Tuesday, January 31, 2017

அஹமது ஹுஸைன் தீதாத், ஓர் ஆச்சர்யக் குறி!

Yembal Thajammul Mohammad 



அஹமது ஹுஸைன் தீதாத், ஓர் ஆச்சர்யக் குறி!


இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்; தென் ஆஃப்ரிக்க எழுத்தாளர்,பேச்சாளர்.
இஸ்லாமிய அழைப்பாளர் என்று உலகெங்கும் அறியப்பட்ட ஒற்றை மனித ராணுவம்!
அந்த வகையில் அரை நூற்றாண்டு காலம் கிறிஸ்தவ உலகை அதிர வைத்தவர்!
ஆறாம் வகுப்புக்கு மேல் முறையாகப் படிக்க இயலாத அவர், தன் முயற்சியால் கற்றவற்றைக் கசடறக் கற்றார்.
அவர் பேசிய ஆற்றொழுக்கான ஆங்கிலத்தின் மூலம் இஸ்லாமிய தீபத்தை எங்கெங்கும் ஏற்றிவைத்தவர். அது இன்றும் ஒளிவீசிக் கொண்டிருப்பது.
ஒரு மனிதர் எந்த மேடையில் எப்போது பேசினாலும் அப்படியே அச்சேற்றி விட முடியாது.ஆனால் அஹமது தீதாத் அவர்களின் பேச்சுக்கு அந்த மதிப்பு இருந்தது.

Monday, January 30, 2017

முஹம்மதெனும் ஒளியெடுத்து முஹப்பத்தால் முகம் துடைத்து ...

Abu Haashima
@ படம் ... மூணாறு
சமீபத்தில் மூனாறு மலைக்கு சென்று வந்தோம்.
செல்லுமிடமெல்லாம் பசுமை பாய் விரித்திருந்தது.
சொகுசுக் காரில் மலை உச்சிக்கு செல்வது சுகமாகவே இருந்தது.
உச்சியில் நின்று மலையின் கீழே எட்டிப் பார்த்தால்
ஊரையே மலை சூழ்ந்திருந்த அழகான காட்சியில் மனம் லயித்துப் போனது.
அல்லாஹ்வின் அற்புத படைப்பாற்றலுக்கு நன்றி சொல்லிக் கொண்டோம்.

அன்று ...
மக்காவின் வீதிகளில் மாண்புகளின் நிறை மனிதர் முஹம்மது ரஸூலுல்லாஹ்
நடந்து சென்றபோது மக்கத்து குறைஷிகள் கல்லால் சொல்லால் நோவினைசெய்தார்கள் .
மனம் வேதனித்த பெருமானார் மக்காவின் சற்று தொலைவிலுள்ள தாயிப் மலைக்கு சென்று
அங்குள்ள மக்களையாவது இஸ்லாத்தின் பக்கம் அழைக்கலாமென்று முடிவு செய்தார்கள்.
தனது வளர்ப்பு மகன் ஜெய்தை அழைத்துக் கொண்டு தாயிப் நகருக்கு நபிகளார் சென்றார்கள்.
தாயிப் நகரை
அப்துல் யஹ்லீல்
மஸ்வூது
ஹபீப்
ஆகிய மூன்று மூர்க்கமுள்ள சகோதரர்கள் ஆட்சி செய்து வந்தார்கள்.

Sunday, January 29, 2017

நேற்றைய துன்பங்களை நினைத்து


தமிழ் பிரியன் நசீர்

நேற்றைய துன்பங்களை
நினைத்து
இன்றைய பொழுதினை
கவலைகளுக்குத்
தாரை வார்த்து விடாதே
நாளையென்பது
விடியலாம் அல்லது
விடியாமலும் போகலாம்
இன்று இந்த நிமிடங்கள்
உனக்கான இனிய சந்தர்ப்பம்
நழுவ விடாதே
விட்ட நொடிகளை
விழுந்து தொழுதாலும்
திரும்பப் பெற்றிட இயலாது
முடிந்தால் மகிழ்ச்சியை
பிறருக்கும் வழங்கி
நீயும் மகிழ்ந்து வாழப் பழகு ..!!

தமிழ் பிரியன் நசீர்

Thursday, January 26, 2017

ஏகனே இறையோனே ....!

ராஜா வாவுபிள்ளை
ஆதியும் அறிந்தேன்
அந்தமும் அறிவேன்
வாழ்கையை அறிந்தேன்
வணக்கத்தை அறிவேன்
வம்புகள் அறியேன்
வாய்மை அறிவேன்

இது தான் வாழ்க்கையா..

Saif Saif
சில நேரங்களில் நாம் ஒழுங்காக தானே இருக்கிறோம் ..
அல்லாஹ் நம்மை ஏன் தான் இப்படி சோதிக்கிறானோ ..
அநியாயம் பண்றவனெல்லாம் நல்லா தானே இருக்கான் ..
என்று நினைக்க தோன்றும் ..
ஆனால் அது உண்மையல்ல.
வெளி தோற்றத்தில் அவ்வாறு இருக்குமேயன்றி உண்மை அதுவல்ல ..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருந்து கொண்டு தானிருக்கும் .
இன்னும் நல்லவர்களுக்கான பெரும்பாலான தண்டனைகள் உடனுக்குடன் அவனுக்கு கொடுக்கப்பட்டு அவன் வழி தவறா வண்ணம் இறைவன் பார்த்துக்
கொள்கிறான் .
அவன் விரும்பாத மற்றவர்களை கண்டு கொள்ளாமல் விட்டு கடைசியில் கையை விரித்து விடுகிறான் ..

Tuesday, January 24, 2017

தோழரே...........................!

தோழரே...........................!
=====================Yembal Thajammul Mohammad
தொல்காப்பியர் காலத்தில் தலைவன் / தலைவிக்குத் தொடர்பிலிருந்த பன்னிரண்டு வகை நட்பினரில் “தோழர்,தோழி” முதலிடம் பெற்றவர் ஆவர்.
“தோழன்,தோழி” எனும் சொற்கள் சங்ககாலத்தில் பெருமளவில் வழக்கத்தில் இருந்தவை.
மதீனாவைத் தலைநகராகக் கொண்டு அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஒரு சாம்ராஜ்யத்தையே ஆட்சி செய்த காலத்திலும் அவர்களைப் பின்பற்றியோர் அவர்களுடைய “தோழர்கள், தோழியர்” என்றே அறியப்பட்டனர்.

Wednesday, January 18, 2017

தாடி வளர்ப்பதின் நன்மைகள் பற்றி இஸ்லாம்.

தாடி வளர்ப்பதின் நன்மைகள் பற்றி இஸ்லாம்.

இன்று தாடி வைக்கும் ஆண்களின் எண்ணிக்கை முஸ்லிம்கள் மத்தியிலும் குறைந்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இன்றைய இளைய சமுதாயத்தினர் உலக நடைமுறைக்கு அமையவே (fashion) தாடி வைக்கின்றனர். ஒவ்வொரு விதமான நவீன வடிவங்களில் (styles) தலை முடிகளை வெட்டுவது போல் தாடிகளையும் ஒவ்வொரு நவீன வடிவங்களில் வடிவமைத்து அந்நிய கலாசாரத்திற்கு ஒப்பாக நடந்து கொள்கின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) ஆதாரம்: அபூதாவூத் 3512
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள், தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரழி) , ஆதாரம்: புஹாரி 5892

Thursday, January 12, 2017

ஜும்மா முபாரக்...


ஜும்மா முபாரக்...
Sirajudeen Bin Mustafa Kamal
வெள்ளிக்கிழமை ஆனால் முஸ்லிம்களில் சிலர் ஜும்மா முபாரக் என்று சொல்வார்கள்... அப்படி என்றால் என்ன? அது எப்பொழுது உருவானது என்று என் ஊரைச் சேர்ந்த, எனது நண்பர் ஷேக் அஹமது எஸ்எஆர் கேட்டிருந்தார்... அவருக்கான விளக்கப்பதிவு. உங்களுக்கும் உதவக்கூடும் நண்பர்களே..
1989 ம் வருடம்...
மார்கழிப் பனிபொழியும் டிசம்பர் மாதம்...
ஒரு வெள்ளிக்கிழமை...

Thursday, January 5, 2017

உதவி செய்ய தூண்டும் பிரதமர்...

'
'உண்ணுங்கள், பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள்'' என்னும் இறைமறை வசனங்களை நினைவூட்டும் விதமாக ஐக்கிய அரபு நாடுகளில்
2017 ம் வருடம் முழுவதும் Year of Giving என்று பெயரிட்டு பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக யுஏஇ துணை அதிபர் மற்றும் துபாய் பிரதமரான ஷேக் முகமது பின் ராசித் அல் மக்தூம தெரிவித்தார்...

Wednesday, January 4, 2017

இறைவா!

இறைவா!
இயலாமையிலிருந்தும்
சோம்பலிலிருந்தும்
கோழைத்தனத்திலிருந்தும்
கருமித்தனத்திலிருந்தும்
தள்ளாமையிலிருந்தும்
மண்ணறையின் வேதனையிலிருந்தும்
உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.
இறைவா!
உள்ளத்தில் உன்னைப்பற்றிய அச்சத்தைஏற்படுத்தி,
அதைத் தூய்மைப்படுத்துவாயாக!
அதைத் தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன்.
நீயே அதன் உரிமையாளன்; அதன் காவலன்.

ஜும்ஆ உரை

ஜும்ஆ உரை
- வர்தா புயல் போன்று ஒரு முகமது நபி(ஸல்) அவர்கள் கால சம்பவம் : ஒரு ஜும்மா உரையில் நபி(ஸல்) அவர்களிடம் தோழர் ஒருவர் மழைக்காக பிராத்திக்க கேட்டு நபி அவர்கள் பிராத்தனை செய்கிறார்கள், அடுத்த வாரம் ஜும்மா அன்று அதே நபி தோழர் மழையை நிறுத்த பிரதிக்குமாறு கேட்கிறார்கள். அப்பொழுது அவர் மக்களுக்கு ஏகத்துவம் பற்றியும் பாவம் பற்றியும் எச்சரிக்கை செய்யும் குர்ஆன் வசனங்களை கூறி பின் அல்லாஹ்விடம் பாவ மண்ணிப்பு தேடி பிறகு மழை நிற்க பிராத்தனை செய்கிறார்கள்.

பற்று வேறு வெறி வேறு.

ஒரு முறை புசைலா என்ற பெண்மணி நபி அவர்களிடம் வந்து “இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா” என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் “தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இனவெறி அல்ல. மாறாக தன் சமூகத்தைச் சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி” என்றார்கள்.
- நூல்: அஹ்மத்
இறைவன் ஞானம் வழங்கிய எந்த இஸ்லாமிய அறிஞரும் இன மத வெறியர்களாக இருக்கவில்லை..
- உலக தீவிரவாத்தில் மிக சொற்பமாக இஸ்லாமிய தீவிர வாதிகள் இருந்த போதிலும், ஐ.எஸ் உட்பட அனைத்து தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து அறிஞர்களும் பிரச்சாரம் செய்பவராகவே இருக்கின்றனர்.

Sunday, January 1, 2017

விடியும் பொழுதுகளில்

by. Gajini Ayub

விடியும் பொழுதுகளில்
வழிமாறா வழித் தடங்கள் வேண்டும் இறைவா ! 
புற்றீசல்களாய் பொய் நிலை புதிர்வாழ்க்கை
எதிர்திசையில் என்னை மறிக்கின்றன மண்ணில் தினந்தோறும் ..
எப்படி வெல்வேன் 
என்று மெய்ப்பட 
வழிதேடி விழி நோகி
வீழ்ந்து களைத்திட்டேனே
வீண்கழிந்த என் நாட்களின் பாவங்கள்
விடைகளின்றி தவிக்க
காணும் மெய்வாழ்க்கை கண்டுணர்ந்து வாழ
இனியேனும் மெய் தருவாய் நிறைவாய்
நின்றுணர்ந்து நீண்டழும் என் விழிகளுக்கு
விடை தா என் இறைவா !
ஏங்கித் தவிக்கும் ஏழை இதயத்திற்க்கு

இனிய வழி திற என்இறைவா !

Gajini Ayub

LinkWithin

Related Posts with Thumbnails