Sunday, December 27, 2015

நெய்யாக உருகாதோ நெஞ்சம்.....(5)


சிறுபறவை சிறகசைப்பில்
சிறப்பெதுவும் இருந்தாலும்
உறும்கல்வி உரைத்திடுவார்
உற்றுணரும் நாயகமே!

சொற்சுத்தம், செயல்சுத்தம்
சொந்தஉடல் அதுசுத்தம்
பற்சுத்தம் என்றுரைத்த
பலசுத்தம் பரிசுத்தம்!

தீமைக்குத் தீமையினால்
தீர்வில்லை; நன்மையையே
சேமிப்பார்;அருள்செய்வார்
சிறந்தென்றும் விளங்கிடுவார்!

நெய்யாக உருகாதோ நெஞ்சம்.....(4)



தவறான நம்பிக்கை
தந்தறியாத் தலைவரிவர்
கவர்வதுபோல் கவர்ந்திடவே
காசினியில் யாருமுண்டோ (காசினி- உலகம்)

தாம்ஆற்றும் பணியெதிலும்
தடுமாற்றம் ஏதுமிலார்
ஏமாற்றும் வேலைஇலார்;
இவரன்றோ தனித்தலைவர்!

Saturday, December 26, 2015

யார் அந்த ஆரோக்கியதாஸ்?

ஆளூர் ஷாநவாஸ்:

வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட மோகன் சித்ரா தம்பதியர், தமது குழந்தைக்கு யூனுஸ் என்று பெயர் வைத்தார்களல்லவா! அந்த யூனுஸும் நானும் இன்று திருவொற்றியூரிலுள்ள ஆரோக்கிய தாஸ் வீட்டுக்கு சென்றோம்.

யார் அந்த ஆரோக்கியதாஸ்?


திமுகவின் நகரத் துணைச் செயலாளர். இருமுறை கவுன்சிலராக இருந்தவர். மக்கள் சேவகர். விஷ பூச்சி கடித்து பலியான இம்ரானின் அண்டை வீட்டுக்காரர். இம்ரானை மருத்துவமனையில் சேர்த்தது முதல் இம்ரான் மரணத்தை வெகுமக்களின் கவனத்துக்கு கொண்டுவந்தது வரை அனைத்தையும் உடனிருந்து செய்தவர். அத்துடன் நிற்கவில்லை அவர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை வரவழைத்து இம்ரானின் பெற்றோருக்கு ஆறுதல் சொன்னதோடு, தனது மகளின் நகையை அடகுவைத்து 50,000 ரூபாய் நிதியும் வழங்கினார். கடந்த 17-ஆம் தேதி தலைவர் திருமாவளவன் அவர்கள் இம்ரான் இல்லத்துக்குச் சென்றபோது முழுவதும் உடனிருந்தார், ஆரோக்கியதாஸ். அத்தகைய பொது நலத் தொண்டர், அன்று மாலையில் தனது வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து அகால மரணம் அடைந்தார்.

Wednesday, December 23, 2015

நெய்யாக உருகாதோ நெஞ்சம்.....(3)



மன்னித்தே தண்டிப்பார்!
மனங்களையே வென்றெடுப்பார்!
உன்னிப்பாய் உணர்பவர்கள்
உவந்து வந்து தோற்பாரே!

குற்றங்கள் கூறாதார்
குறைகூறிப் பேசாதார்
மற்றெவரே ஆனாலும்
மதிக்கின்ற மாண்பாளர்!

Tuesday, December 22, 2015

வயோதிக வலிகள்!

வலிகளோடு வாழப் பழகுவதே

வயோதிகத்தை

வரவேற்கும் வித்தை!

வலிகளில் - சில

மூட்டில் வருபவை - பிற

வீட்டில் தருபவை!



நிவாரணங்களைப் பற்றிய

உதாரணங்களின் பட்டியலில்

வயோதிகத்தின் வலிகளுக்கு

நிவர்த்தி பற்றிய குறிப்பில்லை!

 

Saturday, December 19, 2015

நெய்யாக உருகாதோ நெஞ்சம்.....(2)




பொறுமைக்கோர் இலக்கணமாய்
புகழுக்கும் இலக்கியமாய்
வறுமையிலும் செம்மையுடன்
வழிகாட்டும் வாழ்வழகு!

புன்சிரிப்போ முழுநிலவு
பூப்போன்ற மென்மைமுகம்
கண்பார்வை அருள்வெள்ளம்
காண்பவர்கள் தமைவெல்லும்!

முத்தொளிரும் பல்தெரிய
முறுவலுடன் அவர்திருவாய்
சத்தியத்தைப் பேசிடுமே
சாந்தஒளி வீசிடுமே!

அடியெடுக்கும் நடைநேர்த்தி!
அணிந்திருக்கும் உடைநேர்த்தி!
வடிதேனாம் அவர்மொழிகள்
வையகத்தில் தனிநேர்த்தி!

நெய்யாக உருகாதோ நெஞ்சம்...






சிந்தனையில் தேன்சுரக்க
செந்தமிழின் மேலினிக்க
வந்தருளும் நாயகமே,
வழிபார்க்கும் வையகமே!

முன்யாரும் கண்டதுண்டா
முஹம்மதரைப் போன்றவரை...
பின்னேனும் அவர்போலாம்
பேறுடையார் எவருமுண்டா?

ஓரழகு, சீரழகு!
ஒப்பில்லாப் பேரழகு!
யாரழகு முஹம்மதினும்
யாதான போதிலுமே?

Tuesday, December 15, 2015

இறைத்தூதர் காட்டித் தந்த வழியில் நாம்..

சென்னை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல.
அந்த பாதிப்புகளை அகற்றுவதற்கு
முஸ்லிம்கள் பட்ட பாடுகளும்
கொஞ்ச நஞ்சமல்ல.

* ஜாதி மத பேதம் பாராமல் ...
* தாங்கள் தங்குவதற்கு வாடகைக்கு வீடு கூட தராத மக்களுக்கு ...
* தங்களை பயங்கரவாதிகளாய் எண்ணி ஒதுங்கிய மக்களுக்கு ...
அவர்களையும் தங்களின்
சொந்தங்களாய் எண்ணி
அவர்களின் வீடுகளையும் கோயில்களையும் சுற்றி குவிந்து கிடந்த கழிவுகளை எந்த அருவருப்புமின்றி
முஸ்லிம்கள் அப்புறப்படுத்தினார்கள் என்பதை நாமறிவோம்....

இது விளம்பரத்திற்காகவோ
ஆதாயத்திற்காகவோ செய்த சேவை அல்ல.
இதெல்லாம் முஸ்லிம்களின் ரத்தத்தில் ஊறியது.

Monday, December 14, 2015

திருவொற்றியூர் தியாகராயபுரத்து தியாகக் கொழுந்தே!


திருவொற்றியூர்
தியாகராயபுரத்து
தியாகக் கொழுந்தே!

உயிர் காக்கும் பணியில்
உயிர் நீத்த சகோதரனே!

உனது உயிர்த் தியாகம்
உயர்வான தியாகம் !

உள்ளத்தை உலுக்கிவிட்ட
உருக்கமான சோகம்!

ஆயுதம் தாங்கி புரிவதல்ல ஜிஹாத்
மானுடம் காக்க மரணிப்பதே ஜிஹாத்

Sunday, December 13, 2015

அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும் என அமெரிக்க நாட்டு அதிபர் பதவிக்குப் போட்டியிடும் 'டொனால்டு டிரம்ப்' ....


அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும் என அமெரிக்க நாட்டு அதிபர் பதவிக்குப் போட்டியிடும் 'டொனால்டு டிரம்ப்' அமெரிக்காவின் அதிபராகும் தகுதியை இழந்துவிட்டதாக அதிபர் மாளிகை அறிவிப்பு..!!

http://edition.cnn.com/…/donald-trump-josh-earnest-disqual…/

'டொனால்டு டிரம்ப்' கூறிய கருத்து அமெரிக்காவில் பெரும் சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது

மிகவும் சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லிம்கள் பற்றி அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஒரு வேட்பாளர் இப்படி பேசியிருப்பதை முஸ்லிம்கள் அல்லாத பெரும்பான்மை மக்கள் அமெரிக்கா அரசாங்கம் , அமெரிக்க மக்கள் (அதிபர் பதவிப் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன், ஜெப் புஷ், கிறிஸ் கிறிஸ்டி, பெர்னீ சாண்டர்ஸ் ஆகியோ உள்பட) பல வெளிநாட்டு அரச்சங்கங்களும் மக்களும் சரமாரியாக கண்டித்திருக்கிறார்கள்.. இவரை இங்கிலாந்துக்கு வருவதை தடைசெய்யவேண்டும் என இங்கிலாந்து மக்கள் இதுவரை 5,51,449பேர்கள் Petition அளித்துள்ளார்கள்...

https://petition.parliament.uk/petitions/114003

Saturday, December 12, 2015

மாமியாரைப் பார்த்து கண்கலங்கி நின்றாள் மருமகள் !

பாசத்தின் வலி ...
ஆமினா உம்மாவின் ஒரே மகன் அஹமது... வயது நாற்பது. மகனின் மீது உம்மாவுக்கு அளவுகடந்த பாசம்...பிள்ளையின் சிறு சங்கடங்களையும் தாங்க முடியாத மனசு ஆமினா உம்மாவுக்கு. கணவர் இறந்த பிறகு மகனை கண்ணும் கருத்துமாக வளர்த்து பாசமும் பண்பும் உள்ள பிள்ளையாக வளர்த்தாள் . மகனுக்கு திருமணமும் செய்து வைத்தாள்...தனக்கு ஒரு மகள் இருந்தால் எப்படி பாசம் காட்டுவாளோ அப்படி ஒரு பாசத்தை மருமகள் மீதும் காட்டினாள். மகன் அஹமதுவுக்கு அரபு நாட்டில் வேலை. வருடத்துக்கு ஒரு முறை ஊருக்கு வந்து ஒரு மாதம் நிற்பான். திருமணமாகி ஏழு வருடங்களுக்குப் பிறகு ஒரு குழந்தை பிறந்தது. அப்துல்லாஹ் என்று பெயர் வைத்தார்கள். வாப்பாவின் மீது குழந்தைக்கு மிகுந்த பாசம். வாப்பா வந்ததிலிருந்து அரேபியா போகும் வரை வாப்பாவை விட்டுப் பிரிய மாட்டான். எப்போதும் கையில் தூக்கி வைத்து அவனை கொஞ்ச வேண்டும்.. அஹமதும் பிள்ளைக்கு முத்தமழை பொழிந்து குழந்தையுடனேயே இருப்பான்.

Friday, December 11, 2015

மனைவியின் சுயமரியாதையைப் பாதுகாத்தல் கணவனின் கடமை

-இம்தியாஸ் யூசுப் (ஸலபி)-
அன்பால் பிணைந்த உள்ளங்களில் சில போது சிக்கல்களும் பிரச்சினைகளும் எழுவதுண்டு. இருவருக்கிடையில் முரண்பாடுகள் தோன்றும் போது அறிய வேண்டிய பல பண்புகள் தோற்றம் பெறும். அறியாத சில விடயங்களும் வெளிச்சத்திற்கு வரும். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள இந்த நிலை துணை செய்யும். எந்த நேரத்தில் எப்படிப் பேச வேண்டும், எப்படி அணுக வேண்டும், எப்படி சமாளிக்க வேண்டும் என்ற அனுபவம் கிடைத்து விடும்.

இந்த அனுபவங்கள் கணவன் மனைவிக்கிடையில் சிறந்த உறவை கட்டியெழுப்பும். எனவே பிரச்சினைகள் வரக் கூடாது என்று எதிர்பார்ப்பதை விட வந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்பது தான் முக்கியம்.

தன் வீட்டில் இருந்தாலும் பிற வீட்டில் இருந்தாலும் ஒருவர் மற்றவருடன் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள பிரச்சினைகள் வழிகாட்டியாக இருக்கும். ஆனால், வாழ்க்கையையே பிரச்சினையாக்கி விடக்கூடாது.

Thursday, December 10, 2015

கையுறை அணிந்து கழிவகற்றும் சகோதரனே!

கையுறை அணிந்து
கழிவகற்றும் சகோதரனே! – உன்
நன்மாராயப் பலகையில்
மெய்யுரை எழுதுகிறாய் நீ!

செத்த பிராணிகள்
சீரழிந்த குப்பைகள்
சாக்கடை சகதி
துர்நாற்ற வீச்சம்
இவை யாவும் – உன்
ஆவேச வீரியத்தின் முன்
வெறும் துச்சம்

Sunday, December 6, 2015

மெய் சிலிர்க்கிறது

மெய் சிலிர்க்கிறது
உள்ளம் உருகி ஓடுகிறது

கருணை கண்டு
கருணை பொங்கி
கண்கள் கழன்று விழுகின்றன

எங்கும் நிறைந்து தமிழன்
சாதி மதம் பாராமல்
தன் உறவுகளுக்கு
உதவித்தள்ளுகிறான்
விடாப்பிடியாய்

மழை வெள்ளக் கேடுகளை
தூக்கிப் போட்டு மிதித்து
வெல்கிறான்

மிகப் பெரிய
நம்பிக்கையையல்லவா
இந்த மழை
நமக்குக் கொடுத்துவிட்டது

சென்னையில்
ஒட்டியும் ஒட்டாமல் வாழும்
ஒய்யார மக்களையும்
இப்படி
ஒட்ட வைக்கும் பசையையா
நீ பொழிந்தாய் மழையே
நீ வாழி

அன்புடன் புகாரி  

Anbudan Buhari

* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *
http://anbudanbuhari.blogspot.in/
-------------------------------------------------------------

Saturday, December 5, 2015

Friday, December 4, 2015

மிதக்கிறது எங்கள் நகரம்..!


மிதக்கிறது எங்கள் நகரம்..!
தவிக்கிறது எங்கள் உள்ளம்.!

புசிக்கவோ- பருகவோ ஏதாகிலும் கிடைக்குமா
என்கிற நப்பாசையில் எம் நாவுகள்..!!

எதுகை மோனைகளை ரசிக்கும்
நிலையிலில்லை நாங்கள்..!

மழையைத்தா - ஆண்டவனே.!
என்பதாய் - ஏங்கும் ஊரார் எவர்க்கேனும்
எங்கள் மழையை, தாராளமாய் தானம் செய்ய
இதோ நாங்கள் தயார்.!

மனிதனை மனித நேயத்தால் அரவணைப்போம்!

by Yasar Arafat
 
கடந்த நாட்களாக முகனூல் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதையும், உதவி தேடுவதையும் அதிகமதிகமா பார்த்துக்கொண்டு வருகிறேன்.

நிவாரண உதவிக்கு நாமும் அங்கு இருக்கமுடியவில்லையே எனும் கவலையும், பாதிக்கப்பட்ட மக்களின் புகைப்படமும், அதற்காக சுழன்று சுழன்று உதவி செய்யும் இஸ்லாமிய இயக்கங்கள், தன்னார்வத் தொண்டுகள், தனி நபர் முயற்சி, முகனூல் நண்பர்கள், ட்விட்டர் நண்பர்கள்,பண உதவி செய்த நன் மக்கள் எனும் ஏகப்பட்ட செய்திகளில் நெகிழ்ச்சியில் கண்னீரை கசியவிட்டுத்தான் இருக்கிறேன்.

பாராட்டுவதற்கு இதுவா நேரம்? நிச்சயம் இதுதான் உகந்த தருணம்... அரசியல் சூழ்ச்சியாலும், மத துவேஷங்களாலும் கசப்புகளை கக்கிக்கொண்டிருந்த தருணத்தில் இப்படிப்பட்டதான உதவிகளால் மக்களின் மனதிலுள்ள கசடுகள் நீங்கும் அளவிற்கு ஒர் அற்புதம் நிகழ்ந்திருக்கிறது.

சாதி மத வேற்பாடுகளில்லாமல் மனிதனையும் மனித நேயத்தை மட்டுமே காணக்கிடைத்த ஒர் சம்பவம். நிச்சயம் மயிர்கால்கள் எழுந்து நிற்கும் ஒர் உன்னத உணர்வு எனக்குள்;

Monday, November 30, 2015

இயக்க வெறி

மக்களுக்குச் சேவை செய்வதாக, தொண்டு செய்வதாக நம்பிக் கொண்டு ஆளுக்கொரு இயக்கப் பெயரை வைத்துக் கொள்கிறார்கள். சிலர் அதை அரசில் பதிவு செய்து கொள்கிறார்கள். சிலர் பதிவு செய்யாமலும் செயல்படுகிறார்கள்.   உண்மையில் மக்களுக்கு ஏதாவதொரு உலகியல் பலனளிக்கும் செயல்களைச் செய்யவும் செய்கிறார்கள். அதனால் உலகில் பேர் புகழ் கிடைக்கவும் செய்யலாம். ஆனால் இதுவும் ஒரு மாயைதான் என்பதை அறியாமல் ஏமாறுகிறார்கள்.

ஷைத்தானின் மாய வலையில் வசமாகச் சிக்கிய அச்சகோதரர்கள் அவர்களின் கற்பனையில் உதிக்கும் ஓர் இயக்கப் பெயரைத் தேர்ந்தெடுத்து சூட்டிக் கொள்கிறார்கள். முன் சென்றவர்கள் உலகியல் ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்டு பொய்க் கடவுள்களுக்குச் சுயமாகப் பெயர் சூட்டி, பிரபல்யப்படுத்தி ஆதாயம் அடைந்தது போல், இவர்கள் கற்பனையில் உதித்தப் பெயர்களைத் தங்களின் இயக்கங்களுக்குப் பெயராகச் சூட்டி அவற்றைப் பிரபல்யப்படுத்தி உலகியல் ஆதாயங்களை அடைகிறார்கள்.

உண்மை எங்கேயும் எப்போதும் கைகொடுக்கும்

ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் ஈராக்கின் ஆளுநராக இருந்தான்.
பெரிய கொடுங்கோலன்.
பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றவன்.

அவனுக்கும் இப்னு கிர்ரிய்யா அல் ஹிலாலி என்ற அறிஞருக்கும் திருவிளையாடல் பட பாணியில் ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
கேள்விகளை ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் கேட்க இப்னு கிர்ரிய்யா பதில் சொன்னார்.

அழிவுக்குக் காரணம் என்ன ?
கோபம் !

அறிவின் அழிவுக்குக் காரணம் ?
தற்புகழ்ச்சி !

சாதாரண அறிவுக்கு அழிவு எது ?
மறதி !

Wednesday, November 25, 2015

ஹழ்ரத் அலி(ரலி) அவர்களை சந்தித்த 10 அறிஞர்கள் அவர்களிடம்,

ஹழ்ரத் அலி(ரலி) அவர்களை
சந்தித்த 10 அறிஞர்கள் அவர்களிடம்,

“நாங்கள் உங்களிடம் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்போம் அதில் எங்கள் 10 பேருக்கும் தனித் தனியே 10 பதில் தர முடியுமா?” என்று கேட்டார்கள்.

"செல்வம், அறிவு" இரண்டில் எது சிறந்தது? ஏன்? இதுதான் கேள்வி என்றார் அறிஞர்களில் ஒருவர்.

ஹழ்ரத் அலி (ரலி) அவர்கள் 10 பேருக்கும் 10 பதில் சொன்னார்கள், அவை

மனிதம்

ஆலிம் புலவர்
எஸ். ஹூஸைன் முஹம்மது
ஹக்கிய்யுல் காதிரிய்யுல் மன்பயீ,திண்டுக்கல்
----------------------------------------


மனிதம் அன்பின் மறுபெயரா

  மனதில் கசியும் வாசனையா

குணத்தால் எழுப்பிடும் கோபுரமா

  குளிர்ந்த பண்பின் கூறுகளா



உனது எனது என்பதெலாம்

  ஓய்ந்தபின் தோன்றும் உயிர்சுகமா

அனைத்து உயிரும் தன்னுயிராய்

  ஆராதிக்கும் தவநிலையா?


Monday, November 23, 2015

மழை நீர் ....சேமிப்பு எப்போதும் வேண்டும் !...

மழை நீரை சேமிக்க வழியில்லாததால் ...
பலரின் கண்ணீரை சேமிக்க வழியில்லையே !...

சொந்தமாய் வீடொன்று வேண்டுமென்றே ..
பலர் பள்ளத்தில் குடியேறி கைசேதப்பட்டார் !...

இயற்கையின் சீற்றத்தை தடுப்பார் யாரோ ?...
இடர்பாடின் வேதனையை குறைப்பார் யாரோ ?...

அரசியல் குடைக்குள் புகுந்துகொண்டு ...
அடுத்தவரை குறைபேசி திரிதல் கேடு !...

Saturday, November 21, 2015

பாரீஸ் முஸ்லிம் இளைஞர் ஏற்படுத்திய திடீர் பரபரப்பு:வீடியோ!



பாரீஸ்: பாரீஸில் முஸ்லிம் இளைஞர் ஒருவர்"நான் தீவிரவாதி இல்லை என்னை கட்டி அணைப்பீர்களா?" என்ற வாசகத்துடன் அமைந்த பதாகையை ஏந்தி நின்று அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

பாரீஸில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப் பட்ட பயங்கரவாத தாக்குதலில் 129 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ஒரு முஸ்லிம் இளைஞர் தன் கண்களை கட்டியப்படி, 'நான் தீவிரவாதி இல்லை, என்னை கட்டி அணைப்பீர்களா?' என்ற கோரிக்கை பதாகையுடன் நின்றிருந்தார்.

Monday, November 16, 2015

பள்ளிவாசல்


பள்ளிவாசல்
இது படைத்தவனின் வீடு..!

இது –
ஏகத்துவ அடிமைகள்
இபாதத்துத் தென்றலில்
இளைப்பாறும் பூஞ்சோலை..!

இது –
தேகப் பயிற்சிக்கூடம் அல்ல.
மனங்களின் –
யோகப் பள்ளிக்கூடம்..!

இஸ்லாம் – தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கும் மார்க்கம்!


இஸ்லாம் – தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கும் மார்க்கம்!

“எவனொருவன் அநியாயமாக மற்றொருவனைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான்”

“எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைத்தவரைப் போலாவார்”

ஆஹா என்ன அருமையான வாசகங்கள் என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா! ஆமாம்! இவைகள் சாதாரண மனிதரின் வாசகங்கள் அல்ல! மாறாக இது, மனித குலம் அனைத்தையும் படைத்த இறைவனான அல்லாஹ் மனிதர்கள் ஈடேற்றம் பெற அவன் இறக்கியருளிய அவனுடைய சத்திய திருவேதத்திலே “அநியாயமாக ஓர் உயிரைக் கொலைச் செய்வதைப்” பற்றி மனிதர்களுக்கு விடுத்த எச்சரிக்கைச் செய்தியாகும்.

Sunday, November 15, 2015

அதில் பங்கு வேண்டாம் !


உண்ணாமல் இருந்தாலும்
உன்னோன்பு ஏற்கலாகாதாம்
தண்மை குணங்களாக
தகுதி வரவேண்டும்

பொய்யான பேச்சுகளும்
பொய்யானநடவடிக்கைகளும்
மெய்யாக விட்டிட்டே
மேன்மை பெறவேண்டும்

வணக்கங்கள் எதற்காக ?
வல்லோனே கேட்க்கின்றான்
இணக்கமான குணமில்லை
எப்பொழுது மனிதத்தன்மை ?

பரந்த மனமில்லை !
பக்குவமும் இன்னுமில்லை !
அரவ குணங்களே
அப்பப்ப அரங்கேற்றம்

'எல்லாப் புகழும்
இறைவனுக்கே' என்றானே
வல்லோன் மொழிதனிலே
வாசிப்பு மட்டும்தானா !?

புறம்பேசுதல் நல்ல பழக்கமாகுமா.!?

அதாவது அடுத்தவன் குறை காண்பவன் அரை மனிதன் தன் குறை உணர்பவன் முழுமனிதன் என்று ஒரு பழமொழி சொல்வார்கள் இப்பழமொழி பெரும்பாலும் புறம்பேசும் மனிதர்களுக்கே மிகப் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
காரணம் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஏதாவது ஒரு ரீதியில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். அப்படிப்பார்க்கும்போது தன்னிடத்தில் பல குறைகளையும் வைத்துக்கொண்டு அடுத்தவர்களின் குறைகளை அடுத்தவர்களின் பிரச்சனைகளை, அடுத்தவர்களின் போக்குகளை அலசி ஆராய்ந்து அதைப்பற்றி புறம்பேசுவது என்பது எப்படி நல்ல பழக்கமாக இருக்கமுடியும்.?

Friday, November 13, 2015

இணைந்துக்கொள்ளுங்கள்...


அழுது பல நாள் ஆயிற்று;
இறுகிப் போய்விட்டனவோ
என எண்ணுமளவிற்கு
கண்களெல்லாம் வறட்சியாய்;

விழிகளை மெல்லமாய் மூடி
இதயத்தை சுழலவிட்டப்படி..

நான் ஏன் இங்கு இருக்கிறேன்
எதை எதை கடந்துவந்திருக்கிறேன்..

Thursday, November 12, 2015

‎மனித‬ மனங்கள் பலவிதம்..

ஒருவன் அமைதியா இருந்தா என்னடா ஊமை குசும்பம்
போல இருக்கானேன்னு
சொல்ல வேண்டியது...

கொஞ்சம் பேசி விட்டால் என்னடா இவன் ரெம்ப வாய் சவடால்னு சொல்ல வேண்டியது..

கொஞ்சம் சந்தோஷமா இருந்தா ரெம்ப செழிப்போன்னு நினைக்க வேண்டியது...

இறை இல்ல தேர்தலும், பொது நிர்வாக தேர்தலும்!


இறை இல்ல தேர்தலும், பொது நிர்வாக தேர்தலும்!
  Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) 

பொது நிர்வாக தேர்தல்கள் அதன் சட்ட, திட்டங்களுக்குள் அடங்கும். அதன் நிர்வாக அமைப்புகள் தமிழக பதிவுத்துறை சட்டம், 1975க்குள் உட்பட்டது. சில நிர்வாகம் கம்பனி சட்டத்திற்குட்பட்டு செயல்படும். அதன் சட்டத்தினை மீறும் செயலுக்கு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வழி வகுக்கும். அதில் உறுப்பினர் யார், யார் என்பது அந்த பொது நிர்வாகத்தில் தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கும்.

பள்ளி வாசல்களை வக்ஃப் சட்டம் மற்றும் ஸ்கீம் வழிமுறைகள் படி நிர்வாகித்து வருகின்றனர். சில இடங்களில் தனிப்பட்டவர்களே பள்ளிவாசல்களை நிர்வாகித்து வருகின்றனர்.

ஆனால் இறைவனின் இறை இல்லங்களில் நிர்வகிப்பது சம்பந்தமாக அல் குர்ஆனில் அத்தியாயம் 9 அத்தவ்பாவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

"இறை நிராகரிப்போருக்கு பள்ளி நிர்வாக நிர்ணயம் செய்யும் உரிமையில்லை." (அல்குர்ஆன் .9:17)

Wednesday, November 11, 2015

கலை என்பது எதைக் குறிக்கிறது?


(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு இறக்கி வைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள். (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க் கற்பனை செய்கின்றீர்களா?” அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்பவர்கள், மறுமை நாளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெருங்கிருபையுடையவனாக இருக்கின்றான். எனினும் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (அல்குர்ஆன் 10: 59,60)

ஹராமும், ஹலாலும் இஸ்லாத்தின் மிக முக்கிய அம்சங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எது அனுமதிக்கப்பட்டுள்ளது, எது தடுக்கப்பட்டுள்ளது என்பதை ஷரீஅத் நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறது. அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டது அனைத்துமே நமது நன்மைக்காத்தான் என்பது ஒரு சில விஷயங்களில் நமக்குப் புரிகிறது. பல விஷயங்களில் நமக்கு இது புலப்படமால் நன்மைகள் உட்புதைந்திருக்கிறது.

நஜ்ஜாஷி மன்னர் (அபீசீனியா)

 அடைக்கலம் கொடுத்தவர் இஸ்லாத்தில் ஐக்கியமான வரலாறு

இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் முஸ்லிம்கள் மக்காவில் பெரும் சோதனைக்கு ஆளானார்கள். இதிலிருந்து தங்களையும் தங்கள் கொள்கையையும் காத்துக் கொள்வதற்காக அபீசீனியாவிற்கு ஜாஃபர் பின் அபீதாலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைமையில் அடைக்கலம் தேடிச் சென்றார்கள்.

அப்போது அவர்களுக்கு அங்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது என்று சூழ்ச்சி செய்து, தடுப்பதற்காக மக்காவின் இணை வைப்பாளர்கள் ஒரு குழுவினரை அபீசீனியாவின் மன்னர் நஜ்ஜாஷி அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள்.

ஆனால் நஜ்ஜாஷி மன்னர், மக்கா இணை வைப்பாளர்களின் கோரிக்கையை நிராகரித்து முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு முன்னர் முஸ்லிம்களின் இந்த ஹிஜ்ரத் அமைந்ததால் இது முதல் ஹிஜ்ரத் என்று அழைக்கப்படுகின்றது.

Monday, November 9, 2015

மெஹர்

மிகையற்ற நடிப்பு; தொய்வின்றி இயல்பாக நகரும் காட்சிகள்; திரைப்படங்களில் செயற்கையாகத் தென்படும் முஸ்லிம்களின் வசனம் போலன்றி இயல்பாக அமைந்திருந்த முஸ்லிம் கதாபாத்திரங்களின் உரையாடல் என்று நிறைய ப்ளஸ்.
-நூருத்தீன்
http://darulislamfamily.com/reviews-t/our-reviews/595-mehar-review.html
http://www.hotstar.com/#!/watch-meher.



ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இணைய தளம்

இது ஒரு பொழுது போக்கு இணைய‌ த‌ள‌ம‌ல்ல‌, பொழுது போய்க்கொண்டிருப்ப‌தைப் ப‌ற்றி எச்ச‌ரிக்கும் இணைய‌ த‌ள‌ம். http://www.tamilislamicaudio.com/default.asp

ஆடியோ கட்டுரைகள் மீடியா புத்தகங்கள்
குர்ஆன் தர்ஜுமா சமுதாயம் குறு வீடியோ (Flash) நபி (ஸல்) வரலாறு
குர்ஆன் விளக்கவுரை தமிழக முஸ்லீம்கள் புகைப் படங்கள் காலித் பின் வலீத் (ரலி) (Eng)
நபி (ஸல்) வரலாறு இந்திய முஸ்லீம்கள் வால் பேபர் தமிழ் புத்தகங்கள்
ரியாளுஸ்ஸாலிஹீன் ஸஹாபாக்கள் பிளாஷ் புத்தகம்  
கேள்வி பதில்கள் ரமளான் பதிவிறக்கம் Moulana Tariq Jameel (Urdu)
அழகிய நற்குணங்கள் ஹதீஸ் / சமுதாயம்    
துஆ    


Sunday, November 8, 2015

நான் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நூலிலிருந்து....-Abu Haashima






" ஆது மகன் சத்தாது
குலவலிமைப் பெருவாழ்வு
அழியாமல் நிலை நின்றதோ ? "
ஹனிபா அண்ணன் பாடிய இந்தப் பாட்டு
அடிக்கடி காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

யார் இந்த சத்தாது ?
நூஹு நபி ( அலை ) அவர்களின் மகனான சாமின் மகன் இறாம் என்பவரின் எட்டு ஆண் மக்களின்
வழித் தோன்றல்கள்தான் இந்த ஆது கூட்டத்தார்.

யமனிலிருந்து இராக் வரை இவர்களின் நாடு விரிந்திருந்தது.
இவர்கள் வலிமை மிக்கவர்கள். பெரும் உருவம் உள்ளவர்கள்.
பெரிய பெரிய பாறைகளை தலையில் சுமந்து வரும் ஆற்றலுள்ளவர்கள்.
எதிரிகளின் தலையில் பெரும் கற்களைப் போட்டுக் கொல்லும் சக்தி உள்ளவர்களாக இவர்கள் இருந்ததால் இவர்களை யாரும் வெல்ல முடியவில்லை.
இவர்களின் குட்டி தெய்வங்கள் ஸதாஉ , சமூத் மற்றும் ஹபாஉ .
இவர்கள் கட்டிய கோட்டையின் உள்ளே இவர்கள் வசதியாக வாழ்ந்து வந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

Thursday, October 29, 2015

இஸ்லாம் விரும்பும் முஸ்லிம்

விழிப்புணர்வுள்ள இறைநம்பிக்கையாளர்

முஸ்லிமிடம் இஸ்லாம் விரும்பும் முதல் பண்பு அவர் அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப ஈமான் கொண்டு,
அவனுடன் உறுதியான உறவைக் கொண்டிருத்தலாகும். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து, அவனை சதாவும் நினைவு கூர்ந்து காரணங்களைக் கையாள்வதுடன், அல்லாஹ்விடம் உதவியும் தேடவேண்டும். அவன் எவ்வளவுதான் உழைத்தாலும் தனது உள்ளத்தின் ஆழத்தில் அல்லாஹ்வின் உதவி, உபகாரத்தின்பால் அனைத்து நிலையிலும் தேவையாகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

Tuesday, October 27, 2015

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..

அவனுக்கு என்னச் செய்வது என்றுத் தெரியவில்லை..

பலதடவை சொல்லியாகி விட்டது.பிடிவாதம் குறையவில்லை..

"உங்க தம்பி கல்யாணத்துக்கு கலந்துக்கணும்னா 4 பவுன் நகை வாங்கி தரணும்" னு அடம் புடிச்சா எப்படி..

மாச சம்பளம் வாங்கித் தான் காலம் ஓடுது..
என்னச் செய்ய
அவனுக்கு தெரியும் மனைவியின் பிடிவாதம்..என்ன செய்வது..

புரிந்துக் கொள்ளவே முடியவில்லை..அவளை

களப்பணியில் ஆலிமாக்கள்


களப்பணியில் ஆலிமாக்கள்


ஆலிமா என்பவர் யார்? குர் ஆன் வசனங்கள், ஹதீதுகள், இஸ்லாமிய சட்டங்கள், வழிமுறைகள், நபிமார்களின் வரலாறுகள், பற்றி முறையாகப் படித்து அறிந்தவர். இஸ்லாமியச் சமுதாயத்திற்கு இஸ்லாம் குறித்த வழிகாட்டியாக இருப்பவர். சுருக்கமாகச் சொன்னால், நபி(ஸல்) அவர்கள் எப்படி இறைவனிடமிருந்து தாம் பெற்ற செய்தியை, தன் உம்மத்துகளுக்கு எத்தி வைத்தார்களோ, அதே பணியை இன்றைய காலத்தில் அதன் வரைமுறைக்குட்பட்டு, தொடர்பவர்கள்தான் ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்கள்.

ஆலிமாக்களுக்குரிய பொறுப்புகள்:

ஒரு மதரஸாவில் சிற்சில மாணவிகளுக்கு குர் ஆன் ஓதக் கற்பித்தல் என்பது மட்டுமே என்பதாகத்தான் மக்களின் புரிதல் இருக்கிறது. இத்தகைய எண்ணத்தைத் தோற்றுவித்ததற்கு ஆலிமாக்களின் செயல்பாடுகளும் ஒரு முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது.

ஆலிமாக்களும் ஆசிரியர்களே. பணம் சம்பாதிக்க மட்டுமே உதவுகிற ஏட்டுக் கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்களே ‘குரு’வாக மதிக்கப்படும் இந்நாளில், ‘வாழ்வியல் நெறி’யைப் போதித்து வாழ்க்கையைச் செம்மைப்படுத்தக்கூடிய திறனுடைய ஆலிமாக்கள் அதனினும் மேலானவர்கள். சுருங்கச் சொன்னால், ‘தன் பலமறியா யானை’ போன்ற சூழலில் இருப்பவர்கள் அவர்கள்.

ஆலிமா என்ற சொல், ‘இல்ம்’ – அறிவு என்ற சொல்லை வேர்ச்சொல்லாக உடையது. அறிவை உடையவர்கள் ஆலிமாக்கள். அந்த அறிவைப் பரப்ப வேண்டிய கடமைப்பட்டவர்கள். ”ஒரு ஆண் கல்வி கற்றால் அது அவனுக்கு மட்டுமே பயன் தரும். ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு குடும்பம் முழுதும் கற்றமைக்குச் சமம்” என்பது இந்த வாழ்வியல் நெறி போதிக்கும் கல்விக்குத்தான் சிறப்பாகப் பொருந்தும்.

சமூகத்தில் பெண்கள்:
 

நபி(ஸல்) அவர்களின் காலத்தில், ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் அறிவு தேடலில் ஈடுபட்டார்கள். சமூகத் தளங்களில் பணியாற்றியுள்ளார்கள். பொருளீட்டலில் ஈடுபட்டுள்ளார்கள். நபியவர்களின் மனைவியரான கதீஜா(ரலி) மற்றும் ஜைனப்(ரலி) அவர்களும் வியாபாரம் செய்து பொருளீட்டியுள்ளனர். ஆயிஷா(ரலி) அவர்கள் ஹதீதுகள் சேகரித்துக் கொடுத்து, அறிவுப் பணி செய்துள்ளார்கள். அக்காலத்து நபித்தோழியர்கள் எனப்படும் ஸஹாபியப் பெண்கள் பலரும் வீட்டோடு தம் கடமைகளைச் சுருக்கிக் கொள்ளாமல், போர்க்களம் வரை தன் கடமைகளைச் செவ்வனே செய்திருக்கிறார்கள்.

Monday, October 26, 2015

கீழக்கரையில் இன்றும் சிறப்புற நடை பெற்று வரும் சங்கு முத்து வணிகம் - வரலாற்று பார்வை !

கீழக்கரை கடற்பகுதி முத்துக் குளித்தலில் உலகளாவிய புகழ் பெற்று இருந்தது. கீழக்கரையில் ஆதி காலம் முதற் கொண்டு சிறப்பாக நடந்து வந்த முத்து, சங்கு குளித்தல் பற்றி கி.பி. 80 ஆம் வருடத்தில் வாழ்ந்த பெரிப் புளூஸ்,  கி.பி.130 ஆம் வருடத்தில் வாழ்ந்த தாலமி போன்ற வரலாற்று அறிஞர்களும்,  கி.பி.6 ஆம் நூற்றாண்டில்; வாழ்ந்த எகிப்து நாட்டு பயணி காஸ்மாஸ் இனிகோ பிளஸ்டாஸ் உள்ளிட்டோரும் தங்கள் ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் முதல் முதலாகக் காலனிய ஆட்சியை நிறுவியவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். 16ஆவது நூற்றாண்டில் இராமேஸ்வரம் தொடங்கி, கன்னியாகுமரி வரையிலான கடற்கரைப் பகுதியில் காலூன்றி அப்பகுதியில் ஆட்சி செலுத்தியவர்கள். கி.பி.1658இல் டச்சுக்காரர்கள் நிகழ்த்திய படை யெடுப்பிற்குப் பின்னரே இவர்களின் ஆதிக்கம் மறைந்தது.

Sunday, October 25, 2015

பார்க்க தெரிந்தால் பாதை தெரியும், பார்த்து நடந்தால் பயணம் தொடரும் !

நிர்பந்தங்கள் யாருக்கில்லை? பிறந்து விட்ட செயலே நாம் விரும்பி என்றில்லாத போது அதுவே வாழும் நிர்பந்தமாகிப் போகையில், வாழ்வில் நடப்பது எல்லாமும் நிர்பந்தம் என்று பொதுவில் சொல்லி வைப்பது கூட ஏற்கப்படும் ஒரு கருத்துதான்.

பொருள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தலையில் தானாய் ஏறி அமர்ந்துவிடும் பொறுப்புக்களுக்காக கடமைகளை நிறைவேற்றுவது நிர்பந்தம் என்றால், துன்பங்கள் துயரங்களைக் கண்டு வாழ்வை நாமாக முடித்துக் கொள்ள முடியாத வாழ்நிலையும் நிர்பந்தமே. இதில் இறைவனுக்குச் செலுத்தும் நன்றியும் வணக்கமும் கட்டாய நிர்பந்தம் என்கிற நிலையில், இன்னபிற கடமைகளை செய்து முடிக்க நேர்மை வழியில் காசு சம்பாதிப்பதும் நிர்பந்தம் என்றாகிப் போகிறது

Tuesday, October 20, 2015

பொறுப்புணர்வும், பொதுநலமும்

 ஒரு சமூகம், சீரானபாதையில்  பயணிக்க செயல்ரீதியாக, ஒரு தலைமைகளை கட்டமைத்தல், அந்த சமூகத்திற்கு அவசியமாகும்.தலைமைத்துவ,மேளான்மைத்துறை சார்ந்த பண்புகள் கொண்டவரை, இனங்கண்டு அவரை சமூகம் தலைமைக்கு தேர்ந்தெடுப்பதில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு பிறகு இஸ்லாத்தையும், இஸ்லாமிய கலாச்சாரம், நாகரீகம், சமூககட்டமைப்பு,   என்பவற்றை பேணிக்காக்க ஒரு வழுவான தலைமையின் இருப்பு குறித்த விழிப்பனர்வு,  இஸ்லாமிய சமூகத்திற்கு தேவையான ஒன்றாக உள்ளது .

Monday, October 19, 2015

இஸ்லாம் அழைக்கிறது கடவுள் ஒருவனே!

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
கடவுள் பற்றி மக்கள் மத்தியில் பல கருத்துக்கள் நிலவுகின்றன.

சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். மற்றும் சிலர் கோடான கோடி கடவுள்கள் இருப்பதாக நம்புகின்றனர். வேறும் சிலர் மனிதர்களில் சிலரைக் கடவுளின் அவதாரம் என்கின்றனர். இன்னும் சிலர் மனிதர்களில் சிலரையே கண் கண்ட கடவுளாக வழிப்பட்டு வருகின்றனர்.

இஸ்லாம் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று கூறுவதுடன் பல தெய்வ நம்பிக்கையைப் பலமாக எதிர்க்கின்றது. அத்துடன், மனிதன் கடவுளாகவும் முடியாது. கடவுள் மனித அவதாரம் எடுப்பதும் இல்லை எனக் கூறி கடவுளின் பெயரால் அரங்கேற்றப்படும் அத்தனை மூடநம்பிக்கைகளையும் அடியோடு மறுக்கின்றது.

Sunday, October 18, 2015

நீ செய்து விட்டு என்னிடம் கூறு’


நீ செய்து விட்டு என்னிடம் கூறு’ என்று தத்துவம் பேசுபவர்கள் அறிவாளிகளா?.... இது பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.... தயவு செய்து முழுவதும் படியுங்கள்... நல்லதொரு படிப்பினையாகவே இருக்கும் இன்ஷாஅல்லாஹ்....

“நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள். செய்யாததை சொல்வது இறைவனிடம் வெறுப்புக்குரியதாகும்.” (அல் குர்ஆன் 61:2,3)

இரண்டு விதமான சொற்சொடர்களை இந்த வசனம் தடுக்கின்றது.

1. தாம் செய்யாததை செய்ததாகக் கூறி பெருமையடித்துக் கொள்வது
2. தாம் செய்யாமல் பிறரை செய்யும் படி தூண்டுவது.

இஸ்லாத்தைப் பொருத்தவரை எடுத்துச் சொல்வதை விட வாழ்ந்துக் காட்டுவதே மிக சிறந்த செயலாகவும் முன் மாதிரியாகவும் கருதப்படும்.

தோழர்கள் - 1 - ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பரவலாக அறியப் படாத நாயகர்கள் வரலாற்றில் நிறையப் பேருண்டு. அவர்களுள் தியாகமும் நேர்மையும் எளிமையும் வாய்மையும் வாய்க்கப் பெற்று அவற்றைத் தம் வாழ்வில் வாழ்ந்து காட்டிய நபித்தோழர்கள் பலரை நம் சமுதாயம் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறதா என்பது ஐயமே!

அந்தக் குறையைப் போக்கும் முகமாக சத்தியமார்க்கம்.காம் தளத்தின் மூலம் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான சிறந்த எழுத்தாளரான சகோதரர் நூருத்தீன், "தோழர்கள்" எனும் தலைப்பில் தொடராகப் பல வரலாற்று நாயகர்களை இன்ஷா அல்லாஹ் அறிமுகப் படுத்தவிருக்கிறார்.

பொதுவாக, வரலாறு என்பது வாசிப்பதற்கு மட்டுமன்று; எடுத்தும் தடுத்தும் வாழ்வதற்கான வழிகாட்டல் நிறையப் பெற்றதே வரலாறு என்பதாகும்.

வாருங்கள் வாசிப்போம்; முற்றாக இயலா விட்டாலும் முடிந்தவரை வாழ்ந்து விடுவோம்!

1. ஸயீத் இப்னு ஆமிர்سعيد ابن عامر (ரலி)

உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த காலகட்டம். சிரியாவின் ஹிம்ஸ் பகுதியிலிருந்து பிரதிநிதிக்குழு ஒன்று மதீனாவிற்கு வந்திருந்தது. அனைவரும் உமர் (ரலி) அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்கள். தனது கருவூலத்திலிருந்து உதவி வழங்க, ஹிம்ஸுப் பகுதியில் ஏழையாய் உள்ளவர்களின் பட்டியல் ஒன்றை அளிக்கும்படி அவர்களிடம் கேட்டார் உமர் (ரலி).

Saturday, October 17, 2015

வட்டியில்லா வங்கி இந்தியாவில் சாத்தியமா ?

  கடின உழைப்பின் மூலம் பெறும் ஊதியத்தை வாங்கிய கடனுக்காக மாதந்தோறும் வங்கிகளில் வட்டியாகச் செலுத்துவது நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிகரித்து விட்டது. வட்டிக்கு வட்டி, கந்து வட்டி, ஸ்பீடு வட்டி எனப் பல வடிவிலான வட்டிகளால், வட்டிக்கு கடன் வாங்கியவர்கள் தங்களின் உயிர்களை மாய்த்துக் கொள்ளும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளே, கடனில் சிக்கித் தவிக்கின்றன. இதனால் அந்த நாடுகளின் வளர்ச்சி தடைபடுகிறது. அப்படி வட்டிக்கு கடன் வாங்கும் வங்கிகளே பொருளாதார நெருக்கடியால் திவாலாகிப் போவதை வரலாறு பதிவு செய்துள்ளது.

Monday, October 12, 2015

அழிவின் விளிம்பில் ‘அரபுத் தமிழ்' - பாதுகாக்க இஸ்லாமிய அறிஞர்கள் கோரிக்கை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அழிவின் விளிம்பில் ‘அரபுத் தமிழ்' - பாதுகாக்க இஸ்லாமிய அறிஞர்கள் கோரிக்கை

எஸ்.முஹம்மது ராஃபி




                                                                         கீழக்கரையில் உள்ள அரபுத் தமிழ் கல்வெட்டு
 

தமிழகத்தில் அரபுத் தமிழ் மொழி சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. அதை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூகத் தொடர்புக் கருவியான மொழியும் சமூகத்தைப் போல் மாற்றத்துக்குட்பட்டது. அரசியல், சமய, சமூக வணிகத் தொடர்பு களால் வசதிக்கேற்ப வழங்கியும், வாங்கியும், வாழ வேண்டிய நிலை மொழிகளுக்கும் ஏற்படுகிறது.

சமணர் மற்றும் வைணவர் தொடர்பால் பிராகிருதமும், சமஸ் கிருதமும், அரேபியர் மற்றும் இஸ் லாமியர்கள் தொடர்பினால் அரபி யும், பார்சியும், துருக்கியும், ஆங்கி லேயர் மற்றும் பிரெஞ்சு ஆதிக்கத் தினால் ஆங்கிலமும், பிரெஞ்சும் இந்திய மொழிகளில் கலந் துள்ளன.

Monday, October 5, 2015

விருந்தோம்பல் எனும் உயர் பண்பு …!

விருந்தோம்பல் எனும் உயர் பண்பு …!

சிராஜுல் ஹஸன்

  “இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்காங்க. ஏதோ வந்தமா பாத்தமா என்று போய்க்கிட்டே இருக்கச் சொல்லுங்க. இங்க டேரா போடுற வேலையெல்லாம் வேண்டாம்.”

  இன்று பெரும்பாலான வீடுகளில் இத்தகைய உரையாடல்களைப் பலரும் கேட்டிருக்கலாம். ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா? இறைவன் மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டிருப்பவர் தம் விருந்தினரை நன்றாக உபசரிக்கட்டும்.

  அது மட்டுமன்று விருந்தினரை எப்படி உபசரிக்க வேண்டும், எப்படி வரவேற்க வேண்டும் என்றெல்லாம் கூட அண்ணலார் கற்றுத் தந்துள்ளார்கள். நம் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் முதலில் அவருக்கு முகமன் கூறி வரவேற்று நலம் விசாரிக்க வேண்டும்.

  குர்ஆன் கூறுகிறது : “இப்ராஹீமிடம் வந்த கண்ணியத்துக்குரிய விருந்தாளிகளின் செய்தி உமக்குக் கிடைத்ததா? அவர்கள் அவரிடம் வந்த போது ‘உம்மீது சாந்தி நிலவட்டும்’ என்று அவர்கள் கூறினார்கள். அவரும் ‘உங்கள் மீதும் சாந்தி நிலவட்டும்’ என்றார்.” (51:24-25)

Sunday, October 4, 2015

வெளிநாட்டில் இருந்து கொண்டே உள்ளூரில் உங்கள் பெயரில் சொத்து வாங்கலாம்

By Noorul ibn Jahaber Ali
வெளிநாட்டில் இருந்து கொண்டே உள்ளூரில் உங்கள் பெயரில் சொத்து வாங்கலாம் 

 பெரும்பாலானவர்கள் வேலைக்காக வெளிநாட்டில் வசிக்கின்றனர். இவர்களில் தன்னுடைய பெயரில் வீட்டு மனை அல்லது வீடு வாங்க முயற்சிக்கும் போது வெளிநாட்டில் இருந்து கொண்டே நம்முடைய பெயரில் சொத்துக்களை இந்தியாவில் வாங்க முடியும்.
அதற்கான வழிமுறைதான் இந்த ஜெனரல் பவர் ஆஃப் அட்டார்னி
Power of (General Attorney (GPA or GPOA) or Purchase Power.
தேவையான ஆவணங்கள்
பவர் எழுதி கொடுப்பவரின் (Principle)
புகைப்பட அடையாளச் சான்று
இருப்பிடச் சான்று
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 மட்டும்
ரூபாய் 20-க்கான முத்திரைத் தாள் (பத்திரம்)
பவர் ஏஜண்ட் (எழுதி வாங்குபவர்)-ன்
புகைப்பட அடையாள அட்டை ( Photo identity proof)
இருப்பிடச் சான்று (Residence Proof)
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 1 மட்டும்
இரு அத்தாட்சிகளின் (Two witness)
புகைப்பட அடையாளச் சான்று (Photo ID proof)
இருப்பிடச் சான்று (Residential proof)
இந்த ஆவணங்களை தங்களது சொந்த ஊரில் (தமிழ்நாட்டில்) இருக்கும் போதே SUB_REGISTRAR OFFICE (சார் பதிவாளர் அலுவலகம்) தாக்கல் செய்யலாம்.

தன்னம்பிக்கை தாரக மந்திரம்


பிரச்சினைகள்,சோதனைகள் யாருக்கு தான் இல்லை..
எல்லோரும் ஏதாவது ஒரு பிரச்சினையோடு தான் இருக்கிறார்கள்..

அப்படி அதீத மன உளச்சலோடு இருப்பவர்கள் சில நேரங்களில் தவறான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள்..

இறைவன் தருகின்ற சோதனைகள் தான் இது..

அச்சத்தினால்,பசியினால்,பொருட் சேதத்தால்,உயிர் சேதத்தினால் சோதிப்பதாக அவனே கூறுகிறான்..

அதனால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று உதட்டளவில் சொல்லிக் கொண்டாலும் உணர்வுகளை தடுத்து நிறுத்த முடியாது..

Saturday, October 3, 2015

பெண்ணே ! பெண்ணே !...

கூடை மலர்கள் தூவித் ..தூவித் ...தூவி ...
உனக்கான பாதைகள் அலங்கரித்திருந்தாலும் ....
வார்த்தை முட்களைப் பரப்பித்தான் ...
அடியெடுத்து வைக்கிறாய் மகளே !....

பேசாத மொழிகளும் ,பார்க்காத விழிகளும் ..
உன்னை பாரினில் உயர்த்திவிட்டாலும் .....
அதிகப் பேச்சும் ,ஆணவத் திமிரும் ..
உன்னை அடக்கப் படுத்திவிடும் மகளே !....

Thursday, October 1, 2015

இன்ப துன்பம்

உலகத்தில் நாம் பரவலாக பார்க்கும்போது இன்பமும் துன்பமும் இருக்கிறது. இந்த உலகத்தில் மனிதனுக்கு, விருப்பத்திற்கு உட்பட்டவைகளும் சம்பவிக்கின்றன.
ஆக இன்பம் துன்பம் விருப்பு வெருப்புகள் ஆகிய எல்லாமே நிறைந்ததுதான் வாழ்க்கை. ஆனால் உலகில் ஒவ்வொரு தனி மனிதனும் “நம் வாழ்வில் இன்பமும் இருக்கிறது. துன்பமும் இருக்கிறது. எது அதிகம்? என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ளும் போது” ஒவ்வொருவனும்90% க்கு மேல் இன்பத்தை அனுபவிக்கிறார்கள். ஒரு 10%க்கும் குறைவாகவே துன்பம் அவனது வாழ்வில் அவ்வப்போது தலை காட்டுகிறது” என்பதை புரிந்து கொள்வான்.

Tuesday, September 29, 2015

ஜமாஅத் நிர்வாகம் ஒரு அமானத் !.....



  எல்லா ஜமாஅத் நிர்வாகிகளுக்கும் அதன் மக்களாகிய நம் அனைவருக்குமான ஒரு நினைவூட்டலே இந்த பதிவு...

  மக்களினால் வழங்கப்பட்ட அமானிதத்தை ஜமாஅத் நிர்வாகம் நிச்சயம் பாதுகாக்க வேண்டும்!.. குறிப்பாக நிர்வாகத்தின் தலைவராக செயல்படுகிறவர் இதனை நன்றாக உணர்ந்து செயல்படவேண்டும் !...

“விசுவாசிகளே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் ஒப்படைத்து விடுமாறும், மனிதர்களுக்கிடையில நீங்கள் தீர்வு கூறினால், (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் செவியேற்கிறவனாக, பார்க்கிறவனாக இருக்கின்றான்.” ( சூரத்துல் நிஸா: 58)

Monday, September 28, 2015

என்னென்று நான் சொல்லலாகுமா ?


என்னென்று நான் சொல்லலாகுமா ?
முன் குறிப்பு- Continue reading...ஆ...அதற்கு வேறு ஆளை பாரப்பா என்று விலகிப் போவோரையும் இம்முறை நான் விரும்பியே அழைக்கின்றேன். காரணம் இறைவனின் இருப்பை உறுதி செய்யும் பதிவு இது, எல்லோருக்கும் புரிகிற எளிய சம்பவங்களை கையாண்டு அவைகளைக் கொண்டு விளக்கிட நான் பிரயாசை பட்டிருக்கிறேன், தயவு செய்து படியுங்கள், மனம் தெளிவடையுங்கள், அல்லாஹ் நம் அனைவரின் நம்பிக்கையையும் பொருந்திக் கொள்வானாக, ஆமீன்.- Raheemullah Mohamed Vavar

இறைவன் என்பவன் யார்? அவன் என்னதான் செய்து கொண்டு இருக்கிறான்? சொல்லப்படும் ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரம் நபிமார்களையும் படைத்து, நான்கு வேதங்களையும் இம்மண்ணில் இறக்கி வைத்து, சொர்க்கத்தையும் நரகத்தையும் ஏற்படுத்தி, நேர்வழி பெற்றோர்க்கு சொர்க்கமென்றும், வழி பிறழ்ந்தோர்க்கு நரகமென்றும் சொல்லி வைத்து, இவ்வுலகை அன்றிலிருந்து இனி முடியும் நாள் வரை பரிபாலித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்பவனின் உண்மை நிலைதான் என்ன, அவனின் தன்மைகளும்தான் என்ன ?

வேற்று கிரகவாசிகள்!



  ரஹ்மத் ராஜகுமாரன் 

'(மனிதர்களே! இவ்வாறு நாம் உங்களை மட்டுமா சிருஷ்டித்திருக்கின்றோம்?) நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு வானங்களையும் நாமே சிருஷ்டித்தோம் (அவை ஒவ்வொன்றிலும் உங்களைப் போன்ற எத்தனையோ சிருஷ்டிகள் இருக்கின்றன. இவைகளைச் சிருஷ்டித்திருப்பதுடன்) இச்சிருஷ்டிக(ளுக்கு வேண்டியவைக)ளைப் பற்றி நாம் பராமுகமாகவும் இருக்கவில்லை (அவைகளுக்கு வேண்டியவை அனைத்தும் முழுமையாக நாம் படைத்தும் இருக்கிறோம்' (அல் குர்ஆன் 23:17)

"அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்" (1:1)

உலகங்களை உருவாக்கிப் பரிபாலித்துவரும் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (1:1)

திருக்குர்ஆனின் 6666 வசனங்களில் முதன்மையான இவ்வசனமே வியப்புக்குரிய வசனம். இவ்வசனத்தில் 'ஆலமீன்' என்கிற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். 'ஆலம்' என்றால் உலகம். ஆலமீன் என்றால் உலகங்கள் என்று பொருள்.அன்று, 'நம் பூமி என்கிற இந்த உலகம் தவிர இன்னும் நிறைய உலகங்கள் உண்டா? என்று அப்போதே உலகம் கேள்வி கேட்டு, மானிட உலகம், ஜின்களின் உலகம், மலக்குகளின் உலகம், பிராணிகளின் உலகம், தாவரங்களின் உலகம் என்று பதில் சொல்லி சமாதானமாகிக் கொண்டது.

Sunday, September 27, 2015

இஸ்லாமிய விரோத வலைத் தளங்களை எவ்வாறு கையாள்வது?

ஏ.பி.எம். ஆஸிம், BBA
தற்காலத்தில் இஸ்லாமிய விரோத வலைத் (Anti- Islamic sites) தளங்கள் தாராளமாக மலிந்துவிட்டன. இஸ்லாமிய விரோத பிரசாரம் என்பது இன்று நேற்று துவங்கியதொன்றன்று, இஸ்லாம் தோன்றிய காலம் முதல் இந்த செயற்பாடுகளும் துவங்கிவிட்டன.

ஆனால் தொழில் நுட்ப வளர்ச்சியுடன் இந்த இஸ்லாமிய விரோத சக்திகளின் செயற்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. சாதாரண ஈமானிய உணர்வு உள்ளவனே கொதித்தெழுகின்ற அளவுக்கு இவர்களது செயற்பாடுகள் வியாபித்து விட்டன.

அந்த வகையில் தற்காலத்தில் சமூக வலைத் தளங்களில் ( குறிப்பாக Facebook) இத்தகைய இஸ்லாமிய விரோத பக்கங்களைத் (Anti- Islamic Pages)தாராளமாக பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

ஒரு இஸ்லாமிய உணர்வுள்ளவனாக இத்தகைய இஸ்லாமிய விரோத வலைத் தளங்களை எவ்வாறு கையாள முடியும்? என்பது பற்றி சில ஆலோசனைகளை இங்கு முன்வைக்க முனைகிறேன்.

இனிய திசைகள் மாத இதழ்

  1. இனிய திசைகள், செப்டம்பர் 2015
  2. இனிய திசைகள், மே 2015 இதழ்
  3. இனிய திசைகள், ஏப்ரல் 2015 இதழ்
  4. இனிய திசைகள், மார்ச்.2015 இதழ்
  5. இனிய திசைகள், பிப்ரவரி.2015 இதழ்
  6. இனிய திசைகள், ஜன.2015 இதழ்
  7. இனிய திசைகள்,டிசம்பர்’2014 இதழ்
  8. இனிய திசைகள் நவம்பர்’ 2014 இதழ்
  9. இனிய திசைகள்,அக்,2014 இதழ்
  10. இனிய திசைகள், செப். 2014 இதழ்
  11. இனிய திசைகள் -ஆகஸ்ட் 2014 இதழ்
  12. இனிய திசைகள் – ஜூலை 2014 இதழ் 
  13. இனிய திசைகள் – ஜூன் 2014 இதழ் 
  14. இனிய திசைகள் – மே 2014 இதழ்
  15. இனிய திசைகள் – ஏப்ரல் 2014 இதழ்
  16. இனிய திசைகள் – மார்ச் 2014 இதழ்
  17. இனிய திசைகள் – பிப்ரவரி 2014 இதழ்
  18. இனிய திசைகள் – ஜனவரி 2014 இதழ்
  19. இனிய திசைகள் – டிசம்பர் 2013‏ இதழ்
  20. இனிய திசைகள் – நவம்பர் 2013‏ இதழ்
  21. இனிய திசைகள் – அக்டோபர் 2013‏ இதழ்
  22. இனிய திசைகள் – செப்டம்பர் 2013‏ இதழ்
  23. இனிய திசைகள் – ஆகஸ்ட் 2013‏ இதழ்
  24. இனிய திசைகள் – ஜூலை 2013‏ இதழ்
  25. இனிய திசைகள் – ஜூன் 2013‏ இதழ்
  26. இனிய திசைகள் – மே 2013‏ இதழ்
  27. இனிய திசைகள் – ஏப்ரல் 2013‏ இதழ்
  28. இனிய திசைகள் – மார்ச் 2013‏ இதழ்
  29. இனிய திசைகள் – பிப்ரவரி 2013‏ இதழ்
  30. இனிய திசைகள் – ஜனவரி2013‏ இதழ்
  31. இனிய திசைகள் – டிசம்பர் 2012 இதழ்
  32. இனிய திசைகள் – நவம்பர்,2012 இதழ்
  33. இனிய திசைகள் – அக்டோபர்,2012 இதழ்
  34. இனிய திசைகள் – செப்டம்பர்,2012 இதழ்
  35. இனிய திசைகள் – ஆகஸ்ட்,2012 இதழ்
  36. இனிய திசைகள் – ஜூலை,2012 இதழ்
  37. இனிய திசைகள் – ஜூன்,2012 இதழ்
  38. இனிய திசைகள் – மே,2012 இதழ்
  39. இனிய திசைகள் – ஏப்ரல்,2012 இதழ்‏
  40. இனிய திசைகள் – மார்ச் 2012 இதழ்‏
  41. இனிய திசைகள் – பிப்ரவரி,2012 இதழ்‏
  42. இனிய திசைகள் – ஜனவரி,2012 இதழ்
  43. இனிய திசைகள் – பிப்ரவரி’2015 இதழ்
  44. இனிய திசைகள் – ஜூன்’2015 இதழ்

புஜேராவில் 210 மில்லியன் செலவில் கட்டப்பட்ட ஷேக் ஜாயித் பள்ளிவாசல் பக்ரீத் பெருநாளன்று திறக்கப்பட்டது




புஜேராவில் 210 மில்லியன் செலவில் கட்டப்பட்ட ஷேக் ஜாயித் பள்ளிவாசல் பக்ரீத் பெருநாளன்று திறக்கப்பட்டது. இதன் மூலம் அமீரகத்தின் இரண்டாவது பெரிய பள்ளிவாசல் என்ற பெருமையினை இந்த பள்ளிவாசல் பெற்றுள்ளது.

பக்ரீத் பெருநாளன்று நடந்த சிறப்புத் தொழுகைக்கு புஜேரா ஆட்சியாளர் மேதகு ஷேக் ஹமத் பின் முகம்மது அல் சர்கி தலைமை வகித்தார்.

39,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பள்ளிவாசலில் 28,000 பேர் தொழுகை செய்யலாம்.  புஜேராவின் மத்தார் பின் முகம்மது சாலையில் இந்த பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசலில் 63 டோம்கள் (domes) எனப்படும் கூம்பு வடிவ அமைப்பு கொண்டுள்ளது. மேலும் 6 உயரமான மினாராக்கள் உள்ளன. இந்த மினாராக்கள் ஒவ்வொன்றும் 80 முதல் 100 மீட்டர் உயரம் கொண்டது.

Saturday, September 26, 2015

எது சந்தோஷம்..


பாலூட்டினாய் ...
பசி தீர்ந்தது..சந்தோஷம்
வர வில்லையம்மா...

எனக்கு சோறூட்டினாய்
வயிறு நிறைந்தது.சந்தோஷம்
இல்லையம்மா..

ஆடையால் எனை மறைத்தாய்.
அழகு வந்தது.சந்தோஷம்
வர வில்லையம்மா..

Thursday, September 24, 2015

தியாகச்சோதனையதில் வென்றுத் தந்த வெகுமதி

 தியாகச்சோதனையதில்
வென்றுத் தந்த வெகுமதி
திரும்பவும் வந்ததடைந்தது
தீனோர்க்கு ஓர் ஒளியாய்

மார்கத்தில் மூத்தோராம்
மதி நிறை நல்லோர்தம்
தூக்கத்தில் கண்ட "கனா"
தூயவனின் கட்டளையென

ஆக்கத்திற்கிசைவு தர
அருமை மகனார் "இஸ்மாயீலை"
அறுத்துப் பலியிட தாமும்
அனுமதி கேட்கச் சென்றாரே.!!

Wednesday, September 23, 2015

இன்பத் திருநாள் இருமை வாழ்விற்கே!

-முஹம்மது பெளமி-

 பெருநாட்கள் அல்லது பண்டிகைகள் அரபி மொழியில் “ஈத்” என அழைக்கப்படுவது உண்டு. ஈத் என்றால் மீண்டும் மீண்டும் வருதல் என்ற கருத்தை கொடுக்கின்றது.  ஆண்டு தோறும் வருவதால் பெருநாட்களுக்கு இவ்வாறு பெயர்கள் உண்டு!
இஸ்லாத்தை பொறுத்தமட்டில் ஆண்டு தோறும் இரண்டு பெருநாட்கள் மட்டுமே! அவை தவிர ஒவ்வோர் வார இறுதியிலும் வெள்ளிக் கிழமை நாள் முஸ்லிம்களுக்கு பெருநாளாக கருதப்படுகிறது.  இது தவிர வேறு எவ்விதமான கொண்டாட்டங்களும் இஸ்லாத்தில் கிடையாது!
பெருநாட்களின் நோக்கம்!
யாவற்றையும் அறிந்த வல்ல இறைவன் மிக உன்னதமான நோக்கத்தின் அடிப்படையில் இரு பெருநாட்களையும் அவனது நல்லடியார்களுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றான். ஒன்று ஈதுல் பித்ர் எனும் ஈகைத் திருநாள். மற்றொன்று ஈதுல் அள்ஹா எனும் தியாகத் திருநாள்.

Monday, September 21, 2015

இந்தப் பெருநாளிற்கு { EID AL ADHA ( FESTIVAL OF SACRIFICE ) } “தியாகத் திருநாள்” என்று பெயர் சூட்டி அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.

இனி இப்படி வாழ்த்துவோம்!
--------------------------------------------
இந்தப் பதிவிற்கான படத்தினை தயாரித்துக்கொண்டிருந்தேன்.

பார்த்துக் கொண்டிருந்த நண்பர், “என்ன ஸார் ‘பக்ரீத்’க்கு பிரியாணி recipe எழுதுகிறீர்களா?” என்று கேட்டார்.

இல்லை.. இல்லை நீங்கள் சொன்ன ‘பக்ரீத்’க்கு விளக்கம் எழுதுகிறேன் என்றேன்.

”என்னது விளக்கமா?, அதற்கு எதற்கு Tomato, உருளைக்கிழங்கு??, விளங்கவில்லையே!!” என்று விழித்தார்.

என்னவென்று விளங்காததாதல் வந்த பெயர்கள்தானே Tomato மற்றும் உருளைக்கிழங்கு என்றேன்.

”என்ன சொல்றீங்க?”

எண்ணமே முகவரி


  டாக்டர் அ. ஜாஹிர் ஹுஸைன் பாகவி 

கட்டுரையாசிரியர் சென்னை பல்கலைக் கழகத்தில் "டாக்டர்" பட்டம் பெற்ற முதல் பாகவி ஆவார்.

எதார்த்தத்தில் நல்லவன் தன்னை நல்லவன் என்று விளம்பரப்படுத்த மாட்டான்.

அவ்வாறு விளம்பரப்படுத்துபவன் நல்லவன் அல்லன்.

நல்லவன் பிறரைக் கெட்டவனாகக் கருதமாட்டான். அவ்வாறு கருதினால் அவன் நல்லவன் அல்லன்.

நல்லவன் கெட்டவனைக்கூட கெட்டவனாக பார்க்க மாட்டான்.

நல்லவன் தனக்கும் பிறருக்கும் அறிவுரை கூறுவான். பிறருக்கு மட்டும் அறிவுரை கூறுபவன் நல்லவன் அல்லன்.

பிறருக்கு அறிவுரை கூறுபவனெல்லாம் நல்லவனும் அல்லன்.

ஒருவன் வழிபாடுகளிலும், அறப்பணிகளிலும் ஈடுபடுவதால் மட்டும் நல்லவன் ஆகிவிட மாட்டான். அவன் அவனது மனத்திலும் அல்லாஹ்வின் பார்வையிலும் நல்லவனாக ஆக வேண்டும்.

வருமுன்

பழைய டைரிக் குறிப்பொன்றைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த வாக்கியம் கவனத்தைக் கவர்ந்தது. உறவினர் ஒருவர் ஹஜ்ஜுக்குச் சென்றிருக்கிறார். அரஃபாவிலிருந்து மினா செல்லும் வழியில் இறந்துவிட்டார்.

அங்கேயே நல்லடக்கம் செய்துவிட்டனர். அது, “வண்ணார் வாகனத்தின் மீதேறி பயணம் சென்றபோது அங்கேயே விழுந்து இறந்தார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது நடந்தது இருபதாம் நூற்றாண்டின் வெகு ஆரம்பக் காலங்களில். அப்பொழுதெல்லாம் பயண வாகனம் கால்நடைகள்! அவரவர் வசதிக்கேற்ப ஒட்டகம், குதிரை, சற்று சல்லிசாக என்றால் கழுதையாக இருந்திருக்கும் போலும்.

இறைச்சியும் இரத்தமும் அல்லாஹ்விடம் போய்ச் சேருவதில்லை


لَن يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَٰكِن يَنَالُهُ التَّقْوَىٰ مِنكُمْ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِينَ
அவற்றின் இறைச்சியும் இரத்தமும் அல்லாஹ்விடம் போய்ச் சேருவதில்லை. ஆயினும், உங்களின் இறையச்சமே அவனிடம் போய்ச் சேருகின்றது. இவ்வாறு அவனே அவற்றை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்; அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டியமைக்காக நீங்கள் அவனைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக! (நபியே!) நற்பணி புரிவோருக்கு நற்செய்தி சொல்வீராக!

(அல்குர்ஆன் : 22:37)

It is neither their meat nor their blood that reaches Allah, but it is piety from you that reaches Him. Thus have We made them subject to you that you may magnify Allah for His Guidance to you. And give glad tidings (O Muhammad SAW) to the Muhsinun (doers of good).

(Surah Al-Hajj 22: Ayah 37)

Sunday, September 20, 2015

ஹஜ் மாதத்தின் படிப்பினை

ஹஜ் மாதத்தின் படிப்பினை
அரஃபா பெருவெளி" (...ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைச் சேமித்துக் கொள்ளுங்கள். சேமிப்பில் சாலச்சிறந்தது இறையச்சமாகும். எனவே, நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள்" (அல்குர்ஆன் 2:197).

அல்லாஹ்வின் பேரருளால் இஸ்லாமிய சிறப்புமிகு மாதங்களில் ஒன்றாகிய 'துல்ஹஜ்' எனும் இந்த ஆண்டுக்கான இறுதி மாதத்தைப் பெற்றுள்ளோம், அல்ஹம்து லில்லாஹ்!

இம்மாதத்தில் ரமலானுக்குப் பிறகு இரண்டாவது பெருநாளாகிய 'ஹஜ்ஜுப் பெருநாள்(ஈதுல் அழ்ஹா)' எனும் தியாகத் திருநாளை, அல்லாஹ்வின் தூதர் இப்ராஹீம்(அலை) அவர்களுடைய ஈடற்ற தியாகத்தை நினைவுகூரும் விதமாக உலக முஸ்லிம்கள் அனைவரும் மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர்.

Thursday, September 17, 2015

இதற்குத் தலைப்பு நீங்களே எழுதுங்கள் - Rafeeq

இந்தப் பதிவினைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இந்தப் படத்தை நன்றாகப் பாருங்கள்.

ஒன்பதாம் வகுப்பு பயிலும் 14 வயது மாணவன். எலக்ட்ரானிக்ஸ் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். புதுப்புது 'ப்ராஜெக்ட்' செய்து பார்ப்பதில் ஆர்வம் மிகுந்தவன். ஆமாம் படத்திலிருக்கிறது.

அடுத்ததாக அமெரிக்க அதிபர் ஒபாமாவின் 'ட்வீட்', உன் போன்ற குழந்தைகளினால் தான் அறிவியலில் சாதிக்கும் அமெரிக்காவிற்குப் பெருமை!

அடுத்தது அதே மாணவன் தன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சிப் பெருக்கில் பயணிக்கிறான். இருக்காத பின்னே.... அதிபரிடமிருந்தே வாழ்த்துப்பெற்றால் மகிழ்ச்சி இருக்காதா? என்று நீங்கள் கேட்டால், இன்னும் அந்தப் படத்தை நீங்கள் சரிவரப் பார்க்கவில்லை என்று பொருள். !!! மீண்டும் ஒருமுறை பாருங்க...

அந்த மாணவனை போலீஸ் கையில் விலங்கிட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து வருவதை... அட ஆமாம் என்றால், ஒபாமாவின் 'ட்வீட்'ல் ஒரு கடிகாரத்தை எடுத்துக் கொண்டு வெள்ளை மாளிகை வரச் சொல்கிறாரே??

குழப்பமாக இருக்கிறதுல்ல... சிம்பிள் பையனைத் தீவிரவாதி என்று கைது செய்துள்ளது போலீஸ்!
அப்ப ... ஒபாமாவின் வாழ்த்து?

படிங்க ...நடந்தது இதுதான்....

LinkWithin

Related Posts with Thumbnails