Friday, October 31, 2014

"இறைவன் உனக்கு அளித்த அருட்கொடைகளை நீ பகிரங்கப்படுத்து"

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி ,வ பரக்காதுஹு
அல்ஹம்துலில்லாஹ்.
கால் நூற்றாண்டினைக் கடந்து இருபத்துஆறாம்ஆண்டில் எம் நிறுவனம்.
-------------------------------------------------------------------------------------
நவம்பர் 1ந் தேதி என் வாழ்நாளின் மறக்க முடியாத ஒரு நாள். அல்லாஹ் நாடினால் ஒரு மனிதரின் வாழ்க்கையை திசை மாற்றி அவனை மேலோங்க செய்ய முடியும் என்பதை எனக்கு உணர்த்திய நாள். ஆம். இன்று தான் புரபஷனல் கூரியர் என்ற நிறுவனத்தின் முகவராக பத்துக்கு பத்து சதுர அடி அறையில் அலுவலகம் திறந்தேன். அன்றைய நாளில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருந்தேன். பதினைந்து ஆண்டு காலம் அரபி மதரஸாக்களில் ஆசிரியராக பணியாற்றினேன். மதரசாவில் ஆசிரியராக பணியாற்றியதில் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் மதரஸா வாழ்க்கையில் இருந்து வெளியேறிய நான் வெளிநாடு செல்லலாம் என்று எண்ணிய பொழுது உங்கள் தகுதிக்கு ஏற்ற பணிகளுக்கான விசா இப்பொழுது இல்லை என்றும் எனவே நீங்கள் ஊரிலேயே தொழில் செய்யுங்கள் நாங்கள் அதற்கு உதவி செய்கின்றோம் என்றும் என் நண்பர்கள் எனக்கு ஆலோசனை வழங்கினார்கள்.
அது தொடர்பாக என் மீது பற்று கொண்டு என்னுடைய எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் பாராட்டியும் விமர்சனம் செய்தும் எனக்கு ஊக்க படுத்திய நீடூர் சிந்தனை சித்தர் அல்ஹாஜ்.ஏ.எம்.சயீது அண்ணன் அவர்களிடம் ஆலோசனை கேட்டேன். நீங்கள் தொழில் செய்வதாக இருந்தால் one time investment செய்து service oriental தொழிலை செய்வது தான் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.நீங்கள் எழுதிய நூலை பதிப்பித்து வெளியிடுவது அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை வைத்து அடுத்த நூல் வெளியிடுவது போன்ற பதிப்பக தொழிலில் நீங்கள் ஈடுபடலாம் என்று சொன்னார்.
நான் டிராவல்ஸ் ஆரம்பிக்கலாமா? என்று கேட்டேன். அதுவும் நல்ல தொழில்தான் எனினும் மிகவும் கவனமுடன் செய்ய வேண்டிய தொழில் என்று சொன்னார்.

Wednesday, October 29, 2014

என் பழைய நினைவுகளை கிளறிவிட்டது.

இன்றைக்கு நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்த பக்கீர்மார்கள் பாடல் காணொளி என் பழைய நினைவுகளை கிளறிவிட்டது.

பள்ளிக்கூட நாட்களில் எங்கள் ஊரில் பொழுதுபோக்கு என்பதே நண்பர்களோடுக் கூடிப் பேசுவது, விளையாடுவது, எப்போதாவது சேர்ந்துப் படிப்பது அவ்வளவுதான். விவசாயம் சார்ந்த ஒரு கிராமத்தில் வேறென்ன எதிர்பார்க்கமுடியும்.
இதைத் தாண்டி இன்னொரு விஷயம் எங்களை ஒன்றிணைத்தது என்றால் அது முஹப்பத்துல் முஸ்லிம் சங்கம்.

Saturday, October 25, 2014

சலீம் படத்தில் ஆரம்பத்தில் அரபியில் ஓதும் ஹதீஸ்


சலீம் படத்தில் ஆரம்பத்தில் அரபியில் ஓதும் ஹதீஸ்

1 அல்லாஹ்வை நம்புவது 2. வானவர்களை நம்புவது 3. வேதங்களை நம்புவது 4. நபிமார்களை நம்புவது 5. மறுமையை நம்புவது 6. விதியை நன்மை, தீமைகள் அனைத்தும் அல்லாஹ் நிர்ணயித்தபடியே நடக்கிறது என்று நம்புவது …(ஹதீஸின் கருத்து)
உமர் (ரலி)
நூல்:புகாரி.

சலீம் படத்தில் துவக்கத்தில் ஹதீஸ் அரபியில் ஓதுகிறது.
 ****************

Thursday, October 23, 2014

“இன்று என்பதைப் இறுக்கிப் பிடித்துக் கொள்..."

  பாகிஸ்தான் பாரதி
- அப்துல் கையூம் 
“இன்று என்பதைப் இறுக்கிப் பிடித்துக் கொள். ஏனெனில் நாளை என்பது விதியின் கைப்பிடிக்குள்” - அல்லாமா இக்பால்

இவ்வாரம் இக்பாலைப் பற்றி எழுதப் போகிறேன் என்று என் நண்பரிடம் தெரிவித்தேன். மின்னல் வேகத்தில் அவர் முகத்தில் ஒரு அதிருப்தி ரேகை. அவர் வீசியதோ ஒருவிதமான ‘குறுகுறு’ பார்வை. தேசத்துரோகம் ஏதாவது புரிகின்றோமோ என்ற ஐயம் எனக்குள்.

இக்பால் எனும் இலக்கியவாதியை நான் காதலிக்கத் தொடங்கி ஆண்டுகள் பலவாகி விட்டன. அப்போது எனக்கு 12 வயது. இக்பாலை எனக்கு அறிய வைத்தது எங்கள் பிறைப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் அவுரங்கசேப் கான். முன்பு பட்டாளத்தில் பணி புரிந்தவர். பள்ளி ஆண்டு விழாவின்போது நானும் என் இரண்டு நண்பர்களும் அந்தப் பாடலை பாடவேண்டும்.

“சாரே ஜஹான் சே அச்சாஹ், ஹிந்துஸிதான் ஹமாரா

ஹம் புல்புல்ஹேன் இஸ்கி, ஏ குல்ஸிதான் ஹமாரா”

Tuesday, October 21, 2014

துக்ளக் சோவும் சிராஜுமில்லத் அல்ஹாஜ் அப்துல் சமதின் ஞானமும்

சோவின் துக்ளக்
இதழ் தொடங்கிய காலக்கட்டத்தில்
தமிழகத்தின்
பிரபலமான அரசியல் புள்ளிகள் பலரிடம்
அவரே நேர்காணல் நடத்தினார்.

பிராமணர்களுக்கும்
பிராமணர் அல்லாதோருக்குமான
மறைமுக யுத்தம்
நடந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது!.

சோ, வக்கீலுக்குப் படித்தவர்.
தொழில் முறையில் அவர் படித்த
திறமை / தர்க்கம் மொத்ததையும்
பத்திரிகை வழியே
பிராமண அல்லாதோரின்
சமூக சிந்தனைகளையும்
அவர்களது அரசியலையும்
மிகத் துணிவாகவே கிண்டலடித்து
பந்தாடப் பயன்படுத்தினார்!

குறிப்பாய்...
அவரது அந்த நேர்காணல்
அதற்கு ஓர் சான்று.
அவரது புகழை அது கூட்டிய சங்கதியும் கூட.

கம்யூனிஸ்ட்...
இடது / வலது தலைவர்கள் முதலாக
திராவிடக் கட்சியின் செயலாளராக இருந்த
ஆசிரியர் வீரமணி வரை
அந்த நேர்காணலில்
சோவின் தர்க்கத்தில் மீண்டுவர முடியவில்லை.

அந்த வரிசையில்...
முஸ்லிம் லீக தலைவரான
சிராஜுமில்லத் அல்ஹாஜ் அப்துல் சமத் அவர்களையும்
சோ நேர்காணல் நடத்தினார்.
அந்த நேர்காணல் துக்ளக் இதழிலும் வந்தது.

பிற தலைவர்களை மிகச் சுலபமாக
தன் வாதத் திறமையால் / தர்க்கத்தால்
உருட்டிவிட்ட மாதிரி
அப்துல் சமதிடம் நடக்கவில்லை!

பேட்டி நடந்தக் காலக் கட்டத்தில்
பசுவதையை எதிர்த்து
ஆர்.எஸ்.எஸ். தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது.
(இப்போது அதனை
அவர்கள் மறந்து போனார்கள் என்பது வேறுகதை)

பசுவதையொட்டிய ஒரு கேள்வியாக
துக்ளக் சோ, அப்துல் சமதிடம் கேட்டார்:

"முஸ்லிம்கள் ஏன் பசு மாமிசத்தை சாப்பிடுகிறார்கள்?"

"பசு மாமிசத்தை...
முஸ்லிம் அல்லாதோர்களும்தான் சாப்பிடுகிறார்கள்.
சொல்லப் போனால் பொதுவில்
முஸ்லிம்கள் விரும்பி சாப்பிடுவது குறைவு.
வட இந்தியாவில் சில இடங்களில்
ஏழைகள் சாப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்"

"அப்போ விலை குறைவு என்பதற்காக
முஸ்லிம்கள் எது வேன்டுமானாலும் சாப்பிடுவார்களா?"

"மிஸ்டர் சோ, விலை மலிவு என்பதற்காக
உங்கள் மதத்தில்
உங்கள் மக்கள் எதுவேன்டுமாலும்
சாப்பிடுவார்களோ... என்று எனக்கு தெரியாது.
ஆனால்,
எங்கள் மதத்தில்
நாங்கள் எதையெல்லாம் சாப்பிடலாம்..
எதனையெல்லாம் சாப்பிடக் கூடாது என்று
மதக் கட்டளையே இருக்கிறது!
அதனை நீங்கள் அறியவர மாட்டீர்கள்.
அதனால்தான் இப்படி கேட்டுவிட்டீர்கள்!"

- அந்த நேர்காணலில் சோவின்
வாதத்திறமையையும் / லாஜிக் திறமையையும்
சிராஜுமில்லத் அல்ஹாஜ் அப்துல் சமத் அவர்கள்
இப்படி உடைத்தெறிந்ததை
என்னால் இன்னும் மறக்க முடியவில்லை!

// நான் அறிந்து சோவை இப்படி மடக்கிய
இன்னொருவரை
இன்றுவரை இன்னும் நான் கண்டதில்லை.
 

 கட்டுரை ஆக்கம்   Taj Deen - தாஜ்

Monday, October 20, 2014

கேள்வியின் நாயகன்....

நாகூர் ,கவிஞர் இசட்.ஜபருல்லா
அண்ணன்அவர்கள், என் மீதும் என் குடும்பத்தின் மீதும் குறிப்பாக என் வாப்பாவின் மீதும் மாறாத அன்பும் பாசமும் கொண்டவர்கள்.
“ஜபருல்லா பிறந்த செய்தியை நான் தான் கொழும்பில் இருந்த அவரது தந்தை நண்பர் ஜக்கரியாவிடம் சொன்னேன்” என்பார் இசை முரசு நாகூர் ஹனீபா.

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் இளங்கலை பட்டம் பயின்று,பீ.ஜி.எல்.வரை போய்,என்ன காரணத்தினாலோ சட்டம் முடிக்காமல் இருந்துவிட்டார்.

அவர் எழுதிய கவிதைகள், அதுவும் சாட்டியடிக் கவிதைகள் அமிழ்தையும் கொடுத்து,அமிலத்தையும் காட்டி,நக்கல் நையாண்டி பெருக்கெடுத்தோடும்.வகையில் இருக்கும்.
அவர் தனி ரகம்.தனி ராகம்.அவரது பாடல்கள் தமிழகம் முழுதும் அறிமுகமானவை.
அதில் "அண்ணல் பெருமான் என் இல்லம் வந்தால்", உவமை சொல்லமுடியாதது.

Friday, October 17, 2014

மனித நேயத்திற்கு இன்னொரு பெயர் தபஸ்ஸும்!

ஹெச்.ஐ.வி என்ற பெயரைக் கேட்டாலே, காத தூரம் தள்ளி நிற்போர் பெருகி விட்ட இந்த கால கட்டத்தில் எயிட்ஸ் நோயாளிகளை அருகிலிருந்து பரிவுடன் கவனிப்பது ஒரு சவாலான விஷயம் தான்.

சவாலுக்குச் சொந்தமான பெண்ணின் பெயர், தபஸ்ஸும்!

அந்த சம்பவம் நடந்து ஏறத்தாழ பத்து வருடங்கள் ஆகி விட்டன. தபஸ்ஸுமுடைய நெருங்கிய தோழி ஒருத்தி திடீரென எயிட்ஸ் நோய் பாதிப்பினால் இறந்து போனார். அதுவும் டாக்டர்கள் ஹெ.ஐ.வி  பாஸிட்டிவ் என அறிவித்த இரு நாட்களுக்குள்ளேயே...

Thursday, October 16, 2014

நாகூர் மண்வாசனை (The Aroma of Nagore soil) 100 கட்டுரைகள்






மேடையில் சிவசிதம்பரத்துடன் எம்.ஜி.ஆர்., நெடுஞ்செழியன், மா.பொ.சி. அரிய புகைப்படம் சீர்காழி கோவிந்தராஜன்
View

viinaradai murthy தூயவன், நாகூர் தூயவன்
View

நாகூர் மண்வாசனை ரவீந்தர் - 2, கலைமாமணி ரவீந்தர், நாகூர் ரவீந்தர், Nagore Raveendar
View

நாகூர் மண்வாசனை ரவீந்தர் - 1, நாகூர் மண்வாசனை, நாகூர் ரவீந்தர்
View

ரவீந்தர் கலைமாமணி ரவீந்தர், நாகூர் ரவீந்தர்
View

வலது பக்கத்திலிருந்து இரண்டாவதாக அமர்ந்திருப்பவர் நாகூர் ஹனிபா நாகூர் ஹனீபா
View

logo நாகூர் ஹனீபா, நாகூர் ஹனிபா, E.M.Haniffa, Isaimurasu E.M.Haniffa, Nagore E.M.Haniffa
View

260477_242766582415927_100000477613498_1029367_3391478_n சாரு நிவேதிதா, நாகூர் நினைவுகள், நாகூர், Charu Nivedita
View

wraper singapore assn இயற்றமிழ் வளர்த்த நாகூர், Uncategorized, நாகூர், நாகூர் என்ற பெயர் ஏன் வந்தது?, நாகூர் பெயர்க் காரணம்
View

இடமிருந்து நாலாவதாக நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள் கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல், ஜஸ்டிஸ் இஸ்மாயில்
View

stalin நாகூர் ஹனீபா, நாகூர் ஹனிபா, M.K.Stalin, Nagore E.M.Haniffa
View

சாரு நிவேதிதா இயற்றமிழ் வளர்த்த நாகூர், நாகூர் எழுத்தாளர்கள், புலவர் சண்முகவடிவேல்
View

chidambaram நீதிபதி இஸ்மாயீல், கம்பன் அவன் காதலன்
View

ஜெயமோகன் அகடம் பகடம் (Misc.), தமிழில் சிறுபான்மை இலக்கியம்
View

Vikatan 5 இசைக் கலைஞர்கள், இயற்றமிழ் வளர்த்த நாகூர், சாரு நிவேதிதா
View

நாகூர் முஸ்லிம் சங்கம் அகடம் பகடம் (Misc.), நாகூர் முஸ்லிம் சங்கம்
View

nagoori நாகூர் ஹனீபா
View

Gulam Kadir Navalar இயற்றமிழ் வளர்த்த நாகூர், குலாம் காதிறு நாவலர், நாகூர் புலவர்கள்
View

Image சிங்கையில் தமிழ், சிங்கையில் தமிழ் மொழியின் வளர்ச்சி, Tamil Language in Singapore
View

Image குலாம் காதிறு நாவலர், நான்காவது நக்கீரர் குலாம் காதிர்
View

EMH 3 நாகூர் ஹனீபா, Nagore Hanifa, Nagore Haniffa
View

இசைமுரசு அவர்களின் இளமைக் கால புகைப்படம் நாகூர் ஹனீபா, E.M.Hanifa, Nagore Haniffa
View

Image கவி.கா.மு.ஷெரீப், கலைமாமணி கா.மு.செரிப், வீரபாண்டியன்
View

IMG_0013 கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல், நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களின் அரிய புகைப்படங்கள், அரிய புகைப்படங்கள், Justice M.M.Ismail Rare photos, Unpublished photos of Justice M.M.Ismail
View

Nagore Haniffa நாகூர் ஹனீபா, Nagore Haniffa
View

Nasar daughter marriage நாகூர் ஹனீபா, நாகூர் ஹனிபா, Nagore Hanifa, Nagore Haniffa Photos
View

IMG_0004 கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல், ஜஸ்டிஸ் இஸ்மாயில், நாகூர், நாகூர் எழுத்தாளர்கள், நாகூர் பிரபலங்கள், நீதிபதி மு.மு.இஸ்மாயீல்
View

Image விஸ்வரூபம் தந்த பாடம், விச்வரூபம்
View

Image அகடம் பகடம் (Misc.), கான் பகதூர் ஸர் அஹ்மது தம்பி மரைக்காயர், நாகூர் பிரபலங்கள்
View

nagoori அகடம் பகடம் (Misc.)
View

karunaanidhi நாகூர் ஹனீபா, கலைஞருக்கு நாகூர் ஹனிபா கொடுத்த அல்வா, நாகூர் மண் வாசனை, நாகூர் ஹனிபா, பத்திரிக்கைத் துறையில் முஸ்லீம்கள், by Abdul Qaiyum, Nagore Mann Vasanai
View

405559_3254758335544_2116604764_n நாகூர் ஹனீபா, நாகூர் அனிபா, நாகூர் மண்வாசனை, நாகூர் ஹனிபா, by Abdul Qaiyum
View

Nagore Haniffa at present நாகூர் ஹனீபா, நாகூர் மண்வாசனை, நாகூர் ஹனிபா, by Abdul Qaiyum, Nagore Haniffa, Nagore Mann Vasanai
View

haniffa-in-malaysia1 நாகூர் ஹனீபா, நாகூர் மண் வாசனை, நாகூர் ஹனிபா, by Abdul Qaiyum, Nagore Haniffa Photos
View

Kalaingar with Haniffa நாகூர் ஹனீபா
View

பணமாலை அணியும் கருணாநிதி நாகூர் ஹனீபா, நாகூர் மண் வாசனை, ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (பாகம் 2), by Abdul Qaiyum, Isaimurasu E.M.Haniffa, Nagore, Nagore Haniffa, Nagore Mann Vasanai
View

Photo 1 நாகூர் ஹனீபா, நாகூர் ஹனிபா, ஹனிபாவுக்கு கலைஞர் கொடுத்த அல்வா, Nagore Haniffa
View

நாசமத்துப் போ அகடம் பகடம் (Misc.), அறம் பாடிய புலவர்கள், நாகூர் மண்வாசனை, by Abdul Qaiyum
View

zafarullah-kavi கவிஞர் ஜபருல்லா, நாகூர் மண்வாசனை, by Abdul Qaiyum, Nagore Mann Vasanai
View

Chidhambaram Accident (2) அகடம் பகடம் (Misc.), வைகோவின் மனித நேயம், by Abdul Qaiyum
View

kandana kOOttam என் கவிதைகள், கவிஞர் கையூம் கவிதைகள், by Abdul Qaiyum
View

charu-3 சாரு நிவேதிதா, ஊர்ப்பாசம், நாகூர் மண் வசனை, by Abdul Qaiyum, Charu Nivedita
View

மதுரை ஆதீனம் நாகூர் ஹனீபா, நாகூர் மண்வாசனை, நாகூர் ஹனிபா, மதுரை ஆதீனம், by Abdul Qaiyum
View

ஞாநி நாகூர் ரூமி, எச்.ஜி.ரசூல், ஞாநி, நாகூர் மண்வாசனை, புதிய தலைமுறை, by Abdul Qaiyum
View

sarana-bhaskaran1 7-ஆம் பாகம், கம்பன் அவன் காதலன், Justice M.M.Ismail
View

நாகூர் ஹனீபா நாகூர் ஹனீபா, இறைவனிடம் கையேந்துங்கள், காலத்தால் அழியாத பாடல், சிறந்த இஸ்லாமியப் பாடல், by Abdul Qaiyum
View

Kader oli new இயற்றமிழ் வளர்த்த நாகூர், கவிஞர் காதர் ஒலி, நூல் ஆய்வு, Nagore, நாகூர் கவிஞர்கள், வைரத்தூறல், by Abdul Qaiyum
View

பாரதிதாசன் கவிஞர் காதர் ஒலி, நாகூர் ஹனீபா, நாகூர் அனிபா, நாகூர் மண்வாசனை, பாரதிதாசன், பாவேந்தர், by Abdul Qaiyum
View

Kader oli கவிஞர் காதர் ஒலி, நாகூர் ஹனிபா
View

vaada 4 வாடா, நாகூர், நாகூர் உணவுமுறை, நாகூர் கலாச்சாரம், நாகூர் வாடா, by Abdul Qaiyum
View

jamalan எழுத்தாளர் ஆபிதீன், தமிழ் எழுத்தாளர்கள், நாகூர் எழுத்தாளர்கள், அஸ்ரப் ஷிஹாப்புத்தீன், ஜமாலன், நாகூர் ஆபிதீன், நாகூர் ரூமி, by Abdul Qaiyum, Nagore, Nagore celebrities, Nagore Rumi on Abedeen, Nagore Writers
View

nagoori நாகூர் ரூமி, அப்துல் கையூம், நீயா நானா, by Abdul Qaiyum
View

நாகூர் ரூமி நாகூர் ரூமி, இஸ்லாமும் கவிதையும், நாகூர், நாகூர் எழுத்தாளர்கள், நாகூர் மண் வாசனை, by Abdul Qaiyum
View

Nagore Sathick - 2 இயற்றமிழ் வளர்த்த நாகூர், கவிஞர் நாகூர் சாதிக், இமாஜான், நாகூர் சாதிக், நாகூர் ஹனிபா, நாகூர்க் கவிஞர்கள், பாடகர் ஜெய்னுலாபுத்தீன், by Abdul Qaiyum
View

ஆபிதீன் நாகூர் எழுத்தாளர்கள், புலவர் ஆபிதீன், அப்துல் கையூம், ஆபிதீன், கவிஞர் ஜபருல்லா, நாகூர் கவிஞர்கள், நாகூர் சலீம், by Abdul Qaiyum, Nagore celebrities, Nagore Writers
View

Noushath Ali நாகூர் ஹனீபா, பாடகர் நெளசாத் அலி, நாகூர் பாடகர்கள், நாகூர் ஹனிபா, நாகூர் ஹனிபாவைப் பற்றிய ஒர் அலசல், நெளசாத் அலி
View

Paraatta urundai பறாட்டா உருண்டை, by Abdul Qaiyum, Nagore Food Items, Nagore Food Specialities, Parotta Urundai
View

நவுஷாத் நாகூர் ஹனீபா, பாடகர் நெளசாத் அலி, இசைமுரசு ஈ.எம்.ஹனிபா, நாகூர் பாடகர்கள், நெளசாத் அலி, E.M.Haniffa, Nagore celebrities, Nagore E.M.Haniffa
View

சித்தி ஜுனைதா பேகம் இயற்றமிழ் வளர்த்த நாகூர், சித்தி ஜுனைதா, சித்தி ஜுனைதா பேகம், நாவலாசிரியை, முதல் இஸ்லாமியப் பெண்மணி, by Abdul Qaiyum, Literary Essays
View

Cashewnut நாகூர் வட்டார மொழியாய்வு, வேடிக்கை உலகம், லெவ்வைக்கி மிஞ்சிய ஹராம்ஜாதா, by Abdul Qaiyum
View

அப்பளம் பப்படம்
View

பைக்காரா திண்ணையில் நான், நகைச்சுவை கட்டுரை, திண்ணை கட்டுரை, by Abdul Qaiyum
View

LKS meeran கவிஞர் ஜபருல்லா, கவிஞர் இஜட் ஜபருல்லா, நாகூர் கவிஞர், Z.Zafarullah
View

insaf salah நாகூர் ஹனீபா, இசைமுரசு ஈ.எம்.ஹனிபா, நாகூர் ஹனிபா
View

Buddha Cry என் கவிதைகள், பர்மாவில் முஸ்லீம்கள் படுகொலை, புத்தன் அழுகின்றான், Muslims massacred in Burma
View

கண்ணதாசனும் பெரியாரும் 6-ஆம் பாகம், கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயில், நீதிபதி இஸ்மாயீல் வாழ்க்கைக் குறிப்பு, நீதிபதி மு.மு.இஸ்மாயில், by Abdul Qaiyum, Justice M.M.Ismail, Nagore Writers
View

En Vikatan Page 3 இயற்றமிழ் வளர்த்த நாகூர், நாகூர் ரூமி, என் ஊர், நாகூர், Nagore Writers
View

parveensultana கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல், கம்ப ராமாயணமும் கன்னித்தமிழ் முஸ்லீம்களும்
View

namaz கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல்
View

sellappan கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல், சிலம்பொலி செல்லப்பன், நாகூர் பிரபலங்கள், Nagore celebrities
View

maha_periyavaa கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல், காஞ்சி பெரியவர், நீதிபதி இஸ்மாயில்
View

டாக்டர் சுதா சேஷய்யன் கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல், டாக்டர் சுதா சேஷய்யன், நீதிபதி மு.மு.இஸ்மாயில்
View

R-M-Veerappan கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல்
View

கவிஞர் வாலி நீதிபதி இஸ்மாயீல், கம்பன் என் காதலன், கவிஞர் வாலி, நீதிபதி இஸ்மாயீல் அவர்களைப் பற்றி
View

M.S.Subbulakshmi father இசைக் கலைஞர்கள், இசைமணி யூசுப், நீதிபதி இஸ்மாயீல், இசையரசியும் இலக்கியச் செல்வரும், கம்பன் அவன் காதலன், நாகூர் இசை விற்பன்னர்கள், நீதி பதி இஸ்மாயீலும் எம்.எஸ்.சுப்புலட்சுமியும்
View

kannadasan TODAY நீதிபதி இஸ்மாயீல், அப்துல் கையூம், கண்ணதாசனும் நீதிபதி இஸ்மாயீலும், கவியரசு கண்ணதாசன், நாகூர் எழுத்தாளர்கள், நீதிபதி இஸ்மாயில், by Abdul Qaiyum, Justice M.M.Ismail, kannadasan & M.M.Ismail, Nagore Writers, Tamil Literature, Tamil Muslims, Tamil writers
View

பெரியார் நீதிபதி இஸ்மாயீல், Justice M.M.Ismail On E.V.R.Periyar, Nagore Writers, Tamil writers
View

கம்பனடிப்பொடி சா. கணேசன் நீதிபதி இஸ்மாயீல், கம்பன் அவன் காதலன், by Abdul Qaiyum, Justice M.M.Ismail, Nagore celebrities, Nagore Writers
View

ஜெயமோகன் நீதிபதி இஸ்மாயீல், Justice M.M.Ismail
View

Parveen Sultana நீதிபதி இஸ்மாயீல், by Abdul Qaiyum, Justice M.M.Ismail
View

nagoori நீதிபதி இஸ்மாயீல், கம்பன் அவன் காதலன், நாகூர் மண் வாசணை, நீதிபதி இஸ்மாயில், நீதிபதி இஸ்மாயீல் வாழ்க்கைக் குறிப்பு, by Abdul Qaiyum, Justice M.M.Ismail, Nagore celebrities, Nagore Man Vasanai, Nagore Writers
View

வள்ளலின் வள்ளல் நீதிபதி இஸ்மாயீல்
View

M.M.Ismail நீதிபதி இஸ்மாயீல்
View

M.M.Ismail with Karunanidhi-1 நீதிபதி இஸ்மாயீல்
View

nagoori இயற்றமிழ் வளர்த்த நாகூர், ஹ.மு.நத்தர்சா
View

Syed Mohammed Hassan அபுல் அமீன், இயற்றமிழ் வளர்த்த நாகூர்
View

vada (17) டோனட் ஆன்ட்டி (சிறுகதை), by Abdul Qaiyum
View

sarana-bhaskaran-new-new1 சாரணபாஸ்கரன்
View

Haniffa & Kalanigar நாகூர் ஹனீபா
View

Haniffa நாகூர் ஹனீபா
View

Thiruvalluvar நாகூர் பாஷையில் திருக்குறள்
View

பீரோட்டம் ஹந்திரி
View

Stilt Walker அகடம் பகடம் (Misc.), சுள்ளானும் உல்லானும்
View

Panangizhangu அகடம் பகடம் (Misc.)
View

Image எழுத்தாளர் ஆபிதீன், ஆபிதீன்
View

Abedheen எழுத்தாளர் ஆபிதீன்
View

nagoori நாகூர் ஹனீபா
View

nagoori நாகூர் சலீம்
View

Arabs sailors Arabia & Mabar
View

nagoori இஸ்லாமும் தமிழிலக்கியமும்
View

Wednesday, October 15, 2014

ஆப்கானிஸ்தானின் கல்வி தேவதை


ஷபானா பாஸிஜ் பற்றி...

ஷபானா சிறுமியாக இருந்த பொழுது ஆஃப்கான் தஃலிபான்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. எங்கும் கெடுபிடி, பெண் குழந்தைகள் வெளியில் செல்லமுடியாத சூழல். படிப்பிற்காக வெளியே செல்லுதல்கூடாது என்று ஊர்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த காலம்.

ஷபானா பாஸிஜின் தந்தை, மிகப்பெரிய ஆபத்தான சூழலிலும் தன் மகளுக்கு கல்வி போதிக்கப்பட வேண்டுமென நினைக்கிறார். இவர் போன்ற பெற்றோர் எடுத்த முடிவினால் நகரத்தில் ஆங்காங்கு நடைபெறும் இரகசியப் பள்ளிக்கு தம் பிள்ளைகளை அனுப்பி படிக்க வைக்கின்றனர்.

பள்ளி என்றால் நாம் கற்பனை செய்வது போலில்லாமல், ஒரு வீட்டின் ஹாலில் நூற்றுக்கணக்கான மாணவர்களை அடைத்து வைத்து கல்வி போதிக்கப்படும். அனைவரும் ஒரே நேரத்தில் வருவது கூடாது; அதேபோல கலைந்து செல்லும் போதும் கூட்டமாக செல்லுதல் கூடாது. இங்கு பயிலும் மாணவர்கள் மட்டுமன்றி, போதிக்கும் ஆசிரியர்கள், பாதுகாப்பிற்கென வரும் பெற்றோர்கள் என எவரின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.

இதுபோன்ற ஒரு பள்ளிக்குத்தான் ஷபானா அனுப்பப்படுகிறார். எப்படித் தெரியுமா? ஆண் பிள்ளையின் உடைகளை அணிந்து, மளிகைக் கடைக்கு சாமான்கள் வாங்குவது போன்ற தோற்றத்தில் பையில் புத்தகங்களை அடுக்கி சென்று வருகிறார். தினமும் ஒரே பாதையில் சென்றால் சந்தேகம் ஏற்படுமென்று தினமும் வெவ்வேறு பாதைகளில் அந்த இரகசியப் பள்ளிக்குச் சென்று கல்வி கற்று வருகிறார்.

இந்நிலையில், படிப்பில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட ஷபானா, அமெரிக்காவின் YES (Youth Exchange Studies) நடத்திய தேர்வில் வெற்றி பெற்று, அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் தனது (மேல்நிலைப்) பள்ளிப் படிப்பை அமெரிக்காவில் தொடரும் வாய்ப்பினைப் பெறுகிறார்.

தான் கற்ற கல்வி, தன் நாட்டு மக்களுக்கு பயன் பட வேண்டும் என்று நினைத்த ஷபானா பாஸிஜ்... அதற்குறிய முயற்சிகளில் ஈடுபட தொடங்கி வெல்லவும் செய்கிறார்.

*
------------------------------------------------
// சகோதரி 'ஷபானா பாஸிஜ்' குறித்த சிறப்புகளை நண்பர் ரஃபீக் பேஸ்புக் மூலம் இன்றுதான் நான் அறியவந்தேன். ஆப்கானிஸ்தானில் தொடங்கிய அவரது கல்விகான விடாமுயற்சி மலைக்கவைக்கிறது.
                                                                                                       Taj Deen

- தாஜ்
*
*
நன்றி:
ரஃபீக் பிரண்ட்ஸ் / F.B..
                                                                                             Rafeeq Friend
மலாலா எனும் மாயை! - Rafeeq

சந்தோஷ_தருணங்கள் ‬- Suhaina Mazhar

மகன் லாமின் முஹம்மது ப்ரோக்ரஸ் ரிப்போர்ட் சைன் பண்ண போயிருந்தோம். சிக்ஸ்த் படிக்கிறான். வழக்கமாக 70-80 மார்க் தான் வாங்குவான். போன முறை 6த் ரேங்க் வாங்கியிருந்தான். மாஷா அல்லாஹ் இந்த முறை ஃபர்ஸ்ட் ரேன்க். பரிச்சை பேப்பர் வீட்டுக்கு கொடுக்க மாட்டாங்க. இன்னிக்கு தான் ஸ்கூல்ல பார்த்தேன். அப்டியே அள்ளிக்கலாம் போல மார்க் வாங்கி இருக்கார் சாரு. மேத்ஸ்ல 99, சயின்ஸ்ல 98, தமிழ்ழ 91, சோஷியல்ல 96, இங்கிலீஷ்ல 94 இப்படி....

எனக்கு சந்தோஷத்துல அழுகையே வந்திருச்சு. காரணம் வீட்டுல புக்கை எடுத்து வெச்சு படிக்கற பழக்கமே இல்ல. எப்ப பாரு கார்ட்டூன் சேனல் தான். ஹோம்வொர்க் மட்டும் தான் செய்வான். நானும் வீட்ல படி படின்னு புஷ் பண்ண மட்டேன். சொல்லித் தரவும் மாட்டேன். மாஷா அல்லாஹ் எப்டி எப்போ படிக்கிறான்னு புரிய மாட்டேங்குது. கேட்டா மிஸ் நடத்தும் போதே புரிஞ்சுக்குது, நான் மனப்பாடம்லாம் பண்ண மாட்டேன், சொந்தமா தான் எழுதுவேன்னு சொல்றான்.

Tuesday, October 14, 2014

சீர்மிகு சிறப்பான புகழ்பெற்ற ஊர் லால்பேட்டை

சீர்மிகு சிறப்பான புகழ்பெற்ற ஊர் லால்பேட்டைக்கு சிறு வயதில் சென்று வந்தது மனதில் பசுமையாக உள்ளது .
திரும்பவும் கடந்த ஞாயிறு அன்று எனது பேரன் சமீர் அலியோடு போய் வந்தது மனதில் பெரு மகிழ்வை தருகின்றது .
லால்பேட்டை மக்கள் மிகவும் ஒற்றுமையாக தங்கள் ஊரின் முன்னேற்றதிற்கு பெரும் பங்காற்றுகின்றனர்.
லால்பேட்டையை சுற்றி பார்ப்பதில் நண்பர் அஹ்மது ரிலா அவர்கள் மிகவும் உதவினார்கள் .அங்குள்ள பெரிய பள்ளிவாசலில் தொழுதது மனதிற்கு அமைதியை தந்தது .

லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியை பார்த்த பின்பு எனக்கு மிகவும் வேண்டிய தமிழ் மாநில தலைவர் மவ்லானா மவ்லவி ஷைகுல் ஹதீஸ் ஏ.இ.எம். அப்துற்றஹ்மான் ஹஜ்ரத் அவர்களை லால்பேட்டை அவர்களது வீட்டில்  சந்தித்தேன்.
ஹஜ்ரத் அவர்களுடன் சிறு வயதிலிருந்து எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு .அவர்கள் நீடூர் ஜாமியா அரபிக் கல்லூரியில் ஓதியவர்கள் .
அவர்கள் வீட்டுக்கு சென்றபோது அன்புடன் 'ஜின்னா' என்று என் பெயரை அழைத்து கட்டி அணைத்து தனது அன்பைக் காட்டினார்கள் .


லால்பேட்டை அரபிக் கல்லூரியில் Ahamed Rila Mohamed Ali மற்றும் எனது பேரன் சமீர் அலி


அதன் பின்பு லால்பேட்டை ஊரை முழுமையாக பார்த்து வீராணம் ஏரியையும் பார்த்து வந்தோம்
 லால்பேட்டை வீராணம் ஏரி அருகில் Ahamed Rila Mohamed Ali மற்றும் எனது பேரன் சமீர் அலி
— with Ahamed Rila.


லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் கூடத்தில் Mohamed Ali
— with Ahamed Rila.
 அஹ்மத் ரிலா இல்லத்தில்
Ahamed Rila Mohamed Ali மற்றும் அஹ்மத் ரிலாவின் தந்தை ஹஜ்ரத், நூருல்லாஹ் அவர்கள்
 ***********************************************************************

Monday, October 13, 2014

ஆட்சிக்கு எது அழகு ? - அபு ஹசீமா

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அதிகாரங்களுக்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே !
தன்னிடம் எல்லா அதிகாரமும் இருக்கிறது என்பதற்காக ஆர்ப்பாட்டங்கள் எதுவும் செய்யாதவன் .

அவன்....
மனிதர்களை தனது பிரதிநிதிகளாக படைத்து மண்ணுக்கு அனுப்பி வைத்து அவர்களில் சிலருக்கு ஆட்சி அதிகாரங்களையும் வழங்கி இருக்கிறான்.
அவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு தெளிவான வேதவிளக்கங்களையும் தந்திருக்கிறான்!

ஆனால்...
மனிதர்கள் பெரும்பாலும் இறைக்கட்டளைகளை மதிப்பதேயில்லை.
சாதாரண நிலையில் இருப்பவர்கள்கூட பதவி கிடைத்தவுடன் பணம் புகழ் என்ற போதைகளுக்கு அடிமைகளாகி குடிசை வாழ்வை மறந்து கோட்டை வாழ்வே நிரந்தரம் என்று மாறி விடுகிறார்கள்.
ஆட்சியும் அதிகாரமும் கிடைத்தவுடன் தாங்கள்தான் மன்னாதி மன்னர்கள் தாங்கள் வைத்ததே சட்டம் என ஆட்டம் போடுகின்றனர்.

இதற்கு மாற்றமாக வாழ்ந்துகாட்டி வரலாற்றில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்
முஹம்மது ரசூலுல்லாஹ் ( ஸல் )அவர்களே!

Saturday, October 11, 2014

94 வயது சுதந்திர போராட்ட வீரர் மறைவு. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்.

94 வயது சுதந்திரப் போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலி இன்று அலிகாரில் காலமானார்.

புரட்சித் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் "இந்திய தேசிய ராணுவத்தில் (இந்தியன் நேஷனல் ஆர்மி") பணியாற்றிவர்.

ஐஎன்ஏ ‍வில் கேப்டனாக பணியாற்றிய அவர், பர்மா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூரில் ராணுவ வீரராக களப் பணியாற்றினார்.

பிரித்தானிய அரசுக்கும், ஆங்கிலேய ராணுவத்திற்கும் எதிராக கலகம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஆங்கிலேய அரசு அவரை சிறையில் அடைத்து 1945ல்மரண தணடனை வழங்கியது.

Friday, October 10, 2014

"இதில் ஊதுங்கள்" என்று கூறினார். ஊதினேன்.

நண்பருடனான சந்திப்பு. நண்பர் சென்னை காஸ்மோபாலிடன் கிளப்பின் உறுப்பினர். அதனால் அவரைச் சந்திக்க அங்கு வரச்சொல்லி இருந்தார். அவருக்கு இரவு 11.30 மணி உழவன் எக்ஸ்பிரஸில் பயணம். அவரை ரெயில் நிலையத்தில் விட்டுவிடும்படி கூறினார்.

நாங்கள் கிளம்பும்போதே மணி 11 ஐ தாண்டி விட்டது. காஸ்மோவில் இருந்து வெளியில் வந்ததும் புகாரி வாசலிலேயே போக்குவரத்துக் காவலர் ஒருவர் வண்டியை ஓரம் கட்டும்படி சைகை காட்டினார். ஓரம்கட்டி அவரிடம் "நண்பரை ரயிலுக்கு அனுப்ப வேண்டும் நேரமாகிவிட்டது.அவசரம்" என்று கூறினேன்.

இறையே ... உன் இல்லத்து முசல்லாவை முத்தமிடும் இந்த முல்லாவுக்கு...

 
யாரிடம்
பேசினாலும்
எத்தனை பேர்
தைரியம் சொன்னாலும்
கிடைக்காத
அந்த
அமைதியும்
நம்பிக்கையும்
ஆறுதலும்
இறைவா....
உன் காலடியில்
விழுந்து கிடக்கும்
அந்த
சில நொடிகளிலேயே
உள்ளத்தில்
ஒளியாக ஊடுருவி
பேரின்பம் தருகிறதே....

என் தலை தாழும்
நேரத்தில்
உன் அருள்தானே
எழுகிறது
என் விழி நீரும்
விழும்போது
மனச்சுமைதானே
குறைகிறது !

இறையே ...
உன் இல்லத்து
முசல்லாவை
முத்தமிடும்
இந்த
முல்லாவுக்கு
உன்
இரக்கம் மட்டும்தான்
கதியே !
 

'ஹுத்ஹுத்' புயலின் பெயருக்குப் பின்னால் சுவாரசியம்: அரபி மொழியில் கொண்டலாத்திப் பறவையைக் குறிக்கிறது - தி இந்து

'ஹுத்ஹுத்' புயலின் பெயருக்குப் பின்னால் சுவாரசியம்: அரபி மொழியில் கொண்டலாத்திப் பறவையைக் குறிக்கிறது - தி இந்து


கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு ஒவ்வொரு நாட்டின் சார்பில் பெயர்
வைக்கப்படுவது வழக்கம். தற்போது வங்கக்கடலின் தென்கிழக்குப் பகுதியில்
உருவாகியுள்ள இந்த ஆண்டின் முதல் வலுவான புயலுக்கு 'ஹுத்ஹுத்' என்று பெயர்
வைக்கப்பட்டுள்ளது.
இது ஓமன் நாட்டின் சார்பில் வைக்கப்பட்ட அரபிப் பெயர். குர்ஆனில் 5-க்கும்
மேற்பட்ட இடங்களில் இந்த பெயர் கூறப்பட்டுள்ளது. துருக்கி, இஸ்ரேல்,
சிரியா, ஓமன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இப்பெயர் அதிகம்
பயன்படுத்தப்படுகிறது. சிரியா மன்னர் சாலமன் என்ற சுலைமானின் ராணுவத்தில்
தகவல் தொடர்புக்காகவும் இப்பறவை பயன்படுத்தப்பட்டிருப்பது சுவாரசியம்.
இதுகுறித்து இஸ்லாமிய அறிஞர் அ.முகம்மது கான் பாகவி கூறியதாவது:
'ஹுத்ஹுத்' என்ற அரபிப் பெயர் ஒரு பறவையைக் குறிப்பதாகும். தமிழில் இது
‘கொண்டலாத்திப் பறவை’ என்று அழைக்கப்படுகிறது. சிரியாவை ஆண்ட மன்னரும்,
இறைத் தூதருமான சுலைமானுக்கு (ஆங்கிலத்தில் சாலமன்) நெருங்கிய நண்பரைப்
போன்றது இப்பறவை. அவர் எங்கு சென்றாலும் இதையும் கூடவே எடுத்துச் செல்வார்.
இது பூமிக்கு அடியில் தண்ணீர் எங்கு ஓடுகிறது என்பதை சுட்டிக்காட்டும்
திறன் படைத்தது. பாலைவனப் பயணத்தின்போது, தண்ணீர் இருக்கும் இடத்தின்
அருகில் தரையைக் கொத்தி, தன்னுடைய கொண்டையை ஆட்டி ஆடும். அங்கு தண்ணீர்
இருக்கிறது என்று தெரிந்து, குழி தோண்டி தண்ணீர் எடுத்து தாகம்
தீர்ப்பார்கள்.
சரித்திரப் பறவையான 'ஹுத்ஹுத்'த்துடன் சுலைமான் மன்னர் பேசவும் செய்வார்.
அவரைவிட்டுப் பிரிந்து சென்று மீண்டும் திரும்பி வந்த 'ஹுத்ஹுத்', ‘‘ஏமன்
என்று ஒரு நாடு இருக்கிறது. அங்கு சூரியனை வழிபடுகிறார்கள். அந்த நாட்டை
பல்கீஸ் என்ற பெண் ஆட்சி செய்கிறாள்’’ என்று கூறுகிறது. இதன் பிறகு,
இஸ்லாமிய கோட்பாடுகளை எழுதி, ஏமன் அரசி பல்கீஸுக்கு 'ஹுத்ஹுத்' பறவை மூலம்
சுலைமான் தூது அனுப்புவதாக வரலாறு.
இவ்வாறு மார்க்க அறிஞர் கான் பாகவி தெரிவித்தார்.
ஆங்கிலத்தில் இப்பறவை ‘ஹூப்போ’ என்று அழைக்கப்படுகிறது. இது இஸ்ரேல்
நாட்டின் தேசியப் பறவை. இதன் தலையில் நீளமான ஊசி போன்ற கொண்டை உள்ளது.
பெரும்பாலும் தண்ணீர் இருக்கும் இடத்தின் மீது தனது ஊசிக் கொண்டையை குடைபோல
விரித்து அழகாக ஆடும். அதனால் தமிழில் கொண்டலாத்திப் பறவை எனப்படுகிறது.
மரங்கொத்தி, மீன் கொத்தி வகையைச் சேர்ந்தது. பாலைவனங்களில் அதிகம் வாழும்.
இந்தியாவில் மிகக் குறைவாகவே உள்ளது. பெரும்பாலும் பழுப்பு நிறத்திலும்,
கருப்பு, வெள்ளை கலந்த பட்டையுடனும் காட்சியளிக்கும். 

LinkWithin

Related Posts with Thumbnails