Tuesday, October 30, 2012

வாழ்த்துகள் To ஹசேனி மரிக்கான் - WE WISH YOU Hassane Marecan

இணையம் எல்லோருக்கும் பொதுவானது.(காணொளி இணைப்புடன்)


                        சந்திப்பு : 'பதிவர்' சகோ. ஜஃபருல்லாஹ் [ஜாஃபர்]

இணையம் எல்லோருக்கும் பொதுவானது. யாருக்கும் சொந்தமில்லாதது. அறிவியலின் அடுத்தக் கட்டம் என்று அழைக்கும் இவற்றை பயனுள்ள வகையில் நம்முடைய நேரத்தையும், சிந்தனையையும் செலவிட்டு நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் பயனுற உறுதுணையாய் இருப்போம் [ இறைவன் நாடினால் ! ]

'சந்திப்பு’ தொடருக்காக...

1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளுடன் சகோ. ஜஃபருல்லாஹ் அவர்களுக்கு மின்னஞ்சல் செய்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

சகோ. ஜஃபருல்லாஹ் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :
நமதூர்  காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்றுள்ள இவர் சவூதி அரேபியாவின் மருத்துவமனை ஒன்றில் மருத்துவக் காப்பீட்டு ஒருங்கிணைப்பாளராக பணிபுரிகின்றார்.

சமூக ஆர்வலரான இவர் அய்டா என்ற சமுயதாய அமைப்பின் ஆலோசணைக் குழு உறுப்பினராகவும் இருக்கின்றார். பதிவர், .ஊடக ஆர்வலர், அதிரை எக்ஸ்பிரஸ் தள  நிர்வாகி மற்றும் இன்னும் சில தளங்களின் பங்களிப்பாளர் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளது இவருக்கு கூடுதல் சிறப்பாக உள்ளது.

கூகிள் Apps டொமைனை எப்படி சரிபார்ப்பது?

Monday, October 29, 2012

தமிழக முஸ்லிம்கள் - பிபிசி தொடர் 6


மீனாட்சிபுரம் இன்று
 
http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/09/120909_tnmuslims6.shtml?bw=bb&mp=wm&bbcws=1&news=1


* 1981 ஆம் ஆண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சிற்றூரே மீனாட்சிபுரம்

* இஸ்லாம்தான் எங்கள் கொடுமைகளுக்கான ஒரே விடிவு

* மதம்மாற முயன்றவர்களை தமிழக அரசு கைதுசெய்தது

* மதம் மாறியவர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள்

* ஐவேளை தொழுகை போன்றவற்றைக் கடைபிடிக்க முடியவில்லை என்பதால் சிலர் மாறாமல் இருக்கிறார்கள்

* நூர்ஜகானாய் மாறிய தலித் பெண்ணைத் திருமணம் செய்ய முஸ்லிம்கள் முன்வராததால் தற்கொலை செய்துகொண்டார்

 தமிழக முஸ்லிம்கள் - பிபிசி தொடர் 5

Source : http://anbudanislam

தமிழக முஸ்லிம்கள் - பிபிசி தொடர் 5


கோவை குண்டுவெடிப்பு

http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/09/120902_tnmuslims5.shtml?bw=bb&mp=wm&bbcws=1&news=1

* அடிப்படைவாதம் தீவிரவாதமாகி குண்டுவெடிப்புவரை சென்றது கோவையில்தான்

* சிறுதொழிலையே நம்பியிருந்த முஸ்லிம்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள்

* முஸ்லிம் சமுதாயத்திற்குப் பொருளாதார ரீதியான கடன் திட்டங்கள் வழங்கப்படுவதில்லை

* குண்டுவெடிப்பு சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால் நாங்கள் நன்றாக இருந்திருப்போம்

* கல்வி ரீதியில் முன்னேறி ஆக்க ரீதியில் செயல்பட்டு அழிவு ரீதியைக் கைவிட வேண்டும்

* ஏதோ ஒரு அமைப்பு செய்ததற்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள்
Source ;http://anbudanislam

தனது 189 வாரிசுகளுடன் பக்ரீத் கொண்டாடிய மூதாட்டி!

திருப்பூரைச் சேர்ந்த 107 வயது பாட்டி ஜெஹராவி, தனது 189 வாரிசுகளுடன் பக்ரீத் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தார்.

திருப்பூரில் பனியன் தொழில் செய்து வரும் ஜெஹராவி பாட்டியின் குடும்பத்தினர்  1 மகன், 3 மகள்கள், பேரன், பேத்திகள் 39 பேர், கொள்ளுப் பேரன், பேத்திகள் 71 பேர் உள்ளிட்ட 189 பேர்  கூட்டுக் குடும்பமாக திருப்பூர் அருகேயுள்ள நல்லூர் பகுதியில் ஒரே காலனியில் வசித்து வருகின்றனர். பாட்டியின் கணவர் சையத் அப்துல் லத்தீப் 40 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்.

பத்திரிகை அடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து, ஜெஹராவி பாட்டி குடும்பத்தினர், இவ்வருட பக்ரீத் பண்டிகை விழாவை விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Source : http://www.inneram.com

அப்படி என்னதான் இருக்கிறது நாகூர் ஹனிபாவின் இந்த பாடலில்?

இந்தப் பாடலை கேட்காத காதுகள் தமிழகத்தில் இல்லை. முணுமுணுக்காத உதடுகள் இல்லவே இல்லை.  பாராட்டாத உள்ளங்கள் இருக்கவே முடியாது.

அது ஏனோ தெரியவில்லை, நாகூர் ஹனிபாவை ‘இமிடேட்’ பண்ணுவதற்கு அத்தனை இஸ்லாமியப் பாடகர்களும் இந்தப் பாடலைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

மேடையில் அரங்கேறும் கலைநிகழ்ச்சியின்போது ‘வைகைப்புயல்’ வடிவேலு ரசிகர்களைக் கவர நினைத்தாலும் இந்தப் பாடலை பாடித்தான் அசத்துகிறார்.

சின்னி ஜெயந்த் நாகூர் ஹனீபாவைப்போல் மேடை நிகழ்ச்சியில் ‘மிமிக்ரி’ செய்ய வேண்டுமென்றாலும் இந்தப் பாடலை பாடித்தான் கைத்தட்டல் பெறுகிறார்.

மதுரை மூத்த ஆதீனகர்த்தா அருணகிரி நாதர் தன் ஓய்வு நேரங்களில் விரும்பிக்கேட்கும் பாடல் இதுதானாம். அவரே சொல்லியிருக்கிறார்.

குன்றக்குடி அடிகளார், சோமசுந்தர தம்பிரான் போன்றவர்களின் மடத்திலும் இந்தப் பாடல்தான் ஒலிக்கிறது.

பொது நிகழ்ச்சிகளிலும் கோவில் விசேஷங்களிலும்கூட இப்பாடல் ஒலிபெருக்கிகளில் ஒலிப்பதை நாம் காது குளிர கேட்க முடிகிறது.

அதிகாலை வேளையில் வானொலியில் ஒலிபரப்பப்படும் “பக்தி கானங்கள்” பட்டியலில், எந்தப் பாடல் இடம் பெறுகிறதோ இல்லையோ இந்தப் பாடல் கண்டிப்பாய் இடம் பெற்று விடுகிறது.

கல்யாண வீடியோ கேசட் மற்றும் குறுந்தகடு பதிவில் இந்தப் பாடல் பின்னணியில் கட்டாயம் ஒலிக்கிறது.

அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் பாடலில்? கேள்வி மீண்டும் நம் உள்ளத்தைக் குடைகிறது.

எளிமையான வரிகள்; எல்லா மதத்தினரும் ஏற்கக் கூடிய கருத்துக்கள்; மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட சிந்தனை.

இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும் பாடல் என மறைந்த கிருபானந்த வாரியாரே பல மேடைகளில் பாராட்டிப் பேசியிருக்கிறார்.

Saturday, October 27, 2012

முஸ்லிமும் சாதிப்பெயரும்


அறியாமையுடன் முஸ்லிம்:
மரைக்காயர் ராவுத்தர் போன்ற பெயரின் காரணமாக எவரையும் ஓரங்கட்டி வைக்கும் அளவுக்கு எனது இறைவன் என்னை முற்போக்காளன் ஆக்கிவிடவில்லை.

அன்புடன் முஸ்லிம்:
மரைக்காயர் ராவுத்தர் போன்ற சாதிப் பெயர்கள் நாம் வாழும் நிலப்பகுதியின் காரணமாக செய்யும் தொழிலைக் கொண்டு உருவானது.

மரைக்காயர் என்றால் மரக்கலராயர். மரக்கலராயர் என்றால் கப்பல் வணிகம் செய்பவர் என்று பொருள்.

இப்படியே ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சாதியைப் பிரித்தார்கள் பிராமணர்கள்.

தொழில் அடிப்படையில் உருவான பெயர்களை அதனால் நாம் மறுதளிக்கவேண்டும்.

உங்கள் குடும்பப் பெயர் அல்லது ஊர் பெயர் அல்லது புனைபெயர் என்று எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள், தவறில்லை.

மரைக்காயர், ராவுத்தர் எல்லாம் ஒரு முஸ்லிமிற்கு அவசியமில்லை.

Source :http://anbudanislam2012.blogspot.in/

 சாஹிப் என்றால் நண்பர்,தோழர்,உரிமையாளர்,'ஐயா' இன்னும் பல பொருள்படும் .ஆனால் அது ஒரு காலமும் ஒரு மார்க்கத்தைச் சார்ந்தவரை குறிப்பிடாது . சாகிப் என்று முஸ்லிம் மக்களை மட்டும் குறிப்பிட்டு அடைமொழி கொடுத்து அழைப்பது மடமை. 
சாஹிப் என்ற வார்த்தையை சொல்லி இந்தியாவில் ஆங்கிலயேன் ஒரு பிரிவை உண்டாக்கினான் .சாஹிப் என்ற வார்த்தை அரபு மொழியிலிருந்து வந்தாலும் உருதுவில்தான் அதிகம் பயன்படுத்தினர். சீக்கியர்களும் பயன்படுத்துகின்றனர்  

சீனா பயண அனுபவம்! - (பகுதி 3)

                                            பயணங்கள் அனுபவம் – “ சீனா “ - பகுதி 3


என் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பு அருகே வந்து நின்றது எங்களது கார்.

நானும் எனது நண்பன் “ஜேம்ஸ்” ம் காரிலிருந்து இறங்கியவுடன்
"நீ ஹாவ்" ( நீங்கள் நலமா ? ) என்றேன் எனது குடியிருப்பின் பாதுகாவலரிடம் அவனோ “ ஹாவ் ” ( நலம் ) என்றான்.



இங்கே அடுக்குமாடி களைப் பொருத்தவகையில் சதுர மீட்டரில் கணக்கீடு செய்து விலைகளை நிர்ணயம் செய்துகொள்கிறார்கள், விலைகளைப் பொருத்தவரையில் மலிவாகவே உள்ளது. மேலும் முறையாக அரசின் அனுமதிப்பெற்று அதில் பூங்கா, வாகன நிறுத்துமிடம், மின் கசிவு தடுப்பு சாதனம், பாதுகாப்பு சாதனம், குழாய் எரிவாயு இணைப்பு போன்றவைகள் அமையப்பெற்றிருக்கும். மேலும் ஒவ்வொரு வீட்டிலும் பயன்தரும் அனைத்து இல்லப் பொருள்களும் அடங்கியிருக்கும்.
“ குறிப்பாக நம்மூர் ரியல் எஸ்டேட் எஜமானிகள் கவனிக்கப்படவேண்டியவை, வயல் வரப்புகள், வாய்க்கால்கள், புறம்போக்கு போன்ற நிலங்கள் கூறுபோட்டு “குழிகள்”, “செண்டுகள்”, “சதுர அடிகள்” என கணக்கீடுகள் செய்து அரசின் அனுமதி பெறாமல் விற்பனை செய்வது என்பது ஓரளவுக் குறையும்.”

Friday, October 26, 2012

துபாயில் தியாகத் திருநாள் காணொளி இணைப்பு - Eid in dubai (video)

துபாயில் தியாகத் திருநாள் காணொளி இணைப்பு - Eid in dubai (video) DUBAI EID AL AHADA PART1 DUBAI EID AL AHADA PART2.

Thursday, October 25, 2012

தாய்ப்பாலுக்கு நிகராய் ஏதுமில்லை !!!

தாய்ப்பாலுக்கு நிகராய் ஏதுமில்லை !!!

ஒரு குழந்தை பிறந்து, முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமான ஒரு பருவமாகும். இந்த மூன்று மாத காலத்தில் குழந்தையைப் பராமரிக்கும் முறை சரியாக இருந்தால் பிற்காலத்தில் குழந்தையின் உடல் நலம், வளர்ச்சி குறித்த பல பிரச்சினைகளை வராமல் தடுக்கலாம்.

இந்தக் காலகட்டத்தில் ஒரு தாய் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றைச் சமாளிக்கும் வழிகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தை பிறக்கும் காலம்

ஒரு குழந்தை கருவில் உருவான காலத்தில் இருந்து 37 முதல் 40 வாரங்களில் பிறக்க வேண்டும். இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் முழுவளர்ச்சி பெற்ற, குறித்த காலத்தில் பிறந்த குழந்தைகள் என்று அழைக்கப்படுகின்றன.

37 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்கு முன் பிறந்த குழந்தைகள்.

41 வாரங்களுக்குப் பின்னர் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்குப் பின்பிறந்த குழந்தைகள்.

குறித்த காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள் முழுமையான வளர்ச்சி நிலையை அடையாததால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

பிறக்கும் குழந்தையின் எடை

ஒரு இந்தியக் குழந்தை பிறக்கும் போது இருக்க வேண்டிய சராசரி எடை 2.5 முதல் 3.5 கிலோ கிராம் ஆகும்.

Wednesday, October 24, 2012

போஸ்னியர் நடைபயணமாக புனிதமிகு ஹஜ் பயணம் -(காணொளி இணைப்பு )

நடைப்பயணமாக  புறப்பட்டு ஆயிரம் மைல்களைக் கடந்து நாற்பத்து ஏழு வயது போஸ்னியன் முஸ்லிம்  தனது ஹஜ்ஜுப் புனிதக் கடமையை நிறைவேற்றுவதற்காக   இறுதியாக புனிதமிகு மக்காவை  வந்தடைந்தார்.

தனது வாழ்வின் கனவை,நினைவை ,கடமையை நிறைவேற்றுவதில் மன உறுதியுடன் செயல்பட்டார் .

தன்னிடம் அதற்கு தேவையான பொருளாதார வசதி இல்லாமையால் நடைப்பயணம் மேற்கொண்டதாக செனட்ஹட்ஜிக் சொல்கின்றார்  அவர்  வைத்திருந்த 200 (ஈரோஸ்) பணத்துடன்   சவூதிக்கு புறப்பட்டதாக சொல்கின்றார்  

Tuesday, October 23, 2012

சீனா பயண அனுபவம்! - (பகுதி 2)

 “ பயணங்கள் அனுபவம் – “ சீனா “ - பகுதி 2


சலாம் சகோதரர்களே !
முன்னுரை :
“ பயணங்கள் அனுபவம் – “ சீனா “ இக்கட்டுரையை எழுதக்காரணம், புதிதாக வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய நமது சகோதரர்களுக்கு விமான நிலையங்கள் மற்றும் அவர்கள் செல்லக்கூடிய அந்தந்த நாடுகளில் ஏற்படும் பல இன்னல்கள் மற்றும் அவர்களின் பய உணர்வுகள் இவைகளைக் கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் இருப்பதற்காக வேண்டி, இப்பதிவுகள் தொடர்ச்சியாகப் பதியப்படும் ( இன்ஷா அல்லாஹ் ! )

குறிப்பாக இளைய தலைமுறையினர் வெளிநாடுகளுக்கு செல்லும் முன் ஆங்கில மொழி பேசும் திறமையை நன்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் தொழில் சம்பந்தமாக ஏராளமான தகவல்கள் இக்கட்டுரைகளில் இடம் பெற இருப்பதால், புதிய தொழில் தொடங்க முனைவோர், இப்பதிவுகளை தொடர்ச்சியாகப் வாசித்துப் பயனடைமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இஸ்லாமிய சகோதரிகளுக்கு அழகு குறிப்புகளுக்கு !

  சகோதரிகளுக்கு அழகு குறிப்புகளுக்கு இனிய இசையுடன் ஒரு சிறந்த காணொளி.
கன்னியரை கட்டிக்கொள்ள ஆசை!
கவிதையோடு கலந்த ராகம்.
watch?v=DqYkO9yd6BE&list=FLoabIjVbkTBBMUQ4hGHrCMQ&index=7&feature=plpp_video

Beauty Tips for My Sisters in Islam

Rymes of Praise wedding song

Sunday, October 21, 2012

இலண்டன் தமிழ் வானொலியில் நிந்தவூர் சிப்லி கவிதை ஒலிபரப்பு

வடிவும் வகிடும்

வானத்தில் மிதக்கும் வடிவு
...... வெண்மேகம் இழைத்த வகிடு
தானத்தில் சிறந்த வடிவு

.......தூயோன்சொல் விகித வகிடு

தென்னை மரத்தின் வடிவு
.......தென்றல் வருடும் வகிடு

கன்னம் கொடுக்கும் வடிவு
...... காந்தக் குழியின் வகிடு


கடலின் நீரில் வடிவு
.... கப்பல் கிழித்த வகிடு

உடலின் சேரும் வடிவு

.... உள்ளம் விரித்த வகிடு



புன்னகைப் பூக்கும் வடிவு

....பூவிதழ் விரித்த வகிடு

எண்ணமும் காட்டும் வடிவு

...எம்முணர் வுகளின் வகிடு

வயற்கள் தோறும் வடிவு
.... வரப்புக் கட்டிய வகிடு

செயற்கள் தோறும் வடிவு

....செயலின் திட்டமே வகிடு


ஊரின் பரப்பில் வடிவு

....ஊரும் தெருவின் வகிடு

வேரின் உறுதி வடிவு

....வேறாய்ப் பரவும் வகிடு

வலிமைக் கட்டிட வடிவு

.....வரைபடம் எழுதிய வகிடு

பொழியும் சந்திரன் வடிவு
....பிறையெனப் பிளந்திடும் வகிடு

இலைகளின் ரேகை வடிவு

....இறைவன் தீட்டிய வகிடு

மலைகளின் பாக வடிவு

... .மனங்கவர் நீர்வழி வகிடு

ஏறும் எறும்பின் வடிவு

..ஏற்றப் பணியின் வகிடு

ஆறு சிறக்கும் வடிவு
.. ஆங்கு அணைகள் வகிடு

தேசிய கொடியின் வடிவு

......தியாக வண்ண வகிடு

தேசிய தலைமை வடிவு
..... தெளிவாய்ப் பண்ணும் வகிடு

குடும்பத்தின் உறவுகள் வடிவு
.. குலையாத உறுப்பினர் வகிடு
மிடுக்கான உடையினில் வடிவு
.....மெலிதான மடிப்பினில் வகிடு

முகத்தின் தோற்ற வடிவு

.... முகத்தின் மூக்கே வகிடு
முதுகின் தோற்ற வடிவு
... .. முதுகின் தண்டின் வகிடு


வெண்பா யாப்பின் வடிவு

......வெண்டளைக் காய்சீர் வகிடு

பெண்பால் சீப்பின் வடிவு

.....பெண்டலை நேர்சீர் வகிடு


செல்வம் பெற்றதன் வடிவு
...செய்யும் செலவின் வகிடு
கல்வி கற்றதன் வடிவு
... கற்றல் முறையின் வகிடு தகவல் தந்தவர் அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

இவர்களும் முஸ்லிம் பெண்கள்தான் !

இவர்களும் முஸ்லிம்கள்தான் . வீட்டில் அடங்கி கிடக்கவில்லை . யார் சொன்னது? முஸ்லிம் பெண்களுக்கு உரிமை கிடையாதென்று? முஸ்லிம் பெண்கள் அனைத்து வேலைகளிலும் ஈடுபடுகின்றார்கள் அதே நேரத்தில் இஸ்லாமின் அடிப்படை கொள்கைளை விட்டுவிடுவதில்லை  தங்களது குழந்தைகளை பள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்கின்றார்கள் .இறைவனால் அனுமதிக்கப் பட்ட ஹலாலான உணவை சமைகின்றார்கள்,  உண்கின்றார்கள் அதே நேரத்தில் கல்வி கற்பதிலும் ஆர்வம் காட்டுகின்றார்கள் .அதிலும் உயர்ந்த நிலையில் உள்ளார்கள் . இஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்தில் உரிமை தரப்பட்டுள்ளது .வியாபாரத்திலும் ஈடுபடுகின்றார்கள்

முஸ்லிம் குடும்பத் தலைவிக்கு ஈது பெருநாள் வந்தால் வேலைதான் அதிகம்!

 பெருநாள் கொண்டாட்டத்தில்  பெண்களின் பங்கு கவணிக்கப்பட வேண்டியதொன்று!   

ஈது பெருநாள் வருவது முஸ்லிம்களுக்கு மிகவும் மகிழ்வாகவே இருக்கும். காரணம் முஸ்லிம்கள் கொண்டாடுவதே முக்கியமாக இரண்டே பெருநாட்கள்தான். ஒன்று ஈகைத் திருநாளாக இருக்கும் ரமதான் பண்டிகை மற்றொன்று தியாத் திருநாளாக இருக்கும் ஈத் பெருநாள் .
 பலநாடுகளில் இஸ்லாமிய பெண்கள் பெருநாளைக்கு பள்ளிவாசலுக்குச் சென்று மகிழ்வோடு இறைவனைத் தொழுது வருவார்கள் .அந்த வாய்ப்பு தமிழ் நாட்டில் குறைவு . மார்க்கம் அனுமதிக்கப் பட்ட ஒன்றை இவர்கள் கடைபிடிக்காமல் வீட்டிலேயே தொழுது கொள்கின்றார்கள் .அந்த மகிழ்வான ஒன்று கூடும் வாய்ப்பினை இழக்கின்றார்கள்.
 ஆண்கள் தொழுதுவந்த பின் குர்பானி கொடுத்துவிட்டு வேண்டிய நண்பர்களை விருந்துக்கு அழைகின்றார்கள்.

Friday, October 19, 2012

யார் இந்த பீ.ஜே?

தமிழ் பேசும் நல்லுலகில் இஸ்லாத்தின் தூய கருத்துக்களை கொண்டு சேர்ப்பதற்கு தனது வாழ்நாளையே அர்பணித்த சகோதரர் பீ.ஜே அவர்கள் தற்போது புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் தகவல் அறிந்து ஏகத்துவ சகோதரர்கள் அனைவரும் அவருக்காக பிரார்த்திக்கும் இவ்வேலையில் சகோதரர் பீ.ஜே யைப் பற்றி தெரியாதவர்களுக்கும் அவரைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுக்கும் விதமாகவும், தெரிந்தவர்கள் இன்னும் சில தகவல்களை அறிந்து கொள்ளும் விதமாகவும் இந்தக் ஆக்கத்தை வெளியிடுகின்றேன்.

இந்தியா, இலங்கை என்று தமிழ் பேசும் மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஏகத்துவக் கருத்துக்கள் சென்றடைவதற்கு இறைவன் சகோதரர் பீ.ஜே அவர்களை காரணமாக்கினான் என்றால் அது மிகையாகாது.

குர்ஆன், சுன்னாவை வாயலவில் பேசிவிட்டு தனது வாழ்வில் அதன் வாசைன கூட இல்லாமல் இருக்கும் பிரச்சாரகர்களுக்கு மத்தியில் சொன்னதை தனது வாழ்வில் தன்னால் முடிந்த வரை பின்பற்றி நடக்கும் ஒரு சிறப்பான இஸ்லாமியப் பிரச்சாரகராக சகோதரர் பீ.ஜே அவர்களை நாம் கண் முன்னால் காணக் கிடைக்கிறது. அல்லாஹ் அவருடைய நோயை குணப்படுத்தி அவரின் பேச்சாற்றல் மூலமும், எழுத்தாற்றல் மூலமும் இந்த சமுதாயத்திற்கு இன்னும் பல நன்மைகளை வழங்க வேண்டும் என்று தினமும் பிரார்த்திப்போமாக!

இப்படி எழுதப்படுவதையும் தக்லீத் – தனிமனித வழிபாடு என்று யாராவது நினைத்தால், அவர்கள்  தக்லீத் ஓர் ஆய்வு என்ற பெயரில் நான் எழுதிய புத்தகத்தைப் படிக்கும் படி வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

இவன் : RASMIN M.I.Sc

யார் இந்த பீ.ஜே?

பீ.ஜே என்ற அடைமொழி மூலம் அறியப்பட்டுள்ள பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் தமிழ் பேசும் முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத பல சகோதரர்களுக்கு மத்தியில் ஒரு பேச்சாளராக மட்டுமல்லாமல்,எழுத்தாளராகவும், சிறந்த சமூக சேவகராகவும் அறியப்பட்டிருக்கிறார்.

இந்தியாவின் தமிழ்நாட்டில், தொண்டி என்ற ஊரில் பிறந்த இவர், இஸ்லாமிய மார்க்த்தைத் தெளிவாக கற்று ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அணுகி அதன் மூலம் பிரச்சாரக் களத்தில் தனக்கென ஒரு தனியிடத்தை மக்கள் மத்தியில் பெற்றுக் கொண்டுள்ளார்.

1980 காலப் பகுதியில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்கள் மன்றத்தில் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் புறப்பட்ட இவருடைய பிரச்சார வாழ்க்கையில் இதுவரைக்கும் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக ஆயிரக் கணக்கான உரைகள் நிகழ்த்தியுள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர், திருமறைக் குர்ஆனை எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் விதத்தில் மொழி பெயர்த்தது மட்டுமன்றி அதற்கு அழகிய முறையில் விளக்கவுரையும் எழுதியுள்ளார்
 யார் இந்த பீ.ஜே?தொடர்ந்து படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

படித்தேன் பிடித்தேன் (பகுதி-7)

 படித்தேன் பிடித்தேன் 019
என் பார்வையில் பெண்கள் மட்டுமே செய்யத்தக்க சில வேலைகள் உண்டு என்று குழந்தைகள் பராமரிப்பு போன்ற வேலைகளை மட்டும் பட்டியல் இட்டிருந்தார் ஒரு நண்பர். மற்ற வேலைகளைப் பெண்கள் செய்யக்கூடாது என்றார். சில பிரத்யேக குணங்கள், பொறுமை, தாய்மை பண்பு, போன்றவைகள் அவர்களே பெற்றிருக்கின்றனர் அதனால் அவர்கள் அப்படியான பணிகளைத்தான் செய்யவேண்டும் என்றார்.

உங்கள் பார்வை உங்களுக்கு. அதில் நான் தலையிடமாட்டேன்.

ஆனால் ஆண்கள் செய்யும் எந்த வேலையையும் பெண்களும் செய்வதை இஸ்லாம் மறுக்கவில்லை
 
பொறுமை, தாய்மை போன்றவை கூடுதல் தகுதிகள்தானே? குறைவில்லயே?

ஆகவே சில காரியங்களை ஆண்களைவிடச் சிறப்பாகப் பெண்களால் செய்யமுடியும் என்றாகிறது - சில காரியங்களை பெண்களைவிட ஆண்களால் சிறப்பாகச் செய்யமுடியும் என்பதைப்போல.

பலர் பெண்களின் படிப்பையும் வேலையையும் தடுப்பது அவர்களை நம்பாததால்தான்.

பெண்களை நம்புவோம்!
நம் தாயை நம்புவோம்
நம் மனைவியை நம்புவோம்
நம் சகோதரியை நம்புவோம்
நம் மகளை நம்புவோம்

நம்பிக்கைதான் இஸ்லாத்தின் அடிப்படை.

ஒரு பெண்
தன் தந்தையை நம்புகிறாள்
தன் கணவனை நம்புகின்றாள்
தன் தமயனை நம்புகின்றாள்
தன் மகனை நம்புகின்றாள்

நம்புகின்ற பெண் உயர்வாக இருக்கிறாள்
நம்பாத ஆண் தாழ்வானவனாகிவிடுகிறான்.


தமிழக முஸ்லிம்கள் - பிபிசி தொடர் 3

பெண்களின் நிலை
http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/08/120819_tnmuslims3.shtml?bw=bb&mp=wm&bbcws=1&news=1

இப்படிச் சிலரும்....

* கூடப்பிறந்த தம்பியும் என் மனைவியைப் பார்க்கக் கூடாது

* ஆண்கள்தான் உழைக்க வேண்டும் பெண்கள் வீட்டிற்குள்தான் இருக்க வேண்டும்

* பெண்களுக்கு பிள்ளைகளை வளர்க்கும் அளவுக்கு அறிவு இருந்தால் போதும்

* முஸ்லிம் பெண்கள் புர்கா போட்டுக்கொண்டு பிரியாணி ஆக்குவதற்காகத்தான்


மின்னஞ்சல் தகவல் தந்தவர் அன்புடன் புகாரி

தமிழக முஸ்லிம்கள் - பிபிசி தொடர் 4

அடிப்படை வாதம்
http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/08/120826_tnmuslim4.shtml?bw=bb&mp=wm&bbcws=1&news=1


* அன்று புரட்சியில் தோன்றிய அருமையான மதம் இன்று அடிப்படை வாதத்தில் சிக்கிக்கொண்டது

* முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்ல ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்கள்தான் என்பது நுணுக்கமான மேற்கத்திய அரசியல்

* தீவிரவாதம் என்றாலே ஒரு தாடியையும் ஒரு புர்காவையும் கண்ணுக்குக் கொண்டுவந்துவிட்டார்கள்

* இஸ்லாத்தின் முக்கிய நோக்கமே அமைதி

* இஸ்லாத்திற்கு எதிரானவர்களைக் கொலை செய்யச் சொல்லி தவறாகப் போதித்தார்கள். இப்போது புரிந்துகொண்டு விலகிவிட்டோம்.

* இஸ்லாமிய சமுதாயத்தை மத அடிப்படை வாதிகளிடமிருந்து விடுவிக்க நினைக்கின்ற முற்போக்காளர்கள் வரவேண்டும்

மின்னஞ்சல் தகவல் தந்தவர் அன்புடன் புகாரி

Wednesday, October 17, 2012

மன்னித்து பாருங்கள் மனம் நிம்மதி அடையும்.

மன்னித்து பாருங்கள் மனம் நிம்மதி அடையும்.
பகை கொண்ட நெஞ்சமும், பழி வாங்கும் எண்ணமும் கொண்டவர்கள் எந்நிலையிலும் அமைதி பெறுவதில்லை. இத்தகையோர் வெளியில் அமைதியாகத் தோற்றமளித்தாலும் உண்மையில் இவர்கள் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலைகள் போன்றவர்கள். இவர்கள் எந்த வேளையில் எதைச் செய்வார்கள் என்பதை யாரலும் கணித்துக் கூற முடியாது.

பழிவாங்கும் உணர்வு படைத்தவர்கள் மென்மை, இரக்கம், அன்பு ஆகிய பண்புகளை இழந்துவிடுகின்றனர். மேலும் இவர்களின் செயல்களைத் தீர்மானிப்பவர்கள் இவர்களது எதிரிகளே! இவர்களின் உறக்கம், உணவு, மகிழ்ச்சி, உடல்நலம் ஆகியவற்றை முடிவு செய்பவர்களும் இவர்களது எதிரிகளே. எப்போதும் எதிரிகளையே எண்னிக் கொண்டு இவர்கள் தம்மைத் தாமே அழித்துக் கொள்கின்றனர். தமது வாழ்க்கையையே நரகமாக ஆக்கிக் கொள்கின்றனர்.

இதற்கு நேர்மாறாக பொறுமை, சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல் ஆகிய பண்புகளை உடையோர் அமைதியின் இருப்பிடங்களாக விளங்குகின்றனர். உயர்ந்த மனிதர்களாகவும், மக்களின் மரியாதைக்கும் அன்புக்கும் உரியவர்களாகவும் திகழ்வார்கள். “ (தண்டிக்கும்) சக்தி  பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே இறைவனிடத்தில் கண்னியத்திற்குரியவர்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (நூல் : பைஹகி)

மன்னிப்பதால் கண்னியம் உயருமே தவிர தாழ்வதில்லை. மன்னிப்பவர்கள் மனமகிழ்ச்சி அடைகிறார்கள். மன்னிப்பவர்கள் பகையை வெல்கிறார்கள். தீமைகளுக்குப் பதிலாக நன்மைகளையே செய்து எதிரிகளையும் நணபர்களாக  ஆக்கிக் கொள்கிறார்கள்.

நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.(திருக்குர் ஆன் 41: 34-35 )

நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் அவமானங்களும் நம்முள் பகை உணர்வைத் தோற்றுவிக்கின்றன.

அநீதிகளை அகற்ற உரிய வழிமுறைகளில் போராடலாம். கொடுமை புரிவோருக்கு உரிய தண்டனையும் பெற்றுத் தரலாம். ஆனால் பழிவாங்கும் உணர்வு கூடாது.

அவமானங்களைப் பொறுத்தவரையில் பல கற்பனையானவை; சில நாமாகவே தேடிக் கொண்டவை. இன்னும் சில எந்தக் கொட்ட நோக்கமும் இன்றியே இழைக்கப்பட்டவை இத்தகைய ‘அவமானங்களை’ பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஒருவேளை வேண்டுமென்றே நாம் அவமானப்படுத்தப்பட்டாலும் அதனையும் நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் இத்தகைய இழி செயலைச் செய்பவர்கள் பொறமை, விரக்தி, ஆணவம் ஆகிய உணர்வுகளுக்குப் பலியானவர்கள். இவர்கள் உண்மையில் நம்மை அவமானப்படுத்தவில்லை. தம்மைத்தாமே அவமானப்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு இழைக்கப்பட்ட அவமரியதைகளை ஒரு சவலாக எடுத்துக் கொண்டு நமது நிலைகளில் முன்னேற்றம் கொண்டுவர முயற்சி செய்யலாம்.

Saturday, October 13, 2012

சகோதரர் PJ அவர்களுக்காக துஆச் செய்யுங்கள்!


சகோதரர் PJ அவர்களுக்காக துஆச் செய்யுங்கள்!

உளமார்ந்த பிரார்த்தனைகள் வேண்டி ...

எண்பதுகளின் மத்தியில் தமிழகத்தில் ஏற்பட்ட ஏகத்துவ விழிப்புணர்வுப் புரட்சிக்கு வித்திட்டவர்களுள், "PJ" என்று அன்புடன் அழைக்கப்படும் சகோ. P. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் தலையானவர். இஸ்லாமியப் பேரவை, அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ், ஜம்யிய்த்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா, அனைத்துத் தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகிய சன்மார்க்க-சமுதாய அமைப்புகளில் பெரும் பங்காற்றியவர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நிறுவனர். நாவன்மை மிக்க பிரச்சாரகர். அரபு மொழியில் தேர்ந்தவர். மறை விளக்கம், வரலாறு, ஹதீஸ் கலை, ஃபிக்ஹுச் சட்டம் ஆகியவற்றில் ஆய்வுரை வழங்கத்தக்க நம் சமகாலத் தமிழறிஞர்; பன்னூலாசிரியர். அந்நஜாத், அல்ஜன்னத் ஆகிய மாத இதழ்களில் ஆசிரியராக இருந்தபோது, இவர் எழுதிய தலையங்கங்கள் மாற்றுக் கருத்துடையோராலும் விரும்பிப் படிக்கப்பட்டவை.

பிற மதத்தவருக்கு இஸ்லாத்தை, அதன் தூய வடிவில் அறிமுகப்படுத்துவதற்காகத் தமிழகமெங்கும் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' எனும் உயிரோட்டமான பிரச்சாரம் மேற்கொண்டவர். எல்லாருக்கும் விளங்கும் எளிமையான பேச்சுக்கும் எழுத்துக்கும் சொந்தக்காரர்.

சகோதரர் PJ அவர்களது அரபு மொழி அறிவு ஆய்வுத்திறன், எழுத்தாற்றல், சொல்லாற்றல், ஷிர்க் மற்றும் பித்-அத்துக்கு எதிரான  முப்பதாண்டுப் போராட்டம், வரதட்சணை எனும் கொடிய நோய்க்கு எதிராக முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத்திய விழிப்புணர்வு, மக்களிடம் ஏற்பட்ட சிந்தனை மாற்றம், பிற சமயத்தாருக்கு இஸ்லாமை எளிமையாக அறிமுகப்படுத்தியமை போன்ற அவரது சேவைகள் உலகெங்கும் வாழும் தமிழறிந்த முஸ்லிம்களுக்குத் தேவை.

அன்னாருக்கு மார்பின் வலப்புறத்தில் தோலுக்கடியில் சிறிய கட்டி ஒன்று ஏற்பட்டு, அது கேன்ஸர் வகைக் கட்டி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் சிகிச்சையும் தொடங்கப்படவுள்ளது. "பிரார்த்தனையைவிட சக்திமிக்க மருந்தில்லை" என்று உறுதியுடன் நம்புகின்ற நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் "சகோ. PJ அவர்களுடைய நோயை முற்றிலும் நீக்கி, நிறைவான உடல்நலத்தை அவருக்கு வழங்க வேண்டும்" என உளமாரப் பிரார்த்தனைகள் செய்ய வேண்டுமாய் அன்புடன் கோருகிறோம் - சத்தியமார்க்கம்.காம்

Sunday, October 7, 2012

துல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட வேண்டிய உழ்ஹிய்யா ஒரு விளக்கம்

நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் மகன் இஸ்மாயில்(அலை) அவர்களை அறுத்துப் பலியிடுமாறு அல்லாஹ் கனவின் மூலம் இப்ராஹீம்(அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான். இறைவனின் இக்கட்டளையை நிறைவேற்ற முற்பட்டபோது அல்லாஹ் அதனைத் தடுத்து ஓர் ஆட்டைப் பலியிடுமாறு கட்டளையிட்டான். இவர்களின் இந்தத் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம் மற்றவர்களும் ஈதுல் அழ்ஹா தினத்தில் பிராணியைப் பலியிட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்குர்ஆனில் பின்வருமாறு இந்த விபரங்கள் கூறப்பட்டுள்ளன.
“எனவே, சகிப்புத்தன்மை மிக்க ஒரு மகன் குறித்து அவருக்கு நாம் நன்மாராயம் கூறினோம்.

அவருடன் இணைந்து செயற்படும் பருவத்தை (இஸ்மாயீலாகிய) அவர் அடைந்த போது, “என்னருமை மகனே! உன்னை நான் அறுப்பதாக நிச்சயமாகக் கனவில் கண்டேன். உனது அபிப்பிராயம் என்ன?” எனக் கேட்டார். அ(தற்க)வர், “என்னருமைத் தந்தையே! உங்களுக்கு ஏவப்பட்டதை நீங்கள் செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்னைப் பொறுமையாளர்களில் நீங்கள் கண்டுகொள்வீர்கள்!” என்று கூறினார்.

Saturday, October 6, 2012

படித்தேன் பிடித்தேன் (பகுதி-6)


அன்புடன் புகாரி

 படித்தேன் பிடித்தேன் 016


இஸ்லாம் பெண்களுக்குச் சம உரிமை தரும் மார்க்கம்.

இஸ்லாம் பெண்களை அடிமைகளாக வைத்திருக்கக் கூறவில்லை.

சிலர் இஸ்லாம் பெண்களுக்குச் சம உரிமை வழங்குகிறது என்று ஒருபக்கம் கூறிக்கொண்டு மறுபக்கம் அவர்களை அடிமைகளாய்க் காண்பது இரட்டை நிலைப்பாடு. அதை இறைவன் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

ஆண்களின் ஆளுமை விருப்பம் அல்ல இஸ்லாம்

இறைவனின் அறிவுரைகள்தாம் இஸ்லாம்.

பெண்கள் முன்னேறாமல் எந்த சமுதாயமும் முன்னேறியதாய்ச் சரித்திரம் இல்லை.

முஸ்லிம் பெண்கள் புர்க்காவுக்கும் பிரியாணிக்கும்தான் என்ற வக்கிரத்தை அழிக்கப் பாடுபடுவோம்.

அதுதான் உண்மையான இஸ்லாமியப் பாதை.


ஆஸ்திரேலிய பழங்குடியின கூரி முஸ்லிம்கள் - 60% அதிகரிப்பு



 நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்

இஸ்லாமிய தழுவல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், பழங்குடியின சமூகங்களில் இஸ்லாம் ஆழ்ந்த பாதிப்பை  ஏற்படுத்தியிருக்கின்றது என்பது பலருக்கும் ஆச்சர்யமான செய்தியாகவே இருக்கின்றது. தென் அமெரிக்காவின் மாயன் முஸ்லிம் சமூகம் இதற்கு சிறந்த உதாரணம். முஸ்லிம் மாயன்கள் குறித்த செய்தி சில வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த போது பலரும் அதனை வியப்புடனே பார்த்தார்கள் (முஸ்லிம் மாயன்கள் குறித்த இத்தளத்தின் பதிவை <<இங்கே>> காணலாம்).

இதோ மற்றொரு பழங்குடியின முஸ்லிம் சமூகம். ஆஸ்திரேலியாவின் கூரி பழங்குடியினரிடையே இஸ்லாம் தனது இருப்பை ஆழமாக பதித்துக்கொண்டிருக்கின்றது. கடந்த மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி ஆஸ்திரேலிய பழங்குடியின முஸ்லிம்களின் எண்ணிக்கை 60% உயர்ந்திருக்கின்றது.

பழங்குடியின முஸ்லிம்கள் என்றாலே இவர்கள் குறித்து அறிந்துக்கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே அதிகரித்துவிடுகின்றது. ஏன் இவர்கள் முஸ்லிமானார்கள்? ஏதேனும் தனித்துவமான காரணங்கள் இருக்கின்றனவா? இவர்கள் இஸ்லாமை தழுவியதின் பின்னணி என்ன?

இவர்களின் வாழ்வை உற்றுநோக்கினால் இவர்களின் மனமாற்றத்துக்கு பின்னால் மிகவும் நெகிழ்ச்சியான, தனித்துவமான, உணர்வுப்பூர்வமான காரணங்களை நாம் அறிய முடியும். அவற்றை நான் விவரிப்பதை விட துறைச்சார்ந்த வல்லுநர் ஒருவர் விவரிப்பது கட்டுரைக்கு வலு சேர்ப்பதாய் அமையுமென நம்புகின்றேன்.

டாக்டர் பீட்டா ஸ்டீவன்சன், ஆசிய இன்ஸ்டிடியுட்டின் மதிப்புமிகு உறுப்பினராக இருப்பவர். தன்னுடைய "Dreaming Islam" என்ற புத்தகத்திற்காக ஆஸ்திரேலிய பழங்குடியின முஸ்லிம்களிடையே ஆய்வு மேற்கொண்டிருந்தார் ஸ்டீவன்சன். ஆஸ்திரேலியாவின் SBS ஊடகத்திற்காக அவர் அளித்த நேர்காணல் பழங்குடியின முஸ்லிம்கள் குறித்த பல சுவாரசியமான தகவல்களை நமக்கு தருகின்றது.

Friday, October 5, 2012

என் வாழ்நாளில் முதல் முதலாக தொழுகைக்கு என்னுடைய தலையை தரையில் பதித்தேன்

பிரபல பாப் இசை பாடகி இஸ்லாத்தினை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் தியாம்ஸ் என்றழைக்கப்படும் மெலனி ஜார்ஜியடெஸ் (Mélanie Georgiades, known as Diam’s) பிரபல பாப் இசை பாடகி இஸ்லாத்தினை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். சுமார் மூன்று வருடங்களாக தமது இசை நிகழ்ச்சிகளை விட்டு ஒதுங்கிக்காணப்பட்ட அவர் என்ன செய்கிறார் என்ற ஏக்கம் ஆவலும் அவரின் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு  ஓர் அதிர்ச்சியை கொடுத்தார்.

TF1 என்ற தனியார் தொலைக்காட்சியில் பர்தாவுடன்  தோன்றிய அவர் தாம் இஸ்லாத்தினை பரிப்பூர்ணமாக ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார்.  இஸ்லாமியர்கள் பர்தா அணிவதை பிரென்ஞ் அரசு தடை செய்தாலும் அதற்கு மாற்றமான விளைவுகளையே அது சந்தித்துவருவதற்கு மேலும் ஒரு ஆதாரமாக அமைந்துள்ளது.

தற்போது எப்படி உணர்கிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு

தாம் மிகவும் மகிழ்ச்சியாகவும் சவுகர்யமாகவும் அமைதியாகவும் இருப்பதாக உணர்கிறேன் என்று பதிலளித்தார். இஸ்லாத்தினை நன்கு உணர்ந்த பிறகும் புனித குர்ஆனை நன்கு படித்த பின்புமே முழுமனதுடன் இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார். மேலும் தற்போது நான் ஏன் வாழ்கிறேன் எதற்காக பூமியில் இருக்கிறேன் என்பதனை உணர்ந்தேன் என்றும் கூறினார்.

என்னுடைய இஸ்லாமிய நண்பர் ஒருவர் தாம் தொழுகைக்கு செல்வதாக கூறினார் அப்போது தாமும் வருவதாக கூறி தொழுகைக்கு சென்றேன். அப்போது என் வாழ்நாளில் முதல் முதலாக என்னுடைய தலையை தரையில் பதித்தேன். அப்போது தமக்கு ஏற்பட்ட உணர்வு இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை என்பதை உணர்ந்தேன். அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருக்கும் ஸஜ்தா செய்யக்கூடாது என்பதனையும் உணர்ந்தேன் என்றும் கூறினார்.


            இன்று                                                              அன்று

Source

Thursday, October 4, 2012

ஹாஜிகளுக்கான வழிகாட்டி அட்டவணை !!!

ஹாஜிகளுக்கான வழிகாட்டி அட்டவணை !!!
தகவல் தந்தவர்கள் : மொஹிதீன் அப்துல் சலாம்  மற்றும்
முஹமது  ஆரிப்    மறைக்காயர்

மணிச்சுடர் வெள்ளி விழா நேரலை

மணிச்சுடர் வெள்ளி விழா நேரலை...http://muslimleaguetn.com/live.html

லண்டனில் கந்தூரி !


 அட ! தலைப்பை பார்த்து தடுமாற வேண்டாம், தலைப்பிற்கான அர்த்தம் "ஒன்றுகூடும் விழா" அவ்வளவு தான். இடம்:  லண்டன். இங்கே ஷிர்க் இல்லை இணை வைப்புக்கான சூழல் இல்லை, கப்ரு வணக்கம் இல்லை (விழா நடக்குமிடத்தில் யாருடைய அடக்கஸ்தலமேதும் இல்லை)

இந்த இடம்  மஸ்ஜித் & இஸ்லாமிய தாவா செண்டருக்கு சொந்தமான பெரிய  இடம். இந்த சென்டர் 2 மஸ்ஜிதை நிர்வகிக்கிறது. மஸ்ஜிதுக்கு வெளியே அவ்வப்போது டேபிள்கள் போட்டு தாஃவா பணி செய்வார்கள். இந்த சென்டரின் கீழ் நர்சரி ஸ்கூல், மேல் நிலைப் பள்ளி மற்றும் ஹிஃப்ளு மதரசா ஆகியவை இயங்குகின்றன. இது வருடாந்திர விழாவாக நடக்கும் இடத்தின் ஒரு பகுதியில் பெரிய அளவில் கல்லூரி கட்டும் திட்டமும் இருக்கிறதாம் இன்ஷா அல்லாஹ்.

இதனை மேலாண் செய்பவர்கள் குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நம் சகோதரர்களே. இங்கே வருடந்தோரும் ஒரு நாள் மட்டும் பெரிய அளவில் இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட கடைகளை அனுமதித்து குடும்பத்தோடு இங்கு வந்து ஒரு நாளை சந்தோசமாக களிக்கின்றனர். அதோடு சிறுவர்களின் மகிழ்வுக்காக ராட்டினம் போன்ற பல்வேறு விளையாட்டு அம்சங்களும் உண்டு. சிறுவர்களுக்கு கால்பந்து விளையாட்டு நடத்தி பரிசளித்து ஊக்கப்படுத்துவதும் உண்டு. மேலும் பிள்ளைகளை கழுதையில் ஏற்றி சவாரி செய்தல் (நம்மூரில் யானையில் ஏறுவது போல) மற்றும் முக பெயின்ட்டிங்,மருதானி  இடுதல் போன்ற பல்வேறு அம்சங்களும் உண்டு.

Tuesday, October 2, 2012

படித்தேன் பிடித்தேன் (பகுதி-5)

அன்புடன் புகாரி

படித்தேன் பிடித்தேன் 013

காடுகள் காற்றில் இசைக்கின்றன.
கடலின் அலைகள் இசைக்கின்றன
முகிலினங்கள் மோதி மோதி இசைக்கின்றன.
மழை ஒரு கச்சேரியே வைக்கிறது
பறவைகளின் படபடக்கும் சிறகுகள் இசைக்கின்றன

தாய் தன் மழலையைக் கொஞ்சும்போதுகூட தாளலயம் கூட்டித்தான் கொஞ்சுவாள்.

ம்ம்... ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்....... என்று இசைத்துத்தான் தாலாட்டித் தூங்க வைப்பாள்.

இப்படியாய் மனிதனின் எல்லா நிலைகளிலும் இசை நிறைந்து இருக்கிறது.

தொழுகையின் அழைப்பான ஆதான் நபிகளின் காலத்திலேயே சகோதரர் பிலால் அவர்களால் இசைகூட்டி இனிமையாகப் பாடப்பட்டது.

புல்புல் என்று முகம்மது நபி அவர்களால் பிலால் அழைக்கப்பட்டார்.

எங்கள் மீதொரு
பௌர்ணமி பிரகாசிக்கிறது
அது மக்காவிலிருந்து
விடைபெற்று வருகிறது

என்று மதீனாவின் மக்கள் ஒன்றாய்க் கூடி மகிழ்ச்சியில் நபிகளை வரவேற்றுப் பாடினார்கள்.

எல்லாக் காரியங்களிலும் குலையிடுதல் இஸ்லாமிய வீடுகளில் வழக்கமான ஒன்று.

அதை அதிரையில் மட்டுமல்ல, சவுதியிலும் கேட்கலாம்.

இப்படி ஏராளமாக அடுக்கிக்கொண்டே போகலாம்.

உங்கள் குழந்தை உங்களோடு மொழிவது இசை.
அதனோடு நீங்கள் குழைவது இசை.
குர்-ஆன் ஓதுதல் இசை
தொழுகைக்கான அழைப்பு இசை

தாய் தன் பிள்ளையின் வயிற்றில் வாயை வைத்து முகத்தை ஆட்டி ஊதுவாள். அப்போது எழும் இசைகேட்டு குழந்தை இசை நயத்தோடு சிரிக்கும்.

"அல்லாஹ்வின் தூதரே!" உங்களை நாங்கள் நேசிக்கின்றோம்.

அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹு)உங்கள் அனைவரும் மீது அல்லாஹுவுடைய சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக !

நிச்சயமாக எவர்கள் (ஓரிறை )நம்பிக்கை கொண்டு ,நற்செயல்கள் செய்து தொழுகையைக் கடைப்பிடித்து ,ஜகாத்தையும் கொடுத்து வருகின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய( நற் ) கூலி அவர்களுடைய ரப்பிடத்தில் இருக்கிறது -இன்னும் அவர்களுக்கு எவ்வித பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும்மாட்டார்கள் .அல்பகரா :277

 "நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபு கதாதா (ரலி) அவர்கள்.
நூல் : புகாரி.

LinkWithin

Related Posts with Thumbnails