Tuesday, August 30, 2011

'ஒடுங்க ஒடுங்க நம்மை தான் யானை தொறத்துது' - "இஸ்லாம் வரவேற்குது" புர்ஹானுதீன் ஆல்பம்
















க்ரூகர் தேசிய பூங்கா நுழைவு
Entrance of Kruger National Park


'ஒடுங்க ஒடுங்க  நம்மை  தான் யானை தொறத்துது'




Big boy giraffe in Kruger National Park


Saturday, August 27, 2011

மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்


ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நெஞ்சை சுடும் நிஜம்
[ நினைவில் கொள்ளுங்கள் மறுமையில் கஸ்தூரி மலைக்குமேல் வீற்றிருக்கும் பாக்கியம் பெற்றவர்கள் மோதினார்கள் என்பது நபிமொழி. அதுமட்டுமின்றி மாபெரும் கலீஃபாவான உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களாலேயே ''எங்களது தலைவர்'' என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட பிலால் ரளியல்லாஹு அவர்களின் வாரிசுகள் மோதினார்கள் என்பதை மறந்திட வேண்டாம். அதை மறந்தாலும் ஒவ்வொருவரும் மரணித்த பின்பு ஆணாக இருந்தால் அவர்களைக் குளிப்பாட்டி தூய்மைப் படுத்தி கபனிட்டு; ஆணானாலும் பெண்ணானாலும் கபுரில் அடக்கம் செய்த பிறகு தண்ணீர் தெளித்து இறை வசனங்களை உச்சரித்து மறு உலகிற்கு தூய்மையுடன் அனுப்பி வைக்கும் மகத்தான பணியை மேற்கொள்கின்றவர்களல்லவா? இதை மறக்க முடியுமா? மறுக்கத்தான் முடியுமா? அதற்கான நன்றிக்கடனை நாம் மரணித்தபிறகு அவர்களுக்குத் தீர்க்கத்தான் முடியுமா? என்பதனை சற்றேனும் நாம் எண்ணிப்பார்த்ததுண்டா?]

மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம் .

Friday, August 26, 2011

நாயகம் ஒரு காவியம்

                    
                    இறைவனிடம் ஒரு விவாதம்

ஏழைதான் நான்
இருந்தாலும் இறைவா உன்
செல்வ மாளிகையில்
சிறுபூவாய் மலரேனோ?

குளிக்கத் தெரியாத
குழந்தையொன்று தன் தாயைக்
குளிப்பாட்டி அழகு செய்யக்
குதித்துவரின் குற்றமுண்டோ?

தூயவனை என்னைத்
துலக்க வழி தெரியாமல்
தூயவனே உன்னிடத்தில்
தொலைக்க வழி தேடுகிறேன்

தண்ணீரில் போகாத
தடித்த கரைகளுண்டு
கண்ணீரில் கழுவினால்
கரையாத கரையுண்டோ?

முகம் பார்க்கும் கண்ணாடி
இங்குண்டு
எனக்கு ஒரு
அகம் பார்க்கும் கண்ணாடி
அளிப்பதற்கு மறுப்பாயோ?

எல்லையில்லா உன் புகழை
எடுத்துரைக்க வந்த சிறு
பிள்ளைதான் நான்.... எனது
பிஞ்சுமொழி கேளாயோ?

குவலயமே நன்கொடையாய்க்
கொடுத்தவன் நீ... என்னுடைய
கவலையெல்லாம் தீர இன்று
கவிதை தர மாட்டாயோ...?

என்னுடைய தகுதியினை
எண்ணி நான் பாடவில்லை....
உன்னுடைய தகுதியினை
உணர்ந்ததால் பாடுகிறேன்!

உன்னிடத்தைத் தேடி
ஓடிவர இயலேன் நான்
என்னிடத்தைத் தேடி உன்
இறையருளும் வாராதோ?

உன்னிடத்தில் என்னை
ஒப்புவித்த பின்னே
என்னுடைய குறையெல்லாம்
எனதென்ப தெவ்வாறோ?

வள்ளல் நபி கதையை
வரைகின்றேன் – காவியத்தின்
உள்ளே நீ நிறைந்து
ஒளியேற்ற மாட்டாயோ...?

தெரியாமல் நான் இந்த
தீன் நெருப்பை தொட்டுவிட்டேன்
கருகாமல் சுடர் வீசக்
கருணையினைக் காட்டாயா?

எனக்காக இல்லை எனினும்
இறைதூதர் ஏந்தல் நபி
தனக்காக இங் கெனக்குத்
தமிழெடுத்து நீட்டாயா? 



கவிஞர் மு. மேத்தா கவிதைகள்
நன்றி   Source ; http://www.mailofislam.com/

யா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே ! ஆ மீ ன்...!


ஆ மீ ன் . . . . !யா ரஹ்மானே எங்களின் பாவம்

நீங்கிடச் செய்வாயே!
இந்த சங்கை மிகுந்த ரமளானின் பொருட்டால்
ரஹ்மத்தைச் சொறிவாயே!

பசியினை மறந்தோம் தாகமும் பொறுத்தோம்
உடல் நலம் காப்பாயே!
உனை துதிக்கவே பிறந்தோம் தூக்கமும் துறந்தோம்
மன நலம் காப்பாயே!

திருமறை வசனம் தினம் தினம் பயின்றோம்
அறிவினைத் தருவாயே!
எங்கள் திருநபி வாழ்ந்த வழிதன்னில் வாழ்வோம்
நேர் வழி தருவாயே!

Thursday, August 25, 2011

இஸ்லாமியப் பாடல்கள் - பிஸ்மில்லாஹ், தக்பீர், கலிமா, இறைவா - by சலாம் எக்ஸ்பிரஸ்







ஹஸாரே குழுவினர் டெல்லி இமாமுடன் சந்திப்பு

ஹஸாரே குழுவினர் டெல்லி இமாமுடன் சந்திப்பு:

imagesCAS3WAXG


புதுடெல்லி:அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு கோரி ஹஸாரே குழுவினர் டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் இமாம் ஸய்யத் அஹ்மத் புகாரியை சந்தித்துப் பேசினர்.


ஹஸாரேவின் போராட்டத்தில் முஸ்லிம்களை உட்படுத்தாததற்கு நேற்று முன் தினம் இமாம் வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.


ஹஸாரே குழுவைச் சார்ந்த கிரண்பேடி, அரவிந்த் கேஜ்ரவால் ஆகியோர் இமாமின் வீட்டில் சந்திப்பை நிகழ்த்தினர். முஸ்லிம்களை போராட்டத்தில் கலந்துக்கொள்ள செய்யாததற்கு இமாம் தனது கடுமையான அதிருப்தியை ஹஸாரே குழுவினரிடம் தெரிவித்தார்.


முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்காகவும் களமிறங்க வேண்டும் என ஹஸாரே குழுவினருக்கு இமாம் கோரிக்கை விடுத்தார்.

Source: http://muthupet.org

Wednesday, August 24, 2011

நினைத்துப் பார் உன்னையே !

 

தூக்கம்
யார் தூக்கத்தினாலோ அல்லது மறதியினாலோ (தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை தொழவில்லையோ) அவர் ஞாபகம் வந்ததும் (அல்லது விழித்ததும்) அதை தொழுது கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உறங்கச் செல்லும் போது ஓதும் துஆ.
1734. ‘நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர் ‘யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டு விட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்’ என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்” என்று என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது ‘நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸுலையும் நம்பினேன் என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை, நீ அனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்’ என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்”.
 

http://www.islamkalvi.com/portal/?p=2534

The Prophet also said: ‘When you are about to sleep recite aayat-ul-kursiyy till the end of the verse for there will remain over you a protection from Allaah and no devil will draw near to you until morning.’
பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் ,

Tuesday, August 23, 2011

இஸ்லாமிய ஸ்கூல் எப்படி இருக்கவேண்டும் !

இஸ்லாமிய ஸ்கூல் எப்படி இருக்கவேண்டும்?. இதோ உங்களுக்கு ஒரு வீடியோ!!.

மாஷா அல்லாஹ்!. ஒரு இஸ்லாமிய கல்வி நிறுவனம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விளக்கமும், அது இந்தியாவிலேயே எப்படி நடைபெறுகின்றது என்ற ஆதாரத்துடன் உங்களுக்காக வழங்குகின்றோம். இதை தமிழக முஸ்லிம்கள் குறிப்பாக அதிரை,முத்துப்பேட்டை, காயல்பட்டினம், கீழக்கரை, கூத்தாநல்லூர், மேலப்பாளையம், பரங்கிப்பேட்டை, லால்பேட்டை போன்ற முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் ஊரிலாவது நடைமுறை படுத்த முன்வரவேண்டும்.
Al-Muminah School featured on Headlines Today, இந்திய

Indian Media report on Al-Muminah School, an Islamic English Medium School for Girls in Mumbai, India நன்றி http://muthupet.org/

Sunday, August 21, 2011

நோன்பு கஞ்சி தயாரிப்பது எப்படி? செய்முறை காணொளி


சமையல் என்பது ஒரு கலை ! அந்த கலையால் படைத்த உணவை ருசிப்பதில் எம்மிடமிருக்கும் ஆர்வமும் போட்டியும் அல்லது அதன் சுவையை விமர்சிப்பதிலும் ஆர்வம் காட்டுவோம். இதுநாள் வரை பெரும்பாலும் சமையல் குறிப்புகள் என்று ஏராளமாக எழுத்து வடிவிலும் / அச்சுவடிவிலும்தான் நாம் கண்டிருக்கிறோம் ஒரு சிலவற்றை தவிர, அப்படியான சமையல் குறிப்புகளை வாசித்து விட்டு முயற்சித்தும் பார்த்து ருசித்தும் இருந்திருக்கிறோம்.

நாயகம் ஒரு காவியம்

                         நாயகம் ஒரு காவியம்

காவிய நாயகர்

முழு நிலவே! வள்ளல்
முகமதே!
உங்களை நான்
பிறைநிலாச்சொற்களால்
பேசுகிறேன்.....

மனிதர்களில்
இவர் ஒரு
மாதிரி...
அழகிய
முன்மாதிரி!

உலக அதிசயங்களில்
இது ஓர்
ஒப்பற்ற அதிசயம்......
காலடியில் மகுடங்கள்
காத்துக் கிடந்தன.......
இவரோ ஓர்
ஏழையாகவே இறுதிவரை வாழ்ந்தார்!

உலக அதிசயங்களில்
இது ஓர்
ஒப்பற்ற அதிசயம்
எல்லாரும்
வாயிட் கதவுகளைத்
தட்டிக்கொண்டிருந்தார்கள்.
இறுதி நபியை
எழுந்தருளிய இவர்தான்
தாழிட்ட மனக்கதவைத்
தட்டினார்.

அகதியாய் இதயங்கள்
அலைந்து கொண்டிருந்தபோது
இவருடைய
தோள்களே மானுடத்தைத்
தூக்கிக் கொண்டன.

கை கொடுத்த இவருடைய
“கை” -
தொழுகை

எழுத படிக்கத்
தெரியாதவர்தான்....
ஆனால்
இவர்தான்
பூமியின் புத்தகம்!

சிம்மாசனங்களில் இவர்
வீற்றிருந்ததில்லை
அண்ணலார்
அமர்ந்த இடமெல்லாம்
அரியனையானது!

கிரீடங்களை இவர்
சூட்டிக்கொண்டதில்லை
பெருமானார்
தலையில் தரித்ததெல்லாம்
“மணிமகுடம்” என்றே
மகத்துவம் பெற்றது!

மக்கத்து மண்ணை இவர்
போர் தொடுத்து வென்றார்
அகில உலகத்தையும்
போர் தொடுக்காமலே
வெற்றி பெற்றார்!

கவலைகளால் இதயம்
கனக்கும் வேளையில்
பெருமானாரின்
நினைவுக்குளத்தில் நான்
நீராடுவேன் –
இதயக்கவலைகள்
எடை இழந்து போகும்

நடைபயிலும் கால்கள்
எங்கேனும்நாட்காட்டி ஆனதுண்டோ?
மக்காவிலிருந்து மதீனாவுக்கு
இவர் நடந்தார் -
ஹிஜ்ரி என்னும்                                               
ஆண்டுக் கணக்கு
ஆரம்பமானது!


 

இவர்
இறைவனின் துறைமுகம்!
இங்கேதான் திருமறை
இறக்குமதியானது!

இவர்
இறைவனின் துறைமுகம்!
இங்கிருந்துதான்
திருமறை
எல்லா நாடுகளுக்கும்
ஏற்றுமதியானது

கவிஞர் மு. மேத்தா கவிதைகள்
நன்றி   Source ; http://www.mailofislam.com/

Saturday, August 20, 2011

Laylatul-Qadr (The Night of Power)

லைலத்துல் கத்ர் இரவு(கண்ணியமிக்க இரவு )


லைலத்துல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும்.
கண்ணியமும், மகத்துவமும் மிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்: 
(இந்த அல்குர்ஆனை) மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படி தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.(97:1-5)
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.(97:1)
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? 
(97:2) கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.(97:3)

புனித ரமளான்-- رَمَضَانَ]

புனித ரமளான்-- رَمَضَانَ]:
மாதம் புனித மாதம்- புதிதாய்
பிறக்கும் ஒவ்வொரு வருடம்

அறம் நல்லறம் கொண்டுவரும்
நோன்பு என்னும் புனித விரதம்

அருள்களை அள்ளி அள்ளி வழங்கப்படும் மாதம்
ஆண்டவனின் சன்னிதானம் அடைப்பெறும் மாதம்
திருக்குர்ஆன் அருளப்பட்ட புனிதமான மாதம்

சங்கைமிகு லைலத்துல் கத்ர் [ஆயிரம் மாதங்களைவிட
சிறந்த இரவு] வந்து இறங்கும் மாதம்
தீங்குசெய்யும் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் மாதம்

இறைவனிடம் கேட்டதும் கிடைக்கபடும் மாதம்
இறைச்செய்தி இறக்கப்பட்ட இன்பமான மாதம்
தக்வா என்னும் இறையச்சத்தின் பயிர்ச்சிக்கான மாதம்

சுவர்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம்
நரகத்தின் கதவுகள் மூடப்படும் மாதம்

விடிய விடிய வணக்கங்கள் செய்யப்படும் மாதம்
விடிந்தபின் விரதங்கள் போற்றப்படும் மாதம்

திக்ருகளும் தஸ்பீஹ்களும் ஓதப்படும் மாதம்
தீமைகளை விட்டுவிட்டு தவிர்ந்திருக்கும் மாதம்

நன்மைகளை செய்து செய்து நல்லருள்பெரும் மாதம்
நன்மைஒன்றுக்கு பத்து என பெருக்கித்தரும் மாதம்

ஜக்காத் என்னும் கொடைகள் கொடுக்கப்படும் மாதம்
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு வாரிவழங்கும் மாதம்

மலையளவு தவறுகளும்- மனம்உருகி
கேட்க்கும்போது மன்னித்தருளும் மாதம்

இறையச்சத்தால் செய்யப்படும் நன்மைக்கேற்ப
முன்செய்த பாவங்களும் மன்னிக்கப்படும் மாதம்.

நோன்பு இது நோன்பு –இதை
நோற்போருக்கு கிடைக்கும் மான்பு

சிறு அரும்பும் விரும்பி வைக்கும்
அருமையான நோன்பு

நீக்கும் இது நீக்கும்
மனித உடலின்- நோயினை நீக்கும்

போக்கும் இது போக்கும்
மனித மனதின்- மாசுவைப் போக்கும்

கொடுக்கும் இது கொடுக்கும்
புதிய சக்தியை இதுகொடுக்கும்

செழிக்கும் அருள் செழிக்கும்
மனித வாழ்வில் அருள் செழிக்கும்

புனித மாதத்தில்;
தீமைகளைவிட்டு விலகியிருங்கள்
நன்மைகளின் பக்கம் திரும்பியிருங்கள்
இறையச்சம்கொண்டு இறையருளை பெற்றிடுங்கள்.

அன்புடன் மலிக்கா
Source : http://niroodai.blogspot.com/

'நோன்பு' அதனை நீ விரும்பு

நோன்பின் நோக்கம் என்பது ஏழைகளின் பசியை அறிந்துக் கொள்வதற்காக என இஸ்லாம் நமக்கு எங்குமே கூறவில்லை. அடுத்தவர்களின் கையை எதிர்ப்பார்த்து வாழும் பரம ஏழைகளாகவே இருந்தாலும்கூட ரமளானில் நோன்பு நோற்பதை இஸ்லாம் கடமையாக்கி இருக்கிறது.நோன்பு முறையினால் உடல் ஆரோக்கியம் பேணப்படும் என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறினாலும் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு அதுவும் ஒரு காரணம் என இஸ்லாம் குறிப்பிடவில்லை. நோன்பு நோற்கவேண்டும் என்ற இஸ்லாத்தின் கட்டளைக்கு என்னதான் நோக்கமாக இருக்கும்?

“நம்பிக்கைக் கொண்டவர்களே! நீங்கள் இறைவனை அஞ்சி (பயபக்தியுடன்) நடந்துக் கொள்வதற்காக, உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப் பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது”. (அல்குர்ஆன் 2:183) என்று அல்லாஹ்தஆலா கூறுகிறான்.

அதாவது மனிதன் மறுமையின் வெற்றியை அடைய இறையச்சத்துடன் வாழவேண்டும். அந்த இறையச்சத்திற்கான ஒரு ஆன்மீகப் பயிற்சியை நோன்பு நோற்பதின் மூலம் நாம் பெறுகிறோம்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“யார் பொய்யான பேச்சுகளையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதிலோ, தாகித்திருப்பதிலோ அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை”
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி); நூல்: புகாரி, திர்மிதி, இப்னுமாஜா

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்போது யாரேனும் சண்டைக்கு வந்தால், (அல்லது) யாரேனும் திட்டினால் “நான் நோன்பாளி” என்று கூறிவிடுங்கள் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி); நூல்: புகாரி (1893, 1903)

 அல்லாஹ்வின் அருளால் நமக்குக் கிடைத்திருக்கும் இந்த ரமளான் நோன்பின் முழு பயனையும் அடைய‌ பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் மட்டும் போதாது. நாம் நோன்பு நோற்பதுடன் அலட்சியமாகக் கருதிக் கொண்டிருக்கும் ஆபத்தான பாவங்களை விட்டு நாம் தவிர்ந்துக் கொள்ளவேண்டும். நோன்பின் மூலம் எடுக்கப்படும் இந்தப் பயிற்சி மற்ற 11 மாதங்களிலும் நம்மிடம் சிறந்தவொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.  நோன்பின் மூலம் நாம் பொய் சொல்வதிலிருந்தும் அதுபோன்ற மற்ற‌ தீய நடவடிக்கையிலிருந்தும் விலகிக் கொள்ளவில்லை என்றால் அது நோன்பே அல்ல, வெறும் பட்டினிதான் என்பதை நினைவில் கொள்வோமாக! அதுபோன்றதொரு நிலையை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!
by mail from : A.R.SULAIMAN SHAIT Al Ahmadiah Contracting & Trading
Dubai - U.A.E

Friday, August 19, 2011

பசியினை உணருங்கள் பசித்தவருக்கு பகிர்ந்து கொடுக்க .


பசியினை போக்க பணம் தேவை.அதனால் சிறுவர்களும் உழைக்க  சென்று வருவதனைக் கண்ட கர்ம வீரர் காமராசர் பள்ளிக்கூடத்தில் இலவச உணவு கொண்டு வந்தார். அவர் பசி என்பதனை அறிந்தவர்,"பசி வந்தால் பத்தும் பறந்து போகும்"  (மானம் ,குலம்,கல்வி, வன்மை ,அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை,காமம்  ( நல்வழி - ஔவையார்) 
   இஸ்லாம் "நோன்பு" என்பதனை ஒரு மாத ரமலான் மாதத்தில் கடமையாக்கி அதில் தர்மத்தினையும் முக்கியப் படுத்தி  உள்ளது, இது வறுமையினை அகற்ற வருமானத்தில் வருடத்திற்கு இரண்டரை சதவீதம் ஜகாத் என்ற பெயரில் கட்டாயக் கடமையாக்கி இருக்கின்றது. (அரசு வருமான வரி போடுவது போல் தோன்றினாலும் ஜகாத்தில் வேறு சில சிறப்புகளும் உண்டு.)
 

  உண்ணாமல் பருகாமல் இருப்பதற்கு மட்டும்  நோன்பு என்று கூற முடியாது. . மாறாக இறைவனுக்காக நாம் ஆற்றவேண்டிய பல்வேறு தியாகங்களையும் உள்ளடக்கும்.நோன்பின் நோக்கம் மனிதனை  உறுதி மிக்கவனாக, இறையச்சமுடையவனாக மாற்றுவதுதான்."…..நீங்கள் (உள்ளச்சம் பெற்று) இறைபயபக்தி உடையவர்கள் ஆகலாம்" (அல்குர்ஆன் 2:183)
 

  மனிதர்கள் நோற்கும் நோன்பினால் இறைவனுக்கு ஏதும் தேவையோ, இலாபமோ பயனோ ஏற்படாது. இதை நாம் நோற்கத் தவறினால் இறைவனுக்கு நஷ்டம் எதுவும் ஏற்படாது. இதனை முறையாக நோற்றால், இதனால் மனிதன் இறையச்சம் உடையவன் ஆகலாம் (அதன் மூலம் அவனுக்கும், அவன் குடும்பத்தினர் அவனைச் சார்ந்துள்ள அவன் வாழுகின்ற சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும் நிச்சயமாக பலன்கள் உண்டு.
 

 "பட்டினி என்றால் என்ன என்பதை அறியாமல் செழிப்பில் வாழும் செல்வந்தர்கள், வருடத்தில் ஒரு மாதம் நோன்பிருப்பதன் மூலம் பட்டினியை அறிந்து கொள்வதற்கும் அதன் மூலம் காலமெல்லாம் பட்டினியில் உழலும் வறியவர்க்கு உதவ வேண்டும் என்ற சிந்தனையைச் செல்வந்தர்களிடையே நோன்பு ஏற்படுத்துகிறது" 


Tuesday, August 16, 2011

நோன்பாளி மனைவியரிடம்...

மீண்டும் ஒரு ரமளான்: பிறை16
நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (அல்குர்ஆன் 2:187)
நோன்பின்போது பகல் நேரத்தில் உண்பதும், பருகுவதும் தடைசெய்யப்பட்டது போல் தம்பத்திய உறவு கொள்வதும் தடுக்கப்பட்டதாகும். பசித்திருப்பது, தாகித்திருப்பது மட்டுமின்றி நோன்பாளி (பகல் நேரத்தில்) ஆசையை - இச்சையைக் கட்டுப்படுத்தி, தம்பத்திய உறவிலிருந்து விலகியிருக்கவேண்டும். இறைவனுக்காகப் பட்டினியையும் தாகத்தையும் சகித்துக் கொள்வதுபோல் தன்னுடைய உடல் இச்சை உணர்வுகளையும் கட்டுப்படுத்திச் சகித்திருக்க வேண்டும்.
வரம்பு மீறி விடாமல் நோன்பாளி மனைவியருடன்,
"நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள், முத்தமிடுவார்கள்! உங்களில் தம் உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தார்கள்!" (அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்: புகாரி, 1927)
''நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டு தம் மனைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்'' என்று சொல்லிவிட்டு ஆயிஷா (ரலி) அவர்கள் சிரித்தார்கள். (நூல்: புகாரி, 1928)
நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நோன்பாளி மனைவிகளைக் கட்டி அணைப்பது பற்றி ஒரு மனிதர் கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள். பின்னர் மற்றொருவரும் வந்து கேட்டார் அவருக்குத் தடை விதித்தார்கள். நபி (ஸல்) அவர்களால் அனுமதிக்கப்பட்டவர் முதியவராகவும் தடுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தார். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். நூல்: அபூதாவூத்)
எளிதில் உணர்ச்சி வசப்பட்டு எல்லை மீறிவிடும் இளவயதுக்காரர்களுக்கு நோன்பிருக்கும் நிலையில் தம் மனைவியைக் கட்டியணைக்க நபி (ஸல்) தடை விதித்தது இங்கு ஆழ்ந்து நோக்கத் தக்கது.
எந்த வயதுக்காரரும் எல்லை மீறலாம்; போலவே ஓர் இளம் கணவர், நோன்பிருந்து கொண்டு தம் மனைவியைக் கட்டியணைத்தாலும் கட்டுப்பாடு குலையாதவராக இருக்கக் கூடும். ஆனால் இளவயதுக்காரர்கள் சுயகட்டுப்பட்டை இழந்து விடுவதற்குக் கூடுதல் சாத்தியம் உள்ளது. மேற்காணும் ஹதீஸிலிருந்து நாம் பெறவேண்டிய பாடம் என்னவெனில், சுயகட்டுப்பாட்டின் உறுதியைப் பற்றி அவரவருக்கே நன்கு தெரியும். எனவே, தத்தம் நிலையைக் கருத்தில் கொண்டு ஒரு நோன்பாளிக் கணவர் தம் மனைவியுடன் பகல் பொழுதுகளில் அண்மையாக/சேய்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
கட்டுபாட்டை மீறி நோன்பாளி மனைவியிடம் உடலுறவு கொண்டால் அதற்கான பரிகாரமும், பரிகாரம் செய்ய இயலாதவர்களுக்கான சலுகைகளும் நபிவழியில்,
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழிந்து விட்டேன்!" என்றார். நபி(ஸல்) அவர்கள் 'உமக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள்.
'நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடிவிட்டேன்!" என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள், 'விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?' என்று கேட்டார்கள். அவர் 'இல்லை!" என்றார்.
'தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'இல்லை!" என்றார். 'அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர், 'இல்லை!" என்றார்.
நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த 'அரக்' எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது, நபி(ஸல்) அவர்கள் 'கேள்வி கேட்டவர் எங்கே" என்றார்கள். 'நானே!" என்று அவர் கூறினார். 'இதைப் பெற்று தர்மம் செய்வீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர், 'இறைத்தூதர் அவர்களே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை!" என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள்: பிறகு 'இதை உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!" என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். நூல்: புகாரி, 1936, 5368, 6087, 6164, 6709)
(''அப்படியானால் நீர் முறித்த நோன்பிற்குப் பகரமாக ஒரு நோன்பு நோற்பீராக'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்ற கூடுதல் வாசகங்கள் இப்னுமாஜா, அபூதாவூத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)
- தொடரும் இன்ஷா அல்லாஹ்

ரமலான் மாத மக்கா நேரலை - யூ டியூப்

பத்ர் (1/5)

Monday, August 15, 2011

பேறு பெற்ற பெண்மணிகள் - தொடர் - 2

என் வாழ்வை மாற்றியமைத்த நிகழ்ச்சி

"நான் எப்போது, ஏன் இஸ்லாத்திற்கு வந்தேன் என்று அடிக்கடி பலர் என்னிடம் கேட்கிறார்கள். இஸ்லாம் என்ற உண்மை மார்க்கம் எப்போது என்னில் விடியலானது என்பது பற்றிக் குறிப்பாக எனக்குத் தெரியாது என்று மட்டும் என்னால் கூற முடியும். ஆனால், நான் எப்போதுமே முஸ்லிமாகவே இருந்து வந்திருக்கின்றேன் என்று எனக்குத் தோன்றுகிறது" என்று தனது வாழ்வைப் பற்றி அறிமுகம் செய்கிறார் ஆங்கிலேயச் சீமாட்டி லேடி எவலின் கொபோல்டு என்ற ஜைனபு.

ஏனென்றால், தன் குழந்தைப் பருவம் முதல் இஸ்லாமியச் சூழலில் (அல்ஜீரியா நாட்டில்) வளர்ந்து, முஸ்லிம் தோழிகளுடன் சேர்ந்து இறைவணக்கமாகிய தொழுகையைப் பழகி, அரபு மொழியைப் பேசக் கற்று, உள்ளத்தளவில் முஸ்லிம் சிறுமியாக வளர்ந்து வந்ததாகப் பெருமைபடக் கூறுகிறார் ஜைனபு.

இஸ்லாமியச் சூழலில் வளர்ந்ததால், முஸ்லிம்களின் நடையுடை, பாவனைகள் தன்னிடம் இயல்பாகவே அமைந்துவிட்டதாகக் கூறும் ஜைனபு, பிற்காலத்தில் இத்தாலி நாட்டிற்குக் குடிபெயர்ந்து சென்ற பின்னரும் பெரியவளாகி, முஸ்லிம் பெண்கள் அணியும் நீண்ட கருப்பு உடை (புர்கா) அணியும் பழக்கமுடையவரானார்.

பேறு பெற்ற பெண்மணிகள் - தொடர் - 1

பேறு பெற்ற பெண்மணிகள் என்ற தலைப்பில் சகோதரர் அதிரை அஹ்மது அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் தொடராக இன்ஷா அல்லாஹ் அதிரைநிருபர் வலைத்தளத்தில் வெளிவர இருக்கிறது. அவ்வகையில் இன்று முதல் பதிவாக "முஸ்லிமான முன்னோடி" பதிவுக்குள் வந்திருக்கிறது.

அருட்கவி அல்லாமா இக்பால் அவர்களின் கவிதையை தமிழாக்கம் செய்து இந்த புத்தகத்தின் பதிப்புரையில் மேற்கோள் காட்டியிருக்கிறார்கள் இந்நூல் ஆசிரியர் அதிரை அஹ்மது அவர்கள்.

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள வரைமுறைகளுக்கு உட்பட்டு, முஸ்லிம் பெண்கள் தஅவாக் களத்தில் உளமார உழைக்கத் தொடங்கினால், பெரிய பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும்; வியப்பிற்குரிய நல்ல விளைவு களைக் காண முடியும்.

நன்றாய்க் கேட்பாய் எம்முஸ்லிம்
    நங்காய் ! மாலைப் பொழுதினையே

தென்றல் காலைப் பொழுதாக்கு
    தேர்ந்த இறையின் அன்பர்க்கே

என்றும் குர்ஆன் மறையோதி
     இறைவாக் கின்படி நடப்பாய்நீ

உன்றன் இனிய மறையோசை
   உமரின் விதியை மாற்றியதே !"

[ * இஸ்லாத்தின் இரண்டாம் கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்களின் நேர்வழித் திருப்பத்திற்கு, அவருடைய தங்கையான ஃபாத்திமா(ரலி) அவர்களின் இனிமையான மறையோசைதான் காரணம் என்ற வரலாற்று நிகழ்வு இங்கு நினைவு கூறப்படுகின்றது.]

Saturday, August 13, 2011

மக்கா நேரலை,மதினா நேரலை மற்றும் பல நேரலைகள்

உலகலாவிய இஸ்லாமிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (இணையத்தில்):
· MAKKAH LIVE மக்கா நேரலை (24x7 திருக்குர்ஆன்) : http://adiraitv.blogspot.com/2011/07/makka-live-new-link.html

· MADINA LIVE மதீனா நேரலை (24x7 ஹதீஸ்): http://adiraitv.blogspot.com/2011/07/madina-live.html

· ISLAM TV LIVE இஸ்லாம் டிவி (24x7ஆங்கிலம்): http://adiraitv.blogspot.com/2010/10/islam-tv.html

· HUDA TV LIVE ஹுதா டிவி (24x7 ஆங்கிலம்): http://adiraitv.blogspot.com/2010/11/huda-tv.html

· PEACE TV LIVE பீஸ் டிவி (24x7 ஆங்கிலம்): http://adiraitv.blogspot.com/2010/11/peace-tv-live_20.html


மக்கா நேரலை - 1 
Makka Live
Madina Live
SAUDI CHANNEL 2
SAUDI CHANNEL 2
RAMADAN TV AL MAJD QURAN TV 

SHARJAH TV
NDTV  
PEACE TV 
மக்கள் TV 
Makka Live 
BBC  
Madina Live 
CNN  
ISLAM TV 
Al Jazeera - Eng 
HUDA TV 
Al Jazeera - Ara  
SAUDI CHANNEL 1 
CNBC  
SAUDI CHANNEL 2 
OLD CARTOON 
RAMADAN TV
 NASA TV 
AL MAJD QURAN TV  
SHARJAH TV

Source

உங்கள் வீட்டிற்கு ரமலான் குறியீடு


Friday, August 12, 2011

பாலியல் கல்விக்கு ஆதரவாக பழமைவாத இமாம்

பள்ளிகளில் பாலியல் கல்வி யை அறிமுகப்படுத்தவேண்டும் என்று சவூதி நாட்டைச் சேர்ந்த பழமை வாத இமாம் ஒருவர் குரல் கொடுத்திருக்கிறார்.

சவூதி அரேபியாவில் பழமைவாத ஆளுமை மிக்க புரைதா மாகாணத்தில் உள்ள பெரிய பள்ளியான இமாம் முஹம்மது இப்னு அப்துல்வஹ்ஹாப் பள்ளியின் இமாமாக ஸாலிஹ் அல் வன்யான் என்பவர் உள்ளார்.
கடந்த வெள்ளியன்று நடைபெற்ற வாராந்திர தொழுகையின் போதான உரையில் "இந்தப்(பாலியல்) பிரச்னை பற்றி வெளிப்படையான விவாதங்கள் நடைபெறவேண்டும்" என்றும், "சமூகத்தில் அதிகரித்துவரும் சிறார் வன்புணர்வுகளை எதிர்கொள்ள பள்ளிகளில் பாலியல் கல்வியை அறிமுகம் செய்ய வேண்டும்" என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். "இதைப் பேசுவது வெட்கக்கேடானது அல்ல" என்றார் அவர்.

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா? உங்கள் அனைவரையும் கவரும். பகுதி 1. VIDEO 1&2 of 14.

சற்று பொறுமையுடன் காணொளியை செவியுற்று அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.

தீவிரவாதத்தின் காரணகாரியங்கள் என்னென்ன?. பயங்கரவாதத்தின் பொருள் என்ன?

நீதிஅரசர் ஜஸ்டிஸ் ஹோபெட் சுரேஷ் அவர்கள் தலைமையில் டாக்டர் சாகிர் நாயக் அவர்களின் விளக்க உரையும் கேள்வி பதில்களும்.

விடியோ வாயிலாக உங்கள் முன் வைக்கப்படும் விளக்கங்கள்.


Wednesday, August 10, 2011

இஸ்லாமியச் சட்டம்


மாற்றுச் சட்டங்கள்
ஏமாற்றும் உலகை;
கற்பழித்தாலும்
கரம்காட்டிச் சிரிப்பான்;
என்னக் கொடுமை!

ஓட்டையுள்ளச் சட்டம்
ஒழிக்காதுத் தீமை;
தடுக்க நினைத்தாலும்
போகும் வேகம் ஆமை!

குறையில்லாத
மறைத் தந்த வேதம்;
இல்லாதச் சட்டமில்லை;
வெல்லாத நீதியில்லை!

எட்டுத்திக்கும் ஒலிக்கும்
ஒயாத நேர்மை;
எல்லோரையும் ஒன்றாகக் காணும்
இஸ்லாமியப் பார்வை!

இரும்பாய் தோணும்
சட்டங்கள் கயவனுக்கு;
கடுமையானச் சட்டங்கள்
முகம் சிரிக்கும் நல்லவனுக்கு!

கண்ணுக்குக் கண்
பல்லுக்குப் பல்;
கயமைக்குக் கொடுமை;
நேர்மைக்கு இனிமை!

கிடைக்கும் நேரம்
படித்திடுங்கள் மறைவேதம்;
சவால் விட்டுச்சொல்லும்
கண்டுபிடியுங்கள் குறையேதும்!

இரண்டரை சதவீதம் ஜகாத் ("வளர்ச்சி அடைதல்", "தூய்மைப் படுத்துதல்")

மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு, அல்லாஹ்வும் இரக்கம்  காட்ட மாட்டான். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜரீ இப்னு அப்துல்லாஹ்(ரழி) நூல்: புகாரி,முஸ்லிம்,அஹ்மத்

தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். அல்குர்ஆன் 2:110

"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.  (குர்ஆன்  13:11)

ஏழை, எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும், வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள சொத்திலிருந்து ஏழை, எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களின் பங்கை முறைப்படி செலுத்துவதன் அவசியம் பற்றியும், அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ்வரும் குர்ஆன் வசனங்களைப் பார்த்து உணர்வு பெற வேண்டியது ஒவ்வொரு ஆண் பெண்மீது கடமையாகும். ஜகாத் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வசனங்கள் சில 2:43,83110,177,277, 4:77,162, 5:12,55, 7:156, 9:5

இரண்டரை சதவீதம் ஜகாத் ("தூய்மைப் படுத்துதல்")

"ஜகாத்" என்ற வார்த்தைக்கு "வளர்ச்சி அடைதல்", தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு.

(والزكاة في اللغة النماء يقال زكا الزرع إذا نما وترد أيضاً في المال, وترد بمعنى التطهير. وشرعاً بالإعتبارين معاً: أما بالأول فلأن إخراجها سبب للنماء في المال, أو بمعنى أن الأجر بسببها يكثر, أو بمعنى أن متعلقها الأموال ذات النماء كالتجارة والزراعة. دليل الأول ((مانقص مال من صدقة)) ولأنها يضاعف ثوابها كما جاء ((إن الله يربي الصدقة)) وأما بالثانى فلأنها طهرة للنفس من رذيلة البخل, وتطهير من الذنوب. فتح الباري شرح صحيح البخاري ج3/332)

Tuesday, August 9, 2011

ரமளான் நோன்புக்கஞ்சி செய்வது எப்படி?

ரமளானின் மாதத்தில் நோன்பு துறக்கும் சமயத்தில் ஒரு முக்கிய உணவாக உட்கொள்ளப்படும் நோன்புக்கஞ்சி, நாள் முழுவதும் உண்ணாமல் பருகாமல் இருக்கும் போது ஏற்படும் சோர்வை நீக்கிப் புத்துணர்வு பெற உதவும் ஓர் அற்புத உணவாகும்.
{mosimage}
தேவையான பொருள்கள்
பச்சரிசி = 400-500 கிராம்
கடலைப்பருப்பு = 50 கிராம்
வெந்தயம் = 50 கிராம்
பூண்டு = 6-7 பற்கள்
இஞ்சி-பூண்டு பேஸ்ட் = 2 தேக்கரண்டி
ஜீரகத்தூள் = 2-4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் = சிறிதளவு
மிளகாய்த்தூள் = சிறிதளவு
உப்பு = தேவையான அளவு
கறி மசாலா = 1 தேக்கரண்டி
சமையல் எண்ணை = தேவையான அளவு
தக்காளி = 2-3 பழங்கள்.
வெங்காயம் = 2-3 அல்லது தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் = தேவைக்கேற்ப
புதினா-மல்லி = தேவையான அளவு
எலுமிச்சை = 1 பழம்
தேங்காய்ப் பால் = 300 மில்லி
ஆட்டிறைச்சி/நெஞ்செலும்பு = 100-200 கிராம்
சமையல் குறிப்பு விபரம்
செய்வது: எளிது
நபர்கள்: 4-6

தயாராகும் நேரம்: 20 (நிமிடம்)

சமைக்கும் நேரம்: 90 (நிமிடம்)

முன்னேற்பாடுகள்:
1. அரிசியுடன் கடலைப் பருப்பையும், வெந்தயத்தையும் கலந்து நன்கு கழுவியபின் தண்ணீரை வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

2. ஆட்டிறைச்சி/நெஞ்செலும்பை தண்ணீரில் கழுவி மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு சிறிதளவு கலந்து தயாராக வைத்துக் கொள்ளவும்.

3. தக்காளி, வெங்காயத்தை ஸ்லைசாக நறுக்கிக் கொள்ளவும்.

4. புதினா, மல்லி, மிளகாய் ஆகியவற்றையும் நறுக்கிக் கொள்ளவும்.

செய்முறை:
5. சட்டியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சமையல் எண்ணையை தேவையான அளவுக்கு விட்டு சற்று சூடான பிறகு வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
6. வதக்கிய வெங்காயத்துடன் தக்காளியையும் சேர்த்து மீண்டும் வதக்கி சுத்தம் செய்து தயாராக இருக்கும்  ஆட்டிறைச்சி/ நெஞ்செலும்யையும் சேர்த்து  தேவையான அளவு ஜீரகம், மசாலாத்தூள் கலந்து கிளறி தொடர்ந்து வதக்கவும். தேவைக்கேற்ப பச்சைப்பட்டாணி, கேரட், பீன்ஸ் ஆகியவற்றையும் வதக்கும் போது சேர்த்துக் கொள்ளவும்.
7. தேவைப்பட்டால் சிறிதளவு தயிர் கலந்து வதக்கவும்.
8. புதினா-மல்லி, மிளகாய் ஆகியவற்றைத் தூவி, சட்டியை 5-6 நிமிடங்கள் மூடவும்.

9. சட்டியின் அடி பிடிக்காதவாறு தீயை தேவையான அளவு வைத்துக் கொண்டு 1:3 விகிதத்தில் தண்ணீரைக் கலந்து கொதிக்க விடவும்.

10. கொதித்துக் கொண்டிருக்கும்போதே வெந்தயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.

11. அடுப்பின் தீயை சற்று ஏற்றி மசாலா கலவையுடன் தண்ணீரை நன்கு கொதிக்க விடவும்.

12. கொதிக்கும் கலவையில் வெந்தயம், கடலைப் பருப்பு கலந்து ஊற வைத்த அரிசியை தண்ணீரை வடித்து சட்டிக்குள் மெல்ல இட்டு தொடர்ந்து 30-45 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

13. கொதித்துக் கொண்டிருக்கும்போதே பாதியளவு எலுமிச்சை பழத்தின் சாற்றை பிழிந்து சட்டியில் இடவும்.

14. அரிசி வெந்ததும், தேங்காய்ப்பாலை தேவையான அளவு சேர்த்து மேலும் கொதிக்க விடவும்.

15. தேவையான அளவு உப்பிட்டு கரண்டியால் சட்டியின் அடிப்பாகம் பிடித்திருந்தால் நன்கு கிளறவும். பிறகு, மேலும் சிறிது தண்ணீர் கலந்த தேங்காய்ப்பாலை இட்டு கிளறவும்.

16. புதினா இலைகளை மட்டும் தனியாக வெட்டியெடுத்து கஞ்சியில் தூவி, தீயின் அளவை வெகுவாக குறைத்து  சட்டியை நன்கு மூடிவைக்கவும்.

17. பரிமாறும் முன் அடுப்பை அணைத்துவிட்டு சட்டியைத் திறந்தால் கமகம மூலிகைக் கஞ்சி தயாராக இருக்கும்.

பின்குறிப்பு: கஞ்சியுடன் பேரிச்சம்பழத்தைக் கடித்துக் கொண்டே குடித்தால் இனிப்பும் காரமும் கலந்து வித்தியாசமான சுவையை அனுபவிக்கலாம்.
தொகுப்பு: நல்லடியார்
Source : satyamargam.com

Monday, August 8, 2011

நீடூர். S.A.மன்சூர் அலி வழங்கும் மகளே கேள் !



நீடூர். S.A.மன்சூர் அலியுடன் நேர்காணல் - by: ஜே.பி.ஜவஹர் அலி


நீடூர் மன்சூர் அலி M.A., B.Ed., அவர்கள் சென்னை வண்டலூர் கிரஸன்ட் மேல் நிலைப்பள்ளியில் இஸ்லாமிய பாடவியல் (Islamic Studies) ஆசிரியராகவும், மாணவர் நல ஆலோசகராகவும், மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் பணியாற்றியவர்.


மன்சூர் அலி அவர்கள் தி கார்டன் அகாடமி (The Garden Academy)Please visit :http://www.thegardenacademy.in/) எனும் மனித வள மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் கல்வி நிறுவனங்களின் அழைப்புகளை ஏற்று, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மனித வள மேம்பாட்டுப் (Human Resource Development) பயிற்சி அளித்து வருகிறார்.


S.E.A. முஹம்மது அலி ஜின்னா
Jazakkallahu Hairan
நன்றி : http://niduronline.com/

Sunday, August 7, 2011

ஏற்கவோ? மறுக்கவோ?



அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ...
அன்பான சகோதரர்களுக்கு,
என் நண்பர் அபுஇபுறாஹிம் சத்தியமார்க்கம்.com வலைத் தளத்தினை அறிமுகம் செய்துவைத்த நாள் முதல் தொடர்ந்து வாசித்து வருகிறேன், அல்ஹம்துலில்லாஹ்.


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் புனித மிக்க ரமலான் மாதத்தில் இருக்கும் இந்த நேரத்தில் உங்களிடம் எனக்கு இருக்கும் சில ஐயங்களைப் பகிர்ந்து, அதற்கான மார்க்க விளக்கங்களைப் பெற விரும்புகிறேன் இன்ஷா அல்லாஹ்.

அறியாமைக் காலத்தில் இருந்த நாட்களில் எனக்காக என் பெற்றோர் சேமித்து வைத்திருந்த நகைகள், நிரந்தர வைப்புத் தொகை இப்படியாக என்று சமீபத்தில் என் உடன்பிறந்த இளைய சகோதரர் (அவருக்கும் அல்லாஹ் நேர்வழியை நாடட்டும்) ஒரு குறிப்பிட்ட தொகையையும், 112 சவரன் நகைகளையும் என்னிடம் கொடுத்தார். நான் வாங்க மறுத்து விட்டேன். அவரும் வலுக்கட்டாயமாக, "இது தந்தை உனக்காகச் சேர்த்து வைத்தது. எனவே உனக்கே உரியது" என்று சொல்லி என்னிடமே விட்டுச் சென்று விட்டார். கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து அவை என்னிடமே இருக்கின்றன.

LinkWithin

Related Posts with Thumbnails