Saturday, June 30, 2012

அதிக மார்க்க அறிவு - அதிக பெண்களுக்கான உரிமைகள்.

அஸ்ஸலாமு அலைக்கும், 
உலகின் பாரம்பரியமிக்க ஆய்வு நிறுவனமான Gallup, அரேபிய புரட்சிக்கு பின்னரான அந்நாடுகளின் பெண்களின் நிலை குறித்த ஆய்வு அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது (எகிப்து, லிபியா, துனிசியா உள்ளிட்ட ஆறு அரேபிய நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது). அதிலிருந்து சில தகவல்கள்...

1. தங்கள் நாட்டு சட்டத்தில் ஷரியாவின் பங்கு இருக்கவேண்டும் என்று கூறும் அரேபிய பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை ஒத்தே இருக்கின்றது...

2. புரட்சி நடந்த நாடுகளின் அறுதி பெரும்பான்மையான மக்கள், தங்கள் நாட்டு சட்டத்திட்டங்கள் ஷரியாவை ஒத்தே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 

3. அதிக மார்க்க அறிவு பெற்றுள்ள ஆண்கள், பெண்களுக்கான உரிமைகளை அதிகளவில் கொடுப்பவர்களாக உள்ளனர். 

4. இஸ்லாமிய கட்சிகளின் ஆதரவாளர்கள், பெண்களுக்கான உரிமைகளை அதிகளவில் ஆதரிப்பவர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை மதசார்பற்ற கட்சிகளுடன் ஒப்பிடுகையில் சமமே. 

5. மார்க்கப்பற்று மிகுந்த அரேபிய பெண்கள் அதிக மரியாதை கொடுக்கப்படுபவர்களாகவும், தங்கள் வாழ்வில் அதிக மகிழ்வுடனும் இருக்கின்றனர். 

24 பக்கங்கள் கொண்ட Gallup-இன் அறிக்கையை முழுமையாக படிக்க அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளவும்... http://www.gallup.com/poll/155306/arab-uprisings-women-rights-religion-rebuilding.aspx

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Thursday, June 28, 2012

வீண் விரயம் வேண்டாம்!

வீண் விரயம் வேண்டாம்!:


  

நம்மிடத்தில், நமக்குள், நம்மைச் சுற்றி உள்ள வளங்கள் யாவும் வல்ல ரஹ்மான் நமக்களித்துள்ள மகத்தான, நிகரற்ற, விலைமதிக்க முடியாத அருட்கொடைகள். அவை எமக்குச் சொந்தமானவை அல்லது பொதுவாக எல்லோரினதும் பாவனைக்குரியவை அல்லது இலவசமாக கிடைப்பவை என்ற ஏதோ ஓர் அடிப்படையில் அவற்றை நாம் நினைத்தவாறு பயன்படுத்துகிறோம்.

அனுபவிக்கிறோம். அளவாக தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டுமென்ற உணர்வு, சிந்தனை பொதுவாக நம் மத்தியில் இல்லாமல் போய்க்கொண்டேயிருக்கிறது. இது ஒரு புறமிருக்க நாமென்ன நல்ல காரியத்துக்குத்தானே பயன்படுத்துகின்றோம். இதற்கும் அளவு வரம்பு பார்க்க வேண்டுமா எனக் கேட்போரும் இல்லாமலில்லை.

வளங்களைப் பயன்படுத்துவது தேவைகளைப் பொறுத்து அமைய வேண்டும். மனிதத் தேவைகளை அத்தியாவசியமானவை, ஆடம்பரமானவை என இரண்டாகக் கூறுபடுத்தலாம். அத்தியாவசியமும் ஆடம்பரமும் ஆள், இடம், சந்தர்ப்பம் ஆகியவற்றைப் பொறுத்து வித்தியாசப்படுபவை. ஒருவருக்கு ஆடம்பரமான ஒன்று இன்னுமொருவருக்கு அத்தியாவசியமானதாக இருக்கலாம்.

அதுபோல ஒருவருக்கு ஒரு கட்டத்தில் அத்தியவாசியமானதாக இருந்த ஒன்று வேறொரு கட்டத்தில் அவருக்கு ஆடம்பரமானதாக இருக்கலாம். தனது தேவை அத்தியாவசியமானதா அல்லது ஆடம்பரமானதா என்பதற்கு அவரவர் அவரவரின் உள்ளத்தில் தீர்ப்பு பெற்றுக்கொள்ள வேண்டும்.

பொதுவாகச் சொல்வதாயின் ஓர் அருட்கொடையை தேவையில்லாத ஒன்றுக்கு பயன்படுத்துவது, தேவையான ஒன்றுக்கு தேவைக்கதிகமாக பயன்படுத்துவது இரண்டுமே கூடாது. இஸ்லாம் இதனைக் கண்டிப்பாக தடைசெய்துள்ளது.

Saturday, June 23, 2012

படிக்கட்டுகள்... ஏற்றம் - 15

இறைவழிபாடு Vs  பணம் சம்பாதித்தல்

மனிதனின் சறுக்கல் அவன் இந்த உலகத்தில் எதை முக்கியம் என்று நினைக்கிறானோ அதில்தான் பெரும்பாலும் அமைந்திருக்கிறது. ஒரு பாக்டீரியா பேரன் பேத்தியோடு குடியிருக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு ஏன் வயிற்றை இப்படி வலிக்கிறது எனும் ஒரு நோயாளியின் கேள்விபோல்தான் , பிரச்சினைகளை சொந்தமாக தேடி தன் வாழ்க்கையில் பிரச்சினைகளை அதிகமாக்கிவிட்டு பிறகு "எனக்கு ஏன் இறைவன் இப்படி சோதிக்கிறான்" என்று புலம்புவது ஒரு ரகம்.

வாழ்க்கையில் முன்னேறுவது என்பது முக்கியம் என நினைக்கும் சூடு சுரணை  உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு காலம் வரும் அதில் பணம் வசப்படும், வாக்குக்கு மரியாதை இருக்கும் அப்போதுதான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தன்னை சுற்றி ஒரு ஒளிவட்டம் வந்து விட்டதாக கற்பனை செய்து கொண்டு தான் சொல்வதெல்லாம் சரி, தான் செய்வதெல்லாம் சரி என்று ஆட்டம் போட்டால் சறுக்கும் காலம் வந்தால் முதலில் ப்ரூட்டஸ்களை சந்திக்க தயாராக வேண்டியதுதான். அதற்கு பிறகு வளர்த்த கிடா, நெஞ்சில் பாய்ந்துவிட்டது என புலம்பி புண்ணியமில்லை. [ கிடா நெஞ்சில பாயும் அளவுக்கு அவ்வளவு குள்ளமாவா இருக்கீங்கனு யாரும் கேட்டமாதிரி தெரியவில்லை]

இன்றைய நவீன சூழல் மனிதனை தடம்புரளச்செய்யும் எல்லா வசதிகளையும் அவன் கையில் வந்து கொடுத்து விட்டு போயிருக்கிறது.

Wednesday, June 20, 2012

நீங்கதான் பொறுப்பு .

நீங்கதான்  பொறுப்பு .
நீங்கள் விரும்பும் நல்லதை உங்கள் சகோதரனுக்கும் கொடுக்க வேண்டியது உங்கள் கடமை . அறிவு ஆற்றல் அனைத்தும்  இருந்தும் அதனை நமக்குள் அடக்கி வைத்தல் தவறு. சிந்தனை செயல்படுத்தப்பட்டு அதனை மற்றவர்க்கும் ஏற்றி வைப்பது உங்கள் கடமையல்லவா!

  குடிப்பழக்கம் பிறக்கும்போதே வருவதில்லை. சூழ்நிலை, சரியற்ற நட்பு, தூண்டுதல் மற்ற பல காரணங்களால் வருவது. அதனால்  ஒரு மனிதன் வியாதியை வரவழைத்துக்  கொள்கின்றான் மற்றும் சமுதாயத்தில் தாழ்தப்பட்டவனாக், மதிக்கப்படாதவனாக ஆக்கப்படுகின்றான் குடிப்பவர் அனைவரும் கெட்டவர் என்ற  முடிவு செய்து அவனை ஒதுக்காமல் நல்லோர் அவனுக்கு நல்வழியில்  உற்சாகம் கொடுத்து அவனையும் தன நண்பனாக,உறவினனாக  ஏற்றுக் கொண்டு இறை வழியில் அவன் மனதை திருப்பி தொழ அழைத்துச் செல்லுங்கள் அவனிடத்து மாற்றம் ஏற்படுவதனை காணமுடியும். நமக்கே நம்மீது நம்பிக்கை இல்லை .அவனோடு சேர்ந்தால் நாமும் கெட்டு விடுவோம் அத்துடம் சமுதாயம் நம்மையும் மதிக்காது என்ற  தாழ்வான எண்ணம்.போலி வாழ்வு. மற்றவருக்காக போடும் வேடம். இது ஒழிய வேண்டும். அடுத்த  வீடு எறிய  நம்வீடு பாதுகாப்பில் இல்லை. நல்லதை நாடுவோம்.அல்லதை நீக்க முயல்வோம். பிறப்பது நிச்சயமில்லை இறப்பது உறுதி. அதற்குள் நாம் நமது சேவையை மக்களுக்கு செய்து இறைவனது அருள் பெற்றாக வேண்டும் .நம்மோடு நம் சகோதரனையும் சுவனத்திற்கு அழைத்துச் செல்ல பாடுபட வேண்டும் . நம்பிக்கையே வாழ்கை



இஸ்லாமிய மேற்கோள்கள் அழகிய படங்களுடன் Islamic Quotes & Other

இஸ்லாமிய மேற்கோள்கள் அழகிய படங்களுடன் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அதிகமாக இணையங்களில் காணப்படுகின்றன. அவைகளில் சிலவற்றினை இங்கே உங்களுக்கு தருவதில் மகிழ்வடைகின்றேன்



Monday, June 18, 2012

நல்லவனின் முடிவும் தீயவனின் முடிவும் ஒன்று தானா?

(நம்பிக்கையில் உறுதி)

மரணத்துக்குப் பின்பு வரும் வாழ்க்கையைப் பொறுத்தவரை, உலகில் மூன்று கோட்பாடுகள் நிலவுகின்றன.

1. மரணத்துக்குப் பின்பு வாழ்க்கை என்று ஒன்று கிடையாது. மரணத்தோடு எல்லாம் முடிந்து விடுகிறது என்பது ஒரு கோட்பாடு.

2. மனிதன் செய்கின்ற நன்மைகள், பாவங்களைப் பொறுத்து – மீண்டும் மீண்டும் அவன் பிறவி எடுக்கின்றான் என்பது மற்றொரு கோட்பாடு.

3. ‘உலக முடிவு நாள்’ அன்று – மரணித்து விட்ட எல்லார்க்கும் உயிர் கொடுத்து எழுப்பப் பட்டு, விசாரிக்கப் பட்டு – சுவர்க்கத்தையோ, நரகத்தையோ அடைந்து அங்கே நிரந்தரமாக மனிதன் தங்கி விடுகிறான் என்பது இன்னும் ஒரு கோட்பாடு.

Sunday, June 17, 2012

விஞ்ஞானம் விழித்திடுமுன் விந்தை நபியின் விண்வெளிப்பயணம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

-K.L.M. இப்ராஹீம் மதனீ
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
இறைமொழியும் நபிமொழியும்
தன் அடியாரை (கஃபாவாகிய) சிறப்பு பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகவும் பரிசுத்தமானவன், (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையெதென்றால் நாம் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்திருக்கின்றோம், நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப் பதற்காகவே (அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக உமது இரட்சகனாகிய அவனே செவியேற்கிறவன் பார்க்கிறவன். (அல் குர்ஆன் – 17.1)

Wednesday, June 13, 2012

இறைவன் நம் பக்கம் இருக்கும்போது நாம் ஏன் மற்றவருக்கு பயப்பட வேண்டும்!. If Allah is with us who can be against us!

 இறைவன் நம் பக்கம் இருக்கும்போது நாம் ஏன் மற்றவருக்கு பயப்பட வேண்டும்!.
If Allah is with us who can be against us!


சர்வாதிகாரம் இஸ்லாத்தில்  கிடையாது. நினைத்தவாறு நடக்கும் ஒரு அரசினை இஸ்லாம் அனுமதிக்கவில்லை

  இறைவனால் அருளப்பட்ட  மார்க்கம் இஸ்லாம். அது ராணுவ ஆட்சியை
ஆதரிக்கவில்லை. அதுபோல்  இஸ்லாத்தில் யாரையும் கட்டாயப் படுத்தி இணைக்க வேண்டிய அவசியமில்லை மற்றும் அது அனுமதிக்கவுமில்லை

    "(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்." (2:256)

  யாரும் இஸ்லாத்திற்கு வர விரும்பினால் அவர்கள் சுய சிந்தனையோடு அவர்கள் விரும்பியே இஸ்லாத்திற்குள் இணைவதனை இஸ்லாம் விரும்புவதுடன் அதுதான் இஸ்லாமிய சட்டமாக உள்ளது. யாரையும் கட்டாயப்படுத்தி முஸ்லிமாக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் கொள்கையாக இருக்கும் நிலையில் ஒரு முஸ்லீம் இராணுவ பலத்தைக் கொண்டு சர்வாதிகாரியாக இருந்து தனது ஆட்சியை திணிக்க உரிமை கிடையாது..

    முஹம்மது நபிக்குப் பிறகு இஸ்லாத்தில் வந்த நான்கு கலிபாக்களும் மக்களால்,சஹாபாக்களால்   தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அவர்கள் பரவலான ஆதரவும் மற்றும் மரியாதையும்  பெற்று ஆட்சி செய்து மகிழ்ந்தனர். ஹஸ்ரத் அபுபக்கர் (ரலி)ஹஸ்ரத்உமர்(ரலி),ஹஸ்ரத் உதுமான்(ரலி),மற்றும் ஹஸ்ரத்அலி (ரலி)சமூகத்தின் நம்பகமான பெரியவர்கள் குழுக்களில் தேர்ந்தெடுக்கப்படும் போது ஹஸ்ரத் அபுபக்கர் (ரலி)திறந்த பொது இடத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.கலிப் அமீர் முவையா சரியாக வழிநடத்திய ஆட்சியாளர். அமீர் முவையா தனது  மகனை தன்னிச்சையாக   ஆட்சி செய்ய நியமனம் செய்தார்.  அமீர் முவையாவின் மகனார் முறையற்ற வழியில் ஆட்சியை கைப்பற்றி தவறான இராணுவ ஆட்சி செய்ததால் அதனை எதிர்த்துப் போராடிய நபியின்  சொந்த பேரன் ஹஸ்ரத் இமாம் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் மற்றவர்கள் வேண்டுதலுக்கு இணங்க எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை உண்டானது.

இஸ்லாமும் இன்றைய கல்லூரிகளும்

            இஸ்லாமும் இன்றைய கல்லூரிகளும்         

  முஹம்மது ரஃபீக்

[ எந்த வயதில் ஆண் பெண் உணர்ச்சிகள் பலவீனமாக இருக்குமோ, எந்த வயதில் இரு பாலாரையும் பிரித்து வைப்பது அத்தியாவசியமோ, எந்த வயதில் இரு பாலார் ஒன்றாக இருந்தால் அதிக கேடு வருமோ அந்த வயதில் இரு பாலாரையும் சேர்க்கும் இடமாக இன்று பெரும்பாலான கல்லூரிகள் இருந்து வருகின்றன. அதிகமான கல்லூரிகள் பெண்களை ஹிஜாப் பேணுவதை விட்டும் தடுக்கக் கூடியதாக இருக்கிறது.

கல்லூரியில் காதல் வயப்பட்டு, எவ்வளவு கஷ்டப்பட்டு தன்னுடைய பெற்றோர்கள் தன்னை வளர்த்திருப்பார்கள் என்பதை கூட மறந்து ஓடிப் பொய் திருமணம் செய்துக் கொள்ளும் காட்சி அரங்கேறுகிறது. முக்கியமாக ஆண் பெண் சேர்ந்து படிக்கும் கல்லூரிகளை தவிர்ப்பது சிறந்தது.

சில மாணவர்கள் தவறு என்று தெரிந்தும் "கல்லூரியில் அனுபவிக்காமல் வேறு எப்போது அனுபவிப்பது" என்ற ஒரு கேடுகெட்ட தத்துவத்தை கூறிக்கொண்டு இந்த பழக்கத்தை தொடர்கின்றனர். அல்லாஹ்விடம் தவ்பா செய்யக் கூட நேரம் இல்லாமல் அவருடைய மரணம் அவரை அடைந்தால் மறுமையில் அவரின் நிலை என்ன என்பதை சிந்திக்க மறுக்கிறார்கள்.

பெரும்பாலான தவறுகள் தீய நண்பர்களின் தூண்டுதளினாலேயே ஊக்குவிக்கப்படுகிறது. புகை, மது, ஊர் சுற்றுவது, சினிமாவிற்கு செல்வது போன்ற பழக்கத்தின் காரணம் தீய நண்பர்களாலேயே தொடங்கப்படுகிறது. தீய செயல் செய்யும் நண்பர்களை விட நம்மை தொழுகைக்கு அழைப்பவராகவும், நாம் செய்யும் தீய செயல்களை சுட்டிக்காட்டி அதை தடுப்பவர்களையும் நண்பராக தேர்ந்தெடுப்பது இம்மையிலும் மறுமையிலும் சிறந்ததாகும்.

Tuesday, June 12, 2012

என்னைக் கவர்ந்த இஸ்லாம்

என்னைக் கவர்ந்த இஸ்லாம்:
இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி-7

வழங்குபவர்: சகோதரர் முஹம்மத் அவர்களுடன் K.L.M. இப்ராஹீம் மதனீ

இடம்: கைபந்து மைதானம், ஸனாய்யியா, ஜித்தா

நாள்: 19.04.2012


Download mp4 video
Audio Play:
Download mp3 audio

Friday, June 8, 2012

தெரிந்த சவூதி அரேபியா.. தெரியாத பல விடயங்கள்.. சவூதி பற்றி நல்ல விடயங்களை நீங்களும் தெரிந்து கொள்ள..

தெரிந்த சவூதி அரேபியா.. தெரியாத பல விடயங்கள்.. சவூதி பற்றி நல்ல விடயங்களை நீங்களும் தெரிந்து கொள்ள..


ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நாட்டைப் பற்றி ஒரு அபிப்ராயம் இருக்கிறது.
அது அவர்கள் நாளிதழ்கள் வாயிலாகவோ, நண்பர்கள் வாயிலாகவோ, இன்ன பிற ஊடக வாயிலாகவோ அறிந்தவை. பொதுவாக அமெரிக்கா என்றால் மனதிற்குள் அது ஒரு சொர்க்க பூமியாகத் தோன்றும்.

சவுதி அரேபியா என்றால், அது குறித்த எண்ண ஓட்டங்கள் உலக பார்வையில் தரக் குறைவாகவே இருக்கிறது. அது பல இடங்களில் தன்னுடைய சட்ட திட்டங்களிலும், மனிதாபிமானத்திலும் கடுமையான உலக விமரிசனத்துக்கு உள்ளாகியிருப்பது உண்மைதான் என்றாலும், சவுதி அரேபியா, தன் நாட்டின் பெருமையாக கொண்டுள்ள விடயங்களை, அதுகுறித்து நான் அறிந்த விடயங்களை மட்டுமே சில இங்கு பகிரப்பட்டுள்ளன.

பெரும்பாலான சவுதி அராபிய சட்டதிட்டங்களிலும் மற்ற நாட்டினனுக்கான நீதி முறைகளிலும் பல கருத்துகள் ஒவ்வாது என்பதை சொல்லிக்கொண்டு, சவுதி அரேபியாவின் வியக்கத்தக்க செய்திகளை நீங்கள் அறிய வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே படியுங்கள்.

*முஸ்லிம் ஒருவர் தன் வாழ்வில் ஒருமுறையேனும் புனிதப்பயணம் மேற்கொள்ள வேண்டிய புனிதத்தளமான மெக்காவும், மெதினாவும் இங்குதான் உள்ளது.

*உலகின் இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் கிடங்குகளை( world’s Second largest oil reserves) கொண்ட நாடாக இது உள்ளது. வெனிசுலா முதலிடத்தில் உள்ளது.

*கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யாவிற்கு அடுத்த படியாக உலகின் இரண்டாவது மிக அதிகமான கச்சா எண்ணெய்( Worlds second largest oil export) ஏற்றுமதி செய்யும் நாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

*worlds sixth largest natural gas reserves என்ற இயற்கைவாயு சேமிப்பில் உலகின் ஆறாவது இடத்தில் சவுதி உள்ளது.

Tuesday, June 5, 2012

ஹதீஸ்-பன்மொழிகளிலும் ஹதீஸ் சேகரிக்க, தொகுக்க சிறந்த தரவுத்தளம்


இணைய வழியாக   பன்மொழிகளிலும்   (  ஆங்கிலம்   -  பிரெஞ்சு- டட்ச்- ஸ்பானிஷ் - இத்தாலி -சீன மொழி மற்றும் பல மொழிகளிலும்) ஹதீஸ்.சேகரிக்க, தொகுக்க, தேட பயன்படக்கூடிய ஒரு சிறந்த வழிகாட்டி அருமையான தரவுத்தளம்.உபயோகப்படுத்தி பயனடயுங்கள்

             கீழ் உள்ள படத்தை அழுத்தி ஹதீஸின் தரவுத்தளதினைப் பாருங்கள்

Hadeeth Database

Press the image belowto enter Hadeeth Database

      English     -     Français     -     Deutsch     -     Italiano     -     Español       -     日本の     -     中国     -     فارسى     -     عـربي



  

Source : http://www.daraltarjama.com/

Monday, June 4, 2012

படிக்கட்டுகள் .....ஏற்றம் 14

முடிவு எடுக்கும் விசயம் என்பது நம் வாழ்க்கையின் இலக்கை தீர்மானிப்பதில் மிகவும் முக்கியமானது. சிலர் முடிவெடுப்பதை தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்து விட்டு பிறகு சில வருடம் ஆன பிறகு' அப்போதே செய்திருக்கனும்" என வருந்துபவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் முடிவெடுக்க சின்ன வயதிலிருந்து மனிதர்களை பழக்குவதில்லை.


சின்ன வயதை சார்ந்தவர்கள் தனியாக எதுவும் முடிவு எடுத்துவிட்டால் பெரியவர்களை மதிப்பதில்லை என்று குற்றம் சாட்டப்படலாம் என்று பயந்தே முடிவெடிடுப்பதில்லை.
பிள்ளைகளை முடிவெடுக்க எப்படி பழக்க வேண்டும் என்று என் வாழ்க்கையில் நடந்த விசயம் ஒன்று உதாரணமாக சொல்லலாம். என் முதல்மகன் 11 வயதாக இருக்கும்போது பள்ளிக்கூடத்தில் டூர் போக இருப்பதாக சொல்லி அனுமதி கேட்டான். அது இங்கிருந்து ஏறக்குறைய 2000 கிலோ மீட்டர். விமானத்தில்தான் போக வேண்டும். நான் அவனிடம் சொன்னது " நீ ஏன் போக வேண்டும் என்று 5  பாயின்ட், ஏன் போகக்கூடாது என்று 5 பாயின்ட் எழுதி வா" என்று சொன்னவுடன் போவதால் அதிகம் நன்மை இருப்பதாக எழுதிய அவன் , போகாமல் இருந்தால் ஏற்படும் நன்மையை அதிகம் எழுத வில்லை. கடைசியில் அவனிடமே முடிவெடுக்க சொல்லி போய் வந்தான். 

LinkWithin

Related Posts with Thumbnails