Monday, December 9, 2013

இளம்பிறை எழுச்சி


பேரணி முழக்கம் இளையவர் ஒலிக்கப்

.....பெரும்புகழ்ப் பெருநகர் ஆங்குத்

தோரணம் போல கூட்டமாய் வீதி

..தோறுமே பச்சையின் வண்ணம்

வீரமும் தொண்டும் நிறைந்துளப் படையின்.

....வெற்றியைக் குறித்திடும் காட்சி

நேரமும் நெருங்கி வந்தது; வாவா

....நேர்மையின் நிகழ்வினை நோக்கி!


இறப்பிலோ நல்ல நிகழ்விலோ எம்மை

....இறைமறை நபிவழி இஜ்மா

மறந்திடா வண்ணம் நடைமுறை செய்ய

....மாண்புள முன்னவர் கூட்டம்

பிறப்புடன் எம்மைத் தொடந்திடும் மஹல்லா

....பிளவிலாச் சேவையைச் செய்யச்

சிறப்புடன் விருதை வழங்கிடும் நோக்கம்

,,,சிலிர்ப்புடன் காணலாம் வாவா!


புலமையோன் அருளால் பெரிதினும் பெரிதாய்ப்

......புகழ்பெறும் தாய்ச்சபை காக்கும்

தலைமையைக் காணத் திருச்சியில் கூடு

....தனிமையாய் ஏணியில் ஏற

நிலைமையைச் சொல்லும் வழிகளைக் கேட்க

...நீள்துயில் நீக்கியே செல்லு

மலையென உறுதி பெற்றிடக் கூறும்

....மாண்புளச் சொற்களைப் பேணு!


 இளம்பிறை எழுச்சி மாநாடு இன்ஷா அல்லாஹ் டிசம்பர் 28, திருச்சியில்
யாத்தோன்: அதிரை,“கவியன்பன்பன்” கலாம், (அபுதபி)
பாடியவர்: பாடகர் , அதிரை ஜஃபருல்லாஹ்(ஜித்தா)

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails