Tuesday, June 28, 2016

மனிதம் இன்னும் மரிக்கவில்லைஎன்று !

கடையாலுமூடுக்கு போகும் வழியில் பல ஊர்கள்.
அவையெல்லாம் பாரதிய ஜனதா செல்வாக்கு பெற்ற ஊர்கள். சாலைகளில் நாம் பார்க்கும் பலரும் காவி வேட்டி அணிந்தபடிதான் காட்சி தருவார்கள்.
சாலை இரண்டாக பிரியும் ஒரு இடத்தில் சிலர் ஓரமாக நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள்.... நான் சொன்ன அடையாளங்களோடு.
தயங்கித் தயங்கி அவர்களிடம் கேட்டேன் ...
கடையாலுமூடுக்கு எப்படி போக வேண்டுமென்று .
நான் எதிர்பார்த்ததற்கு மாற்றமாக மிக பவ்யமாக ..

Friday, June 24, 2016

பாவ மன்னிப்பு (வீடியோ உரை)

"பாவ மன்னிப்பு" எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காமிற்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி ஷரஃபுத்தீன் உமரி.
  "எவர் ஒருவர் ரமளான் மாதத்தை அடைந்தும் அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்பு கோரவில்லையோ அவரும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாகட்டும்" என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் துவா செய்தபோது நபி (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறியதாகக் கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது. இதுவும் நமக்கு ரமலானின் துவாக்களில் பாவமன்னிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது:

Wednesday, June 22, 2016

உகாண்டாவில் முஸ்லிம்கள்....!

ராஜா வாவுபிள்ளை
ஆதிகாலத்தில் மதங்கள் இல்லாத மனிதர்களாகவே உகாண்டா மக்கள் வாழ்ந்து வந்தார்கள்.
அரசனே ஆளுபவனாகவும் ஆண்டவனாகவும் கொண்டாடப் பட்டான். அசையும் மற்றும் அசையா சொத்துக்களுக்கும் அரசனே அதிபதியாகவும் இருந்தான்.
18 ம் நூற்றாண்டின் மத்தியில் அரேபியர்கள் வியாபார நிமித்தம் வந்தபோது இசுலாமிய மார்க்கம் வேர்விடத்துவங்கியது.
ஐரோப்பியர்கள் 19 ம்நூற்றாண்டின் துவக்கத்தில் வரஆரம்பித்தார்கள். அப்போது புகாண்டாவின் அரசனும் கூட இசுலாம் மார்க்கத்தை ஏற்று நடப்பவராகவே இருந்தார்.
வெள்ளையர்கள் வரும்போதே துப்பாக்கியையும் பைபிளையும் கூடவே கொண்டுவந்தனர். அதன் தாக்கமும் ஊடுருவல் யுக்திகளும் முழுப்பரிணாம வளர்ச்சிக்கான ஆவனவும் இப்போதும் நடந்து வருகிறது.
இப்போதைய உகாண்டாவில் மக்கள்தொகையில் தோராயமாக 30% முஸ்லிம்கள் இருக்கிறார்கள். முன்னால் வாழ்நாள் அதிபர் ஈத் அமீன் காலத்தில் ஐக்கிய முஸ்லிம் நாடுகள் சபையில் முழு அங்கத்தினராக சேர்க்கப்பட்டு இன்றும் தொடர்கிறது.

Tuesday, June 21, 2016

இஃதிகாஃப் எனும் இறைதியானம்! (பிறை-17)


மீண்டும் ஒரு ரமளான்: பிறை 17
இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அந்த வரம்புகளை மீற முற்படாதீர்கள். (அல்குர்ஆன் 2:187)
இஃதிகாஃப் எனும் பள்ளிவாசலில் தங்கி இருந்து இறைவணக்கத்தில் ஈடுபடுவது நபி (ஸல்) அவர்களின் சிறப்புமிக்க வழிகாட்டலாகும். ரமளான் மாதம் ரமளான் அல்லாத மாதங்களிலும் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம். நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்திக்காட்டிய இஃதிகாஃப் எனும் இறைவணக்கம் பற்றிய தெளிவான அறிதலோ ஆர்வமோ மக்களிடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு மிகக் குறைந்த முஸ்லிம்களே இவ்வணக்கத்தைக் கடைபிடிக்கின்றனர்.

Thursday, June 16, 2016

உனக்கே புகழ் யாஅல்லாஹ்

உனக்கே புகழ் யாஅல்லாஹ்

அல்லாஹ் அல்லாஹ் யாரஹ்மானே - என்
மனதில் நிறைந்து வாழ்பவனே !
தொழுது பிராத்தனை செய்தாலும் - ஒர் 
அடியானாய் என்னை மதிப்பவனே !
நோன்பை தந்து எனக்காக - தன்
சுவர்க்கக் கதவை திறப்பவனே !
தராவிஹ் தொழுகை தவத்தாலே -தன்
சுவர்க்க வழியை காட்டுபவனே !
மனமோ பாவத்தை செய்யாமல் - என்
கல்பை காப்பாற்றும் வல்லவனே !

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 30. கை கழுவும் தினம்

கை கழுவுவது குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தி அக்டோபர் 15-ந் தேதி 'உலக கை கழுவும் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் காலையில் எழுந்ததும், கையைக் கழுவ வேண்டும் என்பதையே ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டிய முதல் செயலாக இஸ்லாம் கற்றுத் தருகிறது.
'உங்களில் ஒருவர் தூக்கத்தில் இருந்து எழுந்திருந்து பாத்திரத்திற்குள் கையை விடுவதற்கு முன்பு தன் இரு கைகளையும் மூன்று முறை நன்றாகக் கழுவிக் கொள்ளட்டும். ஏனெனில் இரவில் அயர்ந்த தூக்கத்தில் நமது கைகள் எந்த நிலையில் இருந்தது என்று நமக்குத் தெரியாது' என்பது நபிகளாரின் கூற்று.
ஒவ்வொரு நாளும் கை கழுவிய பின்னரே அன்றைய வாழ்க்கை நடைமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை 1,400 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் சொல்லித் தந்துள்ளது. இரு கைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உலக கை கழுவும் தினம் நமக்கு வலியுறுத்துகிறது.  முகம், பல், காது, கால்கள், மூக்கின் துவாரம் உள்ளிட்ட உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் தூய்மையாக வைத்திருத்தலை 'ஒளு' (அங்கத் தூய்மை) கற்றுத் தருகிறது.

Wednesday, June 15, 2016

யாவருக்கும் இந்த மாதம் ..6 மணி நேர வேலை தான் இங்கே


Iskandar Barak

வெயில் ....
மதியம் 12 மணி கத்தார் டைம் சைட்விசிட் போயிட்டு கொஞ்ச வேலயிருந்தது முடிச்சிட்டு கிரான்மால் போயிட்டு வரும் வழியில் பார்த்தால்....46 சி காட்டுது ...யப்பா கார்ல புல் ஏசியிலயே உள்ள உட்கார முடியல வெளி வெயிலின் தாக்கம் தெரியுது ...பட்
நோன்பு இதனால் எந்த அசைவையும் நமக்கு தரவில்லை தான் .............இருந்தாலும்

என்னவோ தெரியவில்லை...

எனது நண்பர்கள் நல்லவர்கள்.
இது என் கதையல்ல.
யாரையோ சொல்வதற்கு பதில் என்னையே சொல்லி இருக்கிறேன்.
கதையின் கரு...
ஏழைகளை அவமதிக்கக் கூடாது என்பதுதான்.
-------Abu Haashima


என்னவோ தெரியவில்லை...
திடீரென்று ஒரு செலவு வந்து விட்டது.
அவசரமாக பத்தாயிரம் ரூபாய் பணம் தேவைப்பட்டது.
அவ்வளவு பணம் புரட்டும் நிலையில் நான் இல்லை.
பணம்தான் என்னிடம் இல்லையே தவிர நிறைய நண்பர்கள் உறவினர்கள் இருந்தார்கள்.
ரொம்ப அன்னியோன்யமாகப் பழகும் சில நண்பர்கள் எப்போதும் என் மனக் கஷ்டங்களை கேட்டு ஆறுதலும் சொல்வார்கள்.
தைரியமான வார்த்தைகளைக் கூறி நம்பிக்கையூட்டுவார்கள்.
அவர்களில் சிலர் வசதிமிக்கவர்கள்.
உறவினர்களிடம் கேட்பதைவிட நண்பர்களிடம் கேட்டுப் பார்ப்போம் என்று நினைத்தேன்.
நிச்சயமாக உதவுவார்கள் என்று நம்பிக்கையோடு சாலமதிடம் கேட்கலாமா என்று யோசித்தேன் .
பத்தாயிரம் கேட்டால் அவன் மனது சங்கடப்படுமோ என நினைத்து
சாலமதிடம் ஐயாயிரமும் இஸ்மாயிலிடம் ஐயாயிரமும் கேட்பது என்று தீர்மானித்தேன்.
வழக்கம்போல் அன்னைக்கு காலையில் வாக்கிங் முடிச்சுட்டு சாயாக்கடை பக்கம் வந்தான் சாலமது.
என்னிடம் எப்போதும்போல் உற்சாகமாக பேசினான். அவன் வீட்டுக்கு கிளம்பும்போது ...

Tuesday, June 14, 2016

*அதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்:*


*அதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்:*

_சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுஹானல்லாஹில் அளீம்_

பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப்
புகழ்ந்து துதிக்கின்றேன். கண்ணியமிக்க
அல்லாஹ்வை துதிக்கின்றேன்.

*_சிறப்பு:மீசான் தராசில்அதிக கனமுள்ளது. நூல்:புகாரி. 66820._*

_2. சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி_

பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப்
புகழ்ந்து துதிக்கின்றேன்.

_*சிறப்பு:கடலின் நுரை அளவு பாவங்கள் மன்னிக்கப்படும். நூல்புகாரி: 6405*_

Saturday, June 11, 2016

புனித மாதத்திலுமா..

Malikka Farook

புனித மாதத்திலுமா
புலக்கடையில் புழக்கம்
தீமைகளை தூண்டுவிடும்
வதந்திப்பெட்டியோடு பழக்கம்..

புண்ணாக்குகள் விற்பதற்க்கும்
புதிய யுக்தியாய்
பெண்ணாடைக்குறைப்பு
விளம்பரங்கள்..
ஆகா நிகழ்ச்சிகளைக்கண்டு
அழுது வடியும்
நேரத்தில் தொழுது வணங்குங்கள்
அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்..

ஆளாளுக்கு சொல்லும்
மார்க்கவுரைகளையும்
மனதை திசை திருப்பயெண்ணுவதெல்லாதினையும்
அமத்திப் போடுங்கள்..

Wednesday, June 8, 2016

மனிதம் மதிக்கத்தக்கவை


Iskandar Barak
இன்று நடந்தது .....மதியம் ஹெட்ஆபீஸ் போகலாமென போகிற வழியில் ஹெட்ஆபீஸ் அருகில் லுஹர் மதியத்தொழுகைக்கு நேரமாகிவிட்டதால் ....அங்கே ஒரு கத்தர்காரர் வீட்டில் வேலை செய்யும் நண்பரோடு தொழுக போனேன் ....தொழுது முடித்து உட்கார்ந்திருக்கும் போது
எங்களுக்கு முன் வரிசையிலியிருந்து தொழுதுவிட்டு வந்த ஒரு கத்தர் அரபியை கண்டதும் இந்த நண்பர் எழுந்து கைகொடுக்க முயற்சித்தபோது அவரோ இவரை வேண்டாம் உட்காரென தோளை பிடித்து உட்காரவைத்து விட்டு இவரிடம் சகஜமாய் கை கொடுத்தும் தெரியாத என்னிடமும் கைகொடுத்து
கைபஹாலுக்
ரமளான் கரீம் குல்லுசனா அன்துல் பில்ஹைர் ..னு
சொல்லிட்டு சந்தோஷமா புன்னகைத்து போனார்

Sunday, June 5, 2016

மகத்தான ரமலான் நோன்புக்காலம் ...

மகத்தான ரமலான் நோன்புக்காலம் ...
J Banu Haroon
================================
தனித்திருக்கும் வேளை ....
பசித்திருக்கும் வேளை ...
விழித்திருக்கும் வேளை ...
---- நோன்பின் காலங்கள் ...
கூட்டமாக பெண்களின் ...
பள்ளித் தொழுகைகள் ...
இளசுகளின் பைக் உறுமல்கள் ...
---- தராவிஹ் இரவுகள் ...

அத்தனை பேருமே மதிக்கும் மாண்பான செயல் நோன்பு.

Iskandar Barak


இன்று ...அரப் நாட்டை பொறுத்தவரை அரபிய மாதமான ஷஃபான் மாத பிறை 29 ம் நாள்
இரவு 30 வது நாளை எதிர்நோக்கும் இரவென்பதால் இந்த இரவுக்குப்பெயர்
யவ்முஷ் ஷக் .....அதாவது
விடியும் நாள் இதே ஷஃபான் மாத 30 ம் நாளா அல்லது அடுத்த மாதமான ரமளான் மாத முதல் நாளா யென்ற சந்தேகமிருப்பதால் இதற்கு சநதேகத்திற்குரிய இரவு சந்தேகத்திறகுரிய நாள் யென அழப்பதுண்டு....காரணம்

அரபி தேதியில் 31 யென்பதே கிடையாது ...29 ம் 30 மாகவே மாதங்கள் முடிவடைவதால்
ஆங்கில தேதியின் கணக்குப்படி வருடத்திற்கு 11 நாட்கள் குறைவாகவே வருகிறது ..............ஆகவே
இன்று இரவு 99 சதவீத நண்பர்களின் எண்ணப்படி ..பிறை பார்க்கப்பட்டு முதல் நோன்பு வைப்பதற்குரிய ரமளான் முதல் நாள் வாய்ப்பே அதிகமென படுகிறது

LinkWithin

Related Posts with Thumbnails