Monday, December 6, 2010

தானாடா விட்டாலும் தசையாடும் குடும்பம்

அடித்தாலும் பிடித்தாலும் அன்பானது குடும்பம்
நடித்தாலும் நகைத்தாலும் நட்பானது குடும்பம்
துடித்தாலும் துரத்தினாலும் தொடர்வது குடும்பம்
மடித்தாலும் மடங்காத மரமானது குடும்பம்

வெட்டினாலும் தட்டினாலும் விருட்சமாகும் குடும்பம்
திட்டினாலும் புகழ்ந்தாலும் தித்திக்கும் குடும்பம்
நட்டமோ இலாபமோ நன்மையாம் குடும்பம்
பட்டறிவுப் பட்டம் பெற்றுதரும் குடும்பம்

தானாடா விட்டாலும் தசையாடும் குடும்பம்
வானோடு நிலவுபோல் வாழ்வோடு குடும்பம்
தேனோடு பால்போல் தெவிட்டாத இன்பம்
மானோடு மானம்போல் மாண்பு காக்கும்

வாசமலராய் என்றும் வாழ்கை மணக்கும்
வீசும் தென்றலாய் விலகாது நிற்கும்
பேசிப் பழகினால் பாசம் புரியும்
நேசித்து வாழ்ந்தால் நெருக்கம் தெரியும்

“கவியன்பன்”கலாம், அதிராம்பட்டினம்

Source : http://kalaamkathir.blogspot.comகுடும்பம்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails