Thursday, December 3, 2009

AL QUR'AN -- Al Fathiha

AL QUR'AN -- Al Fathiha

In the name of Allah The most Gracious The most Merciful!


Surah Al Fatiha

AL QUR'AN -- Al Fathiha


In the name of Allah, Most Gracious, Most Merciful.
-----------------------------------
AL QUR'AN -- Al Fathiha


1In the name of Allah, Most Gracious, Most Merciful.

2Praise be to Allah, the Cherisher and Sustainer of the worlds;

3Most Gracious, Most Merciful;

4Master of the Day of Judgment.

5Thee do we worship, and Thine aid we seek.

6Show us the straight way,

7The way of those on whom Thou hast bestowed Thy Grace, those whose (portion) is not wrath, and who go not astray.

Saturday, November 21, 2009

இஸ்லாமியச் சட்டம் (4)

நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்
வழக்கறிஞர்.

அன்பளிப்பு’ ஓர் அலசல் – 1
ஆங்கிலத்தில் றூஷ்க்ஷூமி என்று சொல்லப்படுவதற்கும், முஸ்லிம் சட்டத்தில் ஹிபா என்று சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு. ஒருவர் தன் சொத்துக்களை மற்றவருக்குப் பிரதி உபகாரம் எதிர்ப்பார்க்காமல் வழங்கி, அந்தச் சொத்துக்களை அவருக்கு உரிமையாக்குவதே அன்பளிப்பு எனப்படும். முஸ்லிம் சட்டத்தில் குறிப்பிடப்படுகின்ற அன்பளிப்பிற்கு மூன்று முக்கிய நிபந்தனைகள் உண்டு
1.             அன்பளிப்பு அளிப்பவர், அன்பளிப்புக் கொடுப்பதாக உறுதிப்படுத்த வேண்டும்.
2.            அந்த அன்பளிப்பைப் பெற்றுக் கொண்டதாக, அன்பளிப்பைப் பெற்றவர் தெரிவிக்க  வேண்டும்.
3.            அன்பளிப்பு  வழக்கியவரிடமிருந்து அன்பளிப்பு பெற்றவருக்குப் பொருள் கை மாற  வேண்டும்.
இவற்றில் முதலாவது நிபந்தனை அன்பளிப்பு வழங்கியவரின் நோக்கத்தையும், இரண்டாவது நிபந்தனை அன்பளிப்பு பெற்றுக் கொண்டவரின் இசைவையும் தெரிவிக்கின்றன. மூன்றாவது நிபந்தனை முஸ்லிம் சட்டத்தின் தனிச்சிறப்பாக விளங்குகிறது. அன்பளிப்பு வழங்க வேண்டும் என்ற உண்மையான எண்ணமின்றி, பொய்யான வெகுமதியாகவோ, பினாமி மாற்றமாகவோ இருப்பின் அந்த அன்பளிப்பு செல்லாது.
முஸ்லிம் சட்டப்படி அன்பளிப்பு வழங்குவது எழுத்து மூலம் இருக்க வேண்டிய அவசியமில்லை; வாய்மொழியாகவும் இருக்கலாம். வீ.P.புஉமி 1292 2வது சட்டத்திலிருந்து முஸ்லிம் சட்டத்திற்கு விதி விலக்கு உண்டு.
எடுத்துக்காட்டாக “பு” என்பவர் ஒரு பெரிய கூட்டத்திற்கு முன்னால் தன்னுடைய நிலங்களை “ய” என்பவருக்கு வெகுமதியாகக் கொடுத்துவிட்டதாக அறிவித்து, அந்த நிலத்தை அனுபவிக்கும் உரிமையையும் “ய” என்பாரிடம் கொடுத்து விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த அன்பளிப்புக்காகப் பத்திரம் எழுதுவதோ, பதிவு செய்வதோ அவசியம் கிடையாது. எனினும் சாட்சியைப் பதிவு செய்து கொள்வது நன்று. மேலும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படின், பதிவு(ரிஜிஸ்ட்டிரே­ன்) செய்து கொள்வதும் நன்று. ஆனால், அனுபவிக்கின்ற உரிமை கைமாறாத வரைப்பதிவு செய்தாலும் கூட அன்பளிப்பு செல்லாது.
செல்வதும் செல்லாததும் :
புத்தி சுவாதீனமுள்ள மைனர் அல்லாத எந்த முஸ்லிமும் தன் உடைமைகளை அன்பளிப்பாகக் கொடுக்கலாம். கடன்காரர்களை ஏமாற்றுவதற்காகக் கொடுக்கப்படும் அன்பளிப்புகள், கடன் கொடுத்தவர்களின் அனுமதியின் பேரிலேயே செல்லுபடியாகும். பிறக்காத குழந்தைக்கு அன்பளிப்பு கொடுப்பது செல்லாது. இஸ்லாமியச் சட்டப்படி, ஒருவர் தன் வாரிசுகளில் சிலருக்கு, மற்ற வாரிசுகளின் அனுமதியின்றி உயில் மூலம் சொத்துக்களை வழங்க முடியாது. ஆனால் ஒருவர் தன் வாரிசுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம்.
முஸ்லிம் தன் வாரிசுகளுக்கு எந்தவிதச் சொத்துக்களையும் கொடுக்காமல் உறவினர் அல்லாத வேறு ஒருவருக்கு தன் சொத்துக்களை முழுவதையும் கூட அன்பளிப்பாகக் கொடுக்க முடியும். ஆனால் இது போன்ற அன்பளிப்புக்களை மரணத் தருவாயில் வழங்க முடியாது. வாடகைக்கு விடப்பட்டிருக்கும் சொத்துக்கள், ஜப்தியில் உள்ள சொத்துக்களை இன்சூரன்ஸ் பாலிசி, ஒரு சொத்தின் குறிப்பிட்ட பகுதியிலிருந்து வருகின்ற வருமானம் ஆகியவற்றை அன்பளிப்புகளாக வழங்கலாம்.
ஹிபா பற்றி ஹிதாயா

ஹிதாயா என்னும் சட்டப்புத்தகத்தில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது. கொடுக்கப் படுகின்ற சொத்திலிருந்து பெறுபவனுக்கு வருமானமோ, இலாபமோ கிடைக்க வேண்டும் என்பதே ஹிபா என்னும் அன்பளிப்பின் நோக்கமாகும். அன்பளிப்பு பெறுபவரிடமிருந்து மாற்றாக எதையும் பெற்றுக் கொள்ளாமல், ஒரு பொருளை அவருக்கு உரிமையாக்கித் தருவதுதான் அன்பளிப்பு.
அன்பளிப்பு ஓர் அலசல் – 2
அசையாப் பொருள் அன்பளிப்பு
கணவன் Š மனைவி  இருவரில் ஒருவர் மற்றவருக்கு வழங்கும் அசையாப்பொருள் அன்பளிப்பு பற்றி செக்­ன் 152(3) விவரிக்கிறது. கணவன் தன் மனைவிக்கு ஒரு வீட்டை அன்பளிப்பாக கொடுத்து விட்டான். ஆனால் அதே வீட்டில் மனைவியுடன் அவனும் குடியிருக்கிறான். இந்த அன்பளிப்பு செல்லும். இது போன்ற வழக்குகளில் வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தால், கணவன் தனக்காக வாடகை வாங்காமல், மனைவிக்காக வாடகை வாங்குகிறானா என்பதைத் தான் கவனிக்க வேண்டும்.
ஆமீனா பீவி Š Vவி கதீஜா பீவி என்ற வழக்கில் கணவன் Š மனைவி இருவரும் தங்கியிருந்த ஒரு வீட்டை மனைவிக்காக கணவன் அன்பளிப்பு கொடுக்கிறார். அந்த வீட்டோடு சேர்ந்த பக்கத்து வீடு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. மனைவிக்காகவே கணவன் வாடகை வசூலித்த காரணத்தினால் இந்த அன்பளிப்பு செல்லும் எனத் தீர்ப்பானது.
மாமி Vவி. கலந்தரம்மாள் என்னும் வழக்கில் கணவன் ஒரு வீட்டை மனைவிக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விடுகிறார். நகரசபைப் பதிவுகளில் பெயர்மாற்றம் செய்யப்பட்டு மனைவியே அந்த சொத்தின் உரிமையாளர் என்று குறிக்கவும் பட்டுவிட்டது. பிரிவு கவுன்சில் இந்த வழக்கில் தீர்ப்புக் கூறும் போது “கணவன் மைதீனால் நகரசபைப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு முஸ்லிம் தன் மனைவிக்கு வீட்டை அன்பளிப்புக் கொடுத்தவுடன் பெயர் மாற்றம் செய்தது நீரூபிக்கப்பட்டால், கணவன் செய்யும் காரியங்கள் அனைத்தும் மனைவிக்காகத் தான் செய்யப்படுகின்றன என்றே நாம் கருதிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது”.
முஹம்மது சாதிக் Vவி பக்ரஜமான் என்ற வழக்கில் (1932 Š லக்னோ) கணவன் தன் மனைவிக்கு அன்பளிப்பு கொடுத்த சொத்தின் அனுபவிக்கும் உரிமையை அளித்துவிட்டதாக அன்பளிப்புப் பத்திரத்தில் குறிப்பிட்டு, அந்தப் பத்திரத்தை அவளிடம் ஒப்படைத்திருந்தான்.  அன்பளிப்பு செல்லுபடியாகும் என்றும், பெயர் மாற்றம் தேவையில்லை என்றும் தீர்ப்பாகியுள்ளது.
மைனர்களின் அன்பளிப்பு :
மைனர்களுக்கு தகப்பனாரோ, காப்பாளரோ கொடுக்கும் அன்பளிப்புகளில் அனுபவிக்கும் உரிமையைக் கூட ஒப்படைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அன்பளிப்புக் கொடுத்தவரின் உண்மையான எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொண்டால் போதுமானது.
மைனர் குழந்தையோடு மற்றொரு மேஜருக்கும் சேர்த்து அன்பளிப்பு கொடுக்கப்படுமேயானால் அனுபவிக்கும் உரிமையை ஒப்படைத்தாக வேண்டும். உதாரணமாக மைனர் மகளுக்கும், அவளுடைய மேஜர் கணவனுக்கும் அன்பளிப்புக் கொடுக்கப்படுமேயானால் அனுபவிக்கும் உரிமையை அளித்தாக வேண்டும் என்று சுக்ரபாய் Š Vவி முகம்மது அலி (1934Šபம்பாய்) வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
1960Šல் கேரளாவில் ஒரு வழக்கு “வலியபீடிக்கன்படி கதீஜா உம்மா Š Vவி – பதக்களம்; 1960 கேரளா எல்.ஆர்” வழக்கு என்பது அதன் பெயர். ஒரு ஹனபி முஸ்லிம் மைனராக இருந்த தன் மனைவிக்கு பதிவு செய்த பத்திரத்தின் மூலம் அசையா சொத்துக்கள் உள்ளிட்ட தன் சொத்துக்களை அன்பளிப்பாகக் கொடுத்தார். அவருடைய மனைவிக்காக மனைவியின் தாயார்  அந்த அன்பளிப்பை பெற்றுக் கொண்டார். அந்த வீட்டில்தான் கணவனும் மனைவியும் வசித்து வந்தனர். ஆனால் அந்த நேரத்தில் பெண்ணின் தந்தையோ, தந்தையின் தந்தையோ உயிருடன் இல்லை. மேலும் அப்பெண்ணின் தாயிடம் அன்பளிப்புப் பத்திரத்தைக் கொடுத்து அனுபவ உரிமையை சிவில் கோர்ட் நியமிக்கும் ஒரு காப்பாளரிடம் ஒப்படைக்கவும் இல்லை. அப்படியிருந்தும் சட்டப்படி இந்த அன்பளிப்பு செல்லும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் அன்பளிப்புப்  பத்திரத்தை கணவன் தன் மனைவியிடமே கொடுத்திருந்தால் முஸ்லிம் சட்டப்படி அன்பளிப்பு செல்லுபடியாகியிருக்கும்.
தந்தையின் தந்தையால் (பாட்டனால்) பேரன்களுக்கு அவர்கள் மைனர்களாக இருக்கும் போது அசையாப் பொருள் சொத்துக்கள் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. அந்த மைனர்களுக்காக அப்போது உயிரோடு இருந்த அவர்களின் தகப்பனாரிடம் அனுபவிக்கும் உரிமையை அளிக்காமல், அவர்களின் தாயிடம் அது வழங்கப்பட்டது. இந்த அன்பளிப்பு முற்றுப் பெறவில்லை என 1960 Š பம்பாய் Š 210 என்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. (டி.பி.ஆக்ட் 1882, செக்­ன் 122) தாய்க்கும், மைனர் குழந்தைக்கும் சேர்த்து அன்பளிப்புக் கொடுக்கப்பட்ட சமயத்தில் அதன் பொசி­னை தாய் மட்டும் பெற்றுக் கொண்டாலும், மைனர் குழந்தைக்கும் சேர்த்து எடுத்துக் கொண்டதாகவே கருத வேண்டும் என்று 1962 ஜே.கே.4(7) என்னும் வழக்கில் தீர்ப்பாயிற்று.
மைனர் என்பதற்காகவே அன்பளிப்பை ஏற்றுக் கொள்வதை முஸ்லிம் சட்டம் தடுக்கவில்லை. (1959 எம்.பி.சி.212) மைனரின் காப்பாளராகச் சட்டப்படி உள்ள தந்தையல்லாத வேறு ஒருவர் டிரஸ்டியாக இருந்து மைனருக்காக அன்பளிப்பைப் பெற்றுக் கொள்வது சட்டப்படி செல்லும். (1963 Š சென்னை, 186).

Wednesday, November 11, 2009

ஏமாற்றம் ...

மாதவி, என் தூரத்து உறவுக்காரப் பெண்.  என் முறைப் பெண்ணுங்கூட.  கல்லூரியில் பயின்று வந்த எனக்கு என் திருமணத்தில் எனது பெற்றோர் காட்டிவந்த அளவு அவசரம் தெரியவில்லை.  ஆனால் பெற்றோர் மன நிறைவோடு நடைபெறும் திருமணம் வாழ்வில் நல்லது பயக்கும் என்ற கருத்தால் ஈர்க்கப்பட்ட நான் ஒப்புதல் அளித்துவிட்டேன்.  மாதவி அழகி தான்.  கல்லூரியில் புதுமுக வகுப்புவரை படித்து நிறுத்திவிட்டவள்.  நான் பி.ஏ.வை இந்த ஆண்டோடு முடிக்க வேண்டும்.  மாதவியின் வீட்டில் எல்லோருக்கும் அவளை எனக்கு முடித்துவிட இஷ்டந்தான்.  ஆனால் அவள் என்னை நேசிக்கிறாளா? என்னை மணம் செய்து கொள்ள அவளது மனம் விரும்புகிறதா? இன்பமான வாழ்வு தேவை என்றால் இருவரும் விரும்பியேற்கும் மணத்தால் தான் இயலும் என்ற உண்மை, என்னை அவளது மனத்தை அறிந்து கொள்ள தூண்டியது.  தனித்து சந்திக்க சந்தர்ப்பம் கிட்டாதா என்று ஏங்கிக் கிடந்தேன்.
என் கையிலே ‘லாஸ்கி’ எழுதிய அரசியல் பாடப்புத்தகம் விரித்தபடியே இருந்தது.  கண்கள் புத்தகத்தை நோக்கியவாறே இருந்தன.  எண்ணதட புத்தகத்தைவிட்டு மாதவியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.
மாதவி மட்டும் என்னை மணக்க ப+ரண சம்மதம் தந்துவிட்டால் நான் தான் எவ்வளவு அதிர்ஷ்டக்காரன்.  அதோ மாதவி! ஏதோ பஸ்ஸை எதிர் பார்த்து நிற்கிறாள் போலும் நான் எதிரேயிருந்த ‘பஸ் ஸ்டாண்;டை’ நோக்கி குறுக்கே ஓடினேன்.
“கிரீச்…”
“அம்மா….”
நான் கண் விழித்த போது நான் இருந்த சூழ்நிலை எனக்கு எதுவுமே புரியவில்லை.  அருகிலே அழகே உருவமான அழகு மங்கை, அவளுக்குப் பக்கத்தில் ஒரு ஆள்! அவனதுபணிவும் அடக்கமும் காணும் போது அந்தப் பெண்ணுடைய பணியாள் போல காட்சியளித்தான்.  பக்கத்தில் பல படுக்கைகள் சிலருடைய கைகள் ‘பேண்டேஜ்’ போடப்பட்டு இருந்தன.  சிலரது கால்கள் தூக்கி வைக்கப்பட்டிருந்தன.  அதில் கட்டுகள் போடப்பட்டிருந்தன.
‘ஆ’…‘ஊ’… போன்ற முணகல்கள்.  நான் ஏதுமறியாமல் என் கையைத் தூக்கினேன் என் கைகளை ஊன்றி எழுந்திருக்க முயற்சித்தேன்.  வலதுபுறம் நொடித்து விழ இருந்த நேரத்தில் “மெதுவா எழுந்திருங்க” என்றவாறு அருகில் இருந்த அழகி எனக்கு உதவியளிக்க விரைந்தாள்.  நான் என் வலது கையை நோக்கினேன் ஐயோ…புஜத்திற்கு கீழ் என் கையைக் காணோம்! என் நினைவுகள் எங்கோ ஓடின.  நான் மாதவியைக் காண குறுக்கே பாயும் போது என்னை நோக்கி ஓடிவந்த காரின் நினைவு வந்தது!  நிலைமை விளக்கம் எனக்குக் கிடைத்துவிட்டது.  ‘ஓ’ வென மெதுவாகப் படுக்க வைத்தாள்.  அவள் கண்களிலே கலக்கம்.  என் மேல் இவ்வளவு அக்கரை வைத்துள்ள அவள் யார்?
நான் கேட்க வேண்டுமென்று நினைத்த கேள்வியை என் கண்கள் அவளைக் கேட்டது போலும்! திடீரென வீணையின் நரம்பு அதிர்ந்தது.  ஆம்; அவள் பேசினாள்.  “என்னை மன்னியுங்கள்.” என் அருகிலே இருந்து இது போல ஒரு அழகியின் குரல் பேசுவது இதுதான் முதல் முறை.  என் வாலிபம் இந்த இக்கட்டான நேரத்தில் கூட ப+ரித்தது.  உடலெல்லாம் ஏதோ ஒரு புத்துணர்ச்சி.  நான் அவளையே பார்த்தேன்.  என் விழி இன்னும் விளக்கம் கேட்பதைப் புரிந்து கொண்டள் போல கதையைக் கூறினாள்.
நான் கையிழந்த கதை இதுதான்.  மாதவியைக்கண்டு அவளது எண்ணமறிய குறுக்கே பாய்ந்த என்னை மஞ்சுளாவின் கார் மோதியது.  முடிவு என் கையை நானிழந்தேன்.  நான் மஞ்சுளாவுக்கு என் பெற்றோரின் முகவரி தந்து கடிதம் எழுதச் சொன்னேன்.  நான் அழபட்டபின் என்னை யாருமே வந்து பார்க்கவில்லை என்பதை மஞ்சுளா மூலம் அறிந்தேன்.  பின் நான் பஸ் ஸ்டாண்டில் பார்த்த மாதவி ஏன் என்னைப் பார்க்க வரவில்லை.  என்னால் மாதவியை அறிந்து கொள்ளவே முழயவில்லை.
என் பெற்றோர் வந்தனர்.  விஷயம் அறிந்த அவர்கள் துடித்த துடிப்பு!… அவர்களைச் சமாதானம் செய்வதற்குள் எனக்கு போதும் போதுமென ஆகிவிட்டது’ என் தாய் மஞ்சுளாவை வசை மலரால் அர்ச்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்.  அவள் அழுவதையன்றி வேறெதுவும் பேசவில்லை.  முழுக்குற்றம் என்மேல் தான் என்பதை எடுத்துக்கூறி விஷய விளக்கம் தந்தேன்.  நான் அடிபட்ட அந்நாளில் மாதவி எங்களுருக்கு வந்திருந்ததாக என் தாயாரி கூறினார்கள்.  பின் நான் பார்த்த அந்தப் பெண் யார்? மாதவியைப் போன்றிருந்த வேறொருத்தி.  நான் என் பைத்தியக்காரப் போக்கினை நினைத்து சிரித்துக் கொண்டேன்.
நாட்கள் ஓடின.  நான் ஆஸ்பத்திரியிலிருந்து ஒற்றைக் கையனாக வெளியேறினேன்.  மஞ்சுளா அடிக்கடி அவள் வீட்டிற்கு வரச் சொல்லியிருந்தாள்.  என் விடுதி அறையில் பொழுது போகாத நேரமெல்லாம் நான் மஞ்சுளாவை சந்திக்க ஆரம்பித்தேன்.  மஞ்சுளா ஒரு நாள் ஒரு வெடியைத் தூக்கிப் போட்டாள்.  அவள் என்னை மணக்க முடிவு செய்திருப்பதாக என்னிடம் துணிந்து கூறிவிட்டாள்.  தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் அது தான் எனச் சாதித்தாள்.  நான் மாதவியை மனநிறைவோடு ஏற்றுக் கொள்ள இருந்தேன்.  ஆனால் மாதவி என்னைப் பற்றி என்ன கருதுகிறாள் என்பதை உணர இயலாதவனாக இருந்தேன்.  இந்த நேரத்தில் மஞ்சுளா என்னை நேசிக்கிறாள் என்பதை கேட்டவுடன் என்னால் எந்தவித பதிலையும் கூறமுடியவில்லை.  அவளிடம் விரைவில் பதில் கூறுவதாக கூறி வெளியேறினேன்.
நான் சிந்தித்தேன்.  மஞ்சுளாவுக்கு என்ன முடிவு கூறுவது? அந்த நேரத்தில் என் வீட்டிலிருந்து வந்த கடிதம் என்னை ஒரு முடிவிற்கு வரச் செய்தது.  மாதவியின் பெற்றோருக்கு ஒரு கையிழந்த எனக்குப் பெண் தந்திட அவ்வளவாக விருப்பமில்லை என்பதை எழுதியிருந்தார்கள்.  என்னை விட்டு ஒரு பெரிய பாரம் இறங்கிவிட்டது.  மாதவி! நான் அவளை மனப்ப+ர்வமாக நேசித்தேன் அவள் மகிழ்ந்தாள்.  ஆனால் மாதவியை என்னால் மறக்கவே முடியவில்லை.
அன்று என் திருமண நாள் நண்பர்கள் குழாமோடு கேலியாகப் பொழுதுபோக்கிக் கொண்டிருந்த எனக்கு என் தந்தை நேரமாகிவிட்டதென்று ஆள் அனுப்பிவிட்டார்.  நண்பர்களை மணமேடைக்கு வரச்சொல்லிவிட்டு நான் முதலில் புறப்பட்டுவிட்டேன்.
மணமேடையில் நான் அமர்ந்திருந்தேன்.  மஞ்சுளாவை அழைத்துவந்தனர்.  அருகிலே மாதவியும் வந்தாள்.  என் கண் இருவரையும் பார்த்தது.  மனக்குரங்கு மீண்டும் தாவ ஆரம்பித்தது.  ஆனால் மஞ்சுளாவின் அந்த களங்கமில்லா முகத்தைக் கண்டதும் நான் தவறு புரிவதை உணர்ந்தேன்.  விரும்பாதவளை நினைத்து என்ன பயன்?

சபலம்---: (கதை)

மாலை நேரம்…
தங்களை அலங்கரித்துக் கொண்டு அருகே கணவன் வர மழலைச் செல்வங்களுடன் பெருமிதத்தோடு நடந்து சென்ற பெண்களைத் தன் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்த மாதவி ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.  அவளை அறியாது அவளது கண்கள் பொல பொலவென கண்ணீரைச் சிந்தின.
“ஏம்மா! அழறே”
“ஒண்ணுமில்லேடா கண்ணு!
தான் அழுவதைக் குழந்தை பார்த்துவிட்டதைக் கண்டு புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
“அழாதேம்மா… எனக்கும் அழ வருது…” குழந்தையின் கண்கள் கலங்கின.
“இல்லேடா கண்ணு. நான் அழமாட்டேன்”.
குழந்தை தனது அரும்பு விரலை தாயின் கண்ணீரைத் துடைக்க நீட்டியது.
மாதவி குழந்தையை அள்ளி அணைத்து கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள்.
இன்று அவள் முழு உரிமையுடன் தன் குழந்தைக்கு முத்தமிடுகிறாள்.  ஆனால் அவள் கணவன் இருந்தபோது அவர்களுக்குள் அடிக்கடி போட்டி தான்.
“நான் தான் என் கண்ணுக்கு முதலில் முத்தம் கொடுப்பேன்” அது அவள் கணவன்.
“முடியாது நான் தான்…” இது அவள்.
“ம்மாவுக்குத்தான்” என்று குழந்தை முடிவில்லாத போட்டியைத் தீர்த்து வைப்பான்.  அவள் கணவனுக்கு உடனே பொய்க் கோபம் வரும்.  குழந்தையைச் செல்லமாகக் கடிந்து கொள்வான்.  “சும்மா இருங்க! குழந்தை கிட்டே போய் உங்க கோபத்தையெல்லாம் காட்டாதீங்க.”
தாய் தனக்காகப் பரிவதைக் கண்ட குழந்தை அவளோடு ஒட்ழக்கொள்வான்.
“நாளையிலிருந்து உனக்கு பிஸ்கெட் வாங்கி தரமாட்டேன் போ” குழந்தை தனக்குச் சாதகமாக இல்லாததைக் கண்ட அவன் செல்லமாக மிரட்டுவான்.
“ம்மா வாங்கித் தருமே” இது குழந்தை.
“நான் உனக்கு பிஸ்கெட், பொம்மை எல்லாம் வாங்கித் தரேண்டா கண்ணு அப்பா பேச்சு “கா விட்டுடுடா” மாதவி கணவனை அழகு காட்டிக்கொண்டே குழந்தையிடம் கூறுவாள்.
“நீ அவனுக்கு சப்போர்ட் பண்ணி அவனைக் கெடுத்துடு” அவன் கோபத்தோடு ஆனால் செல்லமாக மாதவியின் கன்னத்தைத் தட்டுவான்.
அந்த நாட்கள்-இனிய நாட்கள் இனி இல்லாத நாட்களாகி விட்டன மாதவிக்கு.
கணவனோடு எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று கனவு கண்டாள் அவள்? இளமைக் காலத்துக் கனவுகள் அவளது இதயத் திரையில் அடிக்கடி தோன்றி மறையத் தான் செய்தன.  பாழும் சாவு இளமையிலேயே அவளது கணவனைக் கொத்திச் சென்றுவிடும் என்று அவளுக்குத் தான் தெரியுமா?
இன்று அவள் விதவை.  ஆம் ப+விழந்து, பொட்டியிழந்து புன்னகையிழந்து வாழ்கிறாள்.  அவள் இதழ் கடையோரத்தில் என்றாவது புன்னகை இழையோடுகிறது என்றால் அதற்குக் காரணமாக இருப்பவன் ரவி.  அவளது இரண்டு வயதுக் குழந்தை.  அவனது மழலை அவளது துயருக்கு ஆறுதல் வழங்கியது.  கணவனோடு வாழ்ந்த வரை கொடுத்து வைத்தவளாகத் தான் இருந்தாள்.  இப்போது அவன் கொடுத்ததை வைத்து வாழ்கிறாள்.
“ம்மா… அதோ பாரும்மா” மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவரில் தாயின் அரவணைப்போடு உட்கார்ந்திருந்த ரவி கீழே கை காட்டிக் கொண்டிருந்தான்.  அந்தப் பிஞ்சு விரல் சுட்டிக் காட்டிய திசை நோக்கி மாதவி பார்த்தாள்.  பலூன் விற்றுக்கொண்டு நின்று கொண்டிருந்த ஒருவன்.  அவனுக்கருகில் நின்று, வைத்த கண் வாங்காது அவளையே பார்த்துக் கொண்டிருந்த உருவத்தைப் பார்த்ததும்’ விருட்டென அவளையே பார்த்துக் கொண்டிருந்த உருவத்தைப் பார்த்ததும்’ விருட்டென ‘குழந்தையைத் தூக்கிகொண்டு உள்ளே சென்றுவிட்டாள் மாதவி!
அவள் கல்லூரி மாணவன் போல் தோற்றத்திற்குக் காட்சியளித்தான்.  மாலை நேரத்தில் மாதவி சிறிது மன ஆறுதலாக மொட்டை மாடியில் நிற்பதற்கும் ஆபத்தாக வந்தான் அவன்.  அந்தி மயங்கும் நேரத்தில் தனது குழந்தையை மாடியின் கைப்பிடிச் சுவரில் வைத்து வெளியே செல்லும் கார்களையும், வண்டிகளையும் காண்பிக்கும் போது அவன் முகத்தில் தோன்றும் புன்னகையை ரசிப்பதற்காக அவள் தினம் மொட்டை மாடிக்கு வருவது வழக்கம் அவனும் திடீரென எதிரேயுள்ள மரத்தடியில் தோன்றுவான்.  சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு யாரும் இல்லாவிடில் அவளை நோக்கி மெதுவாகக் கையாட்டுவான்.  மாதவி அவனைக் கண்டதும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்று விடுவாள்.
மாதவி வழக்கம் போல் அன்றும் மாடிக்கு வந்தாள்.  குழந்தைக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தாள்.  இளம் ஜோடி ஒன்று உலகை மறந்து ஒருவர் இடுப்பை ஒருவர் அணைத்துக் கொண்டு சென்றது.  மாதவி அதைப் பார்த்தாள்; அவள் உள்ளத்தில் ஏதோ ஒரு கிளுகிளுப்பு எழுந்தோடியது.  வுழக்கம் போல் திடீரென அந்த வாலிபன் மரத்தடியில் தோன்றினான், மாதவிக்கு வழக்கம் போல் இன்று உள்ளே செல்ல மனம் வரவில்லை அவனையே பார்த்தாள்.  அவனுக்கு வெற்றி மெதுவாக அவளை நோக்கிக் கையை ஆட்டினான்.  மாதவி தன்னை மறந்தாள்.  இல்லை அவளது இளமை அவளை மறக்கச் செய்தது.  மெதுவாக அவனை நோக்கிக் கையை ஆட்ட கையைத் தூக்கினாள்.
“வீல்…….
அலறல் ஒலி! அவளது கையின் அரவணைப்போடு கைப்பிடிச் சுவரில் இருந்த ரவி தலைகீழாகக் கீழே சென்று கொண்டிருந்தான்.
“ஐயோ ரவி” கூச்சலிட்டுக் கொண்டே மாடியிலிருந்து ஓடி வந்தாள்.  சாலையில் குழந்தையைச் சுற்றிக் கூட்டம் கூடிவிட்டது.  கோபம் கொண்ட குழந்தையால் பிய்த்தெறியப் பட்ட பொம்மையைப் போல் ரவியின் உடல் சிதைந்து கிடந்தது.
“ரவி..” மாதவி கத்தினாள்.  அவளது குழந்தை – அவளது ஒரே ஆறுதல்… சாலையிலே இரத்த மெத்தை விரித்து அதிலே தூங்கிக் கொண்டிருந்தது.  நிம்மதியான தூக்கம்.
மாதவி மயங்கி விழுந்தாள்.  அவள் உள்ளத்தில் தோன்றிய ஏதோ ஒரு சபலம் அவளைக் கொல்லாமல் கொன்றுவிட்டது.
- நீடூர் அலி

புனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
தொகுப்பு:
நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்
வழக்கறிஞர்.
லைப்பைக் அல்லாஹும்ம லைப்பைக் லப்பைக்க லா ஷரீக்க லக்க லப்பைக் இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க் லா ஷரீக்க லக். ...
தல்பியா
வந்துவிட்டேன் இறைவா வந்துவிட்டேன்
உனக்கு இணை எவருமில்லை
வந்துவிட்டேன்
நிச்சயமாக அனைத்துக் புகழும்
அருட்கொடையும் உன்னுடையதே
உனக்கு இணை எவருமில்லை
உம்ரா நிய்யத்:
அல்லாஹும்ம  லப்பைக்க உம்ரத்தன்
இறைவா உம்ராவை நாடி நான்
இஹ்ராமைக்கட்டியுள்ளேன்.  இதை எனக்கு
இலேசாக்கித் தந்து ஏற்றுக் கொள்வாயாக.
உம்ரா
உம்ராவுடைய பர்ளு
1.  நிய்யத்    2. இஹ்ராம் ஆடை    3. தவாபு    4.  சயீ
5.  முடி சிரைத்தல்
ஹஜ் நிய்யத்
அல்லாஹ{ம்ம லப்பைக்க ஹஜ்ஜன்
இறiவா ஹஜ்ஜை நாடி நான் இஹ்ராமைக
கட்டியுள்ளேன்.  அதை இலேசாக்கிதந்து
ஏற்றுக் கொள்வாயாக.
ஹஜ்ஜுடைய பர்ளு

1.  நிய்யத்    2. இஹ்ராம்    3. தவாப்ஜியாரத்    4. சயீசெய்தல்
5.  அரபாத்தில் தங்குதல்
பிரயாண துஆ
  சுப்ஹானல்லதீ ஸக்கரலனா ஹாதா வமாகுன்னா லஹீ முக்ரினீன் வஇன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன் ஜித்தாவிலிரந்து மக்கா 76 கி;.மீ தூரம் 55 வது கி.மீட்டரில் ஹரம் எல்லை ஆரம்பம்.அங்கு ஒத வேண்டிய து.ஆ இறைவா இந்த இடம் நிச்சயமாக உன்னுடையதும்.  உன் திருத்தூதருடையதுமான புனிதமான இடமாகும்.  உன்னுடைய அடியார்களை எழுப்பும் அந்த நாளில் எனக்கு உனது வேதனையிலிருந்து அபயம் அளிப்பாயாக மக்கா நகரம் நுழையும் போது ஓதும் துஆ.
இறைவா திருமக்காவில் இருக்கும் வரை என் மனதிற்கு அமைதியைத் தந்து அருள்வாயாக ஹரம் ஷரீபான கஅபாவில் சபா மர்வாகுபதியில் (புயவந ழே.24)
பாபுஸ்ஸலாம் வாசல் வழியாக நுழையும் போது ஓத வேண்டிய துஆ.
பிஸ்மில்லாஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்! அல்லாஹ{ம்ம அன்தஸ்ஸலாம் வமின் கஸ்ஸலாம் வஇலைக்க யர்ஜிஉஸ்ஸலாம் ஹய்யினா…
யா அல்லாஹ்! நீயே சாந்தியானவன் உன் மூலமே சாந்தி ஏற்படுகிறது.  எனவே எங்களைப் படைத்து பரிபாலிப்பவனே! எங்களை சாந்தியோடு வாழச் செய்வாயாக! ஆதன் பின் ஸலவாத் ஓத வேண்டும்.
முதன் முதலாக கஅபாவைப் பார்த்தவுடன் ஓதவேண்டிய துஆ:
யாஅல்லாஹ்! புனிதமான இந்த உனது வீட்டிற்கு சிறப்பையும் மகத்துவத்தையும்; கண்ணியத்தையும் கம்பீரத்தையும் அதிகப் படுத்துவாயாக என் வாழ்க்கையில் கேட்கப்போகிற அனைத்து ஹலாலான, துஆக்களையும் ஏற்றுக் கொள்வாயாக (மற்றும் நாம் நினைக்கும் எல்லா துஆக்களையும் கேட்ட பிறகு) ஸலவாத் ஓத வேண்டும்.
துவாபை ஆரம்பிக்கும் முன்பு ஓதவேண்டிய துஆ:
புனிதம் மிக்க உனது திரு வீட்டை ஏழு சுற்று நாடி உம்ராவின் தவாபை உக்காகச் செய்கிறேன்.  அதை இலேசாக்கித் தந்து, என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! தவாப் ஆரம்பிக்கும் முன்பு “ஹஜ்ருல் அஸ்வத்” முன்பாக ஓதவேண்டிய துஆ.
இறைவா! உன்னை விசுவாசம் கொண்டவனாக, உனது கட்டளையை நிறைவேற்றியவனாக, உனது திருநபியின் வழியைப் பின்பற்றியவனாக, மேலும் உனது திருநபியின் மீது ஆசியும், ஆசீர்வாதமும் கூறியவனாக, உன் திருநாமம் கொண்டு ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிடுகிறேன்.  பிஸ்மில்லாஹி அல்லாஹீ அக்பர்.  தவாப் செய்து முடித்தவுடன் மகாமே இப்ராஹீம் பின்னால் 2 ரக அத் தொழுதபிறகு ஜம்ஜம் கிணறுக்குச் செல்ல வேண்டும்.
அங்கு ஓத வேண்டிய துஆ:
“பயனுள்ள கல்வியையும், தாராள சம்பத்தையும், இரண பாக்கியத்தையும், எல்லா நோய்களுக்கும் அருமருந்தாகவும் ஆக்கி வைக்க யா அல்லாஹ்! உன்னிடம் வேண்டுகிறேன்.
ஜம்ஜம் நீர் பருகியதும் கஅபாவின் வாசல் முல்தஜிமைப் பிடித்து ஓதவேண்டியதுஆ
“பழமையான புனிதமான இவ்வீட்டிற் குறித்தான யா! அல்லாஹ்! நரகிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக! ஷைத்தானை விட்டும் பாதுகாப்பாயாக! இன்னும் நீ எங்களுக்கு அளித்தவற்றில் அபிவிருத்தி (பரக்கத்) செய்வாயாக! உனது சிறந்த கூட்டத்தாரிகளில் எங்களை சேர்ப்பாயாக! நீ எங்கள் மீது புரிந்த அருளுக்காக, உனக்கே எல்லாப் புகழும்.  அனைத்து நபிமார்கள் தூதர்கள், நேசர்களின் தலைவரான எம்பெருமானார் நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் மீதும், இன்னும் அவர்களின் தோழர்கள், நேசர்கள், குடும்பத்தினர் மீதும், உனது அருள் உண்டாகட்டுமாக!” பிறகு சயீ செய்யச் செல்ல வேண்டும்.  பனீ மக்ஜும் வழியாக (கஃபா மஸ்ஜித் ஹராமை விட்டு வெளியாக வேண்டும்.
சுபா குன்றில் நின்று கஅபாவை முன்னோக்கி இரு கரங்களையும் வானத்தை நோக்கி ஏந்தி ஓதவேண்டிய துஆ:
“யா அல்லாஹ்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் கிளையார்கள் மீதும் ஸலாவாத்தும் பரக்கத்தும் அருள் புரிவாயாக.” அல்லாஹ{ அக்பர் (3 தடவை) அல்ஹம்து லில்லாஹ் நான்காம் கலிமாவை ஓதிக கொண்டே சயி செய்யலாம்.  மற்ற தெரிந்த, உலமாக்கள் கற்பிக்கும் துஆக்களையும் ஓதலாம் மைலனீல் அக்ளரைன் (பச்சை விளக்கு அடையாளமுள்ள இடம்) வரும் போது, “யா அல்லாஹ்! நீ அறிந்த பாவங்களிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக! என்று சொல்லி கஅபாவைப் பார்த்தவாறு ஆண்கள் மட்டும் ஓடவேண்டும்.  பெண்கள் மெதுவாக நடந்து செல்ல வேண்டும்.  இவ்வாறு 7 தடவை தபா மர்வாபவில் சுற்றி மர்வாவுக்கு வெளியே உள்ள சலூனில் சுன்னத்தான முறையில் அவசியம் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும்.  பெண்கள் தலைமுடியின் முனையை கத்தரித்துக் கொள்ள வேண்டும்.  இதோடு உம்ரா முடிந்துவிட்டது.  வீட்டிற்குச் சென்று இஹ்ராம் களைந்து குளித்து சாதாரண ஆடைகளை அணியலாம் தவாபு செய்யும் போது முறிந்தால் ஒளு செய்துவிட்டுத் தான் தொடர வேண்டும்.  பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் தவாபை நிறுத்தி வெளியாகிவிட வேண்டும்.  ஆனால் சயீ செய்யும் போது ஓளு முறிந்தாலும் மாதவிடாய் வந்தாலும் சயீ தொடரலாம்.  பெருமானார் (ஸல்) அவர்கள் மொத்தம் மூன்று உம்ராக்களையும் ஒரு ஹஜ்ஜையும் நிறைவேற்றினார்கள்.
ஹிஜ்ரி 7ம் ஆண்டிலிருந்து முஸ்லிம்கள் நபி வழியில் ஹஜ் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.
அரபாவிலுள்ள குன்று ஜபலுர்ரஹ்மத் (மலை) 30 மீட்டர் உயரம்.  மதீனாவில் மஸ்ஜித் நபவியில்மிம்பருக்கு அருகில் தூண்கள் உள்ள இடத்திற்கு, “றவ்ளத்துஷ் ஷரீபா” (சுவனப்  பூங்கா) என்று பெயர்.
மதீனா
மதீனா நகரம் ஜித்தவிலிருந்து 425கி.மீட்டரும், மக்காவிலிருந்து 497 கி.மீட்டரும் உள்ளது.  கடல் மட்டத்தை விட 597 மீட்டர் உயரத்தில் இருப்பதால் குளிர் காலத்தில் குளிர் அதிகமாகவும், கோடை காலத்தில் வெப்பம் அதிகமாகவும் இருக்கும்.  அதற்குத் தகுந்தாற் போல் ஆடைகள் எடுத்துச் செல்ல வேண்டும்.  குளிர் காலத்தில் செல்லும் போது காலுறை (சாக்ஸ்) எடுத்துச் செல்வது நல்லது.  மஸ்ஜித் நபவி ஏர்கண்டிஷன் செய்யப்பட்டுள்ளதால் உள்ளே காலை இரவு நேரங்களில் சாக்ஸ் அணிந்து குளிரைத் தடுக்கலாம்.
மக்காவிலிருந்து மதீனா செல்லும் போது குறைந்தது ஆயிரம் ஸலவாத் ஓத வேண்டும்.  பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) மதீனா வாழ்க்கை பற்றிய வரலாறும் படிக்கலாம்.
ஹஜ் கமிட்டி மூலம் செல்பவர்கள் கட்டிசோறு சேண்ட்விச், எலுமிச்சை சாதம், தயிர்சாதம் போன்றவற்றைப் பழங்கள், மருந்துகளுடன் எடுத்துச் சென்றால், மக்கா-மதீனா வழிப்பாதையில் உணவுக்காக நிறுத்தும் இடத்தில் ஹோட்டல் உணவைவிட, நாம் தயாரித்து எடுத்துச் சென்ற உணவை அந்த உணவு விடுதிலேயே வைத்து உண்ண வசதியாக இருக்கும்.  கூடிய வரை டின்களில் விற்கப்படும் பழச்சாறு பருகாமல், பழங்களையோ அல்லது புதிதாக தயார் செய்து தரும் பழச்சாறு பருகுவது நல்லது.  பாலில்லாமல் தேநீர் அருந்துவதும் உடல் நலத்துக்கு நல்லது.  பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அத்தர், வெண்மையான ஆடைகள் விருப்பமானது என்பதால் நாமும் வெள்ளைநிற ஆடைகள், மதீனாவில் உடுத்தி, அத்தர் அதிகமாக உபயோகிக்க வேண்டும்.  பேரீச்சம் பழம் தஸ்பீஹ் மணிகள், அத்தர் ஆகியவைகளை மதீனாவில் தான் வாங்க வேண்டும்.  மஸ்ஜித் நபவியில் ஒவ்வொரு முறை தொழுதுவிட்டு வரும் போதும் மறக்காமல் ரவ்ளா ஷரீப் சென்று பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்), அபுபக்கர் சித்தீக் (ரலி), உமர் (ரலி) ஆகியோருக்கு ஸலாம் சொல்லி வரவேண்டும்.
பாபுஸ்ஸாம் வழியாக மஸ்ஜித் நபவி சென்று மிக்க உள்ளச்சத்துடனும், மன அமைதியுடனும், கம்பீரத்துடனும் 70 முறை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கப்ருமபாரக்கின் அருகாமையில் ஓதுவதே சாலச் சிறந்ததாகும்.  “சுவன ப+ங்கா” எனப்படும் இடத்திலும் தஹஜ்ஜுத் மேடையிலும் சுன்னத், நபில் தொழுவது சிறப்பு.  நேரம் கிடைக்கும் போதெல்லாம் மஸ்ஜித் நபவியில் குர்ஆன் ஓதவேண்டும்.  தினமும் காலையில் பஜ்ரு தொழுதபிறகு மஸ்ஜித் நபவி அருகிலேயே உள்ள ஜன்னத்துல் பகீஃ சென்று அங்கு அடக்கமாகி இருக்கும் பெருமானார் (ஸல்) குடும்பத்தினர், சஹபாக்களையும் ஜியாரத் செய்து விட்டு வரவேண்டும்.  மதீனாவில் செல்ல வேண்டிய முக்கியமான இடங்கள்.
உஹத்மலை
வியாழக்கிழமை சென்று அங்கு ஷஹீதான ஹம்ஜா(ரலி), அப்துல்லா இப்னு ஜஹ்ஷ்(ரலி), ஸஹ்லுப்னு கைஸ் (ரலி) போன்ற சஹாபிகளுக்கு ஜியாரத் செய்யவேண்டும்.  அங்கு மொத்தம் 64 அன்சாரி சஹாபிகளுக்கும், 6 முஹாஜிரீன்களும் அடக்கப் பட்டு;ள்ளார்கள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஒரு பல் ஷஹீதான இடத்தையும் தெரிந்து கொண்டு அங்கும் சென்று வரலாம்.  தனியாக ஒரு நாள் அங்கு சென்று வந்தால் பொறுமையுடன் பார்த்து வரலாம்.

மஸ்ஜித் குபா
சனிக்கிழமை செல்வது சிறப்பாகும்.  “மஸ்ஜித் குபாவில்” தொழுவது உம்ரா செய்ததின் நன்மை ஆகும்.          – ஹதீஸ்
மஸ்ஜித் ஙமாமா
ஹிஜ்ரி 8 ம் ஆண்டு சுல்தான் ஹஸன் இப்னு முகம்முது சாலிஹ{வும் ஹிஜ்ரி 14ஆம் ஆண்டு துரக்கி சுல்தான் அப்துல் ஹமீத்கானும் புதுப்பித்தார்கள்.
மஸ்ஜித் கிப்லதைன்
பைதுல் முகத்தஸை நோக்கித் தொழுத முஸ்லீம்களை கஅபா திசை நோக்கித் தொழச் சொல்லி வஹீ வந்த பள்ளிவாசல்
கந்தக் அஹ்ஸாப் (அகழ்ப்போர்) நடந்த
இடத்தில் உள்ள 5 பள்ளிவாசல்கள்
ஹிஜ்ரி 5ம் ஆண்டு துல்க அதாபிறை 8ல் அகழ்வெட்டும் வேலை ஆரம்பமாகியது.  20 நாட்களில் வேலை முடிந்தது.  கடுங்குளிர், பட்டினி, ஓய்வு இல்லாமை காரணமாக பெருமானார் (ஸல்) அவர்களுக்குச் சில நேரத் தொழுகைகள் களாவானது.
“கந்தக்” என்றால் அகழி என்று பொருள்.  “அஹ்லாப்” என்றால் “படைகள்” என்று பொருள் காபிர்கள் ஒன்றுபட்டு படைகளுடன் வந்தால் அஹ்ஸாப் போர் எனப் பெயர் வந்தது” இந்த போரில் முஸ்லிம்கள் ஆயிரம் பேரும், எதிர்ப்படையினர் பத்தாயிரம் பேர்களும் கலந்து கொண்டனர்.  சல்மான் பார்ஸி(ரலி) அவர்கள் சொன்ன யோசனையின் பேரில் அகழி வெட்டப்பட்டது.
மஸ்ஜித் அப+பக்கர் (ரலி) மஸ்ஜித்
அலி (ரலி) 7 கிணறுகள்
பெருமானார் (ஸல்)
அவர்களுக்கு சலாம் சொல்லும் முறை
“அஸ்ஸாத்து அஸ்ஸலாமு அலைக்க யாரசூலல்லாஹ்” என்று 70 முறை சொல்லவேண்டும்.  70 முறை ஓதப்பட வேண்டுவது தனிச்சிறப்பு யாதெனில் இந்த எண்ணிக்கையில் ஏற்றுக் கொள்ளப்படுதலின் விசேஷ சிறப்பு இருக்கிறது.  என்பதால் தான் திருக்குர்ஆனிலும் முனாபிக்குகள் பற்றிஅ ண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. “நபியே! தாங்கள் அந்த முனாபிகளுக்காக 70 முறை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களுக்கு அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான்.
(சூரேதௌபா ஆயத்) 8: தாயகத்திலிருந்து புறப்படும் முன் உறவினர்கள், நண்பர்கள் பெருமானார், (ஸல்) அவர்களக்கு ஸலாம் சொல்லுமாறு வேண்டிக்கொண்டிருந்தால் அப்பெயர்களைச் சொல்லி ஸலாம் சொல்ல வேண்டும்.  பெயர்கள் நினைவில்லாவிட்டால். “அஸ்ஸலாது வஸ்ஸலாமு அலைக்க யாரசூலல்லாஹி” மிம்மன் அவ்ஸான வஸ்தவ்ஸானா பிஸ்மில்லாஹி அலைக்க
இதன் பொருள்
அல்லாஹ்வின் அருமைத் தூதரே!
சலாம்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று என்னிடம் வேண்டிக் கொண்ட அனைவரின் பெயர்களையும் தாங்கள் அறிவீர்கள்.  ஆவர்களைப் பற்றிய விபரங்களைப் பற்றியும் தாங்கள் அறிவீர்கள்! ஆவைகளை இப்போது ஒப்படைத்து விட்டோம்.  அன்பு கூர்ந்து அவற்றை ஏற்றுக் கொள்வீர்களாக!’ என்று அரபி தெரியாதவர்கள் தமிழிலேயே சொல்லலாம்.  பாபுஸ்ஸலாம் வழியாகச் சென்று, நபிகள் நாயகம் (ஸல்), அபூபக்கர் சித்தீக் (ரலி), உமர் (ரலி), ஆகியோருக்கு, சலாம் சொல்லியபின் கிப்லா திசை நோக்கி துஆ செய்த பிறகு பாபுஜிப்ரீல் வாசல் வழியாக வெளியே செல்ல வேண்டும்.
பெருமானார் (ஸல்) அவர்களுக்கு
ஸலாம் சொல்லும் வகைகள்
1.    அஸ்ஸலாத்து அஸ்ஸலாமு அகை;க யாரசூலுல்லாஹ்
2.    அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யுவரஹ்…
3.    அஸ்ஸலாமு அலைக்க யாரசூலுல்லாஹ்
4.    ஸல்லல்லாஹ{ அலைக்க யாரசூலுல்லாஹ். (ஏதாவது ஒன்றை 70 தடவைகள் சொல்ல வேண்டும்.
5.    அஸ்ஸலாமு அலைக்க யாரசூலுல்லாஹ், யாஹபீபுல்லாஹ் யாகைர கல்கில்லாஹ், யாசஃப் வதுலலலாஹ், யாஸய்யிதல் முர்சலீன், யாஇமாமல் முத்தகீன், யாஷபீஅல்முத்னிபீன் யாகாதமன் நபிய்யீன், அஸ்ஸலாமு அலைக்க வஅலா ஆலிக்க வஅஹ்லி பைத்திக வஅஸ்ஹாபிக அஜ்மஈன்.
தமிழில் “நபியே! உங்கள் மீதும், உங்களது கிளையார் குடும்பத்தார் மீதும், உங்களின் அருமை ஸஹபாக்கள் மீதும், அனைவர் மீதும் எங்கள் ஸலாம் உரித்தாக்குக! யா அல்லாஹ்! எங்கள் ஸலாம் உரித்தாக்குக! யா அல்லாஹ்! எங்கள் பெருமானார் அவர்களுக்கு வஸீலாவையும், சிறப்பையும், தந்தருள்வாயாக! மேலும் நீ பெருமானார் (ஸல்) அவர்களுக்கு வாக்களித்துள்ள புகழுக்குரிய இடத்தின் பால் மறுமையில் அனுப்புவாயாக!”

ஹஜ்
பிறை 8 (முதல் நாள்)

அதிகாலையில் குளித்து இஹ்ராம் துணி அணிந்து கஅபாவில் ஹஜ்ரே இஸ்மாயில் என்கிற (ஹதீம்) இடத்திலோ அல்லது கஅபாவில் ஏதாவது ஒரு இடத்திலோ, அங்கு இடம் கிடைக்காவி;ட்டால், தங்கி இருக்கும் இடத்திலோ, இரண்டு ரகஅத் தொழுது “ஹஜ்ஜை நாடி இஹ்ராம் கட்டியுள்ளேன்” அதற்குரிய செயல்களை எனக்கு இலேசாக்கித் தந்து, அவற்றை ஏற்றுக் கொள்வாயாக!” என்று நிய்யத் செய்த பின் ‘லப்பைக்க…’ என்ற தல்பியாவை மூன்று முறை சொல்ல வேண்டும்.
மக்காவிலேயே பஜ்ர் தொழுதபிறகு பேரூந்தில் மக்காவிலிருந்து புறப்பட்டு மினா சென்று, நமக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தங்க வேண்டும்.  மினாவில் லுஹர், அஸர், மக்ரிப், இஷா நாம் தங்கி இருக்கும் இடத்திலேயே ஜமாஅத்துடன் தொழ வேண்டும்.  அங்கேயே ஹஜ் தொடர்பான நூல்களையும் படிக்கச் சொல்லிக் கேட்பது, திக்ரு, செய்வது உலமாப் பெருமக்கள், பெரியோர்கள் சொற்பொழிவுகளைக் கேட்பது ஆகிய அமல்களில் ஈடுபடவேண்டும்,
பிறை 9 (2 ஆம் நாள்)
மினாவில் பஜ்ர் தொழுதபின் (முஜ்தலிபா வழியாக முஜ்தலிபாவில் நிற்காமல்) அரபாத் செல்ல வேண்டும்.
“ஹஜ் என்றால் என்ன?” என்று நஜ்திலிருந்து வந்த ஒரு ஜமாஅத் பெருமானார் (ஸல்) அவர்களைக் கேட்ட போது” அரபாத்தில் தங்குவது தான் ஹஜ்” என்றார்கள்.  துல்ஹஜ் பிறை 10ஆம் நாள் சுப்ஹ{வுக்கு முன்னதாக அரபாவுக்கு வந்து விடுபவர்களின் ஹஜ் நிறைவேறி விடும், என்று அறிவிப்பு கொடுக்கச் செய்தார்கள்.  அரபாவில் மஃரிபு நேரம் வரை இருந்து உம்மத்தின் மஃபிரத்துக்காக துஆ செய்தார்கள்.  அல்யவ்ம அக்மல்து லகும் தீனகும்.. “(இன்றைய நாளில்) உங்களுக்காக உங்கள் மீது என்னுடைய அருட்கொடைகளை (இன்று) முபமையாக்கித் தந்து விட்டேன்.”
-குர்ஆன் 5:4
என்ற புனித வசனம் அரபா நாளில் ஜும்ஆ நாள் மாலை அஸர் வேளைக்குப் பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள் ஒட்டகையில் அமர்ந்திருந்த போது அருளப்பட்டது.  வஹீயின் சுமையைத் தாங்க முடியாமல் ஒட்டகம் நிற்க முடியாமல் உட்கார்ந்துவிட்டது.
தீனின் கடமைகள் முழுமையுடைய ஹஜ் காரணமாக அமைந்துவிட்டது. லுஹர், அஸர் ஆகிய தொழுகைகளை அரபாவில் நம்முடன் தங்கி இருக்கும் பெரியோர்களைப் பின்பற்றி ஜமாஅத்தாகத் தொழவேண்டும்.  அரபாவில் இருக்கும் போது ஆண்கள் குளிப்பது விரும்பத்தக்க செயலாகும்.
அங்கு ஓதவேண்டிய துஆக்கள்:
அரபாவில் ஓத வேண்டியவை.
1.    “குல்ஹுவல்லாஹு…” சூரா     1000 தடவை
2.    யாஹய்யு யாகய்யூம்      1000 தடவை
3.    லாஇலாஹ இல்லா அன்தகசுப்ஹானக இன்னி குன்து மினல்லாலிமீன்            1000 தடவை
4.    மூன்றாம் கலிமா        1000 தடவை
5.    4ம் கலிமா            1000 தடவை
செய்யுமாறும அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.  ஹனபி மத்ஹபின்பழ ஹாஜிகள் முஜ்தலிபாவில் அதிகாலை   கிழக்கு வெளுத்ததிலிருந்து கதிரவன் உதிக்கும் வரை தங்கி இருப்பது வாஜிபு கடமையாகும்.  பிறை 9ல் தங்குவது லைலத்துல் கத்ர் இரவு போன்று மிகச் சிறப்பானது.  பிறை 11,12,13 ஆகிய நாட்களில் மூன்று ஷைத்தான்களுக்கும் கற்கள் எறிய 63 கற்களும், பிறை 10ல் பெரிய ஷைத்தானுக்கு மட்டும் எரிய 7 கற்களும் ஆக மொத்தம் 70 கற்களை முஜ்தலிபாவில் எடுத்துக்கொள்ள வேண்டும் “முஜ்தலிபா” என்பதற்குப் பொருள் “இணைதல்” பாவா ஆதம் (அலை) அவர்களும் அன்னை ஹவ்வா (அலை) அவர்களும் அறபாத்தில் பல ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து, முஜ்தலிபாவில் தான் ஒன்று கூடினார்கள் என்று வரலாறு கூறுகிறது.
பிறை 10-3ம் நாள்
முஜ்தலிபாவில் பஜ்ர் தொழுதபிறகு தான் மினா செல்ல வேண்டும் மினாவந்தபிறகு
1.    “ஜம்ரதுல் அகபா என்ற பெரிய ஷைத்தானுக்கு 7 கற்கள் எறிய வேண்டும்.
2.    குர்பானி கொடுக்க வேண்டும்.
3.    தலைமுடி எடுத்து இஹ்ராம் களைய வேண்டும்.
4.    மக்காவிற்குச் சென்று தவாபுஜியாரத் செய்ய வேண்டும்.
பிறை 10ல் பெரிய ஷைத்தானுக்கு, இஷ்ராக் தொழுகைக்குப் பிறகு
“பிஸ்மில்லாஹி அல்லாஹ{ அக்பர்”, என்று சொல்லி முதல் கல் வீசிய பிறகு, தல்பியா ஓதுவதை நிறுத்திவிட வேண்டும்.
ஷைத்தானுக்குக் கல் எறியும் போது ஓதும் துஆ
“ஷைத்தானை விரட்டுவதற்காகவும், அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், அவனின் திருநாமம் கொண்டு கல் எறிகிறேன். யா அல்லாஹ் எனது ஹஜ்ஜை ஏற்றுக் கொள்ளப்பட்ட தாயும், எனது பாவங்களை மன்னிக்கப்பட்டதாகவும் ஆக்குவாயாக! ஆமீன்!” நீண்ட துஆ ஓத முடியாது போனால் “பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறினால் போதும்.
ஷைத்தான்களின் பெயர்கள்
1.    ஐம்ரதுல் ஊலா
2.    ஐம்ரதுல் உஸ்தா
3.    ஐம்ரதுல் அகபாஹ்

பிறை 11-(4ம் நாள்)
1.    கதிரவன் நடு உச்சியைத் தாண்டிய பிறகு (ஜலால்) முதல் ஷைத்தானில் கல் எறிய ஆரம்பித்து வரிசையாகச் செல்ல வேண்டும்.  முதலில் பெரிய ஷைத்தானுக்கு எறிந்தால் தண்டம் கொடுக்க வேண்டும்.  திரும்பவும் எறிய வேண்டும்.
துல்ஹாஜ் 12 – (5 ம் நாள்)
பிறை 11ல் எறிந்தது போல வரிசையாக மூன்று ஷைத்தான்களுக்கும் கல் எறிய வேண்டும்.  பெரும்பாலோர் பிறை 12ல் கல் எறிந்த பிறகு கதிரவன் மறையுமுன் மக்காவிற்குச் சென்று விடுவார்கள்.  ஆனால் அடுத்த நாள் பிறை 13ல் தங்கிச் செல்வதே சுன்னத்தான நடைமுறை.
பிறை 13 – (6 ம் நாள்)
முஅல்லிமிடம் ஒரு குழுவாகச் சென்று “பிறை 13ல் தங்கிச் செல்ல விரும்புகிறோம்” என்று சொன்னால் சில கூடாரங்களைப் பிரிக்காமல், அங்கு தங்க ஏற்பாடு செய்வார்.  இல்லாவிட்டால் ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட மினா பள்ளிவாசலில் வசதியாகத் தங்கலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறை 11,12,13ல் ஜவால் நேரத்திற்குப் பிறகு தான் கல்லெறிந்தார்கள் அவர்கள் மினாவில் தங்கி இருந்த போது தான்.
“இதாஹாஅ நஸ்ருல்லாஹி” குர்ஆன் சூரா அருளப்பட்டது.
பிறை 13ல் மினாவில் தங்கி ஜவால் நேரத்துக்குபின் கல்லெறிந்த பிறகு தான் மக்கா புறப்பட்டார்கள்.
பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் பயணத்தில் குர்பானி கொடுத்தபின் மொட்டை அடித்துக் கொண்டது போல நாமும் செய்து, அவர்களைப் போலவே நாமும் 70 கற்களை ஷைத்தான்களுக்கு வீசி, அவர்கள் கேட்டதுபோல நாமும் துஆக்கள் தொழுகைகள், அமல்களில் ஈடுபட்டு அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்பட்ட பரிப+ரண ஹஜ்ஜை நிறைவேற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்! ஹஜ்முபாரக்!
மதீனா
நபிகள் நாயகம் (ஸல்) மஸ்ஜித் நபவியில் பகல் நேரத் தொழுகையான லுஹர் தொழுகையைத்தான் முதன் முதலில் தொழுதார்கள்.
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முதல் பெருநாள் தொழுகை நடந்தது.
“மதீனா” என்றால் “பட்டணம்” என்று பொருள். “மதீனத்துந்நபி” என்றால் நபியின் பட்டணம்.
“வெள்ளரியின் களிம்பை உலை அகற்றுவது போல மதீனா, நிச்சயமாக மனிதர்களின் பாவத்தை அகற்றிவிடும்”
மதீனாவின் தூசி தொழுநோய் முதலான அனைத்து நோய்களுக்கும் மருந்தாக இருக்கிறது.  “நபிமொழி
கைபர் போருக்குப் பிறகே மஸ்ஜித் நபவியில் மிம்பர் அமைக்கப்பட்டது.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு
வருகைதந்தது        கி.பி. 622
பத்ர் போர்        கி.பி. 624
உஹத் போர்        கி.பி. 625
கி.பி.1926ம் ஆண்டு மதீனாவின் மக்கட் தொகை 50,000
1978ல்            ஒரு லட்சம்,
1988ல்            ஏழு லட்சம்
மதீனாவில் தங்கி மஸ்ஜித் நபவியில் 40 வேளைத் தொழுகைகளை நிறைவேற்றுவது சிறப்பானது.
அரபாத்திலுள்ள பள்ளிவாசலின் பெயர்: மஸ்ஜித் நமிறா, அரபாத்திலுள்ள குன்றின் பெயர்: ஜபலுர்ரஹ்மத். முஜதலிபாவில் உள்ள பள்ளிவாசல் பெயர் : மஷ் அருல்ஹராம் மினாவில் உள்ள பள்ளிவாசலின் பெயர் : மஸ்ஜித் கைப் மக்காவிலுள்ள அடக்கஸ்தலத்தின் பெயர் : ஜன்னத்துல் மு அல்லா. மதீனாவிலுள்ள அடக்கஸ்தலத்தின் பெயர் : ஜன்னத்துல் பகீஃ
ஹிஜ்ரத் பயணத்தில் பெருமானார் (ஸல்) அவர்களும் அப+பக்கர் சித்திக் (ரலி) அவர்களும் தங்கிய இடம் தௌர் குகை. “ஓதுவீராக” என்ற முதல் இறைவசனம் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட இடம்: ஹீராமலைக்குகை.
ஹஜ்
ஒருவர் ஒரு தடைவ ஹஜ் செய்தால் அவர் இறைவனுக்கு செலுத்த வேண்டிய கடனைச் செய்தவராகிறார்.  இரண்டு தடவை ஹஜ் நிறைவேற்றினால் இறைவனை தமக்கு கடனாளியாக்குகிறார்.  மூன்று தடவை ஹஜ் முடித்தால் நகர நெருப்பிலிருந்து தம்மை விடுதலையாக்குகிறார்.
ஹஜ்ஜும், உம்ராவும் அதிகமாக நிறைவேற்றுவது ஏழ்மையைத் தடுத்து விடுகிறது.
ஹஜ் செய்யுங்கள் செல்வந்தராவீர்கள்.  பிரயாணம் செய்யுங்கள் சுகம் பெறுவீர்கள்;;: நபிகள் நாயகம் (ஸல்)
நயவஞ்சகர்கள் ஜம்ஜம் நீரை வயிறு நிரம்பக் குடிக்கமாட்டார்கள். நபிமொழி.
மருத்துவக் குறிப்புகள்
1.    ஹஜ் பயணத்தில் மூக்கில் இரத்தம் வந்தால் இரண்டு சொட்டு எலுமிச்சைப் பழச்சாற்றை விட்டால், அல்லாஹ் அருளால் உடனே இரத்தம் நின்றுவிடும்.
2.    பாலில்லாத தேநீர் பருகி வந்தால் குளிர், வெப்பத்தைத் தாக்கிப் பிடிக்கவும், வயிற்றுக் கோளாறு ஏற்படாமல் இருக்கவும் உதவும்.  அரபிகள் அப்பழத்தான் பருகுவார்கள்.
3.    பழச்சாறு, (தேன்) ஐம் ஐம் அடிக்கடி பருகவேண்டும்.
4.    வெப்பமாக இருந்தால் எலுமிச்சைப்பழச் சாரில் உப்பு சேர்த்துப் பருகலாம்.
5.    ஜலதோஷம் (சளி) பிடிக்காமலிருக்க ஏர்கண்டிஷன் உள்ள இடங்களில் காலுறை (சாக்ஸ்) அணிவது நல்லது.
6.    சைவ வணவு, காரம், எண்ணெய் இல்லாத உணவு, வணக்கங்களில் ஈடுபட வசதியாக இருக்கும்.
7.    இரவில் விரைவில் தூங்கினால் தான் தஹஜ்ஜுத் குறித்த நேரத்தல் தவறாது தொழலாம்.
8.    வெப்பத்தாக்கு (சன்ஸ்டிரோக்) குளிர்காலத்தில் இருக்காது என்றாலும் பகல் 11 லிருந்து 2 மணி வரை வெயிலில் வெளியில் சுற்றாமல் இருப்பது நல்லது.  அவசியம் ஏற்பட்டால் தலையில் வெள்ளைநிற ஹஜ் துண்டு போட்டு வெள்ளை நிறக் குடை பிடித்துச் செல்ல வேண்டும்.  தேவையான ஓய்வு, உறக்கம் அவசியம்.

எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்கள்
1.    2½மீட்டர் இஹ்ராம் துணி.
2.    முஸல்லா, மிஸ்வாக், தஸ்பீஹ்
3.    மருந்துப் பொருள்கள்
4.    உணவுத்தட்டு 2, கிண்ணம் 2, குவளை 2
5.    டைரி
6.    சின்ன அலாரம் (கடிகாரம்
7.    பெட்ஷீட், போர்வை, காலுறை ஏர்பில்லோ, ஹவாய் செருப்பு
8.    மதீனாவில் உபயோகிக்க வெள்ளைநிறத் துணிகள்
9.    அங்குள்ள அன்பர்களுக்கு அன்பளிப்பு பொருள்கள்.

மற்ற குறிப்புகள்
மக்காவில் துஆ ஒப்புக் கொள்ளப்படும் இடங்கள்.
1.    தவாபிலும், தவாப் சுற்றும் இடத்திலும்
2.    முல்தஜிம்
3.    மீஜாபுர் ரஹ்மத்
4.    கஅபாவின் உள்ளே
5.    ஜம்ஜம் கிணற்றருகே ஜம்ஜம் அருந்தியபின்
6.    மகாமே இப்ராஹீமிற்கு அருகே
7.    ஸபா, மர்பாவில்
8.    ஸயீ செய்யுமிடங்களில்
9.    அரபாவில்
10.    முஜ்தலிபாவில்
11.    மினாவில் இரண்டு ஷைத்தான்களுக்குக் கல் எறிந்த பிறகு ஜம்ரதுல் அகபா நீங்கலாக.
12.    முதன் முதலாக கஅபாவைக் காணும் போது
13.    (ஹத்தீம் ஹஜ்ரே) இஸ்மாயில் உள்ளே.
14.    ஹஜ்ருல் அஸ்வத் ருக்னுல் யமானிக்கிடையே

பெருமானார் ஹஜ் பயணத்தில்
ஹஜ் பயணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபாவிலிருந்து முத்தலிபாவுக்கு ஒட்டகத்தில் பயணம் செய்த போது உஸாமா இப்னு ஜைத் (ரலி) அவர்களின் பின்னால் ஒட்டகத்தில் அமர்ந்திருந்தார்கள்.  முஜ்தலிபாவி விருந்து மினாவுக்குச் செல்லும் போது பெருமானாருக்குப் பின்னால் ஒட்டகத்தில் ஹஜ்ரத் பசல்இப்னு அப்பாஸ் (ரலி) உட்கார்ந்திருந்தார்கள்.
பிறை – 10 ல்
ஹஜ்ரத் மஃமர் (ரலி) அல்லது ஹஜ்ரத் கர்ராஷ் (ரலி) அவர்களை அழைத்துத் தலைமுடி சிரைத்துக் கொண்டார்கள்.
நுழைவு வாசலிலிருந்து
குறிப்பிடப்பட்டுள்ள
பேயர்களின் விபரங்கள்

1.    ஹஜ்ரத் அப்பாஸ் (ரலி).  ஈவர்கள் ரசூலுல்லாஹி(ஸல்) அவர்களுடைய சிறிய தந்தையாகும்.
2.    ஃபாத்திமாக நாயகி (ரலி).  இவர்கள் நாயகம் (ஸல்) அவர்களது மகளாகும்.
3.    ஹஸன் முஜ்தபா (ரலி) இவர்கள் ஹஜ்ரத் அலியின் புதல்வர்.
4.    ஜைனுல் ஆபிதீன் (ரலி)
5.    முஹம்மது பாகீர் (ரலி)
6.    ஜஃபர் சாதிக் (ரலி)
இம்மூவரும் இஸ்லாத்தின் நான்காம் ஜனாதிபதி ஹஜ்ரத் அலிய்யுப்ன அபீதாலிப் (ரலி) அவர்களது பேரர்களாகும்.
7.    உம்மூல் பனீன் (ரலி)
8.    ஆத்திகா (ரலி)
9.    ஸஃபிய்யா (ரலி) ஆகிய இம்மூவரும் நாயகம் (ஸல்) அவர்களுடைய மாமிகள் (தகப்பனாருடன் பிறந்த சகோதரிகள்)
10.    ஜைனப் (ரலி)
11.    உம்முகுல்ஸ{ம் (ரலி)
12.    ருக்யா (ரலி) இம்மூவரும் பெருமானார் (ஸல்) அவர்களது புதல்விகளாகும்.
13.    அப்துல்லாஹ் பின் ஜஃபர் தய்யார் (ரலி) அலிரலி அவர்களின் சகோதரர் மகன்
14.    அகீல் இப்னு அபீதாலிப் (ரலி) அலி-ரலி அவர்களின் சகோதரர்.
15.    மாலிக் (ரலி) பிரபல “ஹாதீஸ் அறிவிப்பாளர் மாலிக் இப்னு அவ்ஸ் என்பவராகும்.
16.    நாபீஃ (ரலி) இவர்களும் “ஹதீஸ் அறிவிப்பாளராகும்”.
17.    இப்ராஹ{ம், இவர்கள் நாயகம் (ஸல்) அவர்களுடைய புதல்வராகும்.  பிறந்து 15-வது மாதத்திலேயே வபாத்தாகிவிட்டார்கள்.
18.    உஹது ஸஹ{துகள்.  மதீனாவிலேயே உள்ள உஹது மலை அடிவாரத்தில் நடந்த யுத்தத்தில் உயிர் நீத்த தியாகிகளில் சிலர் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
19.    இஸ்மாயில்
20.    ஹலீமா சஃதிய்யா (ரலி) இவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இரண்டாண்டுகள் தாய்ப்பாலூட்டிய செவிலித்தாயாகும்.
21.    ஃபாத்திமா பின்த்தி அஸது (ரலி)
22.    உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) இவர்கள் இஸ்லாத்தின் 3-ம் ஜனாதிபதியாகும் நபி (ஸல்) அவர்களது இருமகள்களை மணந்து துன்நூரைன் எனப் பெயர் பெற்றவர்கள்.
பின்வரும் ஒன்பது பெண்மணிககும் ரசூல் (ஸல்) அவர்களது மனைவிகளாகும்.  உம்மஹாத்துல் முஃமினீன் என அழைக்கப்படுவார்கள்.
23.    ஜுவைரிய்யா (ரலி) பின்த்தில் ஹாரிஸ்
24.    ஸவ்தா (ரலி) பின்த்தி ஸம்ஆ
25.    ஆயிஷா (ரலி) பின்;த்தி அபீபக்ரு
26.    மைமூனா (ரலி) பின்த்தில் ஹாரிஸ்
27.    ஹஃப்பசா (ரலி) பின்த்தி உமர்
28.    உம்முஹபீபா (ரலி) பின்த்தி அபீஸீப்யான்
29.    உம்முஸலமா (ரலி)
30.    ஸஃபிய்யா (ரலி) பின்த்தி ஹ{யய்யி
31.    ஜைனப் (ரலி) பின்த்தி ஜஹ்ஷ்

நமதூர் நவீனமாகட்டும்!

என் இனிய வெளிநாடுகளில் வாழ் நீடூர்-நெய்வாசல் சகோதரர்கள் இணையதளம் ஆரம்பித்திருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
தாயகத்தில் வாழ்கின்றபோது இன்ப,துன்ப நிகழ்வுகளை அவ்வப்போது அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. திரைகடலோடி திரவியம் தேடவும், சீனா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று கல்வி தேடவும் மண்ணின் மைந்தர்கள் அயல்நாடுகளில் வாழ்கின்றபோது சொந்த ஊரில் என்ன நடைபெறுகிறது என்று அறியாமல் தவிக்கின்றனர்.
எட்டு திசைகளிலும் வாழ்கின்ற எங்களூர் மக்கள் எல்லாச் செய்திகளையும் அவ்வப்போது உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஒரு களம் அமைக்க வேண்டும் என்ற உந்துதலே இந்த இணையதளம் ஆரம்பிப்பதற்கான இலக்கு.
மனித உரிமை, மனித நேயம் பாதுகாக்கபட வேண்டும். இருளை சபிப்பதைவிட மெழகுவர்த்தியையாவது கொளுத்தி ஒளி உண்டாக்க வேண்டும்.
காலந்தவறாமையை கடைபிடிக்க வேண்டும். உடல் நலக்கேடு தரும் உணவைத் தவிர்க்க வேண்டும். சமுதாயம் செழுமையுற நாடு நலமுற உழைக்க வேண்டும். மார்க்க அறிஞர்களை மதித்து மனித நேயம் பேண வேண்டும். சிக்கனம், சுறுசுறுப்பு செயல்திறன் வளர்க்க வேண்டும். வேதனைகள், சோதனைகளை வென்று சாதனைப் புரிய வேண்டும். உழைப்பதன் மூலம் பசியை விரட்ட வேண்டும். நபிவழிதான் நம் வழி என்ற உணர்வு எப்போதும் இருக்க வேண்டும். ஆத்மீகம் இல்லா கல்வியும், உடல் திறனும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை அறிய வேண்டும்.
கொலைகளும், தற்கொலைகளும், விபத்துகளும், வன்முறைகளும் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்ட இக்கால கட்டத்தில் இறையச்சத்தோடு தற்காப்புடன், பாதுகாப்புடன் இருக்க பயிற்சிபெற வேண்டும்.
சண்டைகள் ஓய்ந்து எல்லோரும் சகோதரராக வாழ வேண்டும். பண்டங்கள் விலை மலிந்து பயிர் செழிக்க பாடுபட வேண்டும். நமதூர் மக்கள் மருத்துவமனைக்கோ, மேற்கல்வி பெறுவதற்கோ அனைத்து விளையாட்டுகளுக்கோ உள்ளூரிலேயே அவ்வசதிகள் கிடைக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
சைவ, அசைவ உணவு விடுதிகள், பெண்களுக்கான பல்பொருள் அங்காடிகள் குழந்தைகளுக்கான பொழுதுபோக்குகளுடைய, பெண்கள் குழந்தைகள் மட்டுமே பயன்படுத்தும் பூங்காக்கள், நவீன வசதிகளோடு அமைத்துத் தர வேண்டும்.
இளைஞர்களின் தகுதி, திறமை, கல்விக்கேற்ப உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் பெற திட்டங்கள் அமைத்து செயல்பட வேண்டும். மனத்தூய்மையோடு, பொதுநல நோக்கோடு செயல்பட்டால் நம் கனவுகள் நிறைவேறும்.
நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்

ஆடம்பரத்தின் முடிவு அழிவு!

“எந்த ஊரையாவது நாம் அழிக்க நினைத்தால் சுகபோக வாழ்க்கை வாழும் அதன் மக்களுக்கு கட்டளைகள் அனுப்புகிறோம் அவர்கள் அதில் மாறுசெய்கிறார்கள் அவர்களுக்கெதிரான வார்த்தை மெய்ப்பிக்கப்பட்டுவிடுகிறது.  அதற்கு மேல அதை நாம் அடியோடு அழித்து விடுகிறோம்.                    - அல்குர்ஆன் 17 : 16
இறைவனின் இந்தததிருவசனத்தை படிக்கும் போதெல்லாம் எத்தகைய பேருண்மை அதில் அடங்கியிருக்கிறது என்பதை நாம் உணரலாம்.
உலகெங்கும் பரந்துகிடக்கிற சமுதாயத்தினரின் வாழ்க்கையை உன்னிப்பாக ஆராய்ந்து பார்க்கின்ற போது இறையச்சத்தை மறந்து இம்மையின் தற்கால சுகபோகங்களில் சிக்கி வாழ்க்கைப் பாதையில் நடந்தவர்களெல்லாம் பரிதாபத்துக்குரியவர்களாக வாழ்ந்து மடிந்ததை வரலாறு படம்பிடித்துக் காட்டுகிறது.
இஸ்லாத்தின் ஆரம்பகாலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையையும் நான்கு கலிபாக்களின் வாழ்க்கைகளையும் படிக்கின்றபோதெல்லாம் இலட்சியத்திற்காக இறையச்சத்துடன்.  எளிமையுடன் அவர்கள் வாழ்ந்த முறைகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.  ஏத்தகைய கட்டுப்பாடுமின்றி எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற அளவுக்கு அவர்களின் பதவிகள் இருந்தாலும் ஆடம்பர வாழ்வு முறைகள் அவர்களை அணுக அஞ்சின.
வறுமையில் வாடுபவர்களும், ஏழைகளும் வேறுவழியின்றி அவசியத்தின் காரணமாக எளிமையுடன் வாழ வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.  நல்ல வசதிகளும், வாய்ப்புகளும், அதிகாரபலமும் இருப்பவர்கள் தான் எளிமையான வாழ்க்கைக்கு தங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
யாரும் பெறமுடியாத இணையற்ற பதவியடைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மண்சுவர்களைக் கொண்ட சிறிய வீட்டில் வாழ்ந்தார்கள்! கயிற்றுக்கட்டிலும், தண்ணீர்வைக்கும் தோல் பையும் தான் அவர்கள் இல்லத்தில் காணப்பட்டன.  அவர்கள் தம் அருமை புதல்வியார் பாத்திமா நாயகம் அவர்களை திருமணம் செய்து கொடுத்த போது சீதனமாகக் கொடுத்த பொருள்களை கைக்கூலி வாங்கும் கோழைகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

‘மனிதருள் மாணிக்கம்’

நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்
வழக்கறிஞர்.

இறைவன் படைப்பினில் மனிதன் சிறப்புள்ளவன்.  அத்தகைய மனிதரில் ஒரு சிலரே மாணிக்கங்களாகத் திகழ்கின்றனர்.  இறைவனடி எய்திய நாஜிர் N.P.ஆ. அவர்கள் அப்படியொரு மாணிக்கமாகத் திகழ்ந்தவர்கள்.  இஸ்லாமிய உலகம் மறக்க முடியாத மாபெரும் மேதைகளில் ஒருவராக அவர்களைப் போற்றினாலும் மிகையாகாது.  அந்த அளவுக்கு தன்னலத்தைத் துறந்து மார்க்கக் கல்விக்காக அல்லும் பகலும் பாடுபட்டிருக்கிறார்கள்.
எங்கள் குடும்பத்துக்கு அவர்கள் மிகவும் பழக்கமுண்டு.  ‘பாவா, பாவா’ என்று தான் எங்கள் வீட்டு குழந்தைகள் அவர்களைப் பிரியமுடன் அழைப்பார்கள்.  எங்கள் குடும்ப அங்கத்தினர்களில் ஒருவராகவே அவர்களை நாங்கள் மதித்தோம்.  ஆதனால் தான் அவர்களுடைய சிறப்புக்களை, மற்றவர்களைவிட அதிகமாக அறியும் வாய்ப்பு எங்களுக்கு உண்டு.
தலைவலி, சாதாரண ஜுரம் ஆகியவற்றுக்கெல்லாம் நாங்கள் பாதிக்கப்படும் போது டாக்டர்களை நாங்கள் நாடுவதே இல்லை.  ஹஜ்ரத்தின் உதவியையே நாடுவோம்.  ஓதிய பிறகு அவர்கள் தரும் நாட்டு மருந்தினால் விரைவில் குணமடைவோம்.  ஆத்தனை வலிமை அந்த மருந்திற்கு உண்டு.
உறவினர்களும் தனக்கென ஒரு குடும்பமும் இருந்துங்கூட தாம் வசித்து வந்த இல்லத்தை அரவிக்கல்லூரிக்கு தானம் செய்துவிட்ட அந்த வள்ளல், உயிர் பிரியும் வரை மத்ரசாவின் முன்னேற்றத்தைப்பற்றியே எண்ணத்தைச் சுழலவிட்டுக்கொண்டிருந்து அந்த மேதை, எந்நாளும் நம் இதயத்தில் இருப்பார்கள்.
நற்குணங்களுடன் கூடிய உழைப்பு, புத்தி ப+ர்வமான செயல் நேர்த்தி, உண்மையைக் கடைபிடிப்பது, அன்பைப் பெருக்குவது, வஞ்சனையற்ற உழைப்பைத் தருவது, கஷ்டப்படுபோரின் துயரைத்துடைக்க முயற்சிப்பது, நேர்மைத்திறனுடன் எல்லா சந்தர்ப்பங்களிலும் நடந்து கொள்வது, ஆண்டவனிடம் உறுதியான நம்பி;க்கைகொண்டு அச்சம் தவிர்ப்பது, “மத்ரசா நலனே பிரதானம்” என்ற கொள்கையுடன் நாஜீரு; வேலை ஆற்றியது – இத்தனை பண்புகளும் நிறைந்திருந்த நாஜிரின் வாழ்க்கை மத்ரசாவின் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.
சங்க நடவடிக்கையில்
உன் பங்கு என்ன தம்பி?
நீடூர் ஏ.எம்.சயீத்

அன்புள்ள தம்பிக்கு,

அன்புள்ள தம்பிக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.  இறைவன் அருளால் நலம்; ; நலமறிய ஆவல்.
சென்ற கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்த அன்பு வேண்டுகோளின்படி நீயும் உனது நண்பர்களும் உற்சாகமுடன் மீலாத்விழா வெகு சிறப்பான முறையில் கொண்டாடியது அறிந்து மகிழ்ந்தேன் ஒரு சில தவிர்க்க முடியாத வேலைகளின் காரணமாக அப்புனித விழாவில் நான் பங்கு பெறும் பேறு கிடைக்காமல் போய்விட்டது.  இது போன்ற இஸ்லாமியத் திருநாட்களில் நீங்கள் விழா நடத்தும் போது உங்களில் பலர் மேடையேறிப் பேசுவது மிக சிறப்பாக இருக்கும்.
இஸ்லாத்தைப் பற்றி, அப்புனித மதத்தின் தீர்க்கதரிசி முஹம்மது நபி அவர்களைப் பற்றி, பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஒவ்வொரு இஸ்லாமிய இளைஞனும் திறம் பெற்றிருக்க வேண்டும்.  மற்ற மத நண்பர்களோ நம் மதத்திலேயே நமது நாகரிகம், கலை, பண்பாடு முதலியவற்றை அறியாத பாமர மக்களோ நம்மிடம் விளக்கம் கேட்கும் போது கொஞ்சமும் தயங்காது விரிவுரை தருவதற்கு நம்மை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும்.  இதற்குப்பல வழிகள் இருக்கின்றன.
பொதுவாக ஒவ்டிவாரு முஸ்லிம் கிராமத்திலும் சங்கங்கள் இயங்கிவருகின்றன.  திருமண வைபவங்களில் கலந்து பணியாற்றுவதையே பிரதானக் கடமையாக அவைகள் கருதுகின்றன.  அப்படி இல்லாது இன்னும் பல பணிகளில் அவைகள் ஈடுபட வேண்டும்.
ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு பொருள் பற்றி அங்கத்தினர்களிடையே கருத்தரங்கு, விவாதம், பேச்சு முதலியவை நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும்.  பெரிய மனிதர்களை அழைத்து பார்வையாளர்களாக இருக்கச் செய்ய வேண்டும்.  இஸ்லாமியக் கருத்துக்களைப் பின்னணியாக வைத்து பலவித எழுத்தோவியங்கள் அங்கத்தினர்கள் எழுதி மாதம் ஒரு முறை கையெழுத்துப் பத்திரிக்கை கொண்டு வரவேண்டும்.  வருடத்திற்கு ஒரு சிறப்பு மலர் உருவாக்கி அதை அச்சிலேற்றி விநியோகிக்க வேண்டும்.
மனிதன் எதையும் தானாக செய்வதில்லை.  ஏதாவது ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அந்தச் செயலில் ஈடுபடுகிறான்.  இளம் வயதிலிருந்து அவனுக்கு அந்தப் பழக்கம் பதிந்துவிடுகிறது.  பள்ளியில் இருக்கும் மாணவன் கல்வி தனது கடமை என்று புத்தகங்களை ஊன்றிப் படிப்பதில்லை.  பரீட்சை என்று வந்த பிறகே அதில் வெற்றி பெறுவதற்காக இரவும் பகலுமாக கடைசி நேரத்தில் உட்கார்ந்து படிக்கிறான்.
குடும்பச் செலவுகள் அதிகமாக அதிகமாகத்தான் பணத்தின் தேவையை உணர்ந்து அதை எப்படியாவது சேர்க்க வேண்டும் என்று பாடுபடுகிறான்.  வருமானத்துக்குத் தகுந்த செலவு என்பதை விட, செலவுக்குத் தகுந்த வருமானம் வேண்டும் என்று தன் முயற்சியில் ஈடுபடுகிறான்.
இன்று நமது சமுதாயத்தில் நம் மதத்தைப்பற்றி ஒன்றும் அறியாத இளைஞர் பலர் உண்டு.  நவீனக் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தும் அவர்கள் ஓய்வு நேரத்தில் மத இலக்கியங்களைப் படித்து பார்க்க ஞானம் பெறுவது தலையாய கடமை என்பதை உணராதிருப்பது மிகவும் வருந்தத்தக்கது.
நான் சொன்ன திட்டப்படி இளைஞர்கள் இஸ்லாபமியக் கருத்துக்கள் பற்றி பேச்சு மேடையும் எழுதுதற்கு நிர்ப்பந்தத்தையும் அமைத்துக் கொண்டால் எப்படியாவது இலக்கியங்களைப் படித்தாக வேண்டும், படித்தவைகளிலிருந்து குறிப்புகள் எடுக்க வேண்டும், மார்க்க அறிஞர்களின் கூட்டுறவு பெற்று விளக்கங்கள் பல அறிய வேண்டும் என்பன போன்ற வாய்ப்புக்கள் ஏற்படும்.  அதற்காகத்தான் இத்தகைய காரியங்களில் உங்கள் சங்க அங்கத்தினர்கள் ஈடுபட வேண்டுகிறேன்.
பொருளாதாரம் என்பது முதுகெலும்பு.  அது இல்லாமல் எந்த இயக்கமும் ஏறுநடைபோட முடியாது.
கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும் இன்னும் பல அநாவசியச் செலவுகளுக்கும் எவ்வளவோ பொருளை பாழ்படுத்தும் நாம் நல்ல காரியங்களுக்காக நன்கொளை அளிப்பதற்குத் தயங்குகிறோம்.  அப்படி இல்லாது நல்லவகையில் தம்மால் இயன்ற பொருளுதவி செய்து, இதுபோன்ற நடவடிக்கைகள் சிறப்புற அமைய உதவமுன் வரவேண்டும்.
படிக்க முடியாத ஏழை மாணவர்கள் பலர் இருக்கலாம்.  ஆவர்களில் திறமையான மாணவர்கள் மேல்படிப்பிற்குச் செல்ல உங்கள் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வேலை கிடைக்காமல் எத்தனையோ இளைஞர்கள் வாழ்க்கையில் தோல்வி மனப்பான்மையுடன் திரிவதை நாம் காண்கிறோம்.  அவர்களுக்குத் தேடித்தர உங்கள் ஸ்தாபனம் ஈடுபட வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்தினரும் அந்தந்த ஊர் பிரச்சினைகளைத் தாங்களே தீர்வுகாண்பார்களேயானால் எங்கும் சுபிட்சமும் சாந் மும்நிலவும்.  அதே போன்று மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்கின்ற ஒருவன், தன்கடமையினைச் செவ்வனே செய்ய வேண்டும், மற்றவர்கள் அன்பையும் அனுதாபத்தையும் பெறும் அளவுக்கு தனது திறமையையும், பண்பையும் அதை;துக் கொண்டால் தர்ம சிந்தை மற்றவர்களிடம் தானகப் பிறக்கும்.  ஊர் மக்கள் அனைவரும் சகோதர மனப்பான் நோக்குடன். ஒருவர்க்கொருவர் உதவிக் கொண்டு ஊர் முன்னேற்றத்திற்குப் பாடுபட வேண்டுமானால் எல்லோரும் தொண்டு செய்யும் பெரு நோக்கு கொள்ள வேண்டும்.
சிறுவர்கள் பலர் தீய பழக்கங்கள் மேற்கொண்டு திரிவதைக் கண்டு அவர்களைத் திருத்த முடியாது கண்ணீர் வடிக்கும் பரிதாபமான பெற்றோரை நாம் சந்திக்கிறோம்.
மனிதன் பிறக்கும்போது பத்தரை மாற்றுத் தங்கமாகத்தான் இருக்கிறான்.  சூழ்நிலையும் சந்தர்ப்பமும் தான் அவனைத் தீய வழிகளில் ஈடுபடுத்தி விடுகின்றன.  அவன் தீயவழிக்குச் சென்ற சூழ்நிலையை ஆராய்ந்து மற்ற சிறுவர்கள் அதற்குப் பலியாகாமல் இருக்க ஆவன செய்ய வேண்டும்.  ‘நான் என்ன சொல்லியும் கண்டித்தும் அவன் திருந்தவில்லை’ என்று சொல்லித் தோல்வியைக் காணபிப்பதைவிட, “அவனை எப்படியும் திருத்தி நல்வழிக்குக் கொண்டுவருவதே என் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கும்” என்று சொல்லுவதுதான் இஸ்லாhமியச் சகோதரனின் சூளுரையாக அமையவேண்டும்.
இந்தச் சங்கத்தில் அங்கத்தினனாக இருப்பதே அவமானம் என்று சொல்லும்படி பல சங்கங்கள் இயங்கி வருகின்றன.  இந்தச் சங்கத்தில் அங்கத்தினனாகச் சேர்வதே மிகக்கடினம், சேர்ந்து விட்டால் மிகப் பெரும்கவுரவம் இருக்கும் என்னும் அளவுக்கு நமது சங்க நடவடிக்கைகள் ஆக்க வேலைகளில் ஈடுபடவேண்டும்.
நன்கு உருவான பிறகு மற்ற ஊர்ச்சங்கத்தினரைப் பேச்சரங்குகளுக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கும் அழைத்து, பங்கு பெறச் செய்யலாம்.  இவையெல்லாம் பொழுதுபோக்கு என்று கருதுவதைவிட நமது உரிமையும் கடமையும் அதிலே பிணைந்து கிடக்கின்றன என்பதை நாம் உணர்ந்தால் நமக்கு வெற்றி வெகுதூரமில்லை.  வாழ்த்துக்கள்.
அன்பு அண்ணன்
‘சயீத்’

சென்னை – 1.


நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்
வழக்கறிஞர்.

இஸ்லாமியச் சட்டம் (13)

நீடூர் A.M.சயீத்
[ திருமணத்தின் நோக்கம், முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம், (கருக்)கொலையும் - சட்டமும் ]
திருமணத்தின் நோக்கம்
திருமணம் செய்தல் என் வாழ்க்கை வழியாகும் என்றொரு ஹதீஸிலும், எவர் இந்த வழியைப் பின்பற்றவில்லையோ அவர் என்முறை தவறியோர் ஆவர். என்று மற்றொரு ஹதீஸிலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

திருமணத்தின் நோக்கம் சிற்றின்பத்தை அனுபவிப்பது மட்டுமல்ல. இரண்டு ஆத்மாக்களும் ஒன்று பட்டு இருவரிடமும் உள்ள இயற்கைத் தன்மைகளை சீர்படுத்துவதும் அதன் நோக்கமாகும். அன்பு மலர்களால் ஆழ்ந்த பூந்தோட்டம் என்னும் திருமணத்தை தம்பதிகள் தங்களது சுயநலம் காரணமாக போர்க்களமாக ஆக்கிவிடுகிறார்கள்.

இஸ்லாமியச் சட்டம் (12)

நீடூர் A.M.சயீத்
தற்கொலை ஒரு இஸ்லாமியப் பார்வை!
நான் சட்டக் கல்லூரியில் படிக்கிறபோது சட்டக்கல்லூரி மாணவ நண்பர்கள் ''இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 511 பிரிவுகளில் எந்தக் குற்றத்தை நிறைவேற்றினால் தண்டனை கிடையாது? ஆனால் அந்தக் குற்றத்தை நிறைவேற்ற முயற்சியால் தண்டனை உண்டு'' என்ற புதிர் வினா எழுப்பி விடை கேட்க முயற்சிப்பார்கள். ஒரு சிலர் தான் உடடினயாக அதற்கு பதில் தருவார்கள். மற்றவர்கள் யோசித்து தெரிவிப்பார்கள்.அதாவது இந்திய தண்டனைச் சட்டம் 309வது பிரிவில் ''யாராவது தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்து, அதற்கென ஏதாவது ஒரு செயலைப் புரிந்திருந்தால் அந்தக் குற்றத்திற்காக ஓர் ஆண்டுக்கு உட்பட வெறுங்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது. மனிதனால் இயற்றப்பட்ட இச்சட்டம் அனைத்து தரப்பு மனிதர்களின் உணர்வுகளை கவனத்தில் கொள்ளாமல் இயற்றப்பட்டதால் இதை நடைமுறைப்படுத்த முடியாமல் எந்த அளவு நகைப்புக்குரிய சட்டமாக ஆகியுள்ளதைப் பார்ப்போம்.
1981ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் ராதாராணி என்ற வழக்கில் குற்றவாளியான ராதாராணி என்ற பெண் கணவனால் கைவிடப்பட்டு யாரும் ஆதரிக்காத நிலையில் இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சி செய்திருக்கிறாள். 309வது பிரிவின்படி அவளுக்கு 3 மாத தண்டனை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் அவளை எச்சரித்து விடுதலை செய்து விட்டது.
27.04.1994ல் உச்சநீதிமன்றம் தனது வரலாற்று புகழ்மிக்க தீர்ப்பில் இந்திய தண்டனைச் சட்டத்தில் 309வது பிரிவு இந்திய அரசியல் சாசனத்தில் 21- வது பிரிவுக்கு முரணாக இருப்பதாகச் சொல்லி 309வது பிரிவையே தள்ளுபடி செய்துவிட்டது. 1980ம் ஆண்டில் மினு மஸானி என்ற புகழ்மிக்க எழுத்தாளர் இந்திய தண்டனைச் சட்டத்தின் 309வது பிரிவு மனித உரிமை மீறலாக இருப்பதாகவும் இறப்பதற்கான உரிமையை மனிதன் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும. என்றும் ஓர் இயக்கமே நடத்தினார்.
1985 டிசம்பர் மாதம் டில்லி உயர்நீதிமன்றம் இந்த 309 வது பிரிவு அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு கரும்புள்ளளி எனத் தெரிவித்து இது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுமாறு கட்டளையிட்டது.
மும்பை உயர்நீதிமன்றம் 1986ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் இந்தச் சட்டப்பிரிவு காட்டுமிராண்டித் தனமானது என்று தன் தீர்ப்பில் அறிவித்தது.
உச்சநீதிமன்றம் தற்கொலை தொடர்பான 309வது பிரிவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என அறிவித்தாலும் பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டது.
இப்படி சட்டங்களை இயற்றி வைத்திருந்த போதிலும், இந்தியாவில் விபத்துக்களும், கொலைகளும் அதிகமாகி வருவது போலவே தற்கொலைகளும் அதிகமாகி கொண்டேதான் வருகின்றன. காதல் தோல்வி, கல்வி நிலைய தேர்வுகளில் தோல்வி, பெற்றோர்களுடன் தகராறு, வறுமை, வரதட்சணைக் கொடுமை, குடும்பத்தகராறு இப்படியாக பல காரணங்களினால் தற்கொலைகள் நடைபெற்று வருகின்றன.
அரசியல் தலைவர்கள் இறந்து போனாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ அவர்களுடைய அபிமானிகளில் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் கொடூர நிகழ்ச்சிகளையும் இந்நாட்டில் நாம் காண்கிறோம்.
தமிழக பல்கலைக்கழகம் ஒன்றில் தலைமுடி உதிர்ந்து வழுக்கையாகிவிட்டதே என்பதற்கான முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சி செய்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இந்தியாவிலேயே தற்கொலை அதிகமாக நடக்கும் நகரங்கள் பற்றி 1984ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதலிடம் பெங்களூர் இரண்டாவது இடம் சென்னை மூன்றாவது ஹைதராபாத் மிக குறைந்த அளவு தற்கொலை நடக்குமிடம் கொல்கத்தா. பஞ்சாபில் 21 மணி நேரத்திற்கு ஒரு வாலிபர் மனச்சோர்வு காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார் என்று சென்ற வருட (1999ம் ஆண்டு) புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
குஜராத் மாநிலத்தின் கடந்த
''ஒன்பது மாதங்களில் மட்டுமே 754 இளம் பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்'' என்ற புள்ளிவிபரத்தை மாநில உள்துறை அமைச்சர் பிரபோராவல் சட்டமன்றத்தில் 01.04.1983ல் கூறி, அதற்கான காரணங்கள் காதலில் தோல்வி, குடும்பத் தகராறு, மனநிம்மதி இல்லாமை, பரீட்சையில் தோல்வி, வறுமை ஆகியவை என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவில் ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒருவர் என்ற விகிதத்தில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். (மணி விளக்கு, ஆகஸ்ட் 87 பக்கம்6)
இந்து சமூகத்தில் வட இந்தியாவில் கணவன் இறந்தபின் மனைவி உடன்கட்டை ஏறும் செயல் கொடுமையானது என்று 'ராஜராம் மோகன்ராய்' போன்ற சீர்திருத்தவாதிகள் புரட்சிகொடி எழுப்பினார்கள்.
உலகத்தில் உள்ள எந்த மதக்கோட்பாடுகளிலும் தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதி இல்லை. இறந்து போன கணவன் சடலத்துடன் உயிரும் உணர்வும் உள்ள விதவையாக அவன் மனைவி எரிந்து சாம்லாக வேண்டும் என்று சொல்வது தற்கொலைக்குத் தூண்டுவது போன்ற ஒரு குற்றச் செயலாகி விடுமல்லவா! இது இந்தியா போன்ற வளரும் நாடுகளின் நிலை. இனி வளர்ந்த நாடுகள் மற்றும் செல்வச்செழிப்பில் மிதக்கும் நாடுகள் பற்றி பார்ப்போம்.
சிங்கப்பூரில் பொருளாதார பிரச்சினை அதிகமில்லை. தனி நபர் வருமானமும் ஓங்கி நிற்கிறது. புறத்தூய்மையை பாதுகாக்கும் சிறப்பான நாடாகக்கருதப்படுகிறது. ஆனால் அங்கு 10 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்வது 20 ஆண்டுகளில் நான்கு மடங்காக உயர்ந்து விட்டது.
15 முதல் 19 வயது வரையிலான இளைஞர்கள் ஒரு ஆண்டுக்கு 10 முதல் 19 பேரை சிங்கப்பூரில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அங்கு தற்கொலை முயற்சி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது.
முதலாளித்துவ நாடுகளில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவைப் பார்ப்போம். அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் லேரி செய்டன் என்பவர் தற்கொலைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார்.
சான்பிரான்ஸ்கோவில் கோல்டன் கேட் பிரிட்ஜ் என்ற ஒரு பாலமும், பே பிரிட்ஜ் என்ற ஒரு பாலமும் உள்ளன.
1930ல் கட்டப்பட்ட இந்தப் பாலங்களின் நீளம் 200 அடி இரண்டு பாலங்களிலிருந்தும் பலர் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். பே பிரிட்ஜ் பாலத்தைவிட கோல்டன் கேட் பிரிட்ஜ் பாலத்தில் தற்கொலை செய்து கொள்பவர்கள் ஐந்து மடங்கு அதிகம். கோல்டன் என்பதால் மதிப்பு அதிகம். இறப்பிலும் மதிப்பு வேண்டும் என நினைக்கிறார்கள்.
தீமையாக இருக்கிறது ஒத்துவராததாய் இருக்கிறது என்று ஏதாவது ஒன்றை தவிர்ப்பதற்காக தற்கொலை செய்து கொண்டு இறப்பது துணிவுள்ள மனிதனின் செயலல்ல. வாழ்க்கையின் சோதனைகளைத் தாண்டும் மனமில்லாத கோழைதான் கெளரவமான மரணத்தைச் சந்திக்காது தற்கொலை செய்து கொள்வான் என்று அறிஞர் அரிஸ்டாட்டில் கூறியிருக்கிறார்.
அரசியல் காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்ளும் பழக்கம் இரண்டாம் உலகப்போருக்கு முன்பு ஜெர்மனியில் இருந்தது. அந்த கோழைத்தனத்தை நிறுத்த ஜெர்மனி அரசு ஓர் நடவடிக்கை எடுத்தது. தற்கொலை செய்வோர் சடலத்தை முழு நிர்வாணமாக வீதி வீதியாக எடுத்துச் சென்று நிர்வாணமாகவே புதைப்பது என்று அரசு
சட்டம் செய்தது. அதன் பிறகு தற்கொலை செய்வது குறைந்தது. வடக்கு பிரான்ஸில் உள்ள தொழில் நுட்பக் கல்லூரி ஒன்றில் 38 வயதுடைய பேராசிரியர் ஒருவர் தம் மாணவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைகள் அதிகமாக நடப்பதற்கு இன்றைய முதலாளித்துவ பொருளாதார, சமூக அமைப்புகள்தான் காரணமே தவிர சமயங்கள் அல்ல என்பதை உணர வேண்டும்.
ஆக ஏழை நாடுகள் வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகள் அனைத்தும் பல சட்டங்களை இயற்றி பல அமைப்புகளை ஏற்படுத்தி நடவடிக்கைகளை முடுக்கி விட்ட போதிலும் தற்கொலையின் சவாலை இவைகள் எதிர்கொள்ள முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை.
இது போன்று ஆயிரம் சட்டங்களை இயற்றினாலும் தற்கொலை நடப்பதை தடுக்க முடியாது என்பதை சவாலாகக் கூறலாம். காரணம் தற்கொலை என்பது வேறு நபருடைய தூண்டுதலினால் நடைபெறுவதல்ல. தானாக இந்த முடிவுக்கு வருகிறான். அப்படியயனில் தற்கொலை செய்வது பெரும்பாவம். அதன் விளைவு கடுமையானது தற்கொலை செய்வதனால் எந்தப் பலனும் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்ற உந்துதல் ஒவ்வொருவருக்கும் தானாகவே ஏற்படும் விதத்தில் ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்தையும் பக்குவபடுத்தினால் மட்டுமே தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதை சிந்திக்க தவறி விடக்கூடாது.
உலகின் பல நாடுகளில் தற்கொலை முயற்சி செய்தவருக்கு தண்டனை கொடுப்பதை விட அவருடைய மனோ நிலையை பரிவுடன் கவனித்து அதற்கான சிகிச்சையைத் தருவதே சரியான வழி என்று கருதுகிறார்கள். இது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் இதற்குரிய சிகிச்சையை இஸ்லாம் கூறி இருப்பதை கண்டு கொள்ளாமல் இப்படி பேசிக் கொண்டிருப்பதால் என்ன பயன் ஏற்பட்டு விடப்போகிறது.
,தற்கொலை ஏன் செய்து கொள்கிறார்கள்
இஸ்லாம் கூறும் இறை நம்பிக்கை இல்லாமையும், பரந்த நோக்கும், உறுதியும், துணிவும் நிலைகுலையாமையும் இல்லாமல், துன்பத்தை எதிர்த்து போராடுகின்ற மனோபக்குவம் இல்லாத கோழையாக இருப்பதனாலேயே இறப்பில்தான் நிம்மதி என்ற முடிவுக்கு வந்த மனிதன் தற்கொலை செய்து கொள்கிறான்.
முஸ்லிம்களிடையே வியத்தகு வண்ணம் மிகக் குறைந்த அளவிலேயே தற்கொலைகள் நிகழ்கின்றன என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
பல பிறவிகள் உண்டு என்பதையும், முப்பிறவிகளில் விட்டுப்போனதை இன்னொரு பிறவியில் நிறைவேற்றி விடலாம் என்பதையும் இறையச்சமுடைய ஒரு முஸ்லிம் முழுமையாக நிராகரிக்கிறான். இந்த உலகத்தில் வாழ்க்கை ஒன்றுதான். அதை இழந்து விட்டால் நன்மை தீமைகளுக்கேற்ப மறுமையில் தீர்ப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கை தற்கொலை செய்வது பாவச் செயலாகக் கருதச் செய்கிறது.
சமதாயக் கவிஞர் மர்ஹூம் தா. காசிமின் ஒரு கவிதை
''தற்கொலை மட்டும் இஸ்லாத்தில் தடுக்கப்படாதிருந்தால் இங்குள்ள கிணறுகளெல்லாம் ஏழைக் குமருகளாலே தூர்ந்து போயிருக்கும்'' என்று பாடினார். வரதட்சணையின் கொடூர முகத்தை கூறுவது நோக்கமாக இருந்தாலும் இவ்வளவு சோதனையிலும் இஸ்லாத்தின் வழி காட்டுதலினால் தான் தற்கொலை செய்யாது அதை எதிர்கொண்டுள்ளனர் என்பதை இதில் விளங்க மறந்து விடக்கூடாது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ''இந்தியாவிலும், பல பகுதிகளிலும் தற்கொலைகள் மிகுந்து வருகின்றன. ஆனால் எந்த சமுதாயத்தில் தற்கொலை செய்வது பாவம், மீறினால் சுவர்க்கம் கிடைக்காது. நரகத்திற்குப் போக வேண்டும் என்று மத போதனை செய்யப்படுகிறதோ அந்த சமுதாய மக்கள் மத்தியில் இந்தத் தற்கொலை கொடுமை இல்லை'' என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
மிக உண்மையான சுயவிமர்சனமாக தற்கொலை நிகழாதிருக்க வேண்டுமானால் ''இறைவன் தம் தேவைகளை நிச்சயமாக முடித்துக் கொடுப்பான்'' என்ற நம்பிக்கை நம் இதயத்தில் எப்போதும் இருக்க வேண்டும் ''தவக்கல்'' என்று சொல்லப்படுகிற இந்த உயரிய பண்பு உள்ளத்தில் பதிந்து விட்டால் வேதனைகள், சோதனைகள் ஆகியவைகளை பொறுமையுடன் ஏற்று சாதனைகள் நிகழ்த்தலாம். எது நன்மை, எது தீமை என்று அறியும் மார்க்க அறிவை செயலாலும் வெளிப்படுத்தி நாம் இறையச்சத்துடன் நபிவழியில் வாழ நாயன் நல்லருள் புரிவானாக!
இயற்கை படைப்புகளை பற்றியும், அதன் இயக்கத்தைப் பற்றியும் பின்னிப் பிணைந்த அதன் செயல்பாடுகளின் பின்பலத்தில் காணப்படும் பெளதீக விதிகளை பற்றியும் கண்டாய்ந்திடும்படி நம்மைத் தூண்டும் வசனங்கள் திருக்குர் ஆனில் மொத்தம் 750 உள்ளன. அவற்றில் அறிவாராய்ச்சியின் கதவுகளைத் திறந்துவிடும் மிக முக்கியமானவசனம் இதோ!
அவன் வசனங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும், மனிதர்களுக்குப் பிரயோஜனமானவற்றை (ஏற்றி)க் கொண்டு சமுத்திரத்தில் செல்லுங் கப்பலிலும்; வானத்திலிருந்து மழையை இறக்கி, அதைக் கொண்டு (வறண்டு) இறந்த பூமியை, அல்லாஹ் உயிர்பி (த்துச் செழிப்பாக்கி வை) ப்பதிலும், கால்நடைகள் யாவற்றையும் பூமியில் பரவ விட்டிருப்பதிலும், காற்றைப் பல கோணங்களில் திருப்பித்) திருப்பி விடுவதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் அமர்த்தப் பெற்றிருக்கும் மேகத்திலும், (மனிதர்களுக்குள்ள பிரயோஜனங்களை ஆராய்ந்து) சிந்திக்கும் ஜனங்களுக்கு (அவனுடைய அருளையும், அன்பையும் அறிவிக்கக் கூடிய) அநேக அத்தாட்சிகள், (நிச்சயமாக) இருக்கின்றன. (அல்குர்ஆன்: 2:164)
எனவே, எப்பொழுது முஸ்லிம்கள் திருக்குர் ஆன் கூறும் சிந்தனையின் அறிவாராய்ச்சியிலும் ஈடுபட்டு, மக்களுக்கு வழிகாட்ட முன்வருகின்றனரோ, இன்னும் அந்தத் திருமறையின் வாழ்வியல் நெறிகளுக்கிணங்க தங்களது வாழ்வினை அமைத்துக் கொள்கின்றனரோ, அப்பொழுது தான் தாம் இழந்துவிட்ட கீர்த்தியை மீண்டும் பெறுவதோடு இந்த உலகிற்கு வழிகாட்டும் தலைமைப் பொறுப்பினைப் பெற்ற உன்னத சமுதாயகத் திகழ முடியும். சம்மந்தப்பட்டவர்கள் இசை வெளியேற்பார்களா?
இன்ஷா அல்லாஹ், தொடரும்

இஸ்லாமியச் சட்டம் (11)

நீடூர் A.M.சயீத்
மறுக்கப்படும் மனித உரிமைகள்
மனித உரிமைப் பார்வை என்பது சாதியப் பார்வையுமல்ல வர்க்கப் பார்வையுமல்ல. பாலியல் பார்வையுமல்ல அது ஒரு மனிதப் பார்வை. மனித உள்ளங்கள் காயப்படுகின்ற போது, மனித மாண்பு சிதைக்கப்படும் போது அங்கே இணைந்து குரல் கொடுப்பது இம்மனித பார்வைதான்.
கடமை உணர்வில்லாத உரிமையோ உரிமை உணர்வில்லாத கடமையோ பரிணமிக்க முடியாது. சுதந்திரம் என்பது சமூகத்திடையே உள்ள ஒரு ஒப்பந்தமேயாகும். நமது உரிமையை உபயோகிக்க விரும்புகிற போது மற்றவர் உரிமையையும் மதித்து நமது கடமையை நிறைவேற்ற வேண்டும்.

கண்களுக்கு ஒளி எப்படி அவசியமோ, சுவாசப்பைக்கு காற்று எப்படி தேவையாக இருக்கிறதோ, இதயத்துக்கு அன்பு எப்படி வேண்டப்படுகிறதோ அது போன்று தான் மனித நேயத்துக்கு உரிமை இன்றியமையாததாக இருக்கிறது.
பிறர் உரிமையைப் பறிப்பது எவ்வாறு குற்றமோ அவ்வாறே நம் உரிமை பறிபோவதைப் பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருப்பதும் குற்றமாகும். அதனால்தான் "Your Liberty ends, where my nose begins" என்று ஆங்கிலத்திலே ஒரு பொன்மொழியைச் சொல்வார். ஒரு குச்சியைக் கொண்டு நீ எப்படி வேண்டுமானாலும் சுழற்றும் உரிமை உனக்கு உண்டு. ஆனால் அது என் மூக்கின் மேல் பட்டுவிடக்கூடாது என்பது தான் அதன் பொருள்.
ஒரு சமுதாயத்தின் வலிமை உடையவர்களிடமிருந்து தயக்கமின்றி உரிமை கிடைக்க வேண்டும் என்பதனால்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே சபைகளிலோ அல்லது கடைத்தெருவிலோ உங்களில் எவரும் தம்கையில் ஈட்டியுடன் நடந்து சென்றால் அதன் நுனி மற்றவரின் மீது குத்திவிடாமல் இருக்கும் பொருட்டு அதனை கையில் பிடித்துக் கொள்ளவும் என்று சொன்னார்கள். இந்த நபி மொழியை அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரே சமூகம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம், ஒரே கலாச்சாரம் போன்ற ஒற்றைச் சிந்தனை மனித உரிமைக்கு எதிரானது. ஒற்றைத் தன்மை மனித உரிமையை சிதைக்கும் வேற்றுமையில் ஒற்றுமை எனும் பன்முகத்தன்மை மனித உரிமையை வளர்க்கும்.
மெளலானா ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி
அவர்கள் உலகிலுள்ள மதங்கள் குறித்து அதைப் பற்றி சிந்தித்து நீங்கள் குழம்ப வேண்டியதில்லை. மதத்துக்கு மதம் கருத்து வேறுபாடு இருக்கிறதா? அது எப்போதும் இருக்கத்தான் செய்யும். அதை உங்களாலோ என்னாலோ மாற்ற முடியாது. ஒரே குறிக்கோளுக்கு பல வழிகள். அந்த வழிகளில் சிறந்தது உங்களிடம் இருக்கிறது. அதனை முறைப்படி பின்பற்றுங்கள். அது போதும் அந்த வேறுபாடுகளையயல்லாம் அழிக்க நினைத்தால் அது இயலாது, என்று சொன்னார்கள். குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் பல ரீதியில் மனித உரிமைகளை பாதுகாப்பதாகவே அமைந்துள்ளது. எந்த அளவிற்கு அத்தண்டனை கடினமாக்கப்படுமோ அந்த அளவு மனித உரிமைகள் அதிகம் பேணப்படுகிறது என்று பொருள். இக்கோணத்தில் பார்க்கும் போது இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் பார்ப்பதற்கு கடினமாகத் தெரிந்தாலும் அவைகள் மூலம் மனித உரிமைகள் அதிகம் பேணப்பட்டது, பேணப்படுவது போன்ற வேறு சட்டங்கள் மூலம் பேணப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
இஸ்லாமிய சட்டங்களை ஏற்றுக் கொள்ளாத நாட்டில் எவ்வளவு மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளது என்பதைப் பாருங்கள். அமெரிக்காவின் சிறைகளில் சிறை அதிகாரிகளாலும், சக கைதிகளாலும், பெண் கைதிகள் கற்பழிக்கப்படுகிறார்கள். 1987ம் ஆண்டு பெண் கைதிகள் அமெரிக்காவில் ஒரு லட்சத்து முப்பத்தெட்டாயிரம் பேர் 1985ம் அண்டில் இருந்ததை விட இது மூன்று மடங்கு அதிகம். இங்கிலாந்து மனித உரிமைக் கழகம் இது பற்றி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. பெண் காவலர்கள் குறைவு என்று அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
நம்நாட்டின் தேசிய மனித உரிமை ஆணைய புலனாய்வுத்துறை இயக்குனர் கார்த்திகேயன் 02.03.1999ல் ஒரு அறிக்கையில் குறிப்பிடும் போது ஒரு வருடத்திற்கு மனித உரிமை குற்ற முறையீடுகள் 40 ஆயிரம் வருவதாகச் சொன்னார். கீழ்மட்ட காவல்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பேரிலும் புகார்கள் அதிகமாக வருவதாகச் சொன்னார். குற்றம் செய்பவர்களை தண்டிப்பது என்பதை விட திருத்துவது என்பது முக்கிய நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்று காவல்துறைக்கு அவர் அறிவுரை கூறினார். புலனாய்வுத் துறை என்பது ஒரு புனிதமான கடமைப் பொறுப்பு என்பதால் அது களங்கப்படாமலிருக்க அரசியல்வாதிகளின் தொடர்போ குறுக்கீடோ இல்லாதிருக்க வேண்டும் என தெரிவித்தார்.
அனைத்துலக பொது சபை 10.12.1948
(General Assembly) உலகளாவிய தேசிய ஒருமை உறுதிமொழி பறையறிவிப்பை ஏற்றுக் கொண்டது. 30 விதிகளைக் கொண்ட அந்த அறிவிப்பு அனைத்து நாடுகளிலும் உள்ள எல்லா மக்களுக்கும் பொதுவான தேசிய உரிமைப் பற்றிய விதியை அறிவித்தது. தற்போதிருக்கும் ஐக்கிய நாட்டுச் சபையின் 56வது விதியும் மனித உரிமையைப் பற்றி குறிப்பிடுகிறது. இந்திய அரசியல் நிர்ணயசாசனப்படி சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் தங்களுடைய நியாயங்களையும் உரிமைகளையும் வலியுறுத்தவும் பெரும்பான்மை வகுப்பினர் அறிந்தோ அறியாமலோ விளைவிக்க முற்படும் அநீதிகளை எடுத்துக்காட்டி எச்சரிக்கவும் தங்களுடைய மதம் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றில் எவ்வித அரசியல் குறுக்கீடுகளும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளவும் உரிமைகள் தரப்பட்டிருந்தாலும் நடைமுறையில் அதை செயல்படுத்தாத சமுதாய சூழ்நிலை உருவானது.
மனித உரிமையை காப்பதற்கும் மனித நேயத்தை வளர்ப்பதற்கும்
1. மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993 (பழைய சட்ட எண்.10/1994)
2.தேசிய மனித உரிமைகள் பொறுப்பாணைக்குழு (நடைமுறை) அதிகாரக் கட்டளைகள்
-1994, 3. மாநில மனித உரிமைகள் பொறுப்பாண்மைக் குழு - தமிழ்நாடு - (நடைமுறை) அதிகாரக் கட்டளைகள் - 1997,
4. Universal Declaration of Human Rights - 1948.5. Basic Internation Human Rights Instruments. ஆகியவை அரசாங்கத்தில் இயற்றப்பட்டன.
இந்திய அரசியல் சாசன சட்டத்தில் 3வது, 4வது பகுதியின் முன்னுரை,
Universal Declaration of Human - 1948 என்பதன் அடிப்படையை வைத்தே, அமைக்கப்பட்டிருந்தது. இந்திய குடியரசு சட்டம் 25(1)ல் பொது அமைதிக்கும் ஒழுக்கத்துக்கும், சுகாதாரத்துக்கும் இப்பிரிவின் மற்ற ரத்துக்களுக்கும் உட்பட்ட முறையில் அனைவருக்கும் தங்கள் மனசாட்சிபடி நடக்கவும் தங்களுக்கு விருப்பமான மதத்தை தாராளமாக அனுசரிக்கவும் பிரச்சாரம் செய்யவும் உரிமையுண்டு.
சீக்கியர்கள் கிர்பான வைத்துக் கொள்ள தடையில்லை என்று இங்கே குறிப்பிடப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் பொதுத்துறையிலோ தனியார் துறையிலோ பணியாற்றினாலும் அயல்நாடுகளில் வாழ்ந்தாலும் சீக்கியர்கள் தலைப்பாகை தாடி போன்றவற்றை கடைபிடிக்காமலிருப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு அனுமதி கிடைக்கிறது. மிக முக்கியமான சுன்னத்துகளைக் கூட அனைத்து முஸ்லிம்களும் பின்பற்றுவதில்லை. அது பற்றி சங்கை மிகு மார்க்க அறிஞர்கள் அறிவுரை கூறினால்
''சுன்னத்துதானே'' என்று அலட்சியமாகப் பதிலளிக்கிறார்கள். பலமுறை ஹஜ்ஜுக்கு சென்ற சில சகோதரர்களிடத்திலும் சுன்னத்தான தாடியைப் பார்க்க முடியவில்லை. தொப்பி போட்டு தொழுவதுகூடி தேவையில்லை என்று சொல்லும் இளைஞர் கூட்டம் பெருகி வருகிறது.
இதன் காரணமாக காவல்துறையிலோ இன்னபிற. உயர்ந்த அரசுப் பணியிலோ அபூர்வமாக நியமிக்கப்படும் முஸ்லிம் சகோதரர்கள் நிரந்தரமாக தாடி வைப்பதற்கோ, தொப்பி அணிவதற்கோ முடியாமல் பெரும்பாலும் தடுக்கப்படுகிறார்கள்.
1957ம் ஆண்டு தமிழக காவல்துறை இயக்குனர், முஸ்லிம்களைத் தவிர மற்ற காவல் அதிகாரிகள் தாடி வளர்க்க அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார். முஸ்லிம்கள் வைக்கும் தாடியும் ஒழுங்கான முறையோடு இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
07.08.1986ம் ஆண்டு அப்போதைய நீதியரசர் மோகன் தன்னுடைய தீர்ப்பில் 1957ம் ஆண்டு ஆணையில் திருத்தம் கொடுத்து நான்கு மாதங்கள் மட்டுமே அனைத்து மதத்தைச் சார்ந்த காவல்துறையில் பணியாற்றுபவர்கள் தாடி வைக்க அனுமதி உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஒவ்வொருவரும் தான் விரும்பிய மதத்தின்படி தாராளமாக நடக்க இந்திய குடியரசுச்சட்டம் முழு உரிமை அளித்த பின்பும் இங்கு மனித உரிமை மீறல் தென்படுகிறது. சீக்கியர்களை விட பன்மடங்கு நாம் பல்கிப் பெருகி இருந்தும் கூட இந்த உரிமை மீறல்களை நாம் தட்டிக் கேட்க இதுவரை துணியவில்லை. நமது துணிவின்மைக்கு மார்க்கக் கடமைகளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்துக்களையும் நாம் அனைவரும் பின்பற்றாமல் இருப்பதும ஒரு காரணம் என்பதை மறந்து விடக் கூடாது. வாழ்க்கையின் நட்சத்திரங்கள் எரிந்து விழலாம். ஆனால் உயிரினும் இனிய நம் ஈமானின் நம்பிக்கைள் எரிந்து விழக்கூடாது.
திருடினால்...
இந்தியாவில் உள்ள அனைத்து சமய இனமக்களுக்கும் பொதுவான ஒரு சட்டவியல் குற்றத் தொகுப்பு அவசியம் என்ற கருத்தின் அடிப்படையில் 1860ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்று வரை அமுலில் இருந்து வருகிறது.
511 பிரிவுகளைக் கொண்ட இத்தண்டனைச் சட்டத் தொகுப்பு 378வது பிரிவிலிருந்து 382வது பிரிவு வரை சொத்துக்களைப் பற்றிய குற்றங்கள் : திருட்டு என்ற தலைப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 17வது அத்தியாத்தில் இவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்திய தண்டனைச் சட்டம் 379
-வது பிரிவின்படி ''திருட்டுக்குற்றத்தை யார் புரிந்தாலும் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 380வது பிரிவின்படி குடியிருப்பதற்காக பயன்படும் அல்லது சொத்துக்களைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் பயன்படும் வீடு, கூடாரம் அல்லது கப்பலில் திருடுபவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
இந்திய தண்டனைச் சட்டம் 381வது பிரிவின்படி ஒருவரிடம் பணியாளராக அல்லது எழுத்தாளராக பணிபுரியும் ஒரு நபர், தம்முடைய முதலாளியின் பொருளைத் திருடினால் ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து விதிக்கப்படும்.
382வது பிரிவின்படி திருடுவதற்காக அல்லது திருடியபின் பிடிபடாமல் தப்பிக் கொள்வதற்காக அல்லது காயம் அல்லது தடுத்தல் ஆகியவற்றிற்கான ஆயத்தங்களை செய்துவிட்டு யாரேனும் திருடினால், அந்த நபருக்கு பத்து ஆண்டுகள் வரை கடுங்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இப்படி மூன்றாண்டு, ஏழாண்டு, பத்தாண்டு தண்டனை ஏற்படுத்தப்பட்ட போதிலும் நூற்றுக்கணக்கான தடவைகள் திருட்டுக் குற்றத்திற்காக தண்டனை பெற்ற சிறைச்சாலைக்கு செல்பவன் சிறைப் பறவையாக வெளிவருகின்றானே தவிர அவன் திருடுவதை நிறுத்தவில்லை.
பழந்தமிழ் நாட்டில் திருட்டுக் குற்றத்திற்காக கடுமையான தண்டனைகள் விதித்து வந்தார்கள். முதலில் திருடியவர்களுக்கு சில நேரங்களில் மன்னிப்பு வழங்கப்பட்டாலும் பெரும்பாலான குற்றங்களுக்கு ஒரு கையை துண்டிப்பது திருட்டுக்குற்றத்தின் தண்டனையாக இருந்தது. இரண்டாவது முறை திருடினால் ஒரு காலைத் துண்டித்தார்கள். இதனால் பழந்தமிழ் நாட்டில் திருட்டுக்குற்றங்கள் குறைவாக இருந்தன. ஏழை பணக்காரன் அரசன், ஆண்டி என்ற வேறுபாடு இல்லாமல் குற்றத்திற்கான தண்டனைச் சட்டம் அமுலில் இருந்தது. (இது இஸ்லாமிய சட்டத்திற்கு நெருக்கமானது என்பது தெளிவான வியம்) குற்றத்திற்கான தண்டனை இஸ்லாமிய நாடுகளிலும் சிங்கப்பூர், சீனா போன்ற மற்ற உலக நாடுகளிலும் கடுமையாக இருப்பதால் அங்கு குற்றப்பதிவுகள் குறைவாகவே இருக்கின்றன.
டான்லால் தாஸ்வானி என்ற அறிஞர்
''குற்றச் செயலுக்கான நீதி இஸ்லாமிய சட்டத்தில் இன்றும் பசுமையாக இருக்கிறது. எல்லாக் காலத்திற்கும் சமமான தண்டனையே அது வழங்குகிறது. சவூதி அரேபியா மன்னராக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிம் அல்லாத நபராக இருந்தாலும் இஸ்லாமிய சட்டத்தில் தண்டனை அனைவருக்கும் சமமாகவே இருக்கின்றது'' என்று கூறி இருப்பது நினைவு கூறத்தக்கதாகும். உழைப்பை வலியுறுத்தி, உழைக்கும் கரங்களை மதிக்கின்ற மார்க்கமாக இஸ்லாம் திகழ்கின்றது.
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மனிதனுடைய கரங்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது.
1. உழைக்கும் கரம் : -இதை இஸ்லாம் மதிக்கின்றது.
2.பலனற்று இருக்கும் கரம் : இதனைக் கொண்டு எப்படி தொழில் செய்யலாம் என்று இஸ்லாம் கற்றுக் கொடுக்கிறது.
3. பலஹீனமான கரம் : இதற்கு இஸ்லாம் உணவளிக்கின்றது.
4. சமூகத்தில் கொடுமையாக விளையாடும் கரம் : இதைத் துண்டித்துவிட ரீஅத் சட்டங்களை பிறப்பிக்கின்றது. அதற்காக கண்மூடித்தனமாக கையை வெட்டக் கூறவில்லை. ஒருவன் திருடினான் என்று குற்றவாளிக் கூண்டிலல் நிறுத்தப்பட்டடால் சாட்சியங்களோடு அது நிரூபிக்கப்பட வேண்டும். நியாய விரோதமாக கரத்தை வெட்டினால் 50 ஒட்டகையை இழப்பீடாகத் தர வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகிறது.
ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் இச்செயலுக்குத் தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். (இது) அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட எடுத்துக்காட்டான தண்டனையாகும். அல்லாஹ் மிகைத்தோனும், ஞானமுடை யோனுமாக இருக்கிறான் (அல்குர்ஆன் 5:38) என திருக்குர்ஆன் வசனம் திருட்டுக் குற்றத்திற்கான தண்டனை பற்றி தெளிவாகக் கூறுகிறது.
''உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத யாதொரு ஜீவராசியும் பூமியில் இல்லை'' என்று திருமுறையில் (11:6) தூயவன் அல்லாஹ் வாக்களிக்கின்ற போது மனிதன் வறுமைக்கு அஞ்சியும், பொருளாசை காரணமாகவும் திருடும் தீயசெயலில் ஈடுபடுவது முறையாகுமா? ஒரு பொருள் திருடப்படுவதன் காரணமாக பொருளை இழந்தவனுடைய மன உளைச்சலும் பேரிழப்பும் மிக அதிகமாக இருக்கின்றன.
உதாரணத்துக்கு ஒரு நிகழ்ச்சியை நம் கவனத்தில் கொள்வோம்.
திருமணமான ஒரு பெண் தனிமையில் ரயிலில் பயணம் செய்தாள். திருடன் ஒருவன் அப்பெண்ணின் பணப்பையைத் திருடிச் சென்றுவிட்டான். பயணச்சீட்டு பரிசோதகர் வந்தபோது, இத்துயரச் சம்பவத்தை அப்பெண் விளக்கிச் சொல்லியும் அப்பெண்ணை சிற்றூரின் ஒரு ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார். சமூக விரோதிகள் பெண்ணின் தனிமையைப் பயன்படுத்திக் கொண்டு மிருகவெறி மேலோங்கி அப்பெண்ணை கற்பழித்து விட்டார்கள். கற்பிழந்தபின் வாழ்வெதற்கு என்று அந்தப் பெண் ஏங்கி தற்கொலை செய்து கொண்டாள்.
திருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்டுவது காட்டு மிராண்டித்தனம் என்று கூச்சலிடுகின்ற விவேகமில்லாத விமர்சர்கள் இந்த நிகழ்ச்சியை ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ஒரு ரயில் பயணச்சீட்டுத் தானே திருடப்பட்டிருக்கிறது! ஆனால் விலை மதிக்க முடியாத ஒரு மனித உயிரல்லவா பலியாக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய கவனங்களினால்தான் திருட்டுக் குற்றத்திற்கு கடுமையான தண்டனையை இஸ்லாமிய ஷரீ அத் சட்டம் விதிக்கிறது.
உன்னுடைய குழந்தை என்னுடைய சகாக்களிடம் அகப்பட்டுக் கொண்டது. எங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்கமாக கொடுக்காவிட்டால் உன்னுடைய குழந்தையை கொன்றுவிடுவோம் என்று அச்சுறுத்தி ஒருவரிடமிருந்து பணம் பறிக்கப்படுகிறது. இதனை அச்சுறுத்திப் பொருள்பறித்த குற்றமாக கொள்ள வேண்டும். குழந்தையை உடனே கொன்று விடுவார்கள் என்ற அச்சம் உண்டாக்கப்பட்டதால் தான் இந்தக் குற்றம் கொள்ளை ஆகும்.
390வது பிரிவில் கொள்ளையில் திருட்டு அல்லது அச்சுறுத்திப் பொருள் பறித்தல் என்பது பற்றிய மேற்குறிப்பிட்ட உதாரண நிகழ்ச்சி தரப்பட்டிருக்கிறது.
பொதுவாக அசையும் பொருள்களை அனுமதியின்றி எடுக்கும் போது அது திருட்டுக்குற்றம் என்று சொல்லப்பட்டாலும் மின்சாரம், தண்ணீர் போன்றவற்றை அனுமதியின்றி உபயோகித்தாலும் திருட்டுக் குற்றத்துக்கு ஆளாக நேரிடும்.
தமிழ்நாட்டில் 1985ம் ஆண்டின் தமிழ்நாடு மின்சார வாரியம், அனுமதியின்றி மின்சாரம் பயன்படுத்தியதற்காக D.K.K முதலியார் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டு உயர்நீதிமன்றத்தில் அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் இந்திய தண்டனைச் சட்டம் 378வது பிரிவின்படி இது திருட்டுக் குற்றம் இல்லையயன்றாலும் இந்திய மின்சாரச் சட்டம் 1901ன் 39வது பிரிவின்படி இது திருட்டுக் குற்றமாக இந்திய தண்டனைச் சட்டம் 379வது பிரிவில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கினார்கள். (T.N.Electricity Board - V.D.K.K. Mudaliyar 1985 Cr.II 561(Mqd)
ஒருவர் தம் வசம் வைத்திருக்கும் அசையும் பொருளை அவருடைய சம்மதமின்றி, நாணயமற்ற வகையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்துடன் அந்தப் பொருளை அப்படி எடுத்துக் கொள்வதற்காக நகர்த்துவதை திருட்டு என்று கூறுகின்றோம். உதாரணமாக ஒருவருடைய தோட்டத்தில் உள்ள மரத்தை ஒருவன் வெட்டுகிறான். நாணயமற்ற முறையில் அப்படி வெட்டப்பட்ட மரத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் அவன் செயல்பட்டால் மரம் வெட்டிய உடனேயே திருட்டுக் குற்றம் நிறைவேறி விடுகிறது.
ஒரு நபருடைய நூலகத்திலிருந்து அவருடைய சம்மதம் பெறாமலும் அவர் அங்கு இல்லாத போது புத்தகத்தை எடுத்துக் கொண்டு வருகிறோம். அதனைப் படித்துவிட்டு திரும்பத் தந்து விட வேண்டும் என்ற கருத்துடன் அந்தப் புத்தகம் எடுக்கப்படுகிறது. அந்தப் புத்தகத்தை அப்படி எடுப்பதற்கு நண்பர் ஆட்சேபிக்க மாட்டார் என்ற நினைப்பில் அந்தச் செயல் புரியப்பட்டிருந்தால் அது திருட்டுக் குற்றம் ஆகாது.
திருட்டுக் குற்றத்திற்கு இஸ்லாமியச் சட்டம் வழங்கும் தண்டனை கையை வெட்டுதல் என்றாலும் ஒருவன் தனது தாங்க முடியாத பசிக்காகவோ, இன்றியமையாத தவிர்க்க முடியாத தேவைகளுக்காகவோ இக்குற்றம் புரிந்தால் தண்டனை கிடையாது. ஏனென்றால் பசியும் மற்ற தீர்க்கப்படாத தேவைகளும் சமுதாயத்தின் குற்றம் என்று ரீஅத் சட்டம் கூறுகிறது.
நாட்டில் பஞ்சம் ஏற்படுகிறபோது திருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்டக் கூடாது என்று உலகப் புகழ்பெற்ற கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு
அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள். மெத்தப் படித்தவர்களும் சில நேரங்களில் நவீனகால சூப்பர் மார்க்கெட் என்று சொல்கிற பல்பொருள் அங்காடியில் ஏதாவது ஒரு பொருளை திருடியிருக்கிற சம்பவங்களும் நடந்திருக்கிறது. லண்டன் மாநகரில் தூதரகத்தில் பணியாற்றிய ஒரு அதிகாரி இத்தகைய குற்றத்தைச் செய்ததை அங்குள்ள தொலைக்காட்சி காட்டிக் கொடுத்துவிட்டது.
இத்தகையவர்கள் இளம் வயதில் இந்தப் பழக்கத்தை மேற்கொள்ளும் போத பெற்றோர் கண்டிக்காமல் தண்டிக்காமல் விட்டதன் விபரீத விளைவுகள்தான் இது.

வீட்டில் நம் பிள்ளைகள் திருடும் போது சிறு பிள்ளை என்றும் நம் வீட்டில்தானே எடுத்தான் என்றும் காரணம் கூறி கண்டிக்காமல் விட்டுவிடுகிறோம்.
இப்பழக்கம் அவர்களிடம் ஊடுருவி பெரிய வயதான பின்னரும் எவ்வளவுதான் வசதி பெற்றாலும் அடுத்தவர்களின் பொருள்களைத் திருடுகிறார்கள். அதனால் மற்றவர்கள் அவர்களை மட்டமாக மதிப்பதைக் காண்கிறோம், என்று வேலூர் மல்லானா க்ஷி.கமாலுத்தீன் ஹழ்ரத் அவர்கள் கூறியதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.


LinkWithin

Related Posts with Thumbnails