Wednesday, December 27, 2017

நல்லடியானாக வாழ்வது எப்படி

நல்லடியானாக வாழ்வது எப்படி
மனிதர்கள் இறைவனுக்கு அடிபணியவே படைக்கப்படடிருப்பதால், அவனை வணங்கி வழிபடுவது எப்படி என்பதை அவர்கள் அறிந்திருப்பது கடமையாகும். இதுவும் குர்ஆனில் அறிவிக்கப்பட்டுள்ளது. ( 22:67)

ஒவ்வொரு வகுப்பாருக்கும் அவர்கள் வணங்குவதற்கு உரிய வழியை நாம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். எனவே அந்த விவகாரத்தைப் பற்றி அவர்கள் உம்மிடம் தர்க்கிக்க வேண்டியதில்லை. (22:67)

Wednesday, December 13, 2017

நல்லவற்றையும் கெட்டவற்றையும் பிரித்தறிவது எப்படி?

குர்ஆனின் கோட்பாடுகள் நிராகரிக்கப்படும் சூழ்நிலையில், நல்லவற்றையும் கெட்டவற்றையும் பிரித்தறிய பல்வேறு அளவுகோல்கள் கையாளப்படுகின்றன. இத்தகைய பலதரப்பட்ட அளவுகோல்களை நம்புவதால் தவறான வழியில் நடக்கவும் தீய விளைவுகளைச் சந்திக்கவும் நேரிடுகிறது.

எடுத்துக்காட்டாக ஒரே ஒரு முறை குற்றம் இழைக்க முயன்ற ஒருவர் பல குற்றங்களைச் செய்தவரை விடத் தூய்மையானவராகக் கருதப்படுகிறார். கொள்ளையடிப்பவன் தன்னைக் கொலையாளியை விடத் தீமையற்றவனாக எண்ணிக் கொள்கிறான்; கொலையாளி தான் ஒரு தடவை தான் கொலை செய்திருப்பதால் தன்னை அவ்வளவு கெட்டவனாகக் கருதுவதில்லை.

Sunday, December 3, 2017

பயணம் செல்பவர்கள் மட்டுமே, அடைந்தவர்கள் இல்லை

உங்கள் வயது என்ன? நீங்கள் உங்கள் வயதை....  சொல்வீர்கள். நீங்கள் சொன்னது உங்கள் வயது கிடையாது. நீங்கள் ஒன்றும் அற்ற நிலையே நோக்கி பயணிக்கிறீர்கள் அந்த பயணத்தில் கடந்து வந்த காலத்தைச் சொல்கிறீர்கள். கடந்து வந்த காலம் வயது 15,25,50,70 இருக்கலாம் தெரியும் ஆனால் நீங்கள் இன்னும் போகும் தூரம் தெரியாது.

இறைவனை தேடி அல்ல.ஞானத் தேடுதலில் உங்களுக்குள் ஆன்மாவை நோக்கி பயணமாவீர்கள் அப்போது உங்கள் பயணம் தொடருமே தவிர முடிவு இருக்காது. ஆன்மீகத்தை ஆன்மாவில் தேடல் ஒரு கரை மட்டுமே தவிர மறு கரை இல்லை.

LinkWithin

Related Posts with Thumbnails