Saturday, December 31, 2011

உடலுறவு - ஏன் பெண்களால் சில நேரம் மறுக்கப்படுகிறது?



கணவன் மனைவி உறவு ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர்களுக்குள் தாம்பத்திய (உடல்)உறவு என்பது நல்லவிதமாக இருக்கவேண்டும். மிக அவசியமானதும் கூட. இதை தவிர்ப்பது என்பது இருவருக்குமே பாதிப்பை மன அளவில் ஏற்படுத்தும். பல விவாகரத்துக்கு இதுதான் அடிப்படை காரணம் என்பது அதிர்ச்சியுடன் கூடிய உண்மை.

இந்த உறவை பொறுத்தவரை கணவன் விருப்பபட்டு அழைக்கும் போது மனைவி மறுப்பதுதான் பெரும்பாலான வீட்டிலும் நடைமுறையில் இருக்கிறது. அது ஏன் என்பது தெரியாமல் பல கணவர்களும் தவித்து போய் விடுவார்கள். இதனால் மன அழுத்தம் அதிகமாகி பாதிக்கப்பட்டவர்கள் பலர்.
ஆண்களுக்கு மட்டும் ஏன் அந்த எண்ணம் அதிகமாக இருக்கிறது என்ற ஒரு கேள்வி நான் சந்தித்த பல பெண்களிடமும் இருக்கிறது. "அந்த ஆளுக்கு வேற நினைப்பே கிடையாது எப்பவும் அந்த நினைப்புதான்....?! பிள்ளைங்க வேற வளர்ந்திட்டாங்க. இப்பவும் அப்படியே இருக்க முடியுமா..? என்ன சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டாரு...!" இந்த மாதிரியான புலம்பல்கள் தான் பல பெண்களிடம்...!
ஏன் இதை ஒரு வேலையாகவோ, அசிங்கமாகவோ, அருவருப்பானதாகவோ நினைக்க வேண்டும்? தினம் மூன்று வேளை உணவு என்பது உடம்பிற்கு எந்த அளவிற்கு அவசியமோ அந்த மாதிரி ''அளவான உடல் தொடர்பான உறவும் அவசியம் தான்'' என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
ஆண்கள் எப்போதும் அந்த எண்ணத்தை மட்டுமே கொண்டவர்கள் அல்ல. அதைவிட பல முக்கிய பொறுப்புகளையும், கடமைகளையும் கொண்டவர்கள் அவர்கள். இந்த விஷயத்தை பொறுத்தவரை அவர்களின் உடல் அமைப்பு எப்படி என்று பார்த்தோம் என்றால் 90 வயதானாலும் அவர்களால் ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியும். அவர்களின் உடம்பில் அணுக்களின் சுரப்பு என்பது இருந்து கொண்டே இருக்கும். இதன் எண்ணிக்கை வேண்டுமானால் நபருக்கு நபர் வேறுபடலாம். வயதிற்கு ஏற்ப மாதம் குறைந்தது 4 முறையாவது உறவு என்பது அவர்களுக்கு அவசியமாகிறது.
கணவனின் தேவை என்ன என்பதை ஒவ்வொரு மனைவியும் புரிந்து கொண்டு உறவுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திக்கொண்டு கணவனை கவனிக்கும் போதுதான் அந்த கணவனும் மன நிறைவுடன் புத்துணர்ச்சி அடைவான், நீங்களும் உற்சாகம் அடைவீர்கள். அதைபோல் மனைவியின் விருப்பம் என்ன , சூழ்நிலை என்ன என்று கணவனும் புரிந்து கொண்டு நடந்து கொண்டால் இல்லறம் ஒரு சொர்க்கம்தான்.

Wednesday, December 28, 2011

சிறுபான்மை மாணவர்களுக்குத் தொழிற்கல்வி உதவிதொகை!

"தொழிற்கல்வி உதவித் தொகை பெறும் சிறுபான்மை மாணவர்கள் 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்" என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

தொழிற்கல்வி பயிலும் சிறுபான்மையினர் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க இறுதி நாள் 31.12.2011. சிறுபான்மையின நலத்துறை ஆணையர் தகவல் மத்திய அரசால் அறிமுகப் படுத்தப்பட்ட தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

Sunday, December 25, 2011

நான் கண்ட வள்ளல் சீதக்காதி, பி.எஸ்.ஏ.

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) 
 வரலாறு மாணவனாக சென்னை புதுக் கல்லூரியிலும், மாநிலக் கல்லூரியிலும் பயிலும் பொது கீழக்கரை சீதக்காதியின் வள்ளல் தன்மையினை படித்திருக்கிறேன், அனால் என் வாழ்க்கையில் கண்ணாரப் பார்த்த வள்ளல் சீதக்காதி ஒருவர் இருகின்றார் என்றால் அவர் தான் பெரியவர் பி.எஸ்.ஏ.
இணைந்த இராமநாதபுரம் மாவட்டம் கடற்க்கரை ஓரம் கீழக்கரையில் பிறந்து திரைகடல் ஓடி திரவியம் சேர்த்து எண்ணற்ற முஸ்லிம்கள் மட்டுமல்லாது பிற சமூகத்தினருக்கும் வேலைவாய்ப்பினை தந்து அவர்கள் குடும்பத்தில் விளக்கேற்றி வைத்துள்ள ஒளிவிளக்கு அவர்.
எங்கள் ஊர் இளையான்குடி மக்கள் பி.எஸ்.ஏ. கம்பெனியால் பயன் பெற்று வசதி வாய்ப்புடன் வாழ்கின்றதினை நான் கண்கூடாக காண்கிறேன்.
பி.எஸ்.ஏ.வினை நேரில் பார்க்கும் வாய்ப்பு 1946 ஆம் ஆண்டு பிறந்த எனக்கு 1983 இல் கிடைத்தது. அப்போது நான் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பீ. ஆகா பணியாற்றினேன். திருசெந்தூர் சட்டமன்ற இடைத் தேர்தல் அறிவித்து அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் சூடு பறக்க ஈடு பட்டிருந்த நேரம். குலசேகரபட்டினம் என்ற ஊரில் ஒரு இரவு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். பேசுவதாக இருந்ததால் நான் நேரடி பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தேன். எம்.ஜி.ஆர். மேடைக்கு வந்து பேசிகொண்டிருந்தார்.

Friday, December 23, 2011

*உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா**? **உங்களின் வாழ்நாள் நீள** **வேண்டுமா**?*



*உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா**? 
**உங்களின் வாழ்நாள் நீள** **வேண்டுமா**?* ****
 
 தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் *தன் 
வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து
 
** **நடக்கட்டும்* என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) ****
 
  **** 
 *அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று** **விரும்புகின்றீர்களா**?* **** 
 யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் 
பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) ****
 
  **** 
 *உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும்**, **அது மன்னிக்கப்பட** **வேண்டுமென்று 
விரும்புகின்றீர்களா**?* ****
 
 யார் ஒரு நாளில் நூறு தடவை **** 
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ**** 
 *'சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி**’* என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் 
நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 
(புகாரி, முஸ்லிம்) ****
 
  **** 
 *உங்களுக்கும் நரகத்துக்கும் மத்தியில் நாற்பது ஆண்டுகள் துலை தூரம்** **இருக்க 
வேண்டுமென்று விரும்புகின்றீர்களா**?* ****
 
 யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ, அல்லாஹ் அவரை நாற்பது 
ஆண்டுகள் தொலை தூரம் நரகத்திலிருந்து தூரமாக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள்
 
கூறினார்கள். (புகாரி) ****
 
  **** 
 *அல்லாஹ் உங்கள் மீது**, **அருள்புரிய வேண்டுமென நீங்கள்** ** 
விரும்புகின்றீர்களா**?* ****
 
 யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை 
ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(
 
புகாரி) ****
 
  **** 
 *அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று** **விரும்புகின்றீர்களா**?* 
****
 
 யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் 
அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) ****
 
  **** 
 *அல்லாஹ்விற்கு சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா**?* **** 
 ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் 
நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்)
 
அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) ****
 
  **** 
 *ஹஜ் செய்த நன்மையைபெற விரும்புகின்றீர்களா**?* **** 
 ரமளான் மாத்தில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு சமமாகும் அல்லது என்னுடன் ஹஜ் 
செய்ததற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) ****
 
  **** 
 *சுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டும் என** **விரும்புகின்றீர்களா**?* **** 
 அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக 
அதுபோன்ற (வீட்டை)
 
சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) ***
 
*
 
  **** 
 *அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புகின்றீர்களா**?* **** 
 ஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும், ஒரு வாய் தண்ணீர் 
அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ் பொருந்திக்
 
கொள்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.. (முஸ்லிம்) ****
 
  **** 
 *உங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று** ** 
விரும்புகின்றீர்களா**?* ****
 
 பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) 
அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்) ****
 
  **** 
 *ஒரு வருடம் முழுமையாக நோன்பு நோற்ற நன்மை கிடைக்க வேன்டுமென** ** 
விரும்புகின்றீர்களா**?* ****
 
 ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, வருடமெல்லாம் நோன்பு நோற்பதற்கு 
சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) ****
 
  **** 
 *மலையளவு நன்மை கிடைக்க வேண்டுமென்று** **விரும்புகின்றீர்களா**?* **** 
 ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்படும் வரை அந்த ஜனாஸாவில் யார் கலந்து 
கொள்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத்து நன்மையும், அந்த ஜனாஸா அடக்கம்
 
செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து நன்மையும்
 
கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கிராத்து என்றால் என்ன? என்று
 
கேட்கப்பட்டது. இரு பெரும் மலை அளவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,
 
முஸ்லிம்) ****
 

Thursday, December 22, 2011

அழகு ரசம்


எரித்துவிடும் பார்வையுடன்;
புகைத்து நிற்கும் காதுகளுடன்;
உனை முறைத்து நிற்பேன்;
எனக்குப் பிடிக்காத ரசத்தை
நீ பிடித்துக் கொண்டிருக்கையில்!

தேசம் விட்டு; மாற்று
வாசம் கொண்டு - பாசமில்லா
உணவுகளின் பங்காளியாக;
ருசித் தேடி;
பசிக்கொண்டு - உணவு விடுதியின்
படியேறினாலும் ;
பார்க்கமுடியவில்லை உன்
பக்குவமானப் பருப்பு ரசம்!

அழுது உண்ட
மிளகு ரசம் - இன்றுச்
சுவையாய் தெரிந்தது;
ஆனால் உறவுகள்
தூரமாய் இருந்தது!

வெறுப்பான ரசம்;
உவப்பாய் போனது;
உன் கரத்தால்
நீர் அருந்தினாலும் - இனி
மனம் நீர்த்துப்போகாது!

Wednesday, December 21, 2011

திருமறை நபிமொழி தமிழாக்கப் பணி - ஒரு வரலாற்றுப் பார்வை!

முன்னுரை

இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு மொழிபெயர்ப்புத் துறை சிறப்பான பங்காற்றியிருப்பதை நன்றியுடன் நினைவுகூர வேண்டும். அதிலும் குறிப்பாக, அரபி மொழியிலிருந்து தமிழுக்குக் கிடைத்துள்ள அரிய கருவூலங்கள் நினைத்துப் போற்றத் தக்கவை ஆகும்.
அவை இஸ்லாத்தின் மூலாதாரங்களாக விளங்குவதுடன், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை முறைப்படுத்துவதிலும், இஸ்லாமிய வரையறைக் குட்பட்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை வழிநடத்துவதிலும் பெரும் பங்காற்றி வருகின்றன.
பொதுவான தமிழ் இலக்கியத்திற்கும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கும் இடையிலான வேறுபாடே, இஸ்லாமிய வேலியைத் தாண்டாமலும், இஸ்லாத்தை அதன் தூய வடிவில் தமிழ் கூறும் நல்லுலகுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் மற்ற மொழிகளுக்குச் சற்றும் சளைக்காமலும் தொண்டாற்றுவது தான். இதுவே இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் கொடையாகும்.
ஒரு சமூகத்தின் நம்பிக்கையை, கலாசாரத்தை, அதன் வழிபாட்டு முறையை, வாழ்க்கைச் சக்கரத்தை கலை நயத்தோடு வெளிப்படுத்துவதே இலக்கியம் ஆகும். 
இஸ்லாமிய இலக்கியம் என்பது, முஸ்லிம்களின் நம்பிக்கை, கலாசாரம், வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை ஆகிய வற்றைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.
இதற்கு இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், சமூக, பொருளாதார, குடும்ப, தனிமனித ஒழுக்கங்கள் தான் வழிகாட்ட முடியும். இவற்றைத் தாய்மொழியில் அறிந்து அசைபோட இஸ்லாமிய மூலாதார நூல்களே துணை நிற்கும்.
இந்த வகையில், அரபி மொழியில் உள்ள திருக்குர்ஆன், நபிமொழி, சட்டம், வரலாறு உள்ளிட்ட அடிப்படை நூல்கள் தமிழில் இருந்தால்தான், அரபி மொழி அறியாத தமிழ் அறிஞர்கள் அவற்றை அறிந்து, இலக்கியப் படைப்புகளில் கையாள முடியும். தவிரவும், பொதுமக்களும் படித்துணர்ந்து பின்பற்றி வாழ முடியும்.
திருக்குர்ஆன், நபிமொழி, இஸ்லாமியச் சட்டம் ஆகிய மூலாதார நூல்கள் அரபியிலிருந்து உர்து, ஆங்கிலம், பாரசீகம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, நீண்ட நெடுங்காலமாக மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஆனால், அறுபது ஆண்டுகளுக்கு முன்புதான் திருக்குர்ஆன் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.
அதையடுத்து திருக்குர்ஆன் விரிவுரை, நபிமொழி, சட்ட நூல், வரலாறு ஆகிய மூலாதார நூல்கள் படிப்படியாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவருகின்றன. இன்னும் நிறைய வெளிவர வேண்டியிருக்கிறது.
திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்
பெரும்பாலான உலக மொழிகளில் உலகப் பொதுமறையாம் திருக்குர்ஆன் மொழிபெயர்க் கப்பட்டுள்ளது. உலகிலேயே முதன் முதலில் சிரியாக் (சுர்யானீ) மொழியில்தான் திருக்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டது. ஹிஜ்ரீ முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (கி.பி. ஏழாம் நூற் றாண்டின் துவக்கத்தில்) முஸ்லிமல்லாத ஒருவரால் சிரியாக் மொழியில் குர்ஆன் மொழி பெயர்க்கப் பட்டது. அடுத்து பெர்பரீஸ் மொழியிலும், அதை யடுத்து பாரசீக மொழியிலும் குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டது.
இந்திய மொழிகளில் உருது, ஹிந்தி, குஜராத்தி, சிந்தி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், மலை யாளம், சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளிலும் திருக் குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
1. மௌலானா, ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி
தமிழில் முதன் முறையாகத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு 1943ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை நாடறிந்த மார்க்க மேதை அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்டார்கள்.
1876ஆம் ஆண்டு பிறந்த மௌலானா அவர்கள், 1906ல் வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் மௌலவி பட்டம் பெற்றார். பாக்கியாத் நிறுவனர் அண்ணல் அஃலா ஹள்ரத் அவர்களது காலத்தில் அங்கு சேர்ந்த மாணவர்களில் முதல் அணியில் மௌலானா அவர்களும் ஒருவர் என்பது சிறப்புக் குரியது.
1929ஆம் ஆண்டு திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயமான அல்பகராஅத்தியாயத்திற்கு மட்டும் விரிவுரையுடன் மொழிபெயர்ப்பு வெளியிட்டார்கள். பின்னர் முழுக் குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியிட எண்ணி, வேலூர் பாக்கியாத்தில் நான்கு மாதங்கள் தங்கி, அங்குள்ள பெரிய மார்க்க அறிஞர்களின் ஆலோசனைகளைப் பெற்று தர்ஜுமத்துல் குர்ஆன் பி அல்த்தஃபில் பயான்என்ற பெயரில் 1943ஆம் ஆண்டு முழுமையான மொழிபெயர்ப்பு வெளி யிட்டார்கள்.
திருமக்காவில் உள்ள ராபித்தத்துல் ஆலமில் இஸ்லாமீஎனும் உலக முஸ்லிம் லீக்கின் அங்கீகாரம் பெற்று, சஊதி அரசின் நிதியுதவியுடன் வெளியிடப்பட்ட சிறப்பு இந்த மொழிபெயர்ப் புக்கு உண்டு. இந்த முதலாவது மொழிபெயர்ப்பு இதுவரை சுமார் 25 பதிப்புகளில் வெளிவந்திருப்பது குறிப்பிடத் தக்கது. அன்று இனிய தமிழில், எளிய நடையில் வெளிவந்த மொழிபெயர்ப்பு என்ற சிறப்பு இதற்கு உண்டு.
 மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்திருமறை நபிமொழி தமிழாக்கப் பணி - ஒரு வரலாற்றுப் பா...
Source : http://khanbaqavi.blogspot.com/

Friday, December 16, 2011

'அவரைப் பின்பற்றுவோர் அதிகரிக்கின்றனரா? அல்லது குறைகின்றனரா?'

 
ஸஹீஹுல் புகாரி
மூலம் : இமாம் அபூ அப்தில்லாஹ் என்ற முஹம்மத் அல் புகாரி அவர்கள்
தமிழில் : உத்தமபாளையம், மவ்லவி எம்.எம். அப்துல் காதிர் உமரி
அவர்கள்
 
7. (குறைஷிகளின் தலைவர்) அபூ சுஃப்யானிடமும் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களிடமும் நபி(ஸல்) அவர்கள் (ஹுதைபிய்யா என்ற இடத்தில்) ஓர் உடன்படிக்கை செய்திருந்தார்கள். அச்சமயத்தில் (குறைஷிகளில் சிலர்) ஒட்டகங்களில் வியாபாரிகளாக சிரியான நாட்டிற்குப் போயிருந்தார்கள். அந்தக் குறைஷி வணிகக் கூட்டத்தில் ஒருவராகச் சென்றிருந்த அபூ சுஃப்யானை (ரோமபுரி மன்னர்) ஹெர்குலிஸ், பைத்துல் முகத்தஸ் ஆலயத்தில் முகாமிட்டிருந்த தம்மிடம் அழைத்து வரும்படித் தூதரை அனுப்பினார். அந்தத் தூதர்கள் அபூ சுஃப்யானிடம் வந்து சேர்ந்தார்கள். ரோமாபுரியின் அரசப் பிரதிநிதிகள் சூழ அமர்ந்திருக்கும் தம் அவைக்கு அவர்களை அழைத்திருந்தார். மன்னர் தம் மொழி பெயர்ப்பாளரையும் அழைத்து வரக்கூறினார்.
அபூ சுஃப்யான் இது குறித்துக் கூறும்போது, (எங்களிடம்) மன்னர் 'தம்மை இறைவனின் திருத்தூதர் என்று கருதிக் கொண்டிருக்கும் அம்மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்?' எனக் கேட்டார். நானே அவருக்கு மிக நெருங்கிய உறவினன் எனக் கூறினேன். உடனே மன்னர், (தம் அதிகாரியிடம்) 'அவரை என் அருகே அழைத்து வாருங்கள்; அவருடன் வந்திருப்பவர்களையும் என் பக்கத்தில் கொண்டு வந்து அவருக்குப் பின்னால் நிறுத்துங்கள்' என்று ஆணையிட்டார். பின்னர் தம் மொழி பெயர்ப்பாளரிடம், 'நான் அந்த மனிதரைப் பற்றி (அபூ சுஃப்யானிகிய) இவரிடம் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் அதை என்னிடம் கூறி விட வேண்டும் என்று அவருடன் வந்திருப்பவர்களிடம் மொழி பெயர்த்துச் சொல்' என ஆணையிட்டார். நான் பொய் கூறினார்கள் என இவர்கள் சொல்லி விடுவார்களோ என்ற நாணம் மாத்திரம் அப்போது எனக்கு இல்லை என்றால் இறைவன் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களைப் பற்றிப் பொய்யுரைத்திருப்பேன்.
பிறகு மன்னர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, 'உங்களில் அவரின் குலம் எத்தகையது?' அதற்கு, அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சார்ந்தவர் என்றேன். 'இவருக்கு முன்னர் உங்களில் யாரேனும் எப்போதாவது இந்த வாதத்தைச் செய்ததுண்டா?' என்று கேட்டார். இல்லை என்றேன். 'இவரின் முன்னோர்களில், எவரேனும் மன்னர்களாக இருந்திருக்கிறார்களா? என்றார். இல்லை என்றேன். 'அவரைப் பின்பற்றுவோர் மக்களில் சிறப்பு வாய்ந்தவர்களா? அல்லது சாமானியர்களா?' என்றார். மக்களில் சாமானியர்கள் தாம் என்றேன். 'அவரைப் பின்பற்றுவோர் அதிகரிக்கின்றனரா? அல்லது குறைகின்றனரா?' என்று வினவினார். அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர் என்றேன். '

Thursday, December 15, 2011

மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்

ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:—
    1.சதக்கத்துல் ஜாரியா 2.பலன் தரும் கல்வி 3.பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்
    ஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும்.
    இரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.
    மூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும்.

Tuesday, December 13, 2011

உலமா ஓய்வூதியம் - முதல்வருக்கு தவ்ஹீத் ஜமாத் பாராட்டு!

உலமா ஓய்வூதியத் தொகையை ரூ. 750லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தி உத்தரவிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த ஜமாத்தின் செயலாளர் ஆர். ரஹ்மதுல்லாஹ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உலமாக்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளதற்கும் ஹஜ் பயணிகளுக்கான மானியத் தொகையை 10 இலட்சத்திலிருந்து 20 இலட்சமாக உயர்த்தியுள்ளதற்கும் தமிழக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
Source : http://www.inneram.com

Monday, December 12, 2011

பிரான்சில் குர்ஆனிய ஹாபிழ்கள் கௌரவிப்பு

குர்ஆன் செயற்பாட்டுக் குழு: டிசம்பர் 8ம் திகதி வியாழக்கிழமை, பிரெஞ்சு நகரான சைன்ட் டெனிசில் இடம்பெற்ற வைபவமொன்றின் போது, புனித அல்குர்ஆனை மனனம் செய்து முடித்த ஹாபிழ்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இஸ்லாமிய விஞ்ஞானம் மற்றும் மானுடவியலுக்கான ஐரோப்பிய நிறுவனத்தினால் இவ்வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என ஐஈஎஸ்எச் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
புனித அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள நிறுவனத்தின் 12 மாணவர்கள் இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் மூன்று வருடங்களுக்குள் புனித அல்குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ளனர்.
பிரபல குர்ஆனிய காரியும் அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஷைக் அஹ்மத் இசா அல்மிஸ்ராவி மற்றும் இஸ்லாமிய விஞ்ஞானம் மற்றும் மானுடவியலுக்கான ஐரோப்பிய நிறுவனத்தின் தலைவர் அஹ்மத் ஜிப்லி ஆகியோர் இவ்வைபவத்தில் அதிதிகளாகக் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்ட 12 குர்ஆனிய ஹாபிழ்கள், ஐரோப்பாவிலுள்ள இஸ்லாமிய நிலையங்களில் குர்ஆன் போதனைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கும் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ புத்தகத்தினை மலேஷியா தடை செய்தது.


முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான்  யூ இஸ்லாத்தினை  தவறாக விமர்சித்து  எழுதிய புத்தகத்தினை மலேஷியா தடை செய்துள்ளது. 

Sunday, December 11, 2011

மாமியார் பணிவிடையும், மருமகளுக்கு மார்க்கத்தின் அறிவுரையும். RASMIN M.I.Sc


"கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்" என்ற பல மொழியை அடிக்கடி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கணவன் பற்றி மணைவிக்கு உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட ஒரு முக்கிய செய்திதான் மேற்குறிப்பிட்ட பல மொழியாகும்.

கணவனுடன் மணைவி சேர்ந்து வாழ்ந்து ஒட்டி உறவாட வேண்டும் என்பதை சூசகமாக இந்தப் பல மொழி எடுத்துச் சொல்கிறது.

ஏன் என்றால் இன்று பல வீடுகளில் கணவன் மணைவிப் பிரச்சினை தீராத ஒரு வியாதியாக மாறியிருக்கிறது. காரணம் என்னவென்று ஆராய்ந்தால் கணவன் மணைவிக்கு மத்தியில் பிரச்சினை வருவதற்கு முழு முதற் காரணமாக மாமியார் பிரச்சினை தான் சொல்லப்படும்.

Friday, December 9, 2011

இனிய இல்லம் இணைந்து வாழும்!

 இஸ்லாத்தில் துறவறம் இல்லை. மணம் செய்து கொள்வது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். திருக்குர்ஆனும் இதை வலியுறுத்துகின்றது.
 

  திருமணம் செய்தல் என் வாழ்க்கை வழியாகும் என்றொரு ஹதீஸிலும், எவர் இந்த வழியைப் பின்பற்றவில்லையோ அவர் என்முறை தவறியோர் ஆவர். என்று மற்றொரு ஹதீஸிலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
 

திருமணத்தின் நோக்கம் சிற்றின்பத்தை அனுபவிப்பது மட்டுமல்ல. இரண்டு ஆத்மாக்களும் ஒன்று பட்டு இருவரிடமும் உள்ள இயற்கைத் தன்மைகளை சீர்படுத்துவதும் அதன் நோக்கமாகும். அன்பு மலர்களால் ஆழ்ந்த பூந்தோட்டம் என்னும் திருமணத்தை தம்பதிகள் தங்களது சுயநலம் காரணமாக போர்க்களமாக ஆக்கிவிடுகிறார்கள்.

திருமணம் என்பது  ஒரு ஆணும்
ஒரு பெண்ணும் கணவன் மற்றும் மனைவியாக இணைந்து வாழ செய்துக் கொள்ளும்   ஒப்பந்தமாக  உள்ளது. திருமணம் இருவருக்கும்  பொறுப்புகளை உள்ளடங்கியதாக உள்ளது . இந்த பொறுப்புகளை கணவன் மற்றும் மனைவி ஒழுங்கான  முறையில்  சரியாக கடைபிடிப்பதில் திருமண வாழ்வில் மகிழ்வு இருக்கும் பிரச்சினை இல்லாத காரியங்கள் எதுவுமில்லை. அது திருமண வாழ்விலும்  ஏற்படலாம்.  அவர்கள் தங்கள் பிரச்சினைகளை விட்டுக் கொடுக்கும் மனதோடு பேசித் தீர்க்க வேண்டும், இல்லையென்றால்  அது விவாகரத்தில் போய் முடியும்.
  ஒருவருக்கொருவர் இடையே வெறுப்பு வளர்க்கும் பண்பினை விட்டொழிக்க வேண்டும்.  வெறுப்பு நமக்கு மன அழுத்தத்தை மற்றும் துயரத்தி
னை தூண்டுகிறது.  எந்த ஒரு மனிதனும் அல்லது பெண்ணும் முழுமையாக குறையற்றவராக  இந்த உலகில் படைக்கப் படவில்லை.   எல்லோரிடமும்  பலவீனங்கள் இருக்கத்தான் செய்கின்றது. தவறு செய்யும் போது இறைவனிடம் மனமுருகி மன்னிப்புத்  தேடி திருந்திக் கொள்ள வேண்டும்   செய்த தவறுகளை தானே விளம்பரம் செய்ய முயலக் கூடாது. இறைவன் மறைத்ததை நாம் ஏன் மற்றவரிடம் சொல்ல வேண்டும்? கெட்ட குணங்கள் இல்லாமல் உலகில் யாரையும் பார்க்க முடியாது.
 அல்லாஹ் நம்மை சோதனை படுத்தும் போது அதை பொறுமையோடு ஏற்றுக் கொண்டு அதற்கு இறை வணக்கமே ஒரு சிறந்த வழிவகையாக  உள்ளன.
பிரார்த்தனை மிக்க சக்தி வாய்ந்தது.

Wednesday, December 7, 2011

“... என்ன குடுப்பியோ?”

ஒவ்வொருமுறை ஊருக்குச் செல்லும்போதும் வீட்டில் வந்து கிடக்கும் திருமண அட்டைகளைப் பார்த்து யார் யாருக்குத் திருமணம் நடந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வது வழக்கம். அல்லது, பல நேரங்களில் யாரையாவது ஜோடியாக வெளியே காண நேரும்போது, அசடு வழிய வேண்டி வரும்.

ஒரு கத்தை திருமண அழைப்பு அட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அறியமுடிந்த இன்னொரு விஷயம் திருமணம் ஆன கையோடு அதில் இரண்டு ஜோடிகளுக்கு விவாகரத்தும் ஆகிவிட்டது என்பது. அதுவும் திருமணம் முடிந்து ஏறக்குறைய மூன்று மாதங்களுக்குள்.


'விவாகரத்து' என்ற சொல்லை, சிறு வயதில் கேள்விப் பட்டிருப்பதே நம்மில் பலருக்கு அபூர்வம். எங்கோ யாருக்கோ எப்போதோ நிகழ்வதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் மேற்படி சமாச்சாரம் என்பதுதான் மீதியுள்ள சிலரும் கேட்டு வளர்ந்தது. நமக்கும் அதற்கும் ஞானப்ராப்திகூட இருக்காது. அனால், இன்று சர்வ சாதாரணம். ‘இம்’ என்றால் டிவோர்ஸ். ‘ஏன்’ என்றால் கோர்ட்கேஸ். முடிந்தது கதை. அப்புறம்? தந்தை அல்லது சகோதரனிடம் பணம் இருந்தால் – அல்லது மீண்டும் இரக்கத் துணிவிருந்தால் - சிலருக்கு இரண்டாம் திருமணம். பலருக்கு இல்லை. வாழாவெட்டி என்று கடைசிவரைக்கும் பெயெர். ஒன்று இரண்டல்ல, நமது சமூகத்தில் அண்மைக் காலமாக நிறைய நடக்கிறது என்பது பலருக்கும் தெரிந்த பகிரங்க ரகசியம்.

கவிதை என்பது

கவிதைகள் என்பது:

உயிரின் மீது பதியும்
உயிரெழுத்து
மெய்யின் புலன்களை
மெய்யாகவே புலன்விசாரணை
செய்யும் மெய்யெழுத்து
நிராயுதபாணிகளான
நியாயவான்கட்கு
ஆயுதமாய்க் காக்கும்
ஆயுத எழுத்து

கேள்விக்குறியாய்
கூனிவிட்ட சமுதாயத்தை
ஆச்சர்யக் குறியாய்
ஆகாயமாய்ப் பார்த்திட
ஆன்மபலம் ஊட்டும்

Tuesday, December 6, 2011

சர்ச்சைக்குள்ளாகும் வலைத்தளங்கள் மீது நடவடிக்கை!

சர்ச்சையை கிளப்பும் சமூக வலைத்தளங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக், ஆர்குட், டுவிட்டர், கூகுள் பிளஸ் என பல்வேறுபட்ட சமூக வலைதளங்கள் இணையத்தில் இயங்கி வருகின்றன. இதில் சர்ச்சைக்குரிய வகையில் இந்திய தலைவர்கள் மற்றும் மத வழிபாடு குறித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதனை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முறைகேடான பலவித கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. சில சமூக விரோதிகளும், தீவிரவாதிகளும் இந்த சமூக வலைதளங்களை தங்களுக்கு சாதகமாகவும் பயன்படுத்திக் கொண்டு வருகின்றன. இது குறித்து  டெல்லியில் உள்ள மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலை, இணையதள சமூக வலைத் தளங்களின் இந்திய பிரதிநிதிகள் சந்தித்து பேசியபோது, இதனை அவர் தெரிவித்தார்.
Source : http://www.inneram.com/

Monday, December 5, 2011

முஹர்ரம் மாதத்தின் பத்தாம் பிறை..... வெள்ளிக்கிழமை


கண்கள் குளமாகி நெஞ்சம் ரணமாகி.... ........முஹர்ரம் மாதத்தின் பத்தாம் பிறை வெள்ளிக்கிழமை நண்பகல். கடுமையான சூரிய மழையில் நனைந்து,வியர்வை வெள்ளத்தை வடித்துக்கொண்டிருந்தது இமாம் ஹுசைனின் உடல். தாங்கிக்கொள்ள முடியாத உயிரிழப்புகள் எல்லாம் கண்முன்னால் நிகழ்ந்துவிட்ட கொடூரத்தை எண்ணி கண்களிலிருந்து கண்ணீரும் எதிரிகளின் அம்புகள் பாய்ந்த புன்களிலிருந்து செந்நீரும் வழிந்து கொண்டிருந்த இமாம் ஹுசைனின் தலையின்மீது வாளால் வெட்டினான் - நரகத்திற்கு செல்ல ஆசைப்பட்ட மாலிக் பின் சபர் என்பவன். இமாம் ஹுசைனின் உச்சந்தலையில் ஆழமாக இறங்கியது வாள்.கொப்பளித்து வந்த ரத்தத்தில் ஹுசைனின் முகம் ஒழுவெடுத்துக் கொண்டிருந்தது. உடலெங்கும் எதிரிகள் வீசிய நூற்றுக்கணக்கான அம்புகள் பாய்ந்து வழிந்த ரத்தத்தில் ஹுசைனின் பூவுடல் குளியல் நடத்திக்கொண்டிருந்தது.

Saturday, December 3, 2011

எகிப்து தேர்தல்-இஸ்லாமிய கட்சிகள் பெரும் வெற்றி...

Picture Source

அஸ்ஸலாமு அலைக்கும்,

எகிப்தில் நடந்து முடிந்துள்ள முதல் கட்ட தேர்தலில், இஸ்லாமிய கட்சிகள் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி உள்ளன. முஸ்லிம் பிரதர்ஹுட் இயக்கத்தின் அரசியல் பிரிவு சுமார் 40% ஓட்டுகளையும், புரட்சியின் போது ஆரம்பிக்கப்பட்ட அல்-நூர் கட்சி சுமார் 25% ஓட்டுகளையும் கைப்பற்றியுள்ளன.
மதசார்பற்ற கட்சிகள் சுமார் 15% ஓட்டுகளை பெற்றுள்ளன. இந்த நிலை தங்களை மிகவும் கவலைக்கொள்ள செய்துள்ளதாக இஸ்ரேலின் ராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார். 

புரட்சி நடந்த நாடுகளான துனிசியா மற்றும் மொரோக்கோவில் நடந்து முடிந்துள்ள தேர்தல்களில் இஸ்லாமிய இயக்கங்களே ஆட்சிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எகிப்து விவகாரத்திலும் இது தொடர போவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதுக்குறித்து மேலும் பார்க்க.

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 

Thursday, December 1, 2011

ஞாபக சக்தியை அதிகரிக்க!

ஞாபக சக்தியை அதிகரிக்க!:
- எம். டீ. எம். ஹிஷாம் (ஸலபி, மதனி)

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹுத்தஆலாவைப் போற்றிப் புகழ்ந்து, இறுதித்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலாத்தையும் ஸலாமையும் காணிக்கையாக்கியவனாக!

மறதி மனிதனது சுபாவத்துடன் பின்னிப்பிணைந்த ஓர் அம்சமாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் மறதி இருக்கின்றது. ஆயினும் ஒருவருக்கு இருக்கின்ற மறதி மற்றவருக்கு இருக்கின்ற மறதியைவிட சற்று வேறுபட்டதாக இருக்கும். அந்தவிதத்தில் சிலருக்கு மறதி அதிகமாகவும் மற்றும் சிலருக்கு குறைவாகவும் காணப்படும்.

மறதியின் மூலம் ஏற்படும் பிரதிகூலங்களை எண்ணி அல்லலுரும் மக்கள் எம்மில் பலர் உள்ளனர். அதிலும் குறிப்பாக வளர்ந்து வரும் சிறார்களுக்கு மத்தியில் இத்தகைய பலவீனமான நிலை தொடர்வது, அவர்களது கல்வி நடவடிக்கைகளைச் சீராகக் கொண்டு செல்வதற்கு முட்டுக்கட்டையாக அமைகிறது.

LinkWithin

Related Posts with Thumbnails