Monday, July 27, 2015

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் மறைவுக்கு இரங்கல்


மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் மறைவு செய்தி ஒட்டு மொத்த இந்திய மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி விட்டது.

நமது நாட்டில் எத்தனையோ குடியரசு தலைவர்கள் அவர்களது பதவி காலத்தில் தங்களது குடும்ப உறுப்பினர்கள்,உறவுகள்,நண்பர்கள் வட்டமென ஒரு பெரும்படையுடன் ராஷ்ட்ரபதி மாளிகையில் வருட கணக்கில் தங்கி அரசு பணத்தில் சுகபோகமாக வாழ்ந்த நிலையில் அப்துல் கலாம் மட்டுமே தனியொரு ஆளாக தங்கியிருந்து தமது பதவி காலத்தை நேர்மையாக முடித்தார்.

Sunday, July 26, 2015

என்னை யாரென்று எண்ணிஎண்ணி நீ பார்க்கிறாய்.!

தன்னை ஒரு நிமிடம் எண்ணிப்பார்
உன்னைக் கவர்ந்த ஒவ்வொன்றும்
உனக்கெதிராய் சாட்சி சொல்லும்


மண்ணைக் கவ்வும் மனிதர் நாம்
மறுமைவாழ்வை மனதில் வை
மாயவாழ்வில் சிக்குண்டு
தன்னை அறியா நிலையினிலே
தவறி விழாதே வலையினிலே

Tuesday, July 21, 2015

இறைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு !

இறைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு !
தாயை விட இரக்கமுள்ளவன், தந்தையை விட நெருக்கமுள்ளவன், உறவுகளை விட உயர்வானவன், நண்பர்களை விட நாணயமானவன், மனிதர்களின் உற்ற தோழமைகள் எல்லாவற்றிற்கும் மேலானவன் - அன்றிலிருந்து இப்படியே சொல்லிக் கொண்டிருக்கிறான் எல்லோருக்கும் மேலாய் இருந்து கொண்டிருக்கும் ஒருவன். சரியான புரிதல் இல்லாததினால், காது கொடுத்து கேட்டு என்ன சொல்ல வருகிறான் என்பதையே புரிந்து கொள்ள முடியாத பெருங்கூட்டமாய் உலக மனிதர்கள். என்னதான் பெரிய தப்பு தவறு செய்திருந்தாலும், கண்டித்து விட்டு, முந்தானையில் நனையும் தன் கண்ணீரை துடைத்து விட்டு, பெற்ற பிள்ளையை அருகே அழைத்து, தலையை கோதி விட்டு, முகம் தடவி, உச்சி மோந்து போகட்டும் கண்ணே, இனி அப்படி செய்யாதீங்கடா என் கண்மணி ராசா என்று தளுதளுத்த குரலில் உலகத்தாய் ஒருத்தி சொல்ல முடியும் என்பது சாத்தியம் என்றிருந்தால்...

Thursday, July 16, 2015

ஸக்காதுல் ஃபித்ர் ?!

ஸக்காதுல் ஃபித்ர் ?!

‘ரமழானில் இருந்து விடுபடுமுகமாக ‘ஸகாத்துல் பித்ரை’ அனைத்து மனிதர்கள் மீதும் நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.

நோன்பாளி வீண் விளையாட்டுக்கள், தேவையற்ற பேச்சுக்கள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தால், அதற்குப் பரிகாரமாக அமைவதற்காகவும் ஏழைகளுக்கு உணவாக அமைவதற்காகவும்’ ‘ஸகாதுல் பித்ரை’ நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.

‘யார் பெருநாள் தொழுகைக்கு முன்னர் அதை வழங்கினாரோ, அது ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘ஸகாத்’தாகும். யார் தொழுகைக்குப் பின்னர் அதை வழங்கினாரோ அது (சாதாரணமாக) வழங்கப்பட்ட ஒரு தர்மமாகக் கணிக்கப்படும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அபூ தாவூத், இப்னு மாஜா).

Wednesday, July 15, 2015

மக்கா நேரலை (Makkah Live)

வாழ்நாளில் இரு முறை தான் ரஸூல் அவர்கள் உட்கார்ந்து தொழுதிருக்கிறார்கள்..

 நபிகள் காலத்தில் ரஸூல் அவர்கள் ஒருமுறை போர்களத்தில் இருந்து திரும்பி வரும் போது குதிரையில் இருந்து தவறி விழுந்து முட்டியிலும்,விலா எலும்பிலும் அடிபட்டு கட்டு போடப்பட்ட நிலையில் அமர்ந்து தொழுதிருக்கிறார்கள்..

இன்னொரு முறை சஹராத்து ஹாலில் இருக்கும் போது திடீரென நினைவு வந்து விழிப்பு வந்ததும் இது எந்த வக்து என்று அருகில் இருந்த அலி(ரலி) அவர்களிடம் கேட்கிறார்கள்.

இது லுஹருடைய நேரம் என்று சொன்னதும் என்னை பள்ளி வாசலுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றுச் சொல்கிறார்கள்..

Tuesday, July 14, 2015

என்னால் இயன்ற அறம்!


வெள்ளிக்கிழமைகளில் குத்பா தொடங்குவதற்குமுன் வாடிக்கையாக பள்ளிவாசலின் முன்பகுதிகளை மிகவும் சிரத்தையுடன் பெருக்கிக் கொண்டிருப்பார் அவர். மக்கள் கூட்டம் பெரிதாகச் சட்டை செய்யாமல் ஸலாம் மட்டும் கூறிவிட்டு அவரைக் கடந்து உள்ளே சென்றுவிடும்.

அவரும் பதில் உரைத்துவிட்டு கடந்து செல்வோருக்கு வழிவிட்டுவிட்டு தம் பணியைத் தொடர்வார். சரி, பள்ளிவாசல் நிர்வாகம் வேலைக்கு அமர்த்திய துப்புரவுத் தொழிலாளி போலும் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தோம். அவரது வயதும் தோற்றமும் பரிவு ஏற்படுத்தும் ரகம். இருந்தாலும் மெனக்கெட்டு யாரும் நெருங்கிச் சென்று அவரிடம் பேசியதில்லை.

நீங்காதிருக்கும் நிம்மதியும் பெருமிதமும்...

இறைவா,
உன் பெருங்கருணை
இல்லை என்றால்,

எமக்குக் கிடைத்திடுமா
இந்தப் பெரும்பேறு?

அண்ணல் நபியின்
அடியொற்றி நடைபயிலல்,
கண்ணொளிக்குக்
குர்-ஆன் என்னும்
கைவிளக்கு,
மார்க்கமெனும்
பென்னம் பெரிய
பெறற்கரிய திருவீடு...

Monday, July 13, 2015

அரேபியாவின் இஸ்லாமிய வசந்த வரலாற்றில் ஒருநாள் !

அரேபியாவின் இஸ்லாமிய வசந்த வரலாற்றில் ஒருநாள் !

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாயிப் போர் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.
கூடவே அலீ ( ரலி ) அவர்களும் அண்ணலோடு அணிவகுத்து வந்து கொண்டிருந்தார்கள்.

அன்புக்குரிய மருமகனும் கண்மணி மகள் பாத்திமாவின் அருமைக் கணவருமான அலீ ( ரலி ) அவர்களை தனியே அழைத்துச் சென்ற பெருமானார் ஆன்மீக ரகசியங்கள் பலவற்றை அலீ அவர்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.

அதைக் கண்ட உமர் ( ரலி ) அவர்கள் ...
" யா ரசூலல்லாஹ் ! தாங்கள் அலீ ( ரலி ) அவர்களுக்கு மட்டும் ரகசியமாக ஏதாவது போதிக்கிறீர்களா ?" என்று கேட்டார்கள்.
" நான் ஒன்றும் போதிக்கவில்லை.
அல்லாஹ்தான் போதித்தான் " என்று பதிலுரைத்தார்கள் நபிகள் ( ஸல் ) அவர்கள்.
அதாவது ....
நானாக எதுவும் சொல்லவில்லை. அல்லாஹ்வின் நாட்டம் அலீ அவர்களுக்கு சில ஆன்மீக ரகசியங்களை சொல்ல வேண்டுமேன்பது. அவன் நாட்டப்படியே அது நிகழ்ந்தது என்பது அதன் விளக்கம்.

இப்படி அண்ணலாரிடமிருந்து ஆன்மீக ரகசியங்களை எல்லோரும் பெற்று விடவில்லை. அல்லாஹ் நாடியவர்களுக்கு மட்டுமே அது கிடைத்தது. அதனால்தான் ...
" நான் ஞானத்தின் பட்டணம். அலி அதன் தலைவாசல் " என்றார்கள் அண்ணல் நபிகளார் .

ஞானத்தின் வரிசை அலீ அவர்களிடமிருந்துதான் ஆரம்பமாகிறது.
அதனால்தான் அலீ அவர்கள் இம்மை வாழ்க்கையில் பற்றில்லாமல் வாழ்ந்தார்கள். எல்லோருக்கும் புரியாத பல மறை ஞானங்களை அறிந்திருந்த காரணத்தால் அபூபக்கர் ( ரலி ) அவர்களுக்கும் உமர் ( ரலி ) அவர்களுக்கும் ஆலோசனைக் கூறும் இடத்தில் அலீ இருந்தார்கள்.

இஸ்லாம் மதுவை முற்றிலுமாக ஒழித்ததுபோல சாதீய ஏற்றத்தாழ்வுகளையும் ஒழித்தது.

இஸ்லாம் மதுவை முற்றிலுமாக ஒழித்ததுபோல
சாதீய ஏற்றத்தாழ்வுகளையும் ஒழித்தது.

நவீன தகவல் தொடர்புகளற்ற அந்தக்காலத்திலேயே
இஸ்லாம் மூன்றே வருடங்களில் மது ஒழிப்பை சாத்தியமாக்கியதெனில்
அனைத்து படைபலங்களையும் பயன்படுத்தினால்
மூன்றே மாதங்களில் கடும் பிரச்சாரம் மற்றும்
விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் மனித மனங்களில்
மாற்றங்களைக் கொண்டுவர முடியும்

Sunday, July 12, 2015

விமானமேறி விட்டுப்போனவனே வா..

விமானமேறி விட்டுப்போனவனே வா.. (கவிதை) வித்யாசாகர்

ஒருமாதம் தான் விடுமுறையென்று
வந்துபோனாய்,
உடம்பெல்லாம் பூசிய மஞ்சள்போல எரிக்கிறாய்..

நீ தொட்ட
இடத்திலெல்லாம் சுடுகிறாய், சொன்ன
சொல்லின் நினைவாகக்கூட வலிக்கிறாய்..

நெஞ்சில் விம்மி விம்மி
நனைகிறது உன் நினைவு, நீளும் இரவெங்கும்
நீயில்லாது சுடுகிறது கனவு..

வெப்பத்தில் தகிக்கிறது வாழ்க்கை
வெளியே நின்றாலும், உள்ளே வந்தாலும்
உனக்காகவே வாசலில் நிற்கிறது மனசு..

Saturday, July 11, 2015

சமூக தளங்களில் தமிழக முஸ்லிம்கள்!

தமிழக முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கும் சக்தி எது என்றால், அது எதிரிகளின் ரகசிய திட்டமிடல்கள் என பலரும் கருதுவர்.

பொறுப்புணர்வோடு, பரந்த கண்ணோட்டத்தோடு உன்னிப்பாக ஆய்வு செய்தால் சமூக இணைய தளங்களில் பக்குவமற்ற சில முஸ்லிம் இளைஞர்கள் பதிவிடும் கருத்துக்கள்தான் பேராபத்தை விளைவித்துக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம்களின் நியாயங்களையும், உரிமைகளையும் வெளிக்கொண்டுவர ஊடகங்கள் இல்லையே என்ற பெரும் ஏக்கம் நிலவியது. அது ஒரு காலம். இன்று இணையதளம், வலைதளம், யூ டியூப் ஆகியவற்றைத் தாண்டி ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக இணையதளங்கள் வந்தபிறகு அந்த ஏக்கம் ஓரளவு தீர்ந்தது.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஸ்மார்ட்போன்கள் எல்லோரிடத்திலும் புழங்கத் தொடங்கியதன் விளைவு, யாரெல்லாம் சமூக இணையதளங்களில் கணக்குகளைத் தொடங்கினார்களோ அவர்கள் எல்லாம் தங்களை பத்திரிக்கை ஆசிரியர்களைப் போலவும், சமுதாயப் பிரதிநிதிகள் போலவும், ஆழமான சிந்தனையாளர்கள் போலவும் கருதிக்கொண்டு மனம்போன போக்கில் கருத்துக்களை வெளியிட துணிந்துவிட்டார்கள்.

    எந்த சமூகங்களிலும் இல்லாத அளவுக்கு உள்சண்டைகள், இயக்க மோதல்கள், சமூக இணைய தளங்களில் தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் நடக்கிறது. வேறு எங்கும் இதுபோன்ற அட்டூழியங்கள் இல்லை.

‎உள் சண்டைகள்‬


தமீமுன் அன்ஸாரிஅதன் விளைவு சிறிய விஷயங்கள் பெரிதுபடுத்தப்படுகின்றன. நான்கு சுவற்றுக்குள் பேச வேண்டிய விஷயங்கள் சந்திக்கு வருகின்றன. ஓரிறையைப் பற்றிப் பேசுபவர்கள் மத்தியில் ஓராயிரம் சண்டைகள் நடக்கின்றன.

‘‘பாவத்திலும், பகைமையிலும் உதவி செய்து கொள்ளாதீர்கள்’’ என இறைவன் குர்ஆனில் (17:36) அறிவுறுத்தியதை யாரும் கண்டுகொள்வதில்லை.

எந்த சமூகங்களிலும் இல்லாத அளவுக்கு உள்சண்டைகள், இயக்க மோதல்கள், சமூக இணைய தளங்களில் தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் நடக்கிறது. வேறு எங்கும் இதுபோன்ற அட்டூழியங்கள் இல்லை.

இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் கொண்ட தமிழ் பேசும் நல்லுலகின் நண்பர்கள், இதையெல்லாம் பார்த்து அதிர்ந்து போகிறார்கள். ‘இஸ்லாம் நல்ல மார்க்கம், ஆனால் முஸ்லிம்கள் சரியில்லை’ என்ற பெர்னாட்ஷாவின் கருத்து அவர்களுக்கு இவர்களால் நினைவூட்டப்படுகிறது.

நட்புகளை இழக்கும் வேதனை‬

இதைத் தாண்டி, பீதியடையும் அளவுக்கு சில முஸ்லிம் இளைஞர்களின் சமூக இணையதள பதிவுகள் இருக்கின்றன. சங்பரிவார் சக்திகளின் கருத்துகளுக்கு எதிர்வினை புரிகிறோம் என்ற பெயரில் நடுநிலையாளர்களை எதிரிகளின் பக்கம் தள்ளிவிடும் பாதகத்தை அரங்கேற்றுகிறார்கள்.

இந்தியாவில் 20 சதவீதமாக வாழும் நாம் தமிழகத்தில் 7 சதவீதமாக இருக்கிறோம் என்பதையும், நம்மோடு வாழும் பிற சமுதாய மக்களில் 95 சதவீதம் பேர் அன்பையும், நல்லிணக்கத்தையும் பேணுபவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளாமல் தாங்கள் சவூதியிலும், ஆப்கானிஸ்தானிலும் வாழ்கிறோம் என்ற கற்பனையில் பொறுப்பில்லாமல்; சிந்திக்காமல் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.

எதிரிகள் யார்? பொதுமக்கள் யார்? என பிரித்துப் பார்க்கும் அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள் சமுதாயத்திற்கு குரல் கொடுக்கிறோம் என்ற பெயரில் பிற சமூகங்களில் இருக்கும் நடுநிலையாளர்களையும் எதிரிகளாக்குகிறார்கள். இன்று தமிழகத்தில் பிற சமூகங்களில் இருக்கும் 95 சதவீத நடுநிலையாளர்களால்தான் சங்பரிவார் சக்திகள் ஒரு வட்டத்தை மீறி வளர முடியாமல் இருக்கிறார்கள் என்பதை மனசாட்சியோடு எண்ணிப் பார்க்க வேண்டும்.

‎மிகைப்படுத்துதல் நியாயமா‬?

இந்த நாடே இந்துத்துவ சக்திகளிடம் போய்விட்டது போலவும், நாட்டில் உள்ள பெரும்பான்மை இந்துக்கள் எல்லோரும் முஸ்லிம்களுக்கு எதிரிகளாக இருப்பது போலவும் சிலர் கருத்துக்களை விதைக்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள்தான் தங்களையும் அறியாமல் சங்பரிவார் சக்திகளின் சதிகளுக்கு வலு சேர்க்கிறார்கள்.

நமது இருப்பிடங்களுக்கு அப்பாற்பட்டு ‘‘பன்முக சமூகங்கள் வாழும் ஒரு உலகம்’’ இருப்பதையே மறந்துவிடுகிறார்கள். சமூக இணைய தளங்களில் பதிவு செய்யும் கருத்துக்கள் அனைவராலும் பார்க்கப்படுகின்றன என்ற சிறு விஷயத்தைக்கூட உணரும் நிலையில் அவர்கள் இல்லை.

‘உமக்கு எதில் தெளிவு இல்லையோ, அதில் கலந்து கொள்ளாதீர்’ என இறைவன் திருக்குர்ஆனில் (17:36) அறிவுறுத்துகிறான்.

ஆனால் ‘கருத்து பைத்தியங்களாக’ சிலர் உருவாகி முஸ்லிம் சமுதாயத்தை அழிவின் விளிம்பில் தள்ள முயற்சிக்கிறார்கள். தாங்கள் பதிவிடும் கருத்து எவ்வாறு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும், அதை பிற சமூக மக்கள் எவ்வாறு புரிந்துகொள்வார்கள் என்பதையும் உணர்வதில்லை. அப்படிப்பட்டவர்கள் சமுதாய நலன் குறித்த விஷயங்களில் மௌனமாக இருப்பதே அவர்கள் சமுதாயத்திற்கு ஆற்றும் சிறந்த பணியாகும்.

‎இறைவனின் எச்சரிக்கை‬

எங்கேயாவது ஒரு ஊரில் சமூகப் பதற்றம் ஏற்பட்டுவிட்டால் அது உடனே பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. பதட்டம் தூண்டப்படுகிறது. கள நிலவரங்கள் தெரியமலேயே மிகைப்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்டவர்களை திருக்குர்ஆன் பின்வருமாறு கண்டிக்கிறது.

“நம்பிக்கைக் கொண்டோரே! ஒருவர் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்”. திருக்குர்ஆன் (49:6)

ஆனால் பரபரப்பு செய்திகளைப் பரப்புவதில் இங்கே ஒரு போட்டியே நடக்கிறது. யாராவது ஒரு போலீஸ்காரர் அல்லது அதிகாரி முஸ்லிம்களுக்கு எதிரான அநீதி இழைத்துவிட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்க அல்லது அவரை சரிசெய்ய நியாயமான முறையில் முயற்சி செய்ய வேண்டும்.

அதற்கு பதிலாக, காவித்துறையே… எனத் தொடங்கி மோசமான வார்த்தைகளில் அர்ச்சனை செய்யப்படுகிறது. இதனால் களத்தில் பிரச்சனையைக் கையாளக் கூடியவர்களுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டு, பிரச்சனைகள் திசை மாறுகின்றன. நீதியைக் கேட்க வேண்டிய இடத்தில், மன்னிப்பு கேட்கக்கூடிய தலைகீழ் நிலை ஏற்படுகிறது. இப்படி அதிகாரிகளிடம் தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டிய சூழல் உருவாக்கப்படுவது நியாயம்தானா?

காவல்துறை அதிகாரிகளை எல்லை மீறி விமர்சிக்க கூடாது. அதில் ஒரு ஜனநாயக மரபு தேவை. அவர்கள் பணிபுரியும் இடங்களில் எல்லாம் சமுதாயத்திற்கு எதிரான மனநிலையோடு பணிபுரியும் சூழலை உருவாக்கி விடக்கூடாது. அவர்களை எச்சரித்து ஒழுங்குபடுத்த வேண்டும். என்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும்.

    அந்த ஆர்.எஸ்.எஸ்.காரரை அழகிய கருத்துக்களால் வெல்லத் தெரியவில்லை. ஆணித்தரமான வாதங்களால் தனிமைப்படுத்த தெரியவில்லை. அவரை பொதுமக்களுக்கு மத்தியில் அம்பலப்படுத்த தெரியவில்லை. மாறாக காது கூசும் வார்த்தைகளால் திட்டுகிறார்கள். பதிவுகளைப் பார்க்கும் பொதுவானவர்கள், நமக்கு ஆதரவாகப் பேசும் நிலை மாறி ‘இரண்டு பேர் மீதும் தவறு இருக்கிறது’ என்ற முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள்.

தவறுகளை நியாயப்படுத்தலாமா‬?

முகநூலில் பதிவிடும் கருத்துக்களில் நடுநிலை இருப்பதில்லை. நளினம் இருப்பதில்லை. மதிநுட்பம் இருப்பதில்லை. நாகரீகம் இருப்பதில்லை. சாதாரண விவாதங்கள் சண்டைகளாக மாறுகின்றன.

ஏன் இப்படி செய்கிறீர்கள்? எனக் கேட்டால், ‘அந்த ஆர்.எஸ்.எஸ்.காரன் அப்படி எழுதுகிறான். அதனால் அவனுக்கு அப்படித்தான் பதிலடி கொடுக்க வேண்டும்’ என்கிறார்கள்.

தங்கமும், பித்தளையும் சமமாகுமா? ஓடையும், சாக்கடையும் ஒன்றாகுமா? நீங்களும் அவர்களும் ஒன்றா? அவர்கள் செய்யும் அதே தவறை நீங்களும் செய்யலாமா?

அந்த ஆர்.எஸ்.எஸ்.காரரை அழகிய கருத்துக்களால் வெல்லத் தெரியவில்லை. ஆணித்தரமான வாதங்களால் தனிமைப்படுத்த தெரியவில்லை. அவரை பொதுமக்களுக்கு மத்தியில் அம்பலப்படுத்த தெரியவில்லை. மாறாக காது கூசும் வார்த்தைகளால் திட்டுகிறார்கள். பதிவுகளைப் பார்க்கும் பொதுவானவர்கள், நமக்கு ஆதரவாகப் பேசும் நிலை மாறி ‘இரண்டு பேர் மீதும் தவறு இருக்கிறது’ என்ற முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள்.

“நபியே… மென்மையையும், மன்னிக்கும் தன்மையையும் மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக!” என திருக்குர்ஆன் (7:199) இறைவன் அறிவுறுத்துகிறான்.

இதைப் புரியாத சில அறிவீனர்களின் ‘கருத்து அராஜகத்தால்’ முஸ்லிம் சமுதாயத்தின் மென்மைத்தன்மையும், மன்னிக்கும் பெருமனமும் மாசுபடுத்தப்பட்டிருக்கிறது.

‎விமர்சனமும் நாகரீகமும்‬

விமர்சனங்களில் பொறுப்புணர்வு தேவை. அரசியல் கட்சிகள் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சிகளையும் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் இஃப்தார் நிகழ்ச்சிகளையும் படுகேவலமாக விமர்சிக்கிறார்கள். இது சமூக நல்லிணக்கத்திற்காக நமது முன்னோர்கள் ஏற்படுத்திய ஒரு வழிகாட்டலாகும். இது பிடிக்கவில்லையென்றால் நாகரீகமான கருத்துகளை எடுத்து வைக்கலாம். ஆனால் இழிவான வார்த்தைகளில் விமர்சனங்கள் வருகின்றன. அந்த தலைவர்களிடமும் அதன் தொண்டர்களிடமும் எத்தகைய எதிர்விளைவுகளை மனதில் ஏற்படுத்தும் என்பதை யோசிக்கவில்லை. நபிகள் நாயகம் பின்வருமாறு கூறினார்கள்:-

“ஒரு இறை நம்பிக்கையாளர் அநாகரீகமான முறையில் நடந்து கொள்ள மாட்டார். கரடுமுரடாக பேசமாட்டார்” என்றார்கள்.

ஒருவர் இஸ்லாத்திற்கு எதிராக ஒரு கேள்வியை வைத்துவிட்டால், அவர் கடுமையாக வசைபாடப்படுகிறார். அதற்கு அறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் பதிலளிக்க முயல்வதில்லை. அதுபோல சல்மான்கான், குஷ்பு போன்றோர் முஸ்லிமா? இல்லையா? என்ற தேவையற்ற விவாதம் காரசாரமாக விவாதிக்கப்படுகிறது. அலட்சியப்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள் முதன்மைப்படுத்தப்படுகின்றன.

பாஜகவின் தலைவர்களின் வன்முறைக் கருத்துகளுக்கு பதிலடி என்ற பெயரில் அவர்களை விலங்குகளோடு ஒப்பிடுவதும், கேவலமாக சித்தரிப்பதும் எத்தகைய நியாயம்? கோபம் அறிவை மறைக்கிறதா? அவர்கள் செய்யும் அதே இழிவான வழிமுறைகளை நாமும் செய்ய வேண்டுமா?

அக்கட்சியின் பெண் தலைவர்களின் வன்முறைக் கருத்துக்களை நாகரீகமாக கண்டிக்கலாம். ஆனால் அவர்களை தனிப்பட்ட முறையில் அசிங்கப்படுத்தலாமா? கேவலமாகத் திட்டலாமா?

பொங்கும் உணர்ச்சி மனசாட்சியை வெல்லலாமா? இது சமுதாயத்திற்கு எப்படி நன்மையைப் பெற்றுத்தரும்? அண்ணல் நபி(ஸல்) அவர்கள் இப்படியா எதிர்வினையாற்றச் சொன்னார்கள்? கோபம் அறிவை மறைக்கலாமா?

‘அவர்கள் கோபத்தை மென்று விழுங்குவார்கள்; மக்களை மன்னிப்பார்கள்’ என இறைவன் திருக்குர்ஆனில் (3:134) அறிவுறுத்துகிறான்.

‘சண்டையில் வெல்பவன் அல்ல வீரன்; கோபத்தைக் கட்டுப்படுத்துபவனே வீரன்’ என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். பெரும்பாலும் இதுபோன்ற பொறுப்பில்லாமல் செயல்படுபவர்கள் பற்றி ஆய்வு செய்தால், அவர்களில் பெரும்பாலோர் களப்பணிகளில்/நேரடி சமுதாயப் பணிகளில் ஈடுபடாதவர்கள் எனத் தெரிய வருகிறது.

அவர்கள் தூரத்தில் இருந்து எறியும் ஒரு கல், சமுதாயத்தின் மீது பாறாங்கல்லாக விழுகிறது என்பதை எப்போது உணரப் போகிறார்களோ தெரியவில்லை.

மனசாட்சியோடு சிந்திப்போம்‬

மொத்தத்தில் முஸ்லிம் சமூகம் ஒருவகையான மன அழுத்தத்தில் இருக்கிறது. அதற்கு சரியான உளவியல் சிகிச்சை தேவை. தாங்கள் இந்தியாவில் தனிமைப்படுத்தப் பட்டிருப்பதாக சிலர் கருதுகிறார்கள். பலர் இக்கருத்தை திணிக்கிறார்கள். இது நியாயமல்ல.

தமிழகத்தில் திராவிட இயக்கவாதிகளும், தமிழ்த் தேசியவாதிகளும், இடதுசாரிகளும், ஜனநாயக சக்திகளும் சங்பரிவாரங்களுக்கு எதிராகவும், சிறுபான்மையினரின் தோழமை சக்திகளாகவும் பணிபுரிகிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. அதனால்தான் இங்கு பாஜகவால் ஒரு பெரிய சக்தியாக உருவெடுக்க முடியவில்லை.

குஜராத் கலவரத்திற்கு எதிராக இன்றும் போராடும் தீஸ்தா செடில்வாட் ஒரு பார்சி பெண்மணி. குஜராத் கலவரத்திற்கு மோடிதான் பொறுப்பு என தொடர்ந்து போராடும் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட்டும், சங்பரிவார தீவிரவாதத்தை தோலுரித்த தியாகி ஹேமந்த் கர்கரேயும், பம்பாய் கலவரத்திற்கு பால்தாக்கரேயைக் கைது செய்ய வேண்டும் என அறிக்கை அளித்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவும், முஸ்லிம்களின் வாழ்வியல் துயரத்தை அம்பலப்படுத்திய நீதியரசர் சச்சாரும், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை பரிந்துரைத்த ரங்கநாத் மிஸ்ராவும் பிராமணர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

சங்பரிவார் மதவெறிக்கு எதிராக கருத்துப்போர் நடத்தும் 90 சதவீத பத்திரிக்கையாளர்களும், மனிதஉரிமை ஆர்வலர்களும் முஸ்லிம் அல்லாதவர்கள்தான் என்பதையும், சிறுபான்மையினருக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளும், மதச்சார்பற்ற கட்சிகளும், தலித் கட்சிகளும் குரல் கொடுப்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், பொது களங்களிலிருந்து நம்மை நாமே தனிமைப்படுத்தி சிந்திப்பது அரசியல் அறியாமையாகும்.

இந்தியாவில் பன்முக சமூகத்தோடு கலந்து நின்றுதான் மதவெறி சக்திகளை வீழ்த்த முடியும் என்பதை உணரவேண்டும். இதைப் புரிந்துகொண்டு, நேர்மையான கொள்கையின் அடிப்படையில் சமூக இணைய தளங்களில் கருத்துக்களைப் பதிய வேண்டும்.

இல்லையெனில், ஆர்.எஸ்.எஸ்.ஸின் திட்டங்கள் வலுப்பெற பொறுப்பற்ற இளைஞர்கள் தங்களையும் அறியாமல் உதவி செய்த வரலாற்றுத் தவறு ஏற்பட்டுவிடும். எச்சரிக்கை!

இவண்
எம். தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி
http://www.satyamargam.com

Friday, July 10, 2015

கடைப்பத்தில் காத்திருக்கிறோம் இறைவா...

கடைப்பத்தில் காத்திருக்கிறோம்
என் இறைவா...

விழிகளை நனைத்து;
கரத்தினை விரித்து;
உன் அருள் வேண்டி...
இருள் தழுவிய தருணத்தில்
தேம்புகிறோம் என் இறைவா;

கடலை மிஞ்சும் உன்
கருணை பரப்பளவில்;
எங்களை அரவணைத்து..
ஆறுதல் அளிப்பாய் என் இறைவா;

மறைவில்; பொதுவில் நாங்கள்
வெளிப்படுத்திய தீமையை..
உன் மகத்தான அன்பைக்கொண்டு
தடம் தெரியாமல் துடைப்பாய் என் இறைவா;

ஆயிரம் மாதத்தின் மா பாக்கியத்தை
அடைந்த நல்லோர்களில் எங்களையும்
சேர்த்து வைப்பாய் என் இறைவா;

பிழைகளை நசுக்கி எங்கள்
அமல்களின் தரத்தை
உயர்த்திடுவாய் என் இறைவா;

உன் அருளில் திருப்தியோடு
உனை அடைந்திடும்
உண்மை அடிமை அடியானாய் ;
எங்கள் உயிரை..
கைப்பற்றிக்கொள்வாய் என் இறைவா!!

‪#‎லைலத்துல்‬ கத்ர்
 
Yasar Arafat

Wednesday, July 8, 2015

இணைய தளமும் இளைஞர்களும் !

இணைய தளமும் இளைஞர்களும் !
மவ்லவீ அல்ஹாஜ் அப்ஸலுல் உலமா
 ஜே. ஏ. நைனார் முஹம்மது பாகவி

  மனித வாழ்வின் மையமான இளமைக்காலம் இனிமையும், இலக்கும், துடிப்பும், துணிவும் கொண்ட முக்கியமான முத்திரைப் பகுதியாகும்.

  அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :-

  “அல்லாஹ் உங்களை பலஹீனத்திலிருந்து படைத்தான். பிறகு பலஹீனத்திற்குப் பின் (வாலிப) சக்தியை உண்டாக்கினான். பிறகு சக்திக்குப் பின் (மீண்டும்) பலஹீனத்தையும் (முதுமையின்) நரையையும் ஆக்கினான். தான் விரும்பியதைப் படைக்கிறான். அவன் அறிந்தவன், சக்தியுள்ளவன்”.

                                           -அல்குர்ஆன் (30 :54)

  இதில் மனித வாழ்க்கையை மூன்று கூறுகளாகப் பிரித்து மனிதனின் தொடக்கம் பலஹீனமான குழந்தையாகவும், அடுத்து பலம் வாய்ந்த வாலிபராகவும், மீண்டும் பலம் குன்றிய முதியவராகவும் அல்லாஹ் ஆக்குவதை அறிகிறோம்.

Monday, July 6, 2015

காயிதே மில்லத்தும் நாகூர் ஹனீஃபாவும் !

நெஞ்சைத் தொட்ட நிகழ்வு

    காயிதே மில்லத்தும் நாகூர் ஹனீஃபாவும் !

         -வி.எஸ். முஹம்மத் பஸ்லுல்லாஹ்

  மர்ஹூம் இசை முரசு நாகூர் இ.எம். ஹனீஃபா அவர்களுக்கு 19 வயது ஆன போது நடந்த நிகழ்வு. இராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதே மில்லத் (ரஹ்) அவர்களுடன் இசைமுரசு நாகூர் ஹனீஃபாவும் கலந்து கொண்டார்கள்.

  தினசரி இரண்டு அல்லது மூன்று கூட்டங்களில் காயிதே மில்லத் சிறப்புரையாற்றினார்கள். தலைவர் பேசும் கூட்டங்களில் இசைமுரசு இரண்டு, மூன்று பாடல்களைப் பாடிக்கொண்டே வந்தார்கள். கடுமையான அலைச்சல், ஓய்வுமில்லை. கடைசிக்கூட்டம் இராமநாதபுரம் நகரில் நடந்தது. கூட்டம் முடிய நடு இரவு 1 மணி ஆகிவிட்டது. பின்னர் ஒன்றரை மணிக்கு முஸப்பரி என்ற பங்களாவில் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Thursday, July 2, 2015

30 நாட்கள் பயிற்சி

சமீபத்தில், ஒரு இணைய தளத்தில் பிரபலமான அமெரிக்கப் பேச்சாளர் ஒருவரின் உரையினைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் பேச்சு மிக சுவாரஸ்யமாய் இருந்தது. ”நீங்கள் எதில் நிபுணத்துவம் அடைய நினைக்கிறீர்களோ, புதியதாய் கற்க நினைக்கிறீர்களோ வெறும் முப்பது நாள் போதும். நீங்கள் உங்கள் விருப்பப்படி மாறி விடுவீர்கள், நான் உத்திரவாதம்.

நான் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் கணினிப் பொறியியல் நிபுணர், ஆனால் நான் இப்போது 50,000 சொற்களைக் கொண்ட ஒரு நாவலின் நாவலாசிரியர். நாளொன்றுக்கு 1667 சொற்கள் மூலம் வெறும் முப்பது நாளில் நடந்த அதிசயம்” என்றும். இந்த அவர் மாபெரும் அமெரிக்க தத்துவ ஞானி, மோர்கன் ஸ்பர்லோக்கைப் பின்பற்றி வெற்றி பெற்றதாகவும் மேற்கோளிட்டார்.

LinkWithin

Related Posts with Thumbnails