Tuesday, September 27, 2016

சொந்தமாகட்டும் சொர்க்கம் ! - அபு ஹாஷிமா

அண்ணலே யா ரசூலல்லாஹ் !
உங்களை
உவக்கும்போதுதானே
உயிர் பெறுகிறது
எங்கள் உள்ளம் !
உங்கள் முஹப்பத்தை
முத்தமிடும் போதுதானே
மணம் வீசுகிறது
எங்கள் மூச்சு !

Wednesday, September 21, 2016

எனக்குள் காணும் நான்....!

நினைவுகளை கழைந்து
நிர்மல நிதர்சனத்தை தரிசித்ததில்
என்னில் நான் பளிச்சென தெரிந்தேன்.
இறைவன் தந்த கூடு
அதில் எத்தனை எத்தனை கோடு
கடந்துவந்த பாதை
காட்டியது முயற்சியை
வெற்றியும் தோல்வியும்
விகிதாச் சாரத்தில்
சிறு சிறு வித்தியாசங்கள்
சாரமில்லை

Tuesday, September 20, 2016

தொழுகையின் மாண்பை அறிந்து கொள்வோம்!



ரமலான் காலத்தில் தொழுகையை மேலும் மேலும் அதிகப்படுத்துங்கள். தொழுகையின் மாண்பு குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறும் கருத்துக்கள் அளப்பரியன :-

* நீங்கள் அல்லாஹ்வுக்கு அதிகமாக ஸஜ்தா செய்யுங்கள் (தொழுங்கள்), நிச்சயமாக நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஸஜ்தாவைக் கொண்டும் உங்களுக்கு ஒரு பதவியை அல்லாஹ் உயர்த்துகிறான். உங்களை விட்டும் ஒரு பாவத்தை அழித்துவிடுகிறான்.

* மனிதன் தான் தொழுத பிறகு, அவனுக்காக தொழுகையின் பத்தில் ஒரு பங்கு பதிவு செய்யப்படுகிறது. சிலருக்கு ஒன்பதில் ஒரு பங்கு, சிலருக்கு எட்டில் ஒரு பங்கு, சிலருக்கு ஏழில் ஒரு பங்கு, சிலருக்கு ஆறில் ஒரு பங்கு, சிலருக்கு ஐந்தில் ஒரு பங்கு, சிலருக்கு நான்கில் ஒரு பங்கு, சிலருக்கு மூன்றில் ஒரு பங்கு.. இவ்வாறு பதிவு செய்யப்படுகிறது. நாம் தொழும் தொழுகைக்கு பல ஆயிரத்தில் ஒரு பங்கென்ன... பல லட்சத்தில் ஒரு பங்கும் பதிவு செய்ப்படுமேயானால்... அதுவும் அல்லாஹ்வின் கிருபையாகும்.

Sunday, September 18, 2016

அன்பின் அரவணைப்பு....!

ராஜா வாவுபிள்ளை


வழியும் வியர்வை
உழைப்பின் வலியை
சொல்லும் ...

கனியும் பார்வை
கருணையின் உறவை
சொல்லும்....

நிமிர்ந்த நன்னடை
உள்ளத்தின் தெளிவை
சொல்லும்....

Saturday, September 10, 2016

பிஸ்மி சொல்லி வாயில வெச்சிக்கோடீ .... ....

J Banu Haroon

நான் ரொம்ப சின்னவள் அப்போ .....

என் பாட்டி பாப்பாத்தியம்மா ( ஜூபைதா பேகம் )
கடல்வழி மார்க்கமாக கப்பலில் பிரயாணித்து புனித '' மக்கா '' விற்கு சென்றுவிட்டு பலமாதங்கள் கழித்து ஜனத்திரளுடன் தக்பீர் சொல்லிக்கொண்டு களைப்புடன் கலர் புர்கா அணிந்தவராய் வீடு வந்து இறங்கின நினைவு வருகிறது .....

பெட்டிகளும் வந்திறங்கின .

அப்பா ,சித்தப்பாக்கள் சிங்கப்பூரிலிருந்து கப்பலில் சிலநாட்கள் பயணித்து வந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் இறங்கி இருப்பார்கள் . இங்கிருந்து அழைக்கப்போன காரில் வீட்டு ஆண்களுடன் வந்து அமைதியாக வெளியில் தெரியாமல் பெட்டி ,பார்சல்களுடன் இன் பண்ணின சட்டையும்,கழுத்தில் இறுக்கி கட்டின டையும் ,பேண்ட்டும் ,கருப்பு சாக்ஸும் ,ஷூக்களும் அணிந்து ....ஜம்மென்று வாசனை திரவியங்கள் மணக்க வந்திறங்குவார்கள் .வந்தவர்களை வேற்று கிரகவாசியை போல் மற்றவர்களுடன் சேர்ந்து நானும் வேடிக்கை பார்த்திருக்கிறேன் ..இழுத்துப்பிடித்து இறுக அணைத்துக்கொண்டு முத்தமிடுவார்கள் .அச்சத்துடன் திமிறிக்கொண்டு ஓடுவேன் ....

Sunday, September 4, 2016

சகன் சாப்பாடு ...


ஏகன் உணர்த்தும்
ஒற்றுமையின் மகிமையினை
கூட்டாய் பிரதிபலிப்பது
சகன் சாப்பாடு ...

ஏற்றத்தாழ்வு களைந்திட
முன்னோர்கள் உருவாக்கியது
தலைமுறைகளின் சுழற்சியில்
பின்னோர்கள் உருமாற்றியது ..

Saturday, September 3, 2016

நற்செயல்

இஸ்லாமின் வழிகாட்டுதலால் வளர்க்கப்பட்டு அதன் கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் நன்கறிந்த முஸ்லிம், சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் பலனளிப்பவராக இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்த வகையிலும் துன்பமிழைத்து விடக்கூடாது என்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    சத்தியத்தையும் நன்மையையும் அடிப்படையாகக் கொண்டு அவர் வளர்க்கப்பட்டதால் மக்களுக்கு பலனளிப்பது என்பது இயல்பாகும். மக்களுக்குப் பயனளிப்பதற்கான வாய்ப்பு ஏதேனும் கிட்டினால் அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்வார். ஏனெனில் அது வெற்றியின்பால் அழைத்துச் செல்லும் என்பதை அவர் அறிவார்.

    விசுவாசிகளே! நீங்கள் குனிந்து சிரம்பணிந்து உங்கள் இறைவனை வணங்குங்கள். நன்மையே செய்து கொண்டிருங்கள். அதனால் நீங்கள் வெற்றி அடையலாம். (அல்குர்ஆன் 22:77)

Friday, September 2, 2016

ஹஜ் புனிதக் கடமையினை தன்னகத்தே கொண்ட துல்ஹஜ்ஜு மாதம்....

மூன்று பெரும் மதங்களின் மூலவரான இறைத்தூதர் இபுறாஹீம் (அலை) அவர்களை நினைவுகூரும், ஹஜ் புனிதக் கடமையினை தன்னகத்தே கொண்ட துல்ஹஜ்ஜு மாதம் இனிதே தொடங்குகிறது.

இறையோ இதுவோ இப்பிறையோ?
இல்லை இல்லை தேய்ந்திடுதே!
முறையாய் பெரிய கதிர்கூட
முழுதாய் மறையுது அந்தியிலே
நிறைந்த சிந்தை இபுறாஹீம்
நெஞ்சில் பூத்த தேடலிலே
இறையின் மார்க்கம் விளங்கியதே

Thursday, September 1, 2016

அருள்வாயே ஏகனே இறையோனே


மனிதம் பேணிட
மூத்தோரை மதித்திட
சிறாரை ஊக்குவித்திட
அருள்வாயே ஏகனே இறையோனே

நல்லோரோடு சேர்ந்திட
நாணயமாய் வாழ்ந்திட
எளியோரை அரவணைத்திட
அருள்வாயே ஏகனே இறையோனே

LinkWithin

Related Posts with Thumbnails