Tuesday, December 31, 2013

வாழ்வின் அடையாளம்

இரவு முழுக்க விழித்திருந்தும்
செல்போன் சத்தம் சிணுங்கவில்லை
பகலெல்லாம் காத்திருந்தும்
வாழ்த்துரைக்க யாரும் வரவுமில்லை !

இந்தியத் தொலைக் காட்சிகளில்
முதன் முறையாக
புதுப்படங்கள் எதுவும் தெரியவில்லை !

Wednesday, December 25, 2013

Vizhigal-Kavikko -தஃப்சீர் இப்னு கஸீர் வெளியீட்டு விழா

சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் சார்பாக, தஃப்சீர் இப்னு கஸீர் 6ஆம் பாகம் வெளியீட்டு விழா மற்றும் கவிக்கோ மன்றம் திறப்பு விழா 07.12.2013 அன்று மாலை 6.30 மணி அளவில் கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கும் கவிக்கோ உரை வீச்சின் விழிகளின் பதிவு இது.

Tuesday, December 24, 2013

தமிழ் நாட்டில் முஸ்லிம்களுக்காக ஒரு மருத்துவக் கல்லூரி- கவிகோ அப்துல் ரஹ்மான்


Kaviko Abdul Rahman Talking about a proposal to start a Medical College for Muslims in Tamil Nadu, during his visit to Sydney in September 2013 Please contact iifsydney@gmail.com for more info

Sunday, December 22, 2013

இஸ்லாமும் நுகர்வோர் கலாச்சாரமும்


சம்ஷாத் அப்துல் ஹமீத்

நுகர்வோர் கலாச்சாரம் அதன் உச்சத்தில் இருக்கிறது. ஒரு பக்கத்தில் கடுமையான ஏழ்மை –அடிப்படை தேவைகள் கூட கிடைப்பதில்லை. மறுபக்கத்தில் எல்லாமே அபரிமிதமாக இருக்கிறது. மக்கள் ஒரே வகை உணவு உண்பது அலுத்துப்போய் பல்வேறு விதமான உணவகங்களுக்குச் சென்று உண்ணுகிறார்கள். இன்னும் பலர் சலிக்கும் வரை பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள். அத்தனை பொருட்களை வைத்து மக்கள் என்ன தான் செய்வார்கள்?

ஆடை வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள் –பொதுவாக நாம் கேட்கக் கூடியது, “நான் மீண்டும் மீண்டும் உடுத்தியதையேவா உடுத்திக்கொள்ள முடியும்? ஒரு விருந்தில் அணிந்த ஆடையை என் தோழிகள் எல்லோரும் பார்த்து விட்டார்கள். அதையே அடுத்த விருந்துக்கும் அணிய முடியாது.”

Tuesday, December 17, 2013

கல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும்


 கல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும்- முதல்பரிசு பெற்ற கட்டுரை (ஆபிதீன்)
கல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா?  என்ற தலைப்பில் இஸ்லாமியப் பெண்மணியும் -டீக்கடை பேஸ்புக் குழுமமும் நடத்திய கட்டுரைப்போட்டியில் முதல் இடம் பெற்ற சகோதரர் ஆபிதீன் அவர்களின் கட்டுரை இது.

    (நபியே ! யாவற்றையும்)  படைத்த உமது இறைவனின் திருநாமத்தால் நீர் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து  படைத்தான். ஓதுவீராக! உமது  இறைவன் மாபெரும் கொடையாளன் அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக்கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாததையெல்லாம் கற்றுக்கொடுத்தான்.(அல்குர்ஆன்96:1:5 )   

Monday, December 16, 2013

.அன்பைத்தவிர வேறு எதுவுமேயில்லாத அன்பு மட்டுமே !

பத்து வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன். ஆனா.. நேத்து மாதிரி இருக்கு.


நான் " பெட்டகம் " , " அண்ணலே யா ரசூலல்லாஹ் " நூல்களை எழுதி முடித்த கால கட்டம் அது. பத்திரிகைகளில் வெளிவந்த நூல் விமர்சனங்களைப் படித்துவிட்டு ஏராளமானவர்கள் கடிதம் எழுதினார்கள். அவர்களில் முக்கியமானவர்கள்... கம்பம் முஹம்மதலி அண்ணன் அவர்கள் நாகூர் கவிஞர் ஜாபர் முஹைதீன் அண்ணன் அவர்கள் . அவர்களுக்கும் நூல்கள் அனுப்பிக் கொடுத்தேன். அதன் பிறகு இருவருமே எனக்கு நல்ல நண்பர்களாக ஆகிவிட்டார்கள். அடிக்கடி கடிதங்கள் எழுதுவோம் போனில் நீண்ட நேரம் பேசுவோம்.

பேசுவதெல்லாம் ...அன்பு..அன்பு..அன்பைத்தவிர வேறு எதுவுமேயில்லாத அன்பு மட்டுமே ! எனக்கு அவர்களின் முகமே தெரியாது.. முகம் தெரியாத அந்த மேதைகளின் அகம் மட்டுமே பார்த்தேன். அது ...அழகு..அத்தனை அழகாயிருந்தது. அந்த சூழ்நிலையில்தான் மயிலாடுதுரைக்குச் சென்றேன். அங்கே... என் மனதில் வாழ்ந்துகொண்டிருந்த என் அன்பு நண்பர்களைக் கண்டேன்.. ஆரத்தழுவினேன்.. ஆனந்தம் கொண்டேன். அவர்களும் அப்படியே... அவர்களோடு மேலும் பல நண்பர்கள் அங்கே எனக்கு அறிமுகமானார்கள். அவர்களில் ... டாக்டர் ஹிமானா செய்யத் அவர்களும் ( நர்கிஸ் பத்திரிகையின் ஆசிரியர் ) அதிரை அருட் கவிஞர் தாஹா அவர்களும்  
அருமை அண்ணன் வழக்கறிஞர் நீடூர் செய்யது அவர்களும் ( நீடூர் முகமதலி அவர்களின் அண்ணார் ) பேராசிரியர் சாயிபு மரைக்காயர் அவர்களும் முக்கியமானவர்கள் ! மாநாடு முடிந்து பிரிய மனமில்லாமல் அந்த நண்பர்களைப் பிரிந்து வந்தேன். அதன்பிறகு ... " உத்தம நபிகளின் உண்மைத் தோழர்கள் " நூலை எழுதினேன் .

Monday, December 9, 2013

இளம்பிறை எழுச்சி


பேரணி முழக்கம் இளையவர் ஒலிக்கப்

.....பெரும்புகழ்ப் பெருநகர் ஆங்குத்

தோரணம் போல கூட்டமாய் வீதி

..தோறுமே பச்சையின் வண்ணம்

வீரமும் தொண்டும் நிறைந்துளப் படையின்.

....வெற்றியைக் குறித்திடும் காட்சி

நேரமும் நெருங்கி வந்தது; வாவா

....நேர்மையின் நிகழ்வினை நோக்கி!

Friday, December 6, 2013

அதர்மம்! (பாப்ரி மஸ்ஜித் இடிப்பு)


எப்போதும் போலத்தான்
அப்பொழுதும் புலர்ந்தது

விண்ணிறைந்த வெள்ளொளியில்
காவிக்கறை படியும் என
கணித்திருந்தால்
விடியாமலேயே
முடிந்திருக்கும் அந்நாள்


தொழுகைக்கான இடம் அழித்து
வேதனையால்
அழுகைக்கான வழி வகுத்தநாள்

Wednesday, December 4, 2013

இவ்வளவுதான் உலகம்!

இன்றைய அவசர உலகில் மனிதன் மிக வேகமாக பயணித்து கொண்டிருக்கின்றான். எவ்வாறு இந்த உலகம் நம்மை அவசரமாக இழுத்துச் செல்கின்றதோ அதே போன்று இந்த உலக வாழ்க்கையிலிருந்து நாம் பிரியும் தருணமும் நம்மை நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருக்கின்றது.

நாம் வரலாறுகளை புரட்டும்போது நபி நூஹ் (அலை) இதே பூமியில் 950 வருடங்கள் வாழ்ந்ததாக இறைவேதம் திருக்குர்ஆன் பேசுகின்றது. நம் முன்னோர்கள் 100 வயது, 110 வயது, அதையும் தாண்டி திடகாத்திரமாக, உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்ததாக நாம் இன்றும் பெருமையாக பேசிக் கொள்கிறோம்.

அமானித பொருளாய் காத்து இருப்பேன்

15 நாளில் புறப்படும் உனக்கு திருமணம் எதற்கு
இருந்தும் உடன்பட்டேன் திருமணத்திற்கு

எப்படியோ என் கரம் பிடித்து விட்டாய்
மருதாணி காயுமுன்னே மறு தேசம் சென்று விட்டாய்

விழித்து பார்கிறேன் நீ போன திக்கு
பலியாகி போனது உன் வீட்டார் அவசரத்திற்கு

விரல்களை விலங்கிட்டு
நிற்கிறேன் இறைவனிடம் துவா கேட்டு

விரைவில் வந்திடுவாய் என்று நம்புகிறேன்
வரும் வரை அமானித பொருளாய் காத்து இருப்பேன்


பஷீர்


Tuesday, December 3, 2013

'ஹிந்து' குறித்து இஸ்லாம்!

ஹிந்து - ஹிந்துஸ்தான் - ஹிந்துத்துவா என்ற பெயர்கள் இப்பொழுது இந்தியா முழுவதும் பிரச்சினைக்குரிய பெயர்களாக சில அரசியல்வாதிகளாலும்,

சில மதவாதப் பேர்வழிகளாலும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு விட்டன.

ஹிந்து என்ற வார்த்தை ஹிந்து மத வேதங்களான எந்த வேதங்களிலும் கிடையாது. அது பகவத்கீதை,  மஹாபாரதம், இராமாயணம், பவிஷ்ய புராணம் அல்லது ரிக், யஜூர், சாமம், அதர்வணம் போன்ற நான்கு வேதங்களிலும் ஹிந்து என்ற மூன்று எழுத்தே இல்லை என்று வாதிடுகிறார்கள். வாதிடுபவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. வரலாற்று ஆய்வாளர்களும், சரித்திர வித்தகர்களும் தான்.

Thursday, November 28, 2013

வெள்ளி கிழமை வந்து விட்டால்...



வெள்ளி கிழமை வந்து விட்டால்
நினைவு செய்ய மறுக்கிறது வேலைகள்

காரணம் ஜும்மா தொழுகையை
நினைவில் கொள்கிறது என் சிந்தைகள்

நான் சண்டை இட்ட ஒருவரை
சந்திக்க நினைப்பவரை

Tuesday, November 26, 2013

முஸ்லிம்கள் திருமணம்: தேவை மனமாற்றம்!


"ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் நடத்தவேண்டும்" என்பது பழமொழி. இப்பொழுது ஆயிரம் பேர் முன்னிலையில் அரசிற்குப் பயந்து திருமணம் நடத்தப்படுகிறது. காரணம் சட்டம் தான்.

"பருவ வயதை அடைந்து விட்டால் திருமணம் செய்து வைத்துவிடுவது" முஸ்லிம்களின் வழக்கம். தற்பொழுது பெண்ணுக்கு 19 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியானால்தான் திருமணம் செய்து வைக்கமுடியும் என்கிறது சட்டம். ஆனால் பருவமடைந்து விட்டால் திருமணத்திற்குரிய தகுதியை ஆணும், பெண்ணும் அடைந்துவிடுகின்றனர் என்கிறது அறிவியல்.

Wednesday, November 20, 2013

இன்னொரு கூகுள் இந்தியரால் சாத்தியம் : கூகுள் தலைவர்

இணையம் என்றால் அதில் இணையற்று விளங்குகிறது கூகுள்.

இணையத் தேடலென்றால் கூகுள், இணையக் குழுமம் என்றாலும் கூகுள். இணையமென்னும் மெய்நிகர் உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகி நிலை பெற்றுள்ள கூகுளுக்கு இணையாக அல்லது அது போன்ற ஒன்றை உருவாக்கும் சக்தி இந்தியத் தொழில் முனைவோரால் சாத்தியப்படலாம். இப்படி கூறியிருப்பவர் இந்தியரோ, இணையம் பற்றி அறியாதவரோ அல்ல. கூகுள் நிறுவன செயற்குழுத் தலைவர் எரிக் ஸ்மித் தான் இப்படி ஒப்புக் கொண்டிருக்கிறார்.

Sunday, November 17, 2013

பள்ளிவாசல்: ஒரு பார்வை

முஸ்லிம்கள் இறைவனை வழிபடும் இடத்தை பள்ளிவாசல் என்று அழைக்கிறார்கள்.

இப்பெயர் தொடர்பான ஒரு பார்வை:

பள்ளி

சங்க காலத்தில் அரசர்கள் உயிர் துறந்த பின் புதைத்த இடங்களைப் பள்ளி என்று குறிப்பிடும் வழக்கம் இருந்துள்ளது. பள்ளி என்ற சொல்லானது துறவிகள் தங்குவதற்கும், உறங்குவதற்கும் அமைக்கப்பட்ட இடங்களுக்கும் பள்ளி என்றே தமிழ் பிராமி கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவை தவிர முனிவர்கள் ஆசிரமம், பௌத்த கோயில்கள், அரண்மனை, படுக்கை, பள்ளிக்கூடம் போன்றவையும் பள்ளி என்றே அழைக்கப்படுகிறது.

ஆதியில் சமண, பௌத்த கோயில்களே பள்ளி எனப்பட்டன. அவைகள் சைவ, வைணவக் கோயில்களாக மாறிய பின்பும் அதே பெயர்களில் வழங்கப்பட்டு வருகின்றன. திருச்சிராப்பள்ளி, அகத்தியான்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி போன்ற ஊர்கள் இன்றளவும் அவ்வாறே அழைக்கப்பட்டு வருகிறது. முஸ்லீம்கள் தங்கள் தொழுகைக்கான இடத்தை பள்ளிவாசல் என்று அழைக்கின்றனர். பெரும்பாலான ஊர்களில் பள்ளிவாசல் என்ற தெருவே உள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 'பள்ளிவாசல்' என்ற கிராமம் உள்ளது.

துபாய் ஏர்-ஷோ: சந்தையில் விளாம்பழம் வாங்குவது போல விமானங்களை வாங்குகிறார்கள்!

துபாய் ஏர்-ஷோ: சந்தையில் விளாம்பழம் வாங்குவது போல விமானங்களை வாங்குகிறார்கள்!


இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டில் கலத்துகொண்டு, ‘மிக சூடாக’ அங்கிருந்து கிளம்பிய பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரோன், நேரே வந்து துபாய் ஏர்-ஷோவில் இறங்கினார்.
துபாயில் சூடாக இல்லை அவர். காரணம், ஐக்கிய அரபு அமீரகம் தமது ராணுவத்துக்காக 60 விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. அந்த ஆர்டரை பெறுவதற்காக பிரிட்டிஷ், பிரெஞ்ச் நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. பேரம் இன்னமும் படியவில்லை. நாளை எப்படியும், இந்த ஆர்டர் கொடுக்கப்பட்டு விடும்.
ஆர்டரை பிரெஞ்ச் நிறுவனம் தட்டிப் போகாமல் தடுப்பதற்காக, பிரிட்டிஷ் பிரதமரே நேரில் வந்திருக்கிறார்.

Friday, November 8, 2013

புத்தாண்டின் பத்தாம் நாள் - (ஆஷுரா)

முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷுரா என்று வழங்கப்படுகின்றது. அந்த நாளை நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் சரித்திரப் பின்னணியை நாம் காண்போம்.

 "நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது யூதர்கள் (முஹர்ரம் 10-ஆம் நாளான) ஆஷுரா தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். யூதர்களிடம் அதுபற்றிக் கேட்கப்பட்டபோது அவர்கள், "இந்த நாள்தான் ஃபிர்அவ்னுக்கெதிராக மூஸா(அலை) அவர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் அல்லாஹ் வெற்றியளித்த நாள். எனவே, நாங்கள் மூஸா(அலை) அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதத்தில் அதில் நோன்பு நோற்கிறோம்" என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், "மூஸா(அலை) அவர்களைக் கண்ணியப்படுத்திட நாங்களே அதிக உரிமையுடையவர்கள்" என்று சொல்லிவிட்டு அந்நாளில் (தாமும் நோன்பு நோற்று) நோன்பு நோற்கும்படி (முஸ்லிம்களுக்கும்) உத்தரவிட்டார்கள். அறிவிப்பாளர் : இப்னு அப்பாய் (ரலி) புகாரீ, முஸ்லிம்.

அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக

பாடலாசிரியர்: கவியன்பன் கலாம் (அதிரை)
பாடகர் : தேனிசைத்தென்றல் ஜஃபருல்லாஹ்
காணொளிப் பதிவு: அதிரைக்காரன் ஜமாலுதீன்

Monday, November 4, 2013

பிறப்பதும் இறப்பதும் இறைவனின் நாட்டம்

பிறப்பதும் இறப்பதும் இறைவனின் நாட்டம்
இறப்பு நிகழ இதயம் கணக்கும்
இறப்பு நிகழ கண்களில் நீர் சுரந்து கன்னத்தில் வழியும்
இவைகள் இறைவனால் அனுமதிக்கப் பட்டவை

இறப்பு நிகழ இறைவனை நினைத்து நாக்கினால்
இறந்தவருக்காக  மனம் உருகி  இறைவனை துதி செய்யுங்கள்
இறப்பு நிகழ கைகளால் வருத்திக் கொள்வதும்
இறப்பு நிகழ நாக்கினால் புலம்புவதும்
இறைவனால் தடுக்கப் பட்டவை

தன் நேசர்கள் இறக்க
இதயம் கணக்க
விழிகளில் நீர் வழிவதை தடுத்தல் வேண்டாம்

'நாம் இறைவனின் சொத்து
நாம் இறைவனிடம் ஒரு நாள் திரும்பியே
ஆக வேண்டும்'என அமைதிப் படுத்துங்கள்
இதுவே சிறப்பான ஆறுதல் மொழி

Sunday, November 3, 2013

அல் நாசர் என்ற பெயர் கொண்டாய்..

அல் நாசர் என்ற பெயர் கொண்டாய்
Sūrat al-Naṣr என்ற இறைவனது வேதத்தில் வரும் சூராவை நினைவு படுத்தினாய்
உனக்கு இறைவனது இறக்கமும் ஆதரவும் மருலோகத்தில் கிடைக்கும்
இறப்பை நீ வேண்டி நிற்க வில்லை
இறப்பு இறைவனின் நாட்டத்தால் உனக்கு வந்தது
இருக்கும் வரை உயர்வான இறைவன் நாடியபடி வாழ்ந்தாய்
இறப்பை கொடுத்த இறைவன் உன்னை உயர்ந்த இடத்தில சுவனத்தை கொடுத்தருளவான்
இதுவே நாங்கள் உனக்காக இறைவனிடம் வேண்டும் பிரார்த்தனை

உன்னை இவ்வுலகில் இழந்து வாடும் எங்களுக்கும் உன் குடுமபத்தருக்கும் இறைவன் அமைதியை தந்தருளட்டும் .ஆமீன்.
====================
உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.
Surat An-Naşr குர்ஆன்-110:3
-----------------------------------------------

நீச்சல் பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள்!


நீச்சல் பெரும்பாலும் எல்லோருக்கும் பிடித்த விசையம் தான் ஆனால் நீச்சல் தெரிந்தவர்களை பார்த்து நீச்சல் தெரியாதவர்களுக்கு ஒரு விதமான ஏக்கமாகவே இருக்கும் . நாமும் சிறு வயதில் நிச்சல் கற்று இருந்தால் இன்று நாமும் நீச்சல் அடித்து இருக்கலாமே என்று . நீச்சல் என்பது மிக முக்கியமானது நம் வாழ்க்கையில் .ஆபத்தான தருனக்கலில் நம் உயிரையும் பிறர் உயிரையும் காப்பாற்றும் ஒரு கலை என்றால் அது நீச்சல் கலை தான் .கிராம புறங்களில் பெரும்பாலும் உள்ளவர்கள் நீச்சல் கற்று கொண்டவர்களாக இருந்தனர் ஆனால் இரு அது கூட மாறி கொண்டே வருகிறது.

Thursday, October 31, 2013

பெண்ணல்ல நீ காவியம்...


இந்த நூற்றாண்டின்,
புரட்சிப் பெண் நீ ...
உனக்கு மட்டும்
எப்படி இந்த மனப்பக்குவம்...?

சொகுசை நம்பி,
சொந்தத்தை உதறும் காலத்தில்..
சொந்தத்தைத் தேடியும்,
சொப்பன வாழ்வை மறந்தும்,
சொகுசை உதர்கிறாய்...
பெண்ணே!!!
புரியவில்லை எனக்கு ..
சங்க காலத்து காவியப்பெண்ணா நீ...

Friday, October 25, 2013

முஸ்லிம் இலக்ஷியம் இஸ்லாமே

இஸ்லாமிய சோதரீர்!

இப்பிரபஞ்சத்தில் இறைவனால் அருளப்பட்ட அருட் பாக்கியங்களில் மிக மகத்தானது “இஸ்லாமே” என்பதுதான் ஒவ்வொரு

உண்மை முஸ்லிமுடைய உதரத்திலும் உயிரிலும் ஊறிப் போய் இருக்கும் உள்ளக் கிடக்கை. தான் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக ஒவ்வொரு முஸ்லிமும் உள்ளம் உவந்து உவகை பூத்து, எல்லாம் வல்ல இறைவனுக்கு ‘ஷுக்ரு’ என்னும் கடப்பாடு செலுத்துகிறான். அது மட்டுல்ல; அத்தகைய அரும் பெரும்பாக்கியமாய தீனுல் இஸ்லாத்தை ஆண்டவன் புறத்திருந்து நம் மாந்தர் கோடிக்கு அளித்தருளிய ஏக தெய்வத்தூதர் நபி கரீம் முஹம்மத் (சல்) அவர்களுடைய உம்மத்தில் “நானும் ஒருவனா யிருக்கிறேன்” என்று எண்ணும் போது, ஒவ்வொரு முஸ்லிமும் முகம் மலர்ந்து அகம் குளிர்ந்து, ஏதோ ஒருவகைப் பேரானந்தங் கொள்கிறான்; “அன்ப! நீ முஸ்லிம்தானே?” என்று கேட்டதும், “ஆம், அல்ஹம்து லில்லாஹ்!” என உடனே பதில் அளிக்கின்றான்.

Thursday, October 24, 2013

ஜிஹாத் என்றால் என்ன?

ஜிஹாத் என்றவுடன் அல்லாவை நிராகரிப்ப்பவர்களை எதிர்த்து போர் புரிவது என்று பெரும்பாலான மக்கள் தவறான எண்ணம் கொண்டுள்ளனர்.

ஜிஹாத் என்பது விரிவான பொருள் கொண்ட வார்த்தையாகும்.

மனதில் எழும் சைத்தான் தனமான உணர்வுகளை எதிர்த்துப் போரிட்டு நமது மனத்தை அடக்குதல்

அநீதியாளர்களை எதிர்த்துப் போரிடுதல்

இஸ்லாத்திற்கு எதிரான சடங்கு சம்பிரதாயங்களைக் கிள்ளியெறியப் பாடுபடுதல்

எது பொறுமை !


( படத்தின் விளக்கம். The message give by the Holy Prophet (Peace BE Upon Him) at the time f Conquering Makkah... He is So humble.....)

சிலர் கடுங் கோபம் வந்தாலோ ,துக்கம் வந்தாலோ நிலை தடுமாறி விடுகின்றனர்.கோபம் கொண்டவர் எதிரியை கடும் சொற்களால் திட்டி பேசக்கூடாத வார்த்தை எல்லாம் பேசிவிட்டு பின் நான் அல்லாஹ் விற்காக சப்று செய்கிறேன் என்பார் இன்னும் சிலர் கடும் துக்கம் ஏற்பட்டால் கத்தி கதறி அழுது புரண்டு படைத்தவனே உனக்கு பார்வையில்லையா என வசனம் பேசி விட்டு பின் அல்லாஹ் விற்காக சப்று செய்கிறேன் என்பார்கள்.

ஆனால் உண்மையான சப்று (பொறுமை) என்றால் என்ன?

இதோ அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.;
ஓரு முறை மூதாட்டி ஒருவர் ஒரு கப்ரு அருகே அமர்ந்து அழுது புலம்புவதைக் கண்டு சப்று செய்யுங்கள் என்றார்கள்.சொல்பவர் அண்ணல் நபி என அறியாத அம்மூதாட்டி என் வேதனை உமக்கு வந்தால்தான் தெரியும் என்றார்.நபி பெருமான் (ஸல்)அவர்கள் அமைதியாக திரும்பி விட்டார்கள்.அங்கிருந்தோர் வந்தது நபி என அம்மூதாட்டியிடம் கூற பதறிப்போன மூதாட்டி அண்ணலாரின் வீட்டிற்கு வந்து மன்னிப்பு கேட்டார்

அப்பொழுது நபி(ஸல்)சொன்னார்கள் :

“அஸ்ஸப்ரு இன்த ஸத்மத்தில் ஊலா “
துன்பம் உள்ளத்தைத் தாக்கிய முதல் நிலையிலேயே மனதை கட்டுப்படுத் வதுதான் பொறுமை “ (திர்மதி)

ஸப்ரு என்ற அரபு வார்த்தைக்கு மனதை அடக்குவது ,கட்டுபடுத்துவது
என்பது பொருள் நோன்பிற்கும் ஸப்ரு என்று பெயர்.
அல்லாஹ் நமக்கு பொருமையைத் தந்தருள்வானக! ஆமீன்

தகவல் தந்தவர்
Moulavi Kaniyur Ismail Najee



Wednesday, October 23, 2013

அபுபக்கர் (ரழி)

மா நபி;
ஹிஜ்ரத் செய்யும்
வேளையிலும்
ஹஜ்ரத் நீங்கள்
இருந்தீரே!

பலம் கொண்ட
மனதால்;
படைக்கொண்ட எதிரியை
திகைக்க வைத்தீர்;
வரலாற்றைத்
தொடக்கி வைத்தீர்!

உத்தம நபியின்
சத்திய மாணவனாய்;
நித்தமும் சிலிர்க்கும்;
உங்கள் யுத்தத் தந்திரத்தைக்
கேட்கையிலே!
இஸ்லாமிய வேட்கையிலே!

Sunday, October 20, 2013

பெண்ணியம் சில புரிதல்கள்

சையத் அப்துர் ரஹ்மான் உமரி

பெண்ணியம் தொடர்பான சில அடிப்படை விஷயங்களை சகோதரர்கள் புரிந்து கொண்டால் நலம் என்று நினைக்கிறேன். பிரச்சனையின் முழுப் பரிணாமத்தை விளங்கிக் கொள்வதற்கு அவை துணைபுரியும். ஏனென்றால், யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் அதைப் பற்றிய அடிப்படையான அறிவு இருக்கின்றதோ, இல்லையோ பேசலாம் என்பது இப்போதெல்லாம் ஒரு புதிய மரபாக ஆகி வருகின்றது. பெண்ணியம் என்றால் என்ன? என்பது பற்றி அனைத்து வாசகர்களும் நன்கு விளங்கி வைத்திருப்பார்கள் என்று நான் கருதவில்லை.

உங்கள் நண்பன் யார்?

ஹதீஸ் விளக்கவுரை அஷ்ஷெய்க் ர்.ஆ. மின்ஹாஜ் இஸ்லாஹி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபரி உனக்கு அதனை (இனாமாகத்) தரலாம். அல்லது நீ அதனை அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒருவேளை அவனிடமிருந்து நீ நறுமணத்தையாவது நுகரலாம். கெட்ட நண்பன் துருத்தியில் ஊதுகின்ற கொல்லனைப் போலாவான். அவன் உனது ஆடையை எரித்து விடலாம். அல்லது நீ அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகருவாய். அறிவிப்பவர் : அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி). ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

தனிமனித சீர்திருதத்திற்கும் சீரழிவுக்கும் உள்ளமும் சூழலும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. மேற்குறிப்பிட்ட ஹதீஸ் தனிமனித வாழ்வில் சூழல் ஏற்படுத்தும் பாதிப்புப் பற்றி விளக்குகிறது. நபி (ஸல்) அவர்கள் அதனை அழகிய உதாரணத்தினூடாக விளக்குகிறார்கள்.

சூழல் எனும் போது பெற்றோர், உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் கருத்திற் கொள்ளப்படுகின்றனர். ஒரு குழந்தையின் வாழ்வில் ஆரம்பமாக பாதிப்பை ஏற்படுத்துவோர் பெற்றோர்களாவர். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :

ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாத்தில் தான் பிறக்கிறது. அதனது பெற்றோர்களே அதனை யஹ{தியாக, கிறிஸ்தவராக, நெருப்பு வணங்கியாக மாற்றி விடுகின்றன.

தி மெஸேஜ் திரைப்படம் தமிழில்..

Wednesday, October 16, 2013

நீடூர்-நெய்வாசல் ஈத் பெருநாள் Nidur-Neivasal Eid (+playlist)


நீடூர்-நெய்வாசல் ஈத் பெருநாள்
Nidur-Neivasal Eid-Ul-Ada

நீடூர்-நெய்வாசல் ஈத் பெருநாள் தருணங்கள்

Assalamu Allikkum

Warmest Eid Greetings with wishes for you, friends and family
May this Eid is full of blessings to all of us, Eid-ul-ada across the miles. May Allah accept all your good deeds and bless you and your families abundantly! All praise be to Allah the Exalted.

Ya Allah, I seek forgiveness from you for all of my every wrong doings with you in the past with and without my knowledge. i humbly thank you for your precious support that u gave to me as a friend and well-wisher. forgive me on this eid-ul-ada and set me free from my sins that harmed you. May Allah s,w,t bless you with his mercy and love In shaa allah
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

Tuesday, October 15, 2013

EID-UL-ADA in Dubai 2013 துபாயில் தியாக திருநாள்-2013


Assalamu allikkum

warmest Eid Greetings with wishes for you,friends and your family
May this Eid Day is full of blessings for you, your family and friends.
To all of my readers and friends,
eid-ul-ada across the miles. May Allah accept all your good deeds and bless you and your families abundantly! All praise be to Allah the Exalted.

eid-ul-ada (may you have a blissful Eid) everyone!

I seek forgiveness from you for all of my every wrong doings with you in the past with and without my knowledge. i humbly thank you for your precious support that u gave to me as a friend and well-wisher. forgive me on this eid-ul-ada and set me free from my sins that harmed you. May Allah s,w,t bless you with his mercy and love In shaa allah
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

Monday, October 14, 2013

Perform Hajj & Umra ஹஜ் மற்றும் உம்ரா செய்வது


Assalamu Alaikkum
How to Perform Hajj & Umra-step by Step pictures! + HISTORICAL PLACES OF MAKKAH & MADINA
May this EID-UL-ADHA Day is full of blessings for you, your family and friends.
To all of my readers and friends, EID MUBARAK across the miles. May Allah accept all your good deeds and bless you and your families abundantly!

S.E.A.Mohamed Ali Jinnah, ("nidurali")
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

Sunday, October 13, 2013

இறைவனுக்காக தியாகம் செய்தால் இனமும் அழியாது ... இஸ்லாமும் அழியாது


மக்கா -
மயில்கள்
தோகை விரிக்காத
மணல் காடு !
குயில்கள் வந்து கூவாத
மலைகளின் கூடு !

அது -
சூரியன் மட்டுமே
குளிக்க வருகின்ற
வெயில் நீர் தேக்கம்
சுடு கதிர்கள் மட்டுமே
வேர் விடுகின்ற
கானல் தேசம் !

குழுமையின்
செழுமையே தெரியாத
அந்தத்
தணல பூமியில்தான்
ஹாஜராத் தாயோடு
குழந்தை இஸ்மாயிலையும்
தனிமையில் விட்டு விட்டு
தன் வழியே
திரும்பிச் சென்றார்
நபி இப்ராஹீம் !

Saturday, October 12, 2013

இறைவழிபாடு - இஸ்லாம் கூறுவதென்ன?

 தொழுகை உடல் சார்ந்த வழிபாடு; உண்ணா நோன்பும் அவ்வாறுதான். 'ஸகாத்' எனப்படும் கட்டாயக் கொடை ஒரு பொருளாதார வழிபாடு. புனித ஹஜ் உடல், பொருள் இரண்டும் சார்ந்த வழிபாடு.

இந்த வழிபாடுகள் மூலம் இறைக்கட்டளையை நிறைவேற்றும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைக்கின்ற அதே வேளையில், தமக்கும் தம்முடன் வாழும் சகமனிதர்களுக்கும் அவர் நன்மை செய்கிறார்.

தொழுகையால் உடல் தூய்மையும் உளத்தூய்மையும் அடைகிறார். தாம் செய்த குற்றங்களை எண்ணி இறைமுன் அழுகிறார். இனிமேல் குற்றமிழைக்கமாட்டேன் என்று சபதம் ஏற்கிறார். குற்றங்களிலிருந்து விடுபடுவது அவருக்கும் அவர் வாழும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் நன்மையல்லவா?.

உண்ணா நோன்பால் குடலுக்கு ஓய்வு; அதனால் உடலுக்கு ஆரோக்கியம். மதிய வேளையில் பசியும் தாகமும் அவரைவாட்டும்போது, பட்டினியின் கொடுமையை அனுபவிக்கிறார். ஏழை எளியோருக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று உந்தப்படுகிறார்.

'ஸகாத்' எனும் கட்டாயக் கொடை, சுயநலத்தையும் கருமித்தனத்தையும் செல்வர்களிடமிருந்து அகற்றுவதற்கான அருமையான வழிபாடு. உன்னை அண்டி வாழும் ஏழைகளுக்கு உன் செல்வத்தில் பங்கு உண்டு என்று சொல்கின்ற இறைக்கட்டளைதான் ஸகாத். ஆண்டுக்கு இரண்டரை விழுக்காடு தொகை ஏழை எளியோருக்கு ஒவ்வொரு செல்வரும் கட்டாயமாக வழங்கிவந்தால், ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்பார்கள்.

மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் - தொடர் – 1


இந்தியாவில் இன்றைய அரசியல் சூழ்நிலைகள், பிரச்சாரங்கள் யாவும் துவேஷத்தை வளர்க்கும் வகையில் திட்டமிடப் பட்டு  முஸ்லிம்களுக்கும் சிறுபான் மையினருக்கும் எதிரான திசையில் திருப்பிவிடப் பட்டு இருக்கிறது. இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர் எஸ் எஸ் இயக்கம் எதிர்கால இந்தியாவின் பிரதமர் பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்து கொடுத்து இருக்கிறது. இப்படி தேர்வு செய்யப் பட்டவர் முஸ்லிம்களை கொத்துக் கொத்தாய் கொலை செய்த பாதககரங்களுக்கு சொந்தக்காரர்.   தனது ஆட்சியின் கீழ் இருக்கும் அனைத்து மக்களுக்கும் நீதி வழங்குவதே அரசநீதி என்று அவர் நம்பும் நீதி நூல்களிலேயே கூறப்  பட்டிருக்க,  உயிரிழந்த தனது ஆளுகைக்குட்பட்ட குடிமக்களை காரில் அடிபட்ட குட்டி நாய்களுக்கு ஒப்பிட்டுப் பேசிய உயர் குணம் படைத்தவர். இந்தியாவின் பணம் படைத்த பெரும் பணக்காரர்கள் நிறைந்த குஜராத் மாநிலத்தின் வட்டிக்கடை அதிபர்கள், தங்கக்கடை அதிபர்கள், சேட்டுகள் என்று அழைக்கப் படும் இந்தியப் பொருளாதாரத்தை தங்களது கை பொம்மலாட்டமாக்கி வித்தை காட்டும் உயர் சாதியினர் அடங்கிய கார்ப்பரேட் முதலாளிகளும் இந்தியாவில் இந்து தேசியத்தை அமுல்  படுத்தி சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைப் பறித்து இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்க வேண்டுமென்று ஆர்ப்பரித்துத் திரியும்     ஆர் எஸ் எஸ்  , சங்க பரிவார் , முன்னாள் ஜனசங்க மற்றும் இந்நாள் பி ஜெ பி யினரும் கை கோர்த்து பெரும்         சதித்திட்டத்தின் அடிப்படையில் காய்களை விளம்பரங்கள் மூலமும் பார்ப்பன ஊடகங்கள் மூலமும் நகர்த்திக் கொண்டு இருக்கின்றனர்.

Tuesday, October 8, 2013

விடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள்

இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர்களில் ஆண்களைப் போன்று பெண்களும் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளனர்.

அவர்களில் சிலரது குறிப்புகள் மட்டும் இங்கே.

பேகம் சாஹிபா
 திண்டுக்கல் மாவட்டத்தில் பேகம் சாஹிபா என்ற ஊர் இருந்தது. அதன் பின்னர் பேகம் சாஹிபா நகராக மாறி அதன் பின்னர் பேகம்பூர் என மருவியது. ஐதர் அலி அவர்களின் தங்கை பேகம் சாஹிபா. அவர் கணவர் நவாபு மீறா றசாலிக்கான் சாயபு. இவர் திண்டுக்கல் சீமை ஜாகீர்தாரராக இருந்தார். அவர மனைவியும் ஐதர் அலியின் தங்கையுமான ஹஜ்ரத் பேகம் சாஹிபா அவர்கட்கு நந்தன வருடம் ஆனி மாதம் 13 ஆம் தேதி (கி.பி.1772) குழந்தை பிறந்து ஏழாம் நாள் காலமானார்.  போர்க்களத்தில் நிறைமாத கர்ப்பிணியாக போராடியவர். மீறா றசாலிக்கான் சாயபு தன் மனைவி அடக்கம் செய்த இடத்தில் பள்ளிவாசல் கட்டி, கோரியும் கட்டி காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்னபள்ளபட்டி ஆகிய ஊர்களில் நன்செய், புன்செய் நிலங்களை மானியமாக விட்டு ஒன்பது பேரையும் நியமித்துள்ளார். அந்த ஒன்பது பேரும் இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு பள்ளிவாசல் பணிகளையும் கவனிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.

ஒரு மின்னஞ்சல் என்னை மிகவும் ஈர்த்தது


   
என் கேள்விக்கு இறைவனின் பதில்!
    ================================
    அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்!

    துபாய் காயல் நல மன்றத் தலைவர் ஜனாப் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்கள் கருத்தாழமிக்க நல்ல பல மின்னஞ்சல்களை அவ்வப்பொழுது அனுப்பி வைப்பார்கள். அதில் சமீபத்தில் வந்த ஒரு மின்னஞ்சல் என்னை மிகவும் ஈர்த்தது.

    டாக்டர் அஹ்மத் ஒரு பிரபலமான மருத்துவர். அவர் ஒரு தடவை ஒரு முக்கியமான மருத்துவ மாநாட்டுக்குப் புறப்பட்டார். அது இன்னொரு நகரத்தில் நடக்கவிருந்தது. அந்த மாநாட்டில் டாக்டர் அஹ்மதுக்கு ஒரு விருது வழங்கப்படவிருந்தது. அவர் அண்மையில் நடத்திய ஒரு நீண்ட நெடிய மருத்துவ ஆராய்ச்சிக்காக, அதனைப் பாராட்டும் விதமாக அந்த விருதை வழங்கி அவரை கௌரவிக்க இருந்தார்கள்.

    அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார் டாக்டர் அஹ்மத். அந்த ஆராய்ச்சிக்காக மிக நீண்ட காலமாக, கடினமாக உழைத்திருந்தார் அவர். ஆராய்ச்சிக்காக தான் பட்ட சிரமங்களுக்கெல்லாம் ஆறுதலாக இந்த விருது அமையும் என்று அவர் எண்ணினார். விமானம் புறப்பட்டது. புறப்பட்டு இரண்டு மணி நேரத்தில் விமான ஓட்டுனர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். விமானத்தில் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறதென்றும், அருகிலுள்ள விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்கப் போவதாகவும் அவர் அறிவிப்பு செய்தார்.

Monday, October 7, 2013

எல்லா முஸ்லிம் அமைப்பும் எப்படியாவது ஒன்றிணைய வேண்டும்!


இந்தியாவில் 534 தொகுதிகளில் 105 தொகுதிகளில் வெற்றி தோல்வி முஸ்லிம் வாக்காளர்களால் நிச்சயிக்கப் படுகிறது ... - இந்தியா டுடே ...
 அதில் 8தொகுதி தமிழ் நாட்டில் உள்ளது .

நம் சமுதாய தலைவர்கள் தொண்டர்கள் இதனை உணர்ந்திருக்கிரார்களா ?...இந்திய மக்கள் தொகையில் 30கோடி பேர் முஸ்லிம்களாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை வெறும் 10க்கு மேல் ஒருபோதும் இருந்ததில்லையே. ஏன்? சிந்தித்தோமா ?
இந்திய முஸ்லிம்கள் அனைவரும் ஒரு கட்சிக்கு மாத்திரம் வாக்களிப்போம் எனில், நிச்சயமாக இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் நாம் நமக்குள்ளேயே பல பிரிவுகளாக பிரிந்து, இந்திய அரசியல் கட்சிகளில் பல கட்சிகளுக்கும் வாக்களிப்பதால் நம்முடைய வாக்கு வங்கி சிதறடிக்கப்பட்டு, நமக்குள்ளேயே வலுவிழந்து போகிறோம். இதற்கு உதாரணமாக சீக்கியர்களை (ஒருசில தனி நபர்களைத் தவிர) எடுத்துக் கொள்வோம். இந்திய மக்கள் தொகையில் வெறும் 2 சதவீதம் மாத்திரம் இருக்கும் சீக்கியர்கள், இந்திய அரசியலில் கோலோச்ச முடியும் என்றால் இந்திய மக்கள் தொகையில் 25 சதவீதம் இருக்கும் நாம் ஏன் மற்றவர்களிடம் மண்டியிட வேண்டும்? இது ஏனென்றால் நாம் நமக்குள்ளேயே ஒற்றமையின்றி பல பிரிவுகளாக பிரிந்து, தலா 1 சதவீதம் வீதம் இந்திய அரசியல் கட்சிகள் 25க்கும் வாக்களிப்பதால் இந்திய மக்கள் தொகையில் 25 சதவிகிதம் உள்ள நம்முடைய பலம் 1 சதவிகிதமாக வலுவிழந்து விடுகிறது. ஏதேனும் ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும்போது, நாடாளுமன்றத்தில் நம்முடைய பலம் வெறும் 1 சதவிகிதமாகவே பிரதிபலிக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 25 சதவீதம் இருக்கும் நம்முடைய பலம் ஆட்சி மன்றம் என்று வரும்போது வெறும் 1 சதவிகிதம் மட்டும்தான் பிரதிபலிக்கப்படுகிறது என்பதை எண்ணி நாமெல்லாம் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்நிலையைக் காணும் முழு உலகமும் நம்மைப் பார்த்து நகைப்பது நம் காதுகளில் ரீங்காரமிடுகிறது. மதச்சார்பற்ற இந்திய அரசியல் கட்சிகளின் பிரித்தாளும் சூட்சிக்கு முஸ்லிம்களாகிய நாம் பலிகிடாவாக மாறிக் கொண்டிருக்கிறோம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

Monday, September 30, 2013

“ஹஜ்” என்னும் ஓர் அற்புதம்!


சாந்திச்  சரணா  லயமாம் – ஹஜ்ஜில்
............சாரும் புவியின்  முதலா லயமாம்
ஏந்திப் பிரார்த்திக்கும் ஆங்கே—அருள்
…….......இறங்கிடும் ஹாஜிகட்கு நன்மையும் பாங்கே

தந்தைஇப் றாஹிம்பாங் கோசை- இந்தத்
..........…தரணியில் மக்காவின் ஈர்ப்பு விசையாம்
சிந்தையிட் சேருமிறை போதம்- ஆங்குச்
............…சேர்ந்தே ஒலிக்கும் திருமறை நாதம்

அரபு நாட்    டுக்குள்ளோர்    நாடு - அங்கே
.......….அகிலமுஸ்     லிம்களின்  கூட்டுமா   நாடு
 மரபு  வழிகளில்  தேடல்  -புவி
........….மனித  நதிகளின்  சங்கமக் கூடல்

Saturday, September 28, 2013

ஆட்டுக்குட்டி ...........


நாம் மற்றவங்களுக்கு உதவி செய்யும் போது செய்த உதவியயை அந்த நேரத்தோடு நாம் மறந்து விடுவோம்

ஆனால் நம்மிடம் இருந்து உதவி பெற்றவர்கள் நாம் செய்த உதவியை எப்போதும் அவர்களின் மனதில் வச்சுக்கிட்டு தான் இருக்காங்க

நோன்பு பெருநாள் அன்று கத்தார் நாட்டில் இருந்து ஒரு சகோதரர் எனக்கு போன் செய்து என் பெயரை கூறி பெருநாள் வாழ்த்து கூறினார் அதோடு உடல் நலமும் விசாரிச்சார்

ஆனால் இவர் யார் என்று கொஞ்ச நேரமா தெரியாமதான் அவர் கிட்ட பேசிட்டு இருந்தேன். பிறகு சிறிய கூச்சத்தோட.......... மன்னிக்கணும் நீங்க யாருன்னு எனக்கு சரியா பிடி படல்ல, உங்க பெயரும் என்று இழுத்தேன் ......

அவர் நிதானமாக தன் பெயரையும், நாங்கள் இருவரும் சந்தித்த இடத்தையும் விளக்கினார். என் மனசுக்கு சந்தோசமா இருந்தது

விடுத்த அழைப்பு வெற்றியை தேடித் தந்தது






தொலைபேசி அழைப்பின் மணியின் ஒலி ஓசை
தொல்லை தரும் அழைப்போ!
தொல்லை தராத அழைப்போ!
கொள்ளையில் இருந்தாலும் அழைப்பின் ஒலி கேட்க
தொலைபேசியை ஓடிவந்து எடுக்கச் செய்கின்றது

ஒலிபெருக்கி வழியே வரும் ஒலி

'தூக்கத்தை விட தொழுகையே சிறந்தது'
தூக்கத்தை விட மனமில்லை

'தொழுகைக்கு விரைந்து வாருங்கள் (ஹய்ய அலஸ்ஸலாத்)'
தொழுகைக்கு விரைந்து வர மனமில்லை
விரைந்து வந்து தொலைபேசி அழைப்புக்கு பதில் கொடுக்க மனமுண்டு

தொழுவதால் வெற்றி தொழ வாருங்கள் -
'வெற்றிக்கு வாருங்கள் (ஹய்ய அலல் ஃபலாஹ்)'

தொலைபேசி அழைப்பில் வெற்றி வரும் என்ற மனம்
தொலைபேசி எடுத்து பேசுவதில் வேகம்

தொலைபேசி தொல்லை தரும் நிலையாகி விட்டது
தொழுகைக்காக விடுத்த அழைப்பு வெற்றியை தேடித் தந்தது

Wednesday, September 25, 2013

வேற்றுமையில் ஒற்றுமை சமூகங்களிடையே சாத்தியமா?





வஞ்சிரமீனின் ( Salmon Fish ) நினைவாற்றல் மற்றும் துணிகரச் செயல் -


இடம்விட்டு இடம் பெயர்ந்து செல்வது பறவைகளுக்கு மாத்திரம் உள்ள தனித்தன்மை என்று நீங்கள் கருதியிருந்தால், அது தவறாகும். உண்மையில் தரையில் மாத்திரம் அல்லாது கடலில் வாழும் உயிரினங்களும் இடம் விட்டு இடம் பெயரும் தன்மை கொண்டவை. இந்த அத்தியாயத்தில் இடம்விட்டு இடம் பெயரும் மீனினமான வஞ்சிர மீனின் துணிகரச் செயல் பற்றி ஆய்வு செய்வோம்.

வஞ்சிரமீனும் மற்ற மீனினங்களைப் போன்று ஆறுகளில் பெண்மீன்கள் இடும் முட்டையிலிருந்தே தோன்றுகின்றன. தோன்றிய நாளிலிருந்து சில வாரங்கள் மட்டுமே ஆறுகளில் வாழும் இந்த மீனினம், சில வாரங்களுக்குப்பின் ஆறு சென்று கலக்கும் கடலை நோக்கி தனது பயணத்தைத் துவக்குகிறது. கடலை நோக்கிச் செல்லும் இந்த பயணத்தின் போது வஞ்சிர மீன்கள் ஏராளமான ஆபத்தை எதிர்கொள்கின்றன.  மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளையும், நீர்த்தேக்கங்களையும், மாசுபட்ட தண்ணீரையும், வஞ்சிர மீன்களை உணவாக உட்கொள்ளக்கூடிய பெரிய பெரிய மீன்களால் ஏற்படும் அபாயங்களையும் கடந்து வஞ்சிர மீன்கள் கடலை சென்று அடைகின்றன. பல ஆபத்துகளை கடந்து கடலை அடைந்த வஞ்சிர மீன்கள், கடலிலேயே பல ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன. வஞ்சிர மீன்கள் தங்களது சந்ததியை பெருக்கக்கூடிய பருவத்தை அடைந்தவுடன், கடலிலிருந்து அவைகள் முதலில் புறப்பட்டு வந்த ஆற்றை நோக்கி மீண்டும் நீந்தத் துவங்குகின்றன.

இதில் வியக்கத்தக்க செய்தி என்னவெனில் வஞ்சிர மீன்கள் தாங்கள் பிறந்து சில வாரங்களே வாழ்ந்த இடத்தை தவறாமல் சென்றடைவதுதான். இந்த செயலில் அவைகள் சிறிதும் தவறிழைப்பதில்லை. அவைகள் பயணித்த தூரம் ஒன்றும் குறைந்தது அல்ல. வஞ்சிர மீன்கள் தாங்கள் புறப்பட்டு வந்த இடத்தை சென்றடைய வேண்டுமெனில், சிலவேளைகளில் 1500 கிலோ மீட்டர் (930 மைல்கள்) தூரத்தைக் கடக்க வேண்டும். 1500 கிலோ மீட்டர் தூரத்தையும் கடந்து செல்ல சில மாதங்கள் கூட ஆகலாம். இந்த பயணத்தில் வஞ்சிரமீன்கள் பல தடைகளை கடந்து செல்ல வேண்டியதாக இருப்பினும் அவைகள் சிறிதும் தவறிழைக்காமல் தாங்கள் புறப்பட்டு வந்த இடத்தைச் சென்றடைகின்றன.  

Friday, September 20, 2013

இமாம்களின் சேவை தேவை.


ஒரு இஸ்லாமிய சூழலில் ஒரு அடிப்படை நபர் இமாமாக இருக்கிறார்.
இமாம் முஸ்லீம் சமூகத்தின் மையப் புள்ளியாக இருக்க வேண்டும்.
இமாம் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அவர்களது வாழும் முறை மக்களால் கண்காணிக்கப் படுகின்றது .

பெரும்பாலான இமாம்கள் இப்பொழுது தொழ வைப்பதோடு, ஹதீஸ் சொல்வதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள்.

இமாம்கள் மக்களோடு நெருக்கம் கொண்டு சமூக அக்கறையோடு மற்றவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும். மக்கள் மனதை தொட மக்களுக்கு நெஞ்சை வருடி விடுமாறு ஆறுதலும் ஊக்கமும் கொடுக்க வேண்டும். குறையை சுட்டிக் காட்டுவதை விட நிறையை சொல்வதில் மக்கள் அவரது தொடர்பை விரும்புவர். நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு கொள்ளாமல் கெட்டவரையும் நல்லவராக்க அவர்களின் தொடர்பு அறுபடக் கூடாது

" வெள்ளிக் கிழமையின் மாட்சி மாட்சி "



வெள்ளியை
பெயரிலே வைத்திருந்தாலும்
தங்கமான நாள்
வெள்ளிக் கிழமை !

முந்தைய இரவிலேயே
ஆரம்பமாகி விடுகிறது
ஜும்மா நாளின்
கொண்டாட்டம் !

வழக்கம் போல்
சூரியன்
விழிப்பதற்கு முன்னாலேயே
விழிக்க வைக்கும்
பிலாலின் அழைப்பு
ஒரு பெருநாளின்
தக்பீர் முழக்கம் போல்
மிதந்து வருகிறது !

Wednesday, September 18, 2013

எதிரி

நான் இந்தியக் காவலரனைக் கடந்து வேகமாக நடந்து சென்றேன். அது மத்தியான நேரம். எவரும் தென்படவில்லை. சிலவேளை அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கக் கூடும். அவ்வாறில்லையெனில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கக் கூடும். நடுப்பகலில் எந்தவொரு மனித ஜீவராசியும் தேசத்தின் எல்லையைக் கடந்து செல்வரென அவர்கள் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். வியர்வை வழிய நான் புகையிரதமொன்றைப் போல வேகமாக ஓடினேன். எனது சகோதரனின் முகம் எனது கண்ணெதிரே தோன்றுகிறது. அவரது நிலைமை படுமோசமானதென தகவல் தந்தவர் கூறியிருந்தார். நீலம் ஆற்றங்கரையில் தனது இல்லத்தில் வசிக்கும் அவனுக்கு தனதென்று சொல்லக் கூடிய எவரும் அங்கில்லை.

    நான் ஆற்றங்கரையில் இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியில் வசித்து வந்தேன். எனது சகோதரன் ஆற்றின் எதிர்ப்புறத்தில் பாகிஸ்தானுக்குச் சொந்தமான கரையில் வசித்து வந்தான். 'அவர் சுயநினைவற்ற நிலையிலும் உங்கள் பெயரையே கூறிக் கொண்டிருக்கிறார்' என தகவல் தந்தவர் கூறியிருந்தார். அவ்வாறான தகவலொன்று கிடைத்த பின்னர் நான் அமைதியாக இருப்பது எவ்வாறு? எவ்வாறாயினும் ஒரே இரத்தத்தில் உண்டான பந்தம் இது.

    நான் 'அத்மகாம்' பாலத்தை நெருங்கினேன். எனது சகோதரனின் வீடு நேரெதிர்ப் புறத்தில் அமைந்திருந்தது. அதனை நெருங்க எனக்கு ஐந்து நிமிடங்கள் மாத்திரமே எடுக்கும். திருடனைப் போல வலதுக்கும் இடதுக்கும் எனது பார்வையைச் செலுத்திய நான், என்னையே தைரியப்படுத்திக் கொண்டு தேசத்தின் எல்லையைக் கடந்து செல்ல முயன்றேன். எனினும், சில அடிச்சுவடுகளைப் பதித்து முன்னேறிச் செல்கையில் பலத்த சப்தத்தோடு கூக்குரலிடும் ஓசையைக் கேட்டேன்.

    'நில்!'

    நான் செய்வதறியாது அவ்விடத்திலேயே சிலையாக நின்றேன். முன்னே பார்த்த எனக்கு, துப்பாக்கியை நீட்டியபடி என்னை நோக்கி வந்துகொண்டிருந்த இரண்டு இராணுவ வீரர்கள் தென்பட்டனர்.

    "இந்தியனொருவன்" என எனது முக லட்சணத்தைப் பார்த்த ஒரு இராணுவ வீரன் கத்தினான்.

    "கைது செய் அவனை" என அடுத்தவன் கத்தினான்.

    "இல்லை...இல்லை... ஐயா நான் இந்தியனில்லை. அதே போல பாகிஸ்தானியனும் இல்லை. நானொரு காஷ்மீர்வாசி. அதோ அங்கே கேரனிலிருக்கும் சிறிய வீடொன்று தென்படுகிறது அல்லவா? அதுதான் எனது வீடு. ஆற்றின் மறுகரையிலிருக்கும் அந்தச் சிறிய வீடும் தென்படுகிறது அல்லவா? அங்கேதான் எனது சகோதரன் வசிக்கிறார். அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார். அவருக்கென்று கூற அங்கு யாரும் இல்லை. அவரது உதவிக்கு யாராவது வரும்படி தகவலொன்று கிடைத்தது. ஐயா, தயவுசெய்து எனக்கு ஒரு அரை மணித்தியாலம் கொடுங்கள். அவருக்கு எப்படியிருக்கிறதெனப் பார்த்து, முடிந்தால் மருந்துகளும் வாங்கிக் கொடுத்து..சிலவேளை அது தண்ணீர் மாத்திரமாகவும் இருக்கலாம்...அதைக் கொடுத்துவிட்டு வருகிறேன்."

  

  எனது கழுத்தில் துப்பாக்கிப் பிடியால் தாக்கப்பட்டேன். எனது இரு பாதங்களுக்குக் கீழே பூமி அதிர்வதைப் போல உணர்ந்தேன். அவர்கள் என்னை அவர்களது பங்கருக்கு இழுத்துச் சென்றனர்.

Monday, September 16, 2013

சமூக வலைப்பின்னல் தளம் பேஸ்புக்

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மில்லியன் கணக்கான மக்கள், பல்வேறு குழுக்கள், மார்க்க மேதைகள் ,அரசியல் சார்ந்தவர்கள் கருத்துக்கள், அனுபவங்கள், நடவடிக்கைகள் மற்றும் தங்கள் மகிழ்ச்சியை , துன்பத்தை பகிர்ந்து கொள்ளும் விவாதிக்க பயன்படும் தளங்களில் ஒன்றாகும்.

மக்கள் தங்கள் வணிகம் ஊக்குவிக்கவும் தங்கள் கொள்கைகளை பரப்பவும் , பிரச்சாரத்திற்கு எதிராகவும் மற்றும் பிரச்சினைகளுக்கு ஆதரவாகவும் , மற்றும் பல நோக்கங்களுக்காகவும் பேஸ்புக் தளம் பயன்படுத்தப் படுகிறது.

Saturday, September 14, 2013

ஐம்புலன்களின் ஒற்றை மகுடம்

கருணைதான்
மனித குலத்தின் ஒற்றைத் தேவை

கருணைதான்
மனிதர்களின் ஒற்றை அடையாளம்

கருணைதான்
உயிர் காக்கும் ஒற்றைக் கவசம்

கருணைதான்
ஐம்புலன்களின் ஒற்றை மகுடம்

Friday, August 30, 2013

தேரிழந்தூர் தாஜுதீன் இன்னிசை மலேசியாவில் [ 2 ]

தேரிழந்தூர் தாஜுதீன் இன்னிசை மலேசியாவில்(பகுதி 1). தீனிசைத் தென்றல்,தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார். S.E.A. முஹம்மது அலி ஜின்னா நீடூர். Jazakkallahu Hairan நன்றி

ஐரோப்பாவின் சிறந்த கால்பந்தாட்ட வீரராக பிலால் ப்ரான்க் ரிபரி தேர்வு.

அஸ்ஸலாமு அலைக்கும்,

2012/13 சீசனிற்கான சிறந்த ஐரோப்பிய கால்பந்தாட்ட வீரர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் நட்சத்திர ஆட்டக்காரரான பிலால் ரிபரி, கால்பந்து உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மெஸ்சி மற்றும் கிறிஸ்டினோ ரொனால்டோவை முந்தி இந்த விருதை தட்டி சென்றுள்ளார். இதன் மூலம் வரலாற்றின் தலைச்சிறந்த வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் ரிபரி. சில ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்லாத்தை ஏற்ற இவர், கால்பந்தாட்ட உலகில் சோதனைகளை சந்தித்து வந்த தான், இஸ்லாத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உணர்ந்ததாக கூறியவர்.

கோப்பையுடன் ரிபரி, படம் கீழே


இந்த செய்தி குறித்த ஆதார மூலம்::
http://onislam.net/english/news/europe/464255-muslim-ribery-wins-top-europe-award.html

வஸ்ஸலாம்..

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

இந்திய சட்டத்துறையில் ஷரீஅத் சட்டத்தின் பங்களிப்பு

(வழக்கறிஞர் நீடூர் அல்ஹாஜ் ஏ.எம். சயீத்)

(நபியே) உண்மையான இவ்வேதத்தை நாம் தான் உம்மீது இறக்கினோம். இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி அவைகளைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே நீர் அல்லாஹ் இறக்கிய இ(வ் வேதத்)தைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளியும். மெளட்டீகக் காலத்து சட்டங்களையா இவர்கள் விரும்பிகின்றனர். மெய்யாகவே நல்லுறுதி பூண்ட மக்களுக்கு அல்லாஹ்வை விட அழகான தீர்ப்பளிப்பவர் யார்? – திருக்குர்ஆன் 5:48-50.

திருக்குர்ஆன் என்பது எழுதப்பட்ட வேதமோ, நூலோ அல்ல. அருளப்பட்டது. எந்த ஒரு சொல்லோ, எழுத்தோ, புள்ளியோ அருளப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அப்படியே இருக்கிறது. இறையருளால் அது எந்த மாற்றமும் இல்லாமல் நிலைத்து நிற்கும்.

நம்பிக்கையுள்ளவர்களுக்கு பாதுகாவலனாக இருக்கிற இறைவன், உலக மக்களை அறியாமையின் ஆழமான இருளிலிருந்து அறிவு ஞானத்தின் பிரகாச உச்சத்திற்கு அவனே வழிகாட்டியாக இருந்து அழைத்து செல்கிறான் என்பதை திருமறை நமக்கு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. உலகத்தில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. ஆனால் அவை பின்பற்றும் வேதங்கள் மூலப்பிரதிகள் இல்லாமல் மாற்றப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டு சிதைந்து நிற்கின்றன.

Friday, August 23, 2013

லுங்கியன்

 ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ பார்த்துவிட்டு மஹிந்திரா க்ரூப்பின் சி.எம்.டி. ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் இயக்குனர் ரோஹித்ஷெட்டியை பாராட்டியிருந்தார். சிறுவயதிலிருந்தே ஆனந்தும் லுங்கி அணிகிறாராம். அதற்காக கிண்டலும் செய்யப்படுகிறாராம். சக லுங்கியன் என்கிற முறையில் ஆசுவாசமாக இருக்கிறது. ஒரு மெயின்ஸ்ட்ரீம் சினிமா, லுங்கி டான்ஸ் மூலமாக லுங்கியை கவுரவித்திருக்கிறது என்பது உலகம் முழுக்க பரவியிருக்கும் லுங்கியார்வலர்களுக்கு ஆதரவான விஷயம்தான்.

 பத்து வயதில் இருந்து லுங்கி அணிகிறேன். அப்போதெல்லாம் மாஸ்டர் லுங்கி என்று உயரத்திலும், சுற்றளவிலும் வாமனன் ஆக்கப்பட்ட லுங்கிகள் ரெடிமேடாக கிடைக்கும். பெரியவர்கள் அணியும் லுங்கியின் ரெட்யூஸ் டூ ஃபிட் மாதிரி கவர்ச்சியாக இருக்கும். இப்போது மாஸ்டர் லுங்கி கிடைக்கிறதா தெரியவில்லை. பாய்கள் கூட பெர்முடாஸுக்கு மாறிவிட்ட கலிகாலம் இது.
அப்பா, பிராண்டட் தயாரிப்பாகதான் வாங்கிக் கொடுப்பார். லுங்கி, ஜட்டி, பனியன் விஷயங்களில் சிக்கனம் பார்க்கக்கூடாது என்பது அவர் தரப்பு நியாயம். பிற்பாடு வளர்ந்து எனக்கு நானே உள்ளாடைகளை வாங்கும்போது, காசுக்கு சுணங்கி லோக்கல் தயாரிப்புகள் வாங்கி அவதிப்பட்டதுண்டு.
காட்டன் லுங்கிதான் பெஸ்ட். க்ரிப்பாக நிற்கும். என்ன பிரச்சினை என்றால் டிசைன்கள் குறைவு. டீக்கடை மாஸ்டர்கள் பாலியஸ்டர் அணிவதுண்டு. புள்ளி, ஸ்டார் போட்ட வகை வகையான டிசைன்களில் கிடைக்கும். ஒரே பிரச்சினை. இடுப்பில் நிற்காது. ஒரு முறை ஆசைப்பட்டு வாங்கி கருடகர்வ பங்கம் ஏற்பட்டு விட்டது.

Wednesday, August 21, 2013

எம்.பி.பி.எஸ். படிப்பில் 3 தங்கப் பதக்கங்கள் பெற்று முஸ்லிம் மாணவி சாதனை

M.B.B.S.-ல் 3 தங்கப் பதக்கங்கள் பெற்று முஸ்லிம் மாணவி சாதனை

எம்.பி.பி.எஸ். படிப்பில் 3 தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 வெள்ளிப்பதக்கங்களைப் பெற்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தஹ்ஸின் நிலோஃபர் சாதனை படைத்துள்ளார்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர் ஃபயீஸ் முஹம்மது அலீ, எம்.டி. (பொது மருத்துவம்) படிப்பில் 2 தங்கப்பதக்கங்கள் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

நேற்று (20.8.2013), சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பட்டங்களை வழங்கினார்.

  தஹ்ஸின் நிலோஃபர் 

மதுரை மருத்துவக் கல்லூரி மாணவி தஹ்ஸின் நிலோஃபர், கடந்த 2007-ல் சேர்ந்து 2013-ல் மருத்துவப் படிப்பை முடித்தார். முதலாம் ஆண்டு தேர்வில் உடற்கூறியியலிலும், இரண்டாம் ஆண்டில் மருந்தியல் பாடத்திலும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக அளவில் முதலிடத்தைப் பெற்றவராவார்.

முஸ்லிம் தீவிரவாதிகள்

.6 பில்லியன் முஸ்லிம் உலகில் வாழ்கிறார்கள். இவர்களுள் எத்தனை பேர் தீவிரவாதிகள்? விரல்விட்டு எண்ணிவிடலாம். சரி ஒரு கணக்குக்குள் கொண்டுவர முயல்வோம்.

ஒரு (1600) ஆயிரத்து அறுநூறு?

சரி போகட்டும் ஒரு (16,000) பதினாறு ஆயிரம் பேர்?

சரி அதுவும்போகட்டும் மிக மிக அதிகப்படியாக ஒரு (160,000) லட்சத்து அறுபதினாயிரம் பேர்?

1.6 பில்லியனில் 160,000 என்பது எத்தனை விழுக்காடு தெரியுமா?

0.01 % விழுக்காடு.

அதாவது பத்தாயிரம் பேருக்கு ஒருவன்.

இந்த ஒருத்தனையே காரணம்காட்டி மீதம் உள்ள ஒன்பதாயிரத்து தொல்லாயிரத்து தொன்னூற்றி ஒன்பது பேரையும் தீவிரவாதிகள் என்று சொல்வது ஏன் என்று எவரேனும் சிந்தித்துப் பார்த்தீர்களா?

99.99 % விழுக்காடு மக்கள் அஸ்ஸலாமு அலைக்கும் என்று அன்பும் அமைதியும் சாந்தமும் சமாதானமும் கொண்டு வாழ்கிறார்களே?

அளவற்ற அருளாளனின் நிகரற்ற அன்புடையோனின் கருணை கொண்டு அமைதி வழியில் வாழ்கிறார்களே, அவர்களை அப்படியே விட்டுவிட்டு ஏன் இந்த உலகம் ஏதோ சில தீவிரவாதிகளைக் கொண்டு இஸ்லாத்தைத் தீவிரவாதம் என்று முத்திரை குத்த நினைக்கிறது?

Tuesday, August 20, 2013

அப்துல்லாஹ் உடலை விட்டுக் கொடுத்தது இஸ்லாமிய கூட்டமைப்பின் தவறா?

டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் உடலை விட்டுக் கொடுத்தது தவறான முன்னுதாரணம் என சிலர் வாதிடுகின்றனர். ஆனால் இது சூழ்நிலை கருதி எடுக்கப்பட்ட சரியான முடிவு ஆகும் !

இதை அவர் மருத்துவமனயில் மரணித்த சமயத்தில் அங்கிருந்த சகோதரர்களிடம் நான் தடா ரஹீம் உள்ளிட்ட சகோதர்கள் பேசிய போது இதுதான் சிறந்த முடிவாக இருக்கும் என்பதை மற்ற தலைவர்களிடமும் சொல்லி ஒருமித்த கருத்துக்கு வர வலியுறுத்துவோம் ஆனாலும் கூட்டமைப்பின் இறுதி முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று கூறினோம்.

அல்லாஹ்வின் கிருபையால் மருத்துவமனையில் எடுத்த முடிவே மசுராவின் முடிவாகவும் அமைந்து அழகிய முறையில் அப்துல்லாஹ் அவர்களின் ஜனாஸா தொழுகை நடைபெற்றது! இது முஸ்லிம்களின் மேல் மதிப்பையும் , இஸ்லாத்தின் பால் மற்ற மக்களுக்கு ஈர்ப்பையும் ஏற்படுத்தியது.

இதுவல்லாமல் நாம் விட்டுக் கொடுக்காமல் போராடி அவர் உடலை எடுத்து அடக்க முற்பட்டிருப்போமானால் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும் !

உயிலும் உடலும் (மரண சாசனம்)

 “‘(மரண சாசனம் செய்ய) ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருக்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் அவர் தன்னுடைய மரண சாசனத்தை எழுதித் தன்னிடம் வைத்திருக்காமல் இரண்டு இரவுகள் கூட கழிப்பதற்கு அனுமதியில்லை’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார். (சஹீஹ் புகாரி. பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2738)

இந்த நபிமொழிக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியா போன்ற நாடுகளில் எத்தனை முஸ்லிம் மக்கள் உயில் எழுதி வைத்துக் கொள்கிறார்கள் எனத் தெரியவில்லை. பெரும்பாலானவர்களுக்கு காசு, பணம், துட்டு, சல்லி, டப்பு, money என்று வெவ்வேறு பெயர்களில் ஓடத்தான் நேரம் சரியாக இருக்கிறதே தவிர, ஏது இதற்கு பொழுது? தவிர, சேர்ப்பவற்றை காலா காலத்திற்கும் நமக்கு நாமே ஆண்டு அனுபவிக்கப் போகிறோம்; நூறு என்றில்லா விட்டாலும் தொண்ணூறைத் தாண்டுவோம் போன்ற அபத்த எண்ணங்கள் மனத்தை ஆக்கிரமித்துள்ளன.

LinkWithin

Related Posts with Thumbnails