட்ட திசையினை அடைந்து விசையினை குறைத்து ஓசையினை அமைதியாக்கிய ரயில் எம்மை இறக்கிடும் ஆசையினை உரைத்தது ...
குறைந்த பட்ச பரபரப்பு நிலவிய நாகர்கோயில் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறி நாங்கள் செல்லுமிடம் புதுத்தெரு என்று கூறி மகிழ்வுந்தில் ஏறி அமர்ந்தோம் ....
விடலை பருவத்தில் சுற்றித் திரிந்த அழகிய இடலை ஊரின் சுகமான தென்றல் எனது உடலை தழுவி நலம் விசாரித்தது ....
வீட்டில் கால்கள் பதித்ததும் எனது வாழ்க்கை ஏட்டில் திருப்பங்களும் விருப்பங்களும் நிறைந்த புதிய அத்தியாயங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் இறைவனின் அருட் பேனா தெளிவாய் எழுதப் போகிறது என்பதை சற்றும் அறியாதவனாய் ....
நானும் எனது நேசத்திற்குரிய தாய் மாமா மர்ஹூம் AVM சின்னப்பா அவர்களும் எங்களது இல்லத்தில் நுழைகிறோம் ....
முற்றும் ...

Monday, August 22, 2016

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு 26 ஆண்டுகள் நிறைவுற்றது .. எட்டாம் பாகம் ../ அப்துல் கபூர்

ரயில் பயணம் ...

எனது நினைவுத் தொட்டிலில் ஞாபகக் குழந்தையை தாலாட்டுகிறேன் ...

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு
26 ஆண்டுகள் நிறைவுற்றது .. எட்டாம் பாகம் ..

இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

ஏழு நாட்கள் பயணித்த கப்பல் அனுபவம் எனது மனத் திரையினை அலங்கரிக்க கடலின் கரையினை தொட்ட கப்பலிலிருந்து இறங்கியதும் எனது கால்கள் தரையினை தொட்டு நடக்கத் துவங்கியது .....

தாயகத்தோடு தங்க வந்த எங்களை துறைமுக சுங்க அதிகாரிகள் சோதனையிட்டு அகதிகளாய் நோக்கிய பார்வை எங்களின் மீது சகதிகளாய் விழுந்தது ....

நாங்கள் இனி எந்த நாட்டுக்கு சென்றாலும் இந்திய அரசாங்கத்திற்கு 10,000 ₹ செலுத்த வேண்டும் என்கிற Bond பத்திர முத்திரையினை பத்திரமாக எங்களது கடவுச் சீட்டுகளில் பதித்தனர்....

கேரளாவில் ஒரு வித்தியாச மணமகள்: திருமண 'மகரா'க புத்தகங்களை பெற்றார்!

பொதுவாக இஸ்லாமிய மக்களின் திருமணத்தின் போது மணமகளுக்கு, மணமகன் 'மகர்' எனப்படும் திருமணக்கொடை வழங்குவது வழக்கம். அது தங்கமாக இருக்கலாம் அல்லது பொருளாக இருக்கலாம். அன்பின் அடையாளமாக இது கருதப்படுகிறது. ஆனால் மகராக புத்தகங்களைக் கேட்டுப் பெற்றிருக்கிறார் , கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர்.  

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தை ஷாக்லா, ஹைதராபாத் பல்கலையில் 'பொலிட்டிக்கல் சயின்ஸ்' படித்தவர்.  இவருக்கும் ஆனீஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஷாக்லா, தனது வருங்கால கணவரிடம், மகராக தங்க நகையோ பணமோ கேட்கவில்லை. மாறாக 50 புத்தகங்களை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். 'இஸ்லாமிய பெண்ணிய இலக்கியம், இலக்கிய புத்தகங்கள், அறிவியல் மற்றும் அரசியல் சார்ந்த புத்தகங்கள் தேவை' என அனீஷிடம், லிஸ்டையும் எழுதியும் கொடுத்து விட்டார்.

Sunday, August 21, 2016

* * * முஸ்லிம் தீவிரவாதிகள் * * *


1.6 பில்லியன் முஸ்லிம் உலகில் வாழ்கிறார்கள். இவர்களுள் எத்தனை பேர் தீவிரவாதிகள்? விரல்விட்டு எண்ணிவிடலாம். சரி ஒரு கணக்குக்குள் கொண்டுவர முயல்வோம்.

ஒரு (1600) ஆயிரத்து அறுநூறு?

சரி போகட்டும் ஒரு (16,000) பதினாறு ஆயிரம் பேர்?

சரி அதுவும்போகட்டும் மிக மிக அதிகப்படியாக ஒரு (160,000) லட்சத்து அறுபதினாயிரம் பேர்?

1.6 பில்லியனில் 160,000 என்பது எத்தனை விழுக்காடு தெரியுமா?

0.01 % விழுக்காடு.

அதாவது பத்தாயிரம் பேருக்கு ஒருவன்.

Saturday, August 20, 2016

மதரஸாக்களின் வீழ்ச்சி! அவமானங்களை சுமக்கத் தயாராகும் முஸ்லிம்கள்!!


மதரஸாக்களின் வீழ்ச்சி! அவமானங்களை சுமக்கத் தயாராகும் முஸ்லிம்கள்!!

     CNM Saleem    

[  மார்க்கத்தின் வளர்ச்சியே எங்களின் உயிர் மூச்சு என்று வாழ்ந்த அன்றைய முதிர்ந்த உலமாக்களின் தியாகம் இவை அனைத்தையும் இன்றைய முஸ்லிம் சமூகம் வீணடித்து அவமானப்படுத்தி வருகிறது.

உயிர் வாழும் வரை வளர்த்தெடுக்க வேண்டியதும் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றப்பட வேண்டியதுமான இந்த அரபு கலாசாலைகளை முஸ்லிம்கள் தங்களின் அலட்சியத்தாலும், அறியாமையாலும், குறுகிய மனப்பான்மையினாலும் படிப்படியாக மூடு விழா நடத்தும் அநியாயத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

முஸ்லிம் சமூகம் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டு வருகிறது.

மன்னிக்க முடியாத இந்த வரலாற்றுப் பிழைக்கு பல உலமாக்களும் சமூக ஆர்வலர்களும், மாநில உலமா சபையயும் சாட்சியாக இருக்கின்றனர்.]

மதரஸாக்களின் வீழ்ச்சி! அவமானங்களை சுமக்கத் தயாராகும் முஸ்லிம்கள்!!

இந்திய முஸ்லிம்களின் வரலாற்றில் இந்த 21ஆம் நூற்றாண்டு ஒரு முக்கியமான காலகட்டம். இன்றைய முஸ்லிம்களின் வாழ்வு குறித்து வரலாற்று ஏடுகள் மிகவும் வித்தியாசமாகவும் விகாரமாகவும் பதிவாக்கும் என்று தெரிகிறது.

Friday, August 19, 2016

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு 26 ஆண்டுகள் நிறைவுற்றது ...ஏழாம் பாகம் ...

 Abdul Gafoor
இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ....

கப்பல் பயணம் ....

அனுபவ ஆற்றில் நினைவுத் தூண்டில்களை இடுகிறேன் ....

இஸ்லாமிய சரித்திரங்களில் இடம் பெற்ற ஈராக்கின் பாக்தாத் நகருக்கு முந்தைய கடல் நகரத்தை எங்களது பேருந்துகள் நெருங்குகிறது ....

அசரா வண்ணம் அலை எழுப்பும் பசரா துறைமுக நுழைவு வாயிலில் சோகத்தின் உறைமுக பயணிகளாகிய நாங்கள் மெதுவாய் இறங்குகிறோம் ....

முகலாய சாம்ராஜ்ய சக்கரவர்த்திகளில் ஒருவரின் பெயரை தாங்கும் அக்பர் கப்பல் எங்களை தாங்கும் ஏற்பாடுகளில் பரபரப்பாய் நிற்கிறது ...

ராணுவ தேசத்தின் கடலில் நங்கூரமிட்டு கம்பீரமாக அக்பர் கப்பல் மிதக்க ...
எனது மனக் கடலில் ஏழு ஆண்டு கால (10.10.1983 - 23.10.1990) அனுபவக் கப்பல் ஞாபக நங்கூரமிட்டு மிதக்க துவங்குகிறது ....

Thursday, August 18, 2016

உலக வழமையும் என்றாகிப் போன இப்பூவுலகு......


Raheemullah Mohamed Vavar
எங்கும் வெளிச்சக் கற்றை,
ஆசைதீர இழுத்துப் பிடித்து அளவின்றி சுவாசிக்கும் அன்லிமிடெட் ஆக்ஸிஜன்,
எல்லா சப்தங்களும் எங்கோ ஒரு புள்ளியில் கலந்து எந்நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கும் உலக இயக்கத்தின் பேரிரிச்சல்,
கட்டுப்பாடுகளும் கடமைகளும் இருந்தாலும்
எப்போதுமே தடையின்றி தொடரும்
கட்டுப்பாடற்ற மனப்போக்கும்
மடமைகளை கைகொள்ளும் ஈஸி லைஃப்
உலக வழமையும் என்றாகிப் போன இப்பூவுலகு......

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு 26 ஆண்டுகள் நிறைவுற்றது ...ஆறாம் பாகம் ../ விடை பெற்ற தருணங்கள் ... நினைவு அருவிகளில் நனைகிறேன் ....

Abdul Gafoor

இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் ....
குவைத்தை ஆக்கிரமித்த ஈராக்கின் அக்கிரமத்தை பன்னாடுகள் கண்டனம் தெரிவித்தும் படைகளை விலக்க இயலாது என ஆக்ரோஷமாய் கர்ஜித்த சதாம் உசைனின் பிடிவாதம் எஞ்சிய எங்களை அஞ்சிய சூழலுக்கு தள்ளி மிஞ்சிய நம்பிக்கையை மங்கச் செய்தது ....
குவைத் பொது மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணையும் சாலைகளில் சதாமின் சுவரொட்டிகளை கிழித்த குவைத்திகளையும் ராணுவத் துப்பாக்கிகள் துளைத்த செய்திகள் எமது காதுகளை துளைத்தது ....
மூன்று தடவைகள் சதாம் உசைனைப் போல் வேடமிட்ட மூவர் குவைத் ராணுவ முகாம்களை வட்டமிட்ட செய்திகளும் அதில் ஒருவர் அசல் சதாம் என்கிற தகவலும் அவ்வப்போது வானொலிகள் வாயிலாக எங்களுக்கு கிட்டியது ...

Wednesday, August 17, 2016

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு 26 ஆண்டுகள் நினைவு ...ஐந்தாம் பாகம் .../ ஜோர்டானில் அவதி நினைவுக் காற்றை சுவாசிக்கிறேன் ...


Abdul Gafoor

ஜோர்டானில் அவதி
நினைவுக் காற்றை சுவாசிக்கிறேன் ...
--------------------------

இனியவர்களே 
அஸ்ஸலாமு அலைக்கும் ...
எங்கள் வீட்டு மதிலேறி குதித்த ராணுவ வீரர்கள் இருவரும் என்னை நெருங்கினர் ...
ஈராக்கின் மரபு சுமந்து அரபு மொழியில் என்னிடம் உரத்த குரலில் நீ எந்த நாட்டுக்காரன் என்று கேட்டதும் நான் இந்தியன் என்றேன் ...
உங்கள் வீட்டினுள் குவைத்தியர்களை ஒளித்து வைத்திருக்கிறாயா அவர்களை நாங்கள் சுட வேண்டுமென்று என்னிடம் கேள்விகள் கேட்டு என்னை குடைந்த நிலையில் நானும் உடைந்த அரபியில் இல்லை இங்கே யாருமில்லை என்றேன் ...
உறுதியான தேகம் கொண்ட வீரர்களுக்கு என் பதில் சந்தேகம் எழுப்ப எங்கள் வளாகத்தின் பூட்டப்பட்டிருந்த அரபி வீட்டின் மதில் மீதேறி குதித்து தேடினர் அங்கு யாருமில்லாததால் எங்கள் அறைக்குள் நுழைந்து கட்டில்களுக்கு அடியில் எட்டிப் பார்த்து அங்கும் யாருமில்லை என்பதால் என்னை முறைத்துப் பார்த்து சமையலறைக்குள் நுழைந்து குளிர் சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தனர் ....

ஒரு கிராமவாசியின் கேள்விகளும் நபிபெருமானாரின் பதில்களும்


ஒரு கிராமவாசியின் கேள்விகளும் நபிபெருமானாரின் பதில்களும்

*

நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்காரராகிவிடுவீர்கள்.

*

நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன?


ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்

*

Tuesday, August 16, 2016

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு 26 ஆண்டுகள் நிறைவு ...நான்காம் பாகம் .'../ திடுக்கிட வைத்த சம்பவம் நினைவு நாற்காலியில் அமருகிறேன் ...

Abdul Gafoor

இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் ...

ஈராக்கின் மற்றுமொரு நட்பு நாடான ஜோர்டானிலிருந்து கனரக வாகனங்களில் பதப்படுத்தி குளிரூட்டப்பட்ட இறைச்சிகளும் கோழிகளும் காய்காற்களும் தரை மார்க்கமாக ஈராக் வழியாக குவைத்தின் பாலைவனப் பகுதியின் கரை இறங்கி விற்பனைக்கு விரிக்கப்பட்டிருக்கும் ....

எனது மாமா AVM சின்னப்பா அவர்களின் நட்பு வட்டத்தில் இருக்கைகளிட்டு அமர்ந்திருக்கும் நண்பர்களோடு நமதூர் பவானி வீட்டு யூசுப் அண்ணனும் இடம் பிடித்திருந்தவர் ....
இவர் வைத்திருந்த சிறிய காரில் இவரோடு நாங்கள் சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் சால்மியா என்னும் ஊருக்கு உணவுப் பொருட்கள் வாங்க பயணிப்போம் ...

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு 26 ஆண்டுகள் நிறைவு ..../ ராணுவ ஆக்கிரமிப்பு மூன்றாம் பாகம் ....

Abdul Gafoor
 
இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ....

எனது நினைவுச் சக்கரங்கள் சுழல்கிறது ...

குவைத் தேசத்தை தனது மடியினில் அமர்த்தி உச்சி முகர்ந்து முத்தமிடும் நட்பு தேசமான சவுதி அரேபியாவையும் ஆக்கிரமிக்க தமது படைகளுக்கு கனத்த குரலில் சதாம் உசைன் உத்தரவு பிறப்பித்து சவுதி மன்னரின் தூக்கத்தை கலைத்து துக்கத்தை தருகிறார் ....

பஹாஹீல் நகரத்தில் நுழைந்த ராணுவத்தை காண நாங்கள் வசிக்கும் எங்கள் வீட்டிலிருந்து 50 மீட்டர் தூரமிருக்கும் முக்கிய சாலைக்கு சென்றதும் பீரங்கி வண்டிகளில் ராணுவப் படைகள் ஆணவ நடைகள் போட்டு சவுதிக்கு செல்லும் சாலைகளில் அணிவகுக்கும் காட்சிகள் எங்களை பிரமிக்க வைத்தது ....

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு 26 ஆண்டுகள் நிறைவு .... இரண்டாம் பாகம்

Abdul Gafoor


இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

என்னை தீண்டும் நினைவுகளோடு மீண்டும்
உங்களோடு கைகுலுக்கி அமருகிறேன் ....

வைராக்கிய குணமுள்ள ஈராக்கிய அதிபர் சதாம் உசைன் அவர்களின் உருளும் கரு விழிகள் பாய்ச்சும் கம்பீரப் பார்வையால் நாவினில் தவழ்ந்து உதடுகளில் சுருளும் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு ஈராக் ராணுவம் ஆக்ரோஷமாக செயல்படத் துவங்கியது ....

குவைத் மன்னரின் அரண்மனை ... பாராளுமன்றம் .... தபால் துறை .... தகவல் தொடர்பு இலாகா ....தேசிய வங்கிகள் .... தொலைக் காட்சி நிலையம் .... அரசு மருத்துவமனைகள் .... அரசு பள்ளிக்கூடங்கள் .... மத்திய சிறைச்சாலை போன்ற அரசு நிர்வாகங்கள் ஒவ்வொன்றாக முற்றுகையிட்டு தமது கட்டுப்பாட்டுக்குள் இயங்க வைத்தது ....

பத்தாண்டுகளுக்கு மேலாக ஈரான் ஈராக் போரில் தொழில் வளங்களையும் பொருளாதரத்தையும் இழந்து தவிக்கும் ஈராக்கில் வறுமையும் பஞ்சமும் ஜமுக்காளங்களை விரிந்து அசையாமல் அமர்ந்து கொண்டது ....

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு 26 ஆண்டு நிறைவு ....

Abdul Gafoor

  நான் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்திட உங்களோடு கைகுலுக்கி அமருகிறேன் ....

இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ....

இறைவன் பொருத்திய சிறகுகளை நிரந்தரமாய் விரித்து மகிழ்வோடு சிரித்து சோகமாய் அழுது இன்பத்தையும் துன்பத்தையும் சுமந்து சுதந்தரமாய் பறந்து கொண்டிருக்கும் காலமெனும் ராட்சசப் பறவை நான் இதயத்தில் கட்டி வைத்திருக்கும் நினைவு ஊஞ்சலை மெதுவாய் ஆட்டிச் செல்கிறது ....

குவைத் தேசத்தின் இரண்டாவது பெரு நகரமான பஹாஹீல் எனும் வர்த்தக நகரத்தில் ஸெனஹியா என்கிற ஊரில் நானும் நேசத்திற்குரிய எனது தாய் மாமா மர்ஹூம் AVM சின்னப்பா அவர்களும் (குவைத் மின்சாரம் மற்றும் குடிநீர் அரசுத் துறையில் பணிபுரிந்தவர்) மற்றோரும் சுகமாய் வசித்து வருகிறோம் .....

Friday, August 12, 2016

பகுத்தறிவு தீர்ப்பளிக்கிறது

                                                  
நாம் வாழும் இந்த பூமியில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வாழ்ந்து மடிந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. இவர்களிடையே நிறத்தால், குணத்தால், அறிவால், மொழியால், உடல் அமைப்பால் இப்படி எத்தனையோ வித்தியாசங்கள் காணப்படுகின்றன. எவ்வளவுதான் வித்தியாசங்களையும் வேறுபாடுகளையும் மனிதர்கள் தமக்குள் ஏற்படுத்திக் கொண்டாலும் இவர்கள் எல்லோருடைய மூலப்பொருளும் ஒன்று தான். அந்த மூலப்பொருளான இந்திரியத்தில் எந்தவித வேறுபாட்டையும் காணமுடியாது. எல்லோருடைய இரத்தமும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. மனிதன் என்ற வட்டத்திற்குள் தான் எல்லோரும் இருக்கிறார்கள்.


மனிதன் தோன்றிய வரலாற்றை தலைமுறை தலைமுறையாக ஆராய்ந்து பார்த்தால் கடைசியாக ஒரே ஒரு மனிதனைத்தான் போய் அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த அடிப்படையில் பார்க்கும் போது அகில உலகத்திலுள்ள அத்தனை மனிதர்களும் ஒரே ஒரு தாய் தந்தையிலிருந்து வந்தவர்கள் தான் என்பதை சாதாரண அறிவுடையவர்களும் உணர முடியும்.

Thursday, August 4, 2016

சாப்பிட்ட பின்னர் பல்லுக்குள் உணவுப் பொருள் மாட்டிக் கொண்டால் ...

                                                   படஉதவிsource
பல்லுக்கு இடையே உணவுப் பொருள் மாட்டிக் கொண்டால் அதனை எடுக்க பல் குச்சியினை பயன்படுத்தக் கூடாது -- டாக்டர் சிராஜுதீன்
சாப்பிட்ட பின்னர் பல்லுக்குள் உணவுப் பொருள் மாட்டிக் கொண்டால் அதனை எடுக்க பல்குச்சியினை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : டாக்டர் சிராஜுதீன்

டாக்டர் சிராஜுதீன், திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் தற்போது சார்ஜா ரோலா பகுதியில் உள்ள அல் சுரூக் கிளினிக்கில் பல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த கிளினிக் சார்ஜா ரோலாவில் இருந்து துபாய் செல்லும் சாலையில் ஓரியண்ட் டிராவல்ஸ் மேல் முதல் தளத்தில் அமைந்துள்ளது.

இவர் சென்னை பாரத் பல்கலைக்கழகத்தில் பி.டி.எஸ். பட்டத்தை கடந்த 20009-ஆம் ஆண்டு முடித்தார். அதனைத் தொடர்ந்து அவர் சார்ஜாவில் உள்ள மருத்துவ நிலையத்தில் 2013-ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார்.

அவரை முதுகுளத்தூர்.காம் இணையத்தள ஆசிரியர் முதுவை ஹிதாயத் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது :

பல்லில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க அடிக்கடி டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக பல்லில் சொத்தை ஏற்படும் போது ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உடனே டாக்டரிடம் சென்று காண்பிக்க வேண்டும். இல்லையெனில் அந்த பிரச்சனை பெரிதாகி பல்லை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக நேரிடும்.

இறைவன் உன்னை பொருத்திக்கொள்ளட்டும் ..

  துபாயில் தரையிரங்கும்போது விபத்துக்குள்ளான எமிரேட்ஸ் விமானத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு பல உயிர்களைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர் காயமடைந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

“விமானம் விபத்துகுள்ளாகும் போது பயணிகளை காப்பாற்ற மீட்பு பணியில் ஈடுபட்ட இளம் தீயணைப்பு வீரர் தனது உயிரை இழந்துள்ளார். அவரின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திப்போம்” என துபாய் பிரதமர் முகமது பின் ரஷித் அல் மக்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்பூர்வமாக பதிவிட்டுள்ளார். 

Source

துபாய் விமான விபத்தில் பல உயிர்களை காப்பாற்றிய தீயணைப்பு வீரர் மரணம்

 ------------------------------------------------------------------------

 பிறர் உயிர் காக்க
தன்னுயிர் ஈந்த தலைமகனே
பல குடும்பங்கள் தளிர்க்க
தன் குடும்பம் மறந்த குலமகனே

அறியாத உன்னை அறிகிறோம்
யாவரும்
உன் சேவையை பற்றியே பேசுகிறோம்
யாவரும்

விமானம் கொண்டது உயிர் பறிக்கும்
நெருப்பது
உன் மனம் கொண்டது அவ்வுயிர் காக்கும்
நெருப்பது

LinkWithin

Related Posts with Thumbnails