Wednesday, February 25, 2015

பணித்தானே ஏகன் இறையோனே ....!

பணித்தானே ஏகன் இறையோனே ....!
உயிரை தந்து உணர்வை வைத்து
உடலில் உரம் தந்து
உழைத்து வாழ்ந்திட பணித்தானே

அறிவை தந்து ஆராய்ந்து அறியும்
மனோ பக்குவம் தந்து
தீதும் நன்றும் கணித்திட பணித்தானே

உறவை தந்து உரிமை வைத்து
உள்ளத்தில் பண்பை தந்து
அன்பால் அறம்செய்து அகமகிழ பணித்தானே

Tuesday, February 24, 2015

எண்ண அலைகள் !

-கவிஞர் சீர்காழி இறையன்பனார்

உருண்டை உலகின்

இருண்ட வாழ்வு

இடுக்கண் கொள்வதா?

சுரண்டல் இல்லா

சுகவாழ்வு

சோபிக்க வேண்டாமா?

இன்னல்கள் இடுக்கண்கள்

சூதுடன் வாதும் சேர்ந்தார்

சொன்னதைச் செய்திட

முனைந்திட வேண்டுமா?

Monday, February 23, 2015

குர்ஆன்-Quran/ Songs பாடல்கள்-/vidio-காணொளிகள்





-Al-Waqia_Alsudais_B.mp3
View






-AL-Infitar_Ghamidi.mp3
View







 - Habib Ullah - ApnaMela.Com -.mp3
View







 - YouTubeIslam - ShareIslam Video Site - Da'wah Ila Al Jannah - ahadeeth or sayin.mp3
View







- Zain Bhikha - Deen-il-Islam.mp3
View







 - WwW.islamonline.NeT.mp3
View






18 - Kabah footage with Sami yusuf allah hu.mp3
View







Track02.cda
View







Track03.cda
View







Track05.cda
View






Track12.cda
View







Track13.cda
View







Track15.cda
View

Thursday, February 19, 2015

சுவர்க்கத்தின் சாவி..!! -நிஷா மன்சூர்


சுவர்க்கத்தின் சாவி
எங்களிடம் உள்ளது என்றார்
மூத்த இயக்கத்தின் தானைத்தலைவர்

இல்லை சாவி எங்களிடம்தான் உள்ளதென்றார்
அதிலிருந்து பிரிந்து தனி இயக்கம் கண்டு களமாடிய
சொல்லின் செல்வர்

இளைஞர்களே ஒன்றுகூடுங்கள்,
சாவி என்னிடம்தானென்றார்
இளைஞர்களின் லட்சிய புருஷனாக
தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட
தூய்மைவாதப் பெருந்தலைவர்

Wednesday, February 18, 2015

தலைத் துண்டு - அபு ஹாஷிமா

காலையில் பஜ்ர் தொழுகை முடிந்து தொழுகையாளிகளெல்லாம் பள்ளியை விட்டுப் போனபிறகு அவசர அவசரமாக கிளம்பினார் பிலால் ஹசன் சாஹிப் .

" இப்பவே நேரம் வெளுத்துப்போச்சே" என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டவர் புஹாரி டீக் கடையில் வழக்கம்போல் ஒரு சாயா வாங்கிக் அவசர அவசரமாகக் குடித்துவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

அவரது நடையில் இன்றைக்கு கொஞ்சம் தளர்ச்சி.
நேத்து சாயங்காலம் மையத்தை கசப் இறக்கி குளிப்பாட்டி கபன் பொதிந்து அடக்கம் செய்வது வரை கூடவே நின்றதில் உடம்பெல்லாம் பயங்கர அசதி.

அது என்னவோ ஒவ்வொருமுறை மைய்யத்துக்கான காரியங்களை செய்து முடிக்கும்போதும் உடம்பெல்லாம் அப்படி ஒரு தளர்ச்சி வந்து ஒட்டிக் கொள்வது பிலால் சாஹிபுக்கு இன்றுவரை புரியாத ஆச்சரியமாகவே இருக்கிறது.

Tuesday, February 17, 2015

ஒரு கேள்வியில் உருவான பள்ளிக்கூடம் !

 H.Q. நஜ்முத்தீன்.
 
எனக்கு மூத்தவர்களால் அன்புடன் ஹாஜியார் சேனா ஆனா (ஹாஜியார் செய்யது அப்துர் ரஹ்மான்) என்று அழைக்கப்பட்டவரும், எல்லோராலும் (B.S.A) பி.எஸ்.ஏ.ஹாஜியார் என்றும் அழைக்கப்பட்டவருமான எனக்கெல்லாம் முன்மாதிரியாக (Roll Model) திகழ்ந்தவருமான காக்கா பி.எஸ்.ஏ (B.S.A) அவர்கள். அல்லாஹ்வின் பக்கம் திரும்பிச் சென்றது. மடைதிறந்த வெள்ளம் போல கண்ணீரை வரவழைத்தாலும் சப்ரன் ஜமீல் என்ற பெருமானாரின் பொன்மொழியை ஏற்று அன்னாரின் வாழ்வில் நடந்த ஒரேயொரு துளியை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  ‘சாதனை வரலாற்றில் பி.எஸ்.ஏ.’ என்ற புத்தகத்தில் காக்கா அவர்கள் நேரடியாகவே பேசுகிறார்கள்:

Monday, February 16, 2015

காதல் எனும் கருத்தாக்கமும் அல் குர்ஆனும்



காதல் எனும் கருத்தாக்கமும் அல் குர்ஆனும்
  M.A.M. மன்ஸூர் நளீமி  

[ காதலும் ஆழமான அன்பு தான். ஆனால் அதில் வெறி இருக்கும். காதல் உணர்ச்சிபூர்வமானது. காம உணர்வின் கலப்பால் இந்த வடிவை அது பெறுகிறது.

அல்குர்ஆன் கணவன் மனைவிக்கிடையிலான தொடர்பில் அன்பிருக்க வேண்டும் என்கிறது. அத்தோடு ரஹ்மத் எனும் இரக்கமும் இருக்க வேண்டும் என்கிறது.
இரக்கம் அல்லது அருள் - ரஹ்மத் இன்னொருவரை நோக்கி எழுகின்ற கலப்பற்ற தூய அன்புணர்வு. பலவீனத்தை மன்னித்துவிடும். துன்பம் கண்டு இரங்கும் உணர்வு அது. இது கணவனுக்கும் மனைவிக்குமிடையே அவசியம் நிலவ வேண்டிய உணர்வு என்கிறது அல்குர்ஆன். 

அத்தோடு மனைவி கணவனுக்கு அமைதி தருபவளாக அமைய வேண்டும். இவ்வாறு அல்குர்ஆன் கணவன் மனைவிக்கிடையே காணப்பட வேண்டிய உணர்வுத் தொடர்பை வரையறுக்கிறது.]

Thursday, February 12, 2015

உணர்ந்தேனே உலகில் இன்று....!

உளமார உண்மை உண்டு
உழைத்திட உடலும் உண்டு
உள்ளுவதெல்லாம் உயர்வாய் உண்டு
உணர்ந்தேனே உலகில் இன்று

உறவாட உறவுகள் உண்டு
இடித்துரைக்க நட்புகள் உண்டு
இன்புற்றிருக்க எண்ணம் உண்டு
உணர்ந்தேனே உலகில் இன்று

Tuesday, February 10, 2015

மிதிரிக்கட்டை நினைவிருக்கா !? [ ஒரு நினைவூட்டல் ]

அன்றைய காலகட்டத்தில் மிதிரிக்கட்டை என்று அழைக்கப்பட்ட காலனியும் தான் நம் முன்னோர்களால் கால்களுக்கு செருப்பாக காலனிகளாய்ப் பயன்
பாட்டில் இருந்து வந்தன. மரக்கட்டையால் தயாரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட இந்த மிதிரிக்கட்டை அதன்மேல் விரல்களைத் தாங்கி நடக்க ஏதுவாக தோல் அல்லது ரெக்சினில் மேல்ப்பாக அமைப்பை ஏற்ப்படுத்தி மிதிரிக்கட்டை என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு ஒரு காலத்தில் காலனியாக பிரபலமாக பயன்பாட்டில் இருந்து வந்தன என்றே சொல்லலாம்

‘உம்மா’ என்று அழைக்கும் போது பாசம் மீண்டும் உயிர் பெறுகிறது !

உம்மா’…
********

அன்பு என்றால் என்னவென்று
நீ தானே கற்று கொடுத்தாய் !
துன்பம் வந்தால் கூட சுகமாய்
வந்து முட்டு கொடுத்தாய் !

விளையாட்டு காயங்களை கூட
விபரீதமாய் புரிந்து கொண்டு
படுக்கையில் காவல் இருப்பாய் !

தான் சாப்பிடா விட்டாலும்
நீ சாப்பிட்டாயா என்று நூறு
முறை கேட்டு வைப்பாய் !

பசி என்றால் பொறுக்க மாட்டாய்
ருசியாக செய்து தருவாய் !

Friday, February 6, 2015

மதினா

அமைதியும் சாந்தமும்
தவழும்
அமைதி இல்லம்.

புழுதிக்காற்றிலும்
இறைநேசம் தழுவும்
சொர்க்க பூமி.

மனதுக்கு நெருக்கமான
அணுக்க மலர்கள்
மலரும் தாய்மண்.

சாதனைத் தலைவர்
சன்னிதியில் சமர்ப்பணமாகும்
கண்ணீர் மாலைகள்,
நேசத்தின் சாட்சியாய்...

Wednesday, February 4, 2015

இனிய அணுகுமுறைதான் இன்றைய தேவை!

பேரா. ஜவாஹிருல்லாஹ் நடந்து கொண்ட விதம்!

சென்னை புத்தகத் திருவிழா! மாலை நேரம். கூட்டம் நிரம்பி வழிகிறது. ஐ எஃப் டி அரங்கில் அமர்ந்திருந்தேன்.

ஒருவர் என்னருகில் வந்து, “சார், நான் மணிவண்ணன், _____ நிறுவனத்தில் சீனியர் அதிகாரியாக இருக்கின்றேன்! ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ இங்கு எங்காவது இருப்பார்களா?” என்றார்.

எனது முகக்குறிப்பைப் பார்த்து விட்டு அவரே தொடர்ந்தார்:

“சார், அவர் ‘துக்ளக்’ இதழின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்கள் சொல்லப்பட்ட போதும் அவரது முகத்தில் அந்தப் புன்சிரிப்பு மாறவே இல்லை. அவர் விமர்சனங்களை எதிர்கொண்ட விதம், பின்னர் அவர் ஆற்றிய உரை, மத்திய பி.ஜே.பி அரசை அவர் விமர்சனம் செய்த பாங்கு அனைத்துமே எங்களைக் கவர்ந்து விட்டது சார்! எனக்கு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பிடிக்காது. ஆனால் அந்த நிகழ்சியில் திரு.ஜவாஹிருல்லாஹ் நடந்து கொண்ட விதம், பலகாலமாக நான் முஸ்லிம்கள் மீது கொண்டிருந்த அபிப்ராயங்கள் அனைத்தும் தவிடுபொடியாக்கி விட்டது!”

LinkWithin

Related Posts with Thumbnails