Thursday, February 12, 2015

உணர்ந்தேனே உலகில் இன்று....!

உளமார உண்மை உண்டு
உழைத்திட உடலும் உண்டு
உள்ளுவதெல்லாம் உயர்வாய் உண்டு
உணர்ந்தேனே உலகில் இன்று

உறவாட உறவுகள் உண்டு
இடித்துரைக்க நட்புகள் உண்டு
இன்புற்றிருக்க எண்ணம் உண்டு
உணர்ந்தேனே உலகில் இன்று
ஏமாற்றும் மனிதர்கள் உண்டு
ஏமாறும் பாவங்கள் உண்டு
ஏற்றத்தாழ்வும் இங்கு உண்டு
உணர்ந்தேனே உலகில் இன்று

எதிப்பிளைக்கும் எத்தர்கள் உண்டு
ஏற்றம்தரும் மாந்தரும் உண்டு
இணையில்லா இறையும் உண்டு
உணர்ந்தேனே உலகில் இன்று

பண்பான பாசம் உண்டு
பகட்டான வேஷம் உண்டு
பாடுபட்டால் உயர்வும் உண்டு
உணர்ந்தேனே உலகில் இன்று

ராஜா வாவுபிள்ளை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails