Friday, May 21, 2010

ரயில் குண்டு வெடிப்பு: குணங்குடி ஹனீபா விடுவிப்பு!


ரயில் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேரை விடுவித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

கடந்த 1997ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி சேரன், வைகை மற்றும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் குண்டுகள் வெடித்தன இதில் 18 பேர் பலியானார்கள். 50 பேர் காயம் அடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்புகள் தொடர்பான வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று வழங்கியது. இந்த வழக்கில் இருந்து குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேரையும் நீதிமன்றம் விடுத்து தீர்ப்பளித்துள்ளது.
Source : http://www.inneram.com/201005218438/kunangudi-haneefa-released-in-train-blasts
 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails