Monday, May 31, 2010

ஏ.டி.எம்மில் ஒரே நாளில் லட்சம் ரூபாய்!

எச்.டி.எஃப்.சி வங்கிக் கணக்குகளில் இருந்து ஒரே நாளில் ஏ.டி.எம் வழியாக அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று கொள்ளும் வசதி நாளை முதல் செய்யப்படவிருக்கிறது.

பணம் எடுப்பதற்கு வசதியாக வங்கிகள் வழங்கியுள்ள ஏ.டி.எம் மெஷின் வசதியில், ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் எடுக்க முடியாத நிலை உள்ளது.

ஒரு சில வங்கிகளின் ஏ.டி.எம்களில் 25 ஆயிரம் ரூபாய் வரை தான் எடுக்க முடியும். எச்.டி.எப்.சி.,வங்கி ஏ.டி.எம்களில் 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க முடியும். தற்போது ஒரு லட்சம் ரூபாய் வரை ஏ.டி.எம்மில் பணம் எடுக்க எச்.டி.எப்.சி. வங்கி வழிவகை செய்துள்ளது.

நாளை முதல் தனது வங்கி ஏ.டி.எம்களில் ஒரு லட்சம் ரூபாய் வரை பெறுவதற்கு எச்.டி.எப்.சி வங்கி ஏற்பாடு செய்துள்ளது. இதே போல இந்த வங்கியின் 'டெபிட் கார்டு'களை பயன்படுத்தி கடைகளில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை பெறுமானமுள்ள பொருட்களை வாங்கிக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வசதியை மற்ற வங்கிகளும் வெகுவிரைவில் அமல்படுத்த உள்ளது. ஒரு லட்ச ரூபாய் வரை மட்டுமே டெபிட் கார்டில் பொருட்களை வாங்கும் வசதி முன்பு இருந்தது. இதே போல குழந்தைகளுக்கான 'கிட்ஸ் அட்வான்ஸ் டெபிட்' கார்டில் 2,500 ரூபாய் வரை பொருட்களை பெறவும், 1,500 ரூபாய் வரை பணம் பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கான டெபிட் கார்டில் முன்பு 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடிந்தது. தற்போது 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெறறுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
http://www.inneram.com/201005318633/can-withdraw-1-lakh-from-hdfc-atms
ஏ.டி.எம்மில் ஒரே நாளில் லட்சம் ரூபாய்!

பிரித்தானியாவின் முதலாவது முஸ்லிம் அமைச்சர்

பிரித்தானியாவின் முதலாவது முஸ்லிம் அமைச்சர் என்ற பெருமையை சயீதா ஹுஸைன் வர்ஸி (39 வயது) பெறுகிறார்.
அமைச்சுப் பதவிக்கு தெரிவாகியுள்ள சயீதாவுக்கு என்ன பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிவிக்கப்படவில்லையென அரசாங்கத் தரப்பு பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்த ஆலைத் தொழிலாளியின் மகளான சயீதா வியாழக்கிழமை டவுணிங் வீதியில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

2007 ஆம் ஆண்டு கரடி பொம்மையொன்றுக்கு இறை தூதரின் பெயரை வைக்க மாணவர்களுக்கு அனுமதித்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட பிரித்தானிய பாடசாலை ஆசிரியையான கிலியன் கிபொனின் விடுதலைக்காக பாடுபட்டதன் மூலம் சயீதா பிரபலம் பெற்றார்.

கடந்த வருடம் வட லண்டனிலுள்ள லூடன் நகரில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்களின் முட்டை வீச்சுத் தாக்குதலுக்கு அவர் ஆளானார்.

அவர் சரியான முஸ்லிம் ஒருவராக நடக்கவில்லை எனவும் ஆப்கானிஸ்தானில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு ஆதரவளித்து வருவதாகவும் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டவர்கள் குற் றஞ்சாட்டியிருந்தனர்.


http://mrishan.blogspot.com/2010/05/blog-post_29.html

பிரித்தானியாவின் முதலாவது முஸ்லிம் அமைச்சர்

Sunday, May 30, 2010

வணங்காமுடி பதில்கள் (23-05-2010)


கசாப் - கசாப்பு கடைக்காரனா? பலி ஆடா? -மன்சூர்
சட்டப்படி கசாப்புக்காரனே! நீதிமன்றம் அவனுக்குத் தண்டனை வழங்கிவிட்டதே!

பலி ஆடாகவும் கொள்ளலாம்.. பாகிஸ்தான் கொடுத்த பலி.


கருணாநிதியிடம் தங்களுக்கு பிடித்தது எது?-ராஜேஷ்

ஓய்வில்லா உழைப்பு.

தளர்வில்லாத் தன்னம்பிக்கை.

தோல்விகண்டு துவளா உறுதி.

அரசியல் அனுபவம்.



வீரப்பன் இருக்கும் வரை ஹொகேனக்கல் பிரச்னையை கர்நாடகம் கிளப்பவில்லை என்கிறாரே இயக்குநர் சீமான்? -வலசை முகைதீன்

தமிழ்த் தேசீய அரசியல் பேச்சு.

அப்போது தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் வீரப்பன் மட்டுமே பிரச்சனை.
அது ஓய்ந்ததால் அடுத்தது முளைத்துள்ளது..

வாட்டாள் நாகராஜ் தலைமையிலான சிறு கூட்டம், கன்னடர்கள் மீது தமக்கு மட்டுமே அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்வது போல் இவர்களும் தமிழர்கள் மீது தங்களுக்கு மட்டுமே அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்கின்றனர்.

அரசியல்...அரசியல்...


மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை அருந்ததிராய் போன்றவர்கள் ஆதரிக்கும் நோக்கம் என்ன? - அறிவழகன்

அரசே ஒப்புக் கொண்டது போல மலைமக்களுக்கு நலவாழ்வுத் திட்டங்கள் சென்றடையாததே!

லாலுப்ரஸாத் யாதவின் கருத்தையும் சேர்த்துக் கொள்க!

தீவிரவாதத்தை ஒழிக்க அதன் வேரைத் தேட வேண்டும்.

எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது தானே அடங்கிவிடும்.



கேரளாவில் நடிகர்கள் அரசியலுக்கு வரத் தயங்குவது ஏன்? - ரவி

தனித் தன்மையை இழக்க விரும்பாததால்..

மக்களும் நடிகர்களை நடிகர்களாகவே பார்க்க விரும்புகின்றனர்.

நடிகர் தேவன் ஒரு கட்சி ஆரம்பித்தார்; மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை மறைந்த நடிகர் முரளி மார்க்ஸிஸ்ட் கட்சி சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டார்; வெல்லவில்லை.


அடுத்த முதல்வராக குஷ்பு??? - ராகேஷ்

நோ சான்ஸ்! எம்ஜியார் துவக்கிய அ.இ.அ.தி.மு.க ஜெயலலிதாவின் கைகளில் வந்து விழுந்ததைப்போல ஒரு வாய்ப்பு, குஷ்புவுக்குக் கிடைக்கவில்லையே!


மக்கள் தொகையில் அதிகமாக இருந்தும் சீனாவைப் போல் இந்தியா முன்னேறவில்லையே. ஏன்? - அப்துல் காதர்

குறைவான மக்கட்தொகை கொண்ட ஜப்பான் முன்னேறியது எப்படி?
முன்னேற்றத்துக்கு மக்கள் தொகை மட்டும் காரணமில்லை.

சீன மக்களின் வாழ்க்கை முறை, மனநிலை, உழைப்பில் உள்ள ஆர்வம் , சீன அரசின் சட்டங்கள், செயல்பாடுகள் போன்றவையும் காரணங்களாம்.


போகிற போக்கைப்பார்த்தால் wife இல்லாமல் இருந்துவிடலாம். wifi இல்லாமல் இருக்க முடியாது போலிருக்கே? - சர்தார்

அறிவியல் வளர்ச்சியால் உலகம் விரல் நுனியில்.
ஆனால் நீங்கள் சொல்வது சற்று அதிகம்.

மனைவி வாழ்க்கைத் துணை.

கம்பியில்லாத் தொடர்பு வழித்துணை.

நாளை அறிவியல் புதிதாய் ஒன்றைக் கண்டுபிடித்தால் நீங்கள் அதன் பின்னால் ஓடுவீர்கள்.

மனைவியை விட்டு ஓடமாட்டீர்கள்.


வேற்றுக்கிரக வாசிகள், பறக்கும் தட்டு எதையாவது பார்த்திருக்கிறீர்களா வ.மு? - ரகு

பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
ஆனால் என் இயல்பான எளிமைத் தோற்றத்தால் சில இடங்களில் /அவைகளில், சிலர் என்னை வேற்றுக்கிரகவாசியைப்போல் பார்த்துள்ளனர்.

செல்வத்தில் கொழிக்கும் சீமான்கள், கான்வெண்ட் படிப்பும் நுனிநாக்கில் ஆங்கிலமும் கொண்ட மேட்டுக்குடி மக்கள், அரசியல் அதிகாரத்தால் குவித்த பொருளாதாரத்தில் செழித்தவர்களின் குடும்பத்தார், உழைக்கும் ஏழைகளை உழைக்கும் ஏழை வகுப்பை வேற்றுக்கிரகவாசியைப்போல்தான் பார்க்கின்றனர்.


Consensual sex தவறில்லை என சொல்லும் நீதிபதிகள் விபச்சாரிகளை தண்டிப்பது ஏன்? - மரியதாசன்

சட்டம் அப்படிச் சொல்வதால்...
பதினெட்டுக்கு மேல் வயதுடைய ஓர் ஆணும் பெண்ணும் விருப்பப்பட்டு உடலுறவு கொள்வதைச் சட்டம் கண்டு கொள்வதில்லை. ஆனால் பெண் பதினெட்டு வயதிற்குக் கீழ் இருந்தால், இருவரும் விருப்பப்பட்டு உறவு கொண்டாலும் அது வன்புணர்ச்சி எனும் குற்றம் ஆகும்.

consensual என்பதில், premarital , extramarital , adultery, cohabitation ஆகியவை அடங்கும்.

prostitution மற்றும் rape ஆகியவை தண்டனைக்குரியவை.

ஒரு விடுதி அறையிலோ மறைவான ஒதுக்குப் புறத்திலோ ஓர் ஆணும் பெண்ணும் தனியாக இருப்பதால் காவல்துறை அவர்களைக் கைது செய்யவோ வழக்குப் போடவோ முடியாது.

சாலை ஓரங்களிலோ வழிப்பாதைகளிலோ நின்று ஆண்களை அழைப்பது, ஒரு அறையிலோ அல்லது வீட்டிலோ கட்டணம் பெற்றுக்கொண்டு பாலியல் சேவை அளிப்பது, தரகர்கள் மூலம் ஆள் பிடிப்பது போன்றவை விபச்சாரம் என்ற வரையறைக்குள் வருவதால் விபச்சாரி தண்டிக்கப்படுகிறாள்.

ஆனால் அதற்கு மருத்துவப் பரிசோதனை, விந்து மாதிரி போன்ற ஆதாரங்களும் சாட்சிகளும் தேவை.

அவளிடம் போன ஆண் சாட்சியாக மட்டுமே வழக்கில் சேர்க்கப்படுவான்.


மனதை காயப்படுத்தும் மனங்கொத்தி மனிதர்களை எவ்வாறு சமாளிப்பது? - தர்மலிங்கம்

சிலர் அப்படியே பழகி விட்டனர்.
IGNORE THEM.

எருதுப்புண் காக்கைக்குத் தெரியுமா?

உங்கள் முன்னேற்றத்தைத் தடை செய்யவே அவர்கள் முயல்கின்றனர் என்பதை உணர்ந்து கொண்டால் நீங்கள் தாமாகவே அவர்களைப் புறக்கணித்து விடுவீர்கள்.


காசு கொடுத்து கலவரம் செய்து மனித உயிர்களை பறிக்க நினைப்பவர்களுக்கு மனச்சாட்சியே இருக்காதா? - இஸ்மாயில்

இருந்தால் கலவரம் செய்ய மாட்டார்களே!

மனித வடிவில் விலங்குகள். அவைதாம் பிற விலங்குகளை வேட்டையாடும்.



கலைஞர் எஸ். வி.சேகரை நடிகவேள் எம்.ஆர். ராதாவுடன் ஒப்பிட்டிருக்கிறாரே? - அருணாச்சலம்

தாம் இறப்பது வரை, பெரியாரின் கொள்கைகளைப் பேசி, நாடகங்களின் வாயிலாய், திரைப் படங்களின் வாயிலாய் அவற்றைப் பரப்பி வந்தவர் எம்.ஆர்.ராதா.

தாம் ஒரு பார்ப்பனர் என்பதைப் பெருமையாகக் கருதிப்  பேசி வருபவர் நடிகர் எஸ்.வி.சேகர்.

எஸ்.வி. சேகர் தம் நிலையிலும் கருத்திலும் உறுதியாக நிற்கும்போது கருணாநிதி தடுமாறுவது அப்பட்டமாகத் தெரிகிறது.

அவர் மஞ்சள் துண்டு மட்டும் அணியத்துவங்கியபோதே அவரது பகுத்தறிவு பல்லிளிக்கத் துவங்கி விட்டது.

அவரது குடும்பத்துப் பெண்கள் கோவிலுக்குப் போவதும் நல்ல நேரம் மற்றும் சகுனம் பார்ப்பதும் சாயிபாபாவிடம் ஆசிபெற்றதும் நாடறிந்த ஒன்றுதான்.

கருணாநிதி சோதிடனின் ஆலோசனைக்கேற்பச் செயல்படுவதாக, மிக அண்மையில் செல்வி ஜெயலலிதா  கூறியதில் சிறிது உண்மை இல்லாமலில்லை.

கருணாநிதி ஒரு சந்தர்ப்பவாதி. தமக்குத் தேவைப்படும்போது பார்ப்பனன் / சூத்திரன் தத்துவத்தை உதிர்ப்பார். தேவையின்றிச் சாதியை இழுப்பார்.

எம்ஜியாரால் தாம் பெற்ற நன்மைகளையும் பயன்களையும் மறந்து எம்ஜியார் மலையாளி எனப் பிரித்துப் பேசினார்.

காவிரிப் பிரச்சனையால் கன்னடர்கள்  தமிழர்களைத் தாக்கி விரட்டிய நிலையிலும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை "அன்புத் தம்பி" என்று பாசம்பொங்க அழைத்தார்.

தேவைப்பட்டால் "தாழ்த்தப்பட்டோரின் சம்பந்தி" என்பார்.

தேவைக்கேற்ப "ஒரு கையில் முஸ்லிம்லீக் கொடியைப் பிடித்தவன் நான்" என்பார்

ஒருமுறை ம.தி.மு.க. தலைவர் வைகோ "கருணாநிதி பிரச்சினைகளை ஊதிப் பெரிதாக்குகிறார்" என்று இயல்பாகச் சொன்னதைக் கருணாநிதி திரித்துத் தம் சாதியைக் குறிப்பிட்டு கோபாலசாமி பேசியதாகப் புலம்பினார்.

கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராயிருந்த, திருவட்டாறு தொகுதிச்  சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆல்பன் இறந்து, அத்தொகுதி இடைத்தேர்தலை எதிர்நோக்கியிருந்த சமயம்,  தேங்காய்ப்பட்டணத்தில் பிடிபட்ட தேங்காய் வடிவ குண்டுகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களை சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் மதத்தின் பெயர்கூறி இழிவாகத் திட்டுவதாகச் சட்டமன்றத்தில் இந்திய தேசீய லீக் உறுப்பினர் அப்துல் லத்தீப் வினா எழுப்பினார்.

காவல்துறையைக் கையில் வைத்திருந்த முதல்வர் கருணாநிதி ஒன்றில் அதை மறுத்திருக்க வேண்டும்; அல்லது "விசாரித்துத் தக்க நடவடிக்கை எடுப்போம்" என்று விடையிறுத்திருக்க வேண்டும்.

ஆனால் கருணாநிதியோ, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதியின் நாடார்சாதி வாக்குகளைக் கவர " அந்த ஆய்வாளர் சிதம்பரநாதன் பிற்படுத் தப்பட்ட நாடார் சாதியைச் சேர்ந்தவர்; அவர் அப்படிப் பேசியிருக்கமாட்டார்" எனத் தேவையின்றிச் சாதியை இழுத்துப் பேசினார்.

லத்தீப், ஆய்வாளாரின்  சாதி குறித்து எவ்விதக் குறிப்பும் கொடுக்கவில்லை. இதர உறுப்பினர்களுக்கும் ஆய்வாளாரின் சாதிபற்றி அக்கறை   யில்லை .ஆனால் கருணாநிதி தம் தேவைக்காக வலிந்து சாதியை இழுத்தார். இதுதான் கருணாநிதியின் சந்தர்ப்பவாதம்.

எனவே, கருணாநிதி எஸ்.வி. சேகரை எம். ஆர். ராதாவுடன் ஒப்பிட்டுப் பேசியதில் வியப்பில்லை.
Source : http://www.inneram.com/201005238488/vanangamudi-answers-23-05-2010

அரசு பணியில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை!


அனைத்து முஸ்லிம்களின் கவனத்திற்கு பல போராட்டங்களின் மத்தியில் பெறப்பட்ட  அரசு பணியில் 3.5 சதவிகிதம் இட ஒதிக்கீட்டில் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை. படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவகத்தில் உடனடியாக பதிவு செய்ய சொல்லவும். உங்களுக்கு தெரிந்த அனைத்து படித்த முஸ்லிம்களுக்கு தெரியபடுத்தவும்.

(பத்திரிக்கைகள் மற்றும் செல் மெசேஜ் மற்றும் டிவி மீடியா, இன்டர்நெட், வெப் சைட் மூலம் இந்த செய்தியை தெரியப்படுந்துங்கள்)

அல்லாஹ்  நம் அனைவர் மீதும் அருள்புரிவான் !
நன்றி : http://lalpetnews.blogspot.com/2010/05/35.html

IIT-யில் B.E / B.Tech சேர்க்கை-வீணாகும் இட ஒதுக்கீடு

IIT-யில் B.E / B.Tech சேர்க்கை-வீணாகும் இட ஒதுக்கீடு

மாணவக் கண்மணிகளே!
விழித்துக்கொள்ளுங்கள்!
வாய்ப்பைத் தவற விடாதீர்கள்!

வீணாக்கி விடாதீர்கள்!

ஐஐடி நுழைவு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கத் தேவை இல்லை! வெறும் தேர்ச்சி மட்டும் பெற்றாலே இடம் கிடைக்கும்!


மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனமான ஐஐடி-ல் இந்த ஆண்டு பொறியியல் B.E/ B.Tech சேர்க்கைக்கான நுழைவு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.மொத்தம் இந்தியாவில் 15 ஐஐடிகளில் உள்ள 9500 இடங்களுக்கு 13,104 பேர் தேர்சி பெற்றுள்ளனர். இதில் 2,357 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் (முஸ்லீம்களையும் சேர்ந்து).

ஐஐடி-டில் முஸ்லீம்களையும் சேர்ந்த்து பிற்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு உள்ளது. அதாவது 2565 இடங்கள் பிற்பட்ட வகுப்பினருக்கு உள்ளது ஆனால் தேர்வானதோ 2,357 பேர் மட்டுமே இடஒதுக்கீடு மூலம் நமக்கு கிடைக்கும் இடங்களின் 200 இடங்களுக்கு மேல் வீணாக போகின்றது (கடந்த ஆண்டை போல்).

ஐஐடி-ல் B.E/ B.Tech படிக்க மிக குறைந்த கட்டணமே, வசதி இல்லாத முஸ்லீம் மாணவர்களுக்கு மத்திய அரசே கல்வி செலவை ஏற்கும் ( ஐஐடி-யில் படிக்கும் சிறுபாண்மை மாணவர்களுக்கு மத்திய அரசு சிறப்பான இலவச கல்வி உதவி திட்டத்தை அமல்படுத்தி வருகின்றது). இங்கு உலக தரத்தில் கல்வி கற்று கொடுக்கப்படுகின்றது.

படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் சம்பளத்தில் வேலை (தற்போது ஐஐடி-யில் படிக்கும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான மாத சம்பளம் ரூ.1,00,000 இருந்து ரூ.30 ஆயிரம் வரை). மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள்.
இவை அனைத்தும் உள்ள ஒரே கல்வி நிறுவனத்தில் இட ஒதுக்கீடு வழங்கியும் படிப்பதற்க்கு தகுவாய்ந்த முஸ்லீம் மாணவர்கள் இல்லை.

பல ஆண்டுகால போராட்டங்களுக்கு பிறகு ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவங்களில் மத்திய அரசு 27% இட ஒதுக்கீடு வழங்கியது, ஆனால் அதை நிரப்புவதர்க்கு கூட தகுதி வாய்ந்த மாணவர்கள் இல்லை என்பது கவலை அளிக்கின்றது.
ஐஐடி நுழைவு தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கத் தேவை இல்லை வெறும் தேர்ச்சி மட்டும் பெற்றாலே ஐஐடில் இடம் கிடைக்கும் என்ற நிலை உள்ளது.
ஆனால் முஸ்லீம் மாணவர்கள் தேர்சி கூட பெறுவதில்லை.
பொறியியல் படிப்பு என்றாலே லட்ச கணக்கில் பணத்தை கொடுத்து ஏதாவது முஸ்லீம் கல்லூரில் சேர்க்க வேண்டும் என்றுதான் நமது சமுதாயம் சிந்திக்கின்றதே தவிற இது போன்ற உயர் கல்வி நிறுவங்களில் செலவில்லாமல் படிக்க நமது பெற்றோர்கள் முயற்சி செய்வதில்லை.

இங்கு படிக்க ஒரே ஒரு நுழைவு தேர்வு (IIT-JEE) அவ்வளவுதான். அதிக மார்க் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை

தேர்ச்சி பெற்றால் மட்டும் போதும். முறையாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகாலம் முறையாக நுழைவு தேர்வுக்கு (IIT-JEE) படித்தாலே இன்ஷா அல்லாஹ் கட்டாயம் தேர்சி பெற்று விடலாம், 10 ஆம் வகுப்பு முடித்து 11 வகுப்பு போகும் மாணவர்களே உங்களுக்கு பொறியியல் படிக்க ஆசையா?

இப்போதே (IIT-JEE) நுழைவு தேர்வுக்கு தயாராகுங்கள் இன்ஷா அல்லஹ் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்
அரசுக்கு கோரிக்கை : அரசு இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டும் போதாது நீதிபதி இரங்கநாத் மிஸ்ரா பரிந்துறைசெய்தது போல சேர்க்கைகான தகுதிகளை (கட் ஆஃப் மார்க்) குறைக்க வேண்டும். அபோதுதான் பின் தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு போய் சேரும்.  S.சித்தீக்.M.Tech,

TNTJ மாணவர் அணி source: http://tntjsw.blogspot.com
http://nidur.info


Saturday, May 29, 2010

அல்லாஹ் என்றால் யாருங்க? (பதில்)

சிராஜ் அப்துல்லாஹ்

கேள்வி:

அல்லான்னா யாருங்க!

(சகோ. ஜெகதீஸ்வரன்)

பதில்

بسم الله الرحمن الرحيم

(அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்)

அல்லாஹ் என்பவன் உங்கள் இறைவன்

  • நீங்கள் அல்லாஹ்வை வணங்கினாலும், அவனை வணங்கா விட்டாலும் அவன் தான் உங்கள் இறைவன்!
  • நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்தாலும், அவனுக்கு இணைவைக்காவிட்டாலும் அவன்தான் உங்கள் இறைவன்!
  • நீங்கள் அல்லாஹ்வை விரும்பினாலும், அவனை வெறுத்தாலும் அவன் தான் உங்கள் இறைவன்!
கடவுள் என்று ஏதாவது இருக்கிறதா?
  • சூரியன் வெளிச்சம் தருகிறது அந்த வெளிச்சத்தை நோக்கி பூமி உட்பட அனைத்து கோள்களும் நகர்கிறது இதன் மூலம் பகல்களும், இரவுகளும் ஏற்படுகிறது இதை நிர்வகிப்பது யார் மனிதனா?
  • பூமி ஒரே சீராக சுழல்வதால் தட்ப வெப்ப சீதோஷ்ணத்தில் மாறுபாடுகள் ஏற்பட்டு குளிர்காலம், மழைக்காலம், வெயில்காலம் ஆகியன ஏற்படுகிறது இதை நிர்வகிப்பது யார் மனிதனா?
  • நீங்கள் சுவாசிக்கும் காற்று உங்களின் சுவாசக்குழாயில் முறையாக வந்தடைகிறது அதை கொடுப்பது யார் மனிதனா?
  • நிலப்பரப்பில் உள்ள ஈர்ப்பு சக்தியால் நாம் நடக்கிறோம், அமர்கிறோம், ஓடுகிறோம் இந்த ஈர்ப்பு சக்தியை நிர்வகிப்பவன் யார் மனிதனா?
  • நிலத்தில் மனிதன் உழுகிறான் அவனுக்கு விதையை அறிமுகப்படுத்தியவன் யார் மனிதனா?
  • கடல் நீரை மழை நீராக்கி பருகுவதற்கும் நிலத்தை உழுவதற்கும் வானிலிருந்து கொட்டச் செய்பவன் யார் மனிதனா?
  • ஆகாயத்தில் பறக்கும் விமானத்திற்கு பாதையாக வானத்தை கொடுத்தவன் யார் மனிதனா?
  • குடும்ப உறவு கொள்ள மனிதர்களின் உடலில் விந்துத்துளிகளை செலுத்தியவன் யார் மனிதனா?
  • வயிற்றுப் பசியை தனிக்க மலம் சாப்பிடுவதில்லை மாறாக உணவு உட்கொள்கிறோம், தாகத்தை தனிக்க சிறுநீரை குடிப்பதில்லை மாறாக சுத்தமான நீரை பருகுகிறோம் மனிதனுக்கு இந்த பகுத்தறிவை கொடுத்தவன் யாரோ அவனே இறைவன்!
இறைவன் இல்லை என்று சொல்பவன் நாத்திகன் இவன் மாபெரும் பொய்யன் இவனுடைய கழுத்தில் கத்தியை வைத்தால் கடவுளே என்பான் காப்பாற்றப்பட்டவுடன் கடவுள் யார் என்பான்!
அல்லாஹ்வுக்கு பிறப்பு உள்ளதா?
ஒவ்வொரு மனிதனும் படைத்த இறைவனை தன்னுடைய பலவீனமான ஸ்தானத்தில் வைத்துத்தான் பார்க்கிறான் படைத்த இறைவனை இறைவன் என்ற ஸ்தானத்தில் வைத்து பார்ப் பதில்லை.
சிந்தித்துப்பாருங்கள்! உங்கள் தாயின் வயிற்றில் நீங்கள் 3 மாத கருவாக இருந்தீர்கள் அந்த குறிப்பிட்ட 3 மாதங்களுக்கு முன்பு நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்பதை கூற முடியுமா?
ஒரு மனிதன் தன் தாயின் வயிற்றில் 3 மாத கருவாக இருப்பதற்கு முன் அற்பத்திலும் அற்பமான ஒரு ஆட்டின் புளுக்கையாக கூட இருந்திருக்கவில்லை அப்படிப்பட்ட மனிதனை இறைவன் கருவாக உருவாக்கி, அதனுள் உயிர் கொடுத்து, பெயர் கொடுத்து, பெற்றோரை கொடுத்து கல்வி அறிவைக் கொடுத்து உலகில் வாழவைத்து மனிதனாக்கி சிந்திக்க மூளையை கொடுத்தால் இவன் படைத்த இறைவனின் பிறப்பை பற்றி சிந்தித்து கேள்வி எழுப்புகிறான். இந்த மனிதன் இறைவனுக்கு நன்றியுள்ள அடியானாக இருப்பதை காட்டிலும் நன்றிகெட்டவனாகத்தான் வாழ்ந்து மடிகிறான்!
இன்னும்; அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான் (அல்குர்ஆன் 22:66)
அல்லாஹ்வுக்கு மனைவி, பிள்ளைகள் உள்ளனரா?

ஒரு மனிதனுக்கு மனைவியும், பிள்ளைகளும் இருப்பது அவனுடைய வம்சத்தை பல்கிப் பெருகுவதற்காகவே தவிர வேறு எதற்கும் இல்லை. ஒரு ஆணும் பெண்ணும் குடும்ப வாழ்வில் ஒன்று சேருவதன் மூலமாக தந்தை, மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்று வம்சம் அபிவிருத்தியாகும் அதே நேரம் குடும்பத்தில் மரணங்கள் சம்பவிக்கும் காரணம் மனிதன் மரணிக்க பிறந்தவன்! இதோ மனித இனமும் அவனது குடும்ப அபிவிருத்தி பற்றிய விழிப்புணர்வு படம்.
மனிதனுக்கு அவனுடைய குடும்பம் சோதனைக் களமாக இருக்கிறது அவன் தன் தாயை, தந்தையை, சகோதர உறவை, மனைவியை, மக்களை என்று அனைவரையும் முறையாக கவனிக்கிறானா? இவர்களுக்காக உழைக்கிறானா? திருடுகிறானா? அல்லது இவன் குடும்பத்தை மறந்து தவறான பாதையில் செல்கிறானா? என்பதுதான் அந்த சோதனை! இந்த சோதனைகளை கொடுப்பவன் இறைவன் எனவே இறைவனை எவனும் சோதிக்க இயலாது மேலும் அவனுக்கு குடும்பமும் கிடையாது!
அல்லாஹ் ஒருவன்” என (முஹம்மத்) நீர் கூறுவீராக!. அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை (யாருக்கும்) பிறக்கவும் இல்லை. மேலும் அவனுக்கு நிகராக ஒருவரும் இல்லை. (அல்குர்ஆன்- 112)
அல்லாஹ் ஒருவன், அவனுக்கு இணை துணை கிடையாது!
இஸ்லாம் போதிக்கும் கடவுள் கொள்கை உலகில் உள்ள மற்ற மதங்களின் இறைக் கொள்கைகளை விட சற்று வேறுபட்டு நிற்கிறது. காரணம் இஸ்லாம் ஓரிரைக் கொள்கையை போதிக்கிறது மற்ற மதங்கள் அனைத்தும் பல கடவுள் கொள்கையை போதிக்கிறது!
ஒரு இறைவன் என்ற ஓரிரைக் கொள்கைதான் உண்மை என்பதற்கு கீழ்கண்ட காரணங்கள் தெளிவாக விளக்கும்
நீதி செலுத்த ஒரு இறைவன்தான் இருக்க வேண்டும்!
ஒருவனுக்கு அநீதி இழைக்கப்படும் போது அநீதி இழைக்கப் பட்டவனுக்கு உரிய நீதியை முறையாக செலுத்த வேண்டும் உதாரணமாக மூன்று கடவுள்கள் இருந்தால்
படைக்கும் கடவுள் இந்த மனிதனை நான் படைத்தேன் இவன் பாவியாகிவிட்டான் இவன் என்னை வழிபட்டான் எனவே படைத்த நானே இவனை மன்னிக்கிறேன் என்று கூறும்
கண்காணிக்கும் கடவுள் இந்த பாவியை நான் கண்காணித்து வந்தேன் என் கண்ணால் கண்ட நான் இவனை எவ்வாறு மன்னிக்க இயலும் என்று கூறும்
அழிக்கும் கடவுள் படைக்கும் கடவுள் மனிதனை படைத்துவிட்டது, கண்காணிக்கும் கடவுள் பாவியை கண்காணித்துவிட்டது எனவே அழிக்கும் கடவுளாகிய நான்தான் இவனை தண்டிப்பதா? மன்னிப்பதா என்று தீர்மானிக்கும் உரிமை படைத்தவன் என்று கூறும்
ஒன்றுக்கு மேமற்பட்ட அல்லது மூன்று கடவுள்களாகவோ இருந்தால் தங்களுக்குள் பிரச்சினையை தீர்க்க முடியாமல் வெவ்வேறு கருத்து வேறுபாடுகளைக் கொண்டு தங்களுக்குள் உட்பூசல்கள் ஏற்படுத்திக்கொள்ளும் ஆனால் ஓரிரைக் கொள்கையை போதிக்கும் இஸ்லாம் அல்லாஹ் ஒருவனை மட்டும் கடவுளாக முன் நிறுத்துகிறது அந்த ஒரு இறைவனாகிய அல்லாஹ் தான் நாடினால் தனக்கு இணை கற்பித்த பாவத்தை தவிர மற்ற பாவங்களை செய்த பாவியைக் கூட மன்னிப்பதாகவும் தான் நாடினால் தனக்கு இணை கற்பிக்காமல் தான் வகுத்த சட்டத்தை மீறிய நல்ல அடியானைக் கூட தண்டிப்பதாகவும் கூறுகிறது.
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்கமாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப்பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.’ (அல்குர்ஆன் 4:48)
ஒரு இறைவனாக இருந்தால் எதற்கும் அடிமையாக முடியாது!
பல கடவுள்கள் இருந்தால் அத்தனை கடவுள்களும் கருத்து வேறுபாடுகள் தோன்றும் இறுதியாக ஏதாவது ஒரு கருத்தின் பக்கம் தலைசாய்க்க ஒரு வஸ்துவிடம் அனைத்து கடவுள்களும் கை கட்டி நின்று கட்டுப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் இப்படிப்பட்ட நிலையில் அந்த ஒரு வஸ்து அனைத்து கடவுள்களுக்கும் அறிவுரை கூறி அவர்களை கட்டுப்படுத்தி விட்டால் அந்த வஸ்து கடவுளாகவும் அந்த வஸ்துவுக்கு முன் குழுமி நின்று கைகட்டி நிற்பவை அனைத்தும் அந்த வஸ்துவின் அடிமையாகத்தான் இருக்கும் எனவே கட்டுப்படும் கடவுள்கள் என்று எதுவும் கிடையாது.
அல்லாஹ் ஒருவன், அவன் தனித்தவன் அவன் கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்தவன் தவிர தான் படைத்த வஸ்துக்களிடம் கட்டுப்பட வேண்டிய இழிவான சூழ்நிலை அவனுக்கு இல்லை எனவேதான் அல்லாஹ் உங்கள் இறைவனாக இருக்கிறான் இந்த இறைவனுக்கு நீங்கள் அடிமையாக இருக்க சந்தோஷப்பட வேண்டும்!
அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப்படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக. (அல்குர்ஆன்: 17:111)
ஒரு இறைவனால் அனைத்தையும் நிர்வகிக்க இயலும்!
உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான இரத்த அணுக்கள் காணப்படுகின்றன, நூற்றுக்கணக்கான உறுப்புகள் இயங்குகின்றன அத்தனை உறுப்புக்களையும், கோடானு கோடி இரத்த நாளங்கள் மற்றும் இரத்த அணுக்களையும் நிர்வகிப்பதற்கு உங்கள் உடம்பில் உங்கள் உயிரை அல்லாஹ் படைத்துள்ளான் நீங்கள் உங்களை அறியாமலேயே உங்கள் உடலை நிர்வகிக்கிறீர்கள் இப்படிப்பட்ட உங்களுக்கே இப்படியொரு ஆற்றலை இறைவன் கொடுத்திருக்கும் போது கடவுளாகிய அல்லாஹ்வுக்கு அண்டசரா சரங்களையும் ஒருவனாக இருந்து நிர்வகிக்க ஆற்றல் இருக்காதா? என்ன!
உங்கள் உடம்பில் உங்களுடைய ஒரு உயிர் இருப்பதால்தான் உங்கள் உடம்பிற்கான கட்டளைகளை உங்களால் சீராக செலுத்த முடிகிறது அதுவே இரண்டு ஆதம்மாக்கள் உங்கள் உடம்பில் இருந்தால் கட்டளைகளில் முரண்பாடு ஏற்பட்டு மூளை பலவீன மடைந்துவிடும்! இதே போலத்தான் ஒரு இறைவன் (அதாவது அல்லாஹ்) இந்த அண்டசராசரங்களுக்குத் தேவையான கட்டளைகளை பிரப்பித்து நிர்வகித்து வருகிறான் மாறாக ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்தால் கட்டளைகள் ஒழுங்காக சென்று சேராது! அல்லாஹ் அவன் மிக்க அறிவாளியாகவும் ஞானமுள்ளவனாகவும் உள்ளான் இதைப் பற்றி அருள்மறை குர்ஆன் கீழ்கண்டவாறு வர்ணிக்கிறது!
உங்களுடைய நாயன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை எல்லாப் பொருட்களிலும் ஞானத்தால் விசாலமானவன்” என்றும் கூறினார்.(அல்குர்ஆன் 20:98)
உங்கள் இறைவன் அல்லாஹ் குற்றம் இல்லாதவன்!
பாவம் செய்வது மனித இயல்பு பாவமற்றவன் இறைவன் எனவேதான் கடவுள் என்று எண்ணி ஒரு வஸ்துவுக்கு கை, கால்கள் கொடுத்து நெற்றியில் கண்ணை பதித்து மனித ரூபத்தில் ஒரு சாரார் ரசித்தனர் இறுதியல் அந்த வணங்கப்படும் வஸ்துவை நோக்கி நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று கூறி தங்கள் கடவுள் கூட பாவம் செய்யும் என்ற கண்ணோட்டத்தில் கண்டார்கள். ஆனால் இப்படிப்பட்ட இழிவு அல்லாஹ்வுக்கு கிடையாது அவன் குற்றம் குறையற்றவன்.
இரண்டு கடவுள்கள் இருந்தால்தானே நம்மை போன்று குற்றம் குறை கண்டுபிடித்து சண்டை போடவோ அல்லது பொய் சொல்லவோ முடியும் ஆனால் படைத்த இறைவன் ஒருவனாக இருக்கும்போது குற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை அந்த ஓரிரைவன் எதை செய்தாலும் நிறையாகவே காணப்படும்!
உங்கள் இறைவன் அல்லாஹ் குறை இல்லாதவன்!
இரண்டு கடவுள்கள் இருந்தால்தான் இந்த கடவுளுக்கு இந்த குறை உள்ளது அந்த கடவுளுக்கு அந்த நிறை உள்ளது என்று கூறமுடியும் மாறாக ஒரே கடவுள் இருந்தால் அதனிடம் எந்த குறையும் தென்படாது அதனிடம் உள்ள அனைத்தும் நிறை வாகத்தான் இருக்கும்! எனவேதான் அல்லாஹ் குறையில்லா தவனாக இருக்கிறான் காரணம் அவன் தனித்தவனாக இணை துணையில்லாதவனாக இருப்பதே அவனுடைய சிறப்பு!
உங்கள் இறைவன் அல்லாஹ் அளவற்ற அருளாளன்
  • ஒன்றுமில்லாமல் இருந்த உங்களை கருவாக ஆக்கினான்
  • கருவுக்குள் உயிரை ஊதி, உடலை கொடுத்தான்
  • உடலுக்குள் உறுப்புகளை கொடுத்தான்
  • உறுப்புகளுக்கு கட்டளை செலுத்த மூளையை படைத்தான்
  • மூளைக்கு சிந்திக்கும் ஆற்றல் கொடுததான்
  • பசி எடுக்கும் போது குழந்தையிடம் அழுகை கொடுத்ததான்
  • அழுத குழந்தைக்கு தாய்ப்பால் மற்றும உணவு கொடுத்தான்
  • உணவுக்காக உலகை கொடுத்தான்
  • உலகில் நிலம், நீர், காற்று, மழை, வெயில், குளிர், உஷ்ணம் என்று அனைத்தையும் கொடுத்தான்
  • உடல் சுகத்தை தணிக்க மனைவியை கொடுத்தான்
  • வயோதிக பருவத்தில் பெற்ற மக்களை போர்வை யாக்கினான்
  • மரணித்தபின் உங்கள் உடலை புதைக்க மண்ணை  கொடுத்தான்.
இத்தனையும் கொடுத்த இறைவன்
  • நாம் நுகரும் காற்றிற்கு உங்களிடம் விலை பேசவில்லை,
  • பருகும் நீருக்கு கட்டணம் நிர்ணயிக்கவில்லை
  • வசிக்கும் நிலத்திற்கும் பேரம் பேசவில்லை
ஆனால் மனிதனாகிய இவன் காற்றை விற்பனை செய்கிறான், நீரை விற்பனை செய்கிறான் நிலத்தை மோசடி செய்து விற்கிறான் இவன் மனிதன் இறைவனை உணராதவன்! இவன் இறைவனது அருளை உணர்ந்துவிட்டால் பாவத்தை கைகழுவ நடிவிடுவான் அல்லாஹ்வுக்கு அடிமையாகிவிடுவான்!
அல்லாஹ் நம்மை சோதிப்பான் ஆனால் உதவுவான் (அவன் மாபெரும் கருணையாளன்)
அல்லாஹ் சிலர் சிலருக்கு உடலளவில் குறைபாடுகள் கொடுப்பான் அந்த குறைபாடுகளை பார்க்கும் நாம் ஏன் இவர்களை இவ்வாறு இறைவன் படைத்தான் என்று எண்ணிக் கொண்டிருப்போம்! ஆனால் அல்லாஹ்வோ யாருக்கு குறைகள் கொடுத்தானோ அவர்களுக்கு நிறைகளையும் கொடுத்து உதவுகிறான்!
  • கண்பார்வை இல்லாதவர்கள் எதனையும் காண முடியாது இது அவர்களுக்கு உள்ள குறை அதே வேளையில் காதுகளில் நுண்ணறிவோடு கேட்கும் சக்தி அதிகமாக்கித் தருகிறான்! இதை விட சிறந்த உதவியாக கண்பார்வை யற்றவர்கள் கண்களின் விபச்சாரத்திலிருந்து பாதுகாப்பு பெற வைக்கிறான்! மஹ்ஷர் எனும் நியாயத்தீர்ப்பு நாளில் அவர்களுக்கு எதிராக அவர்களது கண்களுக்கு விசாரணை இருக்காதே!
  • காது கேளாதோருக்கு கேட்கும் திறன் குறைவாக இருக்கும் இவ்வாறு உள்ளவர்களுக்கு நினைவாற்றல் அதிகமாக இருக்கும்! அதே வேளையில் காது கேளாதவர்கள் தீய வார்த்தைகளை கேட்காமல் தீய பாடல்களை கேட்காமல் இருப்பதானல் மஹ்ஷர் எனும் நியாயத்தீர்ப்பு நாளில் அவர்களுக்கு எதிராக அவர்களது செவிக்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?
  • வாய்பேச முடியாத ஊமைகளால் எதனையும் பேச முடியாது ஆனால் அதே நேரம் அவர்கள் புறம் பேசுதல் போன்ற எந்த கெட்ட வார்த்தைகளையும் பேச முடியாத காரணத்தினால் மஹ்ஷர் எனும் நியாயத்தீர்ப்பு நாளில் அவர்களின் வாய்க்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?
  • பிறக்கும் குழந்தைகளிலோ அல்லது ஏதாவது விபத்திலோ சிலருக்கு புத்தி சுவாதீனம் ஏற்பட்டு பைத்தியமாக இருப்பார்கள் அவர்கள் நிலையைக் கண்டால் நம்மில் சிலருக்கு பைத்தியம் என்று எண்ணி மனதளவில் சிரிப்பு வரும் ஆனால் இவர்களுக்கு உள்ள அருட்கொடைகளை எண்ணிப்பார்த்தால் நமக்கு வருத்தமளிக்கும் காரணம் இவர்கள் பிறவியிலேயே புத்திசுவாதீனமற்றவர்களாக இருந்தால் கேள்விக்கணக்கே இருக்காதே!  மேலும் இடையில் ஏதாவது விபத்துக்களால் புத்திசுவாதீனம் ஏற்பட்டால் அன்று முதல் அவர்கள் தன்னை அறியாமல் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைத்துவிடும்!  மேலும் மஹ்ஷர் எனும் நியாயத்தீர்ப்பு நாளில் இப்படிப்பட்டவர்களின் உள்ளத்திற்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா!
அல்லாஹ்வுக்கு உள்ள பண்புகளும், தன்மைகளும்!
அல்லாஹ் என்பவன் அனைத்து படைப்பினங்களின் அரசனாக இருக்கிறான் மேலும் படைத்தல், காத்தல், நிர்வகித்தல், அழித்தல் ஆகிய அனைத்து பண்புகளையும் அல்லாஹ் பெற்றுள்ளான். எந்த பொருளையும் முன்மாதிரியின்றி படைக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு உள்ளது மேலும் (குன்) ஆகுக என்று கூறினால் போதும் தான் நாடியவாறு அந்த பொருள் ஆகிவிடும். இதைப்பற்றி அருள்மறை குர்ஆன் பின்வருமாறு விவரிக்கிறது!
(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் குன்‘ – ஆகுக – என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (அல்குர்ஆன்2:117)
அல்லாஹ்வை நம்புங்கள்
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(அல்குர்ஆன் 2:28)
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) நீங்கள், ‘மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்என்று கூறினீர்கள் அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது. (அல்குர்ஆன் 2:55)
விக்ரஹ ஆராதனையை தவிர்த்திடுங்கள்
நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக் கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், “மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித் தருவீர்களாக!” என்று வேண்டினர்; “நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்” என்று மூஸா (அவர்களிடம்) கூறினார். (அல்குர்ஆன்: 7:138)
உலக மக்கள் அனைவரும் பொதுவான விஷயத்துக்கு வாருங்கள்
(நபியே! அவர்களிடம்) ”வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்;. அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ”நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள். (அல்குர்ஆன்3:64)
குறிப்பு
பல்வேறு மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளும் கருத்துக்களும் இந்த கட்டுரை வரைய பேருதவியாக இருந்தன! நம் அனைவருக்கும் அல்லாஹ் கல்வி ஞானத்தை வழங்கி நேர்வழிகாட்டி நல்லருள்புரிந்து!
நம் அனைவருக்கும் கல்வி ஞானத்தை வழங்கிவன் அல்லாஹ்தான்  எனவே புகழனைத்தும் அவனுக்கே உரியது நாம் அவனுடைய அடிமைகள்தான்!

அல்ஹம்துலில்லாஹ்

Source : http://islamicparadise.wordpress.com/அல்லாஹ் என்றால் யாருங்க? (பதில்)

Friday, May 28, 2010

கவிதை : காய்க்காத அத்திமரம்

By சேவியர்

விரும்பாமலேயே
வாய்த்து விடுகிறது
பலருக்கும்
குழந்தைப் பாக்கியம்.
நாள்காட்டிகளின்
சுட்டுவிரல்
கணக்குகளில் பிசகியோ,
விசாரணைக்குரிய
பாதுகாப்புக்
கவசங்களின் கண்களில்
மண்ணைத் தூவியோ,
மோகத்தின்
முணுமுணுப்புகளில்
மறைந்து போன
எச்சரிக்கை உணர்விலோ,
ஏதோ ஒன்றில்
நழுவி விழுகின்றன
இந்த
மண்ணின் வரங்கள்
சாபங்களாக.
இந்த வானக வரங்களை
சாபங்களாகச் சித்தரிப்போர்
சந்தித்தல் நலம்.
மரத்தில் தொட்டில் கட்டி
கண்களில்
மதகு உடைத்துக் கரையும்
வேண்டுதல் ஒலிகளை.

http://xavi.wordpress.com/2010/04/21/child-5/கவிதை : காய்க்காத அத்திமரம்

அன்புள்ள சந்தனமுல்லை

அன்புள்ள சந்தனமுல்லை

உங்கள் பதிவு அருமை. அதேபோல் மீடீயாவின் பின்னால் செல்லாமல் மற்றவர்களின் பதிலையும் தெரிஞ்சுக்க நினைத்தது மிக நேர்மை. நன்றி. என்னை கூப்பிடவில்லை என்றாலும் பதில் சொல்ல வேண்டிய சமூகத்தை சார்ந்திருக்கிறேன் என்பதால் பதில் அளிக்கிறேன்.

1. நமக்கு உண்மையில் ஃபத்வாவில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்று தெரியாது. மீடீயாவில் அத்தனை எழுத்துக்களையும் போடுவது கிடையாது. அவரகளின் தேவைக்கு எற்ப ஒட்டி, வெட்டிதான் பயன்படுத்துவர். அதனால் உண்மையில் என்னவிதமான ஃபத்வா கொடுக்கப்பட்டது என்று தெரியாது. அதனால் இதன் மேல் தர்க்கம் புரிவது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல.

2. ஃபத்வாவை வார்த்தைகள் பிறழாமலே மீடீயா வெளியிட்டுள்ளது என்றே வைத்துக் கொள்வோம். அந்த லின்க்கில் படித்ததில், "ஆண்களுடன் சரளமாக, பர்தா / திரை இன்றி பேசி பழகும் அபாயம் இருப்பதால் அத்தகைய இடங்களில் பெண்கள் வேலை செய்ய ஷரீஅத்தில் இடமில்லை" என்று குறிப்பிட்டுள்ளனர். மேலோட்டமாக இல்லாமல் நன்கு ஆராய்ந்து படித்தால், இத்தகைய இடங்களில் வேலை செய்வதையே அல்லது இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில், இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்லாத்தில் பெண்களை மிகவும் ஜாக்கிரதையாக, கருத்தாக காத்து வளர்க்க வேண்டுமென சட்டமுள்ளது. பெண் குழந்தைகள் இருந்து அவர்களை நன்றாக பேணிப் பாதுகாத்தால் நானும் அவர்தம் பெற்றோரும் / காப்பாளரும் சொர்க்கத்தில் பெரு விரலும் சுட்டு விரலும் போல இணைந்திருப்போம் என நபி மொழி உண்டு.

 

மேலும் படிக்க அன்புள்ள சந்தனமுல்லை

http://mydeartamilnadu.blogspot.com/2010/05/blog-post_16.html

ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்-ஏழ்மையால் விட்டு சென்ற தாய்-அழைத்து வந்த போலீஸ்!

கும்பகோணம்: ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகளை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு தாய் மாயமானார். கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி மணிகண்டன் (26), இவரது மனைவி துர்காதேவி (24). கர்ப்பிணியாக இருந்த துர்காதேவி்க்கு சமீபத்தில் கும்பகோணத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் மிகவும் எடை குறைவாக இருந்ததால் 1 மாதம் இன்குபேட்டரில் வைத்து பராமரிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறினர். ஆனால், அதற்கு பணமில்லை என்று கூறியதால் துர்காதேவியையும் குழந்தைகளையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இன்குபேட்டரில் வைத்து குழந்தைகள் பராமரிக்கப்பட்டன. துர்காவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந் நிலையில் திடீரென துர்காதேவி குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து கும்பகோணம் மகளிர் போலீஸ் நிலையத்தில் மருத்துவமனை நிர்வாகம் புகார் செய்தது.

போலீஸார் துர்காதேவியை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தியபோது, 3 பெண் குழந்தைகளை வளர்க்க எங்களிடம் வசதி இல்லை. இதனால் தான் விட்டுவிட்டு வந்தேன் என்றார்.

போலீசார் அறிவுரை கூறி துர்காதேவியை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்து குழந்தைகளை கவனிக்க செய்துள்ளனர்.
http://www.inneram.com/201005288571/3

ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்-ஏழ்மையால் விட்டு சென்ற தாய்-அழைத்து வந்த போலீஸ்!

20 ஆண்டுகளின் பின்னர் இன்று யாழ். பெரிய பள்ளியில் தொழுகை

யாழ்ப்பாணம் பெரிய பள்ளிவாசல் 20 வருடங்களுக்குப் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் உத்தியோக பூர்கமாகத் திறந்து வைக்கப்படவுள்ளதுடன் முதலாவது ஜும்ஆப் பிரசங்கமும் இடம்பெறவுள்ளது.
ஒற்றுமையையும், சமாதானத்தையும் வலியுறுத்தி முதலாவது ஜும்ஆப் பிரசங்கத்தை கொழும்பு பெரிய மர்க்கஸ், ரஷாதிய்யா அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும், இப்னு உமர் ஹதீஸ் கற்கை நிலையத்தின் பணிப்பாளருமான மெளலவி எம். ஜே. அப்துல் காலிக் தேவ்பந்தி நிகழ்த்தவுள்ளார்.
காட்டுப்பள்ளி என அழைக்கப்படும் இந்தப் பள்ளிவாசல் 1713ல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பல்லவர் கால சிற்பத்தை ஒத்ததாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் பள்ளி 297 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும் மிகப்பெரியதுமாகும்.
இந்தப் பள்ளிவாசல் தற்பொழுது முழுமையாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொழக்கூடிய வசதியைக் கொண்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது நாட்டின் பல பாகங்களிலும் இஸ்லாமியப் பணியில் ஈடுபட்டுள்ள 46 உலமாக்களும் இன்றைய நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இன்று பெண்களு க்கான விசேட பயான் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அஸர் தொழுகையைத் தொடர்ந்து உலமாக்களுடனான ஆலோசனைக் கூட்டமும் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து இஸ்மாயில் மெளலவியால் விஷேட பிரார்த்தனையும் நடை பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்களில் ஒருவரான மெளலவி அப்துல்லாஹ் பாயிஸ் தெரிவித்தார்.
முஸ்லிம் கல்லூரி வீதியில் அமையப்பட்டுள்ள இந்தப் பள்ளிவாசலுக்குட்பட்ட பகுதியில் முஸ்லிம்கள் மீண்டும் மீளக்குடியமர்ந்ததையடுத்தே பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டு அழகிய தோற்றத்துடன் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். ஒல்லாந்தர் காலத்தில் பெரியளவில் இந்தப் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. அப்போது அந்தப் பிரதேசத்தில் செல்வந்தராக இருந்த முகம்மது தம்பி மரைக்காயரும், வண்ணார்பண்ணை வைத்தியலிங்க செட்டியார் என்பவரும் இணைந்தே இப்பள்ளியைக் கட்டியதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source : http://www.inneram.com/201005288555/20
20 ஆண்டுகளின் பின்னர் இன்று யாழ். பெரிய பள்ளியில் தொழுகை

Thursday, May 27, 2010

இஸ்லாம் அழைக்கிறது [1] -- இஸ்லாத்தில் இறைவணக்கம்

இஸ்லாத்தில்  இறைவணக்கம்
                  படம் இல்லை, சிலை இல்லை,
அடையாளச்சின்னம் இல்லை,
முஸ்லீம்கள் எதை வணங்குகிறார்கள்?

 மலர்கள் இல்லை, ஊதுவர்த்தி இல்லை,
வாசனைக்கட்டை புகை இல்லை,
முஸ்லீம்கள் வணக்கத்திற்கு
எதை பயன்படுத்துகிறார்கள்?

 அர்ச்சகர்கள் இல்லை, முஸ்லீம்களின்
வணக்கத்திற்கு யார் வழிகாட்டி?

புனித தண்ணீர் இல்லை,
மயில் இறகு இல்லை,
முஸ்லீம்கள் எதைக்கொண்டு
ஆசிர்வதிக்கப்படுகிறார்கள்?

பள்ளிவாசல்களில் நாற்காளிகள் இல்லை,
முஸ்லீம்கள் எவ்வாறு வணங்குகிறார்கள்?

அரபு மொழி பேசாதவர்கள்,
ஏன் அரபு மொழியில் வணங்குகிறார்கள்?
                                                                 
இடம் பெரிது, ஏன் சிலர் மட்டுமே
பள்ளிவாசல்களில் வணங்குகிறார்கள்?

PERKIM

Muslim Welfare Organization of Malaysia
150 Jln Ipoh, 51200 Kuala Lumpur, Malaysia
Tel: +603-4042 6224  Fax: 4042 7403
www.perkim.net.my
From Dr Mansoor from Kuala Lumpur

முஸ்லிம் பெண்கள் சம்பாத்தியம்!

சகோதரி சந்தனமுல்லை அவர்கள் முஸ்லிம் பெண்கள் சம்பாதிப்பது ஹராமா என்று ஒரு இடுகையெழுதி அதைப்பற்றி என்னுடைய கருத்தையும் (நம்மளையும் மதிச்சு!!) எழுத சொல்லிருந்தாங்க. நானே எழுதனும்னு நினைச்சிட்டு இருந்தேன், ஆனா எப்பவும் போல என்னுடைய சோம்பல் முடக்கிட்டு. இப்ப நல்லவேளை சகோதரி எழுத சொன்னாங்க. அதனால, சுடச்சுட இந்த பதிவு.


**
முதல்ல ஒரு விஷயம். இஸ்லாத்தை போலவும், நபி சல் அவர்களைப்போலவும் அதிகமான அளவு விமர்சனத்துக்குள்ளான விஷயங்கள் எதுவுமே இல்லைன்னு நினைக்குறேன். முஸ்லிம்கள் எது செய்தாலும் அது விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாகவே மீடியாக்கள் சித்தரிக்கின்றன என்பது என்னுடைய கருத்து. அதுவும் பெண்க‌ள் விஷ‌ய‌த்தில் பார‌ப‌ட்ச‌மாக‌வே ந‌ட‌க்குதுன்னு நாம கண் முன்ன பார்க்கிற விஷயம்.

ச‌ரி, விஷ‌ய‌த்துக்கு வ‌ருவோம். தாருல் உலூம் என்ற‌ இஸ்லாமிய‌ அமைப்பு, கொஞ்ச‌ நாள் முன்ன‌ 'முஸ்லிம் பெண்க‌ள் வேலைக்கு செல்வ‌து ஹ‌ராம்' அப்ப‌டின்னு ஒரு ஃப‌த்வா சொன்ன‌தாக‌ எங்க‌ பார்த்தாலும் செய்தி ப‌ர‌வி கிட‌ந்த‌து. முஸ்லிம் பெண்கள் ப‌டிப்ப‌தோ, வேலைக்கு செல்வ‌தோ எந்த‌ இட‌த்துல‌யும் ஹ‌ராம் என்று சொல்ல‌ப்ப‌டாத‌போது எப்ப‌டி இப்ப‌டி ஒரு ஃப‌த்வா வ‌ந்துச்சுன்னு ஒரே குழ‌ப்ப‌ம். பிற‌கு பார்த்தா தான் தெரியுது, இதுவும் மீடியாக்க‌ளின் கைங்க‌ரிய‌ம் தான். ச‌மீப‌மாக‌ வ‌ந்த‌ செய்திக‌ளில் அப்ப‌டி ஒரு 'ஃப‌த்வாவை சொல்ல‌வில்லை, பெண்க‌ள் வேலை செய்யுமிட‌த்தில் பேண வேண்டிய‌ ஹிஜாபை ப‌ற்றித்தான் சொல்லிருந்தோம்' என்று ம‌றுப்பு தெரிவிச்சிருக்காங்க‌.

ச‌ரி. இப்ப‌ முஸ்லிம் பெண்க‌ள் வேலைக்கு செல்ல‌லாமா? செல்ல‌க்கூடாதா? இஸ்லாம் இதைப்ப‌த்தி என்ன‌ சொல்லுது?

   மேலும் படிக்க  முஸ்லிம் பெண்கள் சம்பாத்தியம்!
Source :http://biriyaani.blogspot.com/2010/05/blog-post_15.html

Wednesday, May 26, 2010

நினைவுகள்


நினைவுகள்
வீணை மீட்டும் விரல்கள் போல்
நெஞ்சை மீட்டிப் போகின்றன
உன் நினைவுகள்!

வளர்பிறை போல் அந்
நினைவுகள் எல்லாம்
வளர்ந்து கொண்டேயிருக்க
நான் மட்டும் தான்
தேய்ந்து கொண்டேயிருக்கறேன்
தேய்பிறை போல!

காற்றின் வேகத்திற்கு ஏற்றார் போல்
திசை மாறும் விசைப் படகினைப் போல்
உன் நினைவுகள் என்னை
திசை மாறச் செய்கின்றன!

கடல் அலைகள்
துள்ளிக் குதித்து ஆர்ப்பரித்து வந்தாலும்
கரையை அணைத்துக கொள்வதில்லை!
வருடி விட்டுத் தான் செல்கின்றன.
அது போலத் தான்
உன் நினைவுகளும்!

ஆனாலும் அந்த ஆர்ப்பரிப்பில்
கரையே அடித்து செல்லப்படும்
அபாயம் கூட நேரிடலாம்!
அது போலத் தான்
உன் நினைவுகள்
சில நேரங்களில் என்னை
சிதையுண்டு போகச் செய்கின்றன!

சட்டென வந்து போக
வானவில் அல்ல
உன் நினைவுகள்!
அவை வானத்து
நிலவு போல்…

சில நேரங்களில்
தேய்வது போல் தோன்றினாலும்
பல நேரங்களில்
வளர்ந்து கொண்டே
தான் போகிறது!

நிலவில் வசிக்க
முடியுமா என யோசித்துக் கொண்டிருக்கும்
மனிதர்கள் மத்தியில்
உன் நினைவுகளில்
வசிப்பதே சுகமாகிப் போனது
எனக்கு!

உலகின்
ஏதோ ஓர் மூலையில்
நீ உன் கணவனோடு!
நான் இங்கே
இன்னமும்
உன் கனவுகளோடு…
Words cant 
just explain how much I miss you...
- "Jumaana" Syed Ali நினைவுகள்http://www.jsyedali.com/profile/poems_feelings.php



ஈமான் என்றழைக்கப்படும் இந்தியன் முஸ்லீம் அசோஷியேஷன்

ஈமான் என்றழைக்கப்படும் இந்தியன் முஸ்லீம் அசோஷியேஷன் கடந்த 1976 ஆம் ஆண்டு அமீரகத்தின் வணிகத்தலை நகராம் துபாயில் துவங்கப்பட்டது.

ஈமான் அமைப்பு கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஆற்றிவரும் சமுதாயப் பணிகள் எளிதில் மதிப்பிடக் கூடியதல்ல. ஈமான் அமைப்பில் ஆரம்பம் முதல் தங்களை இணைத்துக் கொண்டு இன்றும் சேவை புரிந்து வரும் பலரும் நம் மத்தியில் உள்ளார்கள்.


ஈமான் அமைப்பு அமீரகத்தில் துபாய் இந்தியத் துணைத் தூதரகத்தில் அமைக்கப்பட்டுள்ள INDIAN COMMUNITY WELFARE COMMITTEE (ICWC)- இணைத்துக் கொண்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய மக்களுக்கு குறிப்பாக தமிழக மக்கள் அல்லலுறும் பட்சத்தில் அவர்களுக்கு உடன் உதவிடும் பணியில் ஈமானின் செயலாளர்களில் ஒருவராகிய ஏ. முஹம்மது தாஹா ஈடுபட்டுள்ளார்.


ஈமான் அமைப்பின் பணிகளில் சமுதாய விடியலுக்காக செயல்படும் திட்டத்தில் சிறப்பான இடத்தில் இருப்பது ஏழை மாணவ மாணவியர்களின் மேற்படிப்புக்காக கல்வி உதவித் தொகை வழங்கி வருவது. இதன் மூலம் ஐநூறுக்கும் மேற்பட்டோர் தங்களது உயர்கல்விக் கனவை நனவாக்கியுள்ளனர்.


ஈமான் அமைப்பு வருடம்தோறும் மீலாது விழா பேச்சுப் போட்டிகளை அனைத்து சமூக மக்களும் பங்கேற்கும் வண்ணம் நடத்தி பல்வேறு சிறப்புப் பரிசுகளை வழங்கி வருகிறது. இதற்கு இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், எமிரேட்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்களும் ஈ.டி.ஏ அஸ்கான், அல் ஹசீனா ஜுவல்லரி, லேண்ட்மார்க் ஹோட்டல், இந்தியன் சில்க் ஹவுஸ், ஜெனாரட் வாட்சஸ், மவ்லான் ஹஜ் உம்ரா சர்வீஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் பரிசுகளை வழங்கி வருகின்றன.


ஈமான் அமைப்பின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது துபாய் தேரா தமிழ் பஜாரில் உள்ள லூத்தா மஸ்ஜித் எனப்படும் குவைத் பள்ளியில் இங்கு சமுதாய மார்க்க விளக்க நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு ரமலான் மாதத்தில் தினமும் 5000 க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த சகோதரர்கள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பது முக்கிய நிகழ்வு. இதில் பல்வேறு தமிழ் அமைப்புகளும், இந்திய துணைத் தூதரக அதிகாரிகளும் பங்கேற்று சிறப்பு சேர்த்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாய் அமைந்து வருகிறது.


இதுமட்டுமல்லாது மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி, தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.


இத்தகைய பல்வேறு நிகழ்வுகள் நடைபெறக் காரணமாய் இருந்து வரும் ஈமான் அமைப்பிற்கு தலைவராக விளங்கும் ஈ.டி.ஏ. அஸ்கான் நிறுவனக் குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுதீன் அவர்களும் இணை மேலாண்மை இயக்குனர் கல்விக்குழுத் தலைவராக அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் அவர்களும் இருந்து வழிகாட்டி வருகின்றனர். ஈமான் அமைப்பின் பிற நிர்வாகிகள் விபரம் வருமாறு :


துணைத்தலைவர்கள் கே.எம்.அஹமது முஹைதீன்
கவிஞர் எம்.ஏ.அப்துல் கத்தீம்
எம். அப்துல் ரஹ்மான்
பொதுச் செயலாளர் ஏ. லியாக்கத் அலி
கல்விச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா
யு. முஹம்மது ஹிதாயத்துல்லா
விழாக்குழு செயலாளர் டி.எஸ்.ஏ. யஹ்யா முஹ்யித்தீன்

ஊடகத்துறை பொறுப்பாளர் : முதுவை ஹிதாயத்
ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஏ. ஹமீது யாஸின்
தணிக்கையாளர் எஸ்.எம். பாரூக்

அலுவலகப் பொறுப்பாளர் இஸ்மாயில் ஹாஜியார்


தொடர்பு முகவரி ஈமான்
தபால் பெட்டி எண். 13302
துபாய்
தொலைபேசி 04 266 1415
தொலைநகல் 04 266 4142
இணையதளம் www.imandubai.org
மின்னஞ்சல் iman1976@emirates.net.ae

Tuesday, May 25, 2010

எஸ்.எஸ்.எல்.சி. நெல்லை மாணவி ஜாஸ்மின் முதலிடம்!


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணி அளவில் வெளியிடப்பட்டது. இதில் நெல்லை மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

திருநெல்வேலி டவுனில் உள்ள நெல்லை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியான ஜாஸ்மின் 500 மதிப்பெண்களுக்கு 495 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவரது மதிப்பெண்கள் விவரம் வருமாறு:

தமிழ் - 98


ஆங்கிலம் - 99

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 98

மொத்தம் - 495
http://www.inneram.com/201005268527/nellai-jasmine-ranked-1st-in-sslc-exam

கருத்து வேறு! தகவல் வேறு!

 
  மஹ்மூத் அல்ஹஸன், கோட்டார்

நாங்கள், எங்கள் முன்னோர்களைப் பின்பற்றுகிறோம் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன், ஹதீஸையும் ஒப்புக் கொள்கிறோம். நீங்கள் “முன்னோர்களைப் பின்பற்றக் கூடாது” என்று சொல்கிறீர்கள்! என்று அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன் ஹதீஸ்களை மட்டும் ஏற்றுக் கொள்கிறீர்களே! இது முரண் இல்லையா?”
நம்மைப் பார்த்து அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று. அறிவுடையோரைக் கூட தடுமாற வைக்கும் சாமார்த்தியம் நிறைந்த போலித்தனத்தை அடிப்படையாகக் கொண்ட கேள்வி இது! சற்று விரிவாகவே இதை அணுக வேண்டும்.
மனிதனுக்கு ஐந்து புலன்கள் இருக்கின்றன. இப்புலன்களின் வழியாகவே பொருட்களை செய்திகளை, உணர அறிய முடிகின்றது, கண்ணால் ஒரு பொருளைக் காண்கிறோம். அதன் பெயரைச் செவி வழியாக அறிகிறோம். அதன் மனம் என்ன என்பதை உணர, மூக்குத்தான் உதவுகிறது. அதன் சுவையை நாவால் உணர்கின்றோம். அதன் மென்மையையும், வன்மையையும் கையால் தொட்டு உணர்கிறோம். இது புலன்களின் தனித்தனி பணி!
பிறவியிலேயே கண்பார்வையற்ற ஒருவன்; ஒரு பொருளின் நிறத்தையோ, உருவத்தையோ அறிய முடியாது. உதாரணமாக “கொக்கு வெண்மையான பறவை” என்று சொன்னால், அவனால் கொக்கையும், வெண்மையையும் உணர முடியாது. அது போல், காது கேட்கும் சக்தியற்ற ஒருவனிடம் ஒரு பொருளைக் காட்டி, அதை ஓசைப்படுத்தினால், அவன் அப்பொருளிலிருந்து வரும் ஓசை இன்னதென்று உணர மாட்டான். மூக்கு பழுதுபட்டு முகர்ந்தறியும் சக்தியற்ற ஒருவன், பொருளின் மனத்தை முகர முடியாது. அது போல் நாவின் நரம்புகள் பழுதுவிட்டு, நாவு மரத்துப் போன ஒருவன், இனிப்பு, கசப்பு போன்ற சுவைகளை உணர முடியாது.
ஆனால், ஒரு கருத்து சரியா? தவறா? என்பதைப் புலன்களால் மட்டும் முடிவெடுக்க இயலாது, ஐந்து புலன்களுக்கும் அப்பாற்பட்ட சிந்தனா சக்தியினால் மட்டுமே அதை முடிவு செய்ய முடியும். “உலகம் தட்டையானது என்று ஒருவன் சொன்னதாக” நம்பகமான ஒரு நபர் மூலம் செய்தி வரும்பொது, ” அந்த ஒருவன் இப்படிச் சொல்லி இருப்பான்” என்ற செய்தியை - தகவலை நம்புகிறோம் அந்த ஒருவன் சொன்ன கருத்து சரியா என்பதை ஆராய்கிறோம், பின்னர் அந்தக் கருத்து தவறு என்ற முடிவுக்கு வருகிறோம். (இங்கே தகவல் நம்பப்படுகிறது! அது நமக்குச் சொல்கின்ற கருத்து மறுக்கப்படுகிறது)
சிலவற்றை அறிவதற்குரிய ஒரே வழி அந்தந்தப் புலன்கள் மட்டுமே! வேறு வழியே இல்லை! நாவால் ஓசையைக் கேட்கவோ கையால் மணம் முகரவோ, கண்ணால் சுவை அறியவோ இயலாது அல்லது சிந்தனை செய்தும் முடிவெடுக்க முடியாது.
நமது காலத்திற்கு முன் நடந்தவற்றை அறிவதற்குரிய ஒரே வழி செவிப் புலன் தான், உதாரணத்திற்கு மன்னர் “அவ்ரங்கசேப்” என்பவர் ஷாஜஹான் சிறையில் அடைத்தார்” இது ஒரு செய்தி. இதை நம்புவதா? மறுப்பதா? என்ற பிரச்சனை வரும்போது என்ன செய்வது?
ஷாஜஹான் சிறையில் அடைக்கப்பட்டதைத் தற்போது நாம் கண்ணால் காண இயலுமா? அல்லது மூக்கால் முகர்ந்து “ஆமாம்! ஷாஜஹான் சிறையில் இருந்தார்” என்று அறிய முடியுமா? கையால் தடவிப் பார்த்தோ, நாவால் சுவைத்தோ இந்தச் செய்தியை அறிய முடியாது. அல்லது சிந்தனையை எல்லாம் செலுத்தி, உள்ளுணர்வால் இதை ஊகித்தும் உணர முடியாது. செவி வழியாகக் கேட்டுக் கேட்டுத்தான் நாம் இந்த தகவலை அறிந்து வைத்திருக்கிறோம். நாம் நேரடியாகப் பார்க்க இயலாத, முகர இயலாத சுவைக்கவும் முடியாத ஒன்றை, சிந்தனைக்கும் எட்டாத ஒன்றை நாம் அறிவது எப்படி? தகவல்களாக செவி வழியாகத்தான் அறியமுடியும்.
ஆக சிந்தனையைச் செலுத்தி முடிவெடுக்க இயன்ற இடங்களில் அதைப் பயன்படுத்துகிறோம். (சிந்தனை சக்தி இருப்பதால்) கேட்டு நம்ப வேண்டிய கடந்த கால நிகழ்ச்சிகளை அந்த அடிப்படைகளை நம்புகிறோம். அதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை என்பதால் அந்த செவிவழிச் செய்தி பலரால் ஒரே விதமாகச் சொல்லப்படும் போது, “அது உண்மைதான்” என்ற நமது நம்பிக்கை மேலும் அதிகமாகின்றது. ஆனால் கருத்துக்களைப் பொறுத்தவரை உலகமெல்லாம் சேர்ந்து கொண்டு வேறுவிதமாகச் சொன்னாலும் நாம் ஏற்க மாட்டோம்.
“கொக்கு கறுப்பு” எனறு உலகமே சேர்ந்து சொன்னாலும் “அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள்” என்ற தகவலை மட்டுமே நாம் நம்புவோம். அந்தத் தகவல் நமக்குக் கூறுகின்ற கருத்து சரியானதல்ல என்ற முடிவுக்கு நாம் வருவோம். இவ்வாறே குர்ஆன் என்பது 14 நூற்றாண்டுகளுக்கு முன் இறங்கிய ஒன்று. அதை நாம் செவிப்புலன் மூலமாகத் தவிர வேறு எந்த விதத்திலும் அறிய முடியாது. “இதுதான் குர்ஆன்” என்ற தகவலை முழு உலகமும் சேர்ந்து சொல்லும் போது அதில் நம்பிக்கை மேலும் அதிகமாகின்றது.
ஆனால் அவர்களது சொந்த அபிப்பிராயங்கள், கருத்துக்கள், அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்டால், நாம் ஆராய்கிறோம் மறுக்கிறோம். முரண்படாதிருந்தால் ஏற்கிறோம்.
உதாரணமாக “ஒன்று முதல் ஆயிரம் வரை எண்களைக் கூட்டும் முறை இது என்று என் ஆசிரியர் சொன்னார்” என ஒருவர் நம்மிடம் சொல்கிறார். அவரது நேர்மையில் நம்பிக்கை வைத்து, “அவர் ஆசிரியர் அவருக்குக் கணித முறையைச் சொல்லிக் கொடுத்திருப்பார்” என்று நம்புகிறோம். நம்மிடம் இவ்வாறு சொன்ன அதே நபர் “ஏழும் மூன்றும் பதினொன்று” என்று சொன்னால், (அவர் எவ்வளவு நாணயமானவராக இருந்தாலும்) நாம் ஏற்க மாட்டோம்” உங்கள் ஆசிரியரால் சொல்லித் தரப்பட்ட கணித முறைக்கே உங்கள் கணக்கு முரண்படுகிறதே” என்று அவரிடம் நாம் சொல்வோம். இங்கே அவரது நாணயத்தில் நம்பிக்கை வைத்து அவர் சொன்ன தகவலை நம்பிய நாம், அவர் கூறிய கருத்தை ஏற்க மறுக்கிறோம். தகவல்களை நம்புவதற்கு நேர்மை, போதுமானதாக உள்ளது. கருத்துக்களை நம்புவதற்கு நேர்மை உதவுவதில்லை.
நமக்கு சிந்தனா சக்தி இருப்பதால், சிந்தித்து விளங்கக்கூடியவைகளை, சிந்தனையின் மூலமாக மட்டும் நம்புகிறோம். சிந்தனையால் விளங்க முடியாதவைகளை, அவற்றிற்குரிய புலன்களின் துணையால் அறிந்து நம்புகிறோம்.
தகவல்களை முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக நாங்கள் நம்புவதால், கருத்துக்களிலும் அவ்வாறே நம்புவோம். இரண்டுக்கும், செவிப்புலன் மட்டுமே எங்களுக்குப் போதும் என்று சிலர் கூறுகின்றனர். கருத்துக்களில் சிந்தனையைச் செலுத்த மாட்டோம் என்று கூறுவோர், “ஏழும், மூன்றும் ஒன்பது” என்று எவராவது சொன்னால் அதையும் நம்பட்டும்! “பூமி தட்டையானது” என்று கடந்த காலத்தில் சொல்லப்பட்டதையும் நம்பட்டும்! “பூமி மாட்டுக் கொம்பின் மீது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்ற பாட்டிகளின் கதையையும் நம்பட்டும்! “சந்திரனைப் பாம்பு விழுங்குவதால் கிரஹணம் ஏற்படுகின்றது” என்பதையும் நம்பட்டும்! ஏனெனில் அவர்களுக்குத்தான், செவியில் விழுந்து விட்டாலே பொதுமே! உடனே நம்பிவிட வேண்டுமே!
நம்மைப் பொருத்தவரை சிந்தனையைச் செலுத்தி விளங்க முடிகின்றவைகளை சிந்தனையால் விளங்குவோம். சிந்தனையால் முடிவெடுக்க இயலாத கடந்த கால நிகழ்ச்சிகளை செவிப்புலனின் துணை கொண்டு நம்புவோம்; அதைத் தவிர வேறு வழியில்லை என்பதால். எதை, எப்பொது பயன்படுத்த வேண்டுமோ அதை அப்போது பயன்படுத்துகிறோம். எல்லாவற்றுக்கும் என் செவி மட்டுமே போதும் என்போர், இப்படிப்பட்ட அர்த்தமற்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டு, சிந்தனையை மழுங்கச் செய்து கொள்ளட்டும்.
“இதுதான் குர்ஆன்” “இவை தான் ஹதீஸ்கள்” என்ற தகவல்கள் வெறும் செவிப்புலனால் மட்டுமே அறிந்து கொள்ள முடிகின்ற ஒன்று மற்ற புலன்களால் இதை உணர முடியாது. சிந்தனையாலும் ஊகித்து உணர முடியாது.
எனவே முன்னோர்கள் சொன்ன தகவல்களை அடிப்படையை வைத்து, அவர்கள் எதைக் குர்ஆன் என்று நம்மிடம் ஒருமித்து அறிமுகப்படுத்தினார்களோ, அதை நாமும் நம்புகிறோம். வெறும் நம்பிக்கையோடு நின்று விடாமல் நம்மால் இயன்ற அளவுக்கு முயற்சியும் செய்கிறோம்.
முன்னோர்கள் எதைக் குர்ஆன் என்று நம்மிடம் காலம் காலமாகச் சொன்னார்களோ, அதில் முரண்பாடுகள் எதுவுமில்லாமலிருப்பதை நாம் காணுகிறோம். விஞ்ஞான முன்னேற்றம் ஏற்பட்டு பல உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்ட இன்றைய காலத்திலும் கூட அதில் எந்த ஒரு தவறையும் காண முடியவில்லை என்பதையும் நிதர்சனமாகக் காண்கிறோம். முன்னோர்கள் எதைக் குர்ஆன் என்று சொன்னார்களோ, அதில் “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்பதில் உங்களுக்கு சந்தேகமிருந்தால் இது போன்ற ஒன்றை இதிலுள்ள ஒரு அத்தியாயம் போன்றதையாவது இயற்றிக் காட்டுங்கள்!” என்று சவால் விடப்பட்டிருப்பதையும் காண்கிறோம். இன்று வரை எவராலும் அவ்வாறு செய்து காட்டி, குர்ஆனின் சவாலை ஏற்கமுடியவில்லை என்பதையும் பார்க்கின்றோம். இவற்றை எல்லாம் காரணமாக வைத்து இது தான் குர்ஆன்” நிச்சயமாக இது மனிதர்களால் இயற்றப்பட்டது அல்ல” என்ற திடமான முடிவு நமக்கு ஏற்பட்டு விடுகின்றது.
“குர்ஆன்” என்று சொல்லி வேறு எதையாவது நம்மிடம், நமது முன்னோர்கள் தந்திருந்தால் அதன் அமைப்பே, அதன் போலித்தன்மையை நமக்குத் தெளிவாக்கி இருக்கும்.
முன்னோர்கள் “இதுதான் குர்ஆன்” என்று நம்மிடம் எதை அறிமுகம் செய்தார்களோ அதை அவர்களின் கூற்றை நம்பி ஏற்றுக் கொண்டதோடு நின்று விடாமல், சிந்தித்துப் பார்க்க முடிகின்ற விதத்தில் சிந்தித்துப் பார்த்தும் உறுதி செய்து கொள்கிறோம்.
அது போல், முன்னோர்கள் “ஹதீஸ்கள்” என்று நம்மிடம் எதை அறிமுகம் செய்தார்களோ, அவற்றையும் செவி வழியாகவே நாம் கேள்வியுற்றோம். ஆனால் “ஹதீஸ்கள்” என்று சொல்லப்படும் அத்தனையையும் கண்ணை மூடிக்கொண்டு நாம் ஏற்பதில்லை ஹதீஸ்கள் என்று அறிவிக்கக் கூடியவர்களில் ஒருவர், அல்லது பலர், நம்பகமானவர்களில்லை, பொய் சொல்லக் கூடியவர், நினைவாற்றல் இல்லாதவர்” என்றெல்லாம் முன்னோர்களில் சிலர் அவர்களைச் சந்தேகித்திருக்கும் போது, நாமும் சந்தேகிக்கிறோம். அதே நேரத்தில் நம்பகமான அறிவிப்பாளர் என்பதில் எவரும் ஐயம் தெரிவிக்காமல், ஹதீஸ்கள் என்று சொல்லப்படுபவைகளை நாமும் உறுதியாக நம்புகிறோம்.
நாம் எவரையும் பின்பற்றக் கூடாது என்று சொல்வது கருத்துக்கள் பற்றியதே! தகவல்கள் பற்றியது அல்ல.
“காந்தி சுடப்பட்டார்” என்ற செய்தியை நம்முடைய பெற்றோர் வாயிலாகக் கேட்டு நம்புவது தக்லீத் ஆகாது. தகவல்களை அப்படித்தான் நம்ப வேண்டும். அதே பெற்றோர், சந்திரனைப் பாம்பு விழுங்குகிறது என்று ஒரு கருத்தைச் சொல்லும் போது, நாம் கண்ணை மூடிக்கொண்டு நம்புவதே தக்லீத் எனப்படும். அதுதான் கூடாது. அல்லாஹ் இந்த வேறுபாடுகளை உணர்ந்து உண்மையை விளங்கிக் கொள்ள அருள்செய்வானாக!
http://www.readislam.net./

LinkWithin

Related Posts with Thumbnails