Thursday, November 30, 2017

தியான முயற்சி

இனிய காலை வாழ்த்துக்கள்.

 ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனவாம்.

 எனவே தலைவர் குரங்கிடம் போய் மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன், தலைவர் குரங்காரும் ''சரி அவ்வாறே செய்து விடுவோம். அதற்கு முன்னால் உண்ணா விரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்து விடுங்கள். ஏனெனில் விரதம் முடியும் பொழுது பசியாக இருக்கும். எனவே அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது'' என்று அறிவுரை சொன்னார்.

தியானித்துக் காணவேண்டும்


",உடம்பில் உயிர்
அடங்கி நிற்பது
உடம்பின் உள்ளேயா
உடம்பின் வெளியிலா
என்பதை என்னிடம்
மெள்ள வந்து
அருகில் வந்து
சொல்லவேண்டும்
என்று கேட்கின்றீர்கள்,

Tuesday, November 28, 2017

மிகவும் சுருக்கமான மற்றும் அதி சக்தியுள்ள துஆ-அதைப்பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?



மிகவும் சுருக்கமான மற்றும் அதி சக்தியுள்ள துஆ-அதைப்பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

நபி (ஸல்) அவர்களிடம் அவருடைய சிறிய தந்தையான அல் அப்பாஸ் அவர்கள் கூறினார்கள்:

யா ரஸுலுல்லாஹ் எனக்கு ஒரு துஆவை கற்பியுங்கள் என்றார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் என்னுடைய சிறிய தந்தையே, கூறுங்கள்

اللهم اني اسالك العافية

"அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக அல் ஆஃபியா"

(யா அல்லாஹ்! நான் உன்னிடம் ஆஃபியாவைக் கேட்கிறேன்)

Tuesday, November 21, 2017

நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)


நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) யாராவது அழைத்தால் திரும்பும்போது முகத்தை மட்டும் திரும்பாமல் முழுமையாகத் திரும்புவார்கள். அவர்களின் பார்வை கீழ்நோக்கியே (பூமியை பார்த்தே) இருக்கும். வானத்தைப் பார்ப்பதை விட பூமியைப் பார்ப்பதில் அவர்களது பார்வை அதிகமாக இருந்தது.
தன் தோழர்களை முன்னால் செல்லவிட்டு பின்னால் வருவார்கள். சந்திப்பவர்களை ஸலாம் கூறி பேச ஆரம்பிப்பார்கள்.
வுளூச்செய்யும் போதும் தலைவாரும் போதும் செருப்பணியும் போதும் வலப்புறத்திலிருந்து ஆரம்பிப்பதை விரும்புவார்கள்.

Saturday, November 18, 2017

அல்லாஹ் அல்லாஹ்

கதிர் வீசிடும் காலை
உன் ஆணை அல்லாஹ்
இருள் மேவிடும் மாலையும்
உன்னாலே அல்லாஹ்
நல்வாழ்வினில் பேரருள்
நீயே அல்லாஹ்
நிறைவான அன்பாளனும்
நீயே அல்லாஹ்
திருவேதம் நபிநாதர்
தந்தாய் அல்லாஹ்
புவியாவுக்கும் நீதிக்கும்
நீயே அல்லாஹ்

Monday, November 13, 2017

மனக்குழப்பத்திலிருந்து விடுதலை !

மாநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மனமென்பது (செடிகொடிகள் இல்லாத) கட்டாந்தரையில் விழுந்த இறகு போல, காற்றின் அலைகள் அதை உள்ளும் புறமுமாக புரட்டிப்போடுகிறது.(அறிவிப்பாளர் : அபூமூஸா (ரளி)
நூல் : அஹ்மது)

எத்தனை அழுத்தமும் சத்தியமும் நிரம்பிய உதாரணம் இது. நம் வழக்கில் உள்ளபடி மனமென்பது ஒரு குரங்கு என்று கூறிக்கொள்வதுண்டு. குரங்கையாவது கயிற்றால் கட்டிப் போடவும் குச்சியால் கட்டுப்படுத்தவும் இயலும். ஆனால் உதிர்ந்த - அதுவும் கட்டாந்தரையில் விழுந்த இறகை! வீட்டின் திண்ணைகளில், பள்ளிவாசலின் வராண்டாக்களில், தர்காக்களின் வளாகங்களில் மனப்பிறழ்வும், சிதைவும் ஏற்பட்ட மனிதர்களை சந்தித்ததுண்டா? அவர்களின் உள்ளங்களை புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் குழப்பங்களை சற்றே மனக்கண்முன் கொணர்ந்தால் மாநபி (ஸல்) அவர்களின் உதாரணத்தின் உண்மை நிலையை உணர முடியும்.

ஆனால் அவர்களின் வாழ்வையே புரட்டிப் போட்டிருக்கும் இந்நிலைக்கான காரணங்கள் குறித்து நாம் யோசித்துப் பார்த்ததுண்டா?

Sunday, November 12, 2017

உயிரி (பாக்டீரியா) மேகங்கள் பொழியும் உயிர் மழை

அல்குர்ஆன்குர்ஆன் வழியில் அறிவியல்……….

அல்லாஹ் படைத்த இம்மாபெரும் பிரபஞ்சத்தில், சூரிய குடும்பத்திலுள்ள நமது பூமிக்கு உள்ள தனிச் சிறப்பே பல்லுயிர்கள் வாழும் உயிர்க் கோளாமாக இருப்பதுதான். இவ்வுயிரினங்களுக்கு ஆதாரமாய் நீர் நிறைந்து நீலப்பந்தாக பூமி காட்சிதருகிறது. ஒவ்வொரு உயிர்களும் நீரிலிருந்தே படைக்கப்பட்டதாக அல்குர்ஆன் கூறுவதை நவீன அறிவியலும் உறுதிப்படுத்துகிறது. உயிர்களுக்கு ஆதாரமான நீர் பூமிக்கு மட்டும் சொந்தமல்ல. ஏனெனில் வானம் பூமி படைப்பதற்கு முன்பே அல்லாஹ் நீரைப் படைத்து விட்டான். எனவேதான் நீரானது பிரபஞ்சம் முழுவதும் வியாபித்துள்ளதை நவீன அறிவியல் கண்டுபிடித்துள்ளது.

“ ஆதியில் அல்லாஹ் (மட்டுமே) இருந்தான்.அவனைத்தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை.(பிறகு படைக்கப்பட்ட) அவனது அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்பூல் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விசயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப்படைத்தான்.” என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி). நூல்: புஹாரி.3191.

Saturday, November 11, 2017

ஆன்மா

பனிக்கட்டி இன்னொரு பனிகட்டியுடன் இனைத்தால் இனையாது.  இரண்டு உருகிய பனிக்கட்டி தண்ணீர் இதனையும். சில மணி நேரத்தில் உருகிய இரண்டு பனிக்கட்டி தண்ணீர் ஆவியாக போகும்.

உடல் இன்னொரு உடலைத் தேடும். ஆண் பெண் உடலைத் தேடும், பெண் ஆண் உடலைத் தேடும். ஆனால் சில நிமிடங்கள்தான். இரண்டு பனிக்கட்டி போல.

அமைதி


நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.

ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான் மன்னன்.

இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.

Wednesday, November 8, 2017

இதயத்தை நோக்கித் திரும்புதல் | நாகூர் ரூமி

வாழ்க்கையின் அர்த்தம் புரிந்துகொள்ளுங்கள்!

 வாழ்க்கையின் அர்த்தம் புரிந்துகொள்ளுங்கள்! 

✅ உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்.
"உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்."

✅ மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள்*.
"இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது."

✅ ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம்.
"இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்."

✅ அரசியல்வாதியின் கல்லறையில்*,
"தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள், இவன் எழுந்து விடக்கூடாது."

Friday, November 3, 2017

“என்ன நடந்தது அவர் வாழ்க்கையில்?” / டாக்டர் லாரன்ஸ் B பிரவுன்

இஸ்லாத்தை ஏற்றதால் மனைவி, மகள்கள், தாய், தந்தை, பெரிய பண்ணை வீடு, இரண்டு கார்கள், நண்பர்கள், 20 வருடங்களாகப் பார்த்து வந்த அமெரிக்க விமானப்படை கண் டாக்டர் வேலை, அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நின்றார்

டாக்டர் லாரன்ஸ் B பிரவுன் ( பிறப்பு: 1959).

ஏக இறைவன் அல்லாஹ் அவரைக் கைவிட்டு விட்டானா?

“என்ன நடந்தது அவர் வாழ்க்கையில்?” என்பதை அவரே கூறக் கேட்போம் இன் ஷா அல்லாஹ்.
___________________________________________

“ 1990 ம் ஆண்டு எனது இரண்டாவது மகள் ஹன்னா பிறந்தாள். மற்ற குழந்தைகளைப் போன்று அவளின் நிலைமை இல்லை. பிறந்தவுடனேயே அவள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். இருதயத்தில் இருந்து இரத்தம் வெளியேறும் குழாயில் அவளுக்கு பிரச்சினை ஏற்பட்டிருந்தது. இது மருத்துவ உலகில் மிகவும் அரிதான ஓன்று.

இதனைக் கேள்விப்பட்ட நான் அதிர்ந்தே போனேன். எவ்வளவு செலவானாலும் மகளைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று முடிவெடுத்தேன். வாஷிங்டனில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்து இருதய அறுவை சிகிச்சை நிபுணர் வரவழைக்கப்பட்டார். குழந்தையை பரிசோதித்த அந்நிபுணர் சொன்ன வார்த்தை எனக்கு பேரிடியாக விழுந்தது. “அறுவை சிகிச்சை செய்தாலும் குழந்தை பிழைப்பது கடினம். அவ்வாறு பிழைத்தாலும் நீண்ட நாட்கள் வாழ்வதற்கு சாத்தியமில்லை! ” என்றார்.

அதிர்ச்சியில் உறைந்து போனேன். எனது நிலைமையைப் பார்த்த அவர் கடைசியில் சொன்னார், “ இறைவனிடம் வேண்டுங்கள். சிகிச்சை பலனளிக்கலாம்.” வாழ்க்கையில் முதன் முதலாக அப்போது தான் இறைவனைப் பற்றி கேள்விப்பட்டதாக உணர்ந்தேன். என்னைப் பொருத்தவரை அமெரிக்க விமானப்படையில் கண் மருத்துவராக வேலை பார்த்து வந்தேன். நிறைவான சம்பளம். அழகிய மனைவி, குழந்தை, பெரிய பண்ணை வீடு, இது கடையா? வீடா? என்று கேட்குமளவுக்கு ஏராளமான வீட்டு உபயோகப் பொருள்கள், விளையாட்டுச் சாமான்கள் என நிறைவான வசதிகளுடன் வாழ்ந்தேன்.

தெளிவாக கூறுவதெனில் பொருளாதார மோகத்தில், உலக சுகபோகத்தில் மூழ்கிக் கிடந்தேன் எனலாம். ஆதலால், வாழ்க்கையில் எனக்கு இறைவனின் தேவை ஏற்பட்டதில்லை. வேலை பார்ப்பதால் பணம் வருகிறது. பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றே கற்பனை செய்திருந்தேன். மொத்தத்தில் இறைவனை நம்பாத நாத்திகனாக வாழ்ந்திருந்தேன்.

இப்போது எனது மகளின் விஷயத்தில் பணம் தோற்றுப் போய்விட்டது.மருத்துவ உலகமும் கைவிரித்து விட்டது. மருத்துவரே, “இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்” என்கிறார்.வேறு வழியின்றி மருத்துவமனையில் இருந்த பிரார்த்தனை அறையினுள் நுழைந்தேன்.

எனது வேண்டுதலும் இறைவனின் உதவியும்
********************************************
வாழ்க்கையில் முதன் முதலாக இறைவனின் முன்பு முழங்காலிட்டு அமர்ந்தேன். கைகளை உயர்த்தி, மனதில் இறைவனை வேண்டினேன். “இறைவன் என்று ஒருவன் உண்மையில் இருந்தால், உண்மையான அந்த இறைவனே! எனது மகளைக் காப்பாற்றுவீராக!” உள்ளத்தை ஒருமைப்படுத்தி வேண்டிய அத்தருணத்தில் என்னையும் அறியாமல் அழுகை பீறிட்டது. கதறி அழுதேன்.கடைசியில் என் மனதில் சொன்னேன். என் மகளைக் காப்பாற்றினால், இறைவனே! உமக்காக என்னை அர்ப்பணிப்பேன்.

இப்படியே பதினைந்து நிமிடங்கள் கழிந்திருந்தன. மீண்டும் நினைவுக்கு வந்தேன். பிரார்த்தனை அறையை விட்டு வெளியேறி எனது மகளின் சிகிச்சை அறைக்கு வந்தேன். அங்கு எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என்னை எதிர்பார்த்திருந்த சிறப்பு மருத்துவ நிபுணர் என்னிடம் கேட்டார். எங்கே சென்றிருந்தீர்கள் லாரன்ஸ் ? உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தோம். உங்கள் மகளின் இருதய அடைப்பு சரியாகி விட்டது.

மருத்துவர், மருத்துவ அடிப்படையில் அதற்கு சில விளக்கங்கள் தந்தார். எனினும் என்னைப் பொருத்தவரை எனது வேண்டுதலுக்கு இறைவன் பதிலளித்துள்ளார் என்றே நம்பினேன். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்பு, இரண்டு வருடத்திற்குள் அறுவை சிகிச்சையோ, மருந்து மாத்திரைகளோ இன்றி முழுமையாக குணமடைந்தாள் எனது மகள். மற்ற குழந்தைகளைப் போன்று நன்கு வளரவும் செய்தாள்.

உண்மையான இறைவனைத் தேடி எனது ஆராய்ச்சி .
*****************************************
சரியாக நான்கு வருடங்கள் கழிந்திருந்தன. இறைவனுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற தயாராகவே இருந்தேன். எனினும் அதில் நான் தோற்றுத்தான் போனேன். ஏனெனில், உண்மையான இறைவனைத் தேடி யூத மத நூலான தோரா ( பழைய ஏற்பாடு ) மற்றும் யூத மத நூல்களை படிக்கவே செய்தேன். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சத்தியத்தைத் தேடி பல சர்ச்சுகளுக்கு சென்று போதனைகளைக் கேட்டேன்.அமெரிக்காவில் உள்ள ரோமன் கத்தோலிக்க ஆலயங்களில் பலமணி நேரங்களை செலவிட்டுள்ளேன்.எனினும் கிறிஸ்தவத்தை என்னால் தழுவ இயலவில்லை. ஏனெனில், கிறிஸ்தவத்தின் பல்வேறு பிரிவுகளின் போதனைகள் பைபிளில் நான் படித்தவற்றுடன் ஒத்துப்போகவில்லை.

மோசஸின் வழியில் மூன்று இறைத்தூதர்கள்
******************************************
யூத நூல்களில் நான் படித்திருக்கிறேன். இறைத்தூதர் மோசஸை ( அரபியில் மூஸா நபி ) மூன்று இறைத்தூதர்கள் பின்பற்றுவார்கள் என்று. இயேசு கிறிஸ்து ( ஈஸா நபி ) திருமுழுக்கு யோவான் ( John the Baptist - அரபியில் யஹ்யா நபி ) ஆகியோரே இரண்டு நபர்கள். மூன்றாவது நபர் யாரென்று தெரியாமல் இருந்தது. பைபிளைப் படித்த பொழுது தெரிந்து கொண்டேன். இயேசு கிறிஸ்துவே பைபிளில் இறுதி இறைத்தூதரை பின்பற்றுவது தொடர்பாக கூறியுள்ளார். இயேசுவுக்கு பின்பு இறைத்தூதர் ஒருவர் உள்ளார் என்பது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தது. அதற்கு மேல் எதுவும் தெரியவில்லை.

சத்தியத்தை அறிந்தேன் இஸ்லாத்தை ஏற்றேன் .
******************************************************************
பிரபல இங்கிலாந்து அறிஞர் மார்டின் லிங்க்ஸ் (1909 – 2005). 1940 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்ற இவர், 1983 ஆம் ஆண்டு முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் நூலாக எழுதினார்.

‘ MUHAMMAD HIS LIFE BASED ON THE EARLIEST SOURCES ‘ ( இந்நூல் தமிழில் வெளிவந்துள்ளது) என்ற பெயரில் வெளிவந்த அந்நூலே ஆங்கிலத்தில் முஹம்மத் (ஸல்) அவர்களின் முழுமையான வாழ்க்கை வரலாறு குறித்து வெளிவந்த முதல் நூலாகும்.

தற்செயலாக இந்நூல் எனது கைகளில் கிடைத்தது. படித்தேன். பைபிளில் வாக்களிக்கப்பட்ட இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களே என்பதைப் புரிந்து கொண்டேன். அந்நூலைப் படித்த பிறகு திருக்குர்ஆனைப் படித்தேன். இறைவன் தொடர்ந்து தனது தூதர்களை அனுப்பி இருப்பதை அறிந்தேன். மோசஸையும், இயேசுவையும் அனுப்பிய இறைவன்தான் முஹம்மத் நபி (ஸல்) அவர்களையும் இறைத்தூதராக அனுப்பியுள்ளான் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

மேலும், ‘ இறைவன் ஒருவன் ‘ என்பதில் இஸ்லாம் முந்தைய யூத – கிறிஸ்தவ மதங்களைக் காட்டிலும் தனித்துவத்துடன் திகழ்வதை அறிந்தேன். இறைவனின் ஏகத்துவம், முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதுத்துவம், இஸ்லாத்தின் கொள்கைகள் ஆகியவற்றினால் கவரப்பட்டேன். இஸ்லாம்தான் இறைவனின் உண்மையான மார்க்கம் என்பதை நம்பத் தொடங்கினேன். இஸ்லாத்தை ஏற்றேன்.

எனக்கு ஏற்பட்ட சோதனைகள்.
*******************************************
இஸ்லாத்தை ஏற்ற பிறகு என் சொந்த வாழ்க்கையில் புயல் வீசியது. நான் இஸ்லாத்தை ஏற்றதை என் மனைவியால் தாங்க இயலவில்லை. என்னிடமிருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாள். கோர்ட்டில் நான் அடித்து துன்புறுத்தினேன் என்று கூறி விவாகரத்து கேட்டாள். ஆனால், நான் உண்மையில் மனைவியை அடிப்பவன் அல்ல. நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

எனது இரண்டு குழந்தைகளையும் தன்னுடன் அவள் எடுத்துக் கொண்டு போனாள். மேலும் நீதிமன்றத்தில் 100 வருடங்களுக்கு ஜீவனாம்சம் வேண்டுமென்று வாதிட்டாள். நீதிமன்றமும் இசைந்தது. ஜீவனாம்சமாக எனது வீடு மற்றும் இரண்டு கார்களை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொண்டாள்

. இதற்கெல்லாம் மேலாக இன்னொரு அநியாயமும் எனக்கு நடந்தது. அது, வாரத்தில் ஒரு நாள் எனது மகள்களை பார்க்கும் சமயத்தில் அவர்களை நான் அடித்து துன்புறுத்தி விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கும்படி நீதிமன்றம் எனக்கு கூறியிருந்ததாகும். என்னமோ மனிதர்களை அடித்து துன்புறுத்தும் கொடுமைக்காரன் போன்று சித்தரிக்கப்பட்டேன்.

எந்த பிள்ளையைக் காப்பாற்ற இறைவனிடம் மன்றாடி உதவியைப் பெற்றதால், உண்மையான இறைவனை ஏற்றேனோ அந்தப் பிள்ளை இப்போது என்னுடன் இல்லை. எனது நெஞ்சம் கவலைகளால் கசங்கிப் போனது.

அத்துடன் எனக்கு இன்னொரு சோதனையும் வந்தது. அது என்னை ஈன்றெடுத்த தாய் – தந்தையர் என்னை வெறுத்ததாகும். இஸ்லாத்தை ஏற்றதால் அவர்கள் என்னை விலக்கி வைத்தனர். ஒரு முறை அவர்களிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது. இனி அவர்களை நான் பார்க்கக் கூடாது என்று. முழுமையாக குடும்ப உறவற்று அநாதையாகிப் போனேன்.

இஸ்லாத்தை ஏற்ற சமயத்தில் அமெரிக்க விமானப்படை மருத்துவராக 20 வருடங்களை பூர்த்தி செய்திருந்தேன்.

இஸ்லாத்தை ஏற்ற பிறகு அமெரிக்க ராணுவத்தில் ஒரு முஸ்லிமாக என்னால் பணியாற்ற இயலவில்லை. என் மனசாட்சி என்னைக் கொன்று போட்டது. பதவியை ராஜினாமா செய்தேன்.

மனைவி- பிள்ளைகளை இழந்தேன். வீடு வாசல்களை இழந்தேன். நண்பர்களை இழந்தேன்.கடைசியில் வேலையையும் இழந்து நின்றேன். பெரிய பண்ணை வீட்டில் வசித்த நான் குறுகலான ஏணிப்படி கொண்ட அறைகள் ஏதுமற்ற சின்ன வீட்டில் வசித்தேன். எல்லாவற்றையும் உண்மையான அந்த இறைவனுக்காகப் பொறுத்தேன்.

“ இஸ்லாத்தை ஏற்ற பிறகு அதுவரை என்னுடன் பழகி வந்த எனது நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தனர்.அதற்கு அவர்கள் சொன்ன காரணம், நான் நடன விடுதிகளுக்கு செல்வதில்லையாம். மது அருந்துவதில்லையாம் தோழிகளுடன் கைகுலுக்குவதில்லையாம். இதுதான் அவர்கள் என் மீது வைக்கும் குற்றச்சாட்டு.

நான் கேட்கிறேன், இயேசு எங்காவது நெருங்கிய குடும்ப உறுப்பினர் அல்லாத அந்நியப் பெண்களுடன் கைகுலுக்கியுள்ளாரா ? பைபிளில் எங்காவது அப்படி ஓன்று நடந்திருப்பதாக காட்ட முடியுமா ? நான் சவாலாக கேட்கிறேன்.

இன்றும் ஆர்த்தொடெக்ஸ் யூதர்கள் அன்னியப் பெண்களுடன் கைகுலுக்குவதில்லை. இயேசுவும் ஆர்த்தொடெக்ஸ் மதகுருவைப் போன்றே வாழ்ந்துள்ளார். இதுவே உண்மை, கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு இவர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள்?

இறைவனின் உதவி.
****************************
இஸ்லாத்தை ஏற்றதால் மனைவி பிள்ளைகளை இழந்தாலும் அல்லாஹ் என்னைக் கைவிடவில்லை. மிக நல்லதொரு குணவதியை அல்லாஹ் எனக்கு இரண்டாவது மனைவியாகத் தந்தான். அவள் மூலமாக அழகிய பெண் குழந்தையும் எனக்குப் பிறந்தாள். வீடு – வாசலை இழந்தேன்.எனினும் அல்லாஹ் என்னைக் கைவிடவில்லை.

உலக முஸ்லிம்களால் மிகவும் விரும்பப்படும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நகரமான மதீனா மாநகரில் எனக்கு அல்லாஹ் வீட்டைத் தந்தான். உலகின் மிக அழகிய நகரங்களான வியன்னா, சூரிச், வான்கூவர், ஜெனிவா, சிட்னி போன்ற நகரங்களை விட மிகச்சிறந்த நகரம் அது. ஏனெனில், அந்நகரில் தஜ்ஜால் ( அந்திக் கிறிஸ்து ) நுழைய இயலாது என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

என்னுடைய பழைய நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தாலும் அவர்களை விட எல்லா வகையிலும் சிறந்த நண்பர்களை அல்லாஹ் எனக்குத் தந்துள்ளான். உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் எனக்குத் தோழர்களாகவும் சகோதரர்களாகவும் ஆகிவிட்டனர். அல்லாஹ் போதுமானவன். “
___________________________________________________________

தற்பொழுது இஸ்லாமிய பிரச்சாரப் பணி செய்து வரும் இவர் மூன்று நூல்களை எழுதியுள்ளார். அவை,

1) The First and Final Commandment – By Laurance B Brown.

2) MisGod’ed: A Roadmap of Guidance and Misguidance in the Abrahmic Religions – By Laurance B Brown.

3) The Eighth Scroll – By Laurance B
------------------------------------------------
இறைவனுடைய தரிசனத்தை இம்மையிலும், மறுமையிலும் அடைய நாடுவீர்களாயின் முதலில் தன்னடக்கமும், மௌனமும், பொறுமையும் வேண்டும். அல்லாஹ்வின் தோழர்கள் (அவ்லியா) அவன் முன்பாக அடிபணிந்து ஒழுக்கத்துடன் இருப்பவர்களாவார்கள். உள்ளத்தில் தெளிவான உத்தரவு பிறக்காதவரை அசையவும் மாட்டார்கள். அவன் புறத்திலிருந்து ஏற்படக்கூடிய உதிப்பு வழியாக உத்தரவை எதிர்நோக்கி நிற்பார்கள்.

கௌஸுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு

slamic Animation | உலக முஸ்லீம்கள் நபி (ஸல் ) அவர்களை உயிரினும் மேலாக நேசிப்பது ஏன் ? என அறிவோம்.

நீங்கள் எத்தனையோ பேர்களை சந்தித்து இருப்பீர்கள். ஆனால் '

நீங்கள் எத்தனையோ பேர்களை சந்தித்து இருப்பீர்கள். ஆனால் அவர்களிடத்தில் உர்க்காரும்போதோ பேசும்போதோ அல்லது அவர்களிடத்தில் உங்களுக்கு ஏதோவொரு தேவை நிறைவேற வேண்டும் என்று நினைத்து​, ஆனால் அந்த காரியம் முடியாமல், மேலும் நீங்கள் ஏதோவொரு களைப்பு உங்களிடம் ஏற்பட்டு இருப்பதை உணர்வீர்கள். இப்படியொரு அனுபவம் உங்களுக்கு உண்டா?. அது ஏனென்று தெரியுமா உங்களுக்கு?.

LinkWithin

Related Posts with Thumbnails