Saturday, November 9, 2019

ஹூதைபிய்யா உடன்படிக்கையின் ஒரு அம்சம்..

Saif Saif

"குறைஷிகளில் யாராவது தன் பாதுகாவலராக நெருங்கிய உறவினரின் அனுமதியின்றி தப்பித்து முஹம்மதிடம் வந்தால் அவரை குறைஷிகளிடம் அனுப்பி விட வேண்டும்..
ஆனால் முஹம்மதிடம் உள்ளவர்கள் யாராவது தப்பித்து குறைஷிகளிடம் வந்து விட்டால் அவர் முஹம்மதிடம் திருப்பி
அனுப்பப்பட மாட்டார்.."

இது ஹூதைபிய்யா உடன்படிக்கையின்
ஒரு அம்சம்..

என்ன ஒரு அம்சம் இது. ஒரு சாராருக்கு சார்பாக மட்டுமே எழுதப்பட்ட உடன்படிக்கை.‌
ஆனாலும்
நபியவர்கள் எதுவும் சொல்லவில்லை.
ஏற்றார்கள்..

அது மட்டுமா இந்த உடன்படிக்கையை
எழுதும் போது

"இது அல்லாஹ்வின்
தூதர் முஹம்மது"

Thursday, September 5, 2019

NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: முகம்மது மக்தூம் Mohamed Makthoum ,Reserch Engniee...

NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: முகம்மது மக்தூம் Mohamed Makthoum ,Reserch Engniee...: முகம்மது மக்தூம் மார்சேயில், பிரான்சில் வாழ்கிறார் மயிலாடுதுறை, இந்தியா முகம்மது மக்தூம் Mohamed Makthoum ,Reserch Engnieer Meet my ...

Sunday, September 1, 2019

ஹிஜ்ரி புத்தாண்டு நினைத்து எழுந்திட்ட பாடல் இது,

பாடல்  பாடியவர் தேன் இசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள்

Saturday, July 13, 2019

NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: வெளிநாட்டு வேலை

NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: வெளிநாட்டு வேலை: இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் வெளிவேலை வாய்ப்புகள்தான் ஓரளவு ஏழைகளுக்குக் கைகொடுத்திருக்கிறது. கிராமங்களிலிருந்து நகரங்களுக்குக் குடி...

Tuesday, May 7, 2019

ரமளானும் நாமும்….

ஆக்கம்: சத்தியமார்க்கம் -

புனித ரமளான் எனும் அல்லாஹ்வின் அருள்மிகு மாதத்தை மீண்டும் ஒருமுறை நமக்களித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இவ்வரிய மாதத்தினை அடைவதற்கு முஸ்லிம்களில் பலர் அன்று முதல் இன்று வரை அல்லாஹ்விடம் கண்ணீர் மல்க துஆ செய்து இதை அடைகின்றனர் என்பது நம்மில் பலருக்குப் புதியதாக இருக்கலாம். சற்று சிந்தித்துப் பார்த்தால் இதற்கு முன் சென்ற ரமளானில் இருந்து இந்த ரமளான் வரையுள்ள இடைப்பட்ட ஓராண்டில் நமது உறவினர்கள், தோழர்கள், சுற்றத்தினர், நமது நாட்டினர், ஊரினர் என்று எத்தனையோ பேர் நம்மைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்துள்ளனர்.


Wednesday, January 23, 2019

*எந்த விஷயத்திலும் முஸ்லிம்கள் உங்களோடு ஒட்டாமல் தனித்து நிற்பதேன்?*

முஸ்லிம்கள் ஏன்
ஹிந்துக்களிடம்
ஒட்டுவதில்லை..?

கத்தார் பழ மாணிக்கம்      விளக்கம்..!

*எந்த விஷயத்திலும் முஸ்லிம்கள் உங்களோடு ஒட்டாமல் தனித்து நிற்பதேன்?*

 என்பது  முஸ்லிம் அல்லாத பலரின் கேள்வி.

        இதோ என் பதில்!!

Thursday, January 10, 2019

மற்றவர்களை விட எப்போதுமே நீங்கள் மாறுபற்று இருக்கிறீர்கள் ஏன் ?.

ஒருவர், சூஃபி ஞானியான இறைநேசர் ஹஜ்ரத் இப்றாஹீம் இப்னு இல்யாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடத்தில் கேட்டார் நான் உங்களைப் பார்க்கிறேன், மற்றவர்களை விட எப்போதுமே நீங்கள் மாறுபற்று இருக்கிறீர்கள் ஏன் ?.

 நாங்கள் உங்களைப் பார்க்கிறோம் உங்கள் இறை வணக்கத்தை வைத்து உலகத்தை நீங்கள் தேடுவதும் இல்லை. மறுமையை நீங்கள் ஆசிப்பதுமில்லை. உங்கள் உண்மையான நிலைதான் என்ன ? எனக் கேட்டார் அவர்.

*இறைவன் கணக்கு:*○☆


ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் இரண்டு வழிப்போக்கர்கள்  அமர்ந்திருந்தனர்.

இரவு நேரம்…, பெருத்த மழை வேறு...,

அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார்.

வந்தவர் "நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார்.

அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள்.

சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர்.

Wednesday, January 9, 2019

, இறைவனைத் தேடுவதற்கும், இறை ஞானம் பெறுவதற்கும்

நீங்கள் இறைவனை வணங்குவதற்கும், இறைவனைத் தேடுவதற்கும், இறை ஞானம் பெறுவதற்கும், இறைவனை அடைவதற்கும் உங்கள் உடல் தான் காரணம் அதற்கு உடல் வேண்டும் அதுவும் மிகச்சரியான இருக்க வேண்டும் இல்லையென்றால் உங்கள் இறை வணக்கவழிபாடு மற்றும் அனைத்தும் நாசம்.

ஒவ்வொவரின் உடலும் மனமும் ஆன்மாவும் படுகின்றன அவதி ஒவ்வொருவரும் உணர்வதில்லை. மனம் ஆன்மா படுகின்றன அவதியை தான் அது தனது அவதியை  உடலில் மீது காட்டி உடல் நோய்வாய்ப்பட்டு உடல் வாழ முடியாமல் படுக்கையில் விழுந்து உடல் சாகிறது.

Thursday, January 3, 2019

இறை வணக்கத்தில் ஆர்வம் கொண்டு இறைவணக்கத்தில் மூழ்குங்கள்

வருடங்களையும் பாதங்களையும் நாட்களையும் அல்லாஹ்விற்கும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கும் பாதகமான காரியங்களில்  வீணாக கழித்து கொண்டு இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு புரிந்து நடக்கிறீகளா அல்லது புரியாமல் நடக்கிறீர்களா ?.

இல்லை எங்களுக்கு மார்க்கம் தெரியாமல் செய்கிறோம் என்று உங்களால் சொல்ல முடியாது ஏனென்றால் உங்கள் முன் இறை வேதமும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் வழி முறையும் மறைந்த பொருளல்ல. நீங்கள் செய்யும் தவறுகளுக்கு காரணம் சொல்ல.

Tuesday, January 1, 2019

மாசிலா முழுநிலவே

மாசிலா முழுநிலவே
மாநபியே முகமதுவே (ஸல்);
மாக்களென மாறிவிட்ட
மானுடத்தை மீட்டவரே!

மதிகெட்ட மக்களுக்கு
மறைவாங்கித் தந்தவரே;
மறுமையெனும் மறுவாழ்வின்
மகிமைதனை மொழிந்தவரே!
குகையிருப்பு நிகழ்ந்தவுடன்
சிலைமறுப்பு செப்பினீர்கள்;
கொலைமிரட்டல் காலங்களில்
தலைமறைவாய்ப் பொறுத்தீர்கள்!

உள்ளம் சீர்பெறுவது

உங்கள் உள்ளம் சீர்பெறுவது, உங்கள் தக்வா அதாவது இறை பயபக்தியுலும். தவக்கல் அதாவது இறை நம்பிக்கையுலும். தௌஹீது அதாவது ஏகத்துவ உணர்விலும். இக்லாஸ் அதாவது உங்களின் உண்மையான நடத்தையுலும் இருக்கிறது. இவைகளில் ஒன்று உங்கள் வாழ்க்கையில் தவறினாலும் உங்கள் உள்ளம் சீர்பெறுவது தவறிவிடும்.

உங்கள் உள்ளம் என்பது உங்கள் உடல்ல.  (உங்கள் உடலுக்குள் இருக்கும் உங்கள் கண்களுக்குத் தெரியாத நுட்பமான ஸ்தலம்)  அது கூட்டுக்குள் இருக்கும் பறவை, சிற்பிக்குள் இருக்கும் முத்து, உங்களுக்கு தேவை பறவையும் முத்துதானே தவிர கூன்டோ சிற்பியோ அல்ல

LinkWithin

Related Posts with Thumbnails