Sunday, November 27, 2011

''உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்''




எம்.ஏ.முஹம்மது அலீ 
 இறைவா! இவர்களிடமிருந்து முஸ்லீம்களைக் காப்பாற்று!

மிகவும் கைசேதப்படவேண்டிய விஷயம் என்னவெனில், இன்று தர்காவை நம்பக்கூடிய ஆலிம்கள் எல்லா இடங்களிலும் வியாபித்துள்ளார்கள்.. இவர்கள் வழிகெட்டுப்போவது மட்டுமின்றி, மார்க்கம் ஒன்றுமறியாத - தெரியாத அப்பாவி மக்களை வழிகெடுப்பதில் முன்னனியில் நிற்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மையாகும்.
சுன்னத் வல் ஜமா அத் என்று சொல்லிக்கொண்டு அதற்கு மாற்றமாக நடப்பவர்கள். சமுதாயத்திற்கு மிகப்பெரும் ஆபத்தே இவர்களால்தான்.

ஏனெனில் இதுபோன்ற ஆலிம்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மதரஸாக்கள் - ஜாமியாக்களிலிருந்து வெளியாகும் ஆலிம்கள் எப்படி இருப்பார்கள் என்று சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை.
தர்காக்களை நோக்கி ஓடும் ஆலிம்களே!
''உன்னையே நாங்கள் வணங்குகிறோம்
உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்''

மீண்டும் மீண்டும் ஓதக்கூடிய ''சூரத்துல் ஃபாத்திஹா''வில் வரும் இத்திருவசனத்தை எத்தனை முறை ஓதியிருப்பீர்கள்?!
''உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்'' என்று ஆயிரக்கணக்கான முறை தொழுகையிலும் மற்ற நேரங்களிலும் ஓதியது எல்லாம் வெறும் உதட்டசைப்புதானா?! உங்கள் உள்ளத்தில் ஒட்டவே இல்லையா?
ஆலிம்களான உங்களுக்கு அதன் அர்த்தம் விளங்காமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

ஆக, நிச்சயமாக அதனை விளங்கியிருந்தும் அதனை பின்பற்றவில்லையென்றால் உங்களுக்கு அந்த இறைவசனத்தின் மீது முழுமையாக நம்பிக்கையில்லை என்றுதானே அர்த்தம்?!
அதுவும் ''உன்னிடமே - ல்லாஹ்விடம் மட்டுமே - உதவி தேடுகிறேன்'' என்று சொல்வதில் உங்களுக்கு 100 க்கு 100 சதவீதம் நம்பிக்கையில்லை, திருப்தியில்லை – அதற்கு மேல் ஏதோ ஒருவர் உங்களுக்குத் தேவைப்படுகிறார் என்றுதானே அர்த்தம்!
இவ்வளவு காலமும் அல்லாஹ்வின்மீது முழுமையான நம்பிக்கையில்லாத தொழுகைதான் உங்களுடையது என்று சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஒரு மனிதனுக்கு இதைவிட மிகப்பெரும் கைசேதம் வேறு எதுவாக இருக்க முடியும்! சிந்தியுங்கள்.
ஒரு முஃமின் அல்லாஹ்விடம் கையேந்திவிட்டால் வெறுங்கையுடன் அதனை திருப்பி அனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்களே! அது உங்கள் உள்ளங்களில் அழுத்தமாகப் பதியாமல் போனதன் காரணம் என்ன?
கேட்பது உடனே கிடைத்துவிட வேண்டும் என்கின்ற அவசரமோ! அதற்காகாத்தானே தர்காவை நோக்கி ஓடுகிறீர்கள்?!! ''பொறுமையாளர்களுடன் தான் அல்லாஹ் இருக்கின்றான்'' என்கின்ற தித்திக்கும் திருமறையின் வசனங்கள் உங்கள் உள்ளங்களை ஊடுருவாமல் போனதன் காரணம் என்ன்?

Saturday, November 26, 2011

மறுமலர்ச்சியை எதிர்நோக்கி மற்றுமொரு புத்தாண்டு


ஒளிமயமான எதிர்காலம் லக மக்களிடையே புதுவருடப்பிறப்பு என ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையிலான ஜனவரி மாதத்தின் முதல்நாள் பல்வேறு அனாச்சார களியாட்டங்களுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.


உலகின் அதிவேக வளர்ச்சியில் தங்களையும் பிணைத்துக் கொண்ட, இந்நவீன உலகின் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்களும் அதே தினத்தைப் புதுவருடப்பிறப்பாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவதும், இஸ்லாமிய வருடப்பிறப்பான இச்சிறப்புமிகு முஹர்ரம் மாதத்தில் எம்பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட ஆஷூரா, தாசுஆ தின நோன்புகளை நோற்காமல் அல்லது இம்மாதத்தின் மகத்துவத்தை உணராமல் ஏதோ  கடமைக்காகச் செய்வதுபோல் நோன்பு வைப்பதும் எங்கும் பரவலாக இன்று காணமுடிகிறது.
இஸ்லாமிய சமூகத்தின் ஒரு பெரும்பகுதி ஒருபுறம் அன்னியக் கலாச்சாரத்தில் வீழ்ந்து இஸ்லாமியக் கலாச்சாரத்தை மறந்து கொண்டிருக்கும் அதேவேளை, இச்சமூகத்தின் மற்றொரு பெரும்பகுதியோ இஸ்லாம் வெறுக்கும் பல்வேறு அனாச்சாரச் செயல்களில் தன்னை ஈடுபடுத்தி, மற்றவர்களின்முன் இறைவன் அளித்த உயர்ந்த வாழ்க்கை நெறியைக் கேலிக்குள்ளாக்கி வருகின்றது.
இவ்வாறு முஸ்லிம் சமூகத்தை மேற்கத்தியக் கலாச்சாரங்கள் கொள்ளை கொண்டிருக்கும் இந்நவீன காலகட்டத்தில் ஒவ்வொரு முஹர்ரம் மாதத்தின் பிறப்பும், இஸ்லாமிய உலகை நோக்கி இழந்து போன தங்களின் கலாச்சாரத்தை மீண்டெடுக்க மௌன அழைப்பு விடுத்து அமைதியாக சென்று கொண்டிருக்கின்றது.

Friday, November 25, 2011

பத்திரிகைகளும் டெலிவிஷன் சேனல்களும் செயல்படும் விதம் குறித்து முன்னாள் நீதிபதி கட்ஜு

பத்திரிகைகளும் டெலிவிஷன் சேனல்களும் செயல்படும் விதம் குறித்து முன்னாள் நீதிபதி கட்ஜு:
imaite

புதுடெல்லி : பத்திரிகைகளும் டெலிவிஷன் சேனல்களும் செயல்படும் விதம் குறித்து முன்னாள் நீதிபதியும் தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள கருத்துக்கள் மீடியா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.என்.என் & ஐபிஎன் சேனலில் கரன் தாப்பர் நடத்தும் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கட்ஜு கூறிய விஷயங்கள் சர்வதேச அளவில் பத்திரிகையாளர்களின் கடும் விமர்சனத்துக்கு இலக்காகியுள்ளது. அந்த கேள்வி & பதில் நிகழ்ச்சியின் முக்கியமான பகுதிகள் இங்கே:

= கரன் தாப்பர்: சமீபத்தில் சில பத்திரிகை மற்றும் டீவி ஆசிரியர்களை சந்தித்தபோது, ‘மீடியா பொறுப்பில்லாமல் செயல்படுகிறது‘ என்று வருத்தப்பட்டீர்கள். மீடியாவின் செயல்பாடு உங்களுக்கு ஏமாற்றம் தருகிறதா?

மார்கண்டேய கட்ஜு: ரொம்ப ஏமாற்றம் அளிக்கிறது.

= உங்களுக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லையா?

நிச்சயமாக இல்லை.

= உண்மையாகவா சொல்கிறீர்கள்?

உண்மையாகவே எனக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. மக்கள் நலனுக்காக மீடியா பணியாற்ற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி இல்லை. சில நேரங்களில் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதையும் பார்க்கிறேன்.

= உண்மையான தகவல்களை பாரபட்சம் இல்லாத முறையில் வழங்குவது மீடியாவின் கடமை என்று அந்த சந்திப்பில் குறிப்பிட்டீர்கள். மீடியா நேர்மையாக செயல்படவில்லையா, அல்லது அது போதுமானதாக இல்லையா?

ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாற்றம் நேர்ந்து கொண்டிருக்கிறது. நில பிரபுத்துவ வேளாண் சமூகமாக இருந்த இந்தியா இன்றைக்கு நவீன தொழில்சார் சமுதாயமாக மாறும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இது வலிகள் மிகுந்த காலகட்டம். முன்பு ஐரோப்பா இதே மாற்றத்தை சந்தித்த நேரத்தில், மக்களுக்கு அந்த வலியை குறைக்கும் வகையில் அங்குள்ள மீடியா செயல்பட்டது.

= இந்தியாவில் அப்படி நடக்கவில்லை என்கிறீர்களா?

இங்கே அதற்கு தலைகீழாக நடக்கிறது. ஐரோப்பாவில் ரூசோ, தாமஸ் பய்ன், திதரோ மாதிரி எழுத்தாளர்கள் மக்களை மாற்றத்துக்கு தயார் செய்தார்கள். ‘இந்த நாட்டிலுள்ள கடைசி சாமியாரின் குடலை உருவி அதை கடைசி மன்னனின் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கவிடும் வரையில் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காது‘ என்று முழங்கினான் பிரஞ்சு சிந்தனையாளன் திதரோ.

Wednesday, November 23, 2011

முஸ்லிம் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்:மாவட்ட ஆட்சியர் சகாயம்!

சிறுபான்மையின மக்களுக்காக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதை பயன்படுத்தி முஸ்லிம் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று கலெக்டர் சகாயம் கூறினார்.

மதுரை ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறுபான்மையினர் தினவிழா நடைபெற்றது. விழாவில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்&2 வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 12 மாணவ, மாணவிகளுக்கு ரூ.15,500 மதிப்பிலான காசோலைகள், உலமாக்கள் நலவாரிய உறுப்பினர் மகள்கள் 12 பேருக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.17ஆயிரம், திருமண உதவித்தொகை 2 பேருக்கு ரூ.4ஆயிரம், சமூக நலத்துறையின் மூலம் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5 பேருக்கு ரூ.1.52 லட்சம் என மொத்தம் ரூ.1.88 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உ.சகாயம் வழங்கினார் அப்போது அவர் பேசியதாவது:&

Tuesday, November 22, 2011

மனிதமனப் படகின் ஆறுதல் கரைகள்


தாளாத துயர் வரும்போது
தன்னையறியாமல்
மனிதன்
மரணத்தைக்
காதலிக்கவே செய்கிறான்

வாழ்நாளில்
ஒரே ஒரு முறையாவது
மரணத்தைக் காதலிக்காத
மனிதன் இருக்கிறானா

உயிர் கிழியும்
கொடுந் துன்பத்தில்
மனிதன் நினைப்பது
இரண்டினை
ஒன்று கடவுள்
அடுத்தது மரணம்

கடவுளும் மணரமுமே
மனிதமனப் படகின்
ஆறுதல் கரைகள்
Source : http://anbudanbuhari.blogspot.com/

Monday, November 21, 2011

கணவன் மனைவி உறவு - சண்டை நடந்தாலும் அழகு, சமாதானம் ஆனாலும் அழகு!


கணவன் மனைவி உறவு - சண்டை நடந்தாலும் அழகு,  சமாதானம் ஆனாலும் அழகு!

கணவன்மார்கள் சண்டை போட்டால் வால், வாலுன்னு கத்திவிட்டு ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி வந்து மன்னிப்பு கேட்பார்கள். அவ்வாறு அவர்கள் மன்னிப்பு கேட்கையில் அவர்கள் செய்யும் சேஷ்டைகளைப் பார்த்தால் சிரிப்பு தான் வரும். ஆனாலும் பெண்கள் சிறிது நேரம் சிரிப்பை அடக்கிக் கொண்டு, கோபமாக இருப்பது போல பாசாங்கு செய்வார்கள். உடனே கணவன் கண்ணே, மணியே என்று கொஞ்சி சமாதானப்படுத்துவார். இதுக்குத் தானே காத்திருந்தேன் என்பது போன்று பெண் மனம் உருகிவிடும்.
அதே சமயம் தொண தொணக்கும் மனைவி....! "இவ வாய் இருக்கே, எப்பப் பார்த்தாலும் தொண தொணன்னு யாரையாவது குறை சொல்லிக்கிட்டே இருக்கும்!" என்று சில பெண்கள் குறித்துச் சொல்வர்கள். அவர்கள் உள்ளுக்குள் பலாப்பழம் போல இருந்தாலும் வெளியில் முள்ளாகத் தெரிபவர்கள்.
குறிப்பாக கணவரிடம் எப்போது பார்த்தாலும் பிலுபிலுவென சண்டை பிடித்தபடி இருப்பார்கள் இந்தப் பெண்கள். வாழ்க்கை முழுவதும் தன்னுடன் வரும் கணவரை குறை சொல்வதில் இதுபோன்ற மனைவிகளுக்கு ஆத்ம சந்தோஷம்.

Fascinating - வெளிவந்தது குரானின் சிசு வளரியல் குறித்த புதிய ஆய்வுக்கட்டுரை

பிரிட்டனைச் சார்ந்த தாவாஹ் அமைப்பான IERA (Islamic Education and Research Academy, இந்த அமைப்பு குறித்த என்னுடைய பதிவை படிக்க இங்கே சுட்டவும்), குரான் கூறும் சிசு வளரியல் குறித்த தன்னுடைய ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளது. மாஷா அல்லாஹ், நிறைய reference-களுடன் வெளிவந்துள்ள இந்த கட்டுரையை படிக்க, பதிவிறக்கம் செய்ய கீழ்காணும் லிங்க்கை சுட்டவும்.   


நான் அறிந்தவரையில் இத்தனை விலாவரியாக சிசுவளரியல் குறித்த ஆய்வுக்கட்டுரை சமீபத்தில் வந்ததில்லை. இந்த தலைப்பில் குரான் மீது வைக்கப்படும் சமீபத்திய குற்றசாட்டுகளையும் கணக்கில் கொண்டு எழுதப்பட்டுள்ளது இந்த ஆய்வு பேப்பர். இந்த ஆய்வுக்கட்டுரை தொடர்ந்து அப்டேட் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மற்றுமொரு கவனிக்கத்தக்க விசயமாக, இந்த ஆய்வுக்கட்டுரை வெளியான பிறகு, இதன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் சொல்லவும் தனி பகுதியை அமைத்திருக்கின்றனர். சுப்ஹானல்லாஹ். அந்த பகுதியை காண http://www.hamzatzortzis.com/?page_id=61

இவர்களின் இந்த பணியை  உம்மத்தினருக்கு பயனுள்ளதாக்க இறைவன் போதுமானவன்....

வஸ்ஸலாம், 

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Sunday, November 20, 2011

குழிப் பிள்ளை மடியிலே !

 
மற்றப் பெண்களின் கையிலும் மடியிலும்   குழந்தையைக் கண்டால் என் மடியிலும் குழந்தையைத் தா இறைவா! என  வேண்டாத நாளில்லை. ஆண்டவன் அருள் செய்தான்.பிள்ளை பெற்றேன் அதனால் நான்  மலடி என்று என்னை யாரும் சொல்ல மாட்டார்கள் என  பெரு மூச்சு விட்டது அடங்கு முன்  இறைவன் அக் குழந்தையை மரணமடையச் செய்து தன் பக்கம் அழைத்துக் கொண்டான். அந்த மகிழ்வு நீடிக்காமல் போனதே என ஏங்கினேன்.  இது எனக்கும் என் உட்றார் உறவினர்களுக்கும் மற்றும்  அனைவர்க்கும் மிகவும் மன வருத்தத்தினை தந்தது .
எனது தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் பல இன்னல்களுக்கு உள்ளானேன். 
நான் மிகவும் சோர்ந்து மனமுடைந்து போனபோது ஒருவர் என்னிடம் வருந்தாதே 'அக் குழந்தை சுவனத்தில் இறைவனால் சேர்க்கப் பட்டு விட்டது. "
குழிப் பிள்ளை மடியிலே" என்பது  போல் இறைவன் உனக்கு தேவையானபடி உனது விருப்பம் போல் குழந்தைகள் கொடுப்பான்' என அன்புடன் ஆறுதல் சொன்னார். அந்த வார்த்தை என் மனதில் ஆமாக பதிந்து விட்டது.
அல்லாஹ்வின் அருளால் எனக்கு மறுபடியும் நல்ல குழந்தைகள் கொடுத்து மகிழ்வாக வாழ வழி செய்துவிட்டான். எல்லாப் புகழும் இறைவனுக்கே. 
 
 ஆனால் இடைப்பட்ட காலங்களில் துயரத்தால் நான் இழந்த பல்வகை சிரமங்களும் நானே உருவாக்கிக் கொண்டவையே. நல்லதும் கெட்டதும் நடப்பது இயல்பு அதையே நாமே வரவைத்துக் கொள்வது நற்செயலாக இருக்க முடியாது. அனைத்தையும்   சமநோக்கோடு எடுத்துக் கொள்ளும் மனது தேவை. எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
இன்பத்தைக் கண்டு துள்ளுவதும் துயரத்தைக் கண்டு துவளுவதும் இல்லாத மனதைத் தா இறைவா!    

இப்னு ஷிஹாப் அறிவித்தார்.
இறந்துவிட்ட எல்லாக் குழந்தைகளுக்கும் ஜனாஸாத் தொழுகை நடத்தப்படும். அது விபச்சாரிக்குப் பிறந்ததாக இருந்தாலும் சரியே! ஏனெனில் அது இயற்கையாகவே இஸ்லாத்திலேயே பிறக்கிறது.
பெற்றோர் முஸ்லிம்களாக இருந்து அல்லது குறிப்பாகத் தந்தை மட்டும் முஸ்லிமாகவும் தாய் வேற்று மதத்தவளாகவும் இருந்து அவர்களின் குழந்தை பிறக்கும்போது சப்தமிட்டு, பிறகு இறந்தால் அதற்கு ஜனாஸாத் தொழுகை நடத்தப்படும்; சப்தமிடவில்லையாயின் அதற்குத் தொழுகையில்லை; ஏனெனில் அது விழுகட்டியாகும்.
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அபூ ஹுரைரா(ரலி) 'எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலின் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்" என்ற (திருக்குர்ஆன் 30:30) வசனத்தையும் ஓதிக்காட்டினார்.
ஸஹீஹ் புகாரி ஹதீஸ்1358.

3201.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருடைய இறப்புக்காகவும், பிறப்புக்காகவும் சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் ஏற்படுவதில்லை. ஆயினும், அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் ஒரு சான்றாகும். அவ்விரண்டையும் நீங்கள் காண நேர்ந்தால் (இறைவனைத்) தொழுங்கள்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

'உங்களில் ஒரு பெண் தன் குழந்தைகளில் மூவரை (மரணத்தின் மூலம்) இழந்துவிட்டாள் என்றால் அந்தக் குழந்தைகள் அப்பெண்ணை நரகத்துக்குச் செல்லாமல் தடுத்துவிடக் கூடியவர்களாக இருப்பார்கள்' என்று கூறினார்கள். அப்போது ஒரு பெண், 'இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இரண்டு, குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டாலும் தான்' என்று கூறினார்கள்" அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி ஹதீஸ்101.

.
 
'(தாய்ப் பாலைத் தவிர வேறு) உணவு சாப்பிடாத என்னுடைய சிறிய ஆண் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். நபி(ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தங்களின் மடியில் உட்கார வைத்தபோது, அக்குழந்தை நபி(ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது. உடனே தண்ணீர் கொண்டு வரச் செய்து (சிறுநீர் பட்ட இடத்தில்) தெளித்தார்கள்; அதைக் கழுவவில்லை" என உம்மு கைஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி ஹதீஸ்223

Friday, November 18, 2011

போலி ஒற்றுமைக்கோஷமும் நீர்த்துப் போகும் ஏகத்துவப்பிரச்சாரமும்!

அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது.
சமுதாய ஒற்றுமை! சமீப காலமாக தமிழறிந்த முஸ்லிம்களிடையே அதிகமாக இணையங்களின் ஊடாக இவ்வார்த்தையைக் பார்க்கிறோம். பிரிந்துக் கிடக்கும் முஸ்லிம் சமுதாயம் ஒன்று சேர வேண்டும் எனவும் எல்லாப் புறங்களிலும் இருந்து முஸ்லிம்களுக்கு வருகின்ற ஆபத்துகளிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்காக நாம் நமது வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும் என்பது தான் அந்த ஒற்றுமைக் கோஷத்தின் குரல்! இன்னும் சிலரோ இவ்வாறு ஒன்றுபட்டு தொலை நோக்குப் பார்வையுடன் சிந்தித்து செயல்பட்டால் இஸ்லாமிய ஆட்சியை நிறுவிவிடலாம் என்றும் கூறுகின்றனர்.

வேலூர் ''பாக்கியாதுஸ்ஸாலிஹாத்'' ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமும் அஃலா ஹளரத் அவர்களின் ஃபத்வாவும்

ஒவ்வொரு இஸ்லாமிய இணையதலத்திலும் இடம்பெறவேண்டிய மிக முக்கியமான கட்டுரை

வேலூர் பாக்கியாதுஸ்ஸாலிஹாத் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே பித்அத்-அனாச்சாரங்களை ஒழிப்பதற்குத்தான்!

[ இந்திய துணைக்கணடத்தைப் பொருத்தவரை தேவ்பந்தில் ஆரம்பிக்கப்பட்ட தாருல் உலூமின் அறிஞர்கள், அதில் கற்றுத்தேறிய மாணவர்கள் உலகம் முழுவதும் குறிப்பாக இந்திய துணைக்கண்டத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று இந்த உண்மைக் கொள்கையை தியாக உணர்வோடு விருப்பு, வெறுப்புகளுக்கு, மனமாச்சர்யங்களுக்கு இடமளிக்காமல் மனத்தூய்மையோடு உறுதியாக எடுத்து வைத்தார்கள்.

அப்போது உலகமே தாருல் உலூம் தேவ்பந்தை திரும்பிப் பார்த்தது. அதன் பிறகு இந்த சீர்திருத்தப் பணிகளில் ஈடுபடும் அனைவரும் தாருல் உலூம் தேவ்பந்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். எல்லா இடங்களிலும் தாருல் உலூம் தேவ்பந்தை முன்மாதிரியாகக் கொண்டு பல மதரஸாக்கள் நிறுவப்பட்டன. அதற்குப்பிறகு ஷிர்க், பித்அத்-அனாச்சாரங்கள், சமூகக் கொடுமைகளை எதிர்த்தும், சுன்னத்துகளை பாதுகாத்து தீனை நிலைநாட்டும் அறிஞர்கள் யாவரும் தேவ்பந்த் கொள்கைக்காரர்கள் என்று அடையாலம் காணப்பட்டனர்.

அஃலா ஹளரத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் என்ன நோக்கத்திற்காக வேலூர், ''பாக்கியாதுஸ்ஸாலிஹாத்'' மதரஸாவை ஆரம்பித்தார்களோ அந்த உயர்ந்த இலட்சியத்திற்கு முரணான கொள்கை சுமார் 60 வருடங்களுக்கு முன்னாலேயே பாக்கியாத்தில் திணிக்கப்பட்டு அப்போதே பாக்கியாத் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது என்பதே சத்தியம். விருப்பு வெறுப்பின்றி இந்த வரலாற்று உண்மையை நடுநிலைப் பார்வையோடு ஆராய்ந்து பார்த்தால் இது புரிய வரும். - மனாருல் ஹுதா ]

அஃலா ஹளரத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் திட்டச்சேரியில் ஷரீஅத்திற்கு மாற்றமான பித்அத்-அனாச்சரங்கள், உருஸ், சந்தனக்கூடு, முஹர்ரம் மாத அனாச்சாரங்கள் மற்றும் சமூகக் கொடுமைகளை எதிர்த்து அப்பகுதியில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தார்கள்.

Wednesday, November 16, 2011

அல்லாமா இக்பாலின் ஈரடிக் கவிதைகள்


மானுடத்தின் ரகசியம் நீ!
மலர்ந்த படைப்பின் ஆன்மா நீ!
உயிருடன் இருப்பவன் நீயென்றால்-உன்
உலகை நீயே உருவாக்கு

குருட்டுத் தனமாய்ப் பின்பற்றும்
குணம்தற் கொலையினும் இழிந்ததடா;
வழியை நீயே தேடிச்செல்;
வழிகாட்டியை எதிர் பார்க்காதே!

இலட்சி யத்திற் கப்பால்உன்
இலட்சி யங்கள் விரியட்டும்;
வாழ்க்கை என்பது என்றென்றும்
மாறாப் பயண ஆசையாடா!

இந்த இரவு பகல்களிலே
இறங்கிச் சிக்கிக் கிடக்காதே!
உன்றன் உயர்ந்த இலட்சிய
உலகம் இவற்றிற் கப்பாலே!

படைப்பின் அந்த ரங்கம் நீ
பார்வையில் உன்னை வெளிப்படுத்து!
சுயத்தின் ரகசியம் உணர்ந்துகொள்;
இறைவனின் விளக்க உரையாகு!

நபிகள் நாதர் வாழ்வில்நீ
நடந்தால் நாமே உன்கையில்!
இந்த உலகம் என்ன,விதி
எழுதும் கோலே உன் கையில்!

வாலிப இனத்தின் இதயத்திலே
வல்லூற் றுணர்ச்சி கிளர்ந்துவிட்டால்
அவர்கள் இலட்சியம் இங்கல்ல
அங்கே உயரே வானத்தில்!

உயரப் பறக்கும் பறவையே!
உனது சிறகை முடக்கி விடும்
இரையையைத் தின்று வாழ்வதினும்
இறந்து போவது சிறந்ததடா!

உறுதியான நம்பிக்கை
உலையா முயற்சி பேரன்பு
வாழ்க்கை என்னும் போர்க்களத்தில்
வாகை சூடும் ஆயுதங்கள்!

சுயரத் தத்தின் நெருப்பினிலே
சூடா வதுதான் இளமையாடா!
கடின உழைப்பால் இவ்வாழ்க்கையைக்
கசப்பைத் தேனாய் மாற்றிடடா!
Source : http://valaiyukam.blogspot.com

தௌர் குகை - சிலந்தி

ஒரு அரசியல் கூட்டம் நடக்கிறது. அரசியல் தலைவர் பேசுகிறார். அங்கே திடீரென்று கூச்சல், குழப்பம்,  வெட்டு, குத்து. இதை தொடர்ந்து அந்த கூட்டத்திலிருந்து முதல் ஆளாக பாதுகாப்பாக அனுப்பி வைக்கப் படுவது அந்த தலைவர் தான். இது தான் இன்றைய தலைவர்களின் முன்மாதிரி.

ஆனால் மக்காவில் சத்திய மார்க்கத்தை பிரச்சாரம் செய்த அகிலத்தின் தலைவரான முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் அன்னாரை பின்பற்றியவர்களுக்கும் உயிருக்கு ஆபத்து என்று வந்த போது பெருமானார் அவர்கள் மக்காவிலேயே இருந்து கொண்டு பின்பற்றியவர்களை அபிசினியாவிற்கும், யத்ரிபுக்கும் (பெருமானார் காலடி எடுத்து வைக்கும் வரை மதினாவின் (மதினத்துந் நபி - நபியின் பட்டணம்) முந்தைய பெயர் தான் யத்ரிப்) அனுப்பி வைத்தார்கள்.

இந்த சமய்த்தில் தான் மக்கத்து குறைஷிகள் ஊர்மன்றமாகிய தாருன்னத்வாவில் அமர்ந்து பெருமானாரை கொல்ல சதித்திட்டம் தீட்டினர். வீட்டுக்கு ஒருவர் என வேங்கை போல் புறப்பட்டு கொலை வெறியோடு ஆயுதமேந்தி புறப்பட்டனர்.

அதே நேரத்தில் பெருமானார் அவர்கள் அவர்களது தோழரான அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து மதினா செல்லும் வழியில் மக்காவிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தௌர் எனும் குகைக்கு வந்து சேர்கிறார்கள்.

மூன்று நாட்கள் அந்த தௌர் குகையிலேயே தங்கியிருக்க நேர்ந்தது. இதற்கிடையில் கொலை வெறியோடு புறப்பட்டவர்கள் ஆளுக்கொரு திசையாக முஹம்மது நபியவர்களை காணாது தேடி அலைந்தனர்.

அவர்களில் ஒரு சிலர் பெருமானாரும் தோழரும் மறைந்திருந்த தௌர் குகையை நெருங்கினர். அந்த சிலர் அங்கே எதிர்பட்ட ஒரு இடையனை பார்த்து, 'இந்த குகையில் யாரேனும் ஒளிந்திருப்பதை பார்த்தாயா?" என்று கேட்டனர்

அதற்கு அந்த இடையன், "நான் அப்படி யாரையும் பார்க்கவில்லை, நீங்களே நுழைந்து பாருங்கள்! யாரேனும் அங்கே இருந்தாலும் இருக்கலாம்" என்று கூறினான்

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருப்பது பெருமானார் அவர்களுக்கும்  தோழர்அவர்களுக்கும் தெளிவாக கேட்டது.

ஈரக் குலையைக் கையில் பிடித்துக் கொண்டிருந்த தோழர் அவர்கள் ,
".. குனிந்து தன் கால் பெரு விரலை பார்த்தால் கூட நாம் உள்ளே இருப்பது தெரிந்து விடுமே.. நிறைய பேர் வந்திருப்பது போல் தெரிகிறதே . நாம் இருவர் தாமே இருக்கிறோம்" என்று ஏக்கத்திலும் பயத்திலும் கூறினார்கள்

இத்தகைய பயம் நியாயமானது தான், அந்த நேரம் சாமானிய நேரமில்லை. கையில் வாளுடன் தலையை சீவுவதற்கு காத்திருக்கும் கொலை வெறி கூட்டம் வெளியே. இரண்டே இரண்டு பேர் மட்டும் அதுவும் நிராயுதபாணியாக யாருக்கும் தெரியாமல் பதுங்கி ஒளிந்து கொண்டு உள்ளே. என்ன செய்வது? வயிற்றுக்குள் பிரளயமே வெடித்துக் கொண்டிருந்தது.

பெருமானார் அவர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் இப்படி பதில் மொழி பகர்ந்தார்கள், "இல்லை, இல்லை, நாம் மூவர் இங்கு இருக்கின்றோம், அல்லாஹ்வும் நம்முடன் இருக்கிறான்.."

யா அல்லாஹ்.! என்ன உறுதி! என்ன நம்பிக்கை! என்ன தெளிவு!

இனி இந்த பிரச்சினை பெருமானாரின் சம்மந்தப்பட்டது அல்ல, இறைவனின் சம்மந்தப்பட்டது.

இறைவன் தன் தூதரை, தன் மீது முழுமையாக பொறுப்பை ஒப்படைத்தவரை எப்படி காப்பாற்ற போகிறான்? எந்த படையை அனுப்ப போகிறான்?  என்பதே படிக்கும் அனைவரும் எதிர்நோக்கும் அடுத்த விநா.

அவன் யானைப் படையையோ அல்லது குதிர்ரைப் படையையோ அனுப்பவில்லை. அவன் அனுப்பியது ஒரே ஒரு சிலந்தி பூச்சி. ஆம், அவன் அனுப்பிய அந்த சிலந்திப் பூச்சி திடீரென்று நுழைவாயிலில் ஒரு வலை பின்னியது. அல்லது இறைவன் அவ்வாறு பின்ன சொல்லி அதற்கு செய்தியை அனுப்பினான். பின்னிய அந்த வலை நுழைவாயிலையே மூடியிருந்தது.

அந்த இடையன் சொன்னதை கேட்டு குகையின் உள்ளே சென்று பார்க்கலாம் என்று குனிந்த ஒருவன், "வீணாக உள்ளே போய் ஏன் பார்க்க வேண்டும்?, இந்த வலையை பார்த்தாலே முஹம்மது பிறப்பதற்கு முன்னாலேயே பின்னப்பட்ட வலை
மாதிரியல்லவா இருக்கிறது.." என்று கூறி விட்டு "வாருங்கள் போகலாம்.." என்று கூறி விட்டு ஊர் திரும்புகிற வழியை பார்த்தான்.

பெருமானார் அவர்கள், "எல்லா புகழும் இறைவனுக்கே!" என்று நன்றி பெருக்குடன் கூறினார்கள்.

------------------------------------------------------------------------------

தன் தூதரை காப்பாற்ற இறைவனுக்கு பெரும் படை எதுவும் தேவையாக இருக்கவில்லை, ஒரு சிலந்தி வலை போதுமானதாக இருந்தது. அதுவும் இறைவனின் பேச்சான குரான் ஷரீபிலே இத்தகைய சிலந்தி வலையை தான் மிகவும் பலஹீனமான வீடு என்று குறிப்பிடுகிறான். இத்தகைய பலஹீனமான ஒன்றை கொண்டே தன் தூதரை காப்பாற்றி விட்டான் இறைவன்.

அல்ஹம்து லில்லாஹ்

------------------------------------------------------------------

சிலந்தி வலை பற்றிய குரான் ஷரீபின் வசனம் கீழே தரப்பட்டுள்ளது

அல்குரான் ஷரீப்:

அத்தியாயம் 29 - அல்-அன்கபூத் -

வசனம் 41:

அல்லாஹ் அல்லதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலவீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலவீனத்தை அறிவார்கள்)
Source : http://ismailnagoori.blogspot.com/

Monday, November 14, 2011

1027/1 : ஸியோனிச அரசுக்கு ஹமாஸின் ஆப்பு!

டந்த ஒரு மாதத்திற்கு முன்பாக, 2011 அக்டோபர் மத்தியில், உலக அளவில், அரசியல் தாக்கம் நிறைந்த ஒரு வரலாற்று ரீதியிலான வெற்றியை ஃபலஸ்தீன இஸ்லாமியப் போராளி இயக்கமான ஹமாஸ் அடைந்திருக்கிறது. உலகளவில் கடாஃபிகளும், இந்திய அளவில் ஹசாரேக்களும், தமிழக அளவில் உள்ளாட்சித் தேர்தல்களும் அரசியலின் அவக்கேடாகிவிட்ட ஊழல்+விசாரணைகளும் நம்மை இச்செய்தியை விட்டும் திசை திருப்பியிருந்தன என்று சொன்னால் மிகையாகாது.

ஓர் இஸ்ரேலியப் பட்டாளத்தானை விடுவித்து, இஸ்ரேலின் சிறைகளிலிருந்து 1027 ஃபலஸ்தீனப் போராளிகளை ஹமாஸ் மீட்டெடுத்த நிகழ்வை இருதரப்புமே வெற்றியாகக் கொண்டாடியிருந்தாலும், அந்தக் கொண்டாட்டத்திற்குரிய நாயகர்கள் ஹமாஸ் போராளிகள் மட்டுமே என்பது தெளிவு. பரிமாறப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாம் இதனைச் சொல்லவில்லை. மாறாக, ஐந்து வருடங்களுக்கு முன்பு, கிலாட் ஷாலிட் என்கிற அந்த இஸ்ரேலியப் பட்டாளத்தானை, ஹமாஸ் தனக்கே உரிய ஒரு ‘நடவடிக்கை’யில் ‘கைப்பற்றிய’ போது (அதை பிபிசி வகையறாக்கள் ‘ஊடகங்களுக்கே உரித்தான குறுக்குப்புத்தியில் “கடத்தப்பட்ட” என்று கூறின) இஸ்ரேல் வாந்தியெடுத்த வார்த்தைகளை அந்நாடு மீண்டும் தின்றது என்ற வகையில் தான் ஹமாஸுக்கு அந்த வெற்றி.

அப்போது இஸ்ரேல் சொன்னது என்ன?

“(ஹமாஸ் என்கிற) இந்தப் ‘பயங்கரவாத அமைப்பு’டன் இனி பேச்சுவார்த்தைக்கே இடமில்லை”

‘கைது’ செய்யப்பட்ட ஷலாட்டை விடுவிக்க இஸ்ரேல் பலவழிகளில் முயன்றது. முதலில், மூன்றாம் நாடுகளான நார்வே, ஜெர்மனி, எகிப்து, பாலஸ்தீனிய அத்தாரிட்டி, என்ற பலரையும் தூது அனுப்பியது. ம்ஹூம், பலனில்லை. ஃபலஸ்தீனியர்களின் நலம் விரும்பியாகச் செயற்படும் சவூதி அரசும்கூட, அமெரிக்க நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து, ஷலாட்டை விடுவித்துவிடும்படி கோரியிருந்தது. ஹமாஸ் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.

Sunday, November 13, 2011

இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித்.



இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித்.
1400 year old Cheraman Juma Masjid
அன்றைய தோற்றம்.







இன்றைய தோற்றம்.


அரபு தமிழ் அகராதி ARABU & TAMIL ISLAM (KAMUS) DICTIONARY

சங்கைமிகு இமாம் அஸ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அவர்களால் வெளியீடப்பட்ட அரபு தமிழ் அகராதி துபாயில் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. (2010)

அறிமுக உரை

நட்பின் வகைகள்

நாமெல்லாம் நம் நண்பர்களிடமும் சகோதரர்களிடமும் அன்பு கொள்கிறோம்; ஏதாவது ஒருவகையில் சார்ந்திருக்க ஆரம்பிக்கிறோம். சில காலம் கழித்து, அவர்களுள் சிலரிடம் நட்பின் ஈரம் குறைவதைக் காண முடிகிறது. அதாவது உண்மையான நட்பிற்கு என்று ஓர் இலக்கணம் உண்டு இல்லையா, அது கைநழுவுகிறது. அது ஏற்படுத்தும் அதிர்ச்சியில் உடனே அவர்களைக் கடிந்துகொள்ளவோ குற்றம் காணவோ துவங்குகிறோம்.

அப்படிக் கடிந்து கொள்வதிலோ, குற்றம் காண்பதிலோ என்ன பயன் இருக்க முடியும்?

பெயரளவில் நண்பர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் சிலரது நட்பை முறித்துக் கொள்வோம் என்று உங்களுக்குத் தோன்றலாம். பிறகு யோசித்துப் பாருங்கள். நாம் மக்களிடம் கொண்டுள்ள தொடர்பானது அடிப்படையில், மேலெழுந்தவாறான நட்பு என்றும் சகோதரத்துவத்துடன் கூடிய ஆழமான நட்பு என்றும் இரு வகைப்படுகிறது. எனவே நட்பை ஏன் முறித்துக் கொள்ள வேண்டும்?

அதற்கு பதிலாய், நெருக்கமான சகோதரர்களாய் நாம் தவறாகக் கருதிய அவர்களை, அந்த வட்டத்திலிருந்து நீக்கி, மேலெழுந்த நட்பு வட்டாரத்திற்கு நகர்த்திவிடலாம். அந்த வட்டத்திற்குள்ளும் பொருந்திப் போகாத அளவு அவர்களது நட்பின் இடைவெளி கூடுதலாக இருப்பின் பொதுவான தொடர்பாளர்கள் என்ற வட்டத்திற்குள் அவர்களை நகர்த்தி அந்த அளவிற்கு அவர்களிடம் பழகிக் கொள்ளலாம். முழுக்க முழுக்க அவர்களது நட்பை முறித்துக் கொள்வதைவிட, அவர்களிடம் பூசல் கொள்வதைவிட இது சிறந்ததாயிற்றே.

நடுநிலை தவறிவிட்டால்...!

ஆரம்பிக்கப் பட்ட மூன்று மாதங்களில் முதலிடத்துக்கு முன்னேறித் தமிழகத்தில் சாதனை புரிந்துள்ளது புதிய தலைமுறை தொலைக் காட்சி. மூன்றே மாதங்களில் அனுபவம் வாய்ந்த பல முன்னணிச் செய்திச் சேனல்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது நிச்சயமாக பெரிய விஷயம் தான்!  அதேசமயம் மக்களின் மனநிலை என்ன என்பது இதன்மூலம் வெளியாகியிருப்பதையும் கவனிக்க வேண்டும்!

"உண்மையை உண்மையாக உரைக்கும் சானல்கள் தற்போது தமிழகத்தில் இல்லை" என்பதுதான் புதிய உதயமான "புதிய தலைமுறை"க்குக் கிடைத்த வெற்றியின் அடிப்படை!

Saturday, November 12, 2011

யார் பொறுப்புக்கு தகுதியானவர்? அவருக்கு எப்படி பொறுப்பு கொடுப்பது !


 உடல் நன்றாக இருக்க இதயம் நன்றாக இருக்க வேண்டும். இதயம் கோளாறு ஏற்படின் உடல் பாதிப்பு ஏற்படும் .ஊர் ஒற்றுமை உடலின் இதயம் போல் . உலகமே நம் கையில் கிடைத்தாலும் இதயம் கெட்ட பின் பயனில்லை.
ஒற்றுமை பற்றி நிறைய பேசி சபை நாகரிகம் கருதி நளினமாக தனிமனித தாக்குதலின்றி தக்க காரணங்களுடன் எல்லா முயற்சிகளும் எடுத்து நல்ல முடிவினை எடுக்க வேண்டும் .விட்டுக்  கொடுப்போர் கெட்டுப் போவதில்லை. '.ஊர் இரண்டு பட்டால் கூ த்தாடிக்கு கொண்டாட்டம் ' என்பது அனைவரும் அறிந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
 

   பதவிக்கு வருமுன்பு அந்த பதவிக்கு வருபவர் தான் அந்த பதவிக்கு தகுதியானவரா! என சிந்திக்க வேண்டும் . அவர் சேவை செய்யும்  மனமுடையவராகவும் அதனை திறம்பட செயல்படுத்தக் கூ டியவராகவும் இருக்க வேண்டும் . பதிவியினை ஒருவருக்கு கொடுத்த பின் அவருக்கு மதிப்பளித்து அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.பதவிக்கு வந்த பின் நற்காரியங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படின் அந்த பதவியினை விட்டு விலகி விடுதல் நல்லது. 


 இஸ்லாம் பரம்பரை பதவிக்கு முக்கியம் கொடுக்காமல் மக்களின் ஒற்றுமையுடன் தேர்ந்ததெடுப்பதனையே விரும்புகின்றது. நாயகம் காலத்திற்கு பின்பு முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி)  அவர்கள் பெரும்பான்மை சஹாபாக்களின் ஆதரவுடன் தலைமை பொறுப்பினை எடுத்துக் கொண்டார்கள். இஸ்லாமிய முறையே ஜனநாயக முறைதான் . இதனையே அனைவரும் பின்பற்ற வேண்டும்.


நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
"ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான்.
பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும்பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள்விசாரிக்கப்படுவாள்.
பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்''
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரழியல்லாஹுஅன்ஹு)
நூல்: புகாரீ
 
அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான் - நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன்;. மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடயவன்.   ( அல் குர் ஆன் 6:165.)

'நிச்சயமாக உங்களுடைய பொறுப்பாளர்கள் அல்லாஹ்வும் அவனது தூதுவரும் ஈமான் கொண்டு தொழுகையை கடைப்பிடித்து ருகூவின் நிலையில் ஸக்காத்தும் கொடுத்தார்களே அவர்கள் தாம்.                                       (சூரா மாயிதா:55)


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு கிராமவாசியிடம்), 'நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமைநாளை நீ எதிர்பார்க்கலாம்.' என்று கூறினார்கள். அவர் 'இறைத்தூதர் அவர்களே! அது எவ்வாறு பாழ்ப்படுத்தப்படும்?' என்று கேட்டதற்கு '(ஆட்சியதிகாரம், நீதி நிர்வாகம் போன்ற) எந்தப் பொறுப்பும் அதற்கத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது மறுமை நாளை எதிர்ப்பார்த்துக் கொள்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.  
(நூல் - புகாரி - 6496)

பதவி நமக்கு இறைவனால் அருளப் படும்போது அதனை ஏற்க மறுப்பது கூடாது. பதவிக்கு வந்த பின் அந்த பதவியினை முறையாக செயல்பட   முடியாத நிலை ஏற்படின் அந்த பதவியினை விட்டு நீங்கி விட வேண்டும்.

(நபியே!) நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச் சிலரைவிட (இம்மையில்) மேன்மைப்படுத்தி இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக! எனினும் மறுமை (வாழ்க்கை) பதவிகளிலும் மிகப் பெரிது, மேன்மையிலும் மிகப் பெரிதாகும்.
அல் குர் ஆன் - 17:21)

நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. 
(நூல்: புகாரி)
(நபியே!) நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச் சிலரைவிட (இம்மையில்) மேன்மைப்படுத்தி இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக! எனினும் மறுமை (வாழ்க்கை) பதவிகளிலும் மிகப் பெரிது, மேன்மையிலும் மிகப் பெரிதாகும்.
அல் குர் ஆன் - 17:21)

நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. 
(நூல்: புகாரி)


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு கிராமவாசியிடம்), 'நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமைநாளை நீ எதிர்பார்க்கலாம்.' என்று கூறினார்கள். அவர் 'இறைத்தூதர் அவர்களே! அது எவ்வாறு பாழ்ப்படுத்தப்படும்?' என்று கேட்டதற்கு '(ஆட்சியதிகாரம், நீதி நிர்வாகம் போன்ற) எந்தப் பொறுப்பும் அதற்கத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது மறுமை நாளை எதிர்ப்பார்த்துக் கொள்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.  
(நூல் - புகாரி - 6496)

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். 
அல் குர் ஆன்(5:8)


முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். 
அல் குர் ஆன்(5:8)


நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! அல்குர்ஆன் (33:70)

யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும். 
அல்குர்ஆன் (35:10)
 

பார்க்க வேண்டிய வீடியோ - ஹஜ் (by டிஸ்கவரி சேனல்)

Thursday, November 10, 2011

ஏங்கும் நெஞ்சம்




மீண்டும் மீண்டும் காண எந்தன் கண்கள் ஏங்குதே!
மக்கா மதினாவைச் சுற்றியே எந்தன் நினைவு ஓடுதே!
இறுதிக்கடமை நிறைவேற்ற நெஞ்சம் துடிக்குதே!
இறுதிநபி வாழ்வில் எந்தன் வாழ்வும் தொடருதே!

[மீண்டும் மீண்டும்]
ஆவல்கொண்டு காப்பவன்தான் நமது இறைவனும்
அவன் காவலில்தான் இயங்குதிந்த உலகம் முழுவதும்!
ஆதி அந்தம் அனைத்தும் படைத்து பாது காப்பவன்
அணுவுமெங்கும்  அசையாது அவன் துணையு மின்றியும்!

[மீண்டும் மீண்டும்]
இறைவன் சொன்ன வாக்குகளை பற்றிப்பிடிக்கவே
இருதயத்தின் குருதி முழுதும் எழுச்சி பெருகுதே!
இன்னல் இன்பம் இரண்டுங்கொண்டு  வாழ்ந்தபோதிலும்
இடைவிடாது இறையை என்றும் வணங்க வேண்டுமே!

[மீண்டும் மீண்டும்]
ஈகையென்னும் கொடைகொடுத்து ஏற்றம் காணவே
இரக்கமென்னும் இனியகுணம் நமக்கு வேண்டுமே!
உதவும் மனம் உள்ளிருந்து ஊற்றெடுக்கவே
ஏழை எளியோரை அன்புகொண்டு அணைக்கவேண்டுமே!

[மீண்டும் மீண்டும்]
உயிரிருக்கும் வரைக்கும் எந்தன் உடலும் துடிக்குமே
அந்த ஒருவனையே நினைக்கச்சொல்லி உயிரும் உருகுமே!
உலகம் அழியும் நாள்வரைக்கும் உயிர்கள் தழைக்குமே
அந்த உயிர்களனைத்தும் அவனிடத்தில் திரும்பச் செல்லுமே!

[மீண்டும் மீண்டும்]
இம்மை வாழ்வில் நாமும் செய்த செயல்கள் யாவுமே
இறுதி நாளில் நேரெதிரில் நிறுத்தப் படுமே!
இனிய மார்க்கம் தந்த எங்கள் இறுதி நபியையும்-எங்கள்
இதயங்களும் கண்களும்தான் காணத் துடிக்குமே!

[மீண்டும் மீண்டும்]
அண்ணல்நபி தரிசனத்தை இம்மை மறுமையில்
அடைந்திடவே ஆவல் கொண்டு உள்ளம் ஏங்குதே!
அகிலம் படைத்து அனைத்தும் படைத்து காக்கும் இறைவனே
அந்த ஆவல்களை நிறைவேற்றித் தரவும் வேண்டுமே!

தரவும் வேண்டுமே!  
நிச்சயம் தரவும் வேண்டுமே!
நிறைவேற்றித் தரவும் வேண்டுமே!


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 
 

Wednesday, November 9, 2011

ரஷ்யாவில் இஸ்லாம்


ரஷ்யாவில்  மிகவும் பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கமாக இஸ்லாம் இரண்டாவது இடத்தில உள்ளது.

ரஷ்யாவில் முஸ்லிம்கள், ஈத் அல் அதா, தியாகம் நாளை ஞாயிறன்று இஸ்லாமிய முறைப்படி மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள்

ரஷ்யாவில் கிட்டத்தட்ட 20 மில்லியன் முஸ்லிம்கள் மாஸ்கோவில் 1.5 மில்லியன் உள்ளனர் .

Friday, November 4, 2011

புனித ஹஜ் (ஈத்) பெருநாள் நல் வாழ்த்துகள்

லைப்பைக் அல்லாஹும்ம லைப்பைக் லப்பைக்க லா ஷரீக்க லக்க லப்பைக் இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க் லா ஷரீக்க லக். ...
தல்பியா
வந்துவிட்டேன் இறைவா வந்துவிட்டேன்
உனக்கு இணை எவருமில்லை
வந்துவிட்டேன்
நிச்சயமாக அனைத்துக் புகழும்
அருட்கொடையும் உன்னுடையதே
உனக்கு இணை எவருமில்லை 

Assalamu Alaikkum and Eid Mubarak.

புனித ஹஜ் (ஈத்) பெருநாள் நல் வாழ்த்துகள்!!!

In the name of Allah The most Gracious The most Merciful!
Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah.

May this Eid Day is full of blessings for you, your family and friends.
To all of my readers and friends, EID MUBARAK across the miles. May Allah accept all your good deeds and bless you and your families abundantly!                
                                                
                                                               S.E.A.Mohamed Ali Jinnah, (“nidurali”)
உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது;
இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது;
(நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம்.
(இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்...

... Whatever good, (O man!) happens to thee, is from Allah.
but whatever evil happens to thee, is from thy (own) soul.
and We have sent thee as an apostle to (instruct) mankind.
And enough is Allah for a witness...

(Quran 4:79)

அரஃபா மைதானம் (நேரலை)
  ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ்ஜின் முக்கியக் கடமைச் செயற்பாடுகளுள் ஒன்றான அரஃபா மைதானத்தில் ஒன்று கூடுவதை நேரலையில் காணும் வகையில் சத்தியமார்க்கம்.காமின் "வலைக்காட்சி" பகுதியில் இக்ரா டிவி இணைக்கப்பட்டுள்ளது. அதற்குரிய லிங்க்: http://www.satyamargam.com/iqraa-live
 

விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்

சுவாமி விவேகானந்தர் ஒரு உண்மையான ஆன்மீகவாதி. உலகின் அனைத்து மதங்களின் உன்னதங்களையும், போற்றிப் பாராட்டியவர். ஆனால் இன்று மதவெறியைக் கிளறி நாட்டை சுடுகாடாக்க முயலும் இயக்கத்தினர் தனது பிரச்சாரத்திற்கு விவேகானந்தரை பயன்படுத்திக் கொள்கிறது. இது விவேகானந்தரை இழிவுபடுத்துவது ஆகும்.

இஸ்லாம் மதம் குறித்தும், முகலாய மன்னர்களின் ஆட்சி குறித்தும் அவர்கள் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் விவேகானந்தர் இஸ்லாம் மதம் குறித்து மிக உயரிய எண்ணம் கொண்டு இருந்தார்.

''சமத்துவத்தைப் பற்றி ஏதேனும் ஒரு மதம் பாராட்டத்தக்க முறையில் சொல்லியிருந்தால் அது இஸ்லாம் மட்டுமே என்பது தான் எனது அனுபவம்.''

LinkWithin

Related Posts with Thumbnails