Thursday, July 27, 2017

*நபிகளார் சொன்ன* *கண்ணாடிப் பாடம்*

அந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி. அடிக்கடி அதைப் பார்ப்பார். பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார்.
பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறுகுறுப்பு…!
‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான் இருக்கிறது? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே!. ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’ அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
பெரியவரை நெருங்கினான்.
“ஐயா…!”
“என்ன தம்பி?”
“உங்கள் கையில் இருப்பது கண்ணாடிதானே?”
“ஆமாம்!”
“அதில் என்ன தெரிகிறது?”

Tuesday, July 25, 2017

இவருடைய கொள்கை நுழையாத நாடே உலகில் இல்லை.

உலகின் எந்த பகுதியிலும் ஒரு தலைவர் இறந்து விட்டால் அவர் கொள்கையை காப்பாற்ற இன்னொரு தலைவரை தேர்வு செய்வார்கள்.
தலைவரை தேர்வு செய்வதற்குள் பலவிதமான போட்டிகள் நிலவும், இதை தான் உலகம் பார்த்து வருகிறது.
1400 ஆண்டுகளுக்கு முன்பு மக்காவிலும், மதீனாவிலும் ஓர் தலைவர் வாழ்ந்தார். அவர் மரணித்து 1400 ஆண்டுகள் ஆகி விட்டது.
ஆனால் அவர் விட்டு சென்ற கொள்கை அழிந்து விடவில்லை, மாறாக பிரம்மாண்டமாக வளர்ந்து உலகம் முழுவதும் பரவி உலகின் 200 கோடி மக்களை வென்றெடுத்துள்ளது.

Monday, July 24, 2017

கந்திரமே உந்தன் விலை என்னவோ?

இறைவனது படைப்பில் அனைவரும் சமமே! உயர்வு தாழ்வு சொல்லுதல் பாவம். இதுபோன்றவை எல்லாம் நன்மக்கட்கு மட்டும் சொன்னதோ? இல்லை, அனைவர்க்கும் சொல்லப்பட்டது. ஆனாலும் தன்னை சுற்றி இருப்பவர்கள் முட்டாள்களாக இருக்க விரும்புபவர்கள் அடிமுட்டாளாகவே இருப்பார் எனபது எனது எண்ணம்.

Sunday, July 16, 2017

பாதை ….!

ஆசையின் பாதை அலைக்கழிக்கும் 
குற்றத்தின் பாதை குறுகுறுக்கும்
பொறாமையின் பாதை அழிவாகும் 
வெறுப்பின் பாதை பகையாகும்
அன்பின் பாதை அறமாகும்
பண்பின் பாதை குணமாகும்
முயற்சியின் பாதை வெற்றியாகும் 

Saturday, July 15, 2017

யார் மணப்பெண்?

யார் மணப்பெண்?

       அப்துல் கரீம்    

மனிதன் ஒரு கூட்டுப் பிராணி. சமூகத்துடன் கூட்டாக வாழ்வதையே விரும்புபவன். மற்ற மனிதர்களின் தொடர்பில்லாமல் தனிமையில் வாழ வேண்டும் என எந்த ஒரு மனிதனும் எண்ணுவதில்லை. தனது தனிமையை தவிர்ப்பதற்காக திருமணம் செய்து, குழந்தைகள் பெற்று சமூகத்துடன் தன்னை ஐக்கியமாக்கிக் கொள்கிறான்.

அனைத்து மனிதர்களும் திருமணத்தை விரும்பவே செய்கிறார்கள் என்றிருந்தாலும் துறவறம் என்ற பெயரில் யாரும் திருமணம் செய்யாமல் இருக்கக் கூடாது என இஸ்லாம் போதிக்கின்றது.

ஒவ்வொரு மனிதரும் கண்டிப்பாக திருமணம் செய்ய வேண்டும் என இஸ்லாம் கூறுவதோடு, திருமணத்தைப் புறக்கணித்து துறவி வேடமிடுபவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றது.

Thursday, July 13, 2017

நிலையானவனே, நிலைமைகளை மேம்படுத்திச் சமுதாயத்திற்கு நிம்மதியை அருள் செய்வாய்...

இறைவா,
இன்னமைதி (இஸ்லாம்)மார்க்கத்தை எல்லாருக்கும் பொதுமைப்படுத்திப் பூரித்தாய்....
பகைவருக்கும் அருளாய்த் திகழும் பண்பாளரை -அண்ணல்நபி(ஸல்) அவர்களை-அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையாய் அளித்து உவந்தாய்...
நாநிலத்தாருக்கொரு நல்லுபதேசமாய் இறுதித் திருமறையாகப் புனிதக் குர்ஆனைக் கொடுத்துப் புகழுற்றாய்...
மனிதனுக்குப் பகுத்தறிவும் சுதந்திரமும் கொடுத்து அவனை மாண்புமிகு மனிதனாக்கினாய்....

இனிய திசைகள்

பேரன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.வப.)
இறையருள் நம் அனைவர்மீதும் பொலிவதாக...​
இனிய திசைகள் ​
​ஜூன்​'2017 இதழைப் படிக்க அட்டைப் படதின்மீது  “CLICK"செய்க....
 தங்கள் வசதிக்காக PDF இணைப்பும் உள்ளது.

Wednesday, July 5, 2017

படைப்பின் விசித்திரம்...!

இரண்டாம் வகுப்பு பயின்ற வேளையில் தமிழ் புத்தகத்தில் படித்த பாட்டு இது! அதற்கு கதை வடிவம் கொடுக்கிறேன்! அதோடு இந்த பாட்டை அழகாக படித்து காண்பித்து இன்றளவும் இந்த பாட்டின், கதையின் சாரம் என்னுள் நின்று நிலைத்திருக்க காரணமான ஆசிரியை பெருந்தகை மணிமேகலை அவர்களை நன்றியுடன் பெருமிதம் கொண்டு நினைவு கூறுகிறேன்..!
வணிகர் ஒருவர் தனது வணிக பொருள்களை எல்லாம் வியாபாரம் செய்துவிட்டு மதிய வேளையில் தான் கொண்டு வந்த உணவை ஒரு அரச மரத்தடியின் கீழ் அமர்ந்து உண்கிறார். அப்போது அவர் அமர்ந்திருந்த இடத்தின் அருகே ஒரு காய்கறி தோட்டம்! அதில் நன்கு பெருத்த பூசணிக்காய் ஒன்று விளைந்து அதன் கொடியின் அடியில் இருந்தது!

Monday, July 3, 2017

ஒலியின் சப்தத்தை குறைத்துக் கொள்வது நம் அனைவருக்கும் நல்லது.

அனைவரிடத்திலும் செல் போன்கள் உள்ளது. அலாரங்களும் வீடுகளில் உள்ளது. எனவே  ஒலி அளவுகளை குறைத்துக் கொண்டு மற்ற மதத்தவர்களின் அசௌகரியங்களுக்கு மதிப்பு கொடுக்கலாம். பரீட்சை நேரங்களில் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். வயதானவர்களுக்கும் இதனால் சிரமங்கள் ஏற்படுகிறது. இதனை அனைத்து மதத்தவர்களும் கடைபிடித்தால் நல்லது.

சில முஸ்லிம் கிராமங்களில் மவுலூது என்ற பேரிலும் ராத்தீப் என்ற பேரிலும் பயான் என்ற பேரிலும் கூம்பு வடிவ ஸ்பீக்கர்களில் விடிய விடிய அதிக சப்தத்தோடு ஒலிபரப்புகிறார்கள். ஒலியின் சப்தத்தை குறைத்துக் கொள்வது நம் அனைவருக்கும் நல்லது.

LinkWithin

Related Posts with Thumbnails