Tuesday, May 31, 2011

பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் இரண்டாவது இடம் பிடித்த சதாம் உசேன்

 நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த சதாம் உசேன் என்ற மாணவர் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் மாவட்ட அளவில் முதலும் பிடிதுள்ளார்.

 
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின்  நெல்லை மாவட்ட செயலாளர் A. ஹைதர் அலி பரிசு வழங்குகிறார்

நெல்லை மாவட்ட பாப்புலர் ப்ரண்ட் சார்பாக  இவரை பாராட்டிகேடயமும் பரிசும் வழங்கியது .இந்த நிகழ்ச்சியில் பாப்புலர் ப்ரண்ட் மாவட்ட செயலாளர் ஹைதர் அலி, நகர தலைவர் மூஸல் காலிம் .நகர செயல்குழு உறுப்பினர் பால் மைதீன் ஆகியோர் கலந்து கொண்டு அந்த மாணவனை வாழ்த்தினர்.
  
  இந்த மாணவனை மனிதநேய மக்கள் கட்சியின் மேலப்பாளையம் நகரத் தலைவர் ஏ.காஜா, பகுதி செயலாளர் இ.எம்.அப்துல் காதர் ஆகியோர் நேரில் சென்று பாராட்டி பரிசுகள் வழங்கினர்.பொருளாளர் எஸ்.ரப்பானி, துணைத்தலைவர் கே.கே.அப்துல் அஜீஸ், துணைச் செயலாளர் கே.பாதுஷா, அல்அய்ன் மைதீன், 32வது வார்டு செயலாளர் அசன் மைதீன், ராஹத் செய்யது அலி, ஹக்கீம் ஆகியோர் உடனிருந்தனர்.

மாணவன் சதாம் உசேனுக்கு பாராட்டுகள் பல குவிந்த வண்ணம் உள்ளன.

Monday, May 30, 2011

ஒஸாமாவைக் காட்டிக் கொடுத்தது தலிபான் தலைவர் - மற்றொரு மர்ம திருப்பம்

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட மர்ம சம்பவத்தில் மற்றொரு திருப்பமாக அவர் தங்கியிருந்த இடத்தைக் காட்டிக் கொடுத்தது தலிபான் நிறுவனர்களில் ஒருவரான முல்லா அப்துல் பராதர் என்று செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக அபு அஹ்மத் அல் குவைதி என்பவரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டதன் மூலம் அமெரிக்கா அவருடைய இருப்பிடத்தைக் கண்டறிந்ததாக தெரிவித்திருந்தது.ஒஸாமா பின் லேடன் மே 2 ஆம் திகதி அபோதாபாத் என்ற இடத்தில் அமெரிக்க சிறப்பு ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Friday, May 27, 2011

சமச்சீர் கல்வி திட்டம் - கைவிடும் நோக்கம் அரசுக்கு இல்லை: அமைச்சர் உறுதி!

சமச்சீர் கல்வி திட்டத்தை  கைவிடும் நோக்கம் அரசுக்கு இல்லை என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உறுதியளித்துள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை, இது குறித்து அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின் விபரம் பின்வருமாறு:
சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு எடுத்துள்ள முடிவு பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. எனவே, இது தொடர்பாக சட்டப் பேரவை மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் அ. சௌந்திரராஜன், மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் ஆகியோர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தை நேரில் சந்தித்து பேசினார்கள்.

மலேசியாவில் உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடு.

                                                          ஜே . எம் . சாலி
சென்ற வாரம் மலேசியாவில் நடந்து
 முடிந்த உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில்  சிறப்பு மிக்க  அம்சம்  நமது மூத்த இலக்கிய அறிஞர்கள் நவீன இஸ்லாமிய எழுத்தாளர்கள்  ஜே . எம் . சாலி , ஹிமானா சையத் பங்குபெற்றது எனலாம் . எழுதாளர்கள் அவர்கள் வாழும் காலத்திலேயே ,அதிலு...ம் ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதும் பாராட்டப் படுவதும் மகிழ்வளிப்பது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட .எதிர்வரும்  இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளிலும் சிங்கை இரட்டையர்கள் 'பங்கேற்க இறைவனிடம் துவா செய்கிறேன் . 
 
by: முஹம்மது ஹுசைன்

Thursday, May 26, 2011

கண்ணதாசன் கண்ட இஸ்லாம்! + கண்ணதாசன் குரானை ஏன் மொழிபெயர்க்ககூடாது?(வீடியோ)

கண்ணதாசன் கண்ட இஸ்லாம்! (ஆய்வு)

“இஸ்லாமியத் திருமறையின் முதல் இரண்டு பாகங்களைப் பூர்த்தி செய்ததில் என் பங்கும் முழுக்க இருந்தாலும், அதன் கவிதை மற்றும் ஒவ்வொரு வாக்கியத்தின் தமிழ் நடையும் கவிஞரால் சரி செய்யப்பட்டவையாகும்.

“அல்ஃபாத்திஹா” எனும் “அல்ஹம்து சூராவை” அழகிய தமிழில் “திறப்பு” கவிதையாகக் கவிஞர் தந்துள்ள சிறப்பு ஒன்றுக்கே அவர் இறைவனின் கருணைக்கும் மகிழ்ச்சிக்கும் என்றென்றும் பாத்திரமாகி இருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.”

அப்பாஸ் இப்ராஹீம்
“இனிய தமிழில் இஸ்லாமியத் திருமறை”
மூன்றாம், நான்காம் பாகங்கள் பக். VI

கண்ணதாசனின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு

திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதுவதற்காகக் கவிஞர் கண்ணதாசன் மேற்கொண்ட முயற்சி, முஸ்லிம் அன்பர்கள் சிலரின் எதிர்ப்பால் தடைப்பட்டுப் போயிற்று. குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் குர்ஆனுக்கு உரையெழுதக் கூடாது என்று உலமா பெருமக்கள் சிலர் எதிர்த்தனர். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்த கவிஞர், எவர் மனமும் புண்படக் கூடாதென்ற நல்ல எண்ணத்தில் தம் முயற்சியை நிறுத்திக் கொண்டார்.

ஆயினும் திருமறையின் தோற்றுவாய் எனப்படும் முதல் அத்தியாயத்துக்கு அவர் எழுதியுள்ள மொழி பெயர்ப்பு இறையருளால் நமக்குக் கிடைத்துள்ளது. அழகிய தமிழில், எளிய நடையில் கவிதையாகக் கவிஞர் கண்ணதாசன் தந்துள்ள மொழியாக்கம், அவர் தம் திருக்குர்ஆன் புலமைக்கும், மொழிபெயர்ப்புத் திறனுக்கும் சான்றாகத் திகழ்கிறது.

திருக்குர்ஆனின் முதல் அத்தியாயம் “அல்ஃபாத்திஹா” அல்லது “தோற்றுவாய்” என்று அழைக்கப்படும். இறைவனின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கும் இந்த அத்தியாயம் அரபி மொழியில் ஏழு வசனங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

“அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்;
அர்ரஹ்மான் நிர்ரஹிம்; மாலிகி யவ்மித்தீன்;
இய்யாக்க நஹ்புது வ இய்யாக்க நஸ்தயீன்;
இஹ்திநஸ் ஸிராத்தல் முஸ்தகீம்; ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம் ஹைரில் மஹ்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்”

ஒவ்வொரு தொழுகையின் போதும் நிற்கின்ற நிலையில் கட்டாயம் ஓதப்படுகின்ற திரு வசனங்களாக இவை உள்ளன. இருபத்தைந்து அரபி சொற் களில் அமைந்துள்ள இந்த ஏழு வசனங்களையும் மனனம் செய்யாத முஸ்லிம்களே உலகில் இல்லை எனலாம்.

கண்ணதாசனின் மொழிபெயர்ப்புத் திறனை உணர் வதற்கு முன்னர், இதன் தமிழாக்கத்தை அறிந்து கொள்வோம்.

அரபி மூலம் – தமிழாக்கம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்
அகில உலகைப் படைத்து நிர்வகிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்

அர் ரஹ்மானிர் ரஹீம்
(அவன்) அளவிலா அருளாளன்; நிகரில்லா அன்புடையோன்.

மாலிகி யவ்மித்தீன்
அவனே மறுமை நாளின் அதிபதி.

இய்யாக்க நஹ்புது
(ஏக இறைவனே!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;

வ இய்யாக்க நஸ்தயீன்
உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்.

இஹ்தினஸ் ஸிராத்தல்
எங்களை நேரான வழியில் முஸ்தகீம் செலுத்துவாயாக!

ஸிராதல்லதீன அன்அம்த அலைஹிம்
எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களுடைய வழியில் நடத்துவாயாக!

ஹைரில் மஹ்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்
அவ்வழி உன் கோபத்துக்கு உள்ளானவர்களுடையதும் அல்ல;
வழி தவறியவர்களுடையதும் அல்ல.

திருமறையின் தோற்றுவாயாக விளங்கும் “அல் ஃபாத்திஹா” எனப்படும் இதன் அரபி மூலத்தையும் தமிழாக்கத்தையும் கவியரசர் கண்ணதாசன் ஆழ்ந்துணர்ந்து “திறப்பு” என்ற தலைப்பில் மொழியாக்கமாகத் தந்துள்ளார்.

திறப்பு

எல்லையிலா அருளாளன்
இணையில்லா அன்புடையோன்
அல்லாஹ்வைத் துணைகொண்டு
ஆரம்பம் செய்கின்றேன்.

* * *

உலகமெலாம் காக்கின்ற
உயர்தலைவன் அல்லாவே
தோன்றுபுகழ் அனைத்திற்கும்
சொந்தமென நிற்பவனாம்;

அவன் அருளாளன்;
அன்புடையோன்;
நீதித் திருநாளின்
நிலையான பெருந்தலைவன்;

உன்னையே நாங்கள்
உறுதியாய் வணங்குகிறோம்;
உன்னுடைய உதவியையே
ஓயாமல் கோருகிறோம்;

நேரான பாதையிலே
நீ எம்மை நடத்திடுவாய்;
அருளைக் கொடையாக்கி
யார் மீது சொரிந்தனையோ
அவர்களது பாதையிலே
அடியவரை நடத்தி விடு!

எவர்மீது உன் கோபம்
எப்போதும் இறங்கிடுமோ
எவர்கள் வழிதவறி
இடம் மாறிப் போனாரோ
அவர்களது வழி விட்டு
அடியவரைக் காத்து விடு!”

- கண்ணதாசன்

எத்தனையோ முஸ்லிம் தமிழ்க் கவிஞர்கள் இப்பகுதியை மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள். ஆயினும் கவியரசர் கண்ணதாசனுடைய மொழியாக்கத்திலுள்ள இனிமையும், எளிமையும், தெளிவும், தேர்ந்த சொல்லாட்சித் திறனும் பிற கவிஞர்களிடம் இல்லை என்பது முற்றிலும் உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை. எல்லாவற்றுக்கும் மேலாகத் திருக்குர்ஆன் வசனங்களின் கருத்துகளுக்கு எந்த மாற்றமும் இல்லாமல், கற்பனைக் கலப்பில்லாமல் உயிரோட்டமாக மொழியாக்கம் செய்திருப்பது கவியரசர் கண்ணதாசனின் மேல் நமக்குப் பெருமதிப்பை ஏற்படுத்துகிறது. திருக்குர்ஆன் முழுமைக்கும் கவிஞரின் விளக்கவுரை கிடைக்காமல் போயிற்றே என்ற ஏக்கமும் உடன் எழுகின்றது.

டெல்லி சென்றும் சோனியாவை சநந்திக்காதது ஏன்? - கருணாநிதி விளக்கம்!

டெல்லி சென்று மகள் கனிமொழியை சந்திது வந்த கருணாநிதி, ”சோனியாவைச் சந்திக்கும் வாய்ப்பும், நேரமும் இருந்தது. என் மகள் கனிமொழி சிறையில் இருந்ததால், இந்த நேரத்தில் சோனியாவைச் சந்திப்பது முறையாக இருக்காது என்பதற்காகவே நான் சந்திப்பதைத் தவிர்த்துக் கொண்டேன்.” என்று கூறியுள்ளார்.

டெல்லியில் இருந்து திரும்பிய கருணாநிதி, நேற்று புதன்கிழமை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களிடம்  கூறிய விபரம் பின்வருமாறு:

Wednesday, May 25, 2011

இங்கிலாந்தில் முதல் முஸ்லிம் பெண் மேயர்


  லேபர் கவுன்சிலர்  நவீட இக்ரம் அவர்கள்  இங்கிலாந்த் பிராட்போர்டில்   முதல முஸ்லிம் மேயர்    பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க இதனை கிளிக் செய்யுங்கள்  
இதனையும் கிளிக் செய்யுங்கள்

Sunday, May 22, 2011

'அப்பா சொன்னாரென' என்று ஒப்புக்கொண்டதைத்தவிர கனிமொழி வேறு குற்றம் செய்யவில்லை - கருணாநிதி!

மாநிலங்களவை உறுப்பினரும் தனது மகளுமான கனிமொழி 2G வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் நிலையில் திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
 

தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்து ஆட்சியை இழந்திருக்கும் காலகட்டம் இது.இதற்குக் காரணம்கூட்டணி
கட்சிகளுக்கு வழங்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையா?அல்லது அவர்கள் வலியுறுத்தி வாங்கிக் கொண்ட தொகுதிகளின் கணக்கா?தேர்தல் கமிஷன் எனும் பிரம்ம ராட்சத பூதமா என்ற கேள்விகளுக்குள் எல்லாம் போக விரும்பவில்லை.

கருணாநிதியின் குடும்பம் தமிழகத்திலும் இந்தியாவிலும் தமது அதிகாரச் செல்வாக்கைப் பெருக்கி ஏராளமாகப் பணம் சம்பாதித்துள்ளது என்று தேர்தலில் பிரசாரம் செய்தவர்கள் இப்போதும் அதே பிரசாரத்தை தொடர்கிறார்கள். அவற்றில் உண்மை ஏதும் இல்லை என்பதைத் தொண்டர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

"சன்' தொலைக்காட்சியில் பங்குதாரராக இருந்து தயாளு அம்மாள் பிரிந்தபோது கிடைத்த ரூ.100 கோடியில் வரி போக மீதி ரூ.77.5 கோடி கிடைத்தது.அதைப் பகிர்ந்து கொண்டபோது,கனிமொழிக்கு ரூ.2 கோடி கிடைத்தது. அதை பங்குத் தொகையாகச் செலுத்தி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாரராக இருக்கச் சொல்லி நான்தான் வலியுறுத்தினேன்.

கனிமொழி அதை விரும்பாவிட்டாலும்,அப்பா சொல்கிறாரே என ஒப்புக்கொண்டதைத் தவிர வேறு குற்றம் அவர் செய்யவில்லை.எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாப,நட்டத்தில் பங்குதாரராவது பொதுவான விஷயம்.ஆனால் அந்த நிர்வாகத்தின் அன்றாட நடவடிக்கைக்கு அனைத்துப் பங்குதாரர்களும் பொறுப்பு ஆவதில்லை.

சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கனிமொழிக்காக வாதாடிய அவரது வழக்கறிஞர் ராம்ஜேட்மலானி, இதைத் தெளிவாக சுட்டிக்காட்டியும், கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமாரையும், கனிமொழியையும் ஜாமீனில் விட மறுத்து சிறைக்கு அனுப்பி,என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர் சிலர் கூடி, வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.

அப்போதும் அத்துடன் நிம்மதி அடையாமல், நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், கட்சிக் கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி புல் முளைத்த இடமாகப் போக வேண்டும் என தவம் கிடப்பது எனக்குத் தெரியாமல் இல்லை.

இந்த விவரங்களைத் தொண்டர்கள் படித்து புரிந்துகொண்டு செயல்படுத்தினால், அறப்போர்க் கணைகளை பல ஆயிரம் இளைஞர்கள் வடிவில் நடமாட விடுவார்கள் என்பது என் எண்ணம்.அந்த அறப்போர் இறுதிப் போராகி நாம் வெல்வது நிச்சயம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
Source : http://www.inneram.com/

Thursday, May 19, 2011

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை.

"ஒரு பெருந்துயரத்தின் சாரலோடு பொழுதுகள் விடிகின்றன...! மாறாவடுக்களின் துயரஅலறல் தேசங்களெங்கும் முட்டிமோதி மனிதம் வாழும் இதயங்களெல்லாம் விழிநீரோடு எதிரொலித்திடினும் எவராலும் நீக்க முடியா ஒரு பெருந்துயரத்தின் சாரலோடு பொழுதுகள் கழிகின்றன...!"
- எம்.ரிஷான் ஷெரீப்


இலங்கையிலிருந்து வெளிவரும் 'விடிவெள்ளி' வார இதழில் இன்றைய தினம் (19.05.2011) வெளிவந்திருக்கும்  M.ரிஷான் ஷரீப் கவிதைத் தொகுப்பு 'வீழ்தலின் நிழல்' குறித்த விமர்சனம். நன்றி - விடிவெள்ளி இதழ்

  'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுப்பு வெளியீடு 

காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும்  'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுப்பின் வெளியீட்டுவிழா எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை 03, 2010) மாலை ஆறு மணிக்கு, இந்தியா, சென்னை, எழும்பூர், இக்சா மையத்தில் நிகழ்ந்தது .
தொகுப்பை கவிஞர் சுகிர்தராணி வெளியிட கவிஞர் உமா ஷக்தி பெற்றுக்  கொண்டார்தொகுப்புடன் சேர்த்து மொத்தம் எட்டு ஈழத்து நூல்கள் அந் நாளில் வெளியிடப்படவிருக்கின்றன.

இது சம்பந்தமாக காலச்சுவடு பதிப்பக உரிமையாளர் திரு.கண்ணன் சுந்தரம், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய அறிமுகம்
கீழே...
.

  பூக்கள் விசித்தழும் மாலை

வானை எடுத்து வாவென
காற்று வெளியெங்கும் 
பட்டத்தை அனுப்புகிறேன் பகலில்

சூரியனோ பௌர்ணமியோ எதுவோ
குளிரிரவில் நட்சத்திரங்களாலெறிந்து
என் மீதுள்ள கோபத்தைக் காட்டுகிறது

செடிகளில் விழும் எரிநட்சத்திரங்கள்
மொட்டுக்களாகிப் பூத்திடும்
விடிகாலையில்

மாலைகளாக்கப்படுபவற்றுக்கு
தெரியாது
எந்தச் சடங்குகளுக்காகக் கோர்க்கப்படுகிறோமென்று

எனினும் மாலையிலுதிரும்
பூக்கள் விசித்தழுகின்றன
மேடை நிழல்களிலிருந்தும்
பூத்த மரங்களின் கீழிருந்தும்

காலையில் பனி சொட்டிக் கிடக்கிறது

- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

M.ரிஷான் ஷரீப் வலைப்பூக்கள்

Website
Channel One
News presenter
News Editor, Producer, Program Presenter and VJ
சிறந்த எழுத்தாளர். அருமையான கவிதை எழுதுவதில் வல்லவர் .பல கவிதைகளுக்கு பல பரிசுகள் வாங்கியுள்ளார்.   இவர் எழுதிய அறிய சிறந்த கவிதைப் புத்தகங்கள் வெளிவந்து பாராட்டும் பெற்றுள்ளார்

Wednesday, May 18, 2011

வக்ப் வாரியத் தலைவர் ராஜிநாமா - ஹைதர் அலிக்கு மீண்டும் வாய்ப்பு?

முந்தைய திமுக அரசால் நியமிக்கப்பட்ட பல்வேறு துறைகளின் தலைவர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். அவ்வகையில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் பதவியிலிருந்து கவிக்கோ அப்துல் ரகுமான் ராஜிநாமா செய்துள்ளார்.
கடந்த 2006 இல் திமுக ஆட்சியின்போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக (தமுமுக) பொதுச்செயலாளர் செ.ஹைதர் அலி தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பின்னர் 2009 மக்களவைத் தேர்தலில் தமுமுக திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததைத் தொடர்ந்து 9-6-2009 அன்று வாரியத்தின் தலைவர் பதவியை ஹைதர் அலி ராஜிநாமா செய்தார். அதனைத் தொடர்ந்து புதிய தலைவராக 10-6-2009 அன்று கவிக்கோ. அப்துல் ரகுமான் நியமனம் செய்யப்பட்டார்.

2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்த கட்சிகளில் தமுமுகவும் இடம்பெற்றிருந்தாலும் அக்கட்சிக்கு மூன்று இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால், ஹைதர் அலி போட்டியிடவில்லை. எனினும், அதிமுக கூட்டணி வேட்பாளார்களுக்காக தீவிர பிரச்சாரம் செய்தார். இதற்குக் கைமாறாக, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தலைவர் பொறுப்பை மீண்டும், தமுமுக கட்சியின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சிக்கு வழங்கும் பட்சத்தில், ஹைதர் அலி மீண்டும் வக்ஃப் வாரியத்தலைவராக வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
Source : http://www.inneram.com/2011051816610/hyder-ali-becomes-wakf-chairman

Tuesday, May 17, 2011

'க.' & 'ஜெ.'... 'பதிலடி'யால் வாக்காள பொதுமக்கள் அதிர்ச்சி..!

வாக்காளர்களால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு… 'க.' & 'ஜெ.' 'பதிலடி'யால் வாக்காள பொதுமக்கள் அதிர்ச்சி..!  


மிகவும் கஷ்டப்பட்டு, படாதபாடுபட்டு, அல்லும்பகலும் அயராது சிந்தித்து, பல போராட்டங்கள் கண்டு, இழப்புகள் பெற்று, பல வருடங்கள் கடந்து, ஒருவழியாக மேற்கு வங்கத்தில் 34 வருட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு... முற்றுப்புள்ளி வைத்தே விட்டார், மம்தா பானர்ஜி..! ஜோதிபாசு காலங்களில், மம்தா 30... 40... தொகுதிகளை பெறுவது கூட அன்று இமாலய சாதனையாக போற்றப்பட்டது. ஆனால், இன்று 225/294 வென்று அமோக வெற்றி பெற்று இருக்கிறார். இதுதான் போராடி பெற்ற வெற்றி..!



உயரே 'ஜெ.' பால்கனி போஸ்... கீழே 'ம.' மக்களுடன் ஒருத்தராய்...

.
ஆனால், அதே நேரம் தமிழகத்தில் 'ஜெ.' பெற்ற வெற்றி எப்படிப்பட்டது..? மம்தா போல மக்களுடன் இரண்டற கலந்து, ஆளும் கட்சியின் ஊழலை எதிர்த்து, தினமும் கஷ்டப்பட்டு போராடி… அதன் மூலம் பெற்ற வெற்றியா இது..?

மேலும் படிக்க'க.' & 'ஜெ.'... 'பதிலடி'யால் வாக்காள பொதுமக்கள் அத...
Source : http://pinnoottavaathi.blogspot.com/2011/05/blog-post_13.html

Sunday, May 15, 2011

புதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியீடு!

34 பேர் கொண்ட புதிய அமைச்சரவைப் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை திங்கள் கிழமை பதவியேற்க உள்ளது. புதிய அமைச்சர்களின் பெயர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளும் வருமாறு:

ஜெ. ஜெயலலிதா - முதல்வர்

ஓ. பன்னீர்செல்வம் - நிதி அமைச்சர்

Saturday, May 14, 2011

கம்ப்யூட்டரில் பிஸியா? தொழுகையைத் தவற விடுகிறீர்களா?

 கம்ப்யூட்டரில் பிஸியா? தொழுகையைத் தவற விடுகிறீர்களா? கவலையை விடுங்கள்!

கீழ்க்கண்ட Firefox Add-ons  உங்களுடைய உதவிக்கு வருகிறது.

இதனை Download பதிவிறக்கம் செய்து கொண்டு பயன் பெறுங்கள். குறிப்பிட்ட நேரத்தில் பாங்கொலி ஒலித்திட,  தொழுகைக்கு புறப்பட உங்களைத் தட்டி எழுப்பும்.    

Thursday, May 12, 2011

ஒரு பெண் கணவன் பெயருடன் சேர்த்து தன் பெயரை எழுதலாமா?

ஐயம்: ஒரு பெண் தன் பெயரோடு தன் கணவன் பெயரை சேர்த்து எழுதலாமா? தெளிவான ஆதாரங்களைக்கொண்டு விளக்கவும். (மின்னஞ்சல் மூலம் ஒரு சகோதரி அனுப்பிருந்த கேள்வி)

தெளிவு:

அருள்மறை குர்ஆன் கூறுகிறது:

"அவனே தண்ணீரால் மனிதனைப் படைத்தான். அவனுக்கு இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளையும், திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான். உமது இறைவன் ஆற்றலுடையவனாக இருக்கிறான்." (அல்குர்ஆன், 025:054)

ஒன்று: இரத்த சம்பந்தப்பட்ட உறவு.

இரண்டு: திருமண சம்பந்தமான உறவு.

ஆக மனிதர்களிடையே இரண்டு வகையான உறவுகளை ஏற்படுத்தியிருப்பதாக 025:054வது வசனத்தில் இறைவன் கூறுகிறான். திருமண உறவால் ஏற்படும் சந்ததிகளுக்கு தாய், தந்தை வழி உறவுகள் இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளாய் மலருகின்றன. தாய், தந்தை, மகன், மகள், சகோதரன், சகோதரி சிறிய, பெரிய தந்தைகள், மாமா மாமிகள், சின்னம்மா, பெரியம்மாக்கள், தாய், தந்தை வழிப் பாட்டிகள், தாத்தாக்கள் எனும் உறவுகள் ஏற்படுவது போல திருமண உறவின் மூலமும் மாமனார், மாமியார் மைத்துனர்கள். மைத்துனிகள் எனும் உறவுகள் ஏற்படுகின்றன.

Wednesday, May 11, 2011

பால் வியபாரியின் மகள் இர்பானா மாநில சாதனை

தக்கலையை அடுத்துள்ள வேர்கிளம்பியை சேர்ந்தவர் மாணவி இர்பானா. இவர் மணலிக்கரை மரிய கொரட்டி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். +2 தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து மாணவி இர்பானா உயிரியில் பாடத்தில் 200 மார்க் எடுத்து மாநில அளவில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இவர் பெற்ற மொத்த மதிப்பெண் 1150 ஆகும்.

இவருடைய தந்தை முகம்மது நாசர். பால் வியாபாரம் செய்து வருகிறார். தாய் சுனைதாபீவி. மாநில அளவில் சாதனை படைத்த மாணவி இர்பானா தனது சாதனை குறித்து கூறியதாவது:-

Tuesday, May 10, 2011

இன்னமுமா புரியல ? ! - அனுபவம் பேசுகிறது !

அட.. ! நீங்க நினைச்சீங்கள அதேதாங்க..

அந்த காட்சி வழித்தொடர்பியல (Visual Communication) பத்திதாங்க அசலா அசைபோட போறேன்...

என்ன உங்க கூட பேசி ரொம்ப நாள் ஆச்சே, ஊர்ல எல்லாரும் எப்படி இருக்காங்க ?

எல்லாம் நல்லாத்தான் இருக்காங்க தம்பி. அது சரி... சவூதி அரேபியாவிலிருந்து சவுத் இந்தியாக்கு திடீர்னு காத்தடிக்குதே என்ன சங்கதி!?

ஒன்னும் இல்ல  உங்களைலாம் பார்க்க விண்ணைத்தாண்டி வரமுடியாட்டியும் நம் மண்ணின் நிகழ்வுகளை கண் முன் கொண்டுவரும் நமதூர் வலைப்பூக்கள் மூலம் கல்வி மாநாடு நிகழ்ச்சிய பார்த்தேன், பண்ணன்டாம் கிளாஸ் புள்ளயோல்வலெல்லாம் பொது தேர்வு எழுதி இருக்காக. அடுத்து நம்ம புள்ளைய என்ன படிக்க வைக்கிறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சாடகன்னு தெரியுது.

அதான் இந்த பாழாப்போன 2G 3G சோனியாஜி'ன்னு மக்கள் காஞ்சி போயிருக்கிறத பத்தி பேசாம, நாம படிச்ச காட்சி வழித்தொடர்பியல் பத்தி நம்ம மக்களுக்கு சொல்லி நாடு உருப்படுதோ இல்லையோ நாம உருப்பட வழியபாபோம்கிற நினைப்புல எழுதிகிட்டு இருக்கேன். நீங்க அப்பறமா நம்ம ஊர் வலைப்பூல வந்து பாருங்க .

இப்போ எழுதபோறேன்…..

ஆம்! வாழ்கையில் நாம் ஒவ்வொருவரும் பல காட்சிகளை கண்டிருப்போம்.பல காட்சிகளில் கோர்வைதான் நம் வாழ்கை. நான் கண்ட/கற்ற காட்சி வழித்தொடர்பியல் (Visual Communication) பட்டப்படிப்பை பற்றி ஒரு அலசல் செய்ய ஆசைபடுகிறேன்.

விசுவல் கம்யுனிகேசன் என்று சொன்னவுடன் சிலருக்கு ஞாபகம் வருவது சினிமாதுரைக்கான படிப்பு என்பதுதான். உண்மையில் இதில் சினிமா என்பது பத்தில் இரண்டு பகுதி எனலாம். மேலும் அறிய கீழே படிப்போமே!!

Monday, May 9, 2011

யார் இந்த உஸாமா?


1957-ஆம் ஆண்டு சவூதி அரேபியாவின் ரியாதில் பிறந்தார் உஸாமா பின் முஹம்மது பின் அவாத் பின் லேடன். உஸாமாவை இஸ்லாமிய தீவிரவாதத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக மேற்கத்திய உலகம் கருதுகிறது. உஸாமா சவூதி அரேபியாவின் மன்னர் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய கோடீஸ்வர வர்த்தகர் முஹம்மது பின் அவாத் பின் லேடனின் மகனாவார்.
இஸ்லாமிய நம்பிக்கைகளில் உறுதி கொண்டதாக அவருடைய இளமைப்பருவம் அமைந்திருந்தது. 1968 ஆம் ஆண்டு முதல் 1976-ஆம் ஆண்டு வரை ரியாதில் அல் தாகர் மோடல் ஸ்கூலில் படித்த உஸாமா பின்னர் கிங் அப்துல் அஸீஸ் பல்கலைக் கழகத்திலிருந்து பொருளாதாரத்திலும், வர்த்தக நிர்வாகத்திலும் பட்டம் பெற்றார். 1979-ஆம் ஆண்டு உஸாமா சிவில் எஞ்சினீயரிங்கில் பட்டம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இஸ்லாமிய கவிஜர்களை கெளவரவிக்கும் சிறப்பு இசை நிகழ்ச்சி


from Thajudeen Faizee

Sunday, May 8, 2011

இஸ்லாம் ஒரு போதும் தீவிரவாதத்தையோ பயங்கரவாதத்தையோ ஆதரிக்கவில்லை.

பிரஸ் மீட் ( பேட்டி) -  சென்னை மக்கா மஸ்ஜித்   தலைமை இமாம் மௌலானா ஷம்சுத்தீன் காஸிமீ அவர்கள்.



Saturday, May 7, 2011

எல்லாம் வல்ல அல்லாஹ்விடம்(இறைவனிடம்) கேட்க சில தூஆக்கள் (வேண்டுதல்கள்.)

  இன்னும் அவர்களில் சிலர், "ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.- அல்-குர்ஆன்-2:201
  விருப்பு வெறுப்பு இல்லா இறைவனிடம் நாம் வேண்டி கேட்டல் சிறப்பு. எல்லாம் வல்ல இறைவன் மிகவும் இறக்க முடையான்.அவனிடமே தொடர்ந்து உள்ளச்சத்தோடு கேட்டு பயனடைய சிறப்பான சில வேண்டுதல்கள்
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனை மனதால் எப்போதும் எண்ணி இருப்பின் உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.
"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல."-திருக்குறள்

Friday, May 6, 2011

மயிலாடுதுறையில் புதிய பள்ளிக் கூடங்கள்

IDEAL NURSERY AND PRIMARY SCHOOL

A school which nurtures creative thinkers, lifelong learners and responsible citizens...
IDEAL NURSERY AND PRIMARY SCHOOL was established in 2010 with the primary objectives of imparting modern education. The school believes in learning by observing and doing rather than rote learning and rigid textual teachings. We encourage our students to reflect upon every action and evaluate its worthiness towards building a "healthy society" in a righteous way.
Thanks to Zainbhika: Song : Flowers are red..
---------------------------------------------------------
EVEREST KENBRIDGE SCHOOL, MAYILADUTHURAI
Click here to read more about kenbridgeschoolsMayiladuthurai/ 
To know more about the trust, please click here Trust Members - Everest KenBridge School, Mayiladuthurai



Azad Girls Hr.Sec. School

Azad Girls Hr.Sec. School | Board School

 Keezhanjil Nadu, Keezhanjil Nadu, Mayiladuthurai (Tamilnadu)

ஒசாமாவுக்கு சென்னை, கொல்கத்தாவில் சிறப்புத் தொழுகை!

அமெரிக்காவில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஒசாமா பின் லேடனுக்கு சென்னை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டன.

தொலைதூரங்களில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் இறந்தால் அவர்களுக்காக காயிப் ஜனாசா எனப்படும் மறைவான இறப்புத் தொழுகை நடத்துவது வழக்கம். அந்த அடிப்படையில் ஒசாமா பின் லேடனுக்காக சென்னையில் உள்ள மக்கா மசூதி மற்றும் கொல்கத்தாவில் உள்ள திப்பு சுல்தான் மசூதி ஆகிய இடங்களில் "இறப்புத் தொழுகை"கள் நடத்தப்பட்டன.

Thursday, May 5, 2011

உயர் கல்விக்கு உதவி!

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் தலைமையின்கீழ் இயங்கும் 'இஸ்லாமிக் ரிஸர்ச் ஃபவுண்டேஷன் - Islamic Research Foundation (IRF)", உயர்கல்வி பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்காக ஒரு கோடி ரூபாயை 2011 - 2012 ஆண்டுக்கான உதவித் தொகையாக அறிவித்திருக்கிறது.

நூறு விழுக்காடு கல்வி உதவித் தொகையான இதைப் பெறத் தக்க மாணவர்களின் தகுதிகள்:
  • மார்க்கப் பற்றாளராகவும் கடமைகளில் பேணுதல் உடையவராகவும் இருக்க வேண்டும்.
  • உயர்கல்வி பயில்வதற்குப் பணம் செலுத்திப் படிக்க முடியாத ஏழ்மை நிலையில் இருக்க வேண்டும்.
  • கல்வியில் மிக்க ஆர்வம் உடையவராகவும் நல்ல மதிப்பெண்கள் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
  • உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயின்றவராக இருக்க வேண்டும்.

Wednesday, May 4, 2011

பின்லேடன் கொலை குறித்த கருத்து : திக் விஜய் சிங்கிற்கு காங்கிரஸ் அழைப்பாணை?

நேற்று முன்தினம் கொல்லப்பட்ட பின்லேடனின் உடலை அமெரிக்க ராணுவம் கடலில் வீசி இருக்கக்கூடாது என்று கருத்து தெரிவித்த திக் விஜய் சிங்கிற்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளதாக வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளார்.


இன்று போபாலில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த திக் வ்ஜயசிங், இச்செய்தியை தாம் முற்றிலும் மறுப்பதாக கூறினார். பின்லேடன் உடல் கடலில் வீசப்பட்டது குறித்து கருத்து தெரிவித்திருந்த திக் விஜய் சிங், எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும்,அவரது உடலை புதைக்கும்போது அவர் சார்ந்த மதச் சடங்குகளை நடத்தும் மரியாதையை அமெரிக்க ராணுவம் அளித்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : http://www.inneram.com/

கண்ட கனவும்; காணாத நிகழ்வுகளும்.


ஒரு வீட்டில் இருக்கும் வயதிற்கு வந்த பெண்ணுக்கு அவளை ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு திருமணம் முடித்து வைக்க அவளை ஈன்றெடுத்த பெற்றோர்களும், உற்றார் உறவினர்களும், உடன் பிறந்த சகோதரர்களும் எவ்வளவோ பல சிரமத்தையும், பல சிரத்தையையும் எடுத்து பல சங்கடங்களைப் பொறுத்தும், சகித்தும் வருகிறார்கள் என்பது ஊரறிந்த, உலகறிந்த விசயம். அதற்கு மேல் அவர்களின் கஸ்டங்களையும், இன்னல்களையும், அற்பணிப்புகளையும் அல்லாஹ்வே நன்கறியக்கூடியவன்.

காரணம் நம் வீட்டிற்கு வரும் மருமகன் (நம்மூரில் இன்னும் திருத்த முடியாமல் இருந்து வரும் சாபக்கேடான பழக்கவழக்கம்) நம் பிள்ளையை நல்ல விதமாக, சந்தோசமாக கடைசி வரை வாழ வைப்பான் அத்துடன் கூட இருந்து வரும் நமக்கும் தொந்தரவு இல்லாமல் இருப்பான் என்ற பேராவலில் மற்றும் எதிர்பார்ப்பிலும், நல்ல கனவுகளிலும் பெண் வீட்டினர் அனைவரும் இருந்து வருவது இயல்பு. இதில் தவறென்ன இருக்க முடியும்? குறை எங்கு காண முடியும்?

Sunday, May 1, 2011

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார் - ஒபாமா அறிவிப்பு -(வீடியோவுடன் )

அல்காயிதா இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடன், சிஐஏ உளவாளிகளால் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.
ரஷியா மற்றும் அமெரிக்காவின் சிம்மசொப்பனமாக விளங்கியவர் ஒசாமா பின்லேடன். கடந்த செப்டம்பர்-11, 2001 அன்றைய நியூயார்க் வர்த்தக மையம் தகர்ப்பில் மூளையாகச் செயல்பட்டவர் என்று குற்றங்சாட்டப்பட்டு சர்வதேச அளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் மேலோங்கி ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க ராணுவ ஆக்கிரமிப்புக்குக் காரணமாக இருந்தவர். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் முதல் தற்போதைய அதிபர் பாரக் ஒபாமாவரை உயிரோடு ஒசாமாவைப் பிடித்து சட்டத்தின்முன் நிறுத்துவதே தங்கள் தலையாய நோக்கம் என்று அவ்வப்போது அறிவிப்பது வழக்கம். இதுவரை பலமுறை கொல்லப்பட்டதாக ஊடகங்களால் அறிவிக்கப் பட்டவர்.

LinkWithin

Related Posts with Thumbnails