Wednesday, April 24, 2013

நிகழ்வும்-நிஜமும்-01 (அதிரை குமார்)


அன்புச் சகோதரர்களே ஜித்தா தஃவாகளத்தைப் பொறுத்தவரை, ஜித்தா துறைமுக அழைப்பகம் துறைமுக ஊழியர்களுக்கு சுமார் இருபது ஆண்டுகளாக மார்க்கப் பணியாற்றுவதை தாங்களும் நன்கு அறிந்ததே. அந்த வகையில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்யும்நோக்கில் துறைமுக நுழைவாயில் இலக்கம் ஏழு அருகில் ஒரு படிப்பகத்தை துறைமுக அழைப்பகம் அமைத்துள்ளது. அந்த படிப்பகதில் பயன்பெற்ற பலரில் குறிப்பிட்டு சொல்லப்படவேண்டியவர் அதிரை குமார்.

Thursday, April 18, 2013

ஹஜ் 2013: விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் தேதி நீடிப்பு

நிகழும் 2013 ஆம் ஆண்டில் ஹஜ் பயணம் செல்ல விரும்புபவர்கள், மார்ச்-20 க்குள் (20-03-2013) விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு முன்பு அறிவித்திருந்தது.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் தேதி தற்போது 30-03-2013 ஆக நீடிக்கப் பட்டுள்ளது என்பதை வாசகர்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

இதற்கான சுட்டி (http://hajcommittee.com/ext_date_haj2013.pdf)


இது குறித்து அரசு வெளியிட்டுள்ள முந்தைய அறிக்கையில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டிருந்தது:

இந்த ஆண்டு 2013 ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்கள் விண்ணப்ப படிவங்களை எண்.13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸிடவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது இதற்கான விண்ணப்பத்தை www.hajcommittee.com என்ற இணைய தளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப் படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை, மனுதாரர்கள் வரும் மார்ச் 20ம் (20.03.2013) தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதற்கு முன் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

Monday, April 15, 2013

கண்ணுக்கு தெரியாத நரபலிகள்

சமீபத்தில் சென்னையில் மூன்று வயது குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதாக செய்தித்தாளில் வாசித்தோம். ஒரு குடுகுடுப்பைக்காரனின் பேச்சை கேட்டு ஓர் அப்பாவிப்பெண் இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டதாக தகவல். மத அடிப்படைவாதம் பெற்ற பிள்ளை மூடநம்பிக்கை. எனவே இச்செயலில் பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை.

தினமலரில் வாசித்த இன்னொரு செய்தி.

புதுக்கோட்டையில் வசிப்பவர் ஜாஹீர் உசேன். இவரது ஒரே மகள் நிலோபர்பானு, பதினெட்டு வயது (திமுக பொதுக்குழு உறுப்பினரான அப்துல்லாவின் உறவினர்கள் இவர்கள்). நிலோபர்பானு +2வில் 1100 மதிப்பெண் எடுத்து என்ஜினியரிங் படிக்க இடம் கிடைத்திருக்கிறது. ஆனால் செலவு செய்ய ஜாஹீரிடம் பணமில்லை. உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ பணம் கேட்க ஜாஹீருக்கு தயக்கம். எனவே மகளை கலைக்கல்லூரி ஒன்றில் சேர்த்திருக்கிறார். புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படித்து வந்தார் பானு.

குடும்பச் செலவுக்காக அருகிலிருந்த ஜெராக்ஸ் கடை ஒன்றில் பகுதிநேரமாக பணியும் செய்து வந்திருக்கிறார் பானு. இதில் கிடைக்கும் சொற்ப வருமானம் மூலமாக தந்தையுடைய நிதிச்சுமையை குறைத்திருக்கிறார். கடையில் பணிபுரியும்போது அடிக்கடி மின்தடை ஏற்பட்டிருக்கிறது. மின்தடை ஏற்படும் போதெல்லாம் ஜெனரேட்டரை இக்கடையில் பயன்படுத்தியிருக்கிறார்கள். போனவாரத்தில் இரவு நேரத்தில் ஏற்பட்ட மின் தடையின் போது ஜெனரேட்டரை ‘ஆன்’ செய்திருக்கிறார் பானு. இருட்டில் கொஞ்சம் தடுமாறிய அவரது தாவணி ஜெனரேட்டர் மோட்டாரில் சிக்கிக் கொண்டது. இதை எடுக்க முயற்சிக்கும்போது அவரது தலைமுடியும் மோட்டாரில் சிக்கி, ஏடாகூடமாக தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார். தலையில் பலத்த காயமடைந்த பானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

Saturday, April 6, 2013

மயக்க மருந்தில்லாமலேயே அறுவை செய்து கொண்டவர்!

 உர்வத்து இப்னு மூபைர்(ரலி) அவர்கள்(624-692) உடல் பாதிக்கப் பட்டு அவரது ஒரு கால் முழங்கால் வரை எடுக்கப்பட வேண்டிய அவசியம் வந்தது. மருத்துவர் அறுவை செய்யும் போது வலி அறியாமல் இருக்க ஒரு குவளை மது சாப்பிடச் சொன்னார். உயிருக்கு ஆபத்தான நிலை வர அவசியம் கருதி சில நேரங்களில் சில விதிவிலக்கு மார்க்கத்தில் அனுமதித்திருப்பதனையும்  சுட்டிக் காட்டினார். அதற்கு உர்வத்து இப்னு மூபைர் அவர்கள் மறுத்து விட மயக்க மருந்தில்லாமலேயே அறுவை செய்யும்படி மருத்துவரிடம் சொல்லிவிட்டார்கள். 'அப்படியானால் நான்கு நபர்கள் அவரது உடலைப் பிடித்துக் கொள்ளுங்கள்' என்று மருத்துவர் சொல்ல அதற்கும் உர்வத்து இப்னு மூபைர் அவர்கள் 'தேவை இல்லை உங்கள் அறுவை சிகிச்சையை தொடருங்கள்' என சொல்லி விட்டாகள். இறைவனது பெயரை மனதில் சொல்லி துதித்துக் கொண்டிருக்க நல்ல முறையில் அறுவை சிகிச்சை முடிந்தது .அல்ஹம்துலில்லாஹ். அனைத்துப் புகழும் இறைவனுக்கே .

 உர்வத்து இப்னு மூபைர் அவர்கள் 'அறுவை செய்து எடுக்கப் பட்ட காலின் பகுதியை முறையாக குளிப்பாட்டி அடக்கம் செய்யுங்கள்'  என மற்றவரிடம் சொல்லும்போது அவர் கூரியது 'அந்த கால் என்னை இறைவனை தொழ என்னை சுமந்துக் கொண்டு பள்ளிவாசலுக்குப் போக இவ்வளவு காலங்கள் உதவியது' என நெஞ்சுருக சொன்ன நிகழ்வு இஸ்லாமிய சரிதத்தில் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்து விட்டது.

Friday, April 5, 2013

பொய்யை சொல்லி மக்கள் மனதில் நச்சுக் கருத்துகளை சிலர் தூவ விரும்புகின்றனர்.


இஸ்லாம் என்றால் கீழ்படிதல், அமைதியை நாடுதல், ஒப்படைத்தல், ஏற்றுக் கொள்ளுதல் இவ்விதமாக பொருள் உண்டு. இஸ்லாம் உயர்ந்த தத்துவத்தை தன்னகத்தே கொண்டுள்ளது .இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுபவன் ஒரு காலமும் வன்முறையை பின் பற்ற முடியாது .முஸ்லிம் என்றால் ஓர்  இறைவனுக்கு அடிபணிதல் என்பதையே குறிக்கும் . இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவர் ஏகத்துவ கொள்கையை பின்பற்றுபவராகத்தான் இருக்க முடியும்.அல்லாஹ் (இறைவன்)  ஒருவனே  (வணக்கத்திற்கு தகுதியுள்ளவன்) அவன் எவரையும் பெற்றெடுக்கவுமில்லை, அவன் எவருக்கும் பிறக்கவுமில்லை. அவனுக்கு எதுவும் நிகரில்லை.(குர்ஆன்; அத்தியாயம் ; 112)

 குர்ஆனைப் பாதுக்காக்கும் பொறுப்பை இறைவனே எடுத்துக் கொண்டுள்ளான் .குர்ஆன் இருக்க இஸ்லாமும் இருக்கும். இஸ்லாத்தை பரப்புவதற்கு உலகளவில் ஒரு அமைப்புமில்லை. ஒரு இயக்கமும் இல்லை. ஆனாலும் அது பரவுகின்றது வளருகின்றது. “அவர்கள் அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர். ஆனால் காஃபிர்கள்(இறை நம்ப்பிக்கை அற்றோர்) வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூரணமாக்கியே வைப்பான். (61:8)

Tuesday, April 2, 2013

நாகூர்.ஹாஜி,E.M.ஹனீபா அவர்களுக்கு வாழ்த்துகள்

வெள்ளி நரை, வெண்கலக் குரல், வேகமான நடை, விவேகமான பேச்சு, வீறுகொண்ட மிடுக்கு இவற்றின் மொத்த உருவம்தான் இசைமுரசு E.M.ஹனீபா
இந்த மாமனிதன் இன்னும் பல ஆண்டுகள் நீடுழி வாழ வேண்டும் என்பதுதான் அனைவரும் செய்யும் பிரார்த்தனை.
நாகூர் ஹனிபா -- அவர் ஒரு சரித்திரம் -- அப்துல் கையூம்

நாகூர் ஹனிபா -- அவர் ஒரு சரித்திரம் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள் 

"நீடூர் சையீத் அவர்களின் திருமணத்திற்கு மாப்பிள்ளை தோழனாக நானும் A.K.S.அப்துஸ்ஸமது அண்ணனும் இருந்தோம்" -நாகூர் E.M.ஹனீபா

S.E.A. முஹம்மது அலி ஜின்னா
Jazakkallahu Hairan


LinkWithin

Related Posts with Thumbnails