Friday, December 31, 2010

அந்த தைரியம் யாருக்கு வரும்?-- by டாக்டர் ஹிமானா சையித்


 அந்த தைரியம் யாருக்கு வரும்?
தமிழக தென் மாவட்டமொன்றின் கடற்கரைக் கிராமம். நீண்ட நாட்களாக கட்டுமாணத்தில் கிடந்த பள்ளிவாசல் சுறுசுறுப்புடன் கட்டி முடிக்கப் பட்டு திறப்பு விழா காண்கிறது. அந்தப் பகுதி முஸ்லிம்களின் பெருவாரியான வருகையால் அந்தப் பள்ளி வளாகம் எங்கும் மனிதத் தலைகள்! உச்சி நேரம் நெருங்க நெருங்க வேன்களும் கார்களும் அந்தக் கிராமத்தை முற்றுகையிட ஆரம்பித்தன. ஆயிற்று... ஜும்ஆ நேரமும் நெருங்கிற்று! விழாக் குழுவின் தலைவர் செயலர் போன்ற நிர்வாகிகள் ஒரு வித பதற்றத்தில்!
காரணம், பள்ளிவாசலைத் திறந்து வைக்க வேண்டிய முக்கியப் பிரமுகர் இன்னும் வந்தபாடில்லை!
செல்போனெல்லாம் தமிழகக் கிராமங்களை எட்டியிருக்காத காலம்.
பள்ளிவாசலில் இருந்த போனில் பல முறை கால் போட்டுப் பேசிப்
பார்த்தாகிவிட்டது.பிரமுகர் ஊரிலிருந்து ஜீப்பில் புறப்பட்டு விட்டார் என்ற தகவல் மட்டுமே தெரிந்து கொள்ள முடிந்தது.
"இதோ இப்போது வந்துவிடுவார்!"; "இன்னும் அரை மணி நேரத்தில்
வந்துவிடுவார்!";
"இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்து சேர்ந்துவிடுவார்!" என்றெல்லாம் பல முறை அறிவித்தாயிற்று.
ஆனால்.... பிரமுகர் வந்தபாடில்லை!
ஊர் நிர்வாகிகளின் முகங்களில் ஏகமாய் இறுக்கம்!

ஒரு சில இளவட்டங்கள் தங்களின் அதிருப்திகளை முகங்களில்
பிரதிபலிக்க... சிலர் முணுமுணுக்க ..சில சலசலப்புகள்!
அழைப்பின் பேரில் வந்திருந்த பக்கத்து ஜமாஅத்துக்களைச் சேர்ந்த நிர்வாகிகள்
அக்கிராம நிர்வாகிகளை நெருக்கத் தொடங்கி விட்டனர்.
"நேரம் போய்க்கிட்டே இருக்குது பாருங்... ஜும்ஆவை நேரம்
கடத்தியெல்லாம் நடத்த முடியாது... அதுதான் பெரிய ஹளரத்
காலையிலேயே வந்து காத்துக் கெடக்காங்கள்ல?...அவங்கள வச்சே பள்ளியை திறந்துட்டு, ஜும்ஆ ஏற்பாட்டக் கவனிக்கலாம் ....
பிரமுகர் பின்னால வந்து விழாவுல கலந்துக்கிடட்டுமே? " என்ற
ஆலோசனைகள்!
ஊர் நிர்வாகிகள் சிலருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு அதில் உடன்பாடு
தெரிகிறது. ஆனால் மூத்தவர்கள் அதற்கு ஒப்ப மறுக்கிறார்கள்.
நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது;
சலசலப்பு அதிகரிக்கத் தொடங்குகிறது.
பள்ளியின் வெளிவராண்டாவில் ஒரு மூலையில் அமர்ந்திருந்த
பெரிய ஹளரத் - துஆவுக்காகவும் சிறப்பு ஜும்ஆவுக்காகவும்
திருநெல்வேலியிலிருந்து அழைக்கப் பட்டிருந்த ஹளரத் - மெல்ல எழுந்தார்கள்.
"அஸ்ஸலாமு அலைக்கும்"
என்று உரக்க ஒலித்தார்கள்!ம்பீரமான அந்த ஸலாம் முழக்கத்தில் கூட்டத்தின்
கவனம் முழுவதும் இப்போது அவர்களை நோக்கித் திரும்பியது !
சலசலப்பு மறைகிறது!
ஹளரத் அவர்களின் பயான்(சொற்பொழிவு) தொடங்கிவிடுகிறது!
"இஸ்லாத்தில் நேரந்தவறாமை எவ்வளவு முக்கியம் என்பதிலிருந்து
தொடங்கி, இறையச்சம் பற்றிய உரை கம்பீரமாக நகர்கிறது!
அவசரம் அவசரமாக மைக் சரி செய்யப்பட்டு அவர்கள் முன் வைக்கப்படுகிறது
.
இப்போது ஒட்டு மொத்தக் கூட்டமும் பள்ளியின் வெளிப்பகுதி முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்கிறது. பிரமுகர் இன்னும் வந்தபாடில்லை!
ஹளரத் பகிரங்கமாக அறிவிக்கிறார்கள்!
"இஸ்லாத்தில் தனிமனிதர்களுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்றாலும் - நியதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த மனிதர்களுக்காக வணக்க வழிபாடுகளைத் தள்ளிப்போட யாருக்கும் அதிகாரமில்லை. சரியாக ஜும்ஆ நேரம் வந்ததும் நான் குத்பாவைத் தொடங்கிவிடுவேன்."
கூட்டம் முழுதும் அதை அப்படியே அங்கீகரிக்கிறது.
ஆயிற்று...!இன்னும் ஓரிரு நிமிடங்களே பாக்கி !
ஆர்ப்பாட்டமாக- பெரிய ஆர்ப்பரிப்பான பட்டாளத்தின்
'அல்லாஹ¤ அக்பர்' என்ற முழக்கத்துடன் நுழைகிறார் பிரமுகர்!
"இறையில்லக் கொடை வள்ளல் வாழ்!" என்ற கோஷங்களும்
இடையிடையே!

கூட்டத்தில் இப்பொழுது ஒழுங்கு குறைகிறது. உட்கார்ந்திருந்தவர்கள் சிலர் எழுந்து பிரமுகருடன் பரபரப்பாக நுழைகின்ற கூட்டத்துக்கு இடம் கொடுக்க வேண்டியிருக்கிறது.
ஊர் நிர்வாகிகள் பிரமுகரை இழுத்துச் சென்று பள்ளியின் தலைவாசல் கதவைத் திறக்க வைக்க, முண்டியடித்துக் கொண்டு கூட்டம் உள்பள்ளிக்குள் திமுதிமு வென்று ஓடுகிறது! எத்தனை பேர் உளுவுடன் என்பது
அல்லாஹ்வுக்கே வெளிச்சம் என்று ஒருசிலர் முணுமுணுக்கிறார்கள்!
சில ஆயிரம் ரூபாய்களை பள்ளிகள் கட்ட அன்பளிப்புச் செய்கின்ற அந்தப் பிரமுகர் வேண்டுமென்றே இப்படி விழாவுக்குத் தாமதமாக வருவது பழக்கம் என்றும் சிலர் பேசிக் கொள்கின்றனர். அந்த விழாவில் நானும் இருந்தேன்.
அந்த ஹளரத் கிப்லா அவர்களின் தாட்சண்யமற்ற தைரியத்தை நேரில் பார்த்து விளங்கிக் கொண்டேன்.
அதன் மூலமே அவர்களுடன் தொடர்பு... நெருக்கம்!
அவர்களின் 'ஜமாஅத்துல்உலமா' மாத இதழில் 20 வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து "நாடும் நாமும்" என்ற தொடரை எழுதி வருகிறேன்.
மௌலானா மௌலவி அபுல் ஹஸன் ஷாதலி ஹளரத் அவர்களை
- அவர்களது தைரியத்தை மறக்க முடியுமா என்ன?

.டாக்டர் ஹிமானா சையத்
( 'ஊற்றுக்கண்' எனது 36- வது நூல்.
அதில் சில கட்டுரைகள் என் வாழ்வில் சந்தித்த ஆலிம்கள்)

Tuesday, December 28, 2010

பெண்ணைத் தாண்டி வருவாயா

பெண்ணை மட்டும் பேசிடும் புலவா

கண்ணில் கண்டிடாக் கடவுள் ஆட்சி

விண்ணில் மண்ணில் விந்தைக் காட்சி

எண்ணிப் பார்த்தே ஏத்திடு புலவா

உள்ளே சென்ற ஓரணு கருவாய்ப்

பிள்ளைச் செல்வமாய்ப் பிரசவம் பெறுதல்;

வாயுள் சென்ற தாயின் பாலே

நோயினை விரட்டிட நலம்தரும் உதிரமாய்

இதயக் கூட்டினுள் இருத்தல் எப்படி?

அதனை எண்ணினால் அவனைக் காண்பாய்

தந்தை விந்தை தந்தும் அந்த

தந்தயின் தந்தை தந்த விந்தே

உந்தை “நான்”எனும் உணர்வே விந்தை!!

சொந்தம் யாரெனச் சொல்நீ “நானா?”

நானா நீயா நாளெலாம் வழக்கு

பேனா தந்த பேரிறை வழங்கிய

அறிவினை மறந்து அல்லற் பட்டதால்

நெறியினைத் துறந்து நிம்மதி இழந்தாய்

உன்னை நோக்கின் உன்னிறை அறிவாய்

உன்றன் பாட்டே உன்னிறை அறியவே



குறிப்பு ”அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்”(அல்-குர் ஆன் அத்யாயம் 96: வசனம் 04)

:*பேனா*

யாப்பிலக்கணம்:

நிலைமண்டில அகற்பா

“கவியன்பன்”கலாம், அதிராம்பட்டினம்


Monday, December 27, 2010

ஊழல் விஞ்ஞானி கருணாநிதி, ஊழல் மகாராணி ஜெயலலிதா (வணங்காமுடி பதில்கள்)




வணங்காமுடியாரே, யோகா பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது மதம் சம்மந்தப்பட்டதா? - சேக் முகம்மது, மாதவலாயம்
யோகா தியானம் போன்றவை இந்திய மரபு சார்ந்தவை;மிகப்பழமையானவை. தியானம் மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியைத் தரும் பயிற்சி; யோகா மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் பயிற்சி. சித்தர்களும் யோகிகளும் இதைத்தான் செய்தனர். சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு நிலைகளையும் அவர்கள் வகுத்துக் கொண்டனர். விடை மற்றொன்று விரித்தலாகி விடும் என்பதால் அவை பற்றி இங்கே விளக்கப் போவதில்லை. யோகம் அல்லது யோகாவைப் பயின்ற சித்தர்களும் யோகிகளும் சைவ மரபைப் பின்பற்றியவர்கள் ஆதலால் பிற சமயத்தினர் அதில் அக்கறை செலுத்தவோ பயிற்சி பெறவோ இல்லை. அமெரிக்கா போன்ற மேல்நாடுகளுக்குச் சென்ற மகேஷ் யோகி, ரஜினீஷ் போன்றோர் அங்கே யோகாவைப் பிரபலப்படுத்தினர். எதையும் மேனாட்டான் சொன்ன பிறகே சொரணை பெறும் நாம், யோகா பயில ஆர்வப்பட்டபின் இங்கும் யோகா வகுப்புகள் தொடங்கின. ஆனால் சந்தர்ப்ப வசத்தால் யோகா கற்றுத்தரும் ஆசான்கள் பெரும்பாலும் இந்துக்களாக இருப்பதாலும் யோகாவில் மனதை ஒருமுகப்படுத்தச் சொல்லித்தரும் சில சொற்களும் சமஸ்கிருதத்தில் இருப்பதாலும் யோகாவை மதம் சார்ந்ததாக்கி விட்டன.

கவர்ச்சிப்புயல் சில்பா ஷெட்டி யோகா கற்றுத்தருகிறாராம்; நீங்கள் அவரிடம் கற்றுக்கொள்ளுங்களேன்:-))

என் கொழுப்பை குறைக்க கடைப் பிடிக்க வேண்டிய உணவு முறைகள் குறித்து சற்று சொல்லுங்களேன்? - செல்வி
"என் கொழுப்பைக் குறைக்க" என்று மொட்டையாக வினா உள்ளதால் சற்றுக் குழம்பிவிட்டேன். கொலஸ்ட்ரால் எனப்படும் இரத்தக்கொழுப்பு பற்றி வினவியுள்ளீர்கள் என நினைக்கிறேன். இது போன்ற வினாக்களுக்கு என்னைப்போன்ற ஊடகத்தாரிடம் அறிவுரை கோருவதை விட உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நியூட்ரீஸியனிடம் கேட்பதே பயன் தரும். நாங்கள் தகவல் மட்டுமே தர முடியும்.

ஆடு, மாடு ஆகியவற்றின் இறைச்சி, ஈரல், மூளை, குடல், கிட்னி போன்றவற்றிலும் நண்டு, இரால் போன்ற மீன் வகையிலும்கொழுப்பு அதிகம். இவ்வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய்யில் பொரித்தவை, முட்டையின் மஞ்சள் கரு கொழுப்பு நீக்கப்படாத பால் பொருட்கள் போன்றவற்றையும் தவிர்த்தல் நன்று.

நார்ச்சத்து அதிகம் உள்ளவற்றை உண்ணுங்கள்.காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இயற்கையோடியைந்த வாழ்வு வாழ்ந்த காலத்தில் இவை போன்ற பிரச்சனைகள் இல்லை. கைக்குத்தல் அரிசி உணவு, கிணற்றில் நீர் இறைத்தோ ஆற்றிலும் குளத்திலும் நீச்சல் அடித்தோ குளியல், அம்மியிலும் ஆட்டுக்கல்லிலும் உரலிலுமாகத் தயாரான உணவுப்பொருட்கள், இரசாயண உரமும் பூச்சிக்கொல்லி மருந்தும் இல்லாமல் விளைவித்த காய்கறிகள்,வீட்டில் வளார்த்த ஆடு கோழி போன்றவை, உடல் உழைப்பும் உரிய ஓய்வும் என டென்ஷனோ ஸ்ட்ரெஸ்ஸோ இல்லாமல் வாழ்ந்த காலத்தில் இரத்தக்கொதிப்பு, நீரிழிவு , கொலஸ்ட்ரால் போன்றவை மிகக் குறைவானோர்க்கே இருந்தன.

எல்லோருக்கும் சொல்வது,நிறையத் தண்ணீர் குடியுங்கள்; நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்; உங்கள் உயரத்துக்கும் வயதுக்கும் ஏற்பக் கணக்கிட்டு உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள். புகை பிடிக்காதீர்கள்,பீட்ஸா பர்கர் ஐஸ்கிரீம் போன்றவற்றை அதிகம் உண்ணாதீர்கள்.


என்.ஜி.ஓ. ஒன்று ஆரம்பித்தால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்கிறானே என் நண்பன் ஒருவன். உண்மையா வ. மு. அவர்களே? -ஜவஹர், நெய்வேலி

நான் கலூரியில் படித்தகாலத்தில், எங்கள் கல்லூரியின் பின்வாசல் இருக்கும் சாலையில் என் ஜி ஓ சங்கக் கட்டிடம் என்ற பெரிய பெயர்ப் பலகையுடன் ஒரு கட்டிடம் இருந்தது. என் ஜி ஓ என்றால் என்ன என வினவியபோது நான் கெஸடட் ஆஃபீஸர் எனச் சொன்னார்கள். இப்போது அந்த வழக்கம் இல்லை. இப்போது என் ஜி ஓ என்றால் அரசுசாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எனச் சிறு பிள்ளைகளும் அறியும் வண்ணம் ஆங்காங்கே பரவலாக முளைத்து விட்டன. இந்தத் தொண்டு நிறுவனங்களுக்கு அரசும் வங்கிகளும் கடனுதவி செய்கினறன.சில என் ஜி ஓக்களுக்கு மேலை நாடுகளில் இருந்தும் பெரும் பணம் வருகிறது. இதனால் பணப்புழக்கம் அதிகமாவதும் அவற்றில் சில முறைகேடுகள் நடப்பதும் சகஜமாகி விட்டன. இதைத் தெரிந்ததால் உங்கள் நண்பருக்கும் ஆசை வந்திருக்கலாம்.

உண்மையிலேயே மக்கள் தொண்டாற்றும் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளன. பிரதமராக இருந்தபோது வாஜ்பாய் காலில் வீழ்ந்து வணங்கினாரே அந்தச் சின்னப்பிள்ளை என்ற தமிழ்நாட்டு மூதாட்டியின் மகளிர் சுய உதவிக்குழுவைச் சான்றாகக் கொள்ளலாம்.


பூமியிலிருந்து உயரே செல்லச் செல்ல வெப்பநிலை குறைந்து கொண்டே போகிறதே அது ஏன், எப்படி அய்யா?- அப்பாஸ், கடலூர்பூமியில் இருந்து உயரே செல்வதற்கு ஆகாய விமானம், ராக்கெட் போன்றவை தேவை. அவற்றில் செல்லும்போது நீங்கள் வெளிக் குளிரை உணர முடியாது. தரை / பூமி மட்டத்திலிருந்து உயரமான மலைக்குச் செல்லும்போது நீங்கள் குளிரை உணர்வீர்கள். ஏனெனில் கடல் மட்டத்தில் காற்றின் அடர்த்தியும் ஈரப்பதமும் கூடுதலாக இருக்கும். கடல்மட்டத்திலிருந்து உயரே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தியும் ஈரப் பதமும் குறையும். அதனாலும் மலைமேல் அடர்த்தியாக இருக்கும் காடுகளாலும் நீங்கள் குளிரை உணரலாம்.

கருணாநிதி - மன்மோகன் சிங் இருவரின் பலம் மற்றும் பலவீனம் என்ன? - சுந்தர், நாகர்கோவில்
கருணாநிதியின் கட்டுப்பாட்டில் ஒரு குடும்பமாகக் கட்சி இருப்பது அவரது பலம். இன்று வரை அவர் தலைவராக இருப்பது அதனால்தான்.

கருணாநிதி தம் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது அவரது பலவீனம். அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிப்போமா என்ற தவிப்பு அதனால்தான்.

மன்மோகன்சிங் அரசியல்வாதியாக இல்லாமல் இருந்து பிரதமர் ஆனது பலம். கம்யூனிஸ்ட்களின் மிரட்டலைப் புறந்தள்ளியது அதனால்தான்.

சோனியாவையே சார்ந்திருப்பது பலவீனம். ஸ்பெக்ட்ரம் முறைகேடு போன்றவற்றை முதலிலேயே உரத்த குரலில் கண்டிக்க முடியாமல் போனது அதனால்தான்.

ஒருவர் இந்தக் கட்சி, அந்த கட்சி என்று மாறும்பொழுது அதனை எப்படி அந்த கட்சி எற்றுகொள்கின்றது. பாசமா? பழி வாங்கும் எண்ணமா ? இதுபோன்று மற்ற நாடுகளிலும் நடைபெறுவது உண்டா? - முஹம்மது அலி ஜின்னா
அந்தக்கட்சி இந்தக்கட்சி எனத் தம் விருப்பம்போல் மாறி வருபவர்களை எல்லாம் உடனடியாகச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

மாறி வருபவர் இருந்த கட்சியில் அவர் பெற்றிருந்த இடம்,அவரது சொந்த ஊரில் அல்லது சொந்தத் தொகுதியில் அவருக்கிருக்கும் செல்வாக்கு, அவரைத் தங்கள் கட்சியில் சேர்ப்பதால் எதிர்க்கட்சியில் ஏற்படும் சரிவு, தங்கள் கட்சியில் ஏற்படும் வளர்ச்சி, உட்கட்சிப்பூசல் வருமா வராதா, தேர்தல் நேரத்தில் அவரால் நன்மையுண்டா எனப்பல அம்சங்களையும் அலசித்தான் பிறகட்சியிலிருந்து வருபவர்களைச் சேர்ப்பர். அல்லது காத்திருப்புப் பட்டியலில் இருக்க வேண்டியதுதான்.

பாசம் ஏதும் கிடையாது; ஆனால் பழிவாங்கும் எண்ணம் உண்டு. அதற்காகவே பிற கட்சியின் செல்வாக்கான தலைவர்களைத் தம் கட்சிக்கு இழுக்கும் வேலை நடைபெறுகிறது.சான்றுக்கு அ இ அ தி மு கவில் இருந்து அனிதாராதாகிருஷ்ணன், முத்துச்சாமி போன்றோரையும் ம தி மு கவில் இருந்து கண்ணப்பன் போன்றோரையும் தி மு க இழுத்ததைக் கூறலாம். இப்படி, தி மு கவில் இருந்து பலரையும் இழுக்க அ இ அ தி மு கவும் நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

எம் ஜி ஆர் தி மு கவில் இருந்து பிரிந்து அதிமுக ஆரம்பித்தபோது வேலப்பன் என்ற ச ம உ காலையில் அ தி மு க மாலையில் தி மு க என அங்குமிங்கும் ஊசலாடிக்கொண்டிருந்த வேடிக்கையும் நடைபெற்றது. அச்சமயத்தில் தி மு க ஆதரவு ஆதித்தனார் குழுமப் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி வேடிக்கையாக இருக்கும்.

தி மு க வில் இருந்து விலகினால் "கட்சித்தாவல்"

தி மு கவிற்கு வந்தால் "தாய்க்கழகம் திரும்பினார்"

வெளிநாடுகளில் உண்டா என வினவியுள்ளீர்கள். அங்கெல்லாம் நம் நாட்டைப்போல் நூற்றுக்கணக்கில் பலப்பல கட்சிகள் இருப்பதாகத் தெரியவில்லை.

அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் அற்புதமாக இருந்த தமிழ் இப்போ ஏன் நைனா இப்படிக்கீது?? மொழி மாற்றத்திற்கான காரணம் என்ன? - சீமான்நேசன், அபுதாபி
ஒரு மொழியின் வாழ்வும் சாவும் அதைப் பேசுவோரின் நாவில்தான் இருக்கிறது. இன்று நாம் அன்றாடம் உரையாடும் தமிழில், அரபு, பார்ஸி, உருது, கன்னடம், தெலுங்கு மற்றும் சம்ஸ்க்ருத மொழிச்சொற்களைக் கலந்தே உரையாடுகிறோம். அதை விட மோசமாகத் தமிழர்களில் பெரும்பான்மையோர் "தமிங்கலம்" பேசுவோரே. மெல்லத்தமிழ் இனி செத்துவிடக் கூடாது என்ற கவலையிலேயே பிறமொழிக் கலப்பின்றித் தமிழைப் பேசவும் எழுதவும் வற்புறுத்திக்கொண்டே இருக்கிறோம். எனினும் பொதுமக்களிடம் கலந்துரையாடும் என்னைப்போலப் பலரும் அவர்களுக்கு விளங்கிட வேண்டும் என்ற மெய்யான அக்கறையால் பிறமொழிக் கலப்பில் வேண்டாவெறுப்பாக எழுத நேரிடுகிறது.

உருது, இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, போன்ற மொழிகள் பேசுவோர் சென்னையில் சங்கமித்துத் தமிழ் பேசத் தொடங்கியதால் அவரவரின் வட்டார மொழிகளும் கொச்சை மொழிகளும் கலந்து "ஸென்னைஸ்ஸெந்தமிள்" உருவானது.

சென்னையில் தூய நதியாக ஓடிய கூவம் இன்று துர்நாற்றம் வீசும் காரணம் என்ன என்பதைச் சிந்தித்தால் உங்களுக்கே விடை விளங்கும்.

திரைப்படங்களுக்கு தமிழ்ப்பெயர் சூட்டினால் வரிவிலக்கு அளிக்கப்படுவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? - தீன்
வீண்வேலை. இதனாலெல்லாம் தமிழ் வளார்ந்து விடாது. படத்தின் பெயர் மட்டும் தமிழில் இருக்கும்; உள்ளே வசனமும் பாடல்களும் பன்மொழிக் கலப்பில் இருக்கும். இதை நாம் அறிந்தே இருக்கிறோம். பின் ஏன் இந்தப் பம்மாத்து?

சமூக அக்கறையுடன் கூடிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்களுக்கு வரிவிலக்கும் உதவித்தொகையும் அளிப்பதே வரவேற்கத் தக்கது.

இது தொடர்பாக முன்னர் அளித்த விடையையும் காண்க!

ஊழல் விஞ்ஞானி கருணாநிதி, ஊழல் மகாராணி ஜெயலலிதா இவர்கள் ஆள்வதை தவிர தமிழகத்துக்கு வேறு ஏதேனும் வழி இல்லை? - விக்ரம், நெல்லிக்குப்பம்
“இவர்கள் ஆள்வதைத் தவிரத் தமிழகத்துக்கு வேறு வழி இல்லை” என்று உங்கள் கவலையைத் தெரிவிக்கிறீர்களா அல்லது, “வேறு ஏதேனும் வழி இல்லையா?” என வினாத் தொடுத்துள்ளீர்களா?

வினாவாகவே எடுத்துக் கொள்கிறேன்.

இருவரும் தத்தம் ஆட்சியில் செய்த மக்கள் நலப் பணிகளும் சாதனைகளும் இருவரும் அல்லது அவர்களின் கட்சியினரும் செய்த ஊழல்களும் வெட்ட வெளிச்சமானவை. அவை மக்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள்தாம் இருவரின் செயல்பாடுகளையும் சீர்தூக்கிப் பார்த்து மதிப்பிட்டுத் தேர்தலில் நல்ல தீர்ர்ப்புக் கொடுக்க வேண்டியவர்கள்.

மக்களில் நன்கு படித்த மற்றும் உயர்மட்ட வர்க்கத்தினர் தேர்தலில் வாக்களிக்கச் செல்வதில்லை. இடைப்பட்ட நடுத்தர வ்ர்க்கமும் இதர தொழில் செய்வோரும் பிரச்சாரத்தின் வலிமையில் மயங்கியும் அடித்தட்டு மக்கள் இலவசங்கள் மற்றும் ஓட்டுக்குக் கிடைக்கும் பணம் ஆகியவற்றின் அடிப்படையிலும் முடிவு எடுக்கின்றனர். அரசு ஊழியர்கள் தத்தமது அரசியல் சார்பின் அடிப்படையில் அல்லது அவர்களின் அப்போதைய பிரச்சனைகளைத் தீர்த்த அல்லது தீர்ப்பதாக வாக்குறுதியளிக்கும் கட்சியினருக்கு வாக்களிக்கின்றனர்.

பா ஜ க தமிழ் நாட்டில் பெரிய கட்சி இல்லை. மற்ற தேசீயக் கட்சிகளான காங்கிரஸும் இரு கம்யூனிஸ்ட்களும் திராவிடக் கட்சிகளின் தயவில் காலத்தை ஓட்டிவிட்டன. தனியாக அணி சேர்ந்து களம் கண்டாலும் ஆட்சியைப் பிடிக்கும் அளவு அவர்களுக்குப் பலம் இல்லை.

இன்றைய தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலையில், வேறு வழி இல்லா நிலையில் குறைந்த தீமையைத் தேர்ந்தெடுப்பதே அறிவுடையோர் செய்யும் செயல்.

இப்போது வினாவை மீண்டும் ப்டிக்கவும்.

வணங்காமுடி அய்யா அவர்கள் (2011ல்) முதல்வரானால் போடும் முதல் உத்திரவு என்னவாக இருக்கும்? - கருணாகரன்
அரசியல்கட்சியில் சேராமல்/ அரசியல் கட்சியைச் சாராமல் இந்தியாவில் யாரும் முதல்வராக முடியும் என்ற நிலை வந்தால்..... வணங்காமுடியும் முதல்வராகும் வாய்ப்புக் கிடைக்குமானால்.... - அது 2011இல் நடக்கவே நடக்காது என்பது ஒரு புறமிருக்க - கற்பனைக்கு என்ன காசா பணமா எனத் துணிந்து கற்பனை செய்தால்..முதல் ஆணை, 'தம் கடமையைச் செய்யாமல் நாற்காலியைத் தேய்த்துக் கொண்டு தண்டச் சம்பளம் வாங்கியும் கடமையைச் செய்வதற்குக் கையூட்டுப் பெற்றும் கொழுக்கும் அரசு ஊழியர்களை உடனடியாகப் பணி நீக்கம் செய்து வீட்டுக்கனுப்பும் ஆணை'யே!
(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)
கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
Source : http://www.inneram.com/2010122612721/vanagamudi-answers-26-12-2010

Sunday, December 26, 2010

சுதந்திரமா, பெண்ணுக்கா?

உலகத்தின் பெண்சுதந்திரம்
உலகமும், இந்தியாவும்
கண்ட பெண் சுதந்திரம்
என்ன சுதந்திரமாம்?

கண்ணும் , மனதும் கூசும்
பள்ளியிலே ஆரம்பிக்கிறது
பெண் குழந்தைகளின்
சுதந்திரம், அருவருப்பான
பாடலுக்கு ஒரு ஆட்டம்
கேட்டால் பள்ளி இறுதி
கொண்டாட்டம்!

மாநிலத்தில் அழகி போட்டி!
உலகளவில் ஒரு அழகி போட்டி!
பெண்ணின் அங்கங்களை அளந்து
ஒரு பூனை நடை!
ஒரு எலி நடை!
பெண்களின் உடலை மதிப்பிட்டு
மதிப்பெண் அளித்து தேர்ந்தெடுக்க
வக்கிரம் கொண்ட ஆண்கள்
புடை சூழ - தாராளமாக
வந்த பெண்ணிற்கு
உலக அழகி (அருவருப்பு)பட்டம்!

உலக சந்தையின் பணம் (பிணம்) திண்ணும்
கழுகுகளுக்கு கிடைத்ததோ
ஒரு அழகி(அருவருப்பு)போட்டி!
அரைகுறை உடையுடன் நடக்க வைத்து
பண முதலைகளின் பொருள்களை விற்க
பெண்களை சந்தைப்படுத்தி
உலக அழகி (சுதந்திர) அடிமை பட்டம்!

Thursday, December 23, 2010

சிந்தனை என்பது ஓர் எல்லைக்குட்பட்டது.

சிந்திக்காமல் ஒரு விஷயத்தை நம்புவது வாழ்க்கைக்கு எப்படி தேவையானது ஆகும்?

சிந்திக்காமல் என்று ஒரேயடியாய் சொல்லக்கூடாது,
சிந்தனை என்பது ஓர் எல்லைக்குட்பட்டது.
அதைத்தாண்டி வருவது நம்பிக்கை.


பிறந்ததும் நம்மிடம் இருப்பது நம்பிக்கைதான்.
நம்பிக்கையில்தான் தாயின் பாசத்தைக் காண்கிறோம்
பின் வளர்ந்து நம்பிக்கையில்தான்
ஒரு பெண்ணோடு காதல் கொள்கிறோம்
ஒரு நம்பிக்கையில்தான் நட்பு
இப்படியாய் வாழ்வில் எல்லா நிலைக்ளிலும்
நம்பிக்கையே மின்நிற்கும்
இறுதியாய் நாளை உயிரோடிருப்போம் என்ற
நம்பிக்கையில்தான் வாழ்க்கையே

எத்தனை சிந்தித்தாலும் சரி
வாழ்க்கை என்பது நன்பிக்கைக்குத்தான் வசப்படும்
அன்புடன் புகாரி

Wednesday, December 22, 2010

குற்றம் செய்வதில்தான் எத்தனை வகை !

படிப்பு வேறு, அறிவு வேறு. படிப்பு பணக்காரனாக வேண்டும் என்ற காரியத்திற்காக அல்ல . பணம் வாழ்வின் வசதிகளை அதிகமாக்கலாம் ஆனால் அது மகிழ்வினை தந்து விடாது .கல்வி தேடுவது வாழ்வின் அடிப்படை.ஆனால் இன்று படித்தவன் குற்றம் செய்வதில்தான் திறமையுடன் உள்ளான் . வழக்கறிஞர்கள் மற்றும் படித்தவர்கள்  நாட்டில் திருட்டுகொலை, கொள்ளை நடந்தியவர்களுக்கு ஆதராகவும் வாதாடுகின்றனர். ஆட்சி செய்பவரும் குற்றம் செய்பவராக இருக்கும் வரை  குற்றம்  செய்தவர்களுக்கு பெரிய தண்டனையளித்தால் மட்டும் அது குற்றவாளியைத் திருத்தாது.குற்றம் சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.
இவர் ஊழல் முறைகேடுகளை அவர் சொல்லட்டும், அவர் ஊழலை இவர் சொல்லட்டும் . நாம் இந்த ஊழல் யார் அதிகம் செய்தார்களோ அவர்களின் திறமையினை ஊழல்களின் மேன்மைகண்டு அதனை ஊக்குவிக்கும் நோக்கில் புகழ்ந்து பாராட்டி சொல்வோம். பின்பு அவர்களுக்கு ஒட்டு போடுவோம். இதுதான் தொடர்  கதை - நம் கதி . நம் ஒட்டையே புரட்டிப் போடும் திறமைக்கு ஒரு பாராட்டு பட்டமும் கொடுப்போம் . அவர்களுக்கு சம்பளமும் அதிகம் கொடுக்க வரி உயர்த்த வழி செய்வோம்.

நன்னடத்தை என்பது பொதுவானது .அது  அனைவராலும் கடைபிடிக்கப்பட வேண்டும். (செய்த பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்பு நாடுங்கள் இனி எந்த தவறும்  செய்வதில்லை என உறுதி கொள்ளுங்கள்)
நல்ல பண்பு ,குணம் கண்டறியாத கல்வி குப்பை .
மனித நேயம் ,இறை அன்பு ,மார்க்கம் காட்டிய வழி  இளம் வயதிலேயே சொல்லித் தரப் பட வேண்டும். சீன தேசம் சென்றாயினும் கல்வியைத் தேடு என்பது நபிமொழி.
பயன் தரும் கல்வி ,அறிவு என்பது சுய நலம் கொண்டதல்ல .அது மனித நேயம் கொண்டது .குடும்ப நலமும் மனித நேயத்தில் அடங்கும். தர்மம் அடுபங்கரையிலிருந்து ஆரம்பமாகின்றது .
பணம் நாடி மற்ற நாடு செல்வோர் தன் குடும்பம் விடுத்து சென்று தம் மக்கள் மழலை மொழி கேட்க முடியாமல்  தவிப்பவர்களில்  கல்வி கற்றவரையும் ,படித்தவரையும் காணலாம் .


Saturday, December 18, 2010

என் வழி தனி வழி !


"என் வழி தனி வழி . இதில் எனக்கு அழுத்தமான நம்பிக்கை ".என் கருத்தில் முழு நம்பிக்கை ஆனால் எல்லா நேரத்திலும்  நான் அதில் ஒத்துப்போவதில்லை 

-வெள்ளை மாளிகையின் முன்னாள் வெள்ளையர் .
 

"மின்சாரம் கண்டு பிடிப்பதற்கு முன்பு  நாங்கள் மெழுகுவர்த்தி  வைத்து தொலைகாட்சி(டெலிவிசன்) பார்பதுண்டு."
இங்கிலாந்து மாணவர்  கேட்டபோது அளித்த பதில்.

சொல்லியிருப்பார் என்று ஒரு சின்ன (சுட்ட!!!!) கற்பனை 

விக்கிலீக்ஸ்: பயங்கரவாதத்தின் மீது இந்திய முஸ்லிம்களுக்கு நம்பிக்கையில்லை!

இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாதத்துக்கு துணை போவதில்லை; அவர்கள் தேசியத்திலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் டேவிட் முல்ஃபோர்டு அனுப்பியதாக விக்கி லீக்ஸ் வெளிப்படுத்தியுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரிவினைவாதமும் மதத் தீவிரவாதமும் இந்திய முஸ்லிம்களிடையே பரவலான ஆதரவைப் பெறவில்லை. பெரும்பாலான முஸ்லிம்கள் மிதவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி, வலுவான ஜனநாயகம், பல்வேறு பண்பாடுகளையும் உள்ளடக்கிய தன்மை போன்றவை காரணமாக சமூகத்துடன் இணைந்து வாழ்வதையே இந்திய முஸ்லிம்கள் விரும்புகின்றனர்.

பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் மற்ற சமூகத்துடன் கலந்துவிட விரும்புவதால் பயங்கரவாதச் செயல்களுக்கு ஆளெடுப்பது மிகமிகக் குறைந்துவிட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிக உயர்ந்த குடியரசுத் தலைவர் பதவியை முஸ்லிம் ஒருவர் வகித்தது, அரசியலில் ஈடுபடவும் பொருளாதார வெற்றி பெறவும் முஸ்லிம் சமூகத்துக்கு உந்துசக்தியாக அமைந்தது எனவும் முல்ஃபோர்டு குறிப்பிட்டுள்ளார். சானியா மிர்சா, ஷாருக்கான் போன்றவர்கள் இந்திய சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திரங்களாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Source : http://www.inneram.com/2010121812570/wikileaks-indian-muslims-reject-extremist-creeds

Thursday, December 16, 2010

கடன் வாங்கலாம் வாங்க - 11

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

மெகா தள்ளுபடி: இரண்டு சட்டை எடுத்தால் ஒரு சட்டை இலவசம். இரண்டு பேண்ட எடுத்தால் ஒரு பேண்ட இலவசம். தரமில்லாத சோப்புத்தூளாக இருந்தாலும் ஒரு வாளி இலவசம் என்றால் நம் மக்கள் வாங்க தயாரக இருக்கிறார்கள். இந்த வியாபார தந்திரம் பல வடிவங்களில் நம்மை சுற்றி சுற்றி வந்து வேடிக்கை காண்பித்துக்கொண்டு இருக்கிறது. 25%, 50%, 70% என்று தள்ளுபடிகளை நாம் பார்த்து வருகிறோம்.

மன்னிப்பு வேண்டுமா? கடனை தள்ளுபடி செய்யுங்கள்

நாம் இந்த உலகத்தில் வாங்கும் பொருட்களில் தள்ளுடி கிடைக்கிறது என்றால் சிரமம் எடுத்தாவது வாங்க முயற்சி செய்கிறோம். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா? இதோ நம் தலைவர் நபி(ஸல்) அவர்கள் கூறுவதை பாருங்கள்: ஒரு மனிதர் மரணித்து விட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), ''நீ உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரது கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்'' என்று கூறினார். (அவரது இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. (அறிவிப்பவர்: ஹூதைஃபா(ரலி) நூல்: புகாரி எண் : 2391)

கடனைத் திருப்பி கேட்கும்போது நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: ''உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி அவரிடம் ''நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா? ''எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், வசதியானவருக்கு அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டு கொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் எனது வேலையாட்களுக்கு கட்டளையிட்டிருந்தேன்! '' என்று கூறினார். உடனே, ''அவரது தவறுகளைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள்! '' என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்.'' (அறிவிப்பவர் : ஹூதைஃபா(ரலி) நூல்: புகாரி எண் : 2077).

நம்மிடம் கடன் வாங்கியவர் திருப்பி கொடுக்க முடியாத நிலையில் இருந்தால் இப்பொழுது நாம் என்ன செய்வது.  அவர் மனம் வேதனைப்படும் அளவுக்கு தொல்லை கொடுக்காமல் அவருக்கு வசதி ஏற்படும்வரை அவகாசம் கொடுக்கலாம் அல்லது கடனை தள்ளுபடி செய்து விடலாம். இப்படி நாம் செய்தால் நம்முடைய பாவங்களையும், தவறுகளையும் வல்ல அல்லாஹ் தள்ளுபடி செய்வான் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் மூலம் விளங்க முடிகிறது.

தர்மம் செய்த கூலி வேண்டுமா?

இந்த நபிமொழியை பாருங்கள்: அல்லாஹ்வின் தூதரே (கடன் வாங்கி) சிரமப்படுவோருக்கு ஒருவர் தவணை வழங்குகிறார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும் நீங்கள் கூறியதாக நான் கேள்விப்பட்டேனே (அது சரிதானா) என புரைதா(ரலி) கேட்டபோது, கடனின் (தவணைக்)காலம் முடிவதற்கு முன்னால் ஒவ்வொரு நாளும் (ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு. கடன் தவணை முடிந்ததும் அவகாசம் அளித்தால் அவருக்கு ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் இரு மடங்கு தர்மம் செய்த கூலி உண்டு என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர் : புரைதா(ரலி) நூல்: அஹ்மத்).

இதுவரை அல்லாஹ்வுக்காக அழகிய கடன் நாம் எவ்வாறு கொடுக்க வேண்டும்  என்பதை பார்த்தோம். இனி இதற்கான தீர்வில் பிறரிடம் கடன் வாங்கும் சகோதர சகோதரிகளின் நிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

கடன் வாங்குவோர் நிலை

நாம் எதற்கெல்லாம் கடன் வாங்குகிறோம் என்பதை முன் தொடர்களில் விரிவாக பார்த்து விட்டோம். நாம் வாங்கும் கடன் முக்கிய மூன்று காரியங்களுக்காக இருந்தால் நலமாக இருக்கும். வயிற்றுபசி, மருத்துவம், இருக்கும் வீட்டிற்காக வெயில், மழை உள்ளே படாமல் இருக்க ஆடம்பரம் இல்லாமல்  சீர்படுத்திக்கொள்ளவும் இதை தவிர ஆடம்பரம் இல்லாமல் பலபேருக்கு சில அத்தியாவசிய காரியங்களுக்கும் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.

கட்டாய கடன்

நமக்கு சிரமம் ஏற்படும்பொழுது கடன் வாங்க முடிவு செய்தால் திருப்பி கொடுக்க முடியாத நிலை நமக்கு ஏற்படும் என்று கருதினால் கடன் வாங்குவதை விட நம்மிடம் உள்ள நகைகள்  (உடனே விற்று பணமாக்க கூடியது நகைகள்தான்)அல்லது சொத்துக்களை விற்று தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். நகைகளும் இல்லை சொத்துக்களும் இல்லை என்ற நிலை வரும்பொழுது நாம் வாங்க போகும் கடன்  அவசியம்தானா? எப்படி இதை திரும்ப கொடுப்போம். நம்முடைய வருமானத்தில் மீதப்படுத்தி திருப்பி அடைத்து விட முடியுமா? என்றெல்லாம் நன்றாக யோசித்தபிறகுதான் கடன் வாங்க தயாராக வேண்டும்.

கடனை திரும்ப அடைப்பதில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

தங்களின் அவசியத்திற்கு கடன் வாங்கி விட்டீர்கள். திருப்பி கொடுக்கும்பொழுது நமக்கு பெரிய பாரமாகவும், சிரமமாகவும் தோன்றும். இதில் சொன்ன நேரத்தில் திருப்பி கொடுக்க முடியாதவர்கள் கடன் தந்தவர்களிடம் நேராக சென்று தங்களின் நிலைமையை எடுத்துச் சொல்லி வருத்தத்தை தெரிவித்து விட்டு அவகாசம் கேட்கலாம்.

இதில் வசதியுள்ளவர்கள் எவ்வாறு நடக்க வேண்டும்: வசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப்போடுவது அநியாயமாகும். என்று அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி), நூல் புகாரி, எண்:2400)

கடன் தொடர் ஆரம்பித்து 11வது தொடரில் இருக்கிறோம். இந்த தொடரை படித்த அத்தனை வாசக நெஞ்சங்களிடமும் சில கேள்விகளை வைக்கிறேன்.

1)         கடன் வாங்காமல் வாழ முடியுமா? முடியும் என்றால் அதன் விளக்கத்தை தரவும்!
2)         கடன் எதற்கெல்லாம் வாங்கலாம்?
3)         கடன் எதற்கெல்லாம் வாங்கக்கூடாது?

சிறந்த 3 பதிலுக்கு இஸ்லாமிய புத்தகங்கள் பரிசளிக்கப்படும். பதிலை இமெயில் alaudeen45@gmail.com  adirainirubar@gmail.com  மூலமாகவும் அனுப்பலாம். பதில் அனுப்ப கடைசி தேதி 31.12.2010.

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
-- அலாவுதீன்
 Source:http://adirainirubar.blogspot.com/2010/12/11.html

Wednesday, December 15, 2010

சிந்தையில் ஹைக்கூ இரா .இரவி


Fun 
& Info @ Keralites.net
சிந்தையில் ஹைக்கூ  இரா .இரவி
பெரிய மீன்கள்
சின்ன மீன்களைத் தின்றது
அரசியல்

இலவசங்களால்
வசமாக்கி திருடினர்
மூளையை

மாற்றுங்கள் பெயரை
தொலைக்காட்சி அன்று
தொல்லைக்காட்சி என்று

பதக்கங்கள் பெற்றும்
பெருமை இல்லை
மேடையில் கொலைபாதகன்

நிதிக்கு அதிபதியானால்
சில நீதிபதியும்
உன் வசம்

இயக்கையைச் சிதைக்க
மனித இனம் சிதைந்தது
சுனாமி

பெண்கள் இட ஒதிக்கீடு
உள்ஒதிக்கீடு  இருக்கட்டும்
மன ஒதிக்கீடு தருக

பெரிய மனிதர்களிடமும்
சின்னப்புத்தி வளர்க்கும்
சின்னத்திரை

குழந்தைகளுக்குக் கொடுக்கும்
குச்சி மிட்டாய்
வாக்களிக்கப் பணம்

கோடிகள் கொள்ளை அங்கே
வறுமையில் தற்கொலைகள் இங்கே
வலிமையான பாரதம்

முதலிடம்
பெண்களை அழவைப்பதில்
தொலைக்காட்சிகள்

பித்தலாட்டம்
மூலதனம்
ராசிக்கல் சோதிடம்

விளக்குமாறுக்கு பட்டுக்குஞ்சம்
ஆபாச நிகழ்ச்சிகளுக்கு
செந்தமிழ்ப்பெயர்

வேதனையிலும் வேதனை
போகப் பொருளாகச் சித்தரிப்பதை
பெண்களே ரசிப்பது

குடியால் கோடிகள்
குடிமகன் தெருக்கோடியில்
குடு்ம்பம் நடுத்தெருவில்

நல்ல முன்னேற்றம்
சீருடையில் மாணவன்
மதுக் கடையில்

என்று தெளியுமோ
போதையில் பாதை மாறிய
தமிழன்

விளைநிலங்களும்
மின்சாரமும் இலவசம்
வெளிநாட்டவர்க்கு

விரைவில் கிட்டும்
உலக அளவில் முதலிடம்
ஊழல்

கொடிகளை விட
கோடிகளே முக்கியம்
அரசியல்

சமாதானமானார்கள்
சண்டையிட்டப் பெற்றோர்கள்
குழந்தையால்

முந்தைய சாதனையை
முறியடித்தனர் அரசியல்வாதிகள்
மெகா ஊழல்

யாரும் வாங்காமலே
மலர்ந்தன பூக்கள்
வாடினாள் பூக்காரி 

இரா .இரவி
Source : http://eraeravi.wordpress.comசிந்தையில் ஹைக்கூ இரா .இரவி

திரைகடலோடி திரவியம் தேட, சீனாவும் நம் பார்வையில் இருக்கட்டும் .

4000 வருடங்கள் பழைமை வாய்ந்த சீனா மக்கள் தொகையில்  பலம் வாய்ந்தமையால் உலகில் நல்ல வளர்ந்து வரும் நாடுகளில்  மக்கள் சீனம் பீடு நடை போடுகின்றது.   

                                           :
அது எந்த தொழிலையும் விட்டு வைக்கவில்லை .  எல்லாவற்றிற்கும் மாற்று பொருள்  தயார் செய்வதும்  அதற்கு  கை வந்த  கலை.                               :  


இணையம் பாவனையில்  சீனா 1.3 பில்லியன் பாவனயர்களுடன் முதலாமிடத்தில் உள்ளது

முதன் முதலாக ஹஜ் /மெக்கா ட்ரைன் ஓட சீனா  ரயில்வே  கன்சார்ட்டியம் கார்ப் , ஒரு பகுதி சவுதி -பிரெஞ்சு -சைனீஸ்  கன்சார்ட்டியமும்   இந்த ஒப்பந்தத்தில் வெற்றியடைத்து சுமார் 5,000 வேலை  ஆட்களை பயன் படுத்தியது


  சீனப் பெருஞ் சுவர் (Great Wall of China)"நவீன உலகின் ஏழு அதிசயங்களுள்" 

ஒன்றாகக்  குறிப்பிடப்படுகின்றது.

சீனா தேசம் சென்றாகினும் சீர் கல்வியைத் தேடு என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள் . மண்ணின் மைந்தர்கள் அயல்நாடுகளில் சென்று   திரைகடலோடி திரவியம் தேட, சீனாவும் நம் பார்வையில் இருக்கட்டும் . 

சீனப் பிரதமர் வென் ஜியாபோ 3 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய   உள்ளார். வென் ஜியாபோவின் வருகையால் இரு நாடுகளிடையே வர்த்தக உறவுகள் மேம்படும் .


“ 2,000 ஆண்டுக்கு முன்புள்ள சீனா பார்க்க சியன் (Xian)
போங்கள் .500ஆண்டுக்கு முன்புள்ள சீனா பார்க்க பெய்ஜிங் (Beijing)
போகவும் . 200 ஆண்டுக்கு முன்புள்ள சீனா பார்க்க சாங்காய் (Shanghai)
போகவும்.”என்பது சீன பழமொழி

Sunday, December 12, 2010

நேரமில்லை! நேரமிருக்கிறது!

நேரமில்லை!

தொழ நேரமில்லை!
ஓத நேரமில்லை!
பசியாற நேரமில்லை!
படிக்க நேரமில்லை!
தூங்க நேரமில்லை!

பர பரவென்ற வேலையால்
பறந்து கொண்டு இருக்கிறேன்!
பணம் உண்டு பையில்
மதிய உணவு இல்லை கடையில்
நேரத்தில் சாப்பிட நேரமில்லை!

படைத்தவனை நினைக்க நேரமில்லை!
பண்பாக இருக்க நேரம் நேரமில்லை!
பழகியவனை பார்க்க நேரமில்லை!
மனைவியிடம் பேச நேரமில்லை!
மக்களிடம் பேச நேரமில்லை!
பள்ளி விட்டு வரும் பிள்ளையை
பாசத்தோடு கொஞ்ச நேரமில்லை!

தாயை கவனிக்க நேரமில்லை!
தந்தையை கவனிக்க நேரமில்லை!
உற்றாரை கவனிக்க நேரமில்லை!
ஏழை வரி கொடுத்து
ஈட்டிய செல்வத்தை
தூய்மையாக்க நேரமில்லை!

நேரமிருக்கிறது!

மனிதா நேரமிருக்கிறது!
உயிர் பிரிய நேரமிருக்கிறது!
மண்ணறைக்கு செல்ல நேரமிருக்கிறது!
மண்ணறை கேள்விக்கும் நேரமிருக்கிறது!
நல்லடியார்களுக்கும் நேரமிருக்கிறது!
தீயவர்களுக்கும் நேரமிருக்கிறது!

மண்ணறை அழைக்கிறது
நான் தனி வீடாவேன்
புழு பூச்சிகளின் பிறப்பிடமாவேன்
நல்லவர்களுக்கு நிம்மதியளிப்பேன்
தீயவர்களுக்கு நோவினை தருவேன்!
நன்மை தீமை பிரித்தறிந்து
மண்ணறையில் கேள்விக்கும்
மண்ணறையின் வேதனைக்கும்
நேரமிருக்கிறது!

மறுமை கேள்வி கேட்கப்படும் நாள்!
மனிதன் மதி மயங்கி நிற்கும் நாள்!
மண்ணாகி இருக்கக் கூடாதா? நான்
மறுமையை சந்திக்காமல் இருந்திருப்பேனே!
மனிதன் அலறும் நாளுக்கு நேரமிருக்கிறது!

தந்தையை கண்டு மகன் ஓடுவான்!
மகனை கண்டு தந்தை ஓடுவான்!
மனைவியை கண்டு கணவன் ஓடுவான்!
கணவனை கண்டு மனைவி ஓடுவாள்!
நண்பனை கண்டு நண்பன் ஓடுவான்!
எங்கே ஓடுவார்கள்! நன்மையை தேடி!
மறுமையில் ஓட நேரமிருக்கிறது!

மறுமையில் விவாதம்
மனைவியிடம் கணவன்
உனக்கு வாரி வழங்கினேன்
உன் நன்மையிலிருந்து
எனக்கு கொஞ்சம் கொடு
மனைவி ஒத்துக்கொள்வாள்
நீங்கள் சிறந்த கணவர்தான்
எனக்கும் நன்மைதான் வேண்டும்
பாசமிகு கணவனை பிரிந்து
வெருண்டு ஓடுவாள்
ஓடுவதை காண நேரமிருக்கிறது!

பெற்ற மக்களிடம் ஓடுவான்
பெற்றெடுத்த மக்களே!
நான் சிறந்த தந்தையல்லவா!
துன்பம் தொடாமல் அனைத்து
வளங்களையும் தந்து ஆளாக்கினேன்!
உன் நன்மையிலிருந்து
எனக்கு கொஞ்சம் கொடு
பிள்ளைகள் ஒத்துக்கொள்வார்கள்!
நீங்கள் சிறந்த தந்தைதான்
எங்களுக்கும் நன்மைதான் வேண்டும்!
தந்தையிடம் இருந்து
வெருண்டு ஓடுவார்கள் பிள்ளைகள்!
காட்சிகளை காண நேரமிருக்கிறது!

உலகைப் படைத்தவனின் கோபம்
உலகம் முழுவதிலும்
அழிவுகள் சிறிது சிறிதாக! பெரிதாக
அழிவுக்கும் நேரமிருக்கிறது!

மனிதனுக்கோ
மறுமை பயம்
மனதில் இல்லை!
சகோதரச் சண்டை,
உடன்பிறந்தார் சண்டை
குலச்சண்டை,
தெருச்சண்டை,
சம்பந்தி சண்டை,
குழந்தைகள் சண்டை,
அடுத்தவன் வீட்டின்
இடத்தை அபகரித்த சண்டை
படிப்பில், அறிவில், ஆற்றலில்,
பணத்தில், அழகில், குலத்தில்
பெருமை, ஆணவம் மேலோங்க
பிறரிடம் ஏளனச்சண்டைகளுக்கு
நேரமிருக்கிறது!

மனிதர்களே பாசமும்
கேள்விக்குறியாகும் நாள்!
உங்கள் செல்வமும்
பலன் தர முடியாத நாள்!
எந்த பரிந்துரையும்
ஏற்றுக் கொள்ளப்படாத நாள்!
இம்மை, மறுமையின் அதிபதி
வல்ல அல்லாஹ்!
நீதி வழங்கும் நாள் -அந்த
மறுமைக்கு நேரமிருக்கிறது!

 
மண்ணறைகளைச்
சந்திக்கும் வரை
அதிகமாகத்(செல்வத்தை)
தேடுவது உங்கள்
கவனத்தைத்
திருப்பி விட்டது.
பின்னர் அந்நாளில்
அருட்கொடை பற்றி
விசாரிக்கப்படுவீர்கள்.
(அல்குர்ஆன்:102:1,2, 8)

-- அலாவுதீன்

Source : http://adirainirubar.blogspot.com/2010/12/blog-post_13.html

Saturday, December 11, 2010

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆணையரகம் - முஸ்லிம் லீக் மாநாட்டில் கருணாநிதி அறிவிப்பு

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தற்போது செயல்படும் மறுவாழ்வுத்துறை இயக்குநரகத்தை, "அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களின் நல ஆணையரகம்" எனப் பெயர் மாற்றம் செய்திடவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியத்தை ஏற்படுத்திடவும் அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு, சென்னை தாம்பரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதிக்கு, ``நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்'' என்னும் விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக் கொண்டு முதல்வர் கருணாநிதி நிறைவுப்பேருரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-

மாநாட்டுத் தலைவர் காதர் மொகிதீன் விருதினை எனக்கு வழங்கும்போது அவருடைய அழகான முத்து முத்து போன்ற இனிய தமிழால் அதைப் படித்தளித்தார். அந்த விருதைப் பெறும்போது, எனக்கொரு குறை. பெரியாருடைய பெரும் தொண்டன், அண்ணாவின் அருமை தம்பி நான் என்பதையும் அந்த வாழ்த்திலே எழுதியிருக்கிறார்கள். ஆனால், ஒன்றை விட்டுவிட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை? காயிதே மில்லத்தினுடைய அடியொற்றி நடந்தவன் நான் என்ற அந்த வாசகத்தை ஏன் விட்டு விட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை தன்னுடைய இயக்கத்தைப் பற்றிச் சொன்னால், அது சுயவிளம்பரமாகி விடும் என்று கருதி விட்டுவிட்டார்களோ - என்னவோ தெரியவில்லை. ஆனாலும், எனக்கு பெரிய மனக்குறை அது.

பெரியாரை, அண்ணாவை தமிழகத்திலே நினைவு படுத்துகிற நேரத்தில் காயிதே மில்லத்தை மறந்து விட்டால் நான் நம்முடைய பேராசிரியர் பெரியவர் என்பதால் இந்த வார்த்தைகளை ஜாக்கிரதையாகச் சொல்லுகிறேன் - மன்னிக்க முடியாத குற்றம். இரவு வீட்டுக்குச் சென்றாலும் அவருக்கு தூக்கம் வராது. எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்பதை நினைத்து நினைத்து மனம் உருகுவார் என்பதும் எனக்குப் புரியும். அதனால் தான் அவர் படிக்கும்போது மாத்திரமல்ல - படித்து முடித்த பிறகும்கூட - எடுத்து திரும்பத் திரும்ப பார்த்தேன். காயிதே மில்லத் பெயர் இருக்குமா என்று. இல்லை என்பதற்காக நான் மீண்டும் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

நெஞ்சு பொறுக்குதில்லையே!

by ரபீக்  சுலைமான்.

படம்-1
நன்றி தினமலர் - 10-12-10




படம்-2

படம் - புதுசுரபி 10-12-10
 




படம்-3

படம் - புதுசுரபி 10-12-10


இங்கே படம் 1, படம் 2 மற்றும் படம் 3 கூறும் செய்திகள் என்ன தெரியுமா???

 படம் - 1, நண்பர் ரவி சாரங்கன் சொன்னது போல, இன்று காலை தினமலரில் வந்த நெஞ்சை உலுக்கும் செய்தி......

 படம் - 2, காலையில்(07:45) சென்னை-அஷோக்நகர் வழியாக வந்தபோது, அடுத்த ஆண்டிற்கான, மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பம் வாங்க அதிகாலை 3.00 மணியிலிருந்து வரிசையில் காத்திருந்த பெற்றோர்களின் (மனித) சங்கிலி!

  படம் - 3, இன்று எத்தனையோ வசதிகள் (ONLINE Application, online payment...etc.) வந்த பின்னும் கூட இதுபோல பெற்றோர்களை தெருவில் நிற்க வைத்து, காலை 8:00 மணிக்கு பள்ளி திறக்கும் வரையிலும், இதுபோன்ற பெற்றோர்களின் வாகனங்களை நிறுத்தக் கூட வசதி செய்து தராததால் சாலையின் இருமருங்கிலும் நிறுத்தி, காலையில் இதர பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ மாணவியரின் வாகனங்கள், வேலைக்குச் செல்வோர் என அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் சிரமமேற்படுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காட்சி!

 தூக்கம், வேலை, இதர பணிகள் என அனைத்தினையும் தள்ளி வைத்துவிட்டு, தன் பிள்ளைக்கு நல்ல ஒரு பள்ளிக்கூடத்தில் இடம் கிடைக்க வேண்டும், அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டும் என்பதே கால் கடுக்க அந்த வரிசையில் நிற்கும் பெற்றோர்களின் கனவு. (படம்-2)

 மேட்டுப்பாளையம் - காரமடை ரோடு, காந்திநகரில், "பிருந்தாவன் வித்யாலயா' என்ற சி.பி.எஸ்.இ., பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் 300 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று முன்தினம் பள்ளியில் இருந்த, "ரெக்கார்டு' மர்மமான முறையில் கிழிந்திருந்தது. இதை, நான்காம் வகுப்பு மாணவ, மாணவியரில் ஒருவர்தான் கிழித்திருக்க வேண்டும் என்று, ஆசிரியைகள் சந்தேகமடைந்தனர். விளையாட்டு ஆசிரியர் சதீஷ்குமாரை அழைத்து, குழந்தைகளை விசாரிக்குமாறு கூறியுள்ளனர். இவர், வகுப்பு அறையில் வைத்து குழந்தைகளை விசாரித்துள்ளார். "தாங்கள் யாரும் ரெக்கார்டை கிழிக்கவில்லை' என்று கூறி குழந்தைகள் அழுதன. ஆத்திரமடைந்த ஆசிரியர் சதீஷ்குமார் 17 மாணவர்கள், 7 மாணவியரை விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் சென்று வெயிலில் நிற்க வைத்துள்ளார். இரு கைகளையும் மேல்நோக்கி தூக்கி நிற்குமாறு கூறி, குழந்தைகளின் "பின்பகுதி'யில் பிரம்பு, பி.வி.சி., பைப் கொண்டு ஆத்திரம் தீர வெளுத்துள்ளார். போலீஸ் பாணியில் குற்றவாளிகளை விளாசுவது போல் தாக்கியுள்ளார். குழந்தைகள் துடிதுடித்து கதறி அழுதுள்ளனர். பின்பகுதியில் உள்காயம், ரத்தக்கட்டு ஏற்பட்டு நடக்கக்கூட முடியாதவகையில் குழந்தைகள் தவித்துள்ளனர்.

  மாலையில் குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர், "நடந்த சம்பவத்தை' கேள்விப்பட்டு பதறினர். அடிதாங்க முடியாமல் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் நேற்று காலை பள்ளிக்கு வந்து, கொடூர ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்ட நான்காம் வகுப்பு மாணவர்கள் கூறுகையில், "பி.டி., மாஸ்டர் அடித்ததால் வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே வகுப்புக்கு சென்றோம்; அங்கு இருக்கையில் அமர முடியாமல் நின்று கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த பள்ளி முதல்வர் அன்புலட்சுமி, "உட்காருகிறீர்களா, இல்லை... மீண்டும் பி.டி.,மாஸ்டரை கூப்பிடட்டுமா?' என, மிரட்டினார். வலிதாங்க முடியாத நிலையிலும் இருக்கையில் அமர்ந்தோம்' என்றனர்.

 பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில்,"நான்காம் வகுப்பு பயிலும் குழந்தைகளை ஈவு, இரக்கம் கொஞ்சமும் இல்லாமல் பள்ளி ஆசிரியர் அடித்திருக்கிறார். வீட்டுக்குச் சென்ற குழந்தைகளில் சிலர் இதை பெற்றோரிடம் கூட சொல்லவில்லை. சீருடையை கழற்றும்போது "பின்புறம்' ஏற்பட்டிருந்த ரத்தக்கட்டை பார்த்த பிறகே விஷயம் தெரிந்து அதிர்ச்சியடைந்தோம். குழந்தைகளை கம்பாலும், பிளாஸ்டிக் பைப்பாலும் தாக்கிய ஆசிரியர், அவ்வாறு செய்ய உத்தரவிட்ட முதல்வர் உள்ளிட்ட அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.

 இதுகுறித்து பள்ளி நிர்வாகிகளில் ஒருவரான வக்கீல் சம்பத்குமார் கூறுகையில், ""விளையாட்டு ஆசிரியர் இப்படி அடித்த விவரம் எங்களுக்கு தெரியாது. குழந்தைகளை நேரில் பார்த்த பிறகு உடனடியாக அந்த ஆசிரியரை, "டிஸ்மிஸ்' செய்து விட்டோம். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க, முதல்வர் அன்புலட்சுமி மூலமாக போலீசில் புகார் செய்ய உள்ளோம்,'' என்றார்.

(தினமலர் செய்தி - 10-12-2010 )

 பெற்றோர்களே!

    * நல்ல பள்ளி என்பதற்கு எது உங்களுடைய அளவுகோல்??
    * பாடப்புத்தகத்தில் உள்ளவற்றை மனனம் செய்யக் கற்றுக்கொடுத்து, அதை மட்டுமே மிகச் சரியாக ஒரு டேப்ரிக்காடர் போல ஒப்புவிப்பதால் தரும் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் கொடுப்பதின் மூலம் முடிந்துவிட்டதா?
    * எந்த சுதந்திரமும் இல்லாத, தன் பக்கத்தில் இருக்கும் சக மாணவ நண்பனிடம் கூட பேச முடியாமல், தான் மட்டுமே, தன் காரியம் மட்டுமே என ஒரு இயந்திர மனிதன் போல உருவாவதற்கு பயிற்சி தரும் கூடம் என்பதா?
    * குழந்தைகளும் ஒரு (சிறிய) மனிதர்களே என்றும் அவர்களுக்கென்று ஒரு உலகம் உள்ளது. அந்த உலகம் அற்புதமானது, கள்ளம் கபடமறியா உள்ளம் கொண்டவர்கள் என்பதறியா கயவர்கள் பயிற்றுவிப்பதாலா?
    * ஒவ்வொரு குழந்தையும் ஒருவிதம், அது அவர்கள் கற்கும் திறன், பேசும் திறன், எழுதும் திறன், புரிந்துகொள்ளும் திறன் என ஏற்ற இறக்கம் இருக்கும் அதற்கு தகுந்தாற்போல் தன்னுடைய போதிக்கும் திறம் வளர்த்துக்கொள்ளா வனவிலங்கு காப்பாளர் உள்ள இடமா?
    * ஒழுக்கம் என்ற பெயரில் பிஞ்சுகளின் நெஞ்சமறியாது கண்மூடித்தனமாய் தாக்கிவிட்டு பின்னர் உங்கள் பிள்ளைகளின் நன்மைக்குத்தானென நாடகமாடும், வன்முறைச் சிந்தனையினை, விரோத மனப்பான்மையினைத் தூண்டிவிடும், தூதர்கள் உள்ள இடமா?

சற்று சிந்தித்துப் பாருங்கள்:

ஒரு சாதாரண புடலங்காய் வளர்ப்பதற்கு கூட சிரமெடுத்து, பந்தலிட்டு, பராமரித்து, நேராக வளர வேண்டும் என்பதற்காக வளர்ச்சிக்கேற்ப கல்(பாரம்)கட்டி சீரான வளர்ச்சிக்கு விழையும் நாம், ஆயிரங்காலத்துப் பயிராகிய நம் குழந்தைகளின் எதிர்காலத்தினை, குணாதிசயங்களை விதைக்க வேண்டிய விளைநிலங்களான பள்ளிகள் எப்படி இருக்கவேண்டும்? கரடுமுரடான நிலத்தினை பதத்தோடு  பண்பட்டதாக மாற்ற பொறுமைகாட்டும் விவசாயி போல, குழந்தைகளின் உளம் அறிந்து, இந்த இளம் வயதில் நல்ல பல போதனைகளை விளையாட்டின் மூலம் வழங்கியும், அவர்களின் திறன் வளர்க்கும் திறம் கொண்ட ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளைக் கண்டறிவதே நம் சிறார்களுக்கு நாம் செய்யும் அளப்பரிய சேவை. கடமையும் கூட!

  சற்று நினைவுகூறுங்கள்!

நம்முடைய மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் அவர்கள், மதிப்ப்பிற்குரிய மயில்சாமி அண்ணாதுரை, தோஹா வங்கியின் முதன்மை செயல் அதிகாரி சீதாராமன். இளம் தொழில்வல்லுனர் சரத்பாபு .................... இன்னும் எத்தனையோ நம்முடைய சமகால சாதனையாளர்கள் நினைவுகூறுவது அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையே.............

மாணவர்களின் மனமறிந்து, மதிப்பளித்து, மகத்தான- இந்த நாட்டிற்கு பெருமை சேர்த்த தலைவர்களை உருவாக்கிய அந்த சிற்பிகளையே!

 அவர்களின் பெற்றோர்கள் எந்தப் பள்ளிக்கூடத்திலும் விடிகாலையில் வரிசையில் நின்று இடம் கேட்டு அனுமதிக்கப்பட்டதாக தகவ்ல் இல்லை!!!

 குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என் அனைவரும் பாதிக்கப்பட்ட, அவர்களின் உரிமை மீறப்பட்ட செய்தியினைப் பதியப்பட்டது (10-12-2010) -உலக மனித உரிமைதினத்தன்று!

LinkWithin

Related Posts with Thumbnails