Sunday, November 27, 2016

இல்லையென்பது இல்லை....!

இன்பம் இல்லையென்றால்
இன்னல்களை நேரிட வேண்டியதில்லை!
இருப்பது இல்லைஎன்றால்
இழப்பதற்கு என்று எதுவுமில்லை!!
உறவுகள் இல்லையென்றால்
பிரிவெனும் கடும் துயரிருபதில்லை! 
வாழ்க்கை இல்லையென்றால்
சுமைகளை சுமக்க வேண்டியதில்லை!!
இளமை இல்லையென்றால்

Saturday, November 26, 2016

பணத்தாள் நீக்கம் – ஏழைகளின் செல்வத்தை செல்வந்தர்களுக்கு நிரந்தரமாக மாற்றும் மரண அடி

பணத்தாள் நீக்கம் – ஏழைகளின் செல்வத்தை செல்வந்தர்களுக்கு நிரந்தரமாக மாற்றும் மரண அடி
(ஸ்க்ரோல்-இன் கட்டுரையின் தமிழாக்கம்scroll.in/)
பணத்தாள் நீக்கம் குறித்தான விவாதத்தில் பெரும்பகுதி, பொருளாதாரம் சீரடையும் அல்லது ரொக்கப் பணம் தேவைப்படாத நிலை வரும் என்பதைப் பற்றியே பேசுகிறது. இரண்டும் நடந்தால் நல்லது என்பது அதன் உள்ளடங்கிய அர்த்தம். ஆனால், பொருளாதாரத்தின்மீது ஒட்டுமொத்தமாக என்ன தாக்கம் ஏற்பட்டாலும் சரி, வளங்களின் பகிர்வின்மீது மிகப்பெரும் தாக்கம் ஏற்படும் என்பதைப் புறக்கணிக்கிறது. டீமானிடைசேஷன் என்பது பெரியதொரு வெற்றிடம் – சொல்லப்படுவதற்கு நேர் மாறாக - வலிமையற்றவர்களிடம் இருக்கும் வளங்களை செல்வாக்கு மிக்கவர்களுக்குச் சென்றடையுமாறு உறிஞ்சுகிற வெற்றிடம். குறிப்பாக, இந்த மாற்றம் நிரந்தரமானது.

தமிழர் பண்பாடு

                                                       சிராஜுல் மில்லத்
தமிழரின் பண்பாடு மிகச் சிறந்த பண்பாடு !  நினைவில் போற்றத்தக்க பண்பாடு.

2,000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்க சமுதாயத்தினர் என்று சொல்ல வேண்டுமானால், சீனர்கள் இருந்தார்கள். கிரேக்கர்கள், ரோமர்கள், அரபு மக்கள் இருந்தார்கள். நம்முடைய மக்களும் இருந்திருக்கிறார்கள்.

அவர்கள் தங்களை எப்படிக் கருதினார்கள். பிறநாட்டினரைப் பற்றி எந்த அளவுக்கு மதிப்பிட்டிருந்தார்கள் என்பதைப் பார்த்தால் தமிழனுடைய சிறப்பு பட்டெனத் தெரியும்.

Friday, November 25, 2016

மனவளர்ச்சி குறைபாடு (Mental retardation)

குழந்தைகள் தொடர்பான சில பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வுகளை பெற சில ஆலோசனைகள்

மனவளர்ச்சி குறைபாட்டுக் குழந்தைகளை இனங்காண்பது எப்படி? அவர்களுடன் நாம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்?

By M.N.Lukmanul Hakeem

MSW (medi and psy) M.phil (psw) Dip.in counseling , Dip in NLP. Psychotherapy Psychotherapist, psychiatric Social Worker and Psychological Counselor Certified Neuro Linguistic Practitioner Phd Scholar

http://www.islamkalvi.com

Monday, November 21, 2016

பெற்றோர்களே பிள்ளைகளை கண்காணிக்கிறீர்களா?



பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கண்காணித்து கணினியில் எதைப்படிக்கிறார்கள் எழுதுகிறார்கள் என்பதையும் எதனைப் பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் கவனமாக கவனித்துக்கொண்டே வரவேண்டும். அவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள் எப்படிப்பட்ட செயல்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள் என்பதையும் கவனிப்பதுடன் பிள்ளைகளுடன் சேர்ந்து உட்கார்து உறையாடி அவர்களின் நன்பர்களைப் பற்றியும் பள்ளி முடிந்ததும் வேறு எங்கும் செல்கிறார்களா என்பதையும் கண்கானிக்க வேண்டும்.

அவர்கள் படிக்கும்  நிலையில் அவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் இல்லாமலிருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிவதுடன் அவர்கள் தீய நண்பர்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றனரா தீய இடங்களுக்கு செல்கின்றனரா புகை பிடித்தல் பழக்கம் உள்ளனவா என அவர்கள் அறியாத வண்ணம் கண்கானித்து பிள்ளைகளிடம் மென்மையான முறையில் தீய பழக்கத்தின் கெடுதிகளை உணர்த்தி நேர் வழியின் பக்கம் கொண்டு வரவேண்டும்.

Tuesday, November 15, 2016

சமுத்திர ஆழங்களில் மண்டிக்கிடக்கும் மையிருள்


أَوْ كَظُلُمَاتٍ فِي بَحْرٍ لُّجِّيٍّ يَغْشَاهُ مَوْجٌ مِّن فَوْقِهِ مَوْجٌ مِّن فَوْقِهِ سَحَابٌ ظُلُمَاتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ إِذَا أَخْرَجَ يَدَهُ لَمْ يَكَدْ يَرَاهَا وَمَن لَّمْ يَجْعَلِ اللَّهُ لَهُ نُورًا فَمَا لَهُ مِن نُّورٍ

    அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள் சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால்  அதைப் பார்க்க முடியாது; எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை. 24:40 سورة النور

    கடல் ஆழங்களில் மண்டிகிடக்கும் மையிருட்டை நவீன கருவி சாதனங்களால் தான் விஞ்ஞானிகளால் உறுதி செய்திட முடிந்தது என ஜித்தாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கலகத்தில் பணியாற்றிய பேராசிரியர் துர்கா ராவ் கூறினார். எந்த ஒரு பொருளின் துணையில்லாமல் 20 முதல் 30 மீட்டர் அளவுக்கு மேல் மனிதர்கள் கடலுக்குள்ளே மூழ்குவது இயலாத காரியமாகும். அதேப்போன்று 200 மீட்டருக்கும் அப்பாற்பட்ட ஆழத்தில் கடல் பகுதிகளில் மனிதன் உயிர் வாழ்ந்திட முடியாது.

Friday, November 11, 2016

கிபுலி மலையும் அதன் நினைவுகளும் ....!

ராஜா வாவுபிள்ளை 



பண்டொருநாள்
எனதுபார்வையில்
அவ்விடம்
ஆள் அரவமில்லா
அதிகப்பயனில்லாத
ஒருசில வாகனங்களே பயணிக்கும்
பாதையாய் இருந்தது
பக்கத்திலொரு சிறுகால்வாயும்
சுத்தமான மழைநீரை சுமந்து
பெருமேரியில் கலந்திட
சலசலத்து ஓடியது
கால்வாயின் கரையோரம்
புகைவண்டி நிலையம்
ஆங்கிலேயனால் வடிவமைக்கப்பட்டு
இந்தியக்கூலிகளால் கட்டப்பட்டது

Saturday, November 5, 2016

நாற்பது வயதில் புரியும்..

மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
மனிதன் தனது பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென, நாம் உபதேசித்தோம். அவனை அவனது தாய் சிரமத்துடனே சுமந்து, சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுத்தாள். அவனை(க் கர்ப்பத்தில்) சுமப்பதும், அவனுக்குப் பால் குடியை மறக்கடிக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும். அவன் தனது வாலிபத்தை முழுமையாக அடைந்து, நாற்பதாவது வயதை அடையும் போது, ‘என் இரட்சகனே! நீ எனக்கும் எனது பெற்றோருக்கும் செய்த அருட்கொடை களுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் புரிவதற்கும் எனக்கு அருள்பாலிப்பாயாக! எனக்கு என் சந்ததியைச் சீர்படுத்துவாயாக! நிச்சயமாக நான் உன்னிடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டேன். நிச்சயமாக நான் முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களில் உள்ளவனாவேன் என்று (பிரார்த்தித்துக்) கூறுவான்.’ (46:15)

உலகில் உள்ள பெற்றோர்கள் அனை வரும் தியாகிகளாவர். ஆனால், பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் துரோகிகளாகவே நடந்து கொள்கின்றனர்.

Friday, November 4, 2016

இனிக்கும் இஸ்லாம் ... !

ஒரு அழகான கல்யாணம்
எப்படி இருக்க வேண்டும் என்பதை
மனித சமூகத்திற்கு வழங்கிய மார்க்கம் இஸ்லாம்.
அதில் ...
அழகு
காதல்
பொருளாதாரம்
மார்க்கம்
தியாகம்
எல்லாமே அழகியலுடன் கலந்திருந்தது.

LinkWithin

Related Posts with Thumbnails