Friday, October 27, 2017

முகஸ்துதியின் விபரீதம்!


அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

அல்லாஹ் கூறுகின்றான்:

‘வணக்கத்தை அல்லாஹ்வுக்கே உரித்தானவர்களாக அவனையே வணங்க வேண்டும் என்றே அவர்கள் ஏவப்பட்டுள்ளார்கள்’ (அல்-குர்ஆன் 98:5)

அன்பு சகோதர, சகோதரிகளே! இந்த வசனத்தை நாம் நன்கு சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம். தொழுகை, ஜக்காத், ஹஜ் முதற்கொண்டு நாம் செய்யக்கூடிய அனைத்து அமல்ககளும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முக்கிய இரண்டு நிபந்தனைகள் இருக்கின்றன. அவைகள்:

நாம் செய்யும் அமல்கள் அல்லாஹ்வுக்காகவே என்ற இஃக்லாஸ்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் செய்தல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

Saturday, October 14, 2017

ஆங்கில மருத்துவத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

அலோபதி எனும் ஆங்கில மருத்துவத்தால் கேடுகள் ஏற்படுவதால் அந்த மருத்துவம் செய்வது இஸ்லாத்துக்கு எதிரானது என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். கேடு தரும் அனைத்தும் மார்க்கத்தில் ஹராம் என்ற நபிமொழியை எடுத்துக் காட்டுகிறார்கள்.
சில நோய்கள் வாராமல் இருக்க தடுப்பூசி போடுவதும், போலியோ சொட்டு மருந்து போடுவதும், காய்ச்சல், சர்க்கரை நோய்க்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதும் கூடாது எனவும் பிரச்சாரம் செய்கிறார்கள்.

Friday, October 13, 2017

நான்.... நான் ஆனேன்...!*

நான்.... நான் ஆனேன்...!*
நிதர்சனத்தில் நீந்துகின்ற
நிழல் ஆனேன்
நிம்மதியை தேடுகின்ற
நிஜம் ஆனேன்
மனிதத்தை மரணிக்கவிட்ட
பதர் ஆனேன்
மாற்றத்தை மாற்றிவிட்ட
புதிர் ஆனேன்
ஆணவமே ஆளுமையென்று
திமிர் ஆனேன்
ஆசையை துரத்துகின்ற
ஆன்மா ஆனேன்
சூழ்சிகளே சூத்திரமென
துதிக்கல் ஆனேன்

மானிட சேவையே இறைவனுக்கான சேவை

Nagore Rumi
மானிட சேவையே இறைவனுக்கான சேவை (இறைவன் தேவைகளற்றவனாதலால் அவனுக்கு யாரும் சேவை செய்ய முடியாது) என்பதை உணர்த்தும் ஒரு அழகான நபிமொழி. நான் சமீபத்தில் முழுமையாகப் படித்து முடித்த ஆதாரப்பூர்வமான நபிமொழித்தொகுப்பான ஸஹீஹ் முஸ்லிம் என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது (ரஹ்மத் அறக்கட்டளை வெளியீடு, மின் நூல்).
நபிமொழி எண் 5021
அறிவிப்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர் அபூ ஹுரைரா அவர்கள் (இறைவன் அவரைப் பொருந்திக்கொள்வானாக)
மறுமை நாளில் அல்லாஹ் ஒரு மனிதனிடம் இப்படிக் கேட்பான்:
நான் நோயுற்றிருந்தேன், நீ ஏன் என்னைப் பார்க்க வரவில்லை?
அகிலத்தின் அதிபதியாகிய நீ எப்படி நோயுற்றிருப்பாய்? உன்னை நான் வந்து எப்படிப் பார்ப்பேன்?

Wednesday, October 11, 2017

”நான் பெண்மக்களின் தந்தை!”

Yembal Thajammul Mohammad
*******************************************************************************
“நான் பெண்மக்களின் தந்தை என்பதில் பெருமைகொள்கிறேன்” என்பது அண்ணல் நபி(ஸல்)அவர்களின் பெருமிதப் பிரகடனம்.
*******************************************************************************
அன்னையவர் காலடியில்
அடையஅரும் சொர்க்கத்தை
முன்னிறுத்திக் காட்டியஎம்
முஹம்மதுவே, நாயகமே! ................1
உற்றாரில் உறவினரில்
ஊருலகில் தாய்தானே
முற்றமுதற் சுற்றமென
முன்மொழிந்த நாயகமே! ……….…..2

Thursday, October 5, 2017

இறைவனை நேசிப்பது எப்படி? – How to Love God?


நம்மில் பெரும்பாலானோரின் இதயத்தில் இவ்வினா உதித்திருக்கும். சிலர் ஆன்மீக வழிகாட்டிகளான ஷெய்குமார்களிடம் இக்கேள்விக்கான விடையை தேடியிருப்பார்கள். சிலர் ஞான நுால்களை புரட்டியிருப்பார்கள். இன்னும் சிலர் இறைநேசர்களின் வாசல்களில் தஞ்சம்கொண்டு தவமேற்றிருப்பார்கள், சிலர் ஆண்டவனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து தொழுது அவனது ஏவல் விலக்கல்களை ஏற்று நடத்துவதே அவனது நேசத்திற்கான வழியென்று முடிவுசெய்திருப்பார்கள்.

ஆனால் இறைநேசம் தேடும் ஞானம் தனித்தன்மை வாய்ந்தது அதிலும் தஸவுஃப் என்னும் ஏகத்துவ ஞானம் சற்று வித்தியாசமானது, நான் கூறப்போகும் செய்திகள் உங்களை ஞானக்கோட்டைக்கு அழைத்துச் செல்லாவிடினும் அதன் வாசல்படிகளிளாவது உங்கள் காலடிகளை எடுத்து வைக்க உதவும்.

Wednesday, October 4, 2017

Paesum Thalaimai - Poet of captivating spell ‘Kaviko’ Abdul Rahman | 05-04-2015

கண்ணியமிக்க எனது சகோதரர்களே

கண்ணியமிக்க எனது சகோதரர்களே! நானும் சிந்திக்கிறேன், நம்மில் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நாம் ஏன் இறைவனின் அன்பிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறோம்? எல்லாப் புறங்களிலும் துன்பங்கள் ஏன் சூழ்ந்துக் கொண்டிருக்கின்றன? காபிர்கள் இறைவனை வழிபடாதவர்கள் என்று யாரை நாம் சொல்கிறோமோ அவர்கள் நம்மை விட எல்லா விதத்திலும் ஏன் மோலோங்கி நிற்கிறார்கள்? இறைவனுடை சட்டத்துக்கு பணிந்து நடப்பதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கும் நாம் ஏன் ஒவ்வொரு இடத்திலும் தாழ்வுற்றுக் கிடக்கிறோம்?

LinkWithin

Related Posts with Thumbnails